ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
வடமாகாண அமைச்சர்கள் மூவர் உட்பட 16 உறுப்பினர்கள் ஆளூநருடன் சந்திப்பு. https://globaltamilnews.net/archives/29756
-
- 1 reply
- 307 views
-
-
வடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணைக்காக 23 இலட்சம் செலவு. வடமாகாண சபை அமைச்சர்கள் மீதான விசாரணைக்காக வடமாகாண சபையினால் சுமார் 23 இலட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் இன்றைய அமர்வில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவிக்கையில், அமைச்சர்கள் மீதான குற்றசாட்டுக்களை முன் வைத்து , விசாரணை குழு அமைத்து , குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு மற்றும் அறிக்கையில் குறிப்பிட்ட குற்றசாட்டு தொடர்பில் தன்னிலை விளக்கம் கொடுக்க என இதுவரை மாகாண சபையில் ஐந்து அமர்வுகள் நடைபெற்றுள்ளன. அதற்காக 20 இலட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதேவேளை குறித்த விசாரணை குழுவிற்காக 3 இலட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டது என தெரியவருகிறது. இந்த விசாரணைக்காக மாகாண சபை நிதி 23…
-
- 0 replies
- 238 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (14/06/2017)
-
- 0 replies
- 598 views
-
-
வடக்கு மாகாண சபை சிறப்பு அமர்வு ஆரம்பம்! வடக்கு மாகாண சபையின் இரு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டக்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை விவாதிப்பதற்காக வடக்கு மாகாண சபை இன்று கூடியுள்ளது. இந்த அமர்வில் எந்த விவாதமும் இல்லை என்ற அவைத் தலைவரின் அறிவிப்புடன் சபை அமர்வு ஆரம்பித்துள்ளது. வடக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தன்மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தன்னிலை விளக்கம் அளித்து வருகின்றார். தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ்“கையூட்டு, நிதிமோசடி, ஊழல் புரிந்ததாகவோ, விசாரணை அறிக்கையில் ச…
-
- 19 replies
- 665 views
-
-
உயர்தர மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மோகிங்டன் தோட்ட மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சி செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க கோரியும் இன்று பகல் 2.00 மணியளவில் டயகம நகரில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். டயகம இல. 02 தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று காலை 7.00 மணியளவில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது அதே பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான நபர் ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சி செய்துள்ளா…
-
- 0 replies
- 376 views
-
-
மக்களே அவதானம் : டெங்கு காய்ச்சலால் 155 பேர் பலி..! (ஆர்.யசி) இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 155 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களே அதிகமான நோயாளர்களை கொண்டதாக இனங்காணப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது நிலவிவரும் மோசமான காலநிலை காரணமாக டெங்கு நோய் வேகமாக பரவிவரும் நிலையில் இந்த ஆண்டில் இதுவரையிலான 6 மாத காலத்தில் 61 ஆயிரத்து 844 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் டெங்கு காய்ச்சலினால் 155 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக சகல மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவல் இருந்த போதிலும் கொழும்பு, களுத்துறை, கம்…
-
- 0 replies
- 254 views
-
-
ஜனாதிபதி முன்னிலையில் சீறிப்பாய்ந்த பெளத்த பிக்கு சிறைக் கைதிகள் நலன்புரி சங்கத்தின் நூற்றாண்டு விழா நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டிருந்தார். இதன்போது நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் பெளத்த மத அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமை வழங்காமையின் காரணமாக மண்டபத்தில் அமர்ந்திருந்த பிக்கு ஒருவர் ஆக்ரோஷத்துடன் எழுந்து ஜனாதிபதி முன்னிலையில் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார். இந்த சந்தர்ப்பத்தில் உரையாற்றுவதற்காக மேடைக்கு வந்திருந்த அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கீழே சென்று பூரண மத அனுஷ்டா…
-
- 2 replies
- 362 views
-
-
‘தமிழ் வகுப்பு நடத்தினேன்’ “நான் ஜனாதிபதியாகப் பதவிவகித்த காலத்தில், ஜனாதிபதி மாளிகையில், தமிழ் வகுப்புகளை நடத்தினேன். அதனூடாக அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்மொழியை அதிகளவில் கற்றுக்கொண்டனர்” என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். காலி, மாபலகம எனுமிடத்தில், திங்கட்கிழமை (12) இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “காவியுடையை அணிந்துகொண்டு, இனவாத கருத்துகளை பரப்புகின்றவர்களை, பௌத்த தேரர்கள் எனக் கூறமுடியாது. பொறுத்து கொள்ள வேண்டும். அவ்வாறு, தாங்கிக…
-
- 1 reply
- 300 views
-
-
கிரிக்கட் அணிக்குள் தமிழ், முஸ்லிம் வீரர்களும் இணைத்துக்கொள்ளப்படவேண்டும்! – மனோ! வடக்கு, கிழக்கு, மத்திய மலைநாடு மற்றும் மேற்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களும் இலங்கை கிரிக்கட் அணிக்குள் உள்வாங்கப்படவேண்டுமென தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் வலியுறுத்தியுள்ளார். நேற்றையதினம் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே தான் இதனை வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், இத்தகைய விளையாட்டு அணியில் திறமைதான் ஒரே அடிப்படை. இதனை தொழில்வாய்ப்புக்களைப் போன்று இனக் கோட்டா முறையில் செய்யமுடியாது.அத்துடன் தகுதிவாய்ந்த வீரர்களை இன அடிப்படையை வைத்துப் புறக்கணிக்கவும்முடியாது. …
-
- 2 replies
- 324 views
-
-
ஜனாதிபதிக்கு சூனியம் செய்து வைத்த தகடுகள் மீட்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சூனியம் செய்ததாக கூறப்படும் செப்புத் தகடுகள், இரண்டு இளைஞர்களால் மீட்கப்பட்டுள்ளன. அநுராதபுரம் - பதவிய - கெப்பதிகொல்லாவ பிரதான வீதிக்கு அருகில் உள்ள உஸ்கல்ல மயானத்தில் இருந்தே இந்த செப்புத் தகடுகள் மீட்கப்பட்டுள்ளன. இதில், ஜனாதிபதியின் பெயருடன், அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் மூன்று சகோதரர்களின் பெயர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இருவரின் பெயர்களுடன் மேலும் ஒருவரின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதிக்கு-சூனியம்-செய்து-வைத்த-தகட…
-
- 1 reply
- 428 views
-
-
பாகிஸ்தான் கடற்படைத் தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு…! உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மத் ஸகாவுல்லாஹ் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நேற்று கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். யுத்த காலத்திலும் சமாதான காலப்பகுதியிலும் இலங்கையுடனான பாகிஸ்தானின் நெருங்கிய தொடர்புகளுக்கு ஜனாதிபதி இச்சந்திப்பின்போது நன்றி தெரிவித்தார். அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிப் பொருட்களை அனுப்பி வைத்தமைக்காகவும் ஜனாதிபதி பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்தார். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் நீண்டகாலமாக இருந்துவரும் நெருங்கிய அரசியல் மற்ற…
-
- 0 replies
- 165 views
-
-
இலங்கை ரூபாயின் பெறுமதி திடீர் உயர்வு இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினம் வலுவடைந்து காணப்பட்டதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு பணியாளர்களினால் இன்றையதினம் இலங்கையில் மேற்கொண்ட பண பரிமாற்றத்தில் காணப்பட்ட அதிகரிப்பே இதற்கு காரணமாகும். இதன்காரணமாக இறக்குமதியாளர்களின் டொலரின் தேவைக்கு அதிகமாக வெளிநாட்டு பணியாளர்களின் நாணய பரிமாற்றம் அதிகரித்துள்ளது. மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று அறிக்கைக்கு அமைய, டொலர் ஒன்றுக்கான ரூபாவின் பெறுமதி 152.80 - 85 ரூபாய் என பதிவாகியுள்ளது. ரூபாய் முறையாக வீழ்ச்சியடைந்து வருவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. இந்த வருடத்தில் வெளிநாட்டு இருப்புக…
-
- 0 replies
- 508 views
-
-
பேச்சளவில் மட்டுமே பாதீனியக் கட்டுப்பாடு யாழ். மாவட்டச் செயலர் சுட்டிக்காட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து அரச அதிகாரிகளும் பாதீனியத்தை அழிப்போம் என்று பேசிக் கொண்டிருக்கின்றோமே தவிர அதனைச் செயற் படுத்த யாரும் முழு அளவில் ஆர் வம் காட்டுவதில்லை. இவ்வாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாண மாவட்டத்தின் விவசாய அபிவிருத்திக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அதிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது, பாதீனியத்தை முழுமையாக அழி…
-
- 0 replies
- 461 views
-
-
இலங்கையின் இன அழிப்பிற்கான சமூக அரசியல் கட்டமைப்பு (Structural Genocide) - மு.திருநாவுக்கரசு சமூகக் கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை எங்கு நிகழ்கின்றதோ அங்கு இனப்பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வை இலகுவில் காணமுடியாது. “Structural Genocide” என்ற அரசியற் கோட்பாடானது அரசியல் விஞ்ஞானத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாகும். இது பற்றிய கோட்பாட்டு விளக்கத்தை புரிந்து கொண்டால் தான் இதற்கான அரசியலை சரிவர முன்னெடுக்க முடியும். இப்பதபிரயோகம் முதலில் இனப்பிரச்சனைகளின் பெயரால் பிரயோகிக்கப்பட்டதல்ல. பதிலாக மனித குலத்தில் ஏற்படும் அழிவுகளுக்கு சமூக பொருளாதார கட்டமைப்பு எப்படி காரணமாக இருக்கிறது என்பதிலிருந்து இதற்கான பதம் பிரயோகிக்கப்படும் நிலை உருவானது. ஆட்கொல்லி நோ…
-
- 0 replies
- 332 views
-
-
தமிழர்களின் வாக்குகளை கூட்டமைப்பு சிதறடிக்காது முன்னாள் எம்.பி. அரியநேந்திரன் தெரிவிப்பு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்க தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று இன்னோரினம் சார்ந்தவர் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கோ ஒருபோதும் துணை போனவர்கள் அல்ல. இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்புத் தொகுதியின் தமிழரசுக் கட்சியின் தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தாா். பட்டிருப்புத் தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி கடந்த சனிக்கிழமை கொக்கட்டிசோலையில் தெரிவித்த கருத்து தொடர்பில்…
-
- 0 replies
- 140 views
-
-
ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் படுகொலை வழக்கின் சந்தேகநபர்கள், அடையாள அணிவகுப்பில் தங்களை அடையாளம் காட்டாதுவிட்டால் 5 இலட்சம் ரூபா பணம் வழங்குவோம் என்று பேரம் பேசியமை தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை முன்வைக்குமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கின் கண்கண்ட சாட்சியமாக உள்ள வாய் பேச முடியாத சிறுவன் தம்மை அடையாளம் காட்டாது விட்டால் அந்த சிறுவனின் குடும்பத்துக்கு 5 இலட்சம் ரூபா பணம் தருவோம் என்று சந்தேகநபர்கள் கூறியதாக பாதிக்கப்பட்டோர் நலன்சார்பில் முன…
-
- 2 replies
- 539 views
-
-
4 அமைச்சர்களையும் கூண்டோடு துரத்தினால் முதல்வர் விக்கியினது பதவிக்கும் ஆபத்து வடக்கு மாகாண சபையின் நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்க முற்பட்டால், அது முதலமைச்சரின் பதவிக்கு ஆபத்தாக அமையும் எனத் தெரியவருகிறது. அமைச்சரவையை மாற்றுவதாக இருந்தால் முதலமைச்சர் உட்பட 5 அமைச்சர்களையும் மாற்றுவது குறித்துப் பங்காளிக் கட்சிகளும் தீவிரமாகப் பரிசீலிக்கப்படும் என்று தமிழ் அரசுக் கட்சி எச்சரித்துள்ளது. “நான்கு அமைச்சர்களையும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீக்க முற்பட்டால், ஒட்டுமொத்தமாக 5 பேரையும் நீக்கிவிட்டு புதிய அமைச்சரவையை நியமிக்க வேண்…
-
- 1 reply
- 433 views
-
-
விஷ இரசாயன காகிதத்தால் அச்சிடப்பட்ட புத்தகங்கள் பாடசாலைகளுக்கு விநியோகம் பாடசாலைகளில் தரம் ஏழு மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் புவியியல் புத்தகம் விஷ இரசாயனத்தினாலான காகிதத்தால் அச்சிடப்பட்டுள்ளது. இது மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியது. அத்துடன் தற்போது மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கும் 2 இலட்சத்திற்கும் அதிகமான குறித்த புவியியல் புத்தகங்களை மீளப்பெறுவதற்கு ஜனாதிபதி விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அச்சங்கத்தின் பிரதிச் செயலாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கே தெர…
-
- 0 replies
- 273 views
-
-
இன,மத கலகக்காரரை அடக்க அதிரடிப் படை நாட்டில் இன, மதக் கலவரங்களைத் தூண்டுபவர்களையும், நடத்துபவர்களையும் கைது செய்து சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் பொறுப்பு சிறப்பு அதிரடிப் படையினரிடம் வழங்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் அதிகரித்துவரும் இத்தகைய இனக் கலவரங்களால் நாட்டின் அமைதி குலைக்கப்பட்டு வருவதாகவும், ஏற்கனவே பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவமும் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது சிறப்பு அதிரடிப்படையினரிடமும் கலவரங்களை அடக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. நேற்றுமுன்தினம் முதல் நாடு முழுவதும் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்ப…
-
- 0 replies
- 266 views
-
-
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளது ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் புதிதாக பணியாளர்கள் நியமிக்க்பபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் பற்றி கூறப்பட்டுள்ளது. விமான சேவையின் அதிகாரிகள் நிறுவனத்தை லாபமீட்டக்கூடிய வகையில் வழிநடத்தத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சில நடவடிக்கைகளின் காரணமாக சுமார் 22 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் நிறுவனத்தை லாபமீட்டச் செய்யும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்ட போதிலும் அந…
-
- 0 replies
- 185 views
-
-
“பொது பல சேனாவிற்கும் எனக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை” (ஆர்.யசி) விக்கினேஸ்வரன் இனவாதம் பேசுவதை கண்டுகொள்ளாத அரசாங்கம் எம்மை மாத்திரம் இனவாதிகளாக சித்தரிகின்றனர். பொதுபல சேனாவை போன்றே வடக்கின் இனவாதிகளும் செயற்படுகின்றனர். ஆனால் அவர்களை கைதுசெய்ய மாட்டார்கள், போதுபல சேனா அமைப்பினருக்கும் எனக்கும் இடையில் எந்த தொடர்புகளும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/20857
-
- 1 reply
- 496 views
-
-
சிறுவனுக்கு மரண தண்டனை; ஜனாதிபதியிடம் கேட்கப் பணிப்பு சிறுவனாக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலை தொடர்பில், அச்சிறுவனுக்குத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மரண தண்டனை குறித்து, சரியான தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரும்படி, மேன்முறையீட்டு நீதிமன்றம் பணித்துள்ளது. சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகத்துக்கே, மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கண்டவாறு, திங்கட்கிழமை (12) பணித்துள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால், தீர்ப்பளிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புத் தொடர்பான, மேன்முறையீட்டு மனுவைப் பரிசீலனைக்கு உட்படுத்தியபோதே, நீதிமன்றம் மேற்கண்டவாறு பணித்தது. இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீத…
-
- 0 replies
- 150 views
-
-
ஐ.தே.க.வுடன் நேரடிக்கலந்துரையாடலை ஏற்படுத்தித்தருமாறு நிமல் தலைமையிலான குழு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் (ஆர்.யசி) அரசியல் அமைப்பின் நிலைப்பாடுகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் நேரடி கலந்துரையாடல் ஒன்றை ஏற்படுத்தி தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு தெரிவித்துள்ளது. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையுடன் பரஸ்பர முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஆராயும் வகையில் பிரதான இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக கடந்த வாரம் இரண்டு கட்சிகளும் தெரிவித்திருந்த நிலையி…
-
- 0 replies
- 148 views
-
-
ரயில் தண்டவாளத்தில் இருந்து 'செல்பி'எடுத்துக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் ரயிலில் மோதி உயிரிழந்தனர். இதில் பலியான சிறுவனின் தலைப் பகுதி கம்பஹா ரயில் நிலையத்தில் வைத்து நேற்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை 6.15 மணியளவில் கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொள்ளுப்பிட்டிக்கும் பம்பலபிட்டிக்கும் இடைப்பட்ட முஹுது மாவத்தை பகுதியில் தண்டவாளத்தில் செல்பி எடுக்கச் சென்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மருதானையிலிருந்து அளுத்கம நோக்கி பயணித்த கடுகதி புகையிரதம் மோதியே இவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் அநுராதபுரம் – புதிய நகர் பகுதியைச…
-
- 0 replies
- 371 views
-
-
21ஆம் திகதி முழுநாள் விவாதம் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதம், எதிர்வரும் 21ஆம் திகதி, முழுநாள் விவாதமாக நடத்துவதற்கு, கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை தாபித்தல், கால தாமதமாகுவது தொடர்பில், பல்வேறான தரப்புகளிலிருந்து, அரசாங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், அந்த அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. திருத்தச் சட்டமூலதமானது, பிரதமர் ரண…
-
- 0 replies
- 201 views
-