ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் இலங்கை வழங்கி வரும் ஒத்துழைப்பு வரவேற்கப்பட வேண்டியது – அவுஸ்திரேலியா சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் இலங்கை வழங்கி வரும் ஒத்ஐதுழைப்பு வரவேற்கப்பட வேண்டியது என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இலங்கை பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா, அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது இந்த விடயம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். கனிய வளங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து இந்த சந்திப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. http:/…
-
- 0 replies
- 127 views
-
-
'யாழில் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன' எஸ்.நிதர்ஸன் "யாழ். மாவட்டத்தில் மலிந்திருந்த, போதைப்பொருள் மற்றும் வன்முறைகள் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளன" என்று, யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழு கூட்டம் யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில், நேற்று (04) நடைபெற்றது. இதன்போது, யாழ். மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை கஞ்சா உள்ளிட்ட பாரிய போதைப்பொருட்களைக் கடத்தல்களை பொது மக்களின் ஒத்துழைப்புடன் கட்டுப்படுத்துவது தொடர்பில் இக்கலந்துரையாடப்பட்டது. மேலும், பொதுமக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் ம…
-
- 0 replies
- 160 views
-
-
அன்டனோவ்-32யை சுட்டுவீழ்த்திய புலிகள் இருவரின் மறியலும் நீடிப்பு வில்பத்து சரணாலயத்தில் வைத்து 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதியன்று, அன்டனோவ்-32 விமானத்தை சுட்டு வீழ்த்திய தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவரின் விளக்கமறியலும், மே மாதம் 25ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விடுதலைப்புலிகள் அமைப்பின் மெசெய்ல் பிரிவின் மற்றுமொரு உறுப்பினர், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சட்டரீதியானது என்றும், அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மஹேஷ் வீரமன் அறிவித்தார். …
-
- 0 replies
- 187 views
-
-
கேப்பாபுலவில் 394 ஏக்கர் விடுவிக்கப்படும் முல்லைத்தீவு, கேப்பாபுலவு பகுதியில் 394 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நாடாளுமன்றத்தில் நேற்று(04) தெரிவித்தார். ஈ.பி.டி.பி.யின் யாழ். மாவட்ட எம்.பி.யான டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சுவாமிநாதன் இந்த விடயத்தை குறிப்பிட்டார். கேப்பாபுலவில் தமது காணிகளை விடுவிக்குமாறு மக்கள் நடத்திவரும் தொடர் போராட்டம் தொடர்பாக டக்ளஸ் தேவானந்த இதன்போது கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் சுவாமிநாதன், “கேப்பாபுல…
-
- 0 replies
- 208 views
-
-
சிறுவர் வைத்தியசாலை இணுவிலில் அமைக்கப்படும் வட மாகாணத்துக்கான சிறுவர் வைத்தியசாலையை இணுவிலில் அமைப்பதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அனுமதியளித்துள்ளார்.இரு நாட்கள் விஜயமாக நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, நேற்றைய தினம் இணுவில் மட்லியோட் வைத்தியசாலை அமைந்துள்ள நிலத்தை பார்வையிட்டு சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கான அனுமதியை வழங்கினார். ஆயிரம் மில்லியன் ரூபாயில் அமைக்கப்படவுள்ள இச்சிறுவர் வைத்தியசாலைக்காக தென்னிந்திய திருச்சபை தனது கட்டுப்பாட்டில் உள்ள மட்லியோட் வைத்தியசாலை அமைந்துள்ள நிலப்பரப்பில் ஐந்தரை ஏக்கர் நிலத்தை அன்பளிப்பாக வழங்கவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. சிறுவர் வைத்தி…
-
- 2 replies
- 342 views
-
-
புலம்பெயர் இளம் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஈஸ்டாம் (East Ham) பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வேவினி-சபோக் (Waveney- Suffolk) பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரை சந்தித்து இலங்கையின் போக்கு மற்றும் அதன் மறைமுகமான தோற்றப்பாடு என்பவை தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். புலம்பெயர் இளம் அரசியல் செயற்பாட்டாளர்களான பரேஸ்யேசுராசன் ராஜதுரை, ரமேஸ்கண்ணா பரஞ்சோதி, நகுலேஸ்வரன் சிவதீபன் மற்றும் பிரசன்னாஇரட்ணவேல் ஆகியோரே இலண்டன் ஈஸ்டாம் (East Ham) பாராளுமன்ற உறுப்பினரான ஸ்டீபன் ரிம்ஸ் (Stephen Timms) மற்றும் வேவினி-சபோக் (Waveney- Suffolk) பாராளுமன்ற உறுப்பினரான பீற்றர் ஆல்டோஸ் (Peter Aldous) ஆகிய இருவரையும் சந்தித்துள்ளனர். இதேவேளை இலங்கை அரசாங்கம் எவ்வகையிலான மனித உரிமைமீறல்க…
-
- 0 replies
- 293 views
-
-
வவுனியா - பாலமோட்டையில் வசித்து வரும் முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் உதவி வழங்கப்பட்டுள்ளது. குறித்த உதவி திட்டம் மொன்றியல் துர்கை அம்மன் ஆலய 6ம் திருவிழா உபயகாரர்களால் இன்று(04) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்போது, ஒரு லட்சத்து எழுபதாயிரம் ரூபா பெறுமதியான நல்ல இன மாடு இரண்டு மற்றும் 20,000 பணமும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1998ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து 2008 ஆம் திகதி 06 ஆம் திகதி 22 ஆம் திகதி இராணுவத்தினரிடம் சரணடைந்து பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து 2017.02.22ம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இரு சகோதரர்கள் அவரின் ஒரு சகோதரர் முன்னாள் விடுதலைப்ப…
-
- 0 replies
- 334 views
-
-
இலங்கை இராணுவத்தின் முக்கிய பதவியொன்றுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து யஸ்மின் சூக்கா கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின் போது இராணுவத்தின் 58வது படைப்பிரிவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார். குறித்த படைப்பிரிவு பெருமளவான போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்ததாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் சவேந்திர சில்வா இராணுவத்திலிருந்து இராஜதந்திர சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டார். ஐக்கிய நாடுகள் சபைக்கான வதிவிடப் பிரதிநிதி பதவி அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இராணுவத்தின் எஜுடன்ட் ஜெனரல் எனப்படும் இராணுவத் தலைமையக பிரதம நிர…
-
- 0 replies
- 477 views
-
-
யாழ். மாவட்டத்தில் பொலிஸார் வசம் உள்ள காணிகள், வீடுகள் மற்றும் உணவகங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில், பொலிஸார் வசம் உள்ள ஒரு உணவகத்தினை குறுகிய காலத்திற்குள் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க பொலிஸார் இணங்கியுள்ளனர். யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம் இன்று யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவகம் மற்றும் காங்கேசன்துறையில் மக்களுடைய வீடுகள், பொதுமக்களின் காணிகள் போன்றன பொலிஸாருடைய பயன்பாட்டில் தொடர்ந்தும் இருக்கின்றன. இந்த நிலையில், பொலிஸாரிடம் உள்ள உணவகங்கள், வீடுகளை உரிம…
-
- 0 replies
- 330 views
-
-
எமது இளைஞர் யுவதிகள் அரச உத்தியோகம் தான் கதி என்று இல்லாமல் எமக்குக் கிடைக்கக் கூடிய வளங்களைக் கொண்டு உற்பத்திகளை ஊக்குவிப்பதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்த உற்பத்தியாளர்களாகவும் வருமானத்தை அதிகம் பெறுபவர்களாகவும் மாறலாம் என வடக்கு முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வேலணைப் பிரதேச செயலகப் பிரிவில் மண்கும்பான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உற்பத்திப் பொருட்களை சந்தைப் படுத்துவதற்கான விற்பனை நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு உரையாற்றிய முதல்வர், தமது உழைப்பின் உற்பத்தியில் தம் வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்தும் எம் மக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப படுத்துவதற்கான விற்பனை நிலையமொன்று இங…
-
- 0 replies
- 344 views
-
-
சுமணனை தாக்கவோ அச்சுறுத்தவோ இல்லை. சித்திரவதை வழக்கில் எதிரிகள் சாட்சியம். சந்தேக நபரான சுமணனை நான் தாக்கவோ காயமேற்படுத்தவோவில்லை என முன்னாள் சுன்னாக காவல்நிலைய பொறுப்பதிகாரி சிந்திக்க பண்டார யாழ்.மேல் நீதிமன்றில் வாக்கு மூலம் அளித்துள்ளார். சுன்னாகம் காவல் துறையினரால் கொள்ளை குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட ஸ்ரீஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞர் காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை யாழ் மேல் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. குறித்த வழக்கு இன்றைய தினம் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது , இன்றைய தினம் எதிரிகள் தமது வாக்கு மூலத்தை எதிரி கூண்டில் இர…
-
- 0 replies
- 252 views
-
-
புங்குடுதீவு மாணவி கொலை பத்தாவது சந்தேகநபரின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பரிசீலனையில் உள்ளது. இறுதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்றில் மாணவி கொலை வழக்கில் கைது செய்யபப்ட்டு உள்ள சந்தேக நபரின் விளக்கமறியல் காலத்தை நீடிக்க கோரிய வழக்கு விசாரணை இன்றைய தினம் நீதிபதி மா .இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது, பத்தாவது சந்தேக நபரான ஜெயவர்த்தன ராஜ்குமார் மன்றில் முற்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் சார்ப…
-
- 0 replies
- 482 views
-
-
மஹிந்த ராஜபக்ஷ கண்ணீர் சிந்துவார் : பிரதமர் ரணில் விக்ரமசிங்க (க.கமலநாதன்) 2018 ஆம் ஆண்டில் வரவிருக்கும் வெசாக் பண்டிகை தினத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கிரிபத்கொடையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இதற்கு முன்னர் ஒரு தடவை நான் வெளிநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்பத்தில் ஆட்சியை மாற்றி காட்டுகிறேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவால் விடுத்திருந்தார். ஆனால் அவர் அதனை செய்யவ…
-
- 0 replies
- 252 views
-
-
நாட்டை புதிய திசையில் கொண்டு செல்வதாக ஜனாதிபதிக்கு ஜேர்மனி பாராட்டு மனிதர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தைப் பலப்படுத்தி, நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பி நாட்டை புதிய திசையில் கொண்டு செல்ல ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டுவதாக ஜேர்மானிய பாராளுமன்ற சபாநாயகர் நோபட் லம்மர்ட் (Norbert Lammert) தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜேர்மானிய பாராளுமன்ற சபாநாயகர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியை சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஜனநாயக நிறுவனங்களை நிறுவ ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எ…
-
- 1 reply
- 223 views
-
-
38 இந்திய மீனவர்களை விடுவித்தது இலங்கை! (படங்கள்) இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 38 பேர் இன்று (04) இலங்கை - இந்திய கடல் எல்லைப் பகுதியில் வைத்து இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் உள்ள இலங்கை - இந்திய சர்வதேச கடல் எல்லையில் வைத்தே இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் கடந்த மாதம் 20 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்டனர். சில நாட்களுக்கு முன்னால் இலங்கை 136 இந்திய மீனவர்களை விடுவித்திருந்த நிலையில், மொத்தமாக இவ்வருடத்தில் 174 இந்திய மீனவர்களை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளது. …
-
- 0 replies
- 237 views
-
-
நீதிச் சேவை ஒன்றியத்தின் தீர்மானங்கள் நீதிமன்றை அவமரியாதை செய்யும் வகையில் அமைந்துள்ளது நீதிச் சேவை ஒன்றியத்தின் தீர்மானங்கள் நீதிமன்றை அவமரியாதை செய்யும் வகையில் அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நீதிச் சேவை ஆணைக்குழுவினால் மட்டுமே உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை நீக்க முடியும் எனவும் அரசியல் சாசனத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் ஒழுக்காற்று அடிப்படையில் மட்டுமே இவ்வாறான பரிந்துரைகளை செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீதிச் சேவை ஒன்றியம் என்பது ஓர் தொழிற்சங்கம் எனவும் அந்த தொழிற்சங்கம் நீதிபதி ஒருவரை பணி நீக்குமாறு அழுத்தம் கொடுப்பதும் தீர்மானம் நிறைவேற்ற…
-
- 0 replies
- 210 views
-
-
ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை மே தினத்தன்று முற்றுகையிடப்படும் : கூட்டு எதிரணி அறிவிப்பு (க.கமலநாதன்) மே மாதம் முதலாம் திகதி கூட்டு எதிரணியின் தொழிலாளர் தின நிகழ்விற்காக ஒன்றுகூடும் பெருந்தொகையிலான மக்களின் உதவியுடன் ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரிமாளிகை ஆகிய இடங்களை முற்றுகையிடப் போவதாக கூட்டு எதிரணியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எமது மேதின கூட்டத்திற்கு மக்கள் குறைவாகவே வருவார்கள் என்ற எண்ணத்தில் அதனை பார்த்து சிரிக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். எனவே அவர்களை அழவைக்கும் அளவிற்கு பாரிய ஆதரவாளர்கள் தொகையினை ஒன்றுதிரட்டி வரலாறு காணாத மே தினக் க…
-
- 0 replies
- 278 views
-
-
வித்தியா படுகொலை வழக்கின் 10 ஆவது சந்தேக நபரது பிணை மனு மீது இன்று விசாரணை (ரி.விரூஷன்) யாழ்ப்பாணம், புங்குடுதீவில் பாலியல் வல்லுறவின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியான சிவலோக நாதன் வித்தியாவின் 10வது சந்தேக நபரின் பிணை மனு இன்றைய தினம் பரிசீலிக் கப்படும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். குறித்த மாணவி கொலை வழக்கின் பத்தாவது சந்தேக நபரான ஜெயவர்த்தனா ராஜ்குமார் என்பவரது, விளக்கமறியல் காலத்தை நீடிப்பதற்கான திகதியிடுவதற்கு யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த சந்தேகநபர் தாம் குற்றம் செய்யாது தொடர்ந்து தடுத்து வைக் கப்பட்டு உள்ளேன். இறந்த மாணவிக்க…
-
- 0 replies
- 181 views
-
-
இடைக்கால அறிக்கையில் காலதாமதம் வேண்டாம் புதிய அரசியல் அமைப்பு விவகாரம் தொடர்பில் கூட்டமைப்பு வலியுறுத்தல் (ஆர்.ராம்) அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் இது வரையில் கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்ட விடயங்களை உள்ளடக்கிய இடைக்கால அறிக்கையினை வெளியிடுவதில் எவ்விதமான கால தாமதங்களும் அவசியமில்லை. இந்த விட யத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாடுகளின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்கையி…
-
- 0 replies
- 150 views
-
-
வடக்கு நிலை குறித்து ஐரோ.ஒன்றியம் ஆராய்வு முதலமைச்சருடன் நேற்றுச் சந்திப்பு வட மாகாண சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி போல்கோட் பீறி வலியுறுத்தியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி போல் கோட் பீறி மற்றும் வட மாகாண முதலமைச்சருக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகவிய லாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், வடக்கு மாகாண சபையின் ஆலோசனைகளை பெறாத…
-
- 0 replies
- 247 views
-
-
நல்லிணக்க முயற்சிகளை குழப்ப ரணில் உத்தரவாம் ஐ.நா.வுடன் தொடர்புடைய அமைப்புகளின் உதவியுடன் சந்திரிகா குமாரணதுங்க மற்றும் மனோ கணேசன் உள்ளிட்டோரால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க விழிப்புணர்வுத் திட்டங்க ளைக் குழப்பும் உத்தரவு கொழும்பு அரசின் தலைமை அமைச்சரால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. புதிய அரசமைப்பு மற்றும் நல்லிணக்கச் செயற்றிட் டங்கள் தொடர்பாக பன்னாட்டு அமைப்புகளிடம் இருந்து எந்தவொரு நிதியையும் பெறக்கூடாது என்று தலைமை அமைச்சின் செயலர் சமன் ஏக்கநாயக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.…
-
- 0 replies
- 271 views
-
-
‘பௌத்தர்களுக்கு உணர்வு இல்லை’ “கண்டி, ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக உள்ள வீதியைத் திறப்பதற்கு முயன்றபோது, மாகாண சபையைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர் ஒருவரே, முதலாவதாக எதிர்ப்பினை வெளியிட்டார். அவருக்கு இருக்கும் உணர்வு கூட, பௌத்தர்களுக்கு இல்லை” என்று, முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விமலஜோதி தேரரின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கொட்டாஞ்சேனையில் உள்ள விஹாரையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “பௌத்தம் தொடர்பான புத்தகங்கள், ஒருகாலத்தில் தேடிக்கொள்ள முட…
-
- 0 replies
- 198 views
-
-
ஆஸி அமைச்சர் வடக்குக்குச் செல்வார் அவுஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசிபிக் அமைச்சரான செனட்டர் கொன்செட்டா பியரவன்ரி-வெல்ஸ், மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு, இலங்கைக்கு இன்று (04) வருகைதரவுள்ளார். அவர், ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர், பல்வேறான தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, 2009 ஆம் ஆண்டின் பின்னர் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் புனர்வாழ்வுக்கென அவுஸ்திரேலியா 250 மில்லியனுக்கும் அதிகமான அவுஸ்திரேலிய டொலர்களை வழங…
-
- 0 replies
- 183 views
-
-
ரிஷாட் இராஜினாமா? கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தன்னுடைய அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்வதற்குக் கலந்தாலோசித்து வருவதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகிறது. வில்பத்து சரணாலயத்துக்கு வடக்காக உள்ள காடுகளில் நான்கு காடுகளை, பாதுகாப்பான சரணாலயங்களாக பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2017 மார்ச் 24ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்பை தெரிவித்தே, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தன்னுடைய அமைச்சுப் பதவியைத் துறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. இதேவேளை, சர்ச்சைக்குரிய இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், பேச்சுவார்த்தை நடத்துவ…
-
- 0 replies
- 335 views
-
-
மக்களின் காணிக்கு பாதிப்பில்லாத வகையில் நாட்டுக்குள் படையினர்கள் எங்கேயும் இருக்கலாம் - பாதுகாப்பு செயலாளர் கருணாசேன பொது மக்களின் தனிப்பட்ட காணிக்கு பாதிப்பில்லாத வகையில் எமது நாட்டின் படையினர்கள் எமது நாட்டுக்குள் எங்கேயும் இருக்கலாம்” - இவ்வாறு பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். கேப்பாப்பிலவு மக்களின் காணி மீட்பு விடயம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியை ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் பொதுச் செயலாளர் கலாநிதி குமரகுருபரன் மற்றும் நிர்வாக செயலாளர் என்.ரவிகுமார் ஆகியோர் நேற்று காலை அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதன்போதே, பாதுகாப…
-
- 0 replies
- 258 views
-