ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறும் - மனோ உறுதி இலங்கையின் இறுதிகட்ட போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறும் என்று அமைச்சர் மனோ கணேசன் பிபிசிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை அரசும் ஒரு பங்குதாரராக உள்ளதால், அந்தக் கடப்பாட்டிலிருந்து நழுவிவிட முடியாது என்றும் எனவே இது குறித்து தற்போதைய அரசாங்கம் உறுதியாகவுள்ளது என்றும் தேசிய சகவாழ்வு மற்றும் அரச மொழிகளுக்கான அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என்று அரசாங்கத்தின் தலைமை கருதுமானால் அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும் என்று வ…
-
- 0 replies
- 153 views
-
-
அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் நாடு! செய்தியாக்கம்: குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் இன்றைக்கு உலக அன்னையர் தினம். அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் நாடு என்ற அடையாளத்துடன் இருக்கிறது இலங்கை. அன்னையர்கள் கண்ணீர் சிந்தும் ஒரு நாட்டில் அரசியலும் மனித உரிமையும் எப்படியானது என்பதை புரிந்துகொள்வது மிக இலகுவானது. கண்ணீர் சிந்தும் அன்னையர்கள் பலரை பார்த்துவிட்டேன். அன்னையர்தினமான, இன்றைய நாளில் அந்த அன்னையர்கள்தான் கண்ணின் முன்னால் வருகின்றனர். மனத்திரையில் வந்து காணாாமல் போன பிள்ளைகளின் படங்களை ஏந்தியபடி அழுகின்றனர். ஆறுமுகம் செல்லம்மா பூநகரியை சேர்ந்தவர். காணாமல் போன பிள்ளை வருவான் என்ற மகிழ்ச்ச…
-
- 0 replies
- 424 views
-
-
சிவனொளிபாதமலைக்கு இரவில் செல்லத்தடை..! சிவனொளிபாத மலை பருவகாலம்நிறைவடையவுள்ளதனால் இரவு நேரங்களில் சிவனொளிபாத மலை உச்சிக்கு யாத்திரிகள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக சிவனொளிபதமலை தலைமை விகாராதிதி பெங்கமுவே தம்பதெனிய தேரர் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் 11 ம் திகதி சினொளிபதமலை யாத்திரிக காலம் நிறைவுபெறுவது குறித்து, நல்லத்தண்ணி பௌத்த மத்திய நிலையத்தில், அரச திணைக்கள அதிகரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அன்மைகாலமாக குறித்த பகுதியில் மூவின மக்களின் ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்கும், சமாதானத்தை சீர்குழைக்கும் வகையிலும் வகையில் சில சம்பவங்கள் இடம்பெற்றதையடுத்தே பருவகால நிறைவடைந…
-
- 0 replies
- 381 views
-
-
என்னை விடவும் மஹிந்தவிற்கு ஏன் கூடுதல் பாதுகாப்பு? – சந்திரிக்கா தன்னை விடவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் தற்போது நல்ல பாதுகாப்பு நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர் இவ்வாறான ஓர் நிலையில் தம்மை விடவும் மஹிந்தவிற்கு எதற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கடுமையான அச்சுறுத்தல்கள் காணப்பட்ட காலத்திலும் தமது பாதுகாப்பினை மஹிந்த முழுமையாக நீக்கியிருந்தார் என குற்றம் சுமத்தியுள்ள அவர் கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்…
-
- 4 replies
- 453 views
-
-
பின்வாங்கியது அமெரிக்க நிறுவனம்! - ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் அதிர்ச்சி [Sunday 2017-05-07 08:00] ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க நிறுவனம் ஒன்று அந்த முயற்சியில் இருந்து விலகிக்கொண்டமையை அடுத்து, புதிய பங்கு கொள்வனவாளர் ஒருவரை தேடும் பணி ஆரம்பமாகியுள்ளது. 49 வீத பங்கு கொள்வனவுக்கு தயாராக இருந்த சான்பிரான்சிஸ்கோவின் டிபிஜி என்ற நிறுவனமே தமது முயற்சியில் இருந்து விலகியுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இதனை அறிவித்துள்ள போதும் டிபிஜி நிறுவனம் இன்னும் அது தொடர்பில் கருத்து எதனையும் வெளியிடவில்லை. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஏற்கனவே 2 பில்லியன் டொலர்கள் நட்டத்தில்…
-
- 3 replies
- 879 views
-
-
குடாநாட்டில் மரக்கறிகளின் விலை திடீர் அதிகரிப்பு! குடாநாட்டில் திடீரென மரக்கறிகளின் விலைகள் அதிகரித்தமைக்கு தற்போதய வெப்பமான காலநிலை, வறட்சியே காரணம் என வடமாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் செல்வராசா தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், குடாநாட்டில் நிலவும் கடும் வெப்பத்தினால் மரக்கறி பூக்களின் மகரந்த சேர்க்கை பாதிப்படைந்து காய்க்கும் தன்மை குறைவடைந்துள்ளது. மேலும் சில பயிர்களின் தளிர்கள் கருகுகின்றன. அனேகமான விவசாயிகள் வறட்சியினால் பயிர்கள் பாதிப்படைந்ததால் அவற்றுக்கு தண்ணீர் இறைப்பதை நிறுத்திவிட்டனர். இதனாலேயே மரக்கறி விலைகள் அதிகரித்துள்ளன. இவ்வாறான வெப்பநிலை தொடர்ந்து நீடிக்குமாயின் பயிர்செய்கைக்கு பாரிய நீர் தட்டுப்பாடு ஏற்ப…
-
- 3 replies
- 620 views
-
-
யாழ். வலிகாமத்தின் பல்வேறு பகுதிகளிலும் திடீர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மழை வீழ்ச்சி இன்று பிற்பகல் 12.30 மணியளில் பதிவாகியுள்ளது. சுமார் அரை மணித்தியாலங்களுக்கு மழை நீடித்துள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த பல நாட்களாக யாழ். குடாநாட்டில் கடும் வெப்பமுடனான காலநிலை நீடித்து வந்தது. இந்த நிலையில் திடீர் மழை வீழ்ச்சியால் வெப்பம் சற்றுத் தணிந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். திடீர் மழை வீழ்ச்சியால் சிறு போக விவசாயத்தில் ஈடுபட்டுள்ள வலிகாமம் பகுதி விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://thuliyam.com/?p=66809
-
- 0 replies
- 468 views
-
-
அழிவை நோக்கிச் செல்லும் ஆரியகுளத்தைக் காப்போம் எனும் தொனிப்பொருளில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தலமையில் மாநகர சபையினால் ஆரிய குளத்தினைச் சுத்தம் செய்யும் பெரும் வேலைத்திட்டம் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. படையினரின் வீரர்கள் முன் நிகழ்வை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கும் முதலாவது வேலைத்திட்டமாக மேற்படி குளம் சுத்திகரிப்பு பணி யாழ்ப்பாணம் மாநகரசபையால் முன்னெடுக்கப்பட்டது. ஆரியகுளம் குளத்தருகில் இதற்கான ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அகிலதாஸ் , பாடசாலை மாணவர்கள், மாநகர ஆணையாளர், அரச ஊழியர்கள், ப…
-
- 0 replies
- 489 views
-
-
எஸ்.சபேசன், கனகராசா சரவணன் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை, அரசியலில் இணைத்துக்கொள்ள, இலங்கைத் தமிழரசுக் கட்சி தயாராக உள்ளதென, அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். முன்னாள் போராளிகள் ஒன்றிணைந்து, புதிய கட்சியொன்றை உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதால், ஜனநாயக நீரோட்டத்தின் அரசியல் செயற்பாடுகளில் அவர்களை இணைத்துக்கொள்ளவே, தமிழரசுக் கட்சி எதிர்ப்பார்க்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம், அம்பாறை, ஆலையடிவேம்பு, தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு அவர் மேலும் கூறியதாவது, “…
-
- 2 replies
- 535 views
-
-
தருகிறோம், தருகிறோம் என்கிறது நல்லாட்சிஅரசு ஆனால் எதனையும் தருவதாக இல்லை! வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் விசனம் ஆர்.பி., எஸ்.கணேசன் இராணுவத்தினர் அவர்களின் மனதிலிருக்கும் தவறானதோர் கருத்தை நீக்கவேண்டும். புலிகளிட மிருந்து காணிகளை கைப்பற்றிய பின்னர் அது தமது காணிகள் என நினைக்கின்றார்கள். இங்கு நடைபெற்றது உள்ளூர்க் கலவரமாகும். எனவே கலவரம் முடிந்ததும் இராணுவம் காணிகளை விட்டு வெளியேறுவது அவசியமானது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வீரகேசரி வாரவெளியீட்டுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், முன்னைய அரசு எம…
-
- 2 replies
- 568 views
-
-
சக்தி டிவி செய்திகள் 7th May 2017, 8PM
-
- 0 replies
- 303 views
-
-
வட மாகாணசபையை முடக்கிப் போராட்டம் நடத்த ஜனநாயகப் போராளிகள் கட்சி திட்டம்! [Sunday 2017-05-07 19:00] வடமாகாணசபையை முடக்கி போராட்டத்தை நடத்தவுள்ள நிலையில், இந்தப் போராட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன், 68ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் இந்த தொடர்போராட்டம் இடம்பெற்று வருகின்றது. கேப்பாபுலவு மக்களின் போராட்டத்தை வலுவடைய வைப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண…
-
- 0 replies
- 434 views
-
-
முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கேளிக்கை நிகழ்வாக மாற்ற வேண்டாம்! - முல்லை. மாவட்ட சிவில் அமைப்புக்கள் கோரிக்கை [Sunday 2017-05-07 19:00] முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவு கூரும் நாளை, விளையாட்டுப் போட்டிகளை நடத்தி கேளிக்கை நிகழ்வாக மாற்ற வேண்டாம் என முல்லைத்தீவு மாவட்ட சிவில் அமைப்புக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன. முல்லைத்தீவு மாவட்ட சிவில் அமைப்புக்களின் ஊடக சந்திப்பில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் யுத்தம் மௌனிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அழித்தொழிக்கப்பட்ட நாளை விளையாட்டுப்போட்டிகள் நடத்தி கேளிக்கையாக்க வேண்டாம். இறுதி நாட்களில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட மற்றும் காணாமல்ஆக்கப்பட்…
-
- 0 replies
- 325 views
-
-
சொர்க்கமே என்றாலும் சொந்த ஊரை போல வராது – இரணைதீவுக்குச் செல்லவிடுங்கோ மக்கள் கண்ணீருடன் கோரிக்கை கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்கள் தங்களின் சொந்த இடத்திற்குச் செல்வதற்கான கவனயீர்ப்பு போராட்டம் ஏழாவது நாளாகவும் தொடர்கிறது. சொர்க்கமே என்றாலும் எங்களது சொந்த ஊரை போல வராது வளமாகவும் ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்த ஊரிலிருந்து வெளியேற்றப்பட்டு 24 வருடங்கள் ஆகின்றன எங்களை மீண்டும் ஊருக்குச் செல்ல விடுங்கள் என கண்ணீருடன் இரணைத்தீவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மே முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சொந்த ஊருக்குச் செல்வதற்கான கவனயீர்ப்பு போராட்டம் ஏழாவது நாளாக தொடர்கிறது. ஊருக்கு போகாமல் தங்களின் போராட்டத்தை கைவிடப்போ…
-
- 0 replies
- 228 views
-
-
சரத் பொன்சேகா மீது சட்ட நடவடிக்கை : உதேனி அதுகோரல (க.கமலநாதன்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சால்வையினாலேயே அவரை தூக்கிலிட வேண்டும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எனவே அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென கூட்டு எதிரணியின் மாகாண சபை உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர் உதேனி அதுகோரல தெரிவித்தார். கூட்டு எதிரணியின் கோரிக்கைகளை செவிசாய்க்காமல் அதன் செயற்பாடுகளை போலியாக விமர்சிக்கின்ற அரசாங்கத்தில் வெறுமனே குருடர்களும் செவிடர்களும் மாத்திரமே நிறைந்துள்ளார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கூட்டு எதரிணின் பத்தரமுல்லை நெலும் மாவத்தை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற…
-
- 0 replies
- 260 views
-
-
தற்போது நாம் நினைத்த நேரத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியுமான சூழல் தோன்றியுள்ளது எனவும் சரியான நேரத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். 2017ம் ஆண்டு ஆட்சியை கவிழ்ப்பதாக கூறியமை தொடர்பில் திவயின நாழிதழுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். தற்போது நாட்டில் நடக்கும் விடயங்களை பார்க்கும் போது ஆட்சி கவிழ்க்கும் அந்த தருணத்தை நோக்கி விடயங்கள் நகர்வதை அனைவராலும் உணர்ந்துகொள்ள முடியும் எனத் தெரிவித்த அவர் அதிகாரம் எவ்வாறு கைமாறும் என்பது தொடர்பில் தன் அளவுக்கு அறிந்துவைத்துள்ள எவரும் இருக்கமுடியாது எனவும் தெரிவித்துள்ளார். தம்மிடமிருந்து ஆட்சி சொல்லிவிட்டு நழுவிச்செல்லவில்லை எனவும் கடந்த ஜனாத…
-
- 0 replies
- 362 views
-
-
ஆர்.ஹஸன் முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு வழங்கக் கூடாது என்பதில் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி குறிப்பிட்டுள்ள கருத்தை வன்மையாகக் கண்டித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், வடக்கு கிழக்கு இணைய வேண்டும் அது இயற்கையானது என அது குறிப்பிட்டுள்ள கருத்துக்கு முடியுமானால் ஒரு நியாயமான காரணத்தை முன்வைக்குமாறும் சவால்விடுத்தார். இதேவேளை, முஸ்லிம் வாக்குகளைப் பெற்று சமூகத்துக்கு எதிரான துரோக செயல்களில் ஈடுபடும் வெளிசக்திகளால் இயக்கப்படும் ந.தே.மு., சமூகத்தின் உரிமைப்பற்றி பேசுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் இராஜாங்க அமைச்சர் கடுமையாக சாடினார். காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்…
-
- 0 replies
- 563 views
-
-
கடல் எல்லையை குறிக்கும் இலங்கையின் பெயர் பலகை..! கடல் எல்லையை குறிக்கும் விதத்தில் பெயர் பலகையினை திறந்துள்ளது இலங்கை. இந்தியாவின் எல்லை பகுதியான தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே 20 மணல் திட்டுகள் உள்ளன. இவை கடல்நீர் பெருக்கத்தை பொறுத்து மாறுபடும். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி செல்லாமல் இருக்கவும், இலங்கையில் இருந்து வருபவர்கள் ஊடுருவல் செய்யாமல் இருக்கவும் நமது எல்லை பகுதியான 5-ம் மணல் திட்டில் 'இந்தியா' என்ற பெயர் பலகையினை இந்திய கடற்படையினர் ஏற்கனவே வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது, இலங்கை அரசும் தலைமன்னாரில் இருந்து 5-வது மணல் திட்டில் தங்கள் நாட்டு கொடியுடன் 'இலங்கை' என எழுதப்பட்ட பெயர் பலகையினை வைத்துள்…
-
- 2 replies
- 2.4k views
-
-
பெளத்த மகாநாயக்கர்கள் ஒற்றுமைப்படுத்தி வைப்பர் உலகில் ஓர் இனம்; இனத்தால், மதத்தால், நிறத்தால், மொழியால் பாதிக்கப்பட்டு உரிமையைப் பெற முடியாமல் தவிக்கிறது எனும் போது அந்த இனத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதைக் காணமுடியும். குறிப்பாக அந்த இனத்தின் தலைமை பிரிவுபட்டு நிற்கும் அல்லது விலைபட்டுப் போயிருக்கும். தவிர அந்த இனத்துக்குள்ளேயே கருத்து மோதல்களும் உட்கட்சிப்பூசல்களும் தலைவிரித்தாடும். சரியான திட்டமிடல்கள், அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் எதுவும் இருக்காது. கிடைத்த அதிகாரங்களையும் தக்கமுறையில் பயன்படுத்தாமல் எல்லாம் வீணடிக்கப்படும். மக்களை ஏமாற்றிப் பிழைப்பதில் ஒரு பகு…
-
- 0 replies
- 472 views
-
-
இலங்கையில் விபசார விடுதியை நடத்திச் செல்ல உதவி செய்த தாய்லாந்து பெண்கள் இருவர் உள்ளிட்ட 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரளையில் ஆயுர்வேத வைத்திய நிலையம் நடத்துவதாக கூறி, இந்த விபசார விடுதி நடத்திச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். விடுதியின் முகாமையாளர், உதவியாளர்களான ஆண்கள் இருவர், தாய்லாந்து பெண்கள் இருவர் மற்றும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சந்தேகநபர்களான 8 பெண்கள் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் 22 வயது முதல் 37 வயதெல்லைக்கு உட்பட்டவர்கள் எனவும் கொழும்பு, உக்குவலை, குளியாப்பிட்டிய, கம்பஹா, பொலனறுவை, ரிதிகம, கல்கமுவ மற்றும் அவிசாவளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என, பொலிஸார் கூறினர்…
-
- 0 replies
- 536 views
-
-
சர்வதேச வெசாக் நிகழ்வில் நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வரவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில், இலங்கை வரும் இவர், எதிர்வரும் 13ம் திகதி இடம்பெறவுள்ள சர்வதேச வெசாக் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார். இதேவேளை, சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 13ம் திகதி வரை வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக, புத்தசாசன அமைச்சு குறிப்பிட்டுள்ளது. http://www.virakesari.lk/article/19802
-
- 0 replies
- 430 views
-
-
சிங்கப்பூர் சென்றுள்ள இலங்கையின் சாகர, நந்திமித்ர..! சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சர்வதேச கடல் பாதுகாப்பு கண்காட்சியில் பங்குபற்றுவதற்காக இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்களான சாகர மற்றும் நந்திமித்ர கப்பல்கள் சிங்கப்பூர் சென்றுள்ளன. குறித்த கண்காட்சியின் போது யுத்த கப்பல் தொடர்பான சர்வதேச கடல் பாதுகாப்பு சர்வதேச கடல் பொறியியலாளர் மாநாடு இடம்பெறவுள்ளமையினால், அதில் பங்குகொள்வதற்காக 34 அதிகாரிகளும், 290 கடற்படை வீரர்களும் சென்றுள்ளனர். மேலும் நேற்று கொழும்பிலிருந்து சென்றுள்ள குறித்த கப்பல்களானது எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை சிங்கப்பூர் துறைமுகத்தில் நிறுத்தப்படவுள்ளதாக, இலங்கை கடற்படை …
-
- 0 replies
- 296 views
-
-
33ஆவது முதலமைச்சர்கள் மாநாடு, இன்று (06) முற்பகல் ஹபரண சினமன் லொஜ் விருந்தகத்தில் நடைபெற்றது. 0 0 0 G - See more at: http://www.tamilmirror.lk/196139/ம-தலம-ச-சர-கள-ம-ந-ட-#sthash.16cDidVW.dpuf
-
- 2 replies
- 1.4k views
-
-
மோடியின் வருகை : மலையக அரசியல் கட்சிகள் வலியுறுத்த போகும் விடயம் என்ன..? (க.கமலநாதன்) இந்திய அரசாங்கத்திற்கு மலையகத் தோட்ட தொழிலாளர் சமூகத்தின் மேம்பாட்டிற்கு முழு உதவி வழங்கவேண்டிய கடமையுள்ளது என்பதை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடத்தில் வலியுறுத்துவோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார். அதேநேரம் இந்திய தலைவர் ஒருவரின் மலையகத்திற்கான விஜயம் முதல் முறையாக இடம்பெறும்போது அவரிடம் வலியுறுத்தும் காரணங்களை விடுத்து அவருக்கு வரவேற்பளிப்பதையே முதன்மையாக கருதுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். இந்திய பிர…
-
- 0 replies
- 177 views
-
-
புதிய அனுபவ காட்சியறையை கொழும்பில் திறந்துள்ள Huawei (காணொளி இணைப்பு ) Huawei நிறுவனம், இலங்கையில் முன்னெடுத்து வருகின்ற விஸ்தரிப்பு நடவடிக்கைகளின் மற்றுமொரு அத்தியாயமாக கொழும்பில், லிபேர்ட்டி பிளாஸா வர்த்தக மையத்தின் கீழ்த் தளத்தில் வர்த்தகநாமத்தின் புதிய அனுபவ காட்சியறையொன்றை திறந்து வைத்துள்ளது. வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய Huawei ஸ்மார்ட்போன்கள், tablet சாதனங்கள் மற்றும் ஏனைய சாதனங்களை நேரடியாக அனுபவித்து அவை தொடர்பில் தீர்மானிப்பதற்கு இடமளிக்கும் வகையில் நேரடி இடைத்தொடர்பாட்டு அனுபவங்களைக் கொண்ட கருமபீடங்களுடன் இப்புதிய அனுபவ காட்சியறை வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் அனைத்து பிரதான மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடங்களில் தன…
-
- 0 replies
- 350 views
-