Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்பன தொடர்பில் இந்திய பிரதமருடன் விவாதிக்க உள்ளதாக கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக நாளை இலங்கை செல்லும் இந்திய பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் வரவேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது. தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ள மோடி வெள்ளிக்கிழமை மலையகத்திற்கு பயணம் செல்லவுள்ளதுடன் அங்கு நிகழ்வுகளில் பங்கேற்று பின்னர் இந்திய…

    • 0 replies
    • 263 views
  2. வித்தியா வழக்கு: கொழும்பில் நடத்த யோசனை புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் ‘ட்ரயல் அட் பார்’ முறையில் நடத்த சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது என்று அறிய முடியகின்றது. கொழும்பில் இந்த விசாரணையை முன்னெடுக்கவும் யோசனை முன்வைக்க்பபட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற வேளை கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வின் பின்பு படுகொலை செய்யப்பட்டார். மாணவியின் படுகொலையும் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 10ஆம் மற்றும் 12ஆம் சந்தேகநபர்கள் வழக்கிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டனர். …

  3. இந்திய - இலங்கை நட்புறவு மையம் வடக்கில் வடமாகாணத்தில் சுமார் 300 கோடி இந்திய ரூபாய் செலவில் இந்திய- இலங்கை நட்புறவு மையம் ஒன்றை நிறுவுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்திய- இலங்கை நட்புறவு மையம் கிளிநொச்சி - பளை பகுதியில் சுமார் 100 ஏக்கர் காணியில் அமைய உள்ளதாகவும் அந்த மையத்தின் நடவடிக்கை பணிப்பாளர் பி.ஜெயரத்தினம் தெரிவித்துள்ளார். இந்திய- இலங்கை நட்புறவு மையம் தொடர்பாக நேற்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தமிழகம் நாகை மாவட்ட மக்கள் இணைந்து நாகை மாவட்ட மக்கள் மன்றம…

    • 1 reply
    • 365 views
  4. அபிவிருத்தி என்ற போர்வையில் நிலத்தை இழந்து, வளத்தை இழந்து வாழும் நிலைதான் நாம் அடுத்த தலைமுறைக்கு இட்டுச் செல்லும் பரிசு?

    • 0 replies
    • 128 views
  5. ஒரு மனிதன் மிரு­க­மா­வதும் பிரா­ம­ண­னா­வதும் பிறப்பால் அல்ல அவ­னது கொள்­கை­களால் ஆகும். எனவே புண்­ணி­ய­மான போயா தினத்தில் கறுப்­புக்­கொடி போராட்டம் நடத்­து­வது விமல் வீர­வன்­சவின் மிருகக் கொள்­கை­க­ளையே வெளிப்­ப­டுத்­து­கின்­றது எனத் தெரி­வித்­துள்ள அமைச்சர் மஹிந்த அம­ர­வீர இவ்­வா­றா­ன­வர்கள் ஊட­கங்­களின் முன்­னி­லையில் தேசப்­பற்­றா­ளர்­க­ளாக நடிக்­கின்­றார்கள் என்றும் சாடி­யுள்ளார். இது தொடர்­பாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச் செய­லா­ளரும், கடற்­றொழில் நீரியல் வளத்­துறை அமைச்­ச­ரு­மான மஹிந்த அம­ர­வீர மேலும் தெரி­விக்­கையில் முழு உல­கமே பௌத்த தர்­மத்தை நினைவு கூரும் தினமே வெசாக் தின­மாகும். அனைத்து போயாக்­க­ளையும் விட வெசாக் போயா புனி­த­மா­னது. …

    • 0 replies
    • 343 views
  6. மயிலிட்டிப் பிரதேசத்தில் வெடிபொருள் கிணறுகள் மீள்குடியேறிய மக்கள் அச்சத்தில் மயி­லிட்­டி­யில் அண்­மை­யில் மக்­கள் மீளக்­கு­டி­ய­மர அனு­ம­திக்­கப்­பட்ட பகு­தி­யில், மற்­று­மொரு கிணற்­றி­லி­ருந்து நேற்­றுப் பெரு­ம­ளவு வெடி­பொ­ருள்­கள் மீட்­கப்­பட்­டன. எஞ்­சிய கிண­று­க­ளி­லும் வெடி­பொ­ருள்­கள் காணப்­ப­டக் கூடும் என்று மக்­கள் அச்­சம் வெளி­யிட்­டுள்­ள­னர். அண்­மை­யில் மீளக்­கு­டி­ய­மர அனு­ம­திக்­கப்­பட்ட மயி­லிட்டி வடக்­குத்­து­றை­யில் உள்ள கிணறு ஒன்­றில் இருந்து நேற்­றுக் காலை ஒரு தொகுதி வெடி­பொ­ருள்­கள் மீட்­கப்­பட்­டன. ஆயி­ரத்து 500 துப்­பாக்கி ரவை­கள், 7 வெளிச்­சக் குண்­டு­கள், 10 இனந்­தெ­ரி­யாத குண்­டு­கள் என்­பன இதன்­போது மீட்­கப்­பட்­டன. இ…

  7. புலிகள் வீழ்த்திய வானூர்தியின் பாகங்கள் மீட்பு 25 வருடங்களின் பின் இயக்கச்சியில் கிடைத்தன விடு­த­லைப் புலி­க­ளி­னால் சுட்டு வீழ்த்­தப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டும் விமா­னப் படை­யி­ன­ரின் வை 08 என்ற விமா­னத்­தின் பாகங்­கள் நேற்று மீட்­கப்­பட் டன என்று தெரி­விக்­கப்­பட்­டது. இந்த விமா­னம் 1992 ஆம் ஆண்டு தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளால் தாக்கி வீழ்த்­தப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கி­றது. விமா­னப் படை­யி­ன­ரின் புல­னாய்­வுப் பிரி­வி­ன ­ருக்­குக் கிடைத்த தக­வ­லின் அடிப்­ப­டை­யில் யாழ்ப்­பா­ணம் ஆனை­யி­றவு இயக்­கச்­சி­யில் நேற்று இந்த விமா­னப் பாகங்­கள் மீட்­கப்­பட் டன. நேற்று அங்கு சென்ற விமா­னப்­படை உயர் அதி­கா­ரி­கள் இடத்­தைப் பார்­வை­யிட்­ட­னர…

  8. உண்மையான பௌத்தர்கள் இந்த நாட்டை ஆண்டிருந்தால் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்த நேரிட்டிருக்காது! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இன்றும் நாளையும் வெசாக் நாட்கள். வண்ண வண்ணமான நிறங்களிலும் பல அழகிய வடிவங்களிலும் வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முன்பெல்லாம் வெசாக் தினங்களை நாங்கள் கேள்விபட்டிருக்கிறோம். இப்போது வடகிழக்கில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினர் வெசாக் கூடுகளை வைக்கின்றனர். எங்கள் நகரங்களை எல்லாம் வெசாக் கூடுகளின் நகரங்களாக்கின்றனர் இலங்கை இராணுவத்தினர். வடகிழக்கில் இலங்கை இராணுவத்தினர் வெசாக் கூடுகளை மாத்திரம் அமைப்பதில்லை. அவர்கள்தான் புத்தர் சிலைகளையும் வைக…

  9. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்: ‘செயற்படுத்தினால் செவிப்பறை கிழியும்’ -நடராசா கிருஸ்ணகுமார் “அமைச்சரவையினால், புதிதாக அங்கிகரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை செயற்படுத்த முயன்றால், மக்கள் போராட்டம் வெடிக்கும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் அவர், மேலும் தெரிவிக்கையில், “தற்போது உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டமே கடந்த காலங்களில் அரசை, போர்க்குற்றம், இனப்படுகொலை குற்றங்களுக்குள் தள்ளிவிடக்காரணமாக அமைந்தது. அப்படியிருக்க புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சர்வதேச விழுமியங்களை ஒழுகியத…

  10. போதைப்பொருள் சுற்றிவளைப்பு பொலிஸ் குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி ; 5 பேர் காயம் ; பிலியந்தலையில் பதற்றம் பிலி­யந்­தலை பகு­தியில் போதைப்பொருள் சுற்றி வளைப்­பொன்­றுக்குச் சென்ற பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசா­ர­ணை­யாளர் பொலிஸ் பரி­சோ­தகர் ரங்­க­ஜீவ தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் மீது முன்­னெ­டுக்­கப்பட்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார். அத்­துடன் சிறப்பு விசா­ரணை அதி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் ரங்கஜீவ உள்­ளிட்ட இரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களும் சிறு­வர்கள் இருவர் உள்­ளிட்ட மூன்று சிவி­லி­யன்­களும் காய­ம­டைந்து களு­போ­வில - கொழும்பு தெற்கு போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம…

  11. பலாலி வானூர்­தித் தள விரிவாக்கப் பணிக்­காக காணி சுவீ­க­ரிக்­கக்­கூ­டாது வடக்கு மாகாண சபை­யில் நிறை­வே­றி­யது பிரே­ரணை பலாலி வானூர்­தித் தளத்தை விரிவாக்­கும் போது காணி சுவீக­ரிப்பு மேற்­கொள்­ளக்­கூ­டாது என வடக்கு மாகாண சபை­யில் நேற்­றுப் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. வடக்கு மாகாண சபை­யின் அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் இந்­தப் பொது முக்­கி­யத்­து­ வம் வாய்ந்த பிரே­ர­ணையை நேற்­றைய அமர்­வில் முன்­மொ­ழிந்­தார். அவர் பிரே­ர­ணை­யில் தெரி­வித்­த­தா­வது, வடக்கு மாகாண சபை­யின் 6 ஆவது அமர்­வின்­போது நிறை­வேற்­றப்­பட்ட 71 ஆவது தீர்­மா­னத்­தின்­படி பலாலி வானூர்­தித் தளம் மற்­றும் காங்­கே­சன்­துறை துறை­மு­கம் ஆகி­ய­வற்­றைப் புன­ர­மைக்­க­வேண்­…

  12. ஆபத்­தான புலி­க­ளை­யும் விடு­வித்­து­விட்டு எனது பாது­காப்­பை­யும் குறைக்­கி­றது அரசு மறு­வாழ்வு வழங்கி விடு­விக்க முடி­யா­த­வர்­கள் எனக் கருதி தொடர்ந்­தும் தடுப்­பில் வைக்­கப்­பட்­டி­ருந்த தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் ஆபத்­தான உறுப்­பி­னர்­களை விடு­தலை செய்­து­கொண்டு மறு­பு­றத்­தில் தனக்­கான பாது­காப்­பை­யும் இந்த அரசு குறைத்­துள்­ளது என்று முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச கவ­லை­யும் விச­ன­மும் தெரி­வித்­துள்­ளார். அவ­ரது ஊட­கப் பிரி­வி­னால் அனுப்பி வைக்­கப்­பட்ட பத்­தி­ரி­கைக் குறிப்­பில் இது தொடர்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிக்கா குமா­ர­துங்­க­விற்கு வழங்­கப்­பட்ட பாது­காப்பை நீதி­மன்­…

  13. மக்­களை ஒடுக்­கும் அரசு வெகு­வி­ரை­வில் வீட்­டுக்கு – நாமல் ராஜ­பக்ச சூளுரை மக்­களை ஒடுக்­கு­மு­றைக்கு உள்­ளாக்­கும் இந்த அரசை வெகு விரை­வில் வீட்­டுக்கு அனுப்­பு­வோம். ஐக்­கிய மக்­கள் சுதந் தி­ரக் கூட்­ட­மைப்­பின் முழு­மை­யான ஆத­ர­வு­டன் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான ஆட்சி அமை­யும் நாள் விரை­வில் வரும். இவ்­வாறு சூளு­ரைத்­துள்­ளார் கிந்த ராஜ­பக்­ச­வின் புதல்­வ­ரும் அம்­பாந்­தோட்டை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நாமல் ராஜ­பக்ச. பத்­த­ர­முல்­லை­யில் அமைந்­துள்ள மகிந்த ராஜ­பக்­ச­வின் அலு­வ­ல­கத்­தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, மக்­க­ளி…

  14. சக்தி டிவி செய்திகள் 9th May 2017, 8PM

  15. மகிந்த தரப்பில் 11 எம்.பிக்கள் பதவியிழப்பர்? இரட்டைக் குடியுரிமை வைத்துள்ளமையால் இலங்­கை­யின் அர­சி­ய­லில் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்ள இரட்­டைக் குடி­யு­ரி­மையை, மகிந்த அணி­யில் 11 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கொண்­டி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இத­னால் அவர்­க­ளும் பதவி இழக்­கும் நிலை ஏற்­ப­ட­லாம் என்று தெரிய வரு­கின்­றது. இரட்­டைக் குடி­யு­ரிமை கார­ண­மாக ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கீதா குமா­ர­சிங்க நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வி­யைத் தொடர முடி­யாது என்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் கடந்த வாரம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து …

  16. முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்க நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் – பொதுபல சேனா முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்க நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் நாட்டில் ஒரே சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு மட்டும் நாட்டில் தனியான சட்டங்கள் இருக்க முடியாது என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/archives/26357

    • 1 reply
    • 275 views
  17. புனரமைப்பின்றி புறக்கணிக்கப்பட்ட தென்மராட்சிப் பிரதேசம் 2 ஆயி­ரத்து 914 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 86 ஆயி­ரத்து 812பொது மக்­கள் வாழும் ஓர் பிர­தேச செய­லா­ளர் பிரி­வி­ல் 4 ஆயி­ரத்து 762 குடும்­பங்­கள் நிரந்தர வீட்டு வசதிகளின்றி இன்­று­வரை கொட்­ட­கை­க­ளி­லும், அரை வீட்­டுத் திட்­டத்­தின் கீழான பகுதி வீடுகளிலும் வாழ்­வ­தோடு 3 ஆயி­ரம் வரையிலான குடும்­பங்­க­ளுக்கு கழிப்­பறை வச­தி­க­ளும் இன்­றிக் காணப்­ப­டும் வட மாகா­ணத்­திலுள்ள ஒரு பிரதேச செயலாளர் செய­லா­ளர் பிரி வாக இன்­று­வரை தென்மராட்சி இருந்து வருகின்றது. போர் வேளையில் வன்­னிப்­ப­கு­திக்­கும் யாழ்ப்­பா­ணக் குடா­ நாட்­டுக்குமான எல்­லைப் பகு­தி­யாக விளங்­கிய குறித்த இ…

  18. கொரியாவிற்கு வேலை வாய்ப்பு பெற்றுக் செல்வோருக்கு நல்ல செய்தி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரியாவிற்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வோரிடமிருந்து வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் 500,000 ரூபா அறவீடு செய்யத் திட்டமிட்டிருந்தது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரளவின் உத்தரவிற்கு அமைய இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. கொரிய மொழித் தேர்ச்சி பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் பிணைத் தொகையாக ஐந்து லட்சம் ரூபா செலுத்த வேண்டுமென முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது எனினும், தற்போது அந்த தொகையை அறவீடு செய்யாமலேயே வேலை வாய்ப்பு பெற்றுச்செல்ல சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 26000 பேர் கொரியாவில் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிட…

    • 1 reply
    • 602 views
  19. வடக்கு மாகாண சபை முன்பாகப் போராட்டம் வடக்கு மாகாண சபை முன்பாக இன்று காலை, வேலை வாய்ப்புக் கோரி போராடும் பட்டதாரிகளினால் முற்றுகைப் போர் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முன்பாக கடந்த 71 நாள்களாகப் போராட்டம் நடத்திய, வேலை வாய்ப்புக் கோரி போராடும் பட்டதாரிகள், வடக்கு மாகாண பேரவைச் செயலகம் முன்பாக இன்று காலை போராட்டம் நடத்தினர். வடக்கு மாகாண சபையின் அமர்வு இன்று நடைபெறவுள்ள நிலையிலேயே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. http://uthayandaily.com/story/1759.html

  20. விடுதலை பெறும் வரையில் தமிழ் அரசியல் கைதிகள் நீதியாக நடத்தப்பட வேண்டும் – டி. எம். சுவாமிநாதனிடம் டக்ளஸ் Share This! சுகவீனமுற்றுள்ள நிலையில் கொழும்பு, மகசின் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் தமிழ் அரசியல் கைதிகள் அதிகாரிகளால் துன்புறுத்தல்களுக்கு உட்பட்டும், போதிய கவனிப்புகள் இன்றியும் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாகத் தெரிய வரும் நிலையில் இது தொடர்பில் போதிய அவதானங்களைச் செலுத்தி, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை பெறும் வரையில் அவர்கள் நீதியாக நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து மத விவகாரங்கள் அமைச்ச…

  21. அமைச்சர்களின் உறுதிமொழியையடுத்து மறிச்சுக்கட்டி போராட்டம் முடிவுக்கு வந்தது (நமது நிருபர்) மாவில்லு வர்த்­த­மானி பிர­ க­ட­னத்தில் தமக்கு இழைக்­கப்­பட்­டுள்ள அநீ­தி­க­ளை­போக்கி பிர­க­ட­னத்தை இரத்துச்­செய்ய வேண்டுமென கடந்த 44 நாட்­க­ளாக மறிச்­சுக்­கட்­டியில் கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்த மேற்­கொண்ட பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது போராட்­டத்தை நேற்று மாலை தற்­கா­லி­க­மாக இடை நிறுத்­திக்­கொண்­டனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் நேற்று முன்தினம் காலை நடத்­திய பேச்­சு­வார்த்­தையில் ஏற்­பட்ட புரிந்­து­ணர்வின் அடிப்­ப­டையில் மாவில்லு வர்த்­த­மானி பிர­க­ட­னத்தில் ஏற்­பட்­டுள்ள தவ­று­களை திருத்தும் வழி­வ­கைகள் ஏற்­பட்­டுள்­ளதால்போரா…

  22. வடக்கில் அதிகளவான மக்களின் உடம்பில் ஓடுவது படைவீரர்களின் இரத்தமாகும் என வட மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக நாட்டுக்காக இரத்தம் சி;ந்திய படைவீரர்கள் இன்று, வடக்கு மக்களை வாழ வைப்பதற்காக இரத்தத்தை தானமாக வழங்குகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் நடைபெற்ற படைவீரர் நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஓர் இனம், ஒர் மதம் அல்லது சமூகத்தின் வெற்றியாக இந்த நிகழ்வு நடைபெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/archives/26311

    • 3 replies
    • 447 views
  23. மிக் விமானக் கொள்­வ­னவு விவ­காரம் : வங்கிக்கணக்கு விசாரணைக்கு மேலும் கால அவகாசம் தேவை மிக் விமானக் கொள்­வ­னவு விவ­காரம் தொடர்பில் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்ள, ரஷ்­யா­வுக்­கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உத­யங்க வீர­துங்­கவின் வங்கிக் கணக்­குகள் தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்கு மேலும் கால அவ­காசம் வேண்டும் என உயர் நீதி­மன்­றுக்கு சட்ட மா அதிபர் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. தனது வங்­கிக்­க­ணக்­குகள் முடக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ரா­கவும் கோட்டை நீதி­வா­னினால் தனக்கு எதி­ராக பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள பிடி­வி­றாந்து ஊடா­கவும் தனது அடிப்­படை உரிமை மீறப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்து உத­யங்க வீர­துங்க சார்பில் தாக் கல் செய்­யப்­பட்ட அடிப்­படை உரிமை…

  24. குழந்தை கடத்­தலின் பின்­ன­ணியில் செயற்­பட்­டி­ருந்த பலர் தலை­ம­றைவு கைதுசெய்ய இரு சிறப்புக் குழுக்கள்; கைதானோர் விளக்­க­ம­றி­யலில் (எம்.எப்.எம்.பஸீர்) கம்­பளை பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட கங்கவட்ட வீதி பகு­தியில் தனது பெற்­றோ­ருடன் வசித்து வந்த இரண்­டரை வயது குழந்­தையை கடத்­தி­யமை, சட்டபூர்­வ­மான பாது­காப்பில் இருந்து குழந்­தையை பிரித்­தமை, தடுத்து வைத்­தமை மற்றும் கப்பம் கோரி­யமை தொடர்பில் கைது செய்­யப்­பட்ட மூவ­ரையும் எதிர்­வரும் 18 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. குழந்­தை­யுடன் மாய­மான, பின்னர் கடத்­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி என கண்­ட­றி­யப்­பட்ட மாமா உறவு முறை இளைஞர் முஹம்மத் அசாம் மற்றும் கு…

  25. மோடியின் வரு­கையை அர­சி­ய­லாக்­க­வேண்டாம் தமிழ் ஊட­கங்­களும் இன­வா­தி­களும் குழப்­பக்­கூ­டாது என்­கிறார் டிலான் (ரொபட் அன்­டனி) இலங்­கையில் அர­சியல் தீர்வு குறித்த பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி வருகை தரு­வ­தாக யாரும் கரு­தக்­கூ­டாது. மாறாக ஐக்­கிய நாடு­களின் வெசாக் தின நிகழ்வில் கலந்து கொள்­ளவே மோடி இலங்கை வரு­கின்றார். ஆதலால் இன­வா­திகள் இந்த விட­யத்தை குழப்­பக்­கூ­டாது என்று சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். கூட்டு எதி­ர­ணி­யினர் மோடி வரு­கையின் போது கறுப்­புக்­கொடி காட்­ட­வேண்­டு­மென தெரி­வித்­துள்­ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.