Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'எங்கிருந்தாலும் இரண்டு வாரத்தில் கொல்லப்படுவாய்' : அங்கொட லொக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த சமயங்க : சந்தே நபர்கள் நாட்டை விட்டு வெளியேறவும் முயற்சி : விமான நிலையங்கள், கடலோரங்களில் பலத்த பாதுகாப்பு : புதுத் தகவல்கள் கசிவு 'எங்கிருந்தாலும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் கொல்லப்படுவாய். கவனமாக இரு' என நுகேகொட லொக்காவுக்கு கொலை செய்யப்பட்ட 'சமயங்க' எனப்படும் அருண தமித் உதயங்க எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் இந்த எச்சரிக்கையின் பின்னரே பதிலடி கொடுக்கும் வகையில் களுத்துறை சிறைச்சாலை பஸ் மீதான தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பழிவாங்கும் நோக்கிலேயே இரு பாதாள குழுத் தலைவர்களான 'அங்கொட லொக்கா' மற்றும் 'க…

  2. சர்வதேச நீதிபதிகளை ஒருபோதும் அனுமதியேன் ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ருக்கு உறு­தி­பட தெரி­வித்­து­விட்­ட­தாக கூறு­கிறார் ஜனா­தி­பதி (ரொபட் அன்­டனி) "சர்­வ­தேச நீதி­ப­திகள் கோரிக்கை விடுக்­கப்­பட்டு 24 மணி­நே­ரத்தில் முடி­யாது என கூறி­விட்டேன்" எந்­த­வொரு வகை­யிலும் இலங்­கைக்கு சர்­வ­தேச நீதி­ப­திகள் வரு­வ­ தற்கு நான் இட­ம­ளிக்­க­மாட்டேன். அண்­மையில் மனித உரிமை மீறல் குறித்து விசா­ரிக்க வெளிநாட்டு நீதி­ப­திகள் இலங்­கைக்கு வர வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் கூறி­ய­போது 24 மணி நேரத்தில் அதற்கு அனு­ம­திக்­க­மாட்டேன் என நான் அவ­ ருக்கு பதி­ல­ளித்தேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். நாட…

  3. வவுனியா வடக்கில் சிங்கள மக்கள் ஆக்கிரமிப்பு : சத்தியலிங்கம் குற்றச்சாட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வவுனியா வடக்கினுடைய வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவினுடைய அந்த காணிகளுக்குள்ளும் எல்லை புறத்திலே இருக்கின்ற வவுனியா பிரதேச செயலக பிரிவினுடைய அந்த ஆக்கிரமிக்கப்பட்டு, குடியேற்றம் செய்யப்பட்ட காணிகளுக்குள் வாழுகின்ற சகோதர மொழி பேசுகின்றவர்களை இப்போது எங்களுடைய பிரதேச சபைகளுடன் இணைப்பதற்கானதொரு சதி முயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா செட்டிக்குளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சித்த வைத்தியசாலை கட்டிடத்தொகுதியை நேற்றுமுன்தினம் திறந்து வைக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். …

  4. கடலில் பயணித்த ஜீப் -கே.மகா பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜீப், வேகக்கட்டுப்பாட்டை இழந்து வல்லை கடலுக்குள் விழுந்துள்ளது. இன்று (03) இடம்பெற்ற இச்சம்பவத்தில,; வாகனத்தில் சென்று கொண்டிருந்த 4 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/192503/கடல-ல-பயண-த-த-ஜ-ப-#sthash.sKU9Hde8.dpuf

  5. எமது மண்ணில் இன்னும் பலநூறு ஏக்கர் நிலங்களை இராணுவம் விழுங்கியுள்ளது : தொடர்கிறது மக்களின் மண்மீட்பு போராட்டம் கேப்பாபுலவின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட்டது என்ற மாயையை ஏற்படுத்தலாம் என்று அரசாங்கம் நினைக்கக்கூடாது எமது மண்ணில் இன்னும் பலநூறு ஏக்கர் நிலங்களை இராணுவம் விழுங்கியுள்ளது-கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களின் மண்மீட்பு போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கின்றது! கேப்பாபுலவு இராணுவம் வசமுள்ள காணிகள் விடுக்கப்பட்டுள்ளது என்று கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு காணி விடுவிப்பின்மூலம் காட்டி உலகுக்கு மாயையை ஏற்படுத்தலாம் என்று மட்டும் நினைக்க வேண்டாம் இன்னும் எமது கேப்பாபுலவு மண்ணில் பலநூறு ஏக்கர் நிலங்களில் இராணுவம் நிலைகொண்டு எம்…

  6. "எமது நியாயமான போராட்டத்தை வீச்சாக்கியது ஊடங்கள்தான்.! அவர்களால் தான் நாம் இன்று எம் சொந்த மண்ணில் நிற்கின்றோம் ! எமது வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளை காணிக்கையாக்குகின்றோம்!" கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை அனைத்தும் விடுவிக்கப்படவேண்டுமென கோரி கடந்த ஒரு மாதகாலமாக வீதியில் போராடி வந்த நிலையில் நேற்றுமுன்தினம் இந்த மக்களுக்கு சொந்தமானான அனைத்து நிலங்களும் விடுக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் நேற்றையதினம் இந்த கிராமத்து மக்கள் அடை மழைக்கு மத்தியிலும் தமது காணிகளை துப்பரவாக்கும் பணியினை மேற்கொண்டுள்ளனர். அத்தோடு தமது காணிகளில் சிறுகூடாரங்களை தரப்பாள்களை கொண்டு அமைத்து வசித்துவருவ…

  7. தமிழ் உத்தியோகத்தரின் இறுதிக் கிரியை நாளை ரீ.எல்.ஜவ்பர்கான் களுத்துறை சிறைச்சாலை பஸ் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பலியான காரைதீவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தரான சிவானந்தம் தர்மீகனின் (வயது 26) இறுதிக் கிரியைகள், காரைதீவில் நாளை (02) நடைபெறவுள்ளதாக, மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் பீ.எம்.அக்பர் தெரிவித்தார். உத்தியோகத்திரின் பூதவுடல், இன்று அதிகாலை கொழும்பிலிருந்து காரைதீவுக்குக் கொண்டு வரப்பட்டு, மக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகள், மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் உத்தியோகத்தர்களினின் பூரண அணிவகுப்பு மரியாதையுடன், இடம்பெறவுள்ளன. …

  8. சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக பிரியசாத் டெப் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். சிறிலங்கா அதிபரில் அதிகாரபூர்வ இல்லத்தில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது. இன்று பதவியேற்றுள்ள பிரியசாத் டெப், சிறிலங்காவின் 45 ஆவது தலைமை நீதியரசராவார். இவர், 2007ஆம் ஆண்டு தொடக்கம் 2011ஆம் ஆண்டு வரை சிறிலங்காவின் தலைமை சட்ட ஆலோசகராக (சொலிசிற்றர் ஜெனரல்) பதவி வகித்திருந்தார். அத்துடன், தலைமை நீதியரசர் பணியில் இல்லாத பல்வேறு சந்தர்ப்பங்களில் இவர் பதில் தலைமை நீதியரசராகவும் பணியாற்றியுள்ளார். http://www.puthinappalakai.com/

    • 0 replies
    • 306 views
  9. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகி இடம்பெற்றுகொண்டிருக்கின்றது. இந்த கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம், இலங்கை மனித உரிமைகள் சட்டத்தரணியும், மனித உரிமைக்கும், அபிவிருத்திக்குமான நிலையத்தின் இணைப்பாளருமான திருமதி. மங்களேஸ்வரி சங்கர் அவர்கள் நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளில் தமக்கு திருப்தி இல்லை என்றும், இலங்கையின் நீதித்துறை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கு ஏதேனும் சட்டத் சீர்த்திருத்தங்களை கொண்டுவந்துள்ளீர்களா..? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இலங்கையின் நீதித்துறை பிரச்சினை தொடர்பில் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டத் தரணிகளை ஈடுபடுத்த…

  10. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது. இந்த கூட்டத் தொடர் இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை கால அவகாசம் கோரியுள்ளது. அத்துடன், இலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என பிரித்தானியா இந்த கூட்டத்தொடரில் புதிய தீர்மானம் ஒன்றையும் கொண்டுவரவுள்ளது. எனினும், இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவதற்கு பல்வேறு தரப்பிர்களும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்ற பேரழிவுகள் தொடர்பில் கிறிஸ்தவ திருச்சபையின் பங்களிப்…

    • 0 replies
    • 401 views
  11. பிரான்ஸில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் பாரீஸ் நகரின் ரிப்பப்லிக்கன் சதுக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். தமிழ் மக்களின் இனப்படுகொலையை கண்டிக்கும் மற்றும் தமிழர்களின் தாயகத்தை பாதுகாக்குமாறும் கோரும் பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர். மேலும் ஜெனிவாவில் மார்ச் 6 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் தலைமையகத்திற்கு எதிரில் நடத்தப்பட உள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. எவ்வாறாயினும் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண…

    • 0 replies
    • 402 views
  12. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் கோரியிருந்த கால அவகாசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழரசுக்கட்சி சார்ந்த மூன்று உறுப்பினர்கள் கடிதம் மூலம் ஐ.நாவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். இதில் இலங்கை தமிழரசுக்கட்சியை சார்ந்த யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாளஸ் நிர்மலநாதன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகிய மூவருமே குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளனர். இலங்கை அரசுக்கு காலநீடிப்பு வழங்குவதற்கு பகிரங்கமான எதிர்ப்பினை தெரிவித்து ஐ.நாவின் கவனத்திற்கு கடிதம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/statements/01/137446?ref=home

    • 0 replies
    • 354 views
  13. எதிர்வரும் 10 ஆம் திகதி வீட்டுக்கு வருவேன் என்று கூறிய எனது மகன் சுட்டு கொலை செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன் என களுத்துறை பகுதியில் சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மட்டக்களப்பு, காரைதீவைச் சேரந்த இளைஞரின் தந்தை கண்ணீர்மல்க தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், களுத்துறை சிறைச்சாலையில் கடமை புரிந்த மட்டக்களப்பு காரைத்தீவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தரான 24 வயதுடைய தர்மீகன் சிவானந்தம் என்ற இளைஞர் உயிரிழந்தார். தனது மகனின் இறப்பு தொடர்பில் தெரிவித்த தந்தை ப. சிவானந்தம், 'எனது மூத்தமகன் தர்மிகன் வெளிநாடு செல்லவே…

    • 0 replies
    • 439 views
  14. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இம் மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்கொண்ர்வு மனு தொடர்பிலான வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் எஸ்.எம்.எஸ் சம்சுதீன் முன்னிலையில் இன்றையதினம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதேவேளை இன்றையதினம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவரத்தன மன்றில் முன்னிலையாகாத நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் திரும…

    • 0 replies
    • 464 views
  15. இலங்கையிலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலதிக பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனையின் பிரகாரம் பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு – கல்கிஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து நேற்றைய தினம் துப்பாக்கி ஒன்றும், தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டதால் நீதிமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையினால் சுமார் மூன்று மணிநேரம் நீதிமன்ற செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தன. குருநாகல் பொலிஸ் நிலையத்தில் சேவையிலிருந்த அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் இவர் கைதாகி கொழும்பு மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவரான ரோஹா என்பவர் நேற்று பிற்பகல் கல…

    • 0 replies
    • 265 views
  16. வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி கடந்த மாதம் 27 திகதி தொடக்கம் இன்று நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெறும் இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் நூற்றிற்கும் அதிகமான பட்டதாரிகள் இணைந்துள்ளனர். வடமாகாணத்தில் 4 ஆயிரத்து 500 க்கும் அதிகமான பட்டதாரிகள் பட்டப்படிப்பை நிறைவுசெய்த நிலையில், வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளனர். என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். இந் நிலையில், தீர்வு கிடைக்கும் வரை காலவரையறையற்ற தமது போராட்டம் தொடரவுள்ளதாகவும், இதுவரை பல்வேறு வாக்குறுதிகளை கேட்டு ஏம…

    • 0 replies
    • 259 views
  17. இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் 13 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அதிகாலை இருவேறு படற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களை இன்றைய தினம் யாழ் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.. வெற்றிலைக்கேணி சுண்டிக்குளம் கடற்பரப்பில் 9 மீனவர்களும், நெடுந்தீவு கடற்பரப்பில் 04 மீனவர்களும் அவர்களின் இரண்டு விசைப்படகுகளும் கைது செய்யப்பட்டுள்ளன.. இவர்கள் ஐகாதாப்பட்டினம்,இராமேஸ்வரம்,புதுக்கோட்டை ஆகிய பகுதியினை சேர்ந்தவர்கள் தெரியவருகின்றது.. குறித்த மீனவர்களை இன்றைய தினம் யாழ் ஊ…

    • 0 replies
    • 266 views
  18. அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைகழக மாணவர் ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் நயினாதீவை சொந்த இடமாக கொண்டவரும், தற்போது கொழும்பில் வசித்து வரும் , ரஜரட்ட பல்கலைகழக மாணவ னான தவகுலரெத்தினம் ரகுராம் (வயது 24) எனும் மாணவனே உயிரிழந்தவராவார். சக மாணவனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டு இருந்தவேளை வீதி வளைவொன்றில் மோட்டார் சைக்கிளை திரு ப்ப முற்பட்டநிலையில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கபப்டுகின்றது. குறித்த விபத்து சம்பவத்தில் குறித்த மாணவன் உயிரிழக்க மற்றைய மாணவன் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள…

    • 0 replies
    • 640 views
  19. பன்றிக் காய்ச்சல் தொடர்பில் பதற்றமடைய தேவையில்லை யாழ்.போதனா பணிப்பாளர் அறிக்கை பன்றிக்காய்ச்சல் நோய்த்தாக்கம் தொடர்பாக மக்கள் பதற்றமடைய தேவையில்லை என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், புள்ளிவிபரங்களின் படி 42 நோயாளர்கள் இன்புளூவென்சா நோய்க்கான விசேட சிகிச்சையை பெற்றுள்ளனர். இவர்களில் இரத்தப் பரிசோதனை முடிவுகளின்படி 9 நோயாளர்கள் மட்டுமே குறித்த H1N1 நோய்த் தாக்கத்திற்குள்ளானது அவதானிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பூரண குணமடைந்து வீடு சென்றுள்ளனர். கடந்த சில வாரங்களாக நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை மாற்றங்களால் தொற்றுநோ…

    • 0 replies
    • 219 views
  20. வலி. வடக்கு மக்களின் காணி விடுவிப்பு குறித்து ஐனாதிபதி உறுதியான பதிலை வழங்கவேண்டும் இல்லையேல் இராணுவ முகாம் முற்றுகை யாழ். வரவிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலி வடக்கு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் உறுதியான பதிலை வழங்க வேண்டும். இல்லையேல் இராணுவ முகாம்களை முற்றுகையிட்டு தொடர்போராட்டம் முன்னெடுப்போம் என வலிவடக்கு மக்கள் எச்சரித்துள்ளனர். வலி.வடக்கு காணிகளை விடுவிக்குமாறு கோரி வயாவிளான் கிழக்கு, வயாவிளான் மேற்கு மற்றும் பலாலி தெற்கைச் சேர்நத மக்களால் நேற்றைய தினம் அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று வயாவிளான் ரெயிலர் கடைச்சந்தியில் அமைந்துள்ள இராணுவ முகாம் முன்றலில் முன்னெடுக்கப்பட்டது. இதன் போதே மக்கள் மேற்படி தீர்மானத்தை அறிவித்துள்ளனர். …

    • 0 replies
    • 259 views
  21. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை களைவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், யாழில் மாபெரும் பேரணி நடைபெற்றது. யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை 8.30 மணியளவில் பேரணி ஆரம்பமானது. குறித்த பேரணியை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பங்குபற்றி ஆரம்பித்து வைத்தார். குறித்த பேரணி யாழ். ஆஸ்பத்திரி வீதி வழியாக ஏ9 வீதியை வந்தடைந்து, யாழ். மாவட்ட செயலகத்தில் நிறைவு பெற்றது. இந்தப் பேரணியில், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுகுணரதி தெய்வேந்திரம் மற்றும் உதவி அரசாங்க அதிபர் காணி முர ளிதரன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள், யாழ்.மாவட்ட செயலக உத்தி…

    • 0 replies
    • 357 views
  22. அரசியலமைப்பு: புதிதாகவே வரும்; திருத்தம்தான் வரும் அரசியலமைப்பு விவகாரம் தொடர்பில், அரசாங்கத்தில் இருக்கின்ற பங்காளிக் கட்சிகளிடையே முரண்பாடான கருத்துகள் உள்ளமையை, நேற்று (01) இடம்பெற்ற இருவேறு ஊடகவியலாளர் மாநாட்டில் அவதானிக்க முடிந்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (01) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்து, புதிய அரசியலமைப்பை தயாரித்து, தான் மக்களுக்கு அளித்த வா…

    • 0 replies
    • 292 views
  23. ஜெனிவாவில் 2 ஆண்டுகள் காலஅவகாசம் கோரவுள்ளதை உறுதிப்படுத்தியது சிறிலங்கா ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கோரப் போவதாக, சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஜெனிவா சென்றுள்ள சிறிலங்கா அரசின் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றுள்ள நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்பு செயலகத்தின் செயலர் மனோ தித்தவெல பிபிசியிடம் இதனைத் தெரிவித்துள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிடம் மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்தைப் பெற முடியும் என்று சிறிலங்கா நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். சிறிலங்காவுக்கு காலஅவகாசம் அளிக்கும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில்,…

    • 0 replies
    • 251 views
  24. சிறிலங்கா குறித்த நிலைப்பாட்டை ஜெனிவாவில் இன்று வெளிப்படுத்துமா அமெரிக்கா? சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு இன்று ஜெனிவாவில் வெளிப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015 ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. இந்த நிலையில், சிறிலங்காவுக்கு கால அவகாசத்தை வழங்கும் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. எனினும், கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம், சிறிலங்கா தொடர்பான எந்த நிலைப்பாட்டையும் இதுவரையில் வெளியிடவில்லை. புதிய அரசு பதவியேற்ற பின்னர் அமெரிக்க உயர் அதிகாரிகள் மற…

    • 1 reply
    • 375 views
  25. வடகிழக்கை சிங்கள மயமாக்குவதற்கே சிறிலங்கா காலஅவகாசம் கோருகிறது – கிருபாகரன் குற்றச்சாட்டு வடக்கு கிழக்கை சிங்கள மயமாக்குவதற்கும் இராணுவ மயமாக்குவதற்குமே சிறிலங்கா அரசாங்கம் கால அவகாசம் கோருகிறார்கள் என பிரான்ஸ் தமிழர் உரிமை மையத்தின் செயலாளர் ச.வி.கிருபாகரன் தெரிவித்தார். ஐ.நா.மனித உரிமை பேரவையில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றிய பின் அது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே கிருபாகரன் இதனை தெரிவித்தார். அமைச்சர் மங்கள சமரவீரவின் உரை கற்பனைகள் நிறைந்த கட்டுக்கதைகள், இந்த உரை சர்வதேச நாடுகள் சிலவற்றிற்கு இனிப்பாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் இதனை நம்பமாட்டார்கள். சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான எந்த தீர்வையும…

    • 0 replies
    • 270 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.