ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கற்பிக்க தனியான கல்வி பிரிவுகள் : சந்திரிகா குமாரதுங்க (க.கமலநாதன்) மாணவர்களிடையே ஓருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் போன்ற பண்புகளை வளர்பதை நோக்கமாகக் கொண்டு புதிய கல்விப் பிரிவொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் நல்லிணக்க செயலணியின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார். பண்டாராநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தில்ப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாணவர்களிடையே ஓருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் போன்ற பண்புகளை வளர்பதை நோக்கமாகக் கொண்டு புதிய கல்விப் பிரிவொன்று ஆரம…
-
- 0 replies
- 175 views
-
-
கால அவகாசம் வழங்கப்பட்டமையானது இலங்கைக்கு மிகவும் ஆபத்தானது : கலாநிதி தயான் ஜெயதிலக (ஆர்.யசி) ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் பொறுப்புக் கூறல் விடயத்தில் மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதானது இலங்கைக்கு மிகவும் ஆபத்தானதுடன் இந்தப் பயணம் இறுதியில் சர்வதேச விசாரணையில் வந்து முடியும் என கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்தார். இலங்கைக்கு எதிரான முதல் பிரேரணையில் நிராகரிக்கபட்ட அனைத்தையும் இரண்டாம் கட்டத்தில் நிறைவற்றவும் புலிகள் எதிர்பார்க்கும் அனைத்தையும் பெற்றுக்கொள்ளவுமே தற்போது பொறுப்புக் கூறல் விடயத்தில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலையிட்டு இந்த நகர…
-
- 2 replies
- 464 views
-
-
தமிழ் மக்கள் பொறுமையின் எல்லையை கடந்து விட்டனர் – TNA ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34/1 என்ற தீர்மானத்தை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றுமாறு இந்த புதிய தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டதொரு காலப்பகுதியில் தீர்மானத்தின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமென்ற நிபந்தனை வரவேற்கப்பட வேண்டியது எனவும் தெரிவித்துள்ளது. 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் …
-
- 0 replies
- 416 views
-
-
ஜனநாயகத்தை எட்டுவதற்கான இலங்கையின் அணுகுமுறை வரவேற்கப்பட வேண்டியது – ஜெர்மனி ஜனநாயகத்தை எட்டுவதற்கான இலங்கையின் அணுகுமுறை வரவேற்கப்பட வேண்டியது என ஜெர்மனி தெரிவித்துள்ளது. ஜெர்மனிய ராஜதந்திரிகள் இலங்கைக்கு செல்லவுள்ளனர். எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில்; இலங்கையின் சபாநாயகர் கரு ஜயசூரியவின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு ஜெர்மன் ராஜதந்திரிகள் இலங்கைக்கு செல்ல உள்ளனர். http://globaltamilnews.net/archives/22144
-
- 0 replies
- 342 views
-
-
கன்னங்கர பாடசாலை: இந்து சமய ஆசிரியர் ‘வாசமே’ இல்லை -ஜே.ஏ.ஜோர்ஜ் “களுத்துறை மாவட்டத்தில், மத்துகம கன்னங்கர தேசிய சிங்களப் பாடசாலையுடன் இணைந்து இயங்கி வருகின்ற தமிழ்ப் பிரிவு மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று சுட்டிக்காட்டிய யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, “அங்கு இந்துசமயப் பாடத்துக்கு ஆசிரியர் இருந்த வரலாறே இல்லை” என்றும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (23) நிலையியற் கட்டளையின் கீழ் கல்வியமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்தபோதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், “இந்தப் பாடசாலை…
-
- 2 replies
- 411 views
-
-
36 அகதிகள் நாடு திரும்பினர் கனகராசா சரவணன் இந்தியாவிலிருந்து இலங்கை அகதிகள் 36 பேர் நேற்று வியாழக்கிழமை நாடு திரும்பினர். மேற்படி 36 பேரையும், யு.என்.எச்.சி.ஆர் அமைப்பு, இரண்டு விமானங்களின் மூலம், சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு, நேற்று பிற்கல் அழைத்து வந்தது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மன்னார், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள், மும்பை மற்றும் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருந்ததாக அவ்வமைப்பு மேலும் கூறியது. மும்பையில் இருந்து 9 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரும் தமிழ்நாட்டில் இருந்து 11 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேருமாக 36 பேர், நாடு திரும்பியுள…
-
- 0 replies
- 189 views
-
-
மீனவர் பலி; கடற்படை வீரர்கள் இருவர் கைது -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் விடத்தல் தீவு கடற்பரப்பில், குள்ளா படகு மூலம் மீன் பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் கடற்படை வீரர்கள் இருவர் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர், விடத்தல் தீவு 7 ஆம் வாட்டாரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தாசன் கில்மன் (வயது39) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, “மீனவர் குள்ளா படகு மூலம் விடத்தல் தீவு கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டுள்ளார். இதன்போது, கடற்பாதுகாப்பில் ஈடுபட்ட கடற்படையினர் கடலில் படக…
-
- 0 replies
- 228 views
-
-
கொட்டாஞ்சேனை தமிழர்கள் இருவர் கடத்திக் கொலை : விசாரணைக்கு கடற்படை தளபதி இடையூறு (எம்.எப்.எம்.பஸீர்) கொட்டாஞ்சேனையில் கடந்த 2009ம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன், இரத்னசாமி பரமானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு கொலைச் செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்வதற்கு தற்போதைய கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்ர விஜே குணரத்னவின் செயற்பாடுகள் இடையூறாக உள்ளதாக குற்றப் புலனயவுப் பிரிவு இன்று நீதிமன்றுக்கு அறிவித்தது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி கொட்டாஞ்சேனையில் இருந்து வெல்லம்பிட்டிய பகுதியை நோக்கி தனது பீ.ஏ.6023 என்ற இலக்கத்தை உடைய வேனில் பயணித்த போது…
-
- 1 reply
- 402 views
-
-
ஐ.நா.வில் தமிழர்களுக்கு நீதி மீண்டும் மறுக்கப்பட்டுவிட்டது புலம்பெயர், வடக்கு,கிழக்கு, சிவில் சமூக, அரசியல் அமைப்புக்கள் கூட்டறிக்கை (ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) இலங்கை விவகாரத்தினை ஐ,நா.வின் பொதுச்சபையின் விசாரணைக்கு அனுப்ப வேண்டும். ஐ.நா பொதுச்சபை வழியே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்துவதற்கான பரிந்துரை யினை ஐ.நா . பாதுகாப்பு பேரவைக்கு வழங்க வேண்டும் என்று புலம்பெயர், வடக்கு கிழக்கு, சிவில் சமூக அரசியல் அமைப்புக்கள் கூட்டாக தெரிவித்துள்ளன. மேலும் இலங்கைத்தீவின் இனநெருக்கடிக்கு தீர்வுகாண வடக்கு கிழக்கு பகுதியிலும், புலம்பெயர் தமிழர…
-
- 0 replies
- 180 views
-
-
சர்வதேசத்திற்கு அடிபணிய போவதில்லை யுத்தக்குற்ற விசாரணையையும் நல்லிணக்கத்தையும் ஒருபோதும் ஒன்றிணைக்கவே முடியாது என்கிறார் நீதி அமைச்சர் விஜேதாஸ (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) யுத்தக்குற்ற விசாரணைகள் தொடர்பாக சர்வதேசம் எமக்கு அழுத்தம் பிரயோகிக்க முடி யாது. எமது நாட்டு மக்களின் மீது எமக் குள்ள அக்கறை சர்வதேசத்திற்கு இருக்க முடியாது. சர்வதேசம் சொல்வதற்கு எல்லாம் நாம் அடிபணிய போவதில்லை என நீதி அமைச்சர் விஜேயதாஸ ராஜபக் ஷ சபையில் உறுதிபடத்தெரிவித்தார். யுத்தக்குற்ற விசாரணையையும் நல்லிணக்கத்தையும் ஒன்றிணைக்க முடியாது. இது ரயில் தண்டவாளம் போன்றது. அவை இணையும் பட…
-
- 0 replies
- 156 views
-
-
தமிழீழத்தைப் பெற்றுக்கொள்ளவே ஐ.நா.வில் பிரேரணை தாக்கல் ஜெனிவாவில் முழங்கினார் சரத் வீரசேகர (ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) தமிழீழத்தை அடைந்து கொள்ளும் நோக்கில் புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ளும் முயற் சியே ஐ.நா.மனித உரிமை பேரவையின் பிரேர ணையாகும். இதற்கு ஐ.நா.துணைபோகக்கூடாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நேற்று ஜெனிவாவில் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ஐ.நா.மனித உரிமைபேரவை அமர்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்: புலம்பெயர் அமைப்புக்கள் தமிழீழத்தை அடைந்து கொள்ளும்நோக்கிலேயே ஐ.நா…
-
- 0 replies
- 260 views
-
-
கால அவகாசத்தில் அரசு நீதியை வழங்கவேண்டும் அமெரிக்கா, பிரிட்டன் வலியுறுத்தல் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) இலங்கையானது தற்போது வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தில் நல்லிணக்கத்திலும் பொறுப்புக்கூறலிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அர்த்தமுள்ள நல்லிணக்க செயற்பாடுகள் அவசியமாகும் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் தெரிவித்துள்ளன. இலங்கை தொடர்பான புதிய பிரேரணை நேற்று ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டபோது கருத்து வெ ளியிடுகையிலேயே அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் ஜெனிவாவுக்கான பிரதிநிதிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். அமெரிக்கப் ப…
-
- 0 replies
- 219 views
-
-
இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நாவில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கும் தீர்மானத்திற்கு 2015ஆம் ஆண்டு தீர்மானத்திற்கு ஆதரவளித்த அனைத்து நாடுகளும் இம்முறையும் ஆதரவளிக்க ஏற்றுக்கொண்டதால் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது. http://www.virakesari.lk/article/18189
-
- 1 reply
- 486 views
-
-
புட்டினை சந்தித்தார் ஜனாதிபதி..! ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புட்டினை சந்தித்துள்ளார். ரஷ்யாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்நாட்டு ஜனாதிபதி விளாமிடிர் புட்டினை மொஸ்க்கோவில் சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பின் பொது இருநாட்டு வர்த்தக மற்றும் அரசியல் புரிந்துணர்வுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், மேலும் இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான 60 வருடகால ராஜதந்திர உறவுகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் மொஸ்க்கோவிலுள்ள கெர்மிளின் மாளிகையின், பச்சை அறையில் இடம்பெற்ற குறித்த…
-
- 1 reply
- 264 views
-
-
விசாரணையை ஆரம்பித்தால் ‘யுத்தம் ஏற்படலாம்’ -ஜே.ஏ.ஜோர்ஜ் “படையினருக்கு எதிராக விசாரணையை ஆரம்பித்தால் அது தமிழ், சிங்கள மக்களிடையே விரிசலை ஏற்படுத்தி விடுவதுடன், மீண்டுமொரு யுத்தத்துக்கு கூட வழிசமைத்து விடும். போர்க்குற்ற விசாரணை குறித்த சர்வதேச அழுத்தங்களுக்கு அரசாங்கம் அடிபணியாது. நாட்டுக்கு என்ன தேவையோ அதைத்தான் அரசாங்கம் செய்யும்” என்று, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, தெரிவித்தார். “போர்க்குற்ற விசாரணையையும் நல்லிணக்கப் பொறிமுறையையும் ரயில் தண்டவாளத்தின் இரண்டு நிரல்கள் போன்றவை அவற்றை ஒரே தடவையில் முன்னெடுக்கமுடியாது” என்றார். நாடாளுமன்றத்தில் நேற்று (23) இடம்பெற்ற நன்கொடை உறுதி…
-
- 0 replies
- 357 views
-
-
தவறாக வௌியிட்ட செய்தியை திருத்தவும்; AFP செய்திச் சேவைக்கு கடிதம் தனது தலைமையில் மரணப்படை ஒன்று செயற்பட்டதாக சர்வதேச ஊடகமான பிரான்ஸ் செய்திச் சேவை (AFP) வௌியிட்ட செய்தி தவறானது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். இதன்காரணமாக குறித்த செய்தியை திருத்தி பிரசுரிக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஷ தனது சட்டத்தரணியூடாக பிரான்ஸ் செய்திச் சேவைக்கு (AFP) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றிற்கு தெரிவிக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து தன்மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு செய்தி வௌியிடப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் ல…
-
- 0 replies
- 196 views
-
-
வௌிநாட்டு நீதிபதிகளை நியமிக்க அரசாங்கம் இணக்கம் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக வௌிநாட்டு நீதிபதிகளை நியமிக்க அரசாங்கம் இணங்கியுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தற்போதைய அரசாங்கத்தால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இணங்கியுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டியேற்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=89574
-
- 1 reply
- 397 views
-
-
மஹிந்த ராஜபக்ஷவிடம் தற்போது விசாரணை முன்னளா் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் அங்கு ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில், மஹிந்த ராஜபக்ஷவின் விளம்பரங்களை காட்சிப்படுத்தியமையால், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்ட நஸ்டம் குறித்த விசாரணைகளுக்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=89569
-
- 0 replies
- 194 views
-
-
இலங்கையில் உயர்ஸ்தானிகராலயம் அமைக்க நியூஸிலாந்து முடிவு Tweet இலங்கைக்கான நியூஸிலாந்துக்கான உயர்ஸ்தானிகராலயத்தை கொழும்பில் திறக்கவுள்ளதாகவும், இதன்மூலம் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மேலும் வலுப்படும் என்றும் நியூஸிலாந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் முரே மெக்கலி கூறினார். “உள்நாட்டுப் போரால் ஒரு தலைமுறை இடைவெளியின் பின் இலங்கை மீளக் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது. இலங்கையின் இந்த முயற்சிக்கு அரசியல் ரீதியாகவும் விரிவாக்கப்பட்ட பொருளாதார ரீதியாகவும் உதவ நியூஸிலாந்து விரும்புகிறது. பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைந்து வரும் இலங்கையில் பாற்பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகள் அதிகமாக இ…
-
- 0 replies
- 219 views
-
-
உயிரிழந்த காயமடைந்த பயங்கரவாதிகளின் விபரங்கள் இல்லை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) 1972ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் எம்மிடத்தில் இல்லை என ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான கஜந்த கருணாதிலக்க சபையில் அறிவித்தார். அதேநேரம் இக்காலப்பகுதியில் அரச பாதுகாப்புத் தரப்பில் பொலிஸ் தவிர்ந்து ஏனைய படைகளில் 25ஆயிரத்து 363 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 38ஆயிரத்து 675 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று வாய்மூலவிடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டு எதி…
-
- 0 replies
- 220 views
-
-
ஒரு வழி பாதையில் ஜெனீவா பிரேரணை : ஏற்குமா இலங்கை? இலங்கை அரசாங்கம் போர் குற்றங்கள் குறித்த விசாரணைக்கு, சர்வதேச நீதிபதிகள் முறையை எதிர்த்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர், விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகள் முறையை பின்பற்றவேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இச்சூழலில் யுத்த குற்ற விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. யார் சர்வதேச தரப்பிடம் வாக்குறுதிகளை கொடுத்தாலும், ஜனாதிபதியின் நிலைப்பாடு உள்ளக விசாரணை பொறிமுறை என்பதே என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கையில் சர்வதேச ந…
-
- 0 replies
- 260 views
-
-
ரஷ்ய இராணுவ வீரர்களின் நினைவு தூபிக்கு ஜனாதிபதி மலர் அஞ்சலி செலுத்தினார்…! நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் நடைபெறும் இலங்கை ஜனாதிபதி ஒருவரின் முதலாவது ரஷ்யாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று முற்பகல் ரஷ்யாவின் பிரபல இராணுவ வீரர்களின் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். மொஸ்கோ நகரின் செஞ்சதுக்கத்தில் அலெக்சாண்டர் பூங்காவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நினைவு தூபியானது இரண்டாவது உலக யுத்த காலத்தில் உயிர் நீத்த சோவியத் ஒன்றியத்தின் இராணுவ வீரர்களின் நினைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. செஞ்சதுக்கத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி மொஸ்கோ நகரின் இராணுவ கட்டளையிடும் அதிகாரியி…
-
- 0 replies
- 256 views
-
-
கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு கிராமத்தில் வெடிக்காத நிலையில் வெடி பொருட்கள் : அச்சத்தில் மக்கள் அண்மையில் ஒருமாத கால தொடர் போராட்டத்தின் மூலம் தமது சொந்தக்காணிகளுக்குள் சென்ற கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தற்போது அவர்களது காணிகளில் ஆபத்து ஏற்படுமென்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். விடுவிக்கப்பட்ட காணிகளில் மற்றும் கிணறுகளில் வெடிக்காத வெடி பொருட்கள் காணப்படுவதாகவும், இதனால் தமது காணிகளை சுத்தப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்வதில் தமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அண்மையில் கூட ஒருகாணியில் துப்பரவு செய்து தீ வைக்கும்போது வெடிபொருள் ஒன்று வெடித்ததாகவும் எவருக்கும் அதனால் தெய்வாதீனமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்…
-
- 0 replies
- 156 views
-
-
சம்பந்தன் - மைத்திரி அடுத்தவாரம் சந்திப்பு புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே அடுத்த வாரம் சந்திப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது. புதிய அரசமைப்பு உருவாக்க நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்கள் அலசி ஆராயப்பட்டு முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், அரச தலைவர் மைத…
-
- 0 replies
- 212 views
-
-
வாள் வெட்டுக் கும்பலின் அச்சுறுத்தலால் கோவிலில் தஞ்சமடைந்தனர் மக்கள் : வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்படும் வரை, பாதுகாப்புக்காக ஆலயத்தில் படுத்துறங்குவோம் என்று தெரிவித்த வட மராட்சிப் பகுதியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், நேற்று இரவு பருத்தித்துறை நீதிமன்றுக்கு முன்பாகவுள்ள இந்து ஆலயத்தில் தங்கி யிருந்தனர். பொலிஸாரின் உத்தரவாதத்தையடுத்து நேற் றுப் பின்னிரவு அவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பினர். வடமராட்சி, அல்வாய் பகுதியில் நேற்றுமுன்தினமிரவு இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க் கப்…
-
- 0 replies
- 248 views
-