ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
கோயில் உற்சவத்தில் ’தனிஈழ’ வரைபடம் -ரொமேஸ் மதுசங்க யாழ்ப்பாணம், கோப்பாய், திருநெல்வேலி காளி கோயிலொன்றில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்தின்போது, போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட “தனி ஈழம்” வரைபடத்துக்கு ஒப்பான வரைபடமொன்றை, நபரொருவர் காட்சிப்படுத்திச் சென்ற சம்பவமொன்று, செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் கூறினர். மேற்படி உற்சவத்தின் போது, காளியம்மன் திருவுருவ வீதியுலா சென்ற போது, அதற்குப் பின்னால் குறித்த வரைபடத்தை மேற்படி நபர் காட்சிப்படுத்திச் சென்றுள்ளார் என்று தெரியவந்ததாக, யாழ்ப்பாணம் பொலிஸார் கூறினர். இதனையடுத்து, யாழ்ப்பாணம் புலனாய்வுப் பொலிஸாரால் அழைத்துவ…
-
- 4 replies
- 688 views
-
-
முத்தமிட்டு மகிழ்ந்த மங்கள அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்று (25), தனது புதிய அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் தற்போதைய நிதியமைச்சருமான மங்கள சமரவீரவும் கலந்துகொண்டார். இந்நிலையில், இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட ரவிக்கு, மங்களவின் வாழ்த்துக்கள் முத்தமாகப் போய்ச் சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/முத்தமிட்டு-மகிழ்ந்த-மங்கள/175-197311
-
- 0 replies
- 268 views
-
-
ஞானசாரதேரருக்கு அரசு கடிவாளமிடுவது கடினம் இப்படிக் கூறுகிறார் மகிந்த அன்று ஞானசார தேரரைக் கைது செய்தால் அரசை விட்டு வெளியேறுவதாகக் கூறிய சம்பிக்க போன்றவர்கள் இந்த அரசில் இருக்கும்வரை ஞானசார தேரருக்கு எதிராக நீதியை நிலைநாட்டுவது கடினமான ஒன்று என்றே தோன்றுகின்றது. இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். நாட்டில் சகல மக்களினதும் அதிருப்தியைப் பெற்றுள்ள இந்த அரசு செப்ரெம்பரில் காலாவதியாகும் மாகாண சபைகளுக்கான தேர்தலைப் பிற்போடுவதற்கு அவசர காலச் சட்டத்தை மீண்டும் கொண்டுவருவதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.…
-
- 0 replies
- 244 views
-
-
அரச வேலைகளில் வடக்கு- கிழக்குக்கு அரசு முன்னுரிமை நேற்றுச் சபையில் அறிவிப்பு அரச வேலைக்கான ஆள்சேர்ப்பின்போது வடக்கு-கிழக்கு பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 35 வயதைத் தாண்டியுள்ள பட்டதாரிகள் தொடர்பில் சிறப்புக் கவனம் செலுத்தப்படும். இவ்வாறு அரச நிர்வாகத்துறை அமைச்சர் மத்தும பண்டாரா நாடாளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் சபை ஒத்திவைப்புப் பிரேரணையைக் கொண்டு வந்திருந்தார். ‘வடக்கு மாகாணத்தில் 4 ஆயிரத்து 429 வேலையற்ற பட்…
-
- 0 replies
- 287 views
-
-
அ’புரம் சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் வழக்கு கொழும்புக்கு அரசு பரிசீலிப்பு என்கிறார் நீதி அமைச்சர் அநுராதபுரம் சிறப்பு நீதிமன்றில் நடைபெற்றுவரும் அரசியல் கைதிகளின் வழக்குகளைக் கொழும்புக்கு மாற்றுவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. இதற்கான பேச்சு விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றுக் குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை திருத்தச்சட்ட மூலத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி…
-
- 0 replies
- 124 views
-
-
‘இந்தப் பூமி இன்னுமின்னும் இரத்தத்தில் தோய வேண்டுமா?’ இந்த நாட்டு மக்கள், 30 வருடங்களாக போதுமானளவு கண்ணீரைச் சிந்திவிட்டனர். மனித இரத்தத்தாலும் இந்தப் பூமி தோய்ந்து விட்டது. அவ்வாறானதொரு நிலைமை, மீண்டும் ஏற்படவேண்டுமா? அதற்கு இடமளிக்க முடியாது” என்று, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. நாட்டின் சில பாகங்களில், கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் இனவாத நடவடிக்கை காரணமாக, முஸ்லிம் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இந்த நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், தங்களது பிரச்சினைக்குத் தீர்வுக் காண பொதுமக்களே முயலும் நிலை ஏற்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளது. …
-
- 1 reply
- 314 views
-
-
பழிவாங்கும் நடவடிக்கை வனவளத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுப்பதாக குற்றச்சாட்டு
-
- 0 replies
- 280 views
-
-
முஸ்லிம் எம்.பி.க்கள் உடனடியாக வெளியேற வேண்டும்..! முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக நடந்தேறும் அசாதாரண நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது. எனவே நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதில் மிகுந்த பங்காற்றிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பொரளையிலுள்ள என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரை யாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரி வித்தார். அவ…
-
- 0 replies
- 304 views
-
-
ஞானசார தேரருக்கு கடும் சுகயீனமாம்..! நீதிமன்றத்தை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று அவருக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அவமதிப்பு வழக்கில் ஆஜராகவில்லை. இந் நிலையில் கலகொட அத்தே ஞானசார தேரர் சார்பில் நேற்று நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி அனூஷா பேருசிங்க தேரர் சுகயீனமுற்றுள்ளதாகவும் அதனால் அவரால் நீதிமன்றில் ஆஜராக முடியவில்லை எனவும் அறிவித்தார். இதனையடுத்து ஞானசார தேரரை எதிர்வரும் 31 ஆம் திகதி மருத்துவ அறிக்கையுடன் மேன் முறையீட்டு நீதிமன்றில் நீதிபதிகளான ப…
-
- 0 replies
- 292 views
-
-
ஜனாதிபதி மைத்திரி - ஆஸி. பிரதமரை சந்தித்து பேச்சு அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லை சந்தித்தார். அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லின் அழைப்பையேற்று மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியா பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கென்பராவிலுள்ள பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல் இன்று காலை வரவேற்றார். அதன்பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்திரேலியப் பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லுக்குமிடையில் கென்பராவிலுள்ள பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெற்ற…
-
- 0 replies
- 189 views
-
-
இலங்கையின் சமாதான முனைப்புக்கள் மிகவும் மந்த கதியில் நகர்கின்றது இலங்கையின் சமாதான முனைப்புக்கள் மிகவும் மந்த கதியில் நகர்கின்றது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. காணாமல் போனோர் அலுவலகம் போன்ற நேரடியாக மேற்கொள்ளக்கூடிய விடயங்களைக் கூட அரசாங்கம் முனைப்புடன் மேற்கொள்ளத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் Tung-Laï Margue இதனைத் தெரிவித்துள்ளார். நல்லிணக்க முனைப்புக்களை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் மேலும் கூடுதல் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் ஏ.எச்.எம். பௌசீயை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
-
- 0 replies
- 189 views
-
-
நோர்வேயின் பின்னணியுடனேயே ஞானசார தேரர் குழப்பங்களை ஏற்படுத்துகிறார் : தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நோர்வேயின் பின்னணியுடனேயே ஞானசார தேரர் மதவாதத்தை நாட்டில் ஏற்படுத்திக் குழப்பங்களை ஏற்படுத்துகிறார் எனக் குற்றஞ்சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அரச சார்பற்ற நிறுவனங்களும் இதற்கு துணைபோகின்றன என்றும் குற்றம்சாட்டியது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்; நாட்டில் அரசியல் ஸ்திரமில்லா நிலைமையை ஏற்படுத்தி சிங்கள – முஸ்லிம் மக்களிடையே மோதல்களை ஏற்படுத்தும் தேவை நோர்வே உட்பட பல மேலைத்தேய நாடுகளுக்கு தேவையாக…
-
- 0 replies
- 176 views
-
-
தென்னிலங்கை அமைப்பொன்றை சேர்ந்த 300 க்கும் அதிகமான பௌத்த பிக்குகள் நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து சமய அனுஷ்டானங்களில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் சிங்கள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழும் பிரதேசத்தில் கடந்த வாரம் பௌத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. குறித்த விகாரை சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் அனுமதி பெறப்படாமல் கட்டட வேலைகள் நடைபெற்றதனை அடுத்து பிரதேச செயலரினால் கட்டட வேலைகளை உடன் நிறுத்துமாறு எழுத்து மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அந்நிலையில் நாளைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள 300க்கும் அதிகமான பௌத்த பிக்குகள் நாவற்குழியி…
-
- 0 replies
- 316 views
-
-
மங்களவின் பதவி மாற்றம் நல்லிணக்கம் மீதான அடி இலங்கையில் புதிய அரசமைப்பை உருவாக்குவது மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான தனது நிலைப்பாட்டில் இருந்து தற்போதைய கூட்டு அரசு விலகிச் செல்ல ஆரம்பித்திருக்கிறது என்று உலக நெருக்கடிகள் குழு அண்மையில் அறிக்கை விட்டிருந்த நிலையில், வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து மங்கள சமரவீர மாற்றப்பட்டிருக்கிறார். அமைதி மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் இருந்து அரசு விலகிக் செலல்வதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த மாற்றம் இருக்கக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இனப்பிரச்சினைக்கு கூட்டாட்சித் தத்துவத்…
-
- 0 replies
- 413 views
-
-
அறிமுகமில்லாதவர் அருகில் அமர்ந்து ஆஸி. பயணித்த ஜனாதிபதி : அமைச்சர் பதிவேற்றிய புகைப்படத்துக்கு மாறுப்பட்ட கருத்துக்கள் சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு விமானத்தில் பயணம் செய்யும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படம் ஒன்று பிரதியமைச்சர் ஹர்ஷ டீ சில்வாவினால் எடுக்கப்பட்டு அவரது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த பதிவில், “நான் சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியா செல்லும் வர்த்தக விமானத்தில் இந்த புகைப்படத்தை எடுத்தேன். இலங்கை நாட்டின் ஜனாதிபதி இதற்கு முன்னர் அறியாத பயணிக்கு அடுத்தபடியாக, வியாபார வகுப்பில் அமர்ந்துள்ளார். நான் உண்மையாக நல்ல விடயத்தை உணர்ந்தேன். நான் பிரதமருடன் பலம…
-
- 7 replies
- 611 views
-
-
மோசடிக் களமாக மாறியுள்ளதா வடக்கு மாகாண சபை? வடக்கு மாகாண அமைச்சர்கள் சிலர் மீதான மோசடி விசாரணை அறிக்கை முதல மைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வது முதலமைச்சரின் பொறுப்பாகும். நீண்ட போர் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் இன்னமும் தமது இயல்பு நிலைக்குத் திரும்பாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற அவர்கள், அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காகப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான், தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் வடக்கு மாகா…
-
- 0 replies
- 460 views
-
-
ஜோசப் எம்.பி கொலை: மற்றுமொருவர் கைது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர், கைது செய்யப்பட்டுள்ளார். வெலிக்கந்தையைச் சேர்ந்த வினோத் என்றழைக்கப்படும் மதுசங்க (30) என்பவரே, குற்றப் புலனாய்வு பிரிவினரால், இன்று (24) பிற்பகல் கைது செய்யப்பட்டார். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில்,இன்றையதினமே அவரை ஆஜர்படுத்திய போது, ஜூன் மாதம் 7ஆம் திகதி வரையிலும் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005 …
-
- 0 replies
- 327 views
-
-
உடல் முழுதும் கிரீஸ் பூசிக்கொண்டு பத்தரமுல்லையில் நிர்வாணமாக நடமாடிய நபர் கைது அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டு சில தினங்களே கடந்துள்ள நிலையில், கிரீஸ் மனிதன் தொடர்பான செய்தியொன்று பதிவானது. உடல் முழுதும் கிரீஸினைப் பூசிக்கொண்டு நிர்வாணமாக நடமாடும் குறித்த நபரை மக்கள் கிரீஸ் மனிதன் என அழைக்கின்றனர். இந்நபர் நிர்வாணமாக பத்தரமுல்லையில் பல வீடுகளை சுற்றிவரும் காட்சி வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளது. CCTV காட்சிகளைப் பயன்படுத்தி மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீடுகளில் பொருட்களைத் திருடியுள்ள இவர், பெண்களை துஷ்பிரயோகம் செய்ய பல தடவை முயற்ச…
-
- 0 replies
- 388 views
-
-
சக்தி டிவி செய்திகள் 24th May 2017, 8PM
-
- 0 replies
- 241 views
-
-
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணம் செய்வோருக்கு புதிய சட்டம்..! பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பணிபுரியும் விமான ஊழியர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் நோக்குடன் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் புதிய பாதுகாப்பு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய த்தினூடாக பயணம் செய்யும் பயணி ஒருவர் கைப் பையில் கொண்டுவரக்கூடிய திரவங்கள், ஸ்பிரே வகைகள், ஜெல் போன்ற பொருட்களின் அளவு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக விமான சேவைகள் நிறுவனத்தின் முகாமையாளர் எச்.எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும் குறித்த விதிகளுக்கு அமைவாக அணைத்து பொருட்களும் ஒரு லீற்றருக்கு அதி…
-
- 0 replies
- 390 views
-
-
காரைத்தீவில் பதற்றம் : சகோதரிகளை கடத்திய சிங்கள சாரதி : கைது செய்ய முயன்ற பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகல் இரு சகோதரிகளை கடத்தியதாகக் கூறப்படும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சந்தேகநபரை மீட்கவந்த பொலிஸாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காரைதீவில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன் சிறிதுநேரம் பதற்றமும் நிலவியது. இச்சம்பவம் இன்று சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவில் இடம்பெற்றது. சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபுல் பியலால் தலைமையிலான குழுவினர் பலத்த பிரயத்தனத்திற்கு மத்தியில் கடத்தலுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் சந்தேக நபரை பொதுமக்களிடமிருந்து மீட்டு ஜீப்பில் ஏற…
-
- 1 reply
- 254 views
-
-
62500 ஏக்கர் நிலப்பரப்பு அமெரிக்காவிற்கு..! (எம்.சி.நஜிமுதீன்) நல்லாட்சி அரசாங்கம் ஊவவெல்லசவிலுள்ள அறுபத்து இரண்டயிரத்து ஐநூறு ஏக்கர் நிலப்பரப்பை சீனி தொழில் துறைக்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கவுள்ளது. அத்திட்டத்திற்கான அடிக்கல்லை எதிர்வரும் ஐந்தாம் திகதி நடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எனினும் அத்திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும். அல்லாதுபோனால் அதற்கெதிராக பரந்துபட்ட போராட்டங்களை நடத்தவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் உதயஷாந்த தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உ…
-
- 0 replies
- 389 views
-
-
மினிசூறாவளியில் சிக்கிய வவுனியா : வாகனங்கள் பல சேதம் போக்குவரத்தும் பாதிப்பு வவுனியாவில் இன்று மதியம் ஏற்பட்ட மழையுடன் கூடிய மினிசூறாவளியினால் மரங்கள் முறிந்து விழுந்தமையால் வாகனங்கள் பல சேதமடைந்துள்ளதுடன், பொலிஸ் நிலையத்தில் அமைந்திருந்த பொலிசார் விடுதி ஒன்றும் சேதமடைந்துள்ளது. வவுனியா நகரில் இன்று மதியம் முதல் 3 மணிநேரம் மழையுடன் கூடிய மினிசூறாவளி வீசியதால், நகரின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் பல்வேறு கட்டங்களும், வாகனங்களும் சேதமடைந்துள்ளன. வவுனியா பொலிஸ் நிலையத்தில் நின்ற மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால் 5 மோட்டர் சைக்கிள்கள் சேதமடைந்ததுடன், பொலிஸ் நிலையத்தில் இருந்த விடுதி கட்டிடம் ஒன்றின் பகுதியும் இ…
-
- 1 reply
- 388 views
-
-
உதவியளிக்கும் "பெரியண்ணனாக' இந்தியா விளங்க வேண்டுமென சிங்களவர்களும் தமிழ் மக்களும் விரும்புகின்றனர் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார். இலங்கையின் பெரிய அயலவரான இந்தியா பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது. அவர்கள் அயலவர்களுக்கு உதவ வேண்டிய தேவை உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த மே 17 இல் டபிள்யூ.ஐ.ஓ.என். செய்திச் சேவைக்கு அளித்த பிரத்தியேக பேட்டி வருமாறு: கேள்வி: இந்தியப் பிரதமர் மோடிக்கு இலங்கை ஜனாதிபதி சிறிசேன அளித்த இராப் போசன விருந்துபசாரத்தின் போது நீங்கள் அவரை சந்தித்திருந்தீர்கள். மோடி தொடர்பான தங்களின் எண்ணப்பாடு என்ன என்பது பற்றி கூற முடியுமா? பதில்: வாழ்த்துகளை பரிமாறிக் கொ…
-
- 9 replies
- 573 views
-
-
ஊழல் விசாரணை அறிக்கையை உடனே பகிரங்கமாக்குங்கள் வடக்கு முதலமைச்சரிடம் அமைச்சர் டெனீஸ்வரனும் கோரிக்கை வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் விசாரணை அறிக்கையை முதலமைச்சர் மக்கள் அறியும் வகையில் பகிரங்கப்படுத்தவேண்டும் என வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண அமைச்சர்கள் நால்வர் தொடர்பில் முன்வைக்கப் பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட குழு விசாரணை நடத்தியது. தற்போது அந்த விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண அமைச்சர்கள் தொடர்பில் சபையில் பகிரங்கமாக விவாதிக்க…
-
- 2 replies
- 511 views
-