ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143368 topics in this forum
-
மாகாண சபைகளின் ஆட்சியைப் பிடிப்பதில் மகிந்த அணி தீவிரம் மைத்திரியின் அதிருப்தியாளர்களை இணைப்பதில் மும்முரம் இந்த ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்று கடந்த மே தினத்தின் பின்னர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்த நிலையில், மூன்று மாகாண சபைகளின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையில் மகிந்த அணி தீவிரமாகக் களமிறங்கியுள்ளது. வடமத்திய, மத்திய, தென் மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பிடிப்பதற்கு மகிந்த அணி முயற்சிகள் மேற்கொள்வதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. முதற்கட்டமாக மைத்திரியின் அதிருப்தியாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளை மகிந்த அணி முன்னெடுத்துள்ளது…
-
- 0 replies
- 237 views
-
-
நாட்டிற்கு பயன்மிக்க அமைச்சரவை திருத்தம் விரைவில் நாட்டிற்கு பயன்மிக்க வகையில் அமைச்சரவை திருத்தம் ஒன்றை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார, போசனை மற்றும் தேசிய மருத்துவத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இணக்கம் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். புதிய மருந்தாளர்கள் 52 பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் போதே அமைச்சர் இந்த கருத்தை வௌியிட்டார். இதன்போது மேலும் கருத்து வௌியிட்ட அமைச்சர், அரச பணியாளர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடி தீர்வு காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவ…
-
- 0 replies
- 156 views
-
-
மதுபானசாலைக்கு எதிராக செயற்படும் ஊடகவியலாளர்களுக்கு பயந்து ஊடக சந்திப்பு இரத்து..!! மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அமைச்சர்கள் நடத்தவிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு திடீரென நிறுத்தப்பட்டு கல்குடாவுக்கு மாற்றப்பட்டதன் காரணத்தி னால் ஊடகவியலாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் இருவரின் விசேட கூட்டமும் அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் சந்திப்பும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் ஊடகங்களுக்கும் அழைப்புகள் அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த ஊடக சந்திப்புக்காக 12.00…
-
- 0 replies
- 148 views
-
-
யாழ்.மத்திய பேருந்து நிலைய தரிப்பிடத்தில் மாணவிகளுடன் தகராறு செய்த இளைஞர்களை தட்டிக்கேட்ட நடத்துநர் மீது குறித்த இளைஞர் குழுவினர் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறுபதற்ற நிலை ஏற்பட்டதுடன் தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில், நேற்றைய தினம் காலை யாழ் பேருந்து தரிப்பிடத்தில் இளைஞர்கள் சிலர் கூடி இருந்துள்ளனர். அதேநேரம் தனியார் கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் இளம் பெண் பிள்ளைகள் அப்பகுதியால் சென்று கொண்டிருந்துள்ளனர். இதன்போது அங்கு நின்ற இளைஞர்கள் தகாத வார்த்தைகளை பிரயோகித்ததுடன் ஒருவர் …
-
- 0 replies
- 305 views
-
-
நினைவு கூர்தலை ஒரு பொது மக்கள் நிகழ்வாக ஒழுங்குபடுத்துவது யார்? குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காய் நிலாந்தன்:- வட மாகாணசபை முள்ளிவாய்க்கால் நினைவு நாளை அனுஸ்டிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டைப் போலன்றி இவ்வாண்டு அது ஓரு பொதுசன நிகழ்வாக அமையுமென்று சம்பந்தப்பட்ட மாகாணசபை உறுப்பினர்கள் கூறுகிறார்கள். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தனியொரு நினைவு கூரலுக்கு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. திருச்சபை வட்டாரங்களிலும் அப்படியொரு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஜனநாயகப் போராளிகள் அமைப்பும் தனியாக ஒர் ஏற்பாட்டைச் செய்கிறது. தமிழ் மக்கள் பேரவை போன்ற கட்சியல்லாத ஒரு பொதுமக்கள் அமைப்பு நினைவு கூரலைப் பொறுப்பேற்றால் மேற்கண்டவாறு …
-
- 1 reply
- 298 views
-
-
சிறிலங்காவுடனான இராணுவ ஒத்துழைப்பில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது – சீனா சிறிலங்காவுடனான இராணுவ உறவு பிராந்திய அமைதி மற்றும் உறுதிப்பாட்டுக்கு நல்லது என்று சீனா தெரிவித்துள்ளது. கொழும்பில் சீன நீர்மூழ்கியைத் தரிப்பதற்கு சிறிலங்கா அனுமதி மறுத்த பின்னர் சீன பாதுகாப்பு அமைச்சு இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது. சீன நீர்மூழ்கிக்கு சிறிலங்கா அனுமதி மறுத்ததாக செய்தி வெளியிட்டிருந்த ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு சீன பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அதில், நீர்மூழ்கியின் பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக நேரடியாக எதுவும் குறிப்பிடப்படாத போதிலும், கடற்கொள்ளை எதிர்ப்பு அணியில் ஈடுபட்டுள்ள நீர்மூழ்கிகளுக்கு அவற்றின் பயணப்பாத…
-
- 1 reply
- 251 views
-
-
இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்து ஐ.நா மீளாய்வு இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மீளாய்வு செய்ய உள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இந்த மீளாய்வு செய்யப்பட உள்ளது. புருண்டி, கொரியா மறும் பொலிவியா ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து மீளாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. மனித உரிமையை மேம்படுத்துவதற்கு நாடுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்த அகில கால மீளாய்வு முறைமை பயன்படுத்தப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் அனைத்தும் இந்த அகில கால மீளாய்வு பொற…
-
- 0 replies
- 361 views
-
-
பணம் பிடுங்கிய ஆசாமி சிக்கினார் யாழ்ப்பாணத்தில் சம்பவம் யாழ்ப்பாண மாவட்டச் செயலர், பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் உள்ளிட்டோரின் போலியான கையெழுத்து மற்றும் கடிதத் தலைப்புக்களைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார். காணாமற்போனோரின் உறவினர்களைக் கண்டுபிடித்து தருவதாக பலரிடம் பல லட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டார் என்று அவர் மீது மற்றொரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். ‘வேலை வாய்ப்பு மற்றும் இடமாற்றம் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து சந்தேகநபர் பலரிடம் பணம் வாங்கியுள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலரின் கையெழுத்துப் போன்று க…
-
- 0 replies
- 234 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலால் டெங்கு ஒழிப்பு ஒத்திவைப்பு தேசிய அவசர டெங்கு ஒழிப்புத் திட்டத்தை வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 22ஆம்இ 23ஆம் திகதிகளில் முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்பும் வகையில், மே 18ஆம், 19ஆம் திகதிகளில் அவசர தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு சுகாதார அமைச்சால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் அதனை மாற்றியுள்ளார். வடக்கு மாகாண சுகாதார…
-
- 0 replies
- 314 views
-
-
ஏன் இந்த நிலை? சிந்திப்பாரா முதல்வர்! வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர் மீது கழிவிரக்கம் வரத்தக்கதான கருத்து ஒன்றை நேற்றுமுன்தினம் வெளியிட்டிருக்கிறார். இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியை வெள்ளிக் கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேசினர். அந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை. அதையொட்டிக் கருத்துத் தெரிவிக்கும்போதே கழிவிரக்கத்தை வரவழைக்கக்கூடிய வகையில் கருத்துப் பகிர்ந்தார் முதலமைச்சர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தான்வேண்டத்தகாதவன் ஆகிவிட்டார் என்றும் அதனால் தன்னை மோடியுடனான சந்திப்புக…
-
- 0 replies
- 261 views
-
-
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை : டெங்கினால் இவ்வருடம் பேரழிவு..! இவ் வருடம் டெங்கு நோயாளரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் கடந்து இலங்கை மிகமோசமான பேரழிவுக்கு முகம் கொடுக்கும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வருடத்தின் முதல் நான்கு மாதக் காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் 43915 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இதில் 41.4 சதவீதமான நோயாளிகள் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டும் அரச வைத்தியர் சங்கம் மேல்மாகாணத்தில் இது வரை 35 டெங்கு மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றது. குருநாகல் வைத்தியசாலை வார்டுகள் டெங்கு நோயாளிகள…
-
- 0 replies
- 196 views
-
-
நேபாள ஜனாதிபதி தலைமையில் சர்வதேச வெசக்தின இறுதி நாள் நிகழ்வுகள் : இன்று கண்டியில் (லியோ நிரோஷ தர்ஷன்) சர்வதேச வெசக் தினத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் நேபாளத்தின் ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி தலைமையில் இன்று நிறைவடைய உள்ளது. இறுதிநாள் நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதற்காக இலங்கை வந்துள்ள நேபாளத்தின் ஜனாதிபதி வெசக் தின சிறப்பு நிகழ்வுகள் பலவற்றில் கலந்துக் கொண்டதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரச உயர் மட்டத்தினரை சந்தித்து கலந்துரையாடினார். கடந்த வெள்ளிக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சர்வதேச வெசக் தினம் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் வெசக் தினம் இதற்கு முன்னர் 13 தடவைகள் இடம்பெற்றுள்ளன. தாய்லாந்தில் 11…
-
- 0 replies
- 171 views
-
-
மகிந்தவின் மே தினக் கூட்டத்திற்கு உதவிய இரு நாடுகள்! கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் சீனா, பாகிஸ்தான் நாடுகள் மாத்திரமல்லாது மேலும் 18 கோடி ரூபாவை சேகரித்து கொடுத்த இலங்கையின் சில வர்த்தகர்கள் சம்பந்தமாக புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் வர்த்தகர்கள் சம்பந்தமான புலனாய்வு பிரிவின் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு அமைய நெடுஞ்சாலைகள் நிர்மாணிப்பு மற்றும் பெருநகர திட்டங்கள் உட்பட நிர்மாணிப்பு துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சில செல்வந்த வர்த்தகர்கள் தலா ஒரு மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். அத்துடன், இலங்கையில் குடிநீர் போத்தல் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனம் …
-
- 0 replies
- 370 views
-
-
கூட்டமைப்பைச் சந்தித்தார் மோடி இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இலங்கைக்கு நேற்று (11) மாலை வருகை தந்த, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, இன்று (12) சந்தித்தார். இதில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைருமான இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா எம்.பி, செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பியுமான எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் எம்.பியான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். - See more at: http://www.tamilmirror.lk/196523/க-ட-டம-ப-ப-ச-சந-த-த-த-ர-ம-ட-#sthash.orhCjqwu.dpuf
-
- 9 replies
- 1.5k views
- 1 follower
-
-
சக்தி டிவி செய்திகள் 13th May 2017, 8PM
-
- 0 replies
- 184 views
-
-
சீனாவை சென்றடைந்தார் ரணில் 'one Belt, One Road' மாநாட்டில் பங்குபற்றுவதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவருடைய மனைவி பேராசிரியர் மைத்திரீ விக்கிரமசிங்கவுடன் சற்று முன்னர் சீனாவைச் சென்றடைந்தார். - See more at: http://www.tamilmirror.lk/196583/ச-ன-வ-ச-ன-றட-ந-த-ர-ரண-ல-#sthash.gF3SoyTR.dpuf
-
- 2 replies
- 458 views
-
-
இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பங்காளராகவும் நண்பராகவும் இந்தியா அருகில் இருக்கும்! - நரேந்திர மோடி FRIDAY 2017-05-12 19:00] இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பங்காளராகவும் நண்பராகவும் இந்தியா அருகில் இருக்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் அனுசரணையுடனான 14 வது சர்வதேச வெசாக் வைபவம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமானது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். 2500 ஆண்டுகள் பழைமையானதாக இருந்தாலும் புத்த பகவானின் போதனைகள் 21ம் நூற்றாண்டிலும் செல்லுபடியாகும் என்றும் அதன் பெறுமதியை எதிர்காலத்தில…
-
- 15 replies
- 612 views
-
-
சிறந்த பொருளாதாரப் பலமும் , உயர்வான கல்வி சிந்தனையும் கொண்ட மக்களை அதிகளவு அங்கத்துவப்படுத்தும் சமூகமே ஒரு ஆரோக்கியமுள்ள சமூகமாக அங்கீகரிக்கப்படுகிறது. பொருளாதாரப் பலவீனம் கொண்ட சமூகமானது தனது தேவையை நிறைவேற்றிக் கொள்ள, எப்படிப் பிறர் கையை எதிர்பார்த்துக் காத்திருக்குமோ? அப்படியே கல்வித் தரம் குறைந்த சமூகமும் அறிவுப் பசிக்காய் பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலையும் வந்துவிடும். இத்தகையதொரு சூழ்நிலையின் கைதியாவதைப்போன்றகொடுமை வேறொன்றும் இல்லை. அத்தகையதொரு சூழ்நிலை தமக்கு வந்துவிடக் கூடாது என்றே எல்லோரும் விரும்புவர். இருப்பினும், தெரிந்தும் தெரியாமலே இலங்கைத் தமிழ் சமூகமானது அத்தகையதொரு சூழ்நிலைக்குள்பிரவேசிக்கின்றதா? அல்லது அத்தகையதொரு சூழ்நிலையை நோக்கி நகர்த்தப்படுகி…
-
- 3 replies
- 1.9k views
-
-
நரேந்திர மோடி எங்களில் ஒருவர் : அமைச்சர் விஜேதாஸ பெருமிதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எங்களில் ஒருவர் அவர் இலங்கைக்கு விஜயம் செய்தமை எமக்கு கிடைத்த பெருமையாகும் என்று புத்த சாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் நேற்று ஆரம்பமான சர்வதேச வெசாக் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். இங்கு அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்த நிகழ்வை இலங்கையில் நடத்தக் கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.…
-
- 1 reply
- 590 views
-
-
நீர் விரயமாவதை தடுக்க நிபுணர்களுடன் பேசினோம்: சி.வி எஸ்.நிதர்ஷன் நீர் விரயமாவதைத் தடுப்பது குறித்,து அவுஸ்திரேலியா நாட்டின் நிபுணர்களுடன் ஆலோசித்துள்ளதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சர்வதேச நீர் மையத்திலிருந்து அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த கைலி மிலிகன், பாப்லோ போரன்ஸ் என்ற இரு செயற்றிட்ட அலுவலர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆகியோரை, முதலமைச்சர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (12) சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன்போதே, முதலமைச்சர், மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 'சில மாதங்களுக்கு முன்னர், அவுஸ்ரேலியாவுக்குச் சென்றிருந்த வட மாகாண சபை உ…
-
- 0 replies
- 402 views
-
-
தரப்படுத்தப்படாத, கட்டுப்படுத்தப்படாத நச்சுப் பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்படுவதால் பெற்றோர் இது குறித்து அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் உரிமைகள் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது வெளிநாடுகளில் இருந்து பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் விளையாட்டுப் பொருட்கள், எந்தவொரு தரக்கட்டுபாடு அற்ற விதத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவ்வாறான விளையாட்டுப்பொருட்களால் புற்றுறோய் ஏற்படும் அபாயம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு பல…
-
- 0 replies
- 354 views
-
-
வடக்கில் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு தமிழர் தரப்பு தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் 6000 வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. குறித்த 6000 வீடுகளும் ஈபிடிபி கட்சித் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஆகியோரின் வேண்டுகோளுக்கமையவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்ததாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 6000 வீட்டுத் திட்டம் தொடர்பாக அவர் தெரிவிக்கையில், எமது மாகாண மக்களுடன் கலந்துரையாடாமல் இவ்வாறான தீர்மானங்களை எடுப்பது எமது மாகாண மக்களை புறக்கணிக்கும் செயல் என சுட்டிக் காட்டினேன். பாராளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன் மற்றும்…
-
- 0 replies
- 411 views
-
-
கிராமங்கள், பல்கலைக்கழகம் அமைப்பதற்கு உதவியளியுங்கள் ; இந்தியப்பிரதமரிடம் இ.தொ.கா.கோரிக்கை மலையகத்தில் வாழும் மக்களின் இருப்பை நிரந்தரமாக்குவதற்கு மக்கள் கிராமங்கள் உருவாக்கப்படுவதோடு எதிர்கால சந்ததியினருக்காக பல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்கும் எமக்கு உதவியளியுங்கள் என இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேரில் கோரிக்கை விடுத்தது. குறித்த கோரிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்துவதாக உறுதியளித்த இந்தியப்பிரதமர் அவ்விடயங்கள் தொடர்பாக விரிவான அறிக்கையொன்றை இந்திய தூதுவர் ஊடாக தனக்கு விரைந்து அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 271 views
-
-
இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்கப்பெறுவது உறுதி ; ஹர்ஷ டி சில்வா இலங்கைக்கு ஜீ. எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சர்கள் குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாத இறுதிக்குள் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்கப்பெறும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். ஐரோப்பாவின் 28 நாடுகளுக்கு இப்போது உள்ள சலுகை மூலம் 6600 உற்பத்திகளை எந்தவித தீர்வை வரியும் இல்லாது ஏற்றுமதி செய்ய முடியும். நல்லாட்சி அரசாங்கம் பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவெனவும் அவர் குற…
-
- 0 replies
- 159 views
-
-
தேசிய மட்டத்திற்குச் சென்ற கரப்பந்தாட்ட அணியை மாகாணத்திற்கு அனுப்பாத பாடசாலை பெற்றோர்கள் கவலை:- கடந்த வருடம் பாடசாலை மட்டத்தில் இடம்பெற்ற கரப்பாந்தாட்டப் போட்டியில் வடக்கு மாகாண மட்டத்தில் வெற்றிப்பெற்று தேசிய மட்டத்திற்குச்சென்ற கிளிநொச்சி பாரதிபுரம் வித்தியாலய அணியை இம்முறை மாகாண மட்ட போட்டிகளுக்களுக்கே அனுப்பாது விட்டமை பெற்றோர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் பெரும் கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் கரப்பாந்தாட்ட போட்டியில் கிளிநொச்சி பாரதிபுரம் வித்தியாலயம் சிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது. கடந்த வருடம் இடம்பெற்…
-
- 0 replies
- 249 views
-