Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான கடற்கோட்டையில் உல்லாச விடுதி அமைத்துள்ள கடற்படையினர் தொல்லியல் திணைகளத்திற்கு சொந்தமான தொல்லியல் சின்னமாக பாதுக்காக்கப்பட வேண்டிய ஊர்காவற்துறை கடற்கோட்டையினை காரைநகர் கடற்படையினர் அடாத்தாக கையகப்படுத்தி உல்லாச விடுதியினை நடாத்தி வருகின்றனர். ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் குறித்த கோட்டை அமைந்துள்ளது. போர்த்துக்கீசரினால் 17 ஆம் நூற்றாண்டு கால பகுதியில் இக் கோட்டை நிர்மாணிக்கப்பட்டு உள்ளது. எண்கோண வடிவிலான இக் கோட்டை புராதன சின்னமாகும். யுத்த காலத்தில் இக் கோட்டையை கையகப்படுத்திய காரைநகர் கடற்படையினர், யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, காரைநகர் கடற்படை தளத்தினுள் …

  2. தமிழ் கட்டிட கலையை கொண்டிருக்காத பாடசாலை நுழைவாயில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் பாதையின் நுழைவாயில் கட்டிட அமைப்பு தமிழ் கட்டிட கலையை வெளிப்படுத்தவில்லை என்றும் அது சீன கட்டிட கலையை கொண்டிருக்கிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நுழைவாயில் கட்டிடம் அமைப்பதற்கான உள்ளீடுகள் பாடசாலை சமூகத்தினரால் வழங்கப்பட்டு இராணுவத்தின் இலவச மனித வலுவை பயன்படுத்தியும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த நுழைவாயில் கட்டிட அமைப்பை இராணுவத்தினர் தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைத்துள்ளனர் எனவும் அது சீன கட்டிட கலையை வெளிப்படுத்துகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ் பல்கலைகழத்த…

  3. பேராதனை - களு பாலத்தின் அருகாமையில், கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயில் முன் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பன்னிபிடிய கலல்கொடை பிரதேசத்தினை சேர்ந்த 25 வயதுடைய யுவதியே இவ்வாறு நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பேராதனை பல்கலைகழகத்தில் கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை கொண்டுள்ளார் என்பதுடன் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள் இதுவரையில் அறியப்படாததுடன், சம்பவம் குறித்து மேலதிக விசாணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளது. http://www.virakesari.lk/article/20603

    • 0 replies
    • 361 views
  4. சிறிலங்காவில் அதிநவீன ராடர்களைப் பொருத்துகிறது ஜப்பான்! மோசமான வானிலை தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் சிறிலங்காவில் இரண்டு டொப்ளர் ராடர்களை ஜப்பான் பொருத்தவுள்ளது. ஜப்பான் அன்பளிப்பாக வழங்கவுள்ள இந்த இரண்டு ராடர்களும், சிறிலங்காவின் கிழக்குப் பக்கத்தில் பொத்துவிலிலும், மேற்குப் புறமாக கற்பிட்டியிலும் பொருத்தப்படும் என்று சிறிலங்கா அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலர் மீயான்வல தெரிவித்தார். இந்த ராடர்களைப் பராமரிப்பது உள்ளிட்ட நிபுணத்துவ சேவைகளையும் ஜப்பான் வழங்கவுள்ளது. இதுதொடர்பான உடன்பாடு இரண்டு நாடுகளுக்கும் இடையில் அடுத்த சில நாட்களில் கைழுத்திடப்படும். ஏற்கனவே அமெரிக்காவினால் வழங்கப்பட்ட டொப்ளர் ராடர் தொகு…

    • 0 replies
    • 295 views
  5. நுவரெலியாவில் இயல்புநிலை பாதிப்பு கடும் மழை மற்றும் காற்று கார­ண­மாக நுவ­ரெ­லியா பிர­தே­சத்தில் பல இடங்­களில் சிறிய மண்­ச­ரி­வுகள் ஏற்­பட்­டுள்­ள­துடன் மரங்­களும் முறிந்து வீழ்ந்­துள்­ளன. அத்­துடன் காற்று கார­ண­மாக ஒரு சில இடங்­களில் வீட்­டுக்­கூ­ரை­களும் சேத­ம­டைந்­துள்­ளன. சில தினங்­க­ளாக தொடர்ந்து மழை பெய்து வரு­வதால் மரக்­கறி நிலங்­களில் மழைநீர் நிரம்­பி­யுள்­ளது. இதனால் மரக்­கறி உற்­பத்­தி­யி லும் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. நுவ­ரெ­லியா கிர­கறி தெப்­பக்­கு­ளத் தின் வான் கத­வு­களும் ஒரு குறிப்­பிட்­ட­ளவு திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளன. சீரற்ற கால­நிலை கார­ண­மாக சுற்­றுலாப் பய­ணி­களின் வரு­கையும் தற்­பொ­ழுது குறைந்­துள்­ளது. நுவ­…

  6. மகிந்த ஆட்சியில் நடந்த மோசடிகளை விசாரிக்க சிறப்பு உயர் நீதிமன்றம் கூட்டு அரசு தீர்மானம் கடந்த அரசின் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் விரைவான விசாரணை முன்னெடுப்பதற்கு சிறப்பு உயர் நீதிமன்றத்தை உருவாக்க அரசு முடிவு செய்திருக்கின்றது. மகிந்த ராஜபக்ச ஆட்சியில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்பாக நிறுத்துவோம் என்று தேர்தல் காலத்தில் அரசு வாக்குறுதி வழங்கியிருந்தது. எந்தவொரு வழக்கும் விசாரித்து முடிக்கப்படவில்லை. அதனையடுத்து, இவ்வாறான வழக்குகள் எதிர்வரும் 2 வருடங்களுக்குள் நடத்தி முடிப்பதற்கு வசதியாக இத்தகைய நீதிமன்றங்களை நிறுவ வேண்டியதன் அவசியத்தை சட்ட நிபுணர்கள், அரச தலைவர், தலைமை அமைச்சர் ம…

  7. ஊடகங்களின் விமர்சிக்கும் உரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை! - மங்கள சமரவீர [Sunday 2017-06-04 08:00] ஊடகங்களின் விமர்சனம் செய்யும் உரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடக மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் ஆதரபூர்வமான விமர்சனங்களை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள அவர் அவ்வாறான விமர்சனம் செய்யும் உரிமையை தாம் முழு அளவில் பாதுகாக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகங்கள் எப்போதும் எதிர்க்கருத்துக்களை மட்டுமே வெளியிடுவதாகவும், உண்மைகளை உதாசீனம் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கத் தகவல் திணைக்களம் ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்…

    • 0 replies
    • 340 views
  8. மட்டக்களப்பில் ISIS தீவிரவாதிகள் பயன்படுத்தும் போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் கைது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் பயன்படுத்தப்படும் ஒருவகையான போதை மாத்திரைகள் மட்டக்களப்பில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் போர்க்களத்தில் விழிப்பாகவும், ஆக்ரோசமாகவும் இருப்பதற்காக Captagon அல்லது Fenethylline என்ற குறித்த மாத்திரைகளை பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இதுபோன்ற போதை மாத்திரைகளுடன் அண்மையில் சில இளைஞர்கள் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தரப்பிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது. இதேவேளை, அண்மையில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, இங்கிருந்து இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெருந்த…

    • 0 replies
    • 518 views
  9. சக்தி டிவி செய்திகள் 8PM (03/06/2017)

  10. ’தென்பகுதியினருக்கு உதவ யாழ். மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்’ -எஸ்.நிதர்ஷன் “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு, யாழ்ப்பாண மக்கள் மற்றும் வணிகர்கள் ஆர்வத்துடன் உதவி பொருட்களை வழங்கி வருகின்றனர்” என, தெரிவித்துள்ள யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண, இந்த உதவிகள் ஊடாக இரு மக்களிடையே நல்லிணக்கம் கட்டியெழுப்படும் என்றார். இது தொடர்பில் நேற்று முன்தினம் கருத்துத் தெரிவித்த அவர், “சீரற்ற கால நிலையால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு வழங்குவதற்றாக, பொலிஸாரும் நிவாரணப் பொருட்களை திரட்டி வருகின்றனர். வடக்கிலும் …

  11. முகமூடி அடாவடிக் கும்பல் மந்திகையில் அட்டகாசம் துணி­யால் முகங்­களை மறைத்­த­வாறு பழக் கடைக்கு முன்­பாக வந்­தி­றங்­கிய சிலர் திடீர் என சர­மா­ரி­யாக கற்­களை வீசித் தாக்­கு­தல் மேற்­கொண்­ட­தால் வட­ம­ராட்சி மந்­தி­கைச் சந்­தி­யில் நேற்­று­முன்தி­னம் இரவு பதற்­றம் ஏற்­பட்­டது. இந்­தக் தாக்­கு­த­லால் மந்­தி­கைச் சந்­தி­யி­லி­ருந்த பழக்­க­டை­யின் கண்­ணா­டி­கள் உடைந்து சேத­மா­கின. மோட்­டார் சைக்­கி­ளில் கடைக்கு வந்த நபர் மீதும் அவர்­கள் கற்­களை வீசி­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. “வியா­ப­ாரத்தை முடித்துக்கொண்டு நேற்றுமுன் தி­னம் இரவு 8.45 மணி­ய­ள­வில் கடை­யைப் பூட்­டு­வ­தற்கு உரி­மை­யா­ளர் ஆயத்­த­மான வேளை முகங்­க­ளைத் துணி­யால் கட்­டிக்…

  12. திருடப்பட்டு வெட்டப்பட்ட 38 மாடுகளும் திருநகர் சுடலையில் புதைக்கப்பட்டன:- திருடப்பட்டு வெட்டப்பட்டு இறைச்சியாக யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளத்திற்கு கொண்டு செல்லபட்ட நிலையில் பிடிக்கப்பட்ட 1800 கிலோவுக்கு மேற்பட்ட இறைச்சி நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய கிளிநொச்சி திருநகர் சுடலையில் புதைக்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்திலிருந்து சங்குபிட்டி பூநகரி மன்னார் ஊடாக புத்தளத்திற்கு கூலர் ரக வாகனத்தில் வெட்டப்பட்ட நிலையில் 38 மாடுகளின் இறைச்சி தலைகளுடன் கொண்டு செல்லப்பட்ட நிலையில் கிளிநொச்சி முழங்காவில் பொலீஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வாகனம் சோதனையிடப…

  13. எதிர்வரும் பிரித்தானிய பொதுத்தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களுக்கு செய்தி ஒன்றை விடுத்துள்ள தொழிற்கட்சி சுயநிர்ணயத்துக்கான உரிமையையும் சர்வஜன வாக்கெடுப்பு மூலமாக தமது சொந்த எதிர்காலத்தை தீர்மானிப்பதன் உரிமையையும் அங்கீகரித்துள்ளது. ஸ்ரீலங்காவில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பில் ஐ நா தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்படுவதற்கும் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்படுவதற்கும் தனது முழுமையான ஆதரவை தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது. மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் பட்சத்தில் சிறிலங்காவுக்கான ஆயுத விற்பனை நிறுத்தபப்டும் என்றும் உறுதியளித்துள்ள தொழிற்கட்சி இனிமேல் பல்கலைக்கழகங்களில் பல்லாயிரக்கணக்கான பவுண்டுகளை செலவுசெய்யாமல் மாணவர்கள் இலவசமாக படிப்பதற்கும் ஆவண செய்துள்ளது. தமிழ் ம…

    • 0 replies
    • 378 views
  14. அமெரிக்க கொடிகளை ஏந்தி போராடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் : 100 ஆவது நாளில் ஊர்வலம் நாம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை நாடுகின்றோம் என கோரி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஊர்வலம் ஒன்றினை இன்று மதியம் மேற்கொண்டனர். வவுனியா, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று 100 ஆவது நாளை அடைந்தது. இதனை முன்னிட்டு வவுனியா கந்தசாமி கோவிலில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கிருந்து பசார் வீதி ஊடாகச் சென்று ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து அதனூடாக கண்டி வீதிக்கு சென்று தமது போராட்ட தளத்தை வந்தடைந்தனர். ஊர்வலத்தில…

  15. பாதிக்கப்பட்ட மக்களுடன் சம்­பந்தன் தென்­னி­லங்­கையில் அனர்த்தம் இடம்­பெற்ற பகுதிகளுக்கு இன்­றைய தினம் எதிர்க் கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் நேரடியாக சென்று பார்­வை­யிட்டுள்ளார். அதே வேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும் வழங்கியுள்ளார். Tags http://www.virakesari.lk/article/20591

  16. வவுனியாவில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் ஊர்வலத்தை புறக்கணித்த மக்கள் பிரதிநிதிகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன என நீதி கோரி வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் 100 ஆவது நாள் ஊர்வலத்தை மக்கள் பிரதிநிதிகள் புறக்கணித்துள்ளனர். இன்று காலை 11 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது. இதில் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக மக்கள் முன்னனியின் ஊடகப் பேச்சாளர் பாஸ்கரா ஆகியோர் கலந்து கொண்டனர். இருப்பினும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஊர்வலத்தில் அவர்கள் கலந்து கொள்ளது திரும்பிச் சென்று விட்டனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 'நாம் அமெரிக்காவி…

  17. ரூ.22 மில். அன்பளிப்பு சீன பௌத்த சங்கத்தால் கையளிப்பு சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, சீன பௌத்த சங்கம் 22 மில்லியன் ரூபாய் நிதி அன்பளிப்பை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று (03) காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்துக் கையளித்தது. Sri Guanguan தேரர் உள்ளிட்ட சீன பௌத்த சங்கத்தின் தேரர்கள், இந்த நிதி அன்பளிப்பை, ஜனாதிபதியிடம் கையளித்ததுடன், பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வண. கல்லேல்லே சுமனசிறி தேரரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். சீன அரசாங்கமானது தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கிவரும் இத்தகைய ஒத்துழைப்புக்களினால் இருநாட்டிற்கும் இடையி…

  18. மதஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான சட்டம் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் – கிழக்கு முதலமைச்சர் கிழக்கில் மதஸ்லங்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீதும் இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்போர் மீதும் சட்டம் கடுமையாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அத்தியகட்டசகரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் திருகோணமலை பெரிய கடை ஜும் ஆ பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்து அது தொடர்பான விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். …

  19. வெளி­நாட்டு தூது­வர்­க­ளு­ட­னான முஸ்லிம் சிவில் சமூ­கத்தின் சந்­திப்பு நாட்டில் சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு எதி­ரான இன­வாத செயற்­பாடுகள் அதி­க­ரித்­துள்ள நிலையில் இத்­த­கைய இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­க­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து ஏழு நாடு­களின் தூது­வர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். அண்­மைக்­கா­ல­மாக முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான பொது­ப­ல­சேனா அமைப்­பி­னரின் செயற்­பா­டுகள் தீவி­ர­ம­டைந்­தி­ருந்­தன. பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­ட­துடன் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான வர்த்­தக நிலை­யங்கள் மீதும் தொடர்ச்­சி­யான தாக்­கு­தல்கள் இடம்­பெற்று வந்­தன. முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரா­கவும் இஸ்லாம் மதத்­தினை நிந்­…

  20. நிவாரண நடவடிக்கையில் விபத்திற்குள்ளான ஹெலிக்கொப்டரை விமானப்படை மீட்டுச் சென்றது - படங்கள் இணைப்பு Published by Priyatharshan on 2017-06-03 09:13:21 அண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீரற்றகாலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்ட போது விபத்திற்குள்ளான எம்.ஐ. 17 என்ற ஹெலிக்கொப்டர் இலங்கை விமானப்படையினரால் விபத்திற்குள்ளான பகுதியில் இருந்து மீட்டெடுத்துச் செல்லப்பட்டது. சீரற்றகாலநிலையால் பத்தேகம பிரதேசத்தில் இடம்பெயர்ந்த கிராமம் ஒன்றுக்கு நிவாரணப் பொருட்களுடன் இலங்கை விமானப்படைக்கு சொந்ததமான ஹெலிகொப்டர் ஒன்று தொழில்நுட்பக்கோளாறு காரணமாக பத்தேக பிரதேசத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது. இதன்போது குறித்த ஹெலிகொப…

  21. கொலைகள் புரிந்த இராணுவத்தினரை தண்டிக்காதது ஏன்? இரா­ணு­வத்­தி­ன­ரி­டம் சர­ண­டைந்து காணா­மற்­போ­ன­வர்­கள், இரா­ணு­வத்­தி­ன­ரால் கொலை செய்­யப்­பட்­டி­ருக் க­லாம் என்று முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா தெரி­வித்­துள்­ளார், எனவே அதற்­கு­ரிய ஆதா­ரங்­க­ளை­யும் வெளி­யி­ட­வேண்­டும். இரா­ணு­வம் அவர்­க­ளைக் கொலை செய்­து­விட்­டது என்­றால், குற்­றத்தை மேற்­கொண்­ட­வர்­க­ளுக்­குத் தண்­ட­னையை வழங்­க­வேண்­டி­ய­து­தானே! இவ்­வாறு காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளைத் தேடும் அவர்­க­ளது உற­வி­னர்­கள் நேற்­றுக் காட்­ட­மா­கத் தெரி­வித்­த­னர். காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் வடக்கு – கிழக்­கில் தொடர் போராட்­டத்­தில் ஈடு­பட்டு …

  22. திருகோணமலை பெரியகடை ஜூம்ஆ பள்ளி வாயல் மீது இன்று அதிகாலை (03) இனந்தெரியாத நபர்களினால் பெற்றோல் குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. நோன்பை நோற்றுவிட்டு தொழுகைக்காக பள்ளி வாயலுக்கு சென்ற பிரதேச மக்கள் பள்ளி வாசல் மீது தீ வைக்கப்பட்டுள்ளதாக நேரில் கண்டதையடுத்து பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 அழைப்பு விடுத்து தெரியப்படுத்தியதாகவும் தெரியவருகின்றது. பெற்றோல் நிரப்பப்பட்ட நான்கு போத்தல்கள் காணப்படுவதாகவும் பள்ளி வாசலின் காபட் மற்றும் பாய்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இடத்திற்கு விரைந்த துறைமுக பொலிஸார் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணைகளை நடாத்தி வருகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் மூவின மக்…

  23. மகிந்த ராஜபக்ஷ காலத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளியிட்டிருந்த கருத்து சரியாக இருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் சந்திரிக்கா பண்டாரநாயக் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், ராஜபக்ஷ காலத்து இராணுவத்தினரின் பழக்கத்தின்படி சரணடைந்த அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம். அது எனக்குத் தெரியாது. ஆனால், அப்போது அவர்களைப் பொறுப்பேற்றிருந்தால் அவர்கள் அனைவரையும் கொன்றிருப்பார்களேயன்றி இவ்வளவு காலமும் தடுத்து வைத்திருக்கமாட்டார்கள் எனத் தெரிவித்திருந்தார். அவரின் கருத்துத் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு தமிழ்த் த…

  24. ’50 வருடங்களில் யாழ்ப்பாணம் பாலைவனமாகும்’ 'வடக்கும் கிழக்கும், பாரியதொரு வரட்சிக்கு முகங்கொடுக்கவுள்ளன. இன்னும் 50 வருடங்களில், யாழ்ப்பாணம் ஒரு பாலைவனமாக மாறிவிடும். அந்தளவுக்கான அழிவுகள் இடம்பெற்றுள்ளன' என்று, நகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 'தாயகப் பூமி என்று கூறிக்கொண்டிருப்பவர்கள், முதலில் தாம் வாழும் பூமியைக் காத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும், அமைச்சில் இன்று (50) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, அவர் கூறினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/’50-வருடங்களில்-யாழ்ப்பாணம்-பாலைவனமாகும்’/175-197869

  25. சிறுபான்மை இனங்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை இலங்கையில் சிறுபான்மை இனங்களை குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து மேற்கொள்ளப்படும் வன்முறை மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலையை வெளியிட்டுள்ளது. இத்தகைய செயல்களை மேற்கொள்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ள ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முஸ்லிம் சமூகத்தை மாத்திரமன்றி நாட்டின் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக செயற்படுபவர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.