ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143386 topics in this forum
-
ஐ.நாவில் கால அவகாசத்தினை கோரி பொறுப்புக் கூறல் விடையத்தில் இழுத்தடிப்பு வேலைகளை செய்வதற்கு அரசு முயற்சிக்கும் சந்தர்ப்பத்தில் அதற்கு சம்பந்தனும் ஆதரவு வழங்குகின்றார். கடந்த 2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணையில் கைச்சாத்திட்டமையின் காரணமாக, கால அவகாசம் கோரி இழுத்தடிப்பு வேலைகளை செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெகலிய ரம்புக்வெல குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறு பொறுப்பு கூறல் விடயத்தில் அனுமதிக்கப்போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ள கூற்றானது வரவேற்கத்தக்க விடயம். ஆனால், நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவிக்கும் போது, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமர…
-
- 0 replies
- 255 views
-
-
யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை திறந்து வைத்துள்ளார். யாழ். சாவகச்சேரியில் வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் உள்ள குறித்த நிலையத்தை இன்று காலை 11 மணியளவில் ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார். இதில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், அங்கஜன் ராமநாதன், மாவை சேனாதிராஜா. மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர். ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின்போது பலத்த வரவேற்பளிக்கப்பட்டதுடன் பல கலைநிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. …
-
- 1 reply
- 803 views
-
-
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை எஸ்.நிதர்ஸன் யாழ்ப்பாணத்துக்கு இன்று (04) வருகை தரும் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இதன்போது பட்டதாரிகளுக்குத் தீர்வை வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்திருக்கும் மாவை சேனாதிராசா இப் பேச்சுவார்த்தையினூடாக எடுக்கப்படுகின்ற முடிவு பட்டதாரிகளுக்கு நல்லதோர் தீர்வான அமையும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் பட்டதாரிகள் மத்தியில் குறிப்பிட்டுள்ளார். வடக்க…
-
- 0 replies
- 159 views
-
-
ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் இராணுவத்தில் சரணடைந்தவர்களின் உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக இன்று காலை காணாமல் ஆக்கப்பட்டோரின் பாதுகாவலர் சங்கத்தால் நடாத்தப்படுகின்றது. தமக்கு ஜனாதிபதியை சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறு யாழ் பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியிடம் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதியின் யாழ் விஜயத்தினை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். http://www.tamilwin.com/community/01/137674?ref=home
-
- 0 replies
- 169 views
-
-
கலப்பு நீதிமன்றம் இலங்கையில் சாத்தியமற்றது உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவே மாற்றுவழி என்கிறார் பிரதமர் ரணில் (க.கமலநாதன்) கலப்பு நீதிமன்ற கட்டமைப்பினை எமது நாட்டினுள் நிறுவுவது சாத்தியப்படாது. அதனை நிறுவவேண்டுமாயின் பொது வாக்கெடுப்புக்குச் சென்று மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறவேண்டும். ஆகவே மாற்று வழியாக உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை விரைவில் நிறுவவுள்ளோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சட்ட வாரத்தினை முன்னிட்டு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் …
-
- 1 reply
- 220 views
-
-
ஏலத்தின் தொகையை ஆளுநர் அர்ஜுனவுக்காக மாற்றியமைத்தோம் மத்திய வங்கியின் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் மேலதிக அத்தியட்சர் மொஹமட் ஹாசிம் சாட்சியம் (பா.ருத்ரகுமார்) முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மனநிலையை மாற்ற முடியாது என்பது எமக்கு தெரியும். 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதி செய்யப்பட்ட ஏலத்தின் விபரங்களில் 2.65 பில்லியன் ரூபாவை மட்டுமே தொடர்ந்து பேணமுடியும். ஆனால் ஆளுநர் எங்களுக்கு 10 பில்லியனுக்கு மேற்பட்ட நிதியை அவ் ஏலத்தில் பராமரிக்கசொன்னார். நாம் ஏற்கனவே தயாரித்த தொகையை அவருக்காக மாற்றியமைத்தோம் என்று மத…
-
- 0 replies
- 328 views
-
-
நிபந்தனை விதித்து முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் (எம்.நியூட்டன்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவு வழங்கிய நாடுகள் நிபந்தனை விதித்து அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்றுவது தொடர்பில் இராஜதந்திர ரீதியில் நாம் நிதானமாக செயற்படுகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தொடர்பாகவும் இரண்டு வருட கால அவகாசம் தொடர்பிலும் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சி…
-
- 0 replies
- 244 views
-
-
விசேட கூட்டத்தை ஜெனிவாவில் ஏற்பாடு செய்துள்ள அமெரிக்கா பிரிட்டனும் அமெரிக்காவும் இணைந்து பிரேரணையை தாக்கல் செய்யும் சாத்தியம் (ரொபட் அன்டனி) ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக கொண்டு வரப்படவுள்ள பிரேரணை குறித்து ஆராயும் உபகுழுக்கூட்டங்களை அடுத்தவாரம் அமெரிக்காவும் பிரான்ஸும், ஜெனிவா வளாகத்தில் நடத்தவுள்ளன. எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனிவா வளாகத்தில் குழு அறை 24 இல் அமெரிக்கா ஏற்பாடு செய்யதுள்ள இலங்கை பிரேரணை குறித்த உபக்குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதேபோன்று அதேதினம் மாலை ஜெனிவா வளாகத்தில் 26 ஆவது குழு அ…
-
- 0 replies
- 128 views
-
-
ஐந்து மாணவர் உள்ளிட்ட பதினொரு பேர் கடத்தல் விவகாரம் இரு கடற்படை வீரர்கள் சி.ஐ.டி.யினரால் கைது (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்ட இரு கடற்படை புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைதுசெய்யப்பட்டனர். நேற்றுமுன்தினம் இரவு முதல் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக்கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியும் சிறப்பு விசாரணையாளருமான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா தலைமையிலான பொலிஸ் குழு முன்னெடுத்த விசாரணையை அடுத்து இவர்கள் இருவரும…
-
- 0 replies
- 176 views
-
-
இராணுவமுகாமுக்கு முன்னால் கதறியழுது மக்கள் ஆர்ப்பாட்டம் (கே.குமணன்) கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அவற்றை விடுவிக்கவேண்டுமென கோரி கேப்பாப்புலவில் உள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையகத்துக்கு முன்பாக முன்னெடுக்கும் போராட்டம் நேற்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது. மூன்றாவது நாளான நேற்று போராட் டத்தில் ஈடுபட்ட மக்கள் கேப்பாபுலவின் பிரதான வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையகத்தின் பிரதான வாயில் முன்பாக திரண்டு இராணுவத்துக்கு எதிராக கோசம் எழுப்பி தமது சொந்த நிலங்களை எம்மிடம் தாருங்கள்…
-
- 0 replies
- 187 views
-
-
புதிய கட்சி உதயம் எஸ்.சசிக்குமார் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் என்னும் கட்சியொன்றினைத் தாம் கடந்த மாதம் 28ஆம் திகதி தொடக்கி வைத்துள்ளதாக, அக்கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராஜா, ஊடகங்களுக்குத் தெரிவித்தார். சம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலய முன்றலில், நேற்று மதியம் விசேட ஊடக சந்திப்பு நடத்தப்பட்டது. கட்சியின் தோற்றம் பற்றிப் பொது மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காகத் தாம் இதனை ஏற்பாடு செய்ததாக, கட்சியின் தலைவர் இன்பராஜ் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, "2009ஆம் வருடம், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 12,000க்கும் அதிகமான போராளிகள்…
-
- 0 replies
- 710 views
-
-
புதிய எச்சரிக்கை பெயர் பலகை -சண்முகம் தவசீலன் கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி, கேப்பாபுலவில் அமைத்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையகத்துக்கு முன்பாக நேற்று மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த மக்களின் போராட்டம் ஆரம்பிக்கப்படட நிலையில், நேற்று கேப்பாபுலவு கிராமத்தின் பிரதான வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையக வாயில் முன்பாகவும் வீதியின் மறுமுனையில் பிரதான வீதியில் மறித்து அமைக்கப்பட்டுள்ள காவலரண் முன்பாகவும் புதிய எச்சரிக்கை பெயர் பலகை ஒன்று இடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 290 views
-
-
இலங்கை தொடர்பான பிரேரணை 16 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் : இரண்டு வருட கால அவகாசம் கிடைக்கும்? இலங்கையானது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பிரிட்டன் கொண்டுவரவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணை எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர் பேரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையின் நீடிப்பாகவே பிரிட்டன் இம்முறை கொண்டுவரவுள்ள பிரேரணை அமையும் என எதி…
-
- 0 replies
- 184 views
-
-
ஐ.நா.அறிக்கைக்கு கூட்டமைப்பு வரவேற்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரி மைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 2015 ஆம் ஆண்டு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகள் ஆகியவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் வலியுறத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் ஜெனீவாவில் நடைபெற்று வரும் 34ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்…
-
- 0 replies
- 297 views
-
-
புல்மோட்டை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 8 பேர் கைது திருகோணமலை - புல்மோட்டை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த இந்திய மீனவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகு என்பவற்றை மேலதிக நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். http://www.virakesari.lk/article/17376
-
- 0 replies
- 121 views
-
-
கடலில் குதித்து ஆராச்சி செய்த 3 பாராளுமன்ற உறுப்பினர்கள்! கற்பிட்டி கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்களை கொண்டு மீன் பிடிப்பதால் கடல்வளங்கள் அழியும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். புத்தளம் கற்பிட்டி கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட உபகரணங்களை பாவித்து மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிராக மீன்பிடித்துறை அமைச்சு இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையிலேயே எமது கடற் பகுயை தாமே பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் கற்பிட்டி கடற்பகுதிக்கு சென்று பார்வையிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹெக்…
-
- 5 replies
- 517 views
-
-
சிறையிலுள்ள துமிந்தவை பரிசோதித்த வைத்தியக் குழுவின் அதிர்ச்சி தகவல் (படங்கள்) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் மூளை மற்றும் மண்டையோட்டுப் பகுதிகளில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்றம் துமிந்த சில்வாவின் உடல்நிலை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ஒன்பது பேர் அடங்கிய சிறப்பு வைத்தியக் குழு துமிந்த சில்வாவின் உடல்நிலை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, துமிந்த சில்வா தொடர்ந்தும் வைத்திய சிகிச்சை பெறவேண்டிய நிலையில் உள்ளார். அவரின் மண்டையோட்டிலிர…
-
- 0 replies
- 393 views
-
-
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் கத்திக் குத்து : பெண்ணொருவர் படுகாயம் கிளிநொச்சி - சாந்தபுரம் கிராமத்தில் இன்று பிற்பகல் கத்திக் குத்துக்கு இலக்காகி பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சாந்தபுரம் கிராமத்தில் இருந்து இரணைமடு குளத்திற்கு நன்னீர் மீன் தொழில் நடவடிக்கைக்குச் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த போது இரணைமடு இராணுவ தலைமையகத்திற்கு பின்புறமாக காட்டுக்குள் மறைந்திருந்த ஒருவர் திடீரென குறித்த பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்டுள்ளார். இதன்போது பெண் குறித்த நபரை தடுத்து நிறுத்தியதால் கத்தியால் கழுத்தில் குத்தியதாக தெரிவிக்கப்படு…
-
- 0 replies
- 287 views
-
-
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை புலம்பெயர் தமிழர்களின் மற்றுமொரு தொகுதியினர் நாடு திரும்பவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்னெடுத்துள்ள திட்டத்தின் அடிப்படையிலேயே 40 பேர் இவ்வாறு நாடு திரும்பவுள்ளனர். 14 குடும்பங்களைச் சேர்ந்த 40 இலங்கை புலம்பெயர் தமிழர்களே நாடு இவ்வாறு திரும்பவுள்ளனர். இவ்வாறு நாடு திரும்பவுள்ள,இலங்கை புலம்பெயர் தமிழர்களுக்கான அனைத்துச் செலவுகளையும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பே ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/community/01/137416?ref=home
-
- 5 replies
- 723 views
-
-
வவுனியா பிரதேசத்துக்குட்பட்ட நெடுங்கேணி பிரதேச செயலகத்தின் ஒலுமடுகிராமத்தில் 24.05.2016 அன்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட 10வயது பாடசாலை சிறுமியின் வழக்கை நெடுங்கேணி பொலிசார் குற்றவாளிக்கு சார்பாகபதிவு செய்தமை அம்பலமாகியுள்ளது. இவ் வழக்கானது 03.03.2017 இன்று வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில்எடுத்துக்கொள்ளப்பட்ட போது நெடுங்கேணி பொலிசார் குற்றவாளிக்கு சார்பாகசிறுமியை சந்தேகநபர் தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. அதேவேளை,, இப்பாலியல் குற்றவாளி ஆறு மாதங்களுக்கு முன்னரே பிணையில் விடுதலைசெய்யப்பட்டிருப்பதை அவதானித்த நீதிபதி மீண்டும் சிறுமி பாலியல் துஸ்பிரயோகவழக்கை கையேற்றதுடன், எதிர்வரும் 31.03.2017 அன்று நெடுங்கேணி பொலிசார் …
-
- 0 replies
- 695 views
-
-
காணாமல்போன தமது உறவுகளை தேடித் தருமாறு கோரி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக காணாமல் போனவர்களின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த சத்தியாகிரக போராட்டமானது இன்று 12ஆவது நாளாக நீடித்து வருகிற நிலையில், குறித்த போராட்டத்தில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்த நிலையில் காணாமல் போன தனது மகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அருகில் நிற்பது போன்ற புகைப்படத்தினை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். சிறுவர்களுடன் இணைந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் எப்போது வெளியாகியதோ, அன்று தொடக்கம் குறித்த தாய் இது தனது பிள்ளை என உரிமை கோரி வருகின்றார…
-
- 0 replies
- 366 views
-
-
காணாமல்போன தமது உறவுகளை தேடித் தருமாறு கோரி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக காணாமல் போனவர்களின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த சத்தியாகிரக போராட்டமானது இன்று 12ஆவது நாளாக நீடித்து வருகிற நிலையில், குறித்த போராட்டத்தில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்த நிலையில் காணாமல் போன தனது மகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அருகில் நிற்பது போன்ற புகைப்படத்தினை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். சிறுவர்களுடன் இணைந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் எப்போது வெளியாகியதோ, அன்று தொடக்கம் குறித்த தாய் இது தனது பிள்ளை என உரிமை கோரி வருகின்றார…
-
- 0 replies
- 493 views
-
-
கனடாவின் பூகோள விவகாரங்களுக்கான திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. இந்த விஜயத்தின் பின்னர் குறித்த குழுவானது இலங்கையில் பல்வேறு தரப்பினர்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனையும், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் புலமையாளர்களையும் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அரசியல், வர்த்தக மற்றும் அபிவிருத்தி சார்ந்த விவகாரங்களைக் கையாளும் கனடாவின் பூகோள விவகாரங்களுக்கான திணைக்கள அதிகாரிகள் குறித்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். மேலும் குறித…
-
- 0 replies
- 389 views
-
-
ஐந்தாவது நாளாக தொடரும் வடக்கு வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம், யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று 5வது நாளாகவும் தொடர்ந்து இடம்பெறுகின்றது. தமக்கான வேலை வாய்ப்பு தொடர்பில் உறுதியான பதில் வழங்கும் வரை காலவரையரையின்றி இவர்களின் ஆர்ப்பாட்டம் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி என்று காட்டிக்கொள்ளும் அரசே எங்களின் நிலை என்ன?, மைத்திரியின் நல்லாட்சில் பட்டதாரிகளின் அவலம், பட்டதாரிகளின் எதிர்காலத்தை வீணடிக்காதே, பட்டதாரிகளை இனியும் ஏமாற்றாதே என்ற பதாகைகளை இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடத்திற்கு தமிழ் தேசிய க…
-
- 1 reply
- 385 views
-
-
நீதிமன்றுக்குள் ஆயுதங்களை வைத்தவர் சரண் கல்கிஸை நீதவான் நீதிமன்ற அறைக்குள், பெஞ்சுக்கு கீழ், சுடுவதற்கு தயார் நிலையில் ஆயுதங்களை வைத்ததாக கூறப்படும், ரொசான் இந்திக டி சில்வா என்பவர், கல்கிஸை பொலிஸில் சரணடைந்துள்ளார். சுடுவதற்கு தயார் நிலையிலிருந்த கைத்துப்பாக்கியும் நான்கு ரவைகளும், ரிவோல்வரும் ஆறு ரவைகளும், கல்கிஸை நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்து பொலிஸாரினால் கடந்த முதலாம் திகதி மீட்கப்பட்டன. பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, நீதிமன்ற வளாகத்தில், சந்தேகத்துக்கு இடமான முறையில் பேக் ஒன்று இருந்துள்ளது. அதனை சோதனைக்கு உட்படுத்திய போதே, இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 313 views
-