ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
சரியான புரிந்துணர்வே நாட்டு மக்களனைவரையும் ஒன்றிணைக்கும் ; சி.வி.விக்னேஸ்வரன் சரியான புரிந்துணர்வே இந்த நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கதிர்காமம் முருகன் ஆலயத்தின் தலைமை மதகுரு டி.பி.குமாரகே நேற்று இரவு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை அவருடைய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தார். இந்தக் கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், கதிர்காமம் ம…
-
- 0 replies
- 190 views
-
-
“முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்துக்கும் பெருங்கடலுக்கும் இடைப்பட்ட பகுதியில், பெருமளவு மீன்கள் உயிர் இழப்பதற்கு அதிக வெப்பமே காரணம்” என, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார். “அதிக வெப்பமே குறித்த பகுதியின் நீரினை பச்சைநிறமாக மாற்றி பெருமளவு மீன்கள் உயிர் இழப்பதற்கு காரணமாக அமைந்து விட்டது. வழமையாக இவ்விடத்தில் நீல நிறத்திலே நீர் காணப்படும். “அதிகரித்த வெப்பம் காரணமாக நீர் பச்சை நிறமாக மாற்றமடைந்து பெருமளவு மீன்கள் உயிர் இழந்ததன் காரணமாக, இப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் பெருமளவு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. “நந்திக் கடல் பெருங்கடலுடன் இணையும் பகுதியிலேயே மீன்க…
-
- 2 replies
- 859 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (04/06/2017)
-
- 0 replies
- 250 views
-
-
ஐநா 72ஆவது கூட்டத்தொடருக்கான உபதலைவராக ரொகான் பெரேரோ தெரிவு! ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தொடருக்கான உபதலைவர் பதவி சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐநா பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முதல் 2018ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வரை நடைபெறவுள்ளது. ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தி உப தலைவர் பொறுப்பை சிறிலங்கா வகிக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 72ஆவது கூட்டத் தொடரின் உப தலைவராக சிறிலங்கா சார்பான உப தலைவரான ஐநாவிற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரொகான் பெரேரா செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://thuliyam.com/?p=69757
-
- 0 replies
- 328 views
-
-
இந்தியாவும் சீனாவும் ஏட்டிக்கு போட்டியாக உதவி லியோ நிரோஷ தர்ஷன் 27 நாடுகளிலிருந்து குவியும் நிவாரணங்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளை கருத்தில் கொண்டு அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 27 உலக நாடுகள் உதவிக் கரம் நீட்டியுள்ளன. இதேவேளை இந்தியா வும் சீனாவும் நிவாரண உதவிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன. மேலும் கிடைக்கப்பெறும் நிதி உதவிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை அமைப்பதற்குப் பயன்படுத்தப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளை கருத்தில் கொண்டு 44 உலக நாடுகள் நேரடியாக பல்வேறு வகையில் உதவிகளை வழங்குவத…
-
- 1 reply
- 555 views
-
-
வெள்ளம், மண்சரிவால் அழிவுற்ற வீடுகளை மீள நிர்மாணிப்பதற்காக ஏட்டிக்கு போட்டியாக உதவி சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் அழிவுற்ற வீடுகளை மீள நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்துக்கு அமெரிக்க அரசாங்கத்தின் 350 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்பு நேற்று ஜனாதிபதியினது உத்தியோபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் உள்ளிட்ட பிரதிநிதிகளால் அந்த நன்கொடை சிறிசேனவிடம்; உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. மேலும் நாட்டிலுள்ள இளைஞர், யுவதிகளின் நிபுணத்துவ ஆற்றலை மேம்படுத்துவதற்காக 12 மில்லியன் டொலரை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் வி…
-
- 1 reply
- 404 views
-
-
300 பேர் இதுவரை உயிரிழப்பு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 இலட்சத்தையும் தாண்டியது ஆர்.யசி வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக் கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 7 இலட்சமாக உயர்வடைந்துள்ளதுடன் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 க்கும் அதிகமாக இருக்க லாம் எனவும் காணாமல்போயுள்ள 92 பேரையும் உயிரிழந்தவர்களாகவே தற்பொழுது கருத வேண்டியுள்ளதாக வும் பிரதி அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இறுதியில் தென்னி லங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற் றும் மண்சரிவு அனர்த்தத்தில் 1 இலட்சத்து 85 ஆயிரத்து 805 குடும்பங்களைச் சேர்ந்த 7 இலட்சத்து 4 ஆயிர…
-
- 0 replies
- 288 views
-
-
தென்பகுதி மக்களுக்காக... முல்லைத்தீவு, முள்ளிவாய்கால் கிழக்கு கிராமத்தின் சகவாழ்வு சங்கத்தைச் சேர்ந்த இளம் உறுப்பினர்கள், தாம் வீடு வீடாக சென்று சேகரித்த 80,000 ரூபாய் நிதியை, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு வழங்கமாறு தெரிவித்து, அமைச்சர் மனோ கணேசனிடம், இன்று ஒப்படைத்தபோது எடுக்கப்பட்ட படங்கள். http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/தென்பகுதி-மக்களுக்காக---/46-197946
-
- 0 replies
- 234 views
-
-
நாட்டில் டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் மொத்தமாக 55 ஆயிரத்து 150 டெங்கு நோயாளார்களே நாட்டில் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும், 2017 ஆம் ஆண்டின் இதுவரையான முதல் 6 மாத காலப்பகுதியில் 56 ஆயிரத்து 887 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த மே மாதத்தில் 12 ஆயிரத்து 212 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கு கடந்த மாதம் ஏற்பட்ட மோசமான காலநிலை மாற்றமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. டெங்கு நோய் தாக்கம் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு காணப்படுகிறது. கொழும்பு மாவட்டத்தில் மட்டும் இவ்வாண்டில் 12 ஆயிரத்து 610 டெங்கு நோயாளர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்…
-
- 0 replies
- 270 views
-
-
கால அவகாசம் நிறைவு: அகல மறுக்கின்றது இராணுவம் புதுக்குடியிருப்பு மக்கள் கவலை இராணுவம் கையகப்படுத்தியுள்ள புதுக்குடியிருப்பு மக்களின் காணிகள் 3 மாத கால அவகாசத்தில் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பாக இராணுவத்தினர் தற்போது வரை மௌனமாக இருக்கின்றனர் என்று காணிகளின் உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர். கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி பிலக்குடியிருப்பில் மக்கள் நில மீட்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். அதனைத் தொடர்ந்து பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் பொன்னம்பலம் வைத்தியசாலை அமைந்திருந்த காணி உ…
-
- 0 replies
- 292 views
-
-
மகிந்த அணியைச் சந்திக்கவுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு! புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிந்தராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினரை அடுத்த வாரமளவில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்திப்பு தீர்மானிக்கப்பட்டபோதிலும் இது தொடர்பாக இன்னமும் இறுதிப்படுத்தப்படவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும்வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளபோதிலும் அதற்கான பணிகள் தாமதப்படுத்தப்பட்டுக்கொண்டே வருகின்றது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு த…
-
- 0 replies
- 383 views
-
-
கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே யாழ். வருகை கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே டி.பி.குமாரகே யாழ்ப்பாணத்துக்கு இன்றையதினம் வருகைத்துள்ளர்.யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த அவர் முதலில் நல்லூர் ஆலயத்துக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.அதன் பின்னர் நல்லை ஆதின குரு முதல்வர் மற்றும் தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆருதிருமுகன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார். http://uthayandaily.com/story/5140.html
-
- 0 replies
- 381 views
-
-
வாளுடன் அட்டகாசம் புரிந்தோர் கைது யாழ்ப்பாண நகரில் பட்டப் பகலில் வாளுடன் திரிந்த இளைஞர்கள் தொடர்பாகப் பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையில் இரண்டு இளைஞர்கள் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 14ஆம் திகதி முற்பகல் 11 மணியளவில் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளொன்றில் வாளுடன் திரிந்ததால் பதற்றமான சூழல் நிலவியதாகத் தெரிவித்து கடந்த மே 15 ஆம் திகதி உதயனில் புகைப் படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. அந்தச் செய்தியின் அடிப்படையில் புகைப்படத்தில் காணப்பட்ட மோட்டார் சைக்கிளின் இலக் கத்தகட்டை வைத்து விசாரணை நடத்திய யாழ்ப்பாணப் பொலிஸார், சம்பவம் தொடர்பாக மானிப்பாய் கனகசபை வீதி மற்றும் லோட்டன் வீத…
-
- 0 replies
- 271 views
-
-
தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான கடற்கோட்டையில் உல்லாச விடுதி அமைத்துள்ள கடற்படையினர் தொல்லியல் திணைகளத்திற்கு சொந்தமான தொல்லியல் சின்னமாக பாதுக்காக்கப்பட வேண்டிய ஊர்காவற்துறை கடற்கோட்டையினை காரைநகர் கடற்படையினர் அடாத்தாக கையகப்படுத்தி உல்லாச விடுதியினை நடாத்தி வருகின்றனர். ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் குறித்த கோட்டை அமைந்துள்ளது. போர்த்துக்கீசரினால் 17 ஆம் நூற்றாண்டு கால பகுதியில் இக் கோட்டை நிர்மாணிக்கப்பட்டு உள்ளது. எண்கோண வடிவிலான இக் கோட்டை புராதன சின்னமாகும். யுத்த காலத்தில் இக் கோட்டையை கையகப்படுத்திய காரைநகர் கடற்படையினர், யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, காரைநகர் கடற்படை தளத்தினுள் …
-
- 1 reply
- 410 views
-
-
தமிழ் கட்டிட கலையை கொண்டிருக்காத பாடசாலை நுழைவாயில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் பாதையின் நுழைவாயில் கட்டிட அமைப்பு தமிழ் கட்டிட கலையை வெளிப்படுத்தவில்லை என்றும் அது சீன கட்டிட கலையை கொண்டிருக்கிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நுழைவாயில் கட்டிடம் அமைப்பதற்கான உள்ளீடுகள் பாடசாலை சமூகத்தினரால் வழங்கப்பட்டு இராணுவத்தின் இலவச மனித வலுவை பயன்படுத்தியும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த நுழைவாயில் கட்டிட அமைப்பை இராணுவத்தினர் தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைத்துள்ளனர் எனவும் அது சீன கட்டிட கலையை வெளிப்படுத்துகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ் பல்கலைகழத்த…
-
- 0 replies
- 490 views
-
-
பேராதனை - களு பாலத்தின் அருகாமையில், கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயில் முன் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பன்னிபிடிய கலல்கொடை பிரதேசத்தினை சேர்ந்த 25 வயதுடைய யுவதியே இவ்வாறு நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பேராதனை பல்கலைகழகத்தில் கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை கொண்டுள்ளார் என்பதுடன் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள் இதுவரையில் அறியப்படாததுடன், சம்பவம் குறித்து மேலதிக விசாணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளது. http://www.virakesari.lk/article/20603
-
- 0 replies
- 360 views
-
-
சிறிலங்காவில் அதிநவீன ராடர்களைப் பொருத்துகிறது ஜப்பான்! மோசமான வானிலை தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் சிறிலங்காவில் இரண்டு டொப்ளர் ராடர்களை ஜப்பான் பொருத்தவுள்ளது. ஜப்பான் அன்பளிப்பாக வழங்கவுள்ள இந்த இரண்டு ராடர்களும், சிறிலங்காவின் கிழக்குப் பக்கத்தில் பொத்துவிலிலும், மேற்குப் புறமாக கற்பிட்டியிலும் பொருத்தப்படும் என்று சிறிலங்கா அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலர் மீயான்வல தெரிவித்தார். இந்த ராடர்களைப் பராமரிப்பது உள்ளிட்ட நிபுணத்துவ சேவைகளையும் ஜப்பான் வழங்கவுள்ளது. இதுதொடர்பான உடன்பாடு இரண்டு நாடுகளுக்கும் இடையில் அடுத்த சில நாட்களில் கைழுத்திடப்படும். ஏற்கனவே அமெரிக்காவினால் வழங்கப்பட்ட டொப்ளர் ராடர் தொகு…
-
- 0 replies
- 294 views
-
-
நுவரெலியாவில் இயல்புநிலை பாதிப்பு கடும் மழை மற்றும் காற்று காரணமாக நுவரெலியா பிரதேசத்தில் பல இடங்களில் சிறிய மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன. அத்துடன் காற்று காரணமாக ஒரு சில இடங்களில் வீட்டுக்கூரைகளும் சேதமடைந்துள்ளன. சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மரக்கறி நிலங்களில் மழைநீர் நிரம்பியுள்ளது. இதனால் மரக்கறி உற்பத்தியி லும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நுவரெலியா கிரகறி தெப்பக்குளத் தின் வான் கதவுகளும் ஒரு குறிப்பிட்டளவு திறந்து வைக்கப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் தற்பொழுது குறைந்துள்ளது. நுவ…
-
- 0 replies
- 419 views
-
-
மகிந்த ஆட்சியில் நடந்த மோசடிகளை விசாரிக்க சிறப்பு உயர் நீதிமன்றம் கூட்டு அரசு தீர்மானம் கடந்த அரசின் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் விரைவான விசாரணை முன்னெடுப்பதற்கு சிறப்பு உயர் நீதிமன்றத்தை உருவாக்க அரசு முடிவு செய்திருக்கின்றது. மகிந்த ராஜபக்ச ஆட்சியில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்பாக நிறுத்துவோம் என்று தேர்தல் காலத்தில் அரசு வாக்குறுதி வழங்கியிருந்தது. எந்தவொரு வழக்கும் விசாரித்து முடிக்கப்படவில்லை. அதனையடுத்து, இவ்வாறான வழக்குகள் எதிர்வரும் 2 வருடங்களுக்குள் நடத்தி முடிப்பதற்கு வசதியாக இத்தகைய நீதிமன்றங்களை நிறுவ வேண்டியதன் அவசியத்தை சட்ட நிபுணர்கள், அரச தலைவர், தலைமை அமைச்சர் ம…
-
- 0 replies
- 244 views
-
-
ஊடகங்களின் விமர்சிக்கும் உரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை! - மங்கள சமரவீர [Sunday 2017-06-04 08:00] ஊடகங்களின் விமர்சனம் செய்யும் உரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடக மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் ஆதரபூர்வமான விமர்சனங்களை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள அவர் அவ்வாறான விமர்சனம் செய்யும் உரிமையை தாம் முழு அளவில் பாதுகாக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகங்கள் எப்போதும் எதிர்க்கருத்துக்களை மட்டுமே வெளியிடுவதாகவும், உண்மைகளை உதாசீனம் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கத் தகவல் திணைக்களம் ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்…
-
- 0 replies
- 339 views
-
-
மட்டக்களப்பில் ISIS தீவிரவாதிகள் பயன்படுத்தும் போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் கைது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் பயன்படுத்தப்படும் ஒருவகையான போதை மாத்திரைகள் மட்டக்களப்பில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் போர்க்களத்தில் விழிப்பாகவும், ஆக்ரோசமாகவும் இருப்பதற்காக Captagon அல்லது Fenethylline என்ற குறித்த மாத்திரைகளை பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இதுபோன்ற போதை மாத்திரைகளுடன் அண்மையில் சில இளைஞர்கள் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தரப்பிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது. இதேவேளை, அண்மையில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, இங்கிருந்து இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெருந்த…
-
- 0 replies
- 517 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (03/06/2017)
-
- 0 replies
- 334 views
-
-
’தென்பகுதியினருக்கு உதவ யாழ். மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்’ -எஸ்.நிதர்ஷன் “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு, யாழ்ப்பாண மக்கள் மற்றும் வணிகர்கள் ஆர்வத்துடன் உதவி பொருட்களை வழங்கி வருகின்றனர்” என, தெரிவித்துள்ள யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண, இந்த உதவிகள் ஊடாக இரு மக்களிடையே நல்லிணக்கம் கட்டியெழுப்படும் என்றார். இது தொடர்பில் நேற்று முன்தினம் கருத்துத் தெரிவித்த அவர், “சீரற்ற கால நிலையால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு வழங்குவதற்றாக, பொலிஸாரும் நிவாரணப் பொருட்களை திரட்டி வருகின்றனர். வடக்கிலும் …
-
- 13 replies
- 1.7k views
- 1 follower
-
-
முகமூடி அடாவடிக் கும்பல் மந்திகையில் அட்டகாசம் துணியால் முகங்களை மறைத்தவாறு பழக் கடைக்கு முன்பாக வந்திறங்கிய சிலர் திடீர் என சரமாரியாக கற்களை வீசித் தாக்குதல் மேற்கொண்டதால் வடமராட்சி மந்திகைச் சந்தியில் நேற்றுமுன்தினம் இரவு பதற்றம் ஏற்பட்டது. இந்தக் தாக்குதலால் மந்திகைச் சந்தியிலிருந்த பழக்கடையின் கண்ணாடிகள் உடைந்து சேதமாகின. மோட்டார் சைக்கிளில் கடைக்கு வந்த நபர் மீதும் அவர்கள் கற்களை வீசினர் என்று தெரிவிக்கப்பட்டது. “வியாபாரத்தை முடித்துக்கொண்டு நேற்றுமுன் தினம் இரவு 8.45 மணியளவில் கடையைப் பூட்டுவதற்கு உரிமையாளர் ஆயத்தமான வேளை முகங்களைத் துணியால் கட்டிக்…
-
- 0 replies
- 330 views
-
-
திருடப்பட்டு வெட்டப்பட்ட 38 மாடுகளும் திருநகர் சுடலையில் புதைக்கப்பட்டன:- திருடப்பட்டு வெட்டப்பட்டு இறைச்சியாக யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளத்திற்கு கொண்டு செல்லபட்ட நிலையில் பிடிக்கப்பட்ட 1800 கிலோவுக்கு மேற்பட்ட இறைச்சி நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய கிளிநொச்சி திருநகர் சுடலையில் புதைக்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்திலிருந்து சங்குபிட்டி பூநகரி மன்னார் ஊடாக புத்தளத்திற்கு கூலர் ரக வாகனத்தில் வெட்டப்பட்ட நிலையில் 38 மாடுகளின் இறைச்சி தலைகளுடன் கொண்டு செல்லப்பட்ட நிலையில் கிளிநொச்சி முழங்காவில் பொலீஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வாகனம் சோதனையிடப…
-
- 0 replies
- 983 views
-