ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
"பிரபாகரனால் விதைக்கப்பட்ட சிந்தனைகள் குறுகிய காலத்தில் மறைந்துவிடுமென நம்புவது முட்டாள்தனம்" வடக்கு, கிழக்கு பகுதியில் பிரபாகரனின் காலத்தில் தற்கொலை குண்டுதாரிகள் உருவாகும் வகையிலான சிந்தனைகள் மக்களிடத்தில் விதைக்கப்பட்டிருந்தன. எனவே குறுகிய காலத்தில் அந்த சிந்தனைகள் மறைந்துவிடும் என்று கருதி செயற்படுவதானது பாரதூரமான நிலைமையாகும் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நியூயோர்க் நகரம் போன்று ஒருவரிடத்திலிருந்து மற்றைய இடத்திலிருப்பவர்களை கண்காணிக்கும் பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றி வந்தமையினாலும் இராணுவத்தினரால் மேற்க…
-
- 1 reply
- 249 views
-
-
யாழ். பல்கலை மாணவர்கள் மரணம்: பொலிஸார் தாக்கல்செய்த மேன்முறையீட்டு மனு மீது ஆட்சேபனை தாக்கல் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கல்செய்த மேன்முறையீட்டு மனு மீது சட்ட மாஅதிபர் இன்று அடிப்படை ஆட்சேபனை தாக்கல் செய்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை யாழ். மாவட்டத்திற்கு வெளியேயுள்ள நீதிமன்றம் ஒ…
-
- 0 replies
- 342 views
-
-
சக்தி டிவி செய்திகள் 29th May 2017, 8PM
-
- 0 replies
- 291 views
-
-
இயற்கையின் கோரம் : பலியானோரின் எண்ணிக்கை 164 ஆக அதிகரிப்பு : 4 இலட்சத்து 70 ஆயிரம் பேர் பாதிப்பு! நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளதுடன், காணமல் போனோரின் எண்ணிக்கை 104 ஆகவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் மொத்தமாக 15 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 586 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 71 ஆயிரத்து 542 பேர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை 18 ஆயிரத்து 652 குடும்பங்களைச் சேர்ந்த 75 ஆயிரத்து 236 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டிய…
-
- 3 replies
- 567 views
-
-
இந்திய உயர்ஸ்தானிகரின் பயணம் ஒத்திவைப்பு நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை காரணமாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரின் வட மாகாண விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்துக்கான விஜயத்தை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து, நாளையும் நாளை மறுதினமும் மேற்கொள்ளவிருந்தார். ஆனால், இந்தியாவிலிருந்து நிவாரணப் பொருட்களுடன் வருகைதந்துள்ள கப்பல்களிலுள்ள பொருட்களை பாதிக்கப்பட்டோருக்குப் பிரித்துக்கொடுக்கும் நடவடிக்கை காரணமாக, அவரது பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரின் வடமாகாணத்துக்கான விஜயத…
-
- 0 replies
- 234 views
-
-
தமது பூர்வீக நிலத்திற்கு திரும்பச் செல்ல வலியுறுத்தி இரணைத்தீவு மக்கள்பேரணி. கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்;ட இரணைத்தீவு மக்கள் தாங்கள் தங்களின் பூர்வீக நிலத்திற்குசெல்ல திரும்பச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி இன்று(29-05-2017) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு கிளிநொச்சி திரேசாம்பாள் ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமான பேரணி கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தை சென்றடைந்து அங்கு மாவட்ட அரச அதிபரிடமும் மகஜரும் கையளிக்கப்பட்டது. இரணைத்தீவு மக்கள் தங்களின் பூர்வீக நிலத்திற்கு செல்வதற்கான கவனயீர்ப்பு போராட்டத்தை இம்மாதம் முதலாம் திகதி க இரணைமாதாநக…
-
- 0 replies
- 365 views
-
-
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடுவர் என்று தெரிவிக்கப்பட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மூன்று நீதிபதிகள் தீர்ப்பாயம் (ட்ரயல் அட் பார்) முன்னிலையில் நடாத்த பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் பரிந்துரை வழங்கினார். வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோரை தீர்ப்பாயத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இந்த வழக்கின் வ…
-
- 1 reply
- 415 views
-
-
போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றவாளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது, மாறாக அவர்களைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஹெய்ட்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைப் படையினர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மேஜர் ஜ…
-
- 1 reply
- 319 views
-
-
புங்குடுதீவு வித்தியா படுகொலை : முதலாவது ட்ரயலட்பார் நீதிமன்ற அமர்வு இன்று யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டு பாலியல் வன்புனர்வு படுகொலை வழக்கினை விசாரனை செய்யவுள்ள தமிழ் மொழி பேசும் மூன்று நீதிபதிகள் அடங்கிய ட்ரயலட்பார் நீதிமன்றம் தனது முதலாவது அமர்வை இன்று நடாத்தியுள்ளது. இன்றைய முதல் அமர்வின் போது, வழக்கின் முதல் ஒன்பது சந்தேக நபர்களையும் எதிர்வரும் பன்னிரன்டாம் திகதி யாழ்.மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு யாழ்.மேல் நீதிமன்ற ட்ரயலட்பார் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் பிரதம நீதியரசரால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளான வவுனியா மேல…
-
- 0 replies
- 299 views
-
-
மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டருக்குள் குழந்தை பிரசவம் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டடிருந்த ஹெலிகொப்டருக்குள் கர்ப்பிணிப் பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளதாக இலங்கை விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்படடுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் கலவானையில் இருந்து இரத்தினபுரிக்கு இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டரில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டுச்செல்கையில், குறித்த ஹெலிகொப்டருக்குள் இருந்த கர்ப்பிணிப்பெண்ணாருவர் குழந்தையை பிரசவித்துள்ளமை குறிப்…
-
- 1 reply
- 353 views
-
-
இனவாதிகளது கை ஓங்க அரசு இ.டமளித்தல் ஆகாது. நாட்டில் மீண்டுமொரு இனக் கவரத்தை ஏற்படுத்துவதற்குச் சிலர் தூபம் இட்டு வரு கின்றனர். அமைச்சர் மனோகணேசனின் அலுவலகத்துக்குச் சென்ற ஞானசாரதேரர் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவருக்கு இதற்கான துணிவு எவ்வாறு ஏற்பட்டது என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாகும். இந்தப் பௌத்ததேரர் சிறுபான்மை இனங்களுக்கு எதிரான கருத்தை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார். ஆனால் அரசு இதனைக் கண்டுகொள்வதில்லை. இந்த நிலையில் குருநாகல் – கண்டி முதன்மை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் வழிபாட்டுத் தலமொன்றின் மீது அண்மையில் பெற்றோல் …
-
- 0 replies
- 363 views
-
-
சுமார் நான்காயிரம் இந்து மக்கள் மத மாற்றம் ; இனி மதம் மாற இடமளியேன்! அம்பாறை மாவட்டத்தில் இதுவரையில் நான்காயிரம் இந்து மக்கள், மத மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். மத மாற்றம் இனிமேலும் இடம்பெறாத வகையில், அனைத்துக் கோவில்களும் ஆரம்பக் காலத்தைப் போன்று அறத்தைப் போதிக்கும் மற்றும் கலைக்கூடங்களாக மாற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுதர் சுவாமி கோவில் வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட திருமூலர் திருமடத் திறப்பு விழா, சனிக்கிழமை (27) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு …
-
- 1 reply
- 572 views
-
-
பாலியல் வன்முறை குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு போர்க்குற்றவாளியை அனுப்பிய இலங்கை இயற்கை உருவாக்கியுள்ள கொடுமைக்கு மத்தியில் முக்கியமானதொரு செய்தி பலரின் கண்பார்வையிலிருந்து தவறியிருக்கலாம். ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் பணியாற்றிய இலங்கைச் சிப்பாய்கள் மீது முன்வைக்கப்பட்ட பாலி யல் குற்றச்சாட்டுகள் மற்றும் அது குறித்த விசாரணை நடைபெற்ற விதம் தொடர்பானதே அந்தச் செய்தி. ஏபி செய்திச்சேவை அதனை வெளியிட்டிருந்தது. இலங்கையின் படைச்சிப்பாய்கள் மீது முன்வைக்கப் படும் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசுகள் எவ்வாறு கண்துடைப்பு விசாரணைகளை நடத்தி யுள்ளன என்பதற்கான மிகச் சிறந்த ஆதாரம் அந்தச் செய்தி. இலங்க…
-
- 0 replies
- 511 views
-
-
எச்சரிக்கை : பொல்கொட அணை உடையும் அபாயத்தில்.. பொல்கொட அணைக்கட்டானது பெய்துவரும் கனமழை காரணமாக, உடையும் நிலையில் இருப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இதனால்பொல்கொட அணையை அண்மித்துள்ள தெற்கு பாணந்துறை, பாணந்துறை வடக்கு, பன்னபிடிய, பண்டாரகம, மொரோந்துடுவா, குருவந்தோட மற்றும் வாட்டுவா பிரதேசங்களை சேர்ந்த மக்கள், உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களை நோக்கி செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக இதுவரை 169 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 102 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காலி, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் களுத்துறை உள்ளிட்ட 8 …
-
- 0 replies
- 351 views
-
-
வெளிநாட்டுச் செலாவணி கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் அதிகளவுக்கு வளர்ச்சியடைந்த நாடுகளே இலங்கையிலும் பார்க்க நிலைகுலைந்திருப்பதாக கூட்டு எதிரணியின் எம்.பி. பந்துல குணவர்த்தன எச்சரிக்கின்றார். "சிலோன் ருடே' பத்திரிகைக்கு இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு; கேள்வி: கூட்டு எதிரணி, பரிவர்த்தனை கட்டுப்பாட்டு திருத்தச் சட்டமூலத்தை ஏன் எதிர்க்கின்றது? பதில்: கூட்டு எதிரணி மட்டுமன்றி, மத்திய வங்கியிலுள்ள உயர் அதிகாரிகளும் அதாவது பரிவர்த்தனைக் கட்டுப்பாடு தொடர்பாக நுட்பரீதியான அறிவைக் கொண்ட உயர் அதிகாரிகளும் வெளிநாட்டுச் செலாவணி பரிவர்த்தனை மற்றும் மோசடி தொடர்பான திருட்டுகளை எதிர்க்கும் பலரும் இந்த சட்டமூலத்திற்கு எதிரானவர்களாகும். எவ்வாறாயினும் பாராளுமன்றத்…
-
- 0 replies
- 351 views
-
-
வட- கிழக்கிலே வாழ்கின்ற எங்கள் பிள்ளைகள் தற்போதைய காலகட்டத்திலும் பல்வேறுபட்ட நெருக்கீடுகளுக்கு மத்தியில்தான் தமது கல்வியைத் தொடர வேண்டிய நிலை காணப்படுகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். கிளிநொச்சி பளை கல்வி நிலையம் ஒன்றின் ஏழாம் ஆண்டு நிறைவு விழாவும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நேற்றைய தினம் காலை 11.00 மணிக்கு கல்வி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனது பிரதம விருந்தினர் உரையின் போது மேற்படி கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அவர் தனது உரையில் மேலும் கூறுகையில், தமிழர்களாகிய நாங்கள் கல்வியிலே மிகவும…
-
- 0 replies
- 432 views
-
-
மத்திய மலைநாட்டில் கடும் காற்றுடன் பனிப்பொழிவு மத்திய மலைநாட்டின் மேற்குச் சாய்வுப் பிரதேசங்களில், இன்று காலை முதல், கடும் காற்று வீசி வருகின்றது. இதனால், பிரதான வீதிகளில், மரங்கள் முறிந்துவிழும் அபாய நிலை தோன்றியுள்ளதாக, அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடும் காற்று காரணமாக, பல பிரதேசங்களில், அடிக்கடி மின்சார விநியோகம் தடைப்பட்டும் வருகின்றது. சில பிரதேசங்களில் மழை பெய்து வருவதாகவும் பல இடங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது. மத்திய மலைநாட்டில், 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழையை எதிர்ப்பார்க்க முடியும் என்று, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுகின்றது. …
-
- 0 replies
- 319 views
-
-
யாழ்ப்பாணத்தில் நிவாரண உதவி கோரும் பொலிஸார் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய தென்பகுதியில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப்பொருட்களை யாழ் மாவட்டத்தில் பொலிஸார் கோரிவருகின்றனர். தென்பகுதியில் வெள்ள இடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை அம் மக்களுக்கு தந்து உதவுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்கிணங்க பாதிக்கப்பட மக்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் எதிர்வரும் 1 ஆம் திகதி வரை யாழ் பொலிஸ் நிலையத்திலோ அல்லது யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் காரியாலயத்திலோ ஒப்படைக்க முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். http://uthayandaily.co…
-
- 1 reply
- 485 views
-
-
சிறுபான்மை இனங்களை அச்சுறுத்தும் பேரின மதவாதம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- இலங்கைத் தீவில் மாபெரும் இரத்தக்களறி ஏற்பட்டது என்றதால் அதற்கு இங்கு நிலவும் பேரின மதவாதமே காரணம் ஆகும். ஈழத் தமிழ் மக்கள் லட்சக் கணக்கில் கொன்றழிக்கப்பட்டார்கள் என்றார் அதற்கு பேரின மதவாதமே காரணம். தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு இலங்கை என்பது சிங்கள பௌத்த நாடு என்ற கடும் வாதம் ஏற்பட்டதன் காரணமாகவே ஈழத் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தி தனி நாடு கோரிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இத்தகைய அனுபவங்களின் பின்னரும் இலங்கையில் பேரினவாத மதவாதம் இன்னும் உயிர்ப்புடன் இருந்து சிறுபான்மை இனங்களை எச்சரிக்கின்றது என்பதே அதிர்ச்சிகரமானது. தமிழ் பேசு…
-
- 0 replies
- 279 views
-
-
வடக்கு மாணவர்களின் மேம்பாட்டிற்கு உதவும் புலம்பெயர் சமூகங்கள் வட மாகாணத்தில் பின் தாங்கி வாழும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையினை மேம்படுத்த, அதிகளவான புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தினர் தற்போது முன்வந்துள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தற்போது இவ்வாறான செயற் திட்டங்களுக்கு முழு பங்களிப்பினையும் அரசாங்கம் வழங்கியுள்ளதை தாம் வரவேற்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=91860
-
- 1 reply
- 212 views
-
-
சர்வதேசம் உதவி மோசமான மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவ, ஐக்கிய நாடுகள், ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் முன்வந்துள்ளன. அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு, இலங்கை அரசாங்கத்தால் சர்வதேசத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு அமையவே, மேற்படி நாடுகளும் அமைப்புகளும், உதவ முன்வந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் உலக சுகாதார ஸ்தாபனம், உலக உணவுத் திட்டம், ஐ.நா சிறுவர் நிதியம் (யுனிசெப்) மற்றும் ஐ.நா சர்வதேச நிதியம் ஆகியன, இலங்கைக்கான நிவாரணங்களை வழங்கவும் தொடர்பாடல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உணவுகளை…
-
- 0 replies
- 492 views
-
-
அனர்த்த அவலம் தொடரும்? “வங்காள விரிகுடா கடற் பகுதியில் நிலவும் தாழமுக்கம், பங்களாதேஷ் நோக்கிப் பயணிக்கும் நிலையில், வானிலையில் மாற்றம் ஏற்படக்கூடும். இந்த மாற்றம் ஏற்பட்டால், இன்றும் நாளையும், நாட்டின் தென்மேற்குப் பகுதியிலும் வடமேல் மாகாணத்திலும், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி, அங்கு பதிவாகக்கூடிய சாத்தியம் உள்ளது என, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்தது. “மேலும், மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடிய நிலை காணப்படுவதால், களுத்துறை மாவட்ட மக்கள், மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். அதேபோல், கடற்பிரதேசங்களை அண்மித்த பகுதியில் வாழ்வோர், அவத…
-
- 0 replies
- 277 views
-
-
வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கத்தினால் இலங்கையில் சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் ஆர்.ஜயசேகர தெரிவித்துள்ளார். வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் வடக்கு திசை நோக்கி நகர்ந்தால் மணிக்கு 80கி.மீ. வேகத்தில் காற்று வீசி சூறாவளியை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளதாக அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்படி தகவல் பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியிலுள்ள தாழமுக்கம் வலுவடைந்து சூறாவளியாக மாறி வடக்கு திசையை நோக்கி நகர்ந்து வ…
-
- 0 replies
- 408 views
-
-
யுனிற்றறி, அகீயா என்ற சொற்களால் சம்பந்தன், நிமால் ஸ்ரீபாலடி சில்வாக்கிடையில் சூடான விவாதம்! அரசியலமைப்பு மீளமைப்புக்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அமைச்சர் நிமால் ஸ்ரீபாலடி சில்வாவுக்குமிடையில் சூடான விவாதம் இடம்பெற்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாக்குவாதம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அரசியலமைப்பு வரைவில் unitary என்ற ஆங்கிலச் சொல்லுடன், அகீயா என்ற சிங்களப் பதமும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார். அதற்கு நிமல் சிறிபால டி சில்வா, அது யதார்த்தமானது அல்ல என்று பதிலளி…
-
- 6 replies
- 649 views
-
-
Views - 13 இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள்;; பொறுமையை இழந்தால், இந்த நாடு மிகப் பயங்கரமான விளைவைச் சந்திக்க நேரிடும்; எனக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு, இன்று நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'இந்த நாட்டில் இடம்பெற்றுவரும் இனவாதச் செயற்பாடுகள் மீண்டும் இரத்தக்களரியை உருவாக்குவதற்கு வழிவகுக்கும். இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையான சிங்கள மக்கள் இனவாதத்தை, வன்முறைகளை விரும்பவில்லை என்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டமை மிகப் பெரிய சான்றாகும். இந்த நாட்டிலுள்ள தம…
-
- 11 replies
- 1.5k views
-