Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சக்தி டிவி செய்திகள் 8PM (15/06/2017)

  2. ’ஆயுதப்போர், சமஷ்டிக் கோரிக்கை, படுகொலைகள் அனைத்தும் தெற்கிலேயே ஆரம்பமாகின’ இலங்கையில் அரசாங்கத்தை எதிர்க்கும் ஆயுதப் போராட்டம், கடந்த 1971 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில், தென்னிலங்கையிலேயே இடம்பெற்றது. அத்துடன், அரசியல் தலைவர்களைக் கொலை செய்யும் அரசியல் படுகொலைக் கலாசாரமும், தென்னிலங்கையிலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆகவே, இன்றைய பெரும்பான்மையின அரசியல்வாதிகள் அனைவரும் எதிர்த்துவரும் அனைத்தும், தெற்கிலேயே ஆரம்பிக்கப்பட்டன. அதை மறந்துவிட்டு, இன்று எல்லாவற்றுக்கும் தமிழர்களையும் சர்வதேச சமூகத்தையும் சாடாதீர்கள் என, அமைச்சர் மனோ கணேசன் கூறினார். கொழும்பிலுள்ள பிரபல தொலைக்காட்சிச் சேவையொன்றில் இடம்பெற்ற நேரடி வாத, விவாத நிகழ்வொன்றில் கல…

  3. குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள் பதவியில் தொடர்ந்தால் மக்களின் ஏளனப் பார்வைக்கும் அவர்களின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் விமர்சனங்களுக்கும் ஆளாக நேரிடுமென்பதே யதார்த்தம் என்று சுட்டிக்காட்டியிருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்கள்மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் நடைமுறை மாற்றமொன்றை உறுப்பினர்களும் மக்களும் விரும்புவதாகத் தெரிவதால், அதனைக் கவனத்திற்கு எடுத்து அமைச்சர்கள் குருகுலராஜா மற்றும் ஐங்கரநேசன் ஆகியோரை தாமாகவே பதவிகளை தியாகம் செய்யுமாறு கோருவதுடன், மற்றைய இரு அமைச்சர்களுக்கு எதிராக புதிய விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்திருக்கிறார். அத்துடன் அவர்கள் இருவரும் விசாரணை முடிவடையும் வரை விடுமுறையில் விலகி இருக்க வேண்டும்…

    • 1 reply
    • 512 views
  4. 'அடுத்த முதலமைச்சர் தொடர்பில் என்னால் முடிவெடுக்க முடியாது' -எஸ்.ஜெகநாதன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் இன்று காலை சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பு தொடர்பில், மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில், “வட மாகாண ஆளுநர் விடுத்த அழைப்பின் பிரகாரம் நான் அவரை சந்தித்திருந்தேன். முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் அடுத்தக் கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆராய்வதற்காக அவர் அழைத்திருந்தார். “அடுத்த முதலமைச்சர் தெரிவு தொடர்பில் கட்சியின் தலைவரான என்னால் முடிவுகளை எடுக்க முடியாது. கட்சியின் செயலாளரே அம்முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். …

  5. வடக்குக்கு விரைகின்றார் இரா.சம்பந்தன்! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு அவரை பதவி விலக்குவதற்கு தமிழரசுக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அது தொடர்பில் ஆராய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வடக்குக்கு விரைந்துள்ளார். தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெறவுள்ள முக்கிய கலந்துரையாடலில் பங்கேற்பதற்காகவே அவர் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முதலமைச்சரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கெதிராக தமிழரசுக் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. http://uthayandaily…

  6. பெரும்பான்மையை நிருபிக்கவும் : சி.வியிடம் கோரிக்கை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, எழுத்து மூலமாக கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/பெரும்பான்மையை-நிருபிக்கவும்-சி-வியிடம்-கோரிக்கை/175-198681

  7. அரசியல்வாதியல்ல இரத்தம் சிந்திய பூமியின் காவலர்கள் என்று நினைத்து செயற்படவும்– சன் குகவரதன் அவசர வேண்டுகோள் தமிழ் மக்களின் 70 ஆண்டுகால அரசியல் அரசியல் போராட்டத்தை கொச்சைப்படுத்தி மலினப்படுத்துகின்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதை வடமாகாண சபை உறுப்பினர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என மேல்மாகாண சபை உறுப்பினர் சன் குகவரதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்பகுதியில் செயற்படும் நாங்கள் அரசியல்வாதிகள். ஆனால் நீங்கள் இரத்தம் சிந்திய பூமியை பாதுகாக்கும் காவலர்கள் என்று கருதி செயற்படுங்கள் எனவும் சன் குகவரதன் வலியுறுத்தியுள்ளார். வடமாகாண சபையின் குழப்ப நிலைமை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. …

  8. பொது பல சேனாவின் இருவர் கைது : மேலும் நால்வரைத் தேடி வலை வீச்சு குருநாகல் மல்லவபிட்டிய ஜும்ஆ பள்ளிவாசல் மீதான தாக்குதல் தொடர்பில் பொது பல சேனாவின் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நால்வரைத் தேடி பொலிஸார் தொடர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/20910

  9. சில தினங்களாக பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட வடக்கு மாகாண அமைச்சர்கள் விவகாரத்திற்கு முதல்வர் விக்னேஸ்வரன் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றார். விசாரணை அறிக்கையில் பெயர் குறிபிடப்பட்டுள்ள விவசாய அமைச்சரான பொ.ஜங்கரநேசனும், கல்வி அமைச்சரான குருகுலராஜாவும் உடனடியாக பதவி விலக வேண்டுமென்று விக்னேஸ்வரன் அறிவித்திருக்கின்றார். அதேவேளை ஏனைய இரண்டு அமைச்சர்களான சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் ஆகியோர் மீதும் பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்ற நிலையில் அவர்கள் இருவரும், அவர்கள் மீதான விசாரணை முடிவடையும் வரையில், தமது அமைச்சுப் பொறுப்புகளிலிருந்து ஓய்வு நிலையில் இருக்க வேண்டுமென்றும் விக்னேஸ்வரன் கட்டளையிட்டிருக்கின்றார். இதனை மீறினால் …

    • 0 replies
    • 441 views
  10. ’சி.விக்கு எதிரான நடவடிக்கை தமிழர்களுக்கு செய்யும் துரோகம்’ “வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்திருக்கும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த நடவடிக்கை, அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையே என்பதை இலங்கைத் தமிழரசுக் கட்சி மறுதலிக்க முடியாது” என, முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.விஜயகாந், நேற்று ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து பதவியைப் பறிக்க முற்பட…

  11. இடைக்கால முதல்வர் விவகாரம் : எனக்கு எதுவும் தெரியாதென்கிறார் சிவாஜி இடைக்கால முதல்வர் தொடர்பில் என்னுடன் எவரும் கலந்துரையாடவில்லையென்பதுடன் அது குறித்து எனக்கு எவ்வித எண்ணமுமில்லையென ரெலோவின் மத்திய குழு உறுப்பினரும் வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள நிமையையடுத்து இடைக்கால முதல்வாராக எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பெயர் இலங்கை தமிழரசுக் கட்சியின் நேற்றைய நள்ளிரவு கூட்டத்தின் நிறைவில் பரிந்துரைக்கப்பட்டதையடுத்து வெளியான தகவல் தொடர்பில் கருத்தத் தெரிவிக்கையிலேயே எம்.கே. சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இடைக்கால முதலவர்; தொடர்…

  12. காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் திருகோணமலையில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள கடலில் இறங்கி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்டுள்ளனர். ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவின் மனைவியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். காணாமல் ஆக…

  13. வடக்கு முதலமைச்சர் இல்லத்தில் முக்கிய கலந்துரையாடல் (காணொலி) வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் மாகாண சபை உறுப்பினர்கள் சிலருக்கும் இடையே முதலமைச்சரின் இல்லத்தில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. http://uthayandaily.com/story/6798.html

  14. ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எடுத்த முடிவு சரியானது. அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு இல்லை என வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரரேரணை தொடர்பில் அவரது நிலைப்பாடு குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில், வடமாகாண சபையில் முதலமைச்சர் உரையாற்றிய போது தமிழரசுக் கட்சி வெளிநடப்பு செய்தது. ஆனால் எமது கட்சி மற்றும் ஈபிஆர்எல்எப், ரெலோ ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்யவில்லை. ஊழல் விசாரணை தொடர்பில் முதலமைச்சர் எடுத்த தீர்மானம் சரியானது. விசாரணைக்கு குழு போடப்பட்டு நான் சாட்சியமளித்த நிலையில் …

    • 1 reply
    • 413 views
  15. ஞானசார தேரருக்கு பிடியாணை பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. இருவேறு வழக்குகளில் ஆஜராகாத ஞானசார தேரரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, http://www.virakesari.lk/article/20901

  16. சி.விக்கு எதிரான நடவடிக்கைக்கு சங்கரி கண்டனம் “வட மாகாணசபையின் நிகழ்வுகளை பார்க்கும் போது, தமிழ் மக்கள் வெட்கி தலைகுனியுமளவுக்கு போய்விட்டது. நாடே நம்மை பார்த்து ஏளனமாக சிரிக்கின்றது. ஒரு காலத்தில் நீதி, நேர்மை, ஒழுக்கம், கல்வியறிவு என பல வகையிலும் சிறந்து விளங்கிய யாழ்ப்பாண சமூகத்தின் தலைவர்கள், இன்று தலை சாய்ந்து நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசியலில் நீதியும், நேர்மையும், ஒழுக்கமும் எமது சமூகத்தைவிட்டு எங்கோ பறந்தோடிவிட்டது” என்று, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இதை நான் 2…

  17. வீட்­டுக்­குள் முடக்­கப்­பட்­டி­ருந்த சிறார்­கள் மூவர் மீட்­கப்­பட்­ட­னர் பாட­சா­லைக்­குச் செல்­லா­த­வாறு பாட­சாலை செல்­ல­வேண்­டிய சிறார்­கள் சுமார் சில வாரங்­க­ளாக வீட்­டுக்­குள் முடக்­கப்­பட்­டி ­ருந்த நிலை­யில் நேற்­றுப் பொலி­ஸா­ரும் தெல்­லிப்­பழை சிறு­வர் நன்­ன­டத்­தைப் பிரி­வி­ன­ரும் இணைந்து மீட்­ட­னர். அவர்­கள் நீதி­மன்­றி­னூ­டாக இல்­லம் ஒன்­றில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­ னர். காங்­கே­சன்­துறை கொல்­லங்­க­லட்­டி­யில் இடம்­பெற்ற இந்­தச் சம்­ப­வம் அங்கு பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. சிறார்­க­ளின் பெற்­றோர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இது தொடர்­பில் மேலும் தெரி­ய­வ­ர…

  18. மாவை­யின் தொலைபேசி எண் தெரி­யாத முத­ல­மைச்­சர் “நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ரா­சா­வின் தொலை­பேசி இலக்­கம் தெரி­யாது. அத­னால்­தான் அமைச்­ச­ரவை மாற்­றம் தொடர்­பில் அவ­ரி­டம் பேச­வில்லை” இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னி­டம் கூறி­யுள்­ளார். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னைத் தொடர்பு கொண்டு, தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் அலை­பே­சி­யில் பேசி­னார். இந்­தப் பேச்­சின்­போது, வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர்­கள் நான்கு பேரை­யும் நீக்­கு­வது தொ…

    • 5 replies
    • 748 views
  19. உள­வுத்­துறை முன்னாள் பிர­தானி ஹெந்­த­வி­தா­ர­ண­விடம் விசா­ரணை (எம்.எப்.எம்.பஸீர்) வடக்கு, கிழக்கு நிறு­வ­னங்­களில் மில்­லியன் கணக்கில் பணம் பெற்­றமை தொடர்பில் குற்­றச்­சாட்டு தேசிய உளவுத் துறையின் முன்னாள் பிர­தானி ஓய்­வு­பெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்­த­வி­தா­ர­ண­விடம் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு நேற்று சிறப்பு விசா­ர­ணை­களை நடத்­தி­யது. வடக்கு கிழக்கில் இயங்கும் பிர­தான கேபிள் தொலைக்­காட்சி நிறு­வனம் ஒன்­றி­டமும் மேலும் பல நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்தும் வங்கி ஊடாக 3.2 மில்­லி­ய­னுக்கும் மேற்­பட்ட தொகையை சட்ட விரோ­த­மாக உழைத்­த­தாக கூறி கிடைக்கப் பெற்ற முறைப்­பாடு தொடர்­பி­லேயே அவர் நேற்று சுமார் 7 மணி நேரத்­துக்கும் அதி­க­மாக …

  20. வடக்கு முதலமைச்சர் யார்..? ; இறுதி முடிவு இன்று மாலை வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆளும் தரப்பினரால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதினை அடுத்து வடக்கு மாகாண சபையின் இடைக்கால முதல்வர் இன்று மாலை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வட மாகாண சபையின் ஆளும் கட்சியின் 16 உறுப்பினர்களும் எதிர்கட்சியின் 6 உறுப்பினர்களும் மொத்தமாக வட மாகாண சபையின் 21 உறுப்பினர்களின் கையெழுத்துடன் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடம் நேற்று நள்ளிரவு கையளிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற வடக்கு வடக்கு …

    • 2 replies
    • 365 views
  21. சூனியம் வைத்­தேனும் என்னை அழிக்க முயற்சி : ஒரு­போதும் அச்­ச­ம­டை­ய­மாட்டேன் என்­மீது இருக்கும் அச்சம் கார­ண­மாக சூனியம் வைத்­தேனும் என்னை அழிக்க சிலர் முயற்­சிக்­கின்­றனர். இவர்­களின் இவ்­வா­றான செயல்­க­ளுக்கு நான் ஒரு­போதும் அச்­சப்­ப­டப்­போ­வ­தில்லை. இதன் கார­ண­மாக நாங்கள் மேலும் வலு­வ­டைவோம் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். மேலும் நான் பொது வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கிய போதுதான் சுயா­தீன தொலைக்­காட்சி சேவை தனது சுயா­தீ­னத்­தன்­மையை இழந்­தது எனவும் குறிப்­பிட்டார். சுயா­தீன தொலைக்­காட்சி ஊடக சேவையின் 38ஆவது வருட ஆண்டு நிறைவு விழாவை முன்­னிட்டு புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டி­ருந்த 5 மாடி கட்­டிட தொகு…

  22. ‘ஸ்ரீலங்கனில் கோட்டாவின் ஆட்களே உள்ளனர்’ ஜே.ஏ.ஜோர்ஜ் “ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டவர்களே இன்றும் கடமையில் உள்ளனர். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இடம்பெறும். இந்நிறுவனத்தின் பணிப்பாளர்களையும் இந்தக் கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளோம்” என, சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (14) இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், அவர் இதனைக் கூறினார். “ஸ்ரீலங்கன் எயார…

  23. ‘ஞானசார தேரருக்கு மஹிந்தவின் சட்டத்தரணியே அடைக்கலம் கொடுத்துள்ளார்’ ஜே.ஏ.ஜோர்ஜ் “இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படும் ஞானசார தேரர் உள்ளிட்டவர்களே தங்கள் இனவாதிகள் அல்ல என்று சொல்லவில்லை. ஞானசார தேரரை மறைத்து வைக்கவேண்டிய தேவையும் அமைச்சர்களுக்கு இல்லை. மஹிந்தவின் சட்டத்தரணியே அவரை மறைத்து வைத்துள்ளார்” என, சுகாதார அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (14) இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைக் கூறினார். கடந்த சில நாட்களாக முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன…

  24. யாழில் தொடரும் வாள்வெட்டு (சிசிரிவி வீடியோ) யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத மூவர் வியாபார நிலையமொன்றின் மீது வாள்களை கொண்டு தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த மூவரும் தாக்குதல் நடாத்திய சம்பவமானது அருகில் இருந்த மற்றுமொரு வியாபார நிலைய கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது… நேற்று மாலை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பிரதான வீதியில் பூணாரிமரத்தடி சந்திக்கு அண்மையில் ஒரு பள்சர் மோட்டார் சைக்கிளில் மூவர் வந்துள்ளனர். இவர்கள் வந்திருந்த மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுகள் ஸ்ரிக்கர் போன்ற ஒன்றால் மூடி மறைத்து ஒட்டப்பட்டு…

  25. காலம் மாறி விட்டது. கல்வியிலும் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. நாமும் உரிய வேகத்துக்கு ஓடும் போதே தாக்குப் பிடிக்க முடியும். இல்லையேல் எம்மை விட்டுவிட்டு உலகம் முன்னே போய் விடும். முன்னர் ஒரு காலம் இருந்தது இலங்கையில் ஏதாவதொரு பட்டத்தை முடித்தால் அரச தொழிலொன்றை இலகுவில் பெற்றுக் கொள்ளலாம். போட்டி இல்லை. இன்று எதிலும் பலத்த போட்டி நிலவுவதுடன், அரசும் தொழில் வாய்ப்புக்களையும் வழங்க மறுத்து வருகிறது. இது பட்டதாரிகள் மத்தியில் பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உரிய காலத்துக்குள் தொழில் கிடைக்காமை, தகுதிக்கு ஏற்ற தொழில் கிடைக்காமை என்பன பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளாகும். பலத்த போட்டி அடிப்படையில் க பொ த (உ/த) த்தில் சித்தி பெற்று பல்கலை…

    • 0 replies
    • 279 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.