Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஞானசாரரைக் கைது செய்யும் முயற்சி தோல்வி பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்வதற்காக பொலிஸார் மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து, குருநாகலில் பதற்றமான சூழ்நிலையொன்று, நேற்று இரவு ஏற்பட்டது. முஸ்லிம்கள் வாழும் பகுதிக்கான பாதையை, பொலிஸார் மறித்ததாகவும் அந்தப் பகுதிக்கு பொது பல சேனாவின் உறுப்பினர்கள் வந்த போது, ஞானசார தேரரைக் கைது செய்ய முயன்றதாகவும், பொது பல சேனா தெரிவித்தது. ஞானசார தேரரைக் கைது செய்வதற்கான முயற்சியை, பொது பல சேனாவும் அதன் ஆதரவாளர்களும் எதிர்த்தனர் என்று அறிவிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, பொலிஸாருக்கும் ஞானசார தேரருக்குமிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. அதன்போது, பிரதமரைய…

  2. பொருத்து வீடா? கல் வீடா? மக்களின் விருப்பை அறிந்த பின்னர் அதை நடைமுறைப்படுத்த ரணில் உறுதி பொருத்து வீடா? கல் வீடா? இதில் மக்­க­ளின் விருப்பு எது என்­பதை கண்­ட­றிந்து அதற்கு அமை­வாக வீட்­டுத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த தயா­ராக இருப்­ப­தாக, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க யாழ்ப்­பா­ணத்­தில் வைத்து கூறி­னார். இதன் போது பொருத்து வீட்­டுத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த முயற்­சித்து வரும் அமைச்­சர் சுவா­மி­­நா­த­னும் இருந்­தார். யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று முன்­தி­னம் மாலை நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின் போதே இந்த விட­யம் ஆரா­யப்­பட்­டது. ‘மக்­கள் பிர­தி­நி­தி­க­ளின் சம்…

  3. வடக்கு அமைச்சர்களுக்கு எதிரான மோசடி அறிக்கை முதலமைச்சரிடம் விரைவில் மாகாண சபையில் அது பகிரங்கப்படுத்தப்படும் என எதிர்பார்ப்பு வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட மோசடி, ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்திய குழு தனது இறுதி அறிக்கையை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளித்தது. அமைச்சர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய பரிந்துரைகளுடன் அந்த அறிக்கை கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டது. அமைச்சர்கள் பல ஊழல், மோசடியில் ஈடுபட்டனர் என்று அவர்களது சொந்தக் கட்சி உறுப்பினர்களே மாகாண சபையில் குற்றஞ்சாட்டி வந்தனர். அதிகரித்து வந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு ஒரு குழுவை முதலமைச்சர் நிய…

  4. வெள்ளவத்தை 'எக்சலன்ஸி' கட்டடத்தின் உரிமையாளர் கைது..! கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற கட்டட சரிவுதொடர்பில் கட்டடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தை, சார்லிமன்ட் வீதியில் சவோய் திரையரங்கின் பின்னால் அமைந்துள்ள 'எக்சலன்ஸி' என்ற பெயரைக் கொண்ட வரவேற்பு மண்டபத்தின் பின்னால் உள்ள 5 மாடிக்கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 21 பேர் காயமடைந்திருந்தனர். இந்த அனர்த்தம் காரணமாக இருவர் உயிரிழந்ததுடன், நேற்று இரவு பத்தனை சேர்ந்த ராமன் நிரோஷன் என்ற இளைஞன் சடலமாக கண்டுப்பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறித்த கட்டடத்தின் உரிமையாளர் தலைமறைவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் இன்று காலை பொலிஸ…

  5. ஏசி பஸ்சில் படம் பார்த்துக் கொண்டு கொழும்புக்கு போய் வாரது எண்டால் அதை விட சுகம் எதிலும் இல்லை பாருங்கோ. ஆனால் ரிக்கெட் எடுத்தும் ஓசியில போறது போல எல்லோ ஏசி பஸ் நடத்துனர்கள் பயணிகளை நடத்துகிறார்கள். நடத்துனர்கள் அப்படி நடந்தாலும் பயணிகள் ஏசி பஸ்சில் தான் கொழும்புக்கு போய் வருவம் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். அப்பத் தான் தமக்கு கௌரவம் என்றும் சொல்லுகிறார்கள். போர் இடம்பெற்ற காலப் பகுதியில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போது பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாகத் தான் ஒரு குடும்பத்துக்கு இவ்வளவு தான் கோதுமை மா என்று அளந்து மக்களுக்கு வழங்கினார்கள். அப்பொழுது பல நோக்கு கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றுபவர்கள் மக்கள் தங்களிடம் தான் கண்டிப்பாக வரவேண்டும் என்ற எண்ணத்த…

    • 1 reply
    • 736 views
  6. ம்.ரீ.ஹைதர் அலி: பாடசாலைகளிலோ அல்லது வேறு அரச நிறுவனங்களிலோ முஸ்லிம் பெண்கள் அபாயா அணிய முடியாது என்று கூறுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அதிகாரிகள் இன ஒற்றுமைக்காக பாடுபடுவதற்கு மாற்றமாக இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முனையக்கூடாது. பெண்கள் அபாயா (Abaya) அணிவதென்பது முஸ்லிம்களுக்கான தனித்துவமான உடையாகும். பாடசாலைகளிலோ அல்லது வேறு அரச நிறுவனங்களிலோ அபாயா அணிய முடியாது என்று கூறுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார். புதிதாக நியமனம் பெற்று தமிழ் பாடசாலைகளுக்கு செல்லும் முஸ்லிம் ஆசிரியைகள் கட்டாயம் சேலை (sari) அணிந்து வர வேண்டும் என்று அதிகாரிகளால் நிர்ப்ப…

  7. முள்ளிவாய்க்காலில் சம்பந்தருக்கு கடும் எதிர்ப்பு -சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.நிதர்ஷன் வடமாகாண சபையின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் வணக்க நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுக்கொண்டிருந்த போது பொதுமக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில், முறுகல் நிலை தோன்றியது. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அருகில் இந்நினைவு நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இதன்பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றிபோது, பொதுமக்கள் இதனை அரசியல் மேடையாக்க வேண்டா…

    • 10 replies
    • 1.8k views
  8. காணாமல் போனவர்கள் எங்காவது தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுமாயின் அந்த இடத்தை பரீட்சிப்பதற்கான செயற்திட்டத்தை அரசாங்கம் உருவாக்கும் – ஜனாதிபதி காணாமல் போனவர்கள் தொடர்பான விடயங்களை முன்வைத்து எங்காவது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுமாயின் அந்த இடங்களை பரிசீப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் உருவாக்குமென ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கை மற்றும் அதன் விதந்துரைகளை கருத்திலெடுத்து காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு விசேட குழு விரைவில் நியமிக்கப்படுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இன்று (20) சம்பூர் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் உர…

  9. விஸ்வமடுவில் சுழல்காற்றினால் தற்காலிக வீடு சேதம் இன்று மதியம் விஸ்வமடு நாதந்திட்டம் பகுதியில் வீசிய சுழல் காற்றினால் குறித்த பகுதியில் உள்ள தற்காலிக வீட்டி ஒன்றின் கூரை சேதமடைந்துள்ளது. வீட்டின் மீது போடப்பட்டிருந்த தகரம் காற்றினால் பிடுங்குப்பட்டு செல்லும் பொழுது குறித்த வீட்டில் தாயும் இரண்டு பிள்ளைகளும் இருந்துள்ளனர் இருப்பினும் துரதிஸ்ட வசமாக யாருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை நாதன் திட்டம் கிராமத்தை பொறுத்த வரையில் ,மீள்குடியேற்றம் செய்யப்பட்டது முதல் மக்கள் இவ்வளவுகாலமும் தற்காலிக வீடுகளிலையே வசித்து வருகின்றனர். சென்ற மாதம் அளவிலையே தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்பட…

  10. நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் வடக்கு மாகாணமும் பங்காளராக மாறவேண்டும் யாழ்.செயலக கூட்டத்தில் பிரதமர் ரணில் வலியுறுத்தல் (எம்.நியூட்டன்) நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் வடக்கு மாகாணமும் பங்காளராக வேண்டு மெனக் கோரிய பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க, முதற்கட்டமாக வடக்கு கிழக் கில் ஆயிரம் பட்டதாரிகளை அபிவிருத்தி மற்றும் ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்ளவிருப்பதாகவும் குறிப்பிட்டார். பொருளாதார மேம்பாட்டிற்காக விசேட செயலணிகள் வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளதாக குறிப்பிட்ட அவர், வடக்கின் வீட்டுத்தேவையை பூர்த்தி செய்வதற்கு இந்திய அரசாங்கம் மேலும் வீடுகளை வழங்கவுள்ளதாகவும் வடக்கில் அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பதற்கு அவ்வரசாங்கம்…

    • 4 replies
    • 460 views
  11. கோயில் கட்டடம் இடிந்து விழுந்தது: 18 பேர் காயம் -ரீ.எல்.ஜவ்பர்கான்,கனகராசா சரவணன் மட்டக்களப்பு, ஆரையம்பதி உள்ள கோயில் ஒன்றில், கட்டப்பட்டு கொண்டிருக்கின்ற கட்டடம் சற்றுமுன்னர். இடிந்து விழுந்தது. அதில், 18 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை 4.15 மணியளிவில் இடம்பெற்றுள்ளது. ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னாள் அமைந்து ஸ்ரீ முத்துமாரியம்மன கோயிலின் மண்டப கட்டிடப்பணிகள் நிறைவடைந்து அதற்காக பிளேட் கொங்க்ரீட் இடும் பணிகளின் போதே கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.கட்டிடப்பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண…

  12. அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை வழங்குமாறு அரசை வலியுறுத்தி எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் அறவழிப் போராட்டமொன்று நடைபெறவுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் மாலை 3 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக நடைபெறும் இந்த அமைதிப் போராட்டத்துக்குத் தெற்கிலுள்ள சிவில் அமைப்புகளும் ஆதரவை வழங்கியுள்ளன. எனவே, வடக்கு, கிழக்கிலுள்ள சிவில் அமைப்பினரும், காணாமல்போனவர்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஆகியோரும் இதில் கலந்துகொண்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று குறித்த அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல் …

    • 0 replies
    • 491 views
  13. முப்படையும் பலப்படுத்தப்படும்: ஜனாதிபதி விமர்சிப்பவர்கள் எதனைக் கூறினாலும் தேசிய பாதுகாப்புத் தொடர்பான பொறுப்புக்களில் முப்படையிரைப் பலப்படுத்தும் செயற்பாடுகளைக் குறைவின்றி நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றுப் (19) பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகிலுள்ள படைவீரர் நினைவு தூபி வளாகத்தில் நடைபெற்ற 2017 - தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வில் உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். 30 ஆண்டுகளாக நடைபெற்ற போரில் மரணமடைந்த மற்றும் அங்கவீனமுற்ற படையினருக்கான பொறுப்புக்கள் மற்றும் கடமைகளைக் குறைவின்றி நிறைவேற்றுவதுடன், நாட்டின் எதிர்காலத்துக்காக இப்போது ப…

  14. காணாமல்போன போராளிகள் அனைவரும் இறந்துவிட்டனர் – சிங்கள ஊடகம்! காணாமல் போன விடுதலைப்புலிகள் அனைவரும் யுத்தத்தில் கொல்லப்பட்டு விட்டமை நிரூபணமாகியுள்ளது என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தினரால் காணாமல் போகச் செய்யப்பட்ட 500 விடுதலைப் புலிகளும் போரில் கொல்லப்பட்டுள்ளமை எட்டு வருடங்களின் பின்னர் உறுதியாகியுள்ளதாகவும் அவ்வூடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இத்தனை காலமும் இவர்கள் அனைவரினதும் பெயர்கள் காணாமல் போனோர் பட்டியலில் காணப்பட்டதாகவும், முள்ளிவாய்க்காலில் நிறுவப்படவிருந்த நினைவுத் தூபியில் பொறிக்கப்படவிருந்த உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியலில் இந்த 500 புலி உறுப்பினர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்…

    • 0 replies
    • 357 views
  15. இலங்கையில் முதன் முறையாக கைப்பற்றப்பட்ட போதைபொருள்! : இரு பெண்கள் கைது! “கிரிஸ்டல் மெத்” எனப்படும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஐஸ் ரக போதைபொருளை வைத்திருந்த இரண்டு பெண்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவர்கள் வத்தளை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். பெண்களிடமிருந்து சுமார் 250 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், இதன் பெறுமதி சுமார் 20 இலட்சம் என கண்டறியப்பட்டுள்ளது. “கிரிஸ்டல் மெத்” எனப்படும் இந்த போதைப்பொருள் இலங்கையில் முதன் முறையாக கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/20175

  16. களவாடப்பட்ட அமெரிக்க இராணுவ வாகனங்கள் இலங்கைக்கு விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது களவாடப்பட்ட அமெரிக்க இராணுவ வாகனங்கள் இலங்கைக்கு விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் படைவீரர் ஒருவரும் ஆறு தென்கொரியப் பிரஜைகளும் கூட்டாக இணைந்து இவ்வாறு இராணுவ வாகனங்களை விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர். தென்கொ ரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படையினரின் பயன்பாட்டுக்கான ஹம்வீஸ் ( Humvees) ரக இராணுவ வாகனங்களே இவ்வாறு விற்பனை செய்ய முயற்சிகப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் குறித்த ரக வாகனங்கள் இராணுவ முகாமிலிருந்து களவாடப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் சிலவற்றை இலங்கைக்கு விற்பனை செய்ய முயற்சிக்கப்ப…

  17. வெள்ளவத்தையில் பெரும் பதற்றம் : மீட்கும் நடவடிக்கையைதுரிதப்படுத்துமாறு இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களின் உறவினர்கள் காலக்கேடு வெள்ளவத்தை கட்டிட இடிபாடுகள் சிக்கியுள்ள தமது உறவினர்களை உடனடியாக மீட்டுத்தருமாறு உறவினர்கள் காலக்கேடு விதித்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவிவருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். வெள்ளவத்தை, சார்லிமன்ட் வீதியில் சவோய் திரையரங்கின் பின்னால் அமைந்துள்ள 'எக்சலன்ஸி ' என்ற பெயரைக் கொண்ட வரவேற்பு மண்டபத்தின் பின்னால் உள்ள 5 மாடிக்கட்டடம் இடிந்து விழுந்தமை அதில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 23 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில் இருவர் கட்…

  18. ஞானசார தேரர் என்னிடம் வாதாடும்போது நானே உண்மையான பௌத்தனாகவிருந்தேன் சிறுபான்மையினரை பயமுறுத்தி அடிபணிய வைத்துவிடலாம் என யாரும் எண்ணக்கூடாது என்கிறார் அமைச்சர் மனோ (பா.ருத்­ர­குமார்) ஞான­சார தேரர் என்­னிடம் கடும் தொனி யில் வாதாடும் போது நானே உண்மையான பௌத்­த­னாக இருந்தேன். சிறு­பான்­மை­யி­னரை பய­மு­றுத்தி அடி­ப­ணி­ய­வைத்­து­வி­ட லாம் என யாரும் நினைத்­து­விட வேண்டாம் என தேசிய கலந்­து­ரை­யாடல் சக­வாழ்வு மற்றும் அரச கரு­மங்கள் மொழிகள் அமைச் சர் மனோ கணேசன் தெரி­வித்தார். மேலும் தேசிய நல்­லி­ணக்கம் தொடர்பில் தற்­போது எழுந்­துள்ள பிரச்­சி­னைகள் குறித்து எதிர்­வரும் அமைச்­ச­ரவை கூட்­டத்தில் ஜனா­தி­ப­தி­யிடம் எடுத்­துக்­கூ­ற­வுள்­ள…

  19. வெள்ளவத்தை சம்பவம் : மகனை இழந்து தவிக்கும் தந்தை : கவனத்தில் கொள்ளாத அதிகாரிகள் : ஹட்டனில் இருந்து வந்த இரவு பகலாக வீதியில் கிடக்கும் அவலம் வெள்ளவத்தையில் ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தில் ஹட்டன், பத்தனையைச் சேர்ந்த 20 வயதுடைய தனது மகன் காணாமல் போயுள்ளதாகவும் அவரை தேடித் தருமாறு கோரிய போதும், அதிகாரிகள் அது தொடர்பில் அக்கறை கொள்ளவில்லை எனவும் தந்தையொருவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். வெள்­ள­வத்தை சவோய் திரை­ய­ரங்கின் பின்னால் சாலிமன்ட் வீதியில் அமைந்­துள்ள தனி­யா­ருக்கு சொந்­த­மான வரவேற்பு மண்­டபத்தின் பின்பகுதியிலுள்ள ஐந்து மாடிக்கட்டடம் நேற்று முற்பகல் 10.30 மணியளவில் இடிந்து விழுந்­ததில் ஒருவர் பலியானதுடன் 23 பேர் காய­ம­டைந்­துள்­ளன…

  20. முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டி வரும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த நடவடிக்கைக்கு தயார் (எம்.சி.நஜிமுதீன்) முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்துவரும் அசாதாரண நடவடிக்கைகள் தொடர்பில் பாரா ளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் முஸ்லிம் உறுப் பினர்கள் ஜனாதிபதியையும் பிரதமரையும் உடனடியாக சத்தித்து பேச்சுவார்த்தை நடத்து வதற்கு தீர்மானித்துள்ளனர். எனவே அவ்விருவருடனான சந்திப்பை இன்னும் ஓரிரு தினங்களில் நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளனர். அத்துடன் குறித்த நடவடிக்கையில் கட்சி வேறுபாடுகளுக்க அப்பால் நின்று செயற்படுவதற்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் உறுதிபூண்டுள்ளனர். நாட்டில் தற்போது அ…

  21. சீனா, இந்தியா இடையே விவாதப் புள்ளியாக மாறிய சிறிலங்கா – ஹிந்துஸ்தான் ரைம்ஸ் கெட்டவாய்ப்பு மற்றும் குறைவான கணிப்பீடு போன்ற காரணிகளினால், இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் சிறிலங்கா ஒரு விவாதப் புள்ளியாக மாறியுள்ளது. சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் தரித்து நின்றமையால் மட்டும் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் இராணுவ சார் முரண்பாடுகள் ஏற்படவில்லை. சிறிலங்காவானது கேந்திர அரசியல் முக்கியத்துவம் மிக்க அமைவிடத்தைக் கொண்டுள்ளது. சிறிய நாடுகள் தவிர்க்க வேண்டிய இரு விடயங்களை சிறிலங்கா கைக்கொண்டது. முதலாவது, சிறிலங்கா தனது உள்நாட்டிற்குள் எழுந்த சிறுபான்மைத் தமிழ் மக்கள் தொடர்பான அர…

    • 1 reply
    • 711 views
  22. முள்­ளி­வாய்க்­காலில் மர­ணித்­த­வர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­து­வதில் தவ­றில்லை பொது எதிரணி உறுப்பினர் டலஸ் கூறுகிறார் (எம்.சி.நஜி­முதீன்) முள்­ளி­வாய்க்­காலில் நிக­ழ்ந்த இறு­தி­கட்ட யுத்­தத்தில் அப்­பாவி மக் கள் எவரும் மர­ணித்­தி­ருப்­பார்­க­ளாயின் அவர்­க­ளுக்கு அஞ்­சலி செலு த்த வேண்டும். அதில் மாற்­றுக்­க­ருத்­தில்லை. எனினும் சிலர் நேற்­றைய தினத்தை யுத்த வெற்றி தினம் என்­பதை மறந்­துள்­ளனர். அத்­துடன் “இன அழிப்பு வாரம்” என வடக்கில் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது. இருந்­த­போ­திலும் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி இலட்­சக்­கான மக்கள் இன அழிப்­பி­லி­ருந்து பாது­காக்­கப்­பட்ட தின­மாகும் என பாரா­ளு­மன…

  23. வெள்ளவத்தை, பம்பலப்பிட்டியில் 1,800 சட்டவிரோத கட்டடங்கள் முறையற்ற கட்டுமானப் பணிகளே 5 மாடிக்கட்டடம் இடிந்து விழக்காரணம்; விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; அமைச்சர் சம்பிக்க ரணவக்க தகவல் (ந.ஜெகதீஸ்) வெள்­ள­வத்­தையில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக்­கட்­டடம் முற்­றிலும் சட்­ட­வி­ரோத­மான முறையில் அமைக்­கப்­பட்­டதாகும். குறித்த மாடிக்­கட்­டடம் இடிந்து விழுந்­த­தற்கு அதன் முறை­யற்ற கட்­டு­மா­னப்­ப­ணி­களே கார­ண­மாகும். எனவே சம்பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். அத்­துடன் மாடிக்­கட்­…

  24. ஆசிரியர்களை விட்டுச் செல்லும் பஸ்கள் குணசேகரன் சுரேன் யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் பயணிக்கும் பஸ்கள் அந்தப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களை ஏற்றாது செல்வதாக ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் - மன்னார் (ஏ - 32) வீதியில் பயணிக்கும் பஸ்கள் மிகக்குறைந்தளவிலேயே பயணிக்கின்றன. இந்நிலையில்; பஸ்கள் தங்களை ஏற்றாமல் செல்வதால் தாங்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வீதியின் வழியாக குறைந்தது 1 மணித்தியாலத்துக்கு ஒரு பஸ்ஸே பயணிக்கின்றது. பாடசாலை முடிவடைந்ததும், அந்தத் தருணத்தில் வரும் பஸ்களில் ஏறுவதற்காக ஆசிரியர்கள் விரைந்து வரும்போதும், பஸ்கள் அவர்களை விட்டுவி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.