ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
முள்ளிக்குளம் கிராம வீடுகள் 6 மாதத்தில் கையளிக்கப்படும் -எஸ்.றொசேரியன் லெம்பேட் “முள்ளிக்குளம் கிராம மக்களின் காணிகளில் உள்ள 27 வீடுகளிலும் குடியமர்ந்துள்ள கடற்படையினரின் குடும்பத்தினர், 6 மாத காலத்துக்குள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, மக்களிடம் வீடுகள் கையளிக்கப்படுமென்று, கடற்படை தளபதி உறுதியளித்தார்” என, முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை அன்டன் தவராசா தெரிவித்தார். முள்ளிக்குளம் மக்களின் காணிகளை கடற்படையினர் விடுவித்துள்ள நிலையில், அந்த மக்கள், ஞாயிற்றுக்கிழமை தமது சொந்த இடத்துக்குச் சென்றனர். இதன்போது, நன்றி திருப்பலியை ஒப்புக்கொடுத்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அருட்தந்தை அன்டன் தவராசா …
-
- 0 replies
- 316 views
-
-
முன்னாள் போராளிகள் குறித்து தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. முன்னாள் போராளிகளுடைய புனர்வாழ்வு, வாழ்வாதாரம் அவர்களுடைய அரசியல் வாழ்க்கை, வேலைவாய்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அறிவிக்கும் பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார். முன்னாள் போராளிகளை சரியான நேரத்தில், சரியான முறைப்படி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுப்படு…
-
- 4 replies
- 333 views
-
-
தராகி அவர்களின் இழப்பு நேர் சிந்தனையுடைய சிங்கள மக்களுக்கும் ஒரு பேரிழப்பாக அமைந்துள்ளது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி என அழைக்கப்படும் தர்மரட்ணம் சிவராம் அவர்களின் 12ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை வடக்கு கிழக்கினைச் சேர்ந்த ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து யாழ் ஊடக அமையத்தின் தலைமையில் முன்னெடுக்கின்ற இந் நிகழ்வில் என்னை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுமாறு அழைத்ததையிட்டு மகிழ்வடைகின்றேன். உண்மைகளை உலகிற்கு எடுத்துரைத்த ஒரு பெரும் பணியை கைக்கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரின் இறந்த தினத்தில் அவர் பற்றி சிந்திக்காமல் இருப்பது இறை நிந்தனைக்கு ஒப்பானது. அந்த வகையில் இந் நிகழ்வில் என்னைக் கலந்து கொள்ளுமாறு அழைத்த போது மற்றைய நிகழ்வுகளை ஒழுங்…
-
- 1 reply
- 614 views
-
-
தேவை இருந்திருப்பின் ஒரே இரவில் கொழும்பை சுற்றி வளைத்திருப்பேன் : பொன்சேகா (க.கமலநாதன்) எனக்கு தேவை இருந்திருந்தால் கடந்த காலத்தில் எனது வசமிருந்த அதிகாரங்களை கொண்டு கொழும்பை சுற்றி வளைத்திருப்பேன் என பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அதேநேரம் தற்போது எனக்கு புதியதொரு பதவி வழங்கப்பட்டு அதனால் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு பங்கம் ஏற்படுவதை அமைச்சர் ஜோன் செனவிரத்ன விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பேலியகொடை, பராக்கிரம மாவத்தையில் இடம்பெற்ற புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகளின் விசேட விருந்தினராக கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்…
-
- 0 replies
- 368 views
-
-
வெளிவிவகார அமைச்சருடன் பிணையெடுக்க சென்ற சிறிதரன் ?(ஆதாரங்கள்) இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொடுக்கும் முக்கிய தீர்மானத்துக்கு இலங்கை அரசுக்கு சாதகமாக வாக்களிக்குமாறு கோருவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரசல்ஸ் சென்றுள்ளார் தெரியவருகின்றது. இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹார்சா டி சில்வா தலைமையிலான இலங்கை குழுவுடன் பிரசல்ஸ் சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனோ அல்லது த.தே.கூட்டமைப்போ இது பற்றி எந்த செய்தியையும் வெளியிடவில்லை என்பதோடு பெரும்பாலான தமிழ் ஊடகங்களும் த.தே.கூட்டமைப்பை பற்றி எழுதுவதற்கு பின்னடிப்பதையும் தமிழ்கிங்டொம் இங்கு சுட்டிக்காட்டுகின்றது. இது தொடர்பாக முகநூலில் பல செய்திகள் வெளியாகியிருந்த…
-
- 1 reply
- 991 views
-
-
இரண்டு மாதங்களை தாண்டி தொடரும் கேப்பாபுலவு நில மீட்பு போராட்டம் !!! கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவித்து, சொந்த நிலத்தில் தாம் வாழ அனுமதிக்க வேண்டுமெனக்கோரி இன்றுடன் 61 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் 61 நாட்களாக போராடிவரும் மக்கள் பல நோய்த்தாக்கங்களுக்கு தாம் ஆளாகியிருப்பதாகவும் இப்படியே வீதியிலே எத்தனை நாட்களுக்கு அவல வாழ்க்கை வாழ விட்டு…
-
- 0 replies
- 342 views
-
-
கேப்பார் யாருமின்றி முல்லைத்தீவில் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்!!! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக முன்னெடுத்துள்ள போராட்டம் இன்றுடன் 54 நாட்களாக தொடர்கின்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கடந்த மாதம் 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் இன்றுவரையில் எந்தவித சாதகமான பதில்களும் அற்றநிலையில் தொடர்ந்து செல்கின்றது. இறுதி யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியில் வட்டுவாகல் மற்றும் ஓமந்தை பகுதிகளில் வைத்து இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகள் எங்கே என கோரியும் வெள்ளைவான்களில் கடத்தி செல்லப்படட தமது உறவுகள் எங்கே என கேட்டும் இவர்களின் போராட்…
-
- 0 replies
- 359 views
-
-
மக்கள் பலத்தை வெளிக்காட்ட மைத்திரி - ரணில் - மஹிந்த போட்டி : நாளை களை கட்டும் மே தினம் லியோ நிரோஷ தர்ஷன், எஸ். கணேசன் நாளை நடைபெறவிருக்கும் மேதினத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சி என்பன தமது மக்கள் பலத்தை வெளிக்காட்ட தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான சர்வதேச தொழிலாளர் தினம், அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு அப்பால், அரசியல் கட்சிகளின் பலப்பரீட்சைக் களமாக மாறியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் ,கொழும்பிலும் கண்டியிலும் தமக்…
-
- 0 replies
- 601 views
-
-
"தொழிலாளர் தினத்தில் வடக்கிலும் கிழக்கிலும் விடுதலையின் அழுத்தம்" : எம்.ஏ.சுமந்திரன் (ஆர்.யசி) எமது மக்களின் உரிமைக்காக இம்முறை வடக்கிலும் கிழக்கிலும் தொழிலாளர் தினத்தை விடுதலையின் அழுத்தம் கொடுக்கும் தினமாக அனுஷ்டிக்கவுள்ளோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாரர்ளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அம்பாறையில் நடைபெறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் தொடர்பாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாரர்ளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/19568
-
- 0 replies
- 483 views
-
-
மௌனித்த துப்பாக்கிகளும் பந்தாடப்படும் தமிழர்களும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நீண்ட நெடும் பயணத்தில் தமிழினம் கொடுத்த விலை மிகப்பெரியது. விடுதலைப்பசிக்கு முன் சோற்றுப்பசி பெரிதல்ல என போராடிய இனத்திற்கு தேடற்கரிய தலைவன் கிடைத்தான். விடுதலைப்பயணம் வீச்சுக்கொண்டது. கெரிலாப்படையணி மரபு வழி இராணுவமாய் பரிணமித்தது. வீரர்களின் வீரம் ,மக்களின் தியாகம், புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பு என விடுதலையின் விளிம்பில் நின்ற இனம் காட்டிக்கொடுப்பு, துரோக்தனம், வல்லரசுகளின் சதி என பல்வேறுகாரணங்களால் முள்ளிவாய்காலில் முடிவடைந்தது. முள்ளிவாய்காலில் மே18 இல் விடுதலை வீரர்களின் துப்பாக்கிகள் மௌனித்தன. இறுதி யுத்ததில் மனிதப்பேர்அவலம் நடத்தது. அந்த கோர நாட்களின் வலிகள் தமிழினத…
-
- 0 replies
- 259 views
-
-
மாவையின் மாயாஜாலம்!! விரிந்து செல்கின்ற மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களை மகிந்தவின் பெயரை சொல்லாமல் சொல்லி அச்சுறுத்தி, போராட்டங்களை நிறுத்தம் காணச் செய்யும் ஒரு திட்டமிட்ட செயலாகவே மாவையரின் கூற்றைப் பார்க்க வேண்டும். இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கே முதலிடம் என்பதால் அதற்குத் தேவையான காணிகளை வைத்துக்கொண்டு மிகுதியை மட்டுமே படிப்படியாக விடுவிக்க முடியும் என்ற தங்கள் நிலைப்பாட்டை இராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது. மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் இந்த மாதம் 24ம் திகதி தமது அமைச்சில் நடத்திய மாநாட்டில் இராணுவத் தரப்பினரால் இது தெரிவிக்கப்பட்டது. கூட்டமைப்பின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவா…
-
- 0 replies
- 336 views
-
-
பேராட்டங்களை நடத்தி வடக்கிலிருந்து படையினரை வெளியேற்ற முயற்சி போராட்டங்களை நடத்தி வடக்கிலிருந்து படையினரை வெளியேற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்து வருவதாகத் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் நிர்வாகம் செய்யப்பட்ட வடக்கு கிழக்கின் முக்கிய பாதுகாப்பு நிலைகள் 15லிருந்து படையிரை வெளியேற்ற முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவாளர்களைப் பயன்படுத்தி தொடர் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் நந்திக்கடல், மட்டுவால், கேப்பிலாமடு, இரணைமடு புலிகளின் விமான ஓடுபாதை, முள்ளிக்குளம் உள்ளிட்ட முக்கிய புலிகளின் நிலைகளிலிருந்து படையினரை வெளியேற்றவே இவ்வாற…
-
- 2 replies
- 275 views
-
-
வெளிவிவகார அமைச்சருடன் பிணையெடுக்க சென்ற சிறிதரன் ?(ஆதாரங்கள்) இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொடுக்கும் முக்கிய தீர்மானத்துக்கு இலங்கை அரசுக்கு சாதகமாக வாக்களிக்குமாறு கோருவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரசல்ஸ் சென்றுள்ளார் தெரியவருகின்றது. இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹார்சா டி சில்வா தலைமையிலான இலங்கை குழுவுடன் பிரசல்ஸ் சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனோ அல்லது த.தே.கூட்டமைப்போ இது பற்றி எந்த செய்தியையும் வெளியிடவில்லை என்பதோடு பெரும்பாலான தமிழ் ஊடகங்களும் த.தே.கூட்டமைப்பை பற்றி எழுதுவதற்கு பின்னடிப்பதையும் தமிழ்கிங்டொம் இங்கு ச…
-
- 0 replies
- 486 views
- 1 follower
-
-
சர்ச்சையைக் கிளப்பும் நரேந்திர மோதியின் இலங்கைப் பயணம் இலங்கைக்கு அடுத்த மாதம் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் வருகை தரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, சர்வதேச வெசாக் தின கொண்டாட்டம் தவிர வேறு எந்தவொரு உத்தியோகபூர்வ நடவடிக்கைளிலும் ஈடுபடமாட்டார் என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை கிழக்கு மாகாணத்திற்கு சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி, மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய போது இதனை தெரிவித்துள்ளார். புத்தர் ஞானம் பெற்ற தினமாகிய வைகாசி பௌர்ணமி தினம் பௌத்தர்களினால் வெசாக் பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது இந…
-
- 1 reply
- 468 views
-
-
சிவராம் படுகொலை செய்யப்பட்டு 12 வருடங்கள் பூர்த்தி: நீதி நிலைநாட்டப்படுவது எப்போது? ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 12 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. பிரபல ஊடகவியலாளர் சிவராம் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி வெள்ளை வேனில் கடத்தப்பட்டு, பாராளுமன்றத்திற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 இல் மட்டக்களப்பில் பிறந்த சிவராம், தராகி என்ற பெயரில் ஆங்கிலப் பத்திரிகையில் 1989 இல் தன் முதல் கட்டுரையை எழுதினார். அரசியல், போரியல், பாதுகாப்பு சார்ந்த அவரது கட்டுரைகள் உள்நாட்டில் மாத்திரமின்றி உலகளவிலும் பரவலாக வாசிக்கப்பட்டன. பத்தி எழுத்தாளராக, அரசியல் ஆ…
-
- 2 replies
- 714 views
-
-
சக்தி டிவி செய்திகள் 29 th April 2017, 8 PM
-
- 0 replies
- 317 views
-
-
காலிமுகத்திடலில் மக்கள் நிறைந்து கடலில் விழுந்துவிடுவார்களோ என்று அஞ்சுகிறோம் : பஷில் இம்முறை கூட்டு எதிரணி காலிமுகத்திடலில் நடத்தும் மே தினக்கூட்டமானது அரசாங்கத்திற்கு மிகப்பெரிய செய்தியை கூறுவதாக அமையும். மிகப் பிரமாண்டமான மேதினக்கூட்டத்தை நாங்கள் நடத்துவோம் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். எமது மே தினக்கூட்டத்திற்கு நாட்டில் அனைத்து பாகங்களிலிருந்தும் மக்கள் கலந்துகொள்வார்கள். வடக்கு, கிழக்கு, மலையகம் என அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் பங்கேற்பார்கள். மேலும் மக்களினால் காலிமுகத்திடலை நிரப்புவது எமக்கொரு ப…
-
- 5 replies
- 512 views
-
-
ஹட்டனில் ஈரோஸின் மே தினக் கூட்டம் -கனகராசா சரவணன் “உலக பாட்டாளிகளே உரிமை மீட்புக்காக ஒன்றுபடுங்கள்” எனும் தொனிப் பொருளில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மே தினக் கூட்டம் ஹட்டன் - டிக்கோயா புவியாவத்தை நகரில் மே 1ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு காலை 9.00 மணிக்கு கட்சியின் மலையகப் பொறுப்பாளர் தோழர் இரா. ஜீவன் இராஜேந்திரன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இதில் பிரதமஅதிதியாக, கட்சியின் செயலாளர் நாயகம் இரா.ஸ்ரீ. இராஜேந்திரா, சிறப்பு அதிதியாக கட்சியின் தலைவர் கு. சௌந்தராஜன், விசேட அதிதிகளாக கிழக்கு மாகாகாண சபை முன்னாள் உறுப்பினர் தோழர் எஸ். புஸ்பராஜா, திருகோணமலை நிறைவேற்றுக்குழு உறுப்பினர் எஸ். தர்மலிங்கம், மலையக அரசி…
-
- 1 reply
- 316 views
-
-
சமய நல்லிணக்கம் மற்றும் சமாதானம் குறித்த ஜனாதிபதியின் கருத்துக்களுக்கு இஸ்லாமிய பிரதிநிதிகள் பாராட்டு! “இஸ்லாமிய யதார்த்தமும் தற்கால சவால்களும்” என்ற சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள சவுதி அரேபிய பிரதிநிதிகள் சமய நல்லிணக்கம் மற்றும் சமாதானம் குறித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களைப் பாராட்டியுள்ளனர். சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள் இஸ்லாமிய உலக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். மாநாட்டில் கலந்துகொண்ட ஒரு உயர் மட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து ஜனா…
-
- 1 reply
- 248 views
-
-
முள்ளிக்குளம் காணிகளை விடுவிக்க உத்தரவு முள்ளிக்குளம் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க கடற்படைத் தளபதி உத்தரவிட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/195692/ம-ள-ள-க-க-ளம-க-ண-கள-வ-ட-வ-க-க-உத-தரவ-#sthash.jC013YMN.dpuf முள்ளிக்குளம் மக்கள் காணிகளை கடற்படையினர் விடுவித்தனர்:- கடற்படையினர் வசமிருந்த முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு காணிகள் இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடற்படையின் கட்டளைத் தளபதி தலைமையில் முள்ளிக்குளம் கடற்படை முகாமில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற காணி விடுவிப்பு குறித்த…
-
- 1 reply
- 553 views
-
-
கனேடிய உணவு மற்றும் பான கண்காட்சியில் இலங்கை ஏற்றுமதியாளர்கள் பிரதிநிதிகள் குழு கனடாவின் ரொரன்டோ நகரில் எதிர்வரும் மே 2 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த ஆண்டுக்கான 'சியல் கனடா 2017' சர்வதேச உணவு மற்றும் பான கண்காட்சியில் 10 சிறிய மற்றும் நடுத்தர அளவான ஏற்றுமதியாளர்கள் பங்கேற்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இந்தக் கண்காட்சி நிகழ்ச்சித் திட்டத்திற்கு கனேடிய வர்த்தக வசதியளிப்பு அல…
-
- 0 replies
- 328 views
-
-
இனப்பிரச்சினைக்கு தீர்வு கோரும் மேதினம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் அம்பாறை மாவட்டத்திலும் இந்தமுறை மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மே 01 ஆம் திகதி திங்கட்கிழமை தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மேதினம் பெரியளவில் கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின கூட்டம் கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளன. தொழிலாளர் உரிமை, மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் மிக விரைவில் நிறைவேற்றப்ப…
-
- 0 replies
- 305 views
-
-
பாகிஸ்த்தான் பூச்சாண்டி காட்டுவோரின் பின்னணி என்ன? (அவதானி)இலகுவான வாய்ப்பாடு கிழக்கில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. வடக்கு மக்களுக்கெதிரான நஞ்சை விதைப்பது. இல்லாவிட்டால் முஸ்லீம் மக்களுக்கு எதிரான கருத்தைச் சொல்வதன் மூலம் வடகிழக்கு எந்தக் காலத்திலும் இணைந்து விடக் கூடாது என்ற உணர்வை அவர்களுக்கிடையே ஆழமாகப் பதிய வைப்பது. இதன் மூலம் இவர்கள் யாருடைய தேவையை நிறைவேற்றுகின்றார்கள் என்பது சொல்லிப் புரியவைக்க வேண்டியதில்லை. `ஊரில்`எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்` என்று ஒருவர் சொல்கிறார் என்றால் அதன் உண்மையான நிலை அப்போது தான் இவர் அந்தக் கதையை ஆரம்பிக்கிறார் என்பதே. சிண்டு முடிவோர் இச் சொல்லைத்தான் அடிக்கடி பயன்படுத்துவர். `கிழக்கில் தமிழர்கள் மீது அறிவிக்கப்ப…
-
- 0 replies
- 651 views
-
-
பொன்சேகாவுக்கு இராணுவ பதவி கிடையாது தனிப்பட்ட கருத்துக்களை ராஜித தெரிவிக்கக்கூடாது என்கிறார் ஜோன் (க.கமலநாதன்) பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு முப்படையில் பதவி வழங்கும் நோக்கில் அரசாங்கம் இல்லை. எனவே அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார். ஜனாதிபதி சாதாரணமாக விடுத்த ஒரு கோரிக்கையை திரிபு படுத்தி கூறியமையே குழப்பத்திற்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஸ்ரீ லங்கா சுநத்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட…
-
- 0 replies
- 148 views
-
-
அம்பாரையில் பெளத்த வழிபாட்டு மையம் அமைக்க எதிர்ப்பு: முஸ்லிம்கள் முழு அடைப்புப் போராட்டம் இலங்கையில் அம்பாரை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்தில் பௌத்த வழிபாட்டு மையமொன்று அமைப்பது தொடர்பாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அந்த பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. Image captionமாயக்கல்லி மலையில் சில மாதங்களுக்கு முன்பு வைக்கப்பட்ட புத்தர் சிலை பௌத்தர்கள் அல்லாத தமது பிரதேசத்தில் பௌத்த வழிபாட்டு மையம் அமைக்கும் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி அந்த பிரதேச முஸ்லிம்களினால் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. தமது பிரதேசத்தில் அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட…
-
- 1 reply
- 675 views
-