ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143368 topics in this forum
-
தேசிய நல்லிணக்கக் கொள்கை வரைவு அங்கீகாரம் குறித்து சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வரவேற்பு இலங்கையின் முதலாவது தேசிய நல்லிணக்கக் கொள்கை வரைவை அமைச்சரவை ஏற்றுக்கொண்டதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வரவேற்றுள்ளார். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கக் கொள்கை அலுவலகத்தின் இந்த வரைவை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாரம் சபையில் சமர்ப்பித்திருந்தார். இதை அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. நல்லிணக்கத்துக்கான தேசியக் கொள்கையொன்றை அறிமுகப்படுத்தும் முயற்சி 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பமானது. அது முதல் சுமார் ஒரு வருட காலம் வரைவுக்கான ஆலோசனைகள் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும…
-
- 0 replies
- 351 views
-
-
மக்களின் அடிப்படை சுதந்திரத்தை கூட பறிக்கும் மாற்றீடு சட்டம் : சுமந்திரன் (ஆர்.யசி) பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டுவர தயாராகும் சட்டத்தின் திருத்தங்கள் மிகவும் மோசமானதாகவும் மக்களின் அடிப்படை சுதந்திரத்தை கூட பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். எ. சுமந்திரன் தெரிவித்தார். தற்போது அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களை அரசாங்கம் உடனடியாக மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டியதுடன் அவசரமாக சீர்திருத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் மாற்றங்களை கொண்டுவரும் வகையில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ள…
-
- 2 replies
- 500 views
-
-
ஆலயங்களில் நகைகளை கொள்ளையடித்து வந்த கும்பல் கைது எஸ்.கார்த்திகேசு அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள ஆலயங்களின் கதவுகளை உடைத்து நீண்ட நாட்களாக நகைகளைக் கொள்ளையடித்து வந்த பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர், நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனரென, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை இரவு, விநாயகபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பத்திர காளியம்மன் கோயிலின் மூலஸ்தானக் கதவு உடைக்கப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இச் சம்பவம் தொடர்பாக ஆலயத் தலைவர், திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை, மறுநாள் பதிவு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட பொலிஸ்…
-
- 0 replies
- 319 views
-
-
திருகோணமலையின் பண்டைய சிவன் ஆலயத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு! – பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் திருகோணமலை ஈழத் தமிழ் மக்களின் தொன்மைச் சான்றுகள் நிறைந்த மானுட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். சைவமும் தமிழ் அரசர்களின் தனித்துவ ஆட்சியும் கொண்ட திருகோணமலை வரலாறு முழுதும் அழிக்கப்படுத்தலுக்கும் ஆக்கிரமிக்கப்படுத்தலுக்கும் உள்ளாகியுள்ளது. இங்கு காணப்படும் சைவ – சிவ மரபு சார்ந்த தொன்மங்கள் சிவ பூமி எனப்படும் ஈழத்தின் வரலாற்றை பறைசாற்றுபவை. அண்மையில் திருகோணமலையில் திருமங்களாய் சிவன் ஆலயத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுக்களை தொல்லியல் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் தலைமையிலான ஆய்வுக் குழு கண்டு பிடித்துள்ளது. வர…
-
- 0 replies
- 431 views
-
-
இரணை தீவுப்பகுதி தேசிய பாதுகாப்புக்கு அத்தியாவசியமானதாகும்; விடுவிப்பது கடினம் மக்களின் பிரச்சினையை கண்டறிய 27 ஆம் திகதி விஜயம்; சபையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) இரணைதீவு பகுதி தேசிய பாதுகாப்புக்கு அத்தியாவசியமானதாகும். வடக்கிற்கு வரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க குறித்த நிலம் கடற்படைக்கு தேவையாகும். எனவே இது தொடர்பில் அந்த பகுதி மக்களின் பிரச்சினையை கண்டறிய எதிர்வரும் 27 ஆம் திகதி நேரடி விஜயமொன்றை செய்வதற்கு நான் தயாராக உள்ளேன் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன உறுதியளித்தார். ப…
-
- 0 replies
- 409 views
-
-
மஹிந்தவின் பாதுகாப்பிற்கு தொடர்ந்தும் 187 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீளப்பெறப்பட்டமையில் அரசியல் நோக்கமில்லை; சபையில் அமைச்சர் சாகல ரட்நாயக்க விளக்கம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) முன்னாள் ஜனாதி பதி மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 42பேர் குறைக்கப்பட்டுள்ள நிலையிலும் அவருடைய பாதுகாப்புக்கு 187 உத்தியோகத்தர்கள் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் சாகல ரட்நாயக்க சபையில் தெரிவித்தார். அதிமுக்கிய பிரமுகர்களுக்கு இருக்கக் கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மதிப்பீடு செய்யப்பட்டே அவ…
-
- 0 replies
- 299 views
-
-
இடமாற்றங்கள் எதற்கும் அஞ்சாத யாழில் யாழில் உள்ள பிரதேச செயலர் – காதோடு காதாக அராலியூர் குமாரசாமி:- மாகாண சபையில் முறைகேடாக நடந்து கொண்ட அரச அதிகாரிகள் பலர் பூலில் போடப்பட்டுள்ளனர். இவர்களை பூலில் போடாமல் பூசாவில் போட்டால் மட்டுமே அலுவலகங்களில் இடம்பெறும் பல பிரச்சினைகளை இல்லாமல் செய்யலாம் என்று மக்கள் தெரிவிக்கின்றனர். மக்களின் வேலைகளைச் செய்யாமல் தமது தேவைகளை மட்டும் முறைகேடாக நிறைவேற்றி வரும் இவர்களால் எப்படி யாழ்ப்பாணம் அபிவிருத்தியில் முன்னேறும் என்பது கேள்விக்குறியே. இவர்களை காப்பாற்றுவதற்காக சில தமிழ் அரசியல்வாதிகளும் முயற்சி செய்வது தான் கேவலமான செயற்பாடாகும். பிரதேச செயலர்களாக பதவி கிடைத்ததும் கண் மண் தெரியாமல் பல செயலர்கள்…
-
- 0 replies
- 269 views
-
-
வெசாக் பௌர்ணமியன்று கறுப்பு கொடி ஏற்ற இடமளியோம் – மங்கள சமரவீர வெசாக் பௌர்ணமியன்று கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த இடமளிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சில வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் வெசாக் பௌர்ணமியன்று கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த முயற்சிக்கின்றனர் என குற்றம் சுமத்தியுள்ள அவர் சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களில் ஈடுபட கிடைத்தமை ஓர் புனிதமான தருணம் என குறிப்பிட்டுள்ளார். இந்த தருணத்தை சீர்குலைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட முடியாது என குறிப்பிட்டுள்ள மங்கள சமரவீர முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றிய அமரர் லக்ஸ்மன் கதிர்காமரின் …
-
- 1 reply
- 220 views
-
-
அமெரிக்க பிரஜா உரிமையை விட்டுக்கொடுக்கமாட்டேன் : கோத்தாவுக்கும் எனக்கும் எதிராகவே புதிய சட்டம் : பசில் அமெரிக்க பிரஜா உரிமையை விட்டுக்கொடுக்கமாட்டேன். கோத்தபாயவும் நானும் தேர்தலில் போட்டியிடாமல் தடுப்பதற்கே நல்லாட்சி அரசாங்கம் இந்த சட்டத்தை கொண்டுவந்தது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், இரட்டை பிரஜா உரிமை இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது நல்லாட்சி அரசங்கத்தினால் கொண்டுவரப்பட்ட புதிய சட்டமாகும். நானும் கோத்தபாய ராஜபக்ஷவும் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையிலே அந்த சட்டம் கொண்டுவரப்பட்டத…
-
- 0 replies
- 216 views
-
-
பிரபாகரனுக்கு விளக்கேற்றுவோர் மஹிந்தவுக்கும் ஏற்றுகின்றனர் கூட்டு எதிரணியில் உள்ள எவருக்கும் உயிராபத்து இல்லை என்கிறார் அமைச்சர் மங்கள (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) உலகில் எஞ்சியுள்ள தமிழ் அடிப்படைவாத குழுக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு விளக்கேற்றும் அதேநேரம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக் கும் இன்னுமொரு விளக்கை ஏற்றும் தகவல் கள் எமக்கு கிடைத்திருக்கின்றன என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர சபையில் தெரிவித்தார். கூட்டு எதிரணியினரை அந்த அடிப்படைவாதக் குழுக்கள் உயிரை கொடுத்துக் காப்பாற்றுவார்கள் எனவும் அமைச்சர் புன்னகையுடன் குறிப்பிட்டார். பாரா…
-
- 0 replies
- 493 views
-
-
வடக்கு உற்பத்திகளுக்கு சிறப்பு ஏற்றுமதித் திட்டம் 1,500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு வடக்கு உற்பத்திகளைத் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் கொள்வனவு செய்வதை ஊக்குவிக்கும் வகையிலும், வடக்கு உற்பத்தியாளர்கள் ஏற்றுமதி செய்யும் வகையிலான சிறப்புச் செயற்திட்டத்துக்கு ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள் ளது. ‘நல்லிணக்கத்தை மையப்படுத்திய பொருளாதார வலுவூட்டல் கருத்திட்டம்’ அரச தலைவரின் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச்சினால் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குச் சிறப்பு நிதியாக ஆயிரத்து 500 மில்லியன் ரூபா வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று, தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச்சின் செயலர் …
-
- 0 replies
- 259 views
-
-
இந்தியத் தூதரக அதிகாரிகள் ஊடக சுதந்திரத்தில் தலையீடு - நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நேற்றுக் காட்டம் ஊடக சுதந்திரத்தில் இன்று இந்தியத் தூதரக அதிகாரிகள் தலையிடும் ஓர் அவல நிலை யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன். ‘‘இந்தியத்துணைதூதரகம் மிக மோசமாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்தியாவிற்கு எதிரானதாக எந்தக் கருத்தும் எமது பத்திரிகையில் வரக்கூடாது என்பதாக அவர்கள் செயற்படுகிறார்கள். தமது தூதரகத்திற்குச் செல்பவர்…
-
- 6 replies
- 620 views
-
-
நீங்கள் ஒரு சட்டையைப் பார்க்கிறீர்கள். பொருத்தமான விலை. நீங்கள் அதை வாங்குகிறீர்கள். “இலங்கையில் தயாரிக்கப்பட்டது” என அதில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், அந்தச் சட்டையைச் செய்வதற்கான உண்மையான செலவு என்ன என்பது பற்றி நீங்கள் அனேகமாகச் சிந்தித்திருக்க மாட்டீர்கள். மேலும், GSP+ எனப்படும் ஓர் முன்னுரிமை வர்த்தகத் திட்டமானது எவ்வாறு அச்சட்டையை ஐரோப்பியச் சந்தைக்குக் கொண்டுவருகிறது என்பதைப் பற்றியோ, இலங்கையில் மனித உரிமைகள் நிலைநிறுத்தப்படுகின்றன எனும் பிம்பம் எவ்வாறு அதன் மூலம் ஏற்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றியோ உங்களுக்குத் தெரிந்திருக்கப் போவதில்லை. ஏப்ரல் 27, 2017 அன்று ஐரோப்பிய நாடாளுமன்றமானது, இலங்கைக்கு இம் முன்னுரிமை வர்த்தக நிலையை மீள அளிப்பதை மறுக்குந் தீர்மானத்தைத்…
-
- 3 replies
- 554 views
-
-
வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உயர் நீதிமன்றம் வேண்டும் சாட்சி பாதுகாப்பு,பாதிக்கப்பட்டவர் தொடர்பான பொறிமுறையை உடனடியாக மீளாய்வு செய்ய வேண்டும் (ரொபட் அன்டனி) உயர் நீதிமன்றமானது நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் செயற்படவேண்டும். குறிப் பாக வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில் உயர் நீதிமன்றம் அமைக்கப்படுவது அவசியமாகும் என்று சுயாதீன நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் மொனிகா பின்டோ பரிந்துரை செய்துள்ளார். சாட்சி பாதுகாப்பு மற்றும் பாதிக்கப்பட் டோர் தொடர்பான பொறிமுறை உடனடியாக மீளாய்வு செய்யப்படவேண்டும். அர்த்தமுள்ள பாதுகாப்பு இதில் இடம்…
-
- 1 reply
- 223 views
-
-
இனி சொகுசு வாகனங்களில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள்! அரசாங்கத்துடன் பின்கதவால் தொடர்ச்சியாக நடத்திவந்த பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்த நிலையில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிற்கு வரியற்ற வாகன இறக்குமதிக்கான சலுகை கிடைத்துள்ளதாக அறியமுடிகின்றது. இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களே வரியற்ற வாகன இறக்குமதிக்கான சலுகையை அனுபவித்து வந்திருந்த நிலையினில் தமக்கும் வரியற்ற வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கான சலுகையினை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அரசிற்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துவந்ததோடு பேச்சுக்களையும் நடத்திய நிலையில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களிற்கு இச் சலுகை கிடைத்திருக்கின்றது http://thuliyam.com/?p=66544
-
- 2 replies
- 964 views
-
-
'சுமந்திரனை விடவும் மஹிந்தவுக்கு பல மடங்கு அச்சுறுத்தல்' -ஜே.ஏ.ஜோர்ஜ் "முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைத்து அவரை கொலை செய்ய முயற்சிக்கின்றனர்" என, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நாடாளுமன்றில் இன்று குற்றஞ்சாட்டினார். ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க விளக்கமளித்ததன் பின்னர் விமல் இதனைக் கூறினார். "சுமந்திரன் எம்.பி.க்கு புலிகளின் புதிய குழுவொன்றினால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கூறி அவருக்கு பாதுகாப்பை அதிகமாக வழங்கியுள்ளீர்கள். புலிகளை ஒழித்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு, சுமந்திரனை விடவும் பல மடங்கு அச்சுறுத்தல் …
-
- 2 replies
- 249 views
-
-
உறவுகளும் நினைவுகளும் (ஒலிப்படக் கதை 1) நான்: “அம்மா, உங்க கிட்ட காணாமலாக்கப்பட்ட மகன்ட (மகள், கணவர், சகோதரர், பேரப்பிள்ளை) நினைவா ஏதாவது பொருள் இருக்கா? அவர் பயன்படுத்தின ஏதாவது?” அம்மா (அப்பா, மனைவி, சகோதரி, அம்மம்மா): “இருக்குதய்யா… பத்திரமா வச்சிருக்கன். அவன் காயப்பட்டு இரத்தமாகியிருந்த சேர்ட் மட்டும்தான் இருக்கு. அத கழுவி மடிச்சி வச்சிருக்கன்.” “இருக்கு தம்பி. மூத்த தம்பி பாவிச்ச கெமரா ஒன்டு இருக்கு. சின்ன தம்பியின்ட சீப்பொன்டும், இவரின்ட சேர்ட்டும் இருக்கு தம்பி.” “உடுத்த உடுப்போட ஆமின்ர பக்கத்துக்கு போன எங்களிட்ட ஒன்டுமே இல்ல. அவன் வருவான் என்டுதானே ஆமிட்ட குடுத்தோம்.” “மூத்த மகன்ட கல்யாணத்துக்கு அவன் தச்சு போட்ட கோர்ட் இருக்…
-
- 1 reply
- 344 views
-
-
யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழப்பு – மூவர் படுகாயம். யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவில் உள்ள சித்தண்கேணி வடலியடைப்பு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்தனர்.இச்சம்பவம் இன்று(5) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது இவ்விபத்தில் உயிரிழந்தவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகரான துரைரா…
-
- 0 replies
- 385 views
-
-
சக்தி டிவி செய்திகள் 5th May 2017, 8PM
-
- 0 replies
- 254 views
-
-
வித்தியா படுகொலை வழக்கின் குற்றப்பத்திரம் யாழ்.நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் ; அரச சட்டவாதி உறுதி வித்தியா படுகொலை வழக்கின் குற்றப்பகிர்வுப் பத்திரம் மே மாதம் 12 ஆம் திகதிக்கு முதல் சட்டமா அதிபரால் யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமென அரச சட்டவாதி இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார். வித்தியா படுகொலை வழக்கின் 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிப்பது தொடர்பில் கட்டளை பிறப்பிப்பதற்காக இன்று யாழ். மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அரச சட்டவாதி யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியிடம் உறுதியளித்தார். இதையடுத்து 9 சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடித்…
-
- 1 reply
- 188 views
-
-
சரணடைந்த 58 பேராளிகள் எங்கே? -ஜே.ஏ.ஜோர்ஜ் "உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் அருட்தந்தை பிரான்ஸிஸ் முன்னலையில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய போராளிகள் 58 பேருக்கு என்ன நடந்தது" என, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வியெழுப்பினார். இராஜதந்திரச் சிறப்புரிமைகள் சட்டத்தின் கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில், கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இன்று அவர் இதனைக் கூறினார். "திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை படுகொலை செய்யும் செயற்பாடுகள் வடக்கு - கிழக்கில் 2009ஆம் ஆண்டு வரை நடந்தேறின. "யுத்தத்தின் அதியுச்ச நேரத்தில் புலிகளுடன் தொடர்புடையவர்கள் ச…
-
- 0 replies
- 673 views
-
-
'முதலில் நீங்கள் சொல்லுங்கள், பிறகு நான் சொல்கின்றேன்' -ஜே.ஏ.ஜோர்ஜ் அத்துடன், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டது யார் என்பதை மஹிந்த தரப்பு அறிவித்தால், விடுதலைப் புலிகளுக்கு கீழ்படியுமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்ட அரசியல் தலைவர் யார் என்பதை அறிவிக்கின்றேன' என, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார். அத்துடன், 1999ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் விடுதலைப் புலிகளால் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பொலிஸ் நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு கருணா அம்மானே கட்டளை வழங்கினார்' என்றார். வாய்மூல விடைக்கான …
-
- 0 replies
- 294 views
-
-
சீனா செல்கிறார் பிரதமர் ரணில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை சீனாவிற்கு செல்கின்றார். சீனா செல்லும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டு தலைவர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உயர் மட்டத்தினரை சந்தித்து கலந்துரையாட உள்ளார். பிரதமருடன் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, நிரோஷன் பெரேரா மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோரும் செல்ல உள்ளனர். எதிர்வரும் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகின்ற நிலையில் மறுநாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனா செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/19…
-
- 0 replies
- 250 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்கப்படவில்லை : உறவினர்கள் குற்றச்சாட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அரசுக்கு போதிய அழுத்தங்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கொடுக்கவில்லை. அதனால்தான் எங்களுடைய போராட்டம் தீர்வின்றி 75 நாளை எட்டியுள்ளது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 75 நாட்களாக இரவு பகலாக வீதியில் காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளுக்காக போராடி வருகின்றோம். ஆனால் எங்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாது எங்களால் தெரவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் செயற்பட்டு வருகின்றனர். நல்லாட்சி அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் மஹிந்த வந்துவிடுவார் என்றும், அரசு பதில…
-
- 0 replies
- 165 views
-
-
கொழும்பில் விசேட போக்குவரத்து விதிகள் : இலகு ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டம் கொழும்பு மாநகரில் ஏற்பட்டிருக்கும் போக்குரத்து நெரிசலை கட்டுப்படுத்த விசேட திட்டங்களை அமுல்படுத்தி வருவதாக மாநகர அபிவிருத்திப் பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். அத்துடன் இலகு ரயில் சேவை மற்றும் மாற்றுப்பாதைகளை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் லசந்த அழகியவண்ண சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி பதில் நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதில…
-
- 2 replies
- 566 views
-