Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு, கிழக்கில் குடும்பங்களின் கடன்படுநிலை அதிகரிப்பு – மத்திய வங்கி ஆய்வு தமிழ் மக்கள் அதிகளவில் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரிக்கும் கடன்படுநிலை தொடர்பாக சிறிலங்கா மத்திய வங்கி ஆய்வு நடத்தவுள்ளது. கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போது, சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். வீடு மற்றும் அதனைச் சார்ந்த குடும்பத்தினரின் கடன் அதிகரித்து வருவது குறித்து நாம் கவலையடைகிறோம். போருக்குப் பின்னர் குடும்பங்கள் தமது வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கு சவால்களை எதிர்கொண்டுள்ளன. ஆய்வுகள் நடத்தப்பட்டு அதன் முடிவுகளுக்கு அமைய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். 2009 மே மாதம்…

    • 0 replies
    • 198 views
  2. மே மாதம் 18 ஆம் நாள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களின் பெயர்களை நினைவுக் கற்களில் பொறித்து அஞ்சலி செய்வதற்கு சிறிலங்கா காவல்துறையினர் தடை விதித்ததுடன், ஏற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தது. காவல்துறையின் இச்செயற்பாட்டை உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் தலைவர் யஸ்மின் வன்மையாகக் கண்டித்ததுள்ளார். கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றமும் நினைவுக் கற்களில் விடுதலைப் புலிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்து தடை விதித்திருந்தது. இது தொடர்பாக யஸ்மின் சூக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்தவொரு தாய், தந்தையருக்கும் தமது பிள்ளைகளை நினைவுகூர உரிமையுண்டு. அதனை நீங்கள் தடுக்கமுடியாது. அதேபோல் யுத்தத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளையும் …

    • 0 replies
    • 302 views
  3. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை அரசாங்கம் ஏற்காது போனால் அரசிலிருந்து விலகி எதிர்க்கட்சிக் குழுவாக இயங்குவோம் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது கருத்துக்களை ஜனாதிபதிக்கு ஏற்கனவே அறிவித்துள்ளோம். இன்றளவில் நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றமைக்கு, ஐக்கிய தேசியக்கட்சியின் பொருளாதாரம் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் குழுவின் செயற்பாடுகளே காரணமாகும். கூட்டு அரசாங்கமாகச் செயற்பட வேண்டுமானால் இரண்டு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொருளாதாரத் திட்டங்களினை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்ட…

    • 0 replies
    • 239 views
  4. சக்தி டிவி செய்திகள் 21th May 2017, 8PM

  5. தன்னை தடுத்த பொலிஸாருடன் இனவாதமாக பேசிய ஞான­சார தேரர் வீதியில் சென்ற தனது வாகனத்தை தடுத்த பொலிஸாருடன், ஞானசார தேரர் இனவாதத்தை தூண்டும் வகையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். குருநாகல் கொஸ்களை தோரப்பாய பிரதேசத்தின் அனுராதபுர மற்றும் குருநாகல் வீதியில் வைத்து பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் வாகனத்தை மறித்த பொலிஸார், அவரை கைது செய்யவுள்ளதாக கூறி தேரர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொலிஸாருடன் இனவாதத்தை தூண்டும் வகையிலான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அனுராதபுரம் சென்ற ஞானசார தேரர் கொஸ்களை பகுதியில் வைத்து பொலிஸாரினால் இடை நிறுத்தப்பட்டுள்ளார். …

  6. கிழக்கின் ஆட்சியில் ‘மு.காவும் த.தே.கூவும் பங்குதாரர்கள்’ -வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், எஸ்.பாக்கியநாதன் “கிழக்கு மாகாண ஆட்சியின் பங்குதாரர்கள் என்ற அந்தஸ்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் நிரந்தர அந்தஸ்தாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் நாங்கள். அதன்மூலமே, நாங்கள் பல விடயங்களைச் சாதிக்க முடியும்” என, மு.காவின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், பிழைப்புவாத அரசியலையோ அல்லது சந்தர்ப்பவாத அரசியலையோ செய்யவில்லை என்றும், அமைச்சர் சுட்டிக்காட்டினார். …

  7. வடக்குப் பாதை வலையமைப்பை விருத்தி செய்வதில் டில்லி ஆர்வம் நேரில் வந்து ஆராயவுள்ளார் அமைச்சர் நிதின் கட்கரி ‘வடக்கு மாகாண பாதை வலை­ய­மைப்பை அபி­வி­ருத்தி செய்­வ­தில் இந்­தியா வெகு ஆர்­வ­மாக உள்­ளது. இந்­தி­யா­வின் நெடுஞ்­சா­லைத் துறை அமைச்­சர் நிதின் கட்­கரி இது தொடர்­பில் யாழ்ப்­பா­ணத்­துக்கு வந்து ஆரா­ய­வுள்­ளார்’ இவ்­வாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார். யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற ‘பல­மிக்­க­தோர் இலங்கை’ பொரு­ளா­தா­ரக் கலந்­து­ரை­யா­ட­லின் தலைமை உரை நிகழ்த்­தும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது நான் அண்­மை­யில் இந்…

  8. ஞானசார மீது துரும்பளவில் தாக்குதல் ஏற்பட்டாலும் நாட்டில் சிங்கள பௌத்த புரட்சி வெடிக்கும் (ஆர்.யசி) பொதுபல சேனா பௌத்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. அதேபோல் அரசாங்கத்தின் பிரதான அமைச்சர் ஒருவரின் மூலமாக ஞானசார தேரரை கொலைசெய்ய முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார். ஞானசார தேரரை கைது செய்தாலோ அவர் மீது சிறிய தாக்குதலேனும் நடத்தினால் நாட்டில் சிங்கள பௌத்த புரட்சி வெடிக்கும் எனவும் அவர் எச்சரித்தார். அண்மைக்காலமாக பௌத்த சிங்கள அமைப்புகள் நாட்டில் மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில் சிங்கள ராவய…

  9. வடக்கில் காணி­களை பெற்றுக் கொண்­டோரே வேறு இடத்தில் காணி கேட்டுப் போரா­டு­கின்­றனர் கடும்­போக்­கா­ளர்கள் மக்­களை தூண்­டி­வி­டு­கின்­றனர் என்­கிறார் ஜனா­தி­பதி திரு­மலை நவம் கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த மக்கள் காணிகள்கேட்டு போராட் டம் நடத்தவில்லை வடக்கி­லுள்ள மக்­களே காணிகள் கேட்டு போராட்­டங்­களை நடத்­து­கின்றனர். வடக்கு மக்­க­ளுக்கு நாம் காணி களை வழங்­கி­யி­ருக்­கின்றோம், வீடு­களை வழங்­கியிருக்­கின் றோம். அதே­போன்று வாழ்வா ­தா­ரத்­தை­யும் தேடிக் கொடுத்­தி­ருக்­கின்றோம். ஆனால், காணி­களை பெற்­றுக்­கொண்­ட­வர்கள் வேறு இடங்­களில் காணி­களை கேட்டு போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர். இந்த போராட்­டத்­துக்கு மக்கள் கார…

  10. 9 மாகா­ணங்­க­ளிலும் சம­மாக இரா­ணு­வத்தை நிறுத்­தினால் எமக்கு ஆட்­சே­பனை இல்லை ஜனா­தி­ப­தி­யிடம் வடக்கு முதல்வர் எடுத்­து­ரைப்பு நமது நிருபர் முழு இரா­ணு­வத்­தையும் ஒன்­ப­தாகப் பிரித்து ஒன்­பதில் ஒரு பங்கை ஒவ்­வொரு மாகா­ணத்­திலும் நிறுத்­துங்கள். சரி­ச­ம­னாக இரா­ணு­வத்தை நிறுத்­து­வதில் எமக்கு ஆட்­சே­பனை இல்லை என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை அண்­மையில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் சந்­தித்து உரை­யா­டி­ய­போது இவ் வேண்­டு­கோளை அவர் விடுத்­துள்ளார். இது தொடர்பில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னிடம் கேட்ட கேள்­வி­க­ளுக்கு அவர் அளித்த பதில…

  11. ஞான­சா­ரரின் இன­வாதப் போக்கை சாது­ரி­ய­மாக கையாண்டார் மனோ – அமைச்சர் திகாம்­பரம் இன­வாதம் என்­பது இலங்கை நாட்­டுக்கு புதி­தல்ல. காலத்­திற்கு காலம் வெவ்­வேறு வடி­வங்­களில் அது இடம்­பெற்றே வந்­துள்­ளது. அண்­மைய ஆண்­டு­களில் அதனை முன்­னெ­டுத்துச் செல்லும் குழு­வாக கல­கொட அத்தே ஞான­சார தேரர் எனும் பிக்கு தலை­மை­யி­லான குழு­வினர் இயங்­கு­கின்­றனர். இது தனியே அவர் தலை­மை­யி­லான குழு­வி­னரின் வேலை மாத்­திரம் கிடை­யாது. இதற்குப் பின்னால் ஓர் அர­சியல் நிகழ்ச்சி நிரலும் இன­வாத அர­சி­யல்­வா­தி­களும் கூட இருக்­கின்­றார்கள். அத்­த­கைய அர­சியல் நிகழ்ச்சி நிரல் கொண்ட ஞான­சா­ர­தேரர் தம்மைச் சந்­திக்க வந்த வேளை அர­சி­யல்­வாதி என்­கின்ற அடிப்­ப­டையில் சாணக்­கி…

  12. முஸ்லிம் சமூகத்தை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தும் வகையிலான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு மாத காலத்தினுள் மாத்திரம் இவ்வாறான 15 சம்பவங்கள் பதிவாகியுள்ளமையே இதற்குக் காரணமாகும்.இவற்றுள் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள், வர்த்தக நிலையத்திற்கு தீ வைப்பு, முஸ்லிம் எல்லைக் கிராம மக்களுக்கு அச்சுறுத்தல்கள், வெறுப்புப் பேச்சுக்கள், அல்லாஹ்வை அவமதிக்கும் பேச்சுக்கள் என பாரதூரமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.இருந்த போதிலும் இவை தொடர்பில் இதுவரை ஒரு நபர் கூட கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. மேற்படி சம்பவங்கள் அனைத்தும் மிகத் தெளிவாகவே நாட்டின் சட்ட வரம்பை மீறுபவையாகும். எனினும் இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களுக்…

    • 0 replies
    • 286 views
  13. இந்திய போர்க் கப்பல் கொழும்பு துறைமுகம் வருகை..! இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலான 'சுமேதா' போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று காலை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த குறித்த போர்க்கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்துள்ளனர். உத்தியோகபூர்வமாக நாட்டை வந்தடைந்துள்ள இந்த கப்பல் 3 நாட்கள் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும் எனவும், கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பல நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்திருக்கவுள்ளது. கப்பலானது கடற்படையினரின் பயிற்…

  14. அமைச்சரவை மாற்றம் : முக்கிய அறிவிப்பு நாளை நல்­லாட்சி அர­சாங்­கத்தின் முக்­கிய அமைச்­சுக்­களில் மாற்­றங்­களை ஏற்­ப ­டுத்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் தீர்­மா­னித்­துள்­ளனர். குறிப்­பாக நிதி அமைச்சு, வெளி­வி­வ­கார அமைச்சு மற்றும் சட்ட ஒழுங்­குகள் அமைச்சு உள்­ளிட்ட முக்­கிய அமைச்­சுக்கள் பல­வற்­றிலும் இந்த மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் சட்ட ஒழுங்­குகள் அமைச்சின் பொறுப்­புக்­களை பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­விற்கு வழங்­கு­வ­தற்­கான எதிர்ப்­பார்ப்­புகள் ஜனா­தி­ப­தி­யிடம் உள்­ள­தா­கவும் அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்தர் ஒருவர் குறிப்­பிட்டார். இத­ன­…

  15. பொதுபலசேனா அமைப்பும் அதன் முக்கியஸ்தர் ஞானசாரவும் கடந்த அரசிலும் இந்த அரசிலும் தொடர்ந்தேர்ச்சியாக முஸ்லிம்களுக்கு தொல்லை கொடுத்து கொண்டும் வஞ்சித்து கொண்டும் இருக்கின்றார், புனித இஸ்லாத்தையும் இறைவனையும் இழிவாகவும் பேசுகிறார். இப்படி இஸ்லாத்தை கொச்சைப்படுத்தியவர்களின் இறுதி நிலை வரலாறுகளின் அடிப்படையில் ஒன்றில் அவர்கள் இஸ்லாத்தை ஏற்பர் இல்லயேல் முடிவு மிகக் கேவலமாக இருக்கும் என சிலோன் முஸ்லிம் பிரதானி பஹத் ஏ.மஜீத் குறிப்பிட்டுள்ளார்.புலம்பெயர் மத்திய கிழக்கு இலங்கை முஸ்லிம்களை சிலோன் முஸ்லிம் அலுவலகத்தில் வைத்து சந்தித்து உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்தார்,மேலும் உரையாற்றிய பஹத் ஏ.மஜீத்,இஸ்லாம் பரிபூரண மார்க்கம், சகவாழ்வு, சமாதானம், ஒழுக்கம், உண்மை, நேர்மை என்பவற்றால்…

    • 4 replies
    • 499 views
  16. மறக்கப்பட்ட தமிழர்கள் சமீபத்திய இலங்கைப் பயணத்தின்போது, மத்திய மாகாணத்தின் நுவரேலியா மாவட்டத்தில் உள்ள நோர்வுட் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பெருந்திரளாகக் கலந்துகொண்ட மலையகத் தமிழர்கள் மத்தியில் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. இலங்கையின் ‘பிற’ தமிழர்களின் பங்களிப்புக்கான இந்திய அரசின் மிக உயர்ந்த அங்கீகாரமாக அது அமைந்தது. மலையகத் தமிழர்களின் பகுதிக்கு முதன்முதலாகச் சென்ற இந்தியப் பிரதமர் மோடிதான். மலையகத் தமிழர்களுக்காக மேலும் 10,000 வீடுகள் கட்டுவதற்கு இந்திய அரசு நிதி வழங்கும் என்றும் மோடி அறிவித்தார். ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை உணர்ந்திருந்த இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங…

  17. கேள்வி- பொதுபல சேனா இயக்க செயலாளர் ஞானசாரரை கைது செய்ய வேண்டுமென பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளீர்களே? பதில்- ஆம். ஞானசார தேரரின் நடவடிக்கைகள் எல்லை மீறி விட்டன அல்லாஹ்வை பகிரங்கமாக தகாத வார்த்தைகள் கொண்டு தூற்றி வருகின்றார். இனவாதத்தை மோசமாக கட்டவிழ்த்து விடுகின்றார் இதனாலேயே நானும் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்காரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலியும் கூட்டாக இந்த முறைப்பாட்டை பதிவு செய்து அவரை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்தோம். கேள்வி – பொலிஸ்மா அதிபரை நீங்கள் சந்தித்ததாக பத்திகைகளில் செய்திகள் வெளிவந்தனவே! பதில் – கடந்த 18ம் திகதி மாலை பொலிஸ் தலைமையகத்தில் அவருக்கெதிராக பதிவு செய்த பின்…

    • 0 replies
    • 596 views
  18. வடமராட்சி கிழக்கை ஹெலியிலிருந்தவாறே பார்வையிட்டார் ரணில் வட­ம­ராட்சி கிழக்­குப் பிர­தே­சத்தை உலங்கு வானூர்­தி­யில் வட்­ட­ம­டித்­துப் பார்­வை­யிட்­டார் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க, வட­ம­ராட்­சிக்கு நேற்­றுக் காலை பய­ணம் மேற்­கொண்­டார். பருத்­தித்­துறை துறை­மு­கத்­தின் கட்டுமா­னப் பணி­களை அவர் பார்­வை­யிட்­டார். 8 பில்­லி­யன் ரூபா செல­வில் 500 பட­கு­களை ஒரே நேரத்­தில் நிறுத்­தக் கூடி­ய­தாக இந்­தத் துறை­மு­கம் அமைக்­கப்­ப­டு­கி­றது. இதன் பின்­னர் மணல்­காட்­டுப் பகு­தி­யைச் சென்று தலைமை அமைச்சர் பார்­வை­யிட்­டார். அங்­கி­ருந்து உலங்­கு­வா­னூர்­தி­யில் புறப்­பட்ட தலைமை அமைச்­ச…

  19. நினைவேந்தல் செய்ததால் பணிநீக்கம்! முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் செய்­த­வர்­களை வவு­னி­யா­வில் இயங்­கும் தென்­ப­கு­தி­யைச் சேர்ந்த நிறு­வ­னம் ஒன்று வேலை­யில் இருந்து இடை­நி­றுத்­தி­யுள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. பணி­நீக்­கி­ய­தற்­கான கார­ணம் தற்­போது கூற முடி­யாது என்று அந்த நிறு­வ­னம் தெரி­வித்­தது. அந்த நிறு­வ­னத்­தில் முல்­லைத்­தீவு கிளி­நொச்சி மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த 7 பேர் பணி­பு­ரி­கின்­ற­னர். அவர்­கள் கடந்த வியா­ழக்­கி­ழமை தாம் பணி­பு­ரி­யும் அலு­வ­ல­கத்­தில் பணி­நே­ரம் நிறை­வ­டைந்த பி்ன்னர் மாலை 5.30 அள­வில் மே 18 நினை­வேந்­தல் நிகழ்வை நினை­வு­ கூர்ந்­துள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றத…

  20. குருநாகல் பள்ளி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் குருநாகல், மல்லவபிற்றியவில் அமைந்துள்ள ஜும்ஆ பள்ளிவாசல் மீது, இனந்தெரியாத நபர்களால், நேற்று இரவு, பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, பள்ளிவாசலுக்குச் சேதம் ஏற்பட்டது. - See more at: http://www.tamilmirror.lk/196995/க-ர-ந-கல-பள-ள-ம-த-ப-ற-ற-ல-க-ண-ட-த-த-க-க-தல-#sthash.BPcxTvr4.dpuf

  21. பளையில் துப்பாக்கிச் சூடு கிளிநொச்சி மாவட்டத்தின், பளைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, ஏ-9 முதன்மைச் சாலையில், கற்சிலைவெளிப் பகுதியில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 119 அவசர பொலிஸ் இலக்க வாகனத்தினர் அதிகாலை 12.15 மணியளவில் அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்ததாகவும், அப்போது வீதியிலிருந்த பற்றைப் பகுதியிலிருந்து மூன்று துப்பாக்கி வெடிகள் கேட்டதாகவும் பளைப் பொலிஸார் தெரிவித்தனர். ரி-56 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தியே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாப் பொலிஸார் கூறுகின்றனர். எவருக்கும் இதன்போது காயங்கள் ஏற்படவில்லை என்றும், வாகனத்துக்கும் சேதம…

  22. முல்லைத்தீவில் கடற்படைக்குச் சொந்தமான 40 ஏக்கர் காணிக்கு உரிமை கோரும் சீனர் முல்லைத்தீவு வெல்லமுள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படைக்குச் சொந்தமான 40 ஏக்கர் காணிக்கு சீனர் ஒருவர் உரிமை கோரியுள்ளார். இந்தக் காணியின் மூல உரிமையாளர் தாம் என குறித்த சீனர் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட பாரிய கடற்புலி முகாம் அமைந்திருந்த பகுதியையே அவர் இவ்வாறு உரிமை கோரியுள்ளார். தற்போது குறித்த பகுதியின் 600 ஏக்கர் காணியை உள்ளடக்கி படையினர் முகாம் ஒன்றை அமைத்துள்ளனர். சீனப் பிரஜை கோரும் காணியானது அவரது பெற்றோர் விவசாய அனுமதிபத்திர அடிப்படையில் பெற்றுக்கொண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. …

  23. கனடிய கடற்படையின் வின்னிபெக் கொழும்புத் துறைமுகத்தில் கனடிய கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. வின்னிபெக் என்ற கனடிய கடற்படைக் கப்பலே, கூட்டுப்பயிற்சி மற்றும் நட்பு தேவைகளுக்காக நேற்று கொழும்புத் துறைமுகம் வந்துள்ளது. இந்தப் போர்க்கப்பலுக்கு பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் வரவேற்பு அளித்தனர். எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்லவுள்ள இந்தப் போர்க்கப்பலானது, கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலங்களில் கூட்டுப்பயிற்சி, பரஸ்பர நட்புறவு மற்றும் நட்பு ரீதியான விளையாட்டு நிகழ்வுகளில் கலந்துக…

  24. அர­சி­யல் தீர்வு பின்­போ­வ­தன் எதிர்­வி­னையே பளைச் சூடு! போர் முடிந்து 8 ஆண்­டு­க­ளின் பின்­னர் மீண்­டும் துப்­பாக்கி வேட்­டுச் சத்­தங்­கள் வடக்­கில் ஒலித்­துள்­ளன. சுற்­றுக் காவல் அணியை இலக்கு வைத்து தாக்­கு­த­லா­ளி­கள் பதுங்­கி­யி­ருந்து சுட்­ட­னர் என்று பொலி­ஸார் கூறு­கின்­ற­னர். அது உண்­மை­யா­யின், அர­சி­யல் தீர்வு ஒன்று தாம­தப்­பட்டு வரும் நிலை­யில் இத்­த­கைய சம்­ப­வம் கவ­லைக்­கு­ரி­யது. எதிர்­கா­லம் குறித்த நிச்­ச­ய­மின்­மையை ஏற்­ப­டுத்­து­வது. பளை நக­ருக்கு அண்­மை­யில் கச்­சார்­வெ­ளிப் பகு­தி­யில் நடந்த சம்­ப­வம் குறித்­துப் பல கதை­கள் நில­வி­னா­லும், பாது­காப்­புத் தரப்­பி­னர் அதனை அவ்­வ­ளவு இல­கு­வாக எடுத்­துக்­கொண்­ட­தா­கத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.