ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
20 இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களால் ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்படும் ! வில்பத்து சரணாலயம் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்படாவிட்டால் 15 ஆயிரம் முஸ்லிம்களை இணைத்துக் கொண்டு ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு போராட்டம் நடத்தியும் தமது பிரச்சினைகளை ஜனாதிபதி கவனத்தில்கொ ள்ளாவிட்டால், நாடு முழுவதும் உள்ள 20 இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களால் ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வில்பத்து சரணாலயம் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தலால் முசலிப் பிரதேச மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வாதாரங்கள் வழங்கும் நிலங்களையும் சுவீகரிக்கும…
-
- 0 replies
- 245 views
-
-
வன்னி யுத்தத்தில் ஈடுபட்ட படை அதிகாரிகளை வெளிநாடுகளில் கைது செய்யத் திட்டம்? வன்னி யுத்தத்தில் ஈடுபட்ட படை உயர் அதிகாரிகளை வெளிநாடுகளில் வைத்து கைது செய்யத் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வன்னி யுத்தத்தில் முக்கிய பங்களிப்பு வழங்கிய 25 சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டால் அந்த நாடுகளில் வைத்து அவர்களை கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. நாடு கடந்த தமிழீழ இராச்சியம் இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், ஒஸ்ட்ரியா, ஸ்பெய்ன் உள்ளிட்ட அகிலப் பிரகடனம் அமுல்படுத்தப்படும் பத்து நாடுகளில் இவ்வாறு முயற்சிக்கப்பட்டு …
-
- 0 replies
- 190 views
-
-
பந்தடித்து பரிசுபெறும் நிகழ்வா முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஈழத் தமிழ் இனம் சந்தித்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் என்பது பந்தடித்து விளையாடி பரிசு பெறும் நிகழ்வா? திட்டமிட்ட இந்த நிகழ்ச்சியின் பின்னணியில் இருப்பது யார்? முள்ளிவாய்க்காலை கொச்சைப்படுத்தும் இச் செயலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நாளின்போது உதைபந்தாட்டப் போட்டி நடத்தப்படுவதற்கு எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன. அமைப்பு ஒன்றின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் இந்த உதைபந்தப் போட்டியின்போது பணப் பரிசுகளும…
-
- 0 replies
- 219 views
-
-
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானியப் பிரதமருடன் இன்று சந்திப்பு ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜப்பான் பிரதமரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜப்பானுக்கு ஏழு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்றிரவு ஜப்பான் சென்றடைந்தார். அவருடன், அவரது பாரியார் மைத்ரி விக்கிரமசிங்க, அமைச்சர்களாகிய மலிக் சமரவிக்கிரம, சரத் அமுனுக உட்பட பத்துப் பேர் ஜப்பான் சென்றுள்ளனர். இலங்கை-ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலும் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயை இன்று சந்தித்துப…
-
- 0 replies
- 163 views
-
-
தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய அரசியலமைப்பு அவசியம்உ - சுமந்திரன் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள் ளார்.பிபிசி சிங்கள சேவையான சந்தேசயவுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித் துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்பட வேண்டும். சிறுபான்மையினர் தமது உரிமை களை வென்றெடுப்பதற்கு நிறைவேற்று அதிகார ஆட்சிமுறை நல்லது என்ற கருத்து சரியானது அல்ல. தேர்தல்களின் போது சிறுபான்மையினரின் ஆதரவு தேவைப்பட்டாலும் கூட ஜனாதிபதியாகத் தெரிவு செ…
-
- 0 replies
- 128 views
-
-
24 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை இரட்டைக் குடியுரிமை தொடர்பில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்த 24ஆயிரம் பேருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக, குடிவரவு-குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த மாதம் 28ஆம் திகதி இன்னும் 1,500 பேருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும் என, அந்த திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கை கடந்த அரசாங்கத்தால் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதன்காரணமாக 2015ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் அதிகளவிலான விண்ணப்பப்பத்திரங்கள் தேங்கியிருந்ததாக அந்தத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 227 views
-
-
யாழில் மரக்கறிகள் நெருப்பு விலை குணசேகரன் சுரேன் யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிகரித்த வெப்பநிலை காரணமாக உள்ளூர் மரக்கறிகளின் உற்பத்தி குறைவடைந்து வருவதால், யாழ்ப்பாணத்துச் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்து காணப்படுகின்றன என்று, சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த மாதத்தின் இறுதிப் பகுதியில் மிகவும் மலிந்த நிலையில் காணப்பட்ட மரக்கறிகளின் விலைகள், இந்த வாரத்தில் மூன்று, நான்கு மடங்குகளாக அதிகரித்துள்ளன. முன்னர் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் தக்காளி தற்போது 160 ரூபாயாகவும் 30 ரூபாயக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் தற்போது 140 ரூபாயாகவும் காணப்படுகிறது. …
-
- 0 replies
- 173 views
-
-
தீவிரமைடைந்து வரும் இன்புலுவென்சா நோய் : அவதானமாக இருக்க கோருகிறது சுகாதார அமைச்சு.! (க.கமலநாதன்) நாடளாவிள ரீதியில் இன்புலுவென்சா நோய்த் தாக்கம் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் பொது மக்கள் மிக அவதானத்துடன் இருக்குமாறு சுகாதா சேவைகள் பணியகம் தெரிவிக்கின்றது. காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தடுமல் உள்ளிட்ட நோய் தாக்கங்கள் முன்னறிகுறியாக தென்படும் பின்னர் நோய் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் எனவும் இதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வைத்திய ஆலோசனைகளை உரிய விதத்தில் பின்பற்றுமாறும் சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன் பிரகாரம் இந்த நோய் தொற்று உள்ளதாக அறிந்துக்கொண்டவர்கள் அதிக சன நடமாட்டம் உள்ள பகுதியில் ச…
-
- 0 replies
- 134 views
-
-
இன ஒற்றுமையை பலப்படுத்துவதற்கு ஆன்மீகத் தலைவர்களே முக்கிய கருவிகள்” - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன “இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் ஊக்குவிப்பதற்கு ஆன்மீகத் தலைவர்களே சிறந்த கருவிகளாவர். திரிபிடகம், பைபிள், குர்ஆன், பகவத் கீதை என அனைத்துச் சமயங்களினது புனித நூல்களிலும் ஒற்றுமைக்கான வழிகாட்டல்கள் செறிந்திருக்கின்றன. எனவே, புத்த பிக்குகளும் ஏனைய ஆன்மீகத் தலைவர்களும் அந்நூலின் தத்துவங்களை மக்கள் கடைப்பிடிக்க வழி செய்ய வேண்டும்” என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன, மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தங்கொட்டுவை, சிங்கக்குளியவில் நடைபெற்ற ‘எரபுது வசந்தம்’ என்ற விழாவில் பேசும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார…
-
- 0 replies
- 104 views
-
-
வடக்கு - தெற்கு அந்நியோன்ய உறவுகள் அரசியலமைப்பு விவகாரத்தினால் பாதிக்கப்பட்டால் நிலையான அமைதி கெடும் - சமல் ராஜபக்ஷ (லியோ நிரோஷ தர்ஷன்) அரசியலமைப்பு விவகாரத்தினால் வடக்கு , கிழக்கு மற்றும் தென்னிலங்கையின் அந்நியோன்ய உறவுகள் பாதிக்கப்பட கூடாது. தேசிய சமாதானத்தை கலங்கப்படுத்திக் கொண்டு பொருளாதார இலக்குகளை அடைவதோ நிலையான அமைதியை தக்கவைத்துக் கொள்வதோ சாத்தியமற்றதாகும் என முன்னாள் சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். குறுகிய நோக்கங்களுக்காகவும் குறிப்பிட்ட தரப்புகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் அரசாங்கத்தின் இரு பிரதான கட்சிகளும் செயற்படாது , நாட்டின் நலன்களை கருத்தில் கொண்டு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்…
-
- 0 replies
- 127 views
-
-
தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து திரைமறைவில் செயற்படுகிறது அரசு புதிய அரசியலமைப்பு தொடர்பில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் அவ்வாறான உடன்பாடு எதுவும் எட்டப்பட்டதாக எமக்குத் தெரியவில்லை. எனவே அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து திரைமறைவில் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றது என்று பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். உத்தேச அரசியலமைப்பு சம்பந்தமாக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 124 views
-
-
கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் அமைப்பாளரும், தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமாகிய அருணாச்சலம் வேழமாலிகிதன் (வேழன்) என்பவர் உதவி கேட்டு வரும் பெண்களிடம் காமலீலை செய்து வருகிறார் பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து தமிழ்கிங்டொத்தின் செய்திப்பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக அவர் விடுதலைப்புலிகளின் காலத்தில் தமிழீழ கிராம அலுவலராக கடமையாற்றியிருந்தார் என்றும் அவ்வப்போது சில சர்ச்சனைகள் எழுந்தபோதும் 2009 காலப்பகுதிக்கு பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களின் பிரத்தியேக கடமையாற்றிவந்தவேளை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிக்கு உள்வாங்கப்பட்டு அதன் கொள்கைபரப்பு செயலராக கடமையாற்றி வருகின்றார். பாராளுமன்ற உறுப்பினரிடம் …
-
- 5 replies
- 1k views
-
-
மலையாளபுரம் கிராமத்தில் சிறப்பாக இடம்பெற்றது கரைச்சியின் கலாசார விழா கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தின் 2016 இற்கான கலாசார விழா மிகவும் சிறப்பாக மலையாளபுரம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.நேற்றைய தினம் (07-04-2016) மலையாளபுரம் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கிராம மக்கள் கலைஞர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர். வருடந்தோறும் கலாசார விழாக்கள் நகரை அண்டிய பகுதிகளில் மண்டபங்களில் இடம்பெற்ற வந்த வழமை மாற்றப்பட்டு கிராமங்களை நோக்கி பிரதேச மட்ட கலாசார விழாக்களை நகர்த்தியது அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் 2016 இற்கான கரைச்சியின் கலாசார விழாவை ம…
-
- 4 replies
- 553 views
-
-
மக்களின் போராட்டங்களுக்கு தீர்வுகளை வழங்குங்கள் – பிரதமரிடம் டக்ளஸ் வேண்டுகோள் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து கட்டங் கட்டமாக தேசிய பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காண்பதற்கான முன்னோக்கிய செயற்பாடுகளை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம்; ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடியது என ஏற்றுக்கொள்ளக்கூடிய புதியதொரு தீர்வு வரைபு அல்லது திருத்த வரைபு முன்வைக்கப்படுமானால் அதற்கு எமது கட்சி பூரணமாக ஆதரவளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 200 views
-
-
மத்திய அரசாங்கத்துக்கே பொறுப்பு; நழுவுகிறார் சி.வி சுப்பிரமணியம் பாஸ்கரன் "மீள்குடியேறும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக பெற்று கொடுக்க வேண்டியது, அரசாங்கத்தின் கடப்பாடு. அதில் நாம் தான்தோன்றித்தனமாகத் தலையீடு செய்ய இயலாது. அவ்வாறு மத்திய அரசாங்கம் தனது கடப்பாட்டைச் செய்யவில்லை என்பதை, மக்கள் எமக்கு எழுத்துமூலமாகத் தெரியப்படுத்தினால், அது தொடர்பாக மத்திய அரசாங்கத்துடன் பேசி மக்களுக்குரிய உதவிகளை பெற்று கொடுப்பதற்கு, எங்களால் ஆவன செய்ய இயலும்" என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பிலவுக்குடியிருப்பு மக்கள், தமது சொந்த நிலத்தில் தம்மை மீள்குடியேற்ற கோரி ஒரு மாதம் தொடர்ச்சியான கவனயீர்ப்பு…
-
- 0 replies
- 602 views
-
-
விரைவில் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் தனித்து ஆட்சி ரணிலுக்கு ஜனாதிபதி சிவப்பு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்கிறார் டிலான் (ஆர்.யசி ) ஊழல் மோசடிக்காரர்களை தண்டிக்க வேண்டிய கட்டத்தில் ஜனாதிபதி உள்ளார். குற்றவாளிகளை தண்டிப்பதாக கூறுகின்றாரே தவிர குற்றவாளிகளை தண்டிக்க எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு மேலாக செயற்படும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு முதலில் ஜனாதிபதி சிவப்பு எச்சரிக்கை விட வேண்டும் விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரக் கட்சியின் ஆட்சியை ஏற்…
-
- 1 reply
- 196 views
-
-
ஒருதொகை டைனமைற் குச்சிகளுடன் ஒருவர் கைது தடைசெய்யப்பட்ட வெடிபொருளான டைனமைற் குச்சிகளுடன் சந்தேக நபர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிழக்கு கடற்படை தளத்தின் கடற்படை வீர்ர்கள் மற்றும் திருகோணமலை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆகியோரின் நடவடிக்கையில் எரன்கன்டி பகுதியில் வைத்து 6.370 கிலோ கிராம் நிறையுடைய 49 டைனமைற் குச்சிகளுடன் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் டைனமைற் வெடிபொருள் ஆகியன மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை ஊழல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/…
-
- 0 replies
- 268 views
-
-
கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் சைக்கிள் ஓட்டப் போட்டி கிழக்கையும் மேற்கையும் பாலமாக இணைக்கும் சர்வதேச சைக்கிளோட்டம் இன்று வெள்ளிக்கிழமை பாசிக்குடாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த போட்டியை நடாத்துவதற்கு இரண்டு வருடங்களாக கலந்தாலோசிக்கப்பட்டதாகவும், பாசிக்குடாவிலிருந்து இந்த சைக்கிளோட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கமையவாக சர்வதேச சைக்கிளோட்ட போட்டி இன்று ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சைக்கிளோட்ட போட்டியானது பாசிக்குடாவிலிருந்து மஹியங்கனை கண்டி குருநாகல் வழியாக நீர்கொழும்பை அடையும் என்றும் சுமார் 334 கிலோமீட்டரை போட்டியாளர்கள் ஓட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அறுபத்தைந்து சைக்கிளோட்ட போட்டியாளர்கள் கல…
-
- 0 replies
- 278 views
-
-
உள்ளாடைத் தடைக்கு 30 நாள் வகுப்புத் தடை பகடிவதை சம்பவத்துடன் தொடர்புடைய தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தின் 18 மாணவிகள் உள்ளிட்ட 28 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அறிவியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த வகுப்புத்தடை, ஏப்ரல் 7ஆம் திகதிமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. புதிய மாணவர்களை கடந்த 6ஆம் திகதியன்று பகடிவதைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், 18 மாணவிகள் மற்றும் 10 மாணவர்கள், பகடி வதைக்கு பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களுடன், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். புதிய மாணவர்களில் தமிழ் மாணவிகள் தலைமுடியை இருபுறமும் பின்ன வேண்டும் என்றும் ச…
-
- 1 reply
- 633 views
-
-
முதலில் சர்வதேச விசாரணை இல்லை! இப்போது உள்ளக விசாரணையும் இல்லை!! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் உள்ளக பொறிமுறையை அமைப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் 2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்குவது என்ற தீர்மானம் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியிருந்தது. அண்மையில் யாழ்ப்பாணம் வந்த இலங்கை அரசின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்தின போர்க்குற்ற விசாரணைகளுக்கு அவசியமில்லை என்று ஒரு கருத்தை தெரிவித…
-
- 0 replies
- 169 views
-
-
சிறிலங்காவில் எதிர்பாராத வரவேற்பு – சீன உயர் ஆலோசகர் வியப்பு சிறிலங்காவில் தாம் எதிர்பார்த்ததை விடவும் பெரியளவிலான வரவேற்பு அளிக்கப்பட்டதாக, சீன மக்கள் அரசியல் ஆலோசனை சபைக்கான தேசிய குழுவின் த லைவர் யூ செங் ஷெங் வியப்புடன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் முடிவிலேயே இவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். சிறிலங்காவில் யூ செங் ஷெங் 80 பேர் கொண்ட வர்த்தகக் குழுவுடன் இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டிருந்தார். இதன் போது சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்டோரைச் சந்தித்து, அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட சீனாவின் பல பில்லியன் டொலர் முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பாக பேச்சுக்களை நடத்தியிருந்தார். அம்பாந்தோட்டை…
-
- 0 replies
- 331 views
-
-
கடற்படைத் தலைமையகத்தில் தேடுதல் நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிவான் உத்தரவு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான, கடற்படை அதிகாரியைக் கைது செய்வதற்கு சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் தேடுதல் நடத்துமாறு, கோட்டே நீதிவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார். 11 பேர். கடத்தல் தொடர்பான வழக்கு கோட்டே நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கொமாண்டர்…
-
- 0 replies
- 273 views
-
-
தமிழ் பொலிஸாருக்கு சிங்கள டிப்ளோமா -செல்வநாயகம் கபிலன் பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டுள்ள தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 1 வருட கால சிங்கள டிப்ளோமா பயிற்சி நெறி, காங்கேசன்துறை பொலிஸ் பயிற்சி் கல்லூரியில் சனிக்கிழமை (09) ஆரம்பிக்கப்பட்டது. வடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு, முதற்கட்டமாக இப் பயிற்சி நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடமாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இப் பயிற்சிநெறி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் யுத்தத்தின் பின், பொலிஸ் சேவையில் இணைத்து கொள்ளப்பட்ட தமிழ் பொலிஸ்…
-
- 0 replies
- 280 views
-
-
யாழ். மாவட்டத்தில் இன்னமும் 5250 ஏக்கர் தனியார் காணிகள் சிறிலங்கா படையினரிடம் யாழ். மாவட்டத்தில் இன்னமும் 5250 ஏக்கர் தனியார் காணிகள் சிறிலங்கா படையினர் வசம் இருப்பதாக, யாழ். மாவட்டச் செயலர் அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். வலிகாமம் வடக்கில் சிறிலங்கா படையினர் வசமிருந்த 28.8 ஏக்கர் காணிகள் கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்ட பின்னரே அவர் இதனைத் தெரிவித்தார். காங்கேசன்துறை, மயிலிட்டிப் பகுதிகளில் உள்ள 28.8 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் மீள ஒப்படைப்பதற்காக, யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெற்றியாராச்சி, யாழ். மாவட்ட செயலரிடம் கடந்த வெள்ளிக்கிழமை கையளித்தார். 1990ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்கா படையினரின…
-
- 0 replies
- 231 views
-
-
அரசியல் பிரச்சினைக்கு தீர்வு : தமிழர் தரப்பு அரசாங்கத்துடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் : சம்பிக்க (ஆர்.யசி) நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றால் தமிழர் தரப்பு நேரடியாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும். அதை விடுத்து சர்வதேசத்தை வரவழைத்து தீர்வு காண நினைத்தால் அது ஒருபோதும் சாத்தியமற்றதாகும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். தேசிய பிரச்சினைக்கும்இ சர்வதேச அழுத்தங்களுக்கும், பொருளாதார சிக்கல்களுக்கும் தீர்வு காணும்வரையில் நல்லாட்சி அரசாங்கம் கலைக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் தேர்தல்களின் பின்னர் நல்லாட்சி அரசாங்கம் பிளவுபடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக…
-
- 0 replies
- 183 views
-