ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
அம்பாந்தோட்டையை சீனாவுக்குக் கொடுப்பது இந்தியாவுக்கு ஆபத்து எச்சரிக்கிறார் பார்த்தசாரதி சென்னையில் கடந்த சனிக்கிழமை சென்னை அனைத்துலக நிலை யத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய, இந்தியாவின் முன்னாள் மூத்த இராஜதந்திரியான ஜி. பார்த்தசாரதி அங்கு மேலும் தெரிவித்ததாவது: பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்களில் சீனாவுடனான தொடர்புகள் இந்தியாவுக்கு முக்கியமானது. தனது இருப்பை வலுப்படுத்துவதற்காகச் சீனா பெரும் பொருளாதார முதலீடுகளின் மூலமாக இந்தியாவைச் சுற்றி வளைத்துள்ளது. சீனாவின் நிதியில் பெரும் உட்கட்டமைப்பு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்…
-
- 2 replies
- 421 views
-
-
இன்று விஹாரை ஒன்றை அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது மஹிந்த ராஜபக் ஷ கூறுகிறார் (ப.பன்னீர்செல்வம்) சோழ மன்னர்கள் இலங்கையை ஆக்கிரமித்த காலகட்டத்தில் பௌத்த தர்மத்தை அழிக்க முனைந்தனர். ஆனால் எமது சந்ததியினர் தர்மத்தை பாதுகாத்தனர் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட எம்.பி.யுமான மஹிந்த ராஜபக் ஷ இன்று விஹாரையோ புத்தர் சிலையோ அமைக்க முடியாத நிலை தோன்றியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். காரணம் அதற்கு சீமெந்து எங்கிருந்து கிடைத்தது என விசாரிக்கும் ஆட்சியாளர்கள் நாட்டில் உள்ளனர். இவர்களும் தர்மத்திற்கு எதிராகவே செயற்படுகிறார்கள் என்றும் மஹிந்த ராஜபக் ஷ கூறி…
-
- 1 reply
- 201 views
-
-
மதுபான தொழிற்சாலைகள் அவசியமானவையா ? "மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாதத்துக்கு மது மற்றும் புகைத்தலுக்காக 41 கோடியே 36 இலட்சத்து 99 ஆயிரத்து 680 ரூபா செலவிடப்படுவதாக புள்ளிவிபர தகவல்கள் குறிப்பிடுகின்றன. எனவே, சிறுபான்மை இன மக்கள் வாழும் பகுதிகளை குறிவைத்து இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது பல்வேறு சந்தேகங்களுக்கு காரணமாகியுள்ளது" மூன்று தசாப்த கால போர் முடிவடைந்து தற்போது பொருளாதாரம் அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்கில் இலங்கை தற்போது பல்வேறு நாடுகளுடன் இணைந்து அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இவை காலத்தின் கட்டாயமாகும். ஏனென்றால் உள் நாட்டு போர் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உயிர்களை மாத்திரம் சிதைக்க வில்லை. பல தசாப்தங்…
-
- 0 replies
- 276 views
-
-
சவேந்திர சில்வாவிற்கு இராணுவத்தில் உயர் பதவி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு இராணுவத்தில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று ஆணையாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இலங்கையின் 28ம் இராணுவ ஆணையாளர் நாயகமாக சவேந்திர கடமைகளைப பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 58ம் படையணியின் கட்டளைத் தளபதியாக சவேந்திர சில்வா கடமையாற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/22910
-
- 0 replies
- 220 views
-
-
பற்றுறுதியில் பின்வாங்கினால் நன்மதிப்பை இழக்க நேரிடும் "எதிர்கால சந்ததியினர் பாதுகாப்புடனும் அமைதியும் சமாதானமுமான இலங்கையில் வெற்றிகரமாக வாழவேண்டுமானால் புதிய அரசியல் யாப்பினை அமுல்படுத்துவது மட்டுமே நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒரே வழி. அரசாங்கம் அதன் பற்றுறுதியில் பின்வாங்குமாக இருந்தால், சர்வதேச சமூகத்திற்குள் நன்மதிப்பை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ள உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவ்வாறான சமயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசுக்கு கிடைத்த அதே நிலையே இந்த அரசாங்கத்திற்கும் ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய அரசாங்கத…
-
- 0 replies
- 265 views
-
-
பாராமுகமாகவிருக்கும் மட்டக்களப்பு அபிவிருத்தி ! கைவிடப்பட்ட நிலையிலிருக்கும் பல மில்லியன் ரூபா பெறுமதியிலான கட்டிடங்கள் உள்ளது என பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது ..
-
- 1 reply
- 239 views
-
-
வவுனியாவில் கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது வவுனியாவில் நேற்று (31) பிற்பகல் மத்திய பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் இராணுவ வீரர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று பிற்பகல் பஸ் நிலையத்தில் தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் 100 கிராம் 700 மில்லி கிராம் கஞ்சாவினை தன்வசம் வைத்திருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இரணுவ வீரர் ஏற்கனவே கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்து பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த இராணுவ வீரர் விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/18580
-
- 0 replies
- 215 views
-
-
யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக இம்முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக்கூட்டமைப்பு வரவேற்பளித்தமை தொடர்பில் வடக்கு, கிழக்கிலும் சர்வதேச மட்டத்திலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. வடக்கு மாகாணத்தில் ஒரு சில அரசியல் கட்சிகளும் சிவில் சமூக நிறுவனங்களும் மனித உரிமை அமைப்புக்களும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் இந்த ஆதரவு வழங்குவதற்கான தீர்மானத்தை விமர்சித்திருந்தன. அதாவது அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதன் மூலம் மக்களுக்கு நீதி வழங்கும் செயற்பாட்டிலிருந்து விலகிச் செல்வத…
-
- 0 replies
- 279 views
-
-
யாழில் வங்கியொன்றின் திருகுதாளம் வெளிப்பட்டது – காதோடு காதாக அராலியூர் குமாரசாமி:- வங்கியில் கணக்குள்ளவர்கள் ஏ.ரி.எம் காட்டை வங்கியில் பதிவு செய்து எடுத்தால் தேவைக்கேற்ப எந்த நேரமும் எங்கேயும் இலகுவாக ஏ.ரி.எம் நிலையத்தினூடாக பணத்தை எடுக்க முடியும். அதனால் தான் இன்று மக்கள் எல்லோரிடமும் ஏ.ரி.எம் காட் கையில் இருக்கிறது. இதனால் எந்த நேரமும் ஏ.ரி.எம் நிலையம் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அல்லது கணக்குப் புத்தகத்தைக் கொண்டு வந்து வங்கியில் பணத்தை எடுத்துப் போக அரை நாள் ஓடிவிடும். அடுத்தது வங்கி திறந்திருக்கும் நேரம் தான் பணத்தை எடுக்க முடியும். எந்த நேரமும் பணத்தை எடுக்க முடியாது. ஏ.ரி.எம் வசதி வந்ததால் பணத்தை எடுப்பதற்காக நேரத்தை ஒதுக்க வேண்டியத…
-
- 0 replies
- 391 views
-
-
அவதானம் ; நாட்டில் புதுவகையான வைரஸ் காய்ச்சல் - சுகாதார அமைச்சு அறிவிப்பு இன்புளுவன்சா ஏ.எச்.1. என். 1 (பன்றி) காய்ச்சலுக்கு சமமாக மற்றுமொரு வகையான வைரஸ் காய்ச்சல் தற்போது நாடு முழுவதும் பரவிக் கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த உரையாற்றிய போதே சுகாதாரப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஜயசுந்தர பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பன்றி காய்ச்சலுக்கு ஏற்படும் நோய் அறிகுறிகளை ஒத்த வகையில் புதுவகையான நோய் ஒன்று நாட்டில் பரவி வருகின்றது. இந்த வகை…
-
- 0 replies
- 206 views
-
-
வடக்கை தெற்கு உணர்ந்துள்ளது : யாழ். மாவட்ட சு.க. அமைப்பாளர் அங்கஜன் Published by Priyatharshan on 2017-04-01 10:11:30 தெற்கு இளைஞர்களுக்கு இருக்கும் பிரச்சினையே வடக்கு இளைஞர்களுக்கும் இருக்கின்றது. அதனால்தான் வடக்கு இளைஞர்கள் ஆயுதமேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பதை தெற்கில் இருப்பவர்கள் தற்போது உணர்ந்துள்ளனர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட அமைப்பாளருமான இராமநாதன் அங்கஜன் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய இளைஞர் சம்மேளனம் நாளை ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாச அரங்கில் இடம்பெறவுள்ளது. நடைபெறவுள்ள சம்மேளனம் தொடர்பாக ஊடகங்கள…
-
- 0 replies
- 410 views
-
-
கேப்பாபுலவு காணிகள், மே 15க்கு முன் விடுவிப்பு கேப்பாபுலவில் அமைந்துள்ள 279 ஏக்கர் காணிகள், எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி விடுவிக்கப்படுமென, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். கடந்த வாரம், அமைச்சருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாகவே, கேப்பாபுலவில் உள்ள 279 ஏக்கர் காணியை, மே 15ஆம் திகதிக்கு முன்னர் விடுவிப்பதாக, பாதுகாப்பு அமைச்சு உறுதியளித்துள்ளது. அந்தவகையில், கேப்பாபுலவிலிருந்து 248 ஏக்கர் காணியும் சீனியாமோட்டையிலிருந்து 31 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளது. அத்…
-
- 1 reply
- 176 views
-
-
மாவையை கண்டவுடன் கதறியழுத காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உங்களிடம் மட்டுமே உரிமையுடன் கேட்க முடியுமெனவும் தெரிவிப்பு (கே .குமணன்) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் தீர்வின்றி தொடர்கின்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கடந்த 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் எந்தவித சாதகமான பதில்களும் அற்றநிலையில் தொடர்ந்து செல்கின்றது. இந்த நிலையில் தொடர்ந்து போராடிவரும் காணாமல் ஆக்கப்படடோரின் உறவினர்களை முல்லைத்தீவுக்கு நேற்று விஜயம் செய்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உ…
-
- 0 replies
- 178 views
-
-
மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் உறுதி (எம்.சி.நஜிமுதீன்) வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அப்பிரதேச மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் தீர்வை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. அபேகோன் முஸ்லிம் சிவில் அமைப்புகளிடம் உறுதி யளித்துள்ளார். மேலும் அப்பிரதேசம் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் அதனை மேற்கொள்ளப்போவதில்லை எனவும் அவர் உறுதியளித்துள்ளார். …
-
- 0 replies
- 135 views
-
-
கொழும்பு நிதி நகரத் திட்டத்தை இந்தியா எதிர்க்கவில்லை – சீன நிறுவனம் தெற்காசியாவில் மிகவும் பொருத்தமான வணிகக் கேந்திரமாக சிறிலங்கா தலைநகர் கொழும்பு விளங்குவதாக கொழும்பு நிதிநகரத் திட்டத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியான லியாங் தௌ மிங் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனத்தினால் 1.4 பில்லியன் டொலர் முதலீட்டில், மேற்கொள்ளப்படும், கொழும்பு நிதி நகரத் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக விளக்கமளித்தார். ‘கொழும்பு தெற்காசியாவிலேயே மிகவும் சுத்தமான, வாழ்வதற்கேற்ற நகரமாக மாத்திரம் இருக்கவில்லை. தெற்காசியாவில் உள்ள எந்தவொரு நாட்ட…
-
- 0 replies
- 283 views
-
-
சர்வதேச விசாரணையின் மூலம் தீர்வுகாண அரசாங்கம் தயாரில்லை மோசமான படிப்பினையை நாம் பெற்றுள்ளோம் என்கிறார் அமைச்சர் மஹிந்த சமரசிங்க (ஆர்.யசி) சர்வதேச விசாரணையின் மூலம் இலங்கை விவகாரங்களில் தீர்வு காண அரசாங்கம் ஒருபோதும் தயாராக இல்லை. சர்வதேச கண்காணிப்பாளர்களை நாட்டில் அனுமதித்து கடந்த காலத்தில் மோசமான படிப்பினை பெற்றுள்ளோம் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் சிவில் அமைப்புகளின் பங்களிப்பும் அவசியமானது. மாற்றுக் கருத்துக்களும் முன்வைக்கும்போதே உண்மைகள் வெளிவரும் எனவும் அவர் தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தி…
-
- 1 reply
- 165 views
-
-
அமைச்சுக்கள் தொடர்பில் இணக்கமில்லை – அமைச்சரவை மாற்றம் மீண்டும் ஒத்திவைப்பு சிறிலங்காவின் கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐதேகவுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுவதில் இழுபறிகள் காணப்படுவதால் அமைச்சரவை மாற்றம் மீண்டும் காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் சிங்கள- தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் சிறிலங்கா அமைச்சரவையில் மாற்றங்க்ள இடம்பெறலாம் என்று செய்திகள் வெளியாகின. ஏற்கனவே அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பல தடவைகள் செய்திகள் வெளியான போதும், இதுவரையில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், புத்தாண்டுக்குப் பின்னர் இடம்பெறவிருந்த அமைச்சரவை மாற்றமும், பிற்போடப்பட்…
-
- 0 replies
- 159 views
-
-
டுபாய் விமானத்தின் கழிவறையில் 14 மில். ரூபா பெறுமதியான ஹெரோயின் (எம்.எப்.எம்.பஸீர்) 14 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட 1.4 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது. டுபாய் விமானத்தின் கழிவறையில் இருந்தே மிகப் பாதுகபபாக பொதி செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த போதைப் பொருள் மீட்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் பராகிரம பஸ்நாயக்க கேசரிக்கு தெரிவித்தார். எவ்வாறாயினும் இந்த போதைப் பொருள் தொடர்பில் அந்த விமானத்தில் பயணம் செய்துள்ள இரு பாகிஸ்தானிய…
-
- 0 replies
- 245 views
-
-
ஐ.நா. அமர்வின் பக்க நிகழ்வுகளில் கலந்துக்கொண்ட அனைவரும் புலிகளுக்கு ஆதரவாகவே பேசினார்கள் (க.கமலநாதன்) ஐக்கிய நாடுகள் சபை அமர்வின் பக்க நிகழ்வுகளில் கலந்துக்கொண்டிருந்த அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்ளின் பிரதிநிதிகளும் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதுடன் இலங்கை இராணுவம் போர் குற்றம் இழைத்தாகவே குற்றம் சாட்டினார்கள் என ரியர் அத்மிரால் சரத் வீரசேகர தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை இராணுவம் யுத்த குற்றம் இழைத்தாக கொண்டு வந்த அறிக்கை முழுமையாக பொய்யான காரணங்களை உள்ளடக்கியெத சுட்டிக்காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார். பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின…
-
- 1 reply
- 363 views
-
-
சிங்களவர் வசமாகும் எல்லைக் கிராமங்கள் வடக்கு மாகாணத்தின் எல்லை கிராமங்கள் பல தினமும் சிங்களவர்களிடம் பறிபோய் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சிவநேசன், இதனை தடுப்பதற்கு வடக்கு மாகாண சபை யின் அமைச்சரவை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். மாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது உறுப்பினர் ரவிகரனால் முல்லைத்தீவு நாயாறு கடல் நீரேரி பகுதியில் சிங்கள மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபடுவதை தடை செய்யுமாறு கோரி பிரேரணை ஒன்றை முன்மொழிந்திருந்தார். இந்த பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்…
-
- 0 replies
- 189 views
-
-
போராட்டம் மூலம் தமது சொந்த நிலத்துக்கு சென்ற பிலக்குடியிருப்பு மக்களின் குறைகளை கேட்டறிந்தார் பாராளுமனர் உறுப்பினர் மாவை ஒரு மாதகால தொடர் போராட்டத்தின் மூலம் தமது சொந்த நிலங்களை விமானப்படையினரிடம் இருந்து மீட்டு மீள்குடியேறி வாழ்ந்துவரும் கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களை இன்றையதினம் யாழ் மாவட்ட பாராளுமனர் உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா சந்தித்து அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டார். இன்றையதினம் முல்லைத்தீவு கேப்பாபுலவு மற்றும் முல்லைத்தீவில் போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்திப்பதற்காக முல்லைத்தீவுக்கு வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் இந்த மக்களிடமும் சென்று அவர்களை சந்தித்து கலந்துரையாடிய…
-
- 1 reply
- 265 views
-
-
பொது மன்னிப்பை வழங்க கோரிக்கை யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வின் போது ஏற்பட்ட அசம்பாவித சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் பொது மன்னிப்பை வழங்க வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பில் மாணவர் ஒன்றியத்தினரால் நேற்று ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட செய்திக் குறிப்பு வருமாறு, அண்மையில் இடம்பெற்ற கலைப்பீட முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வின் (11.03.2017)போது மாணவர்கள், விரிவுரையாளர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாட்டில் ஈடுபட்டதன் காரணமாக கலைப்பீட மாணவர்க…
-
- 0 replies
- 160 views
-
-
வாக்குறுதிகளை நிறைவேற்றாது, அநீதிகள் இழைக்கப்படுவதால்தான் பன்னாட்டிற்கு அடிபணியும் நிலையில் இருக்கிறோம் - எதிர்க்கட்சித் தலைவர் பன்னாட்டிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது, அநீதிகள் இழைக்கப்படுவதால், நாம் பன்னாட்டிற்கு அடிபணிந்து இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தர் குறிப்பிட்டுள்ளார். தேசிய இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையில் ஆரம்பமான ‘யொவுன்புர’ இளைஞர் முகாமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், இந்த நிலைமையிலிருந்து நாம் தற்போது படிப…
-
- 1 reply
- 247 views
-
-
உண்ணாவிரதமிருந்த மாணவர்களில் இருவர் மயக்கம் -எஸ்.திருச்செந்தூரன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்களால் வியாழக்கிழமை (30) முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற உண்ணாவிரத போராட்டத்தில், இரண்டு மாணவர்கள் மயக்கமடைந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (31), யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்காம், மூன்றாம் வருடங்களைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு மயக்கமடைந்தவர்களாவர். முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வின் போது நிகழ்ந்த அசம்பாவிதங்களுக்குப் பொறுப்பானவர்கள் எனத் தெரிவித்து கலைப்பீடம் கலைக்கப்பட்டதுடன், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர்கள் உள்ளிட்ட 13 பேரு…
-
- 2 replies
- 518 views
-
-
119 ஆவது ஜனன தினம் எஸ்.நிதர்ஸன் தந்தை செல்வாவின் 119 ஆவது ஜனன தின நிகழ்வுகள், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்குக்கு முன்னால் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில், இன்று (31) நடைபெற்றன. தந்தை செல்வாவில் உருவச்சிலைக்கு தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா மலர் மாலை அணிவித்தார். அவரைத் தொடர்ந்து வட மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் வ.கமலேஸ்வரன் மலர் மாலை அணிவித்தார். இதன் பின்னர் தந்தை செல்வாவின் சமாதிக்கு மாவை சேனாதிராசா உட்பட தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அரசியல் பிரமுகர்கள்; அஞ்சலி செலுத்தியிருந்தனர். மேலும் கட்சி ஆதரவாளர்கள்; பலரும் கலந்து கொண…
-
- 0 replies
- 170 views
-