ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143382 topics in this forum
-
பிக்கு சத்தியாக்கிரகம் மொஹொமட் ஆஸிக் கண்டி-திகனை கந்தே விஹாரையை சேர்ந்த இசுருபுர சித்தார்த்த தேரர், ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் உள்ள வாவிக் கரையோரத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை நேற்றுக் காலை (01) ஆரம்பித்த தேரர், தன்னை சுற்றியும், சில துண்டுப் பிரசுரங்களையும் அவர், மக்களின் பார்வைக்காக வைத்துள்ளார். தெல்தெனியவில், இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், ஜனாதிபதி வேட்பாளராக அன்று போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆசி வழங்கியதால் சிலர் தம்மை துன்புறுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, தனது விகாரைக்கு தீ வைத…
-
- 0 replies
- 383 views
-
-
கேப்பாபுலவு ஈழத்தின் முன்னுதாரணமான சனப் போராட்டம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள், தங்கள் பூர்வீக நிலத்தை மீட்கும் தொடர் போராட்டத்தை நடாத்தி ஒரு மாதம் கடந்த நிலையில் அதாவது 30 நாட்கள் தொடர் போராட்டத்தின் பின்னர் வெற்றி பெற்றுள்ளனர். கேப்பாபுலவு மக்கள் மேற்கொண்ட போராட்ட வழிமுறை மிகவும் கூர்மையானது. ஆனால் மிகவும் நெருக்கடி கொண்டது. அப்படி நெருக்கடி கொண்ட அந்தப் போராட்டத்தில்தான் உக்கிரமும் மிகுந்திருந்தது. இரவு பகலாக 30 நாட்கள் அந்த மக்கள் பனியிலும் வெயிலிலும் மேற்கொண்ட போராட்டம் சாதாரணமானதல்ல. இது உன்னதமான மக்கள் போராட்டம்…
-
- 0 replies
- 672 views
-
-
கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு: 20 பேர் கைது கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நீதிமன்ற வளாகத்தில் இருந்த 9 பேரும், சம்பவம் இடம்பெற்ற வேளையிற்கு நீதிமன்றத்திற்கு வருகை தந்த 11 பேருமே இவ்வாறு சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். மேலும், பாதாள குழு ஒன்றின் தலைவரான தெமுனி, ஹெரால்ட் ரோஹன என்ற கொனாகோவிலே ரோஹா என்பவரை கொலை செய்வதற்காக இந்த ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/17254
-
- 0 replies
- 136 views
-
-
வவுனியாவில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து : ஒருவர் படுகாயம் : மோட்டார் சைக்கிளை வீதியில் விட்டு இருவர் தப்பியோட்டம் (படங்கள்) வவுனியாவில் இன்று (01) இரவு 7.45 மணியளவில் மன்னார் வீதியிலுள்ள தொழில்நுட்பக் கல்லூரிக்கு முன்னால் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்னார் வீதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வவுனியா பகுதியிலிருந்து சென்ற மோட்டார் சைக்கிள் பாலாமைக்கல் வீதியில் திருப்ப முயன்றபோது மன்னார் வீதியில் வந்த மோட்டார் சைக்கிளுடன் எதிர் எதிரே மோதி விபத்திற்குள்ளாகியது. இதையடுத்து வவுனியா வீதியிலிருந்து மன்னார் வீதி நால…
-
- 0 replies
- 283 views
-
-
விமல்ராஜ் மீதான துப்பாக்கிச்சூடு: ஒருவர் கைது மட்டக்களப்பு மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் பணிப்பாளர் என்.விமல்ராஜ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர். களுதாவளை கடற்கரை வீதியை அண்டி அமைந்துள்ள அவரது வீட்டுக்கு கடந்த 22ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர், அவர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு, தப்பிச்சென்றனர். - See more at: http://www.tamilmirror.lk/192385/வ-மல-ர-ஜ-ம-த-ன-த-ப-ப-க-க-ச-ச-ட-ஒர-வர-க-த-#sthash.cmgnMkf8.dpuf
-
- 1 reply
- 464 views
-
-
பிலா குடியிருப்பு மக்களின் போராட்டம் மாலை முடிவுக்கு வந்துள்ளது. கேப்பாபுலவு , பிலகுடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி முதல் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்நிலையில் இன்றைய தினம் பிலகுடியிருப்பு காணிகளை விடுவிக்கப்பட்டது. முன்னதாக பிலகுடியிருப்பில் உள்ள 54 குடும்பங்களில் 37 குடும்பங்களின் காணிகள் முற்றாக விடுவிக்கப்பட்டது. 7 குடும்பங்களின் காணிகள் பகுதிகளவில் விடுவிக்கப்பட்டன ஏனைய 10 குடும்பங்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை. பிலகுடியிருப்பு மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கபாட்டால் மாத்திரமே போராட்டத்தை கைவிடுவோம் என கூறி மக்கள் தொடர்ந்து போராட்டத்…
-
- 0 replies
- 385 views
-
-
இலங்கைக்கு கால அவகாசம் வழங்கவேண்டியது அவசியம் ஜெனிவாவில் எடுத்துரைத்தது பிரிட்டன் (ரொபட் அன்டனி) ஜெனிவா மனித உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு இலங்கைதொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அமுல்படுத்துவதற்கு நாம் இலங்கைக்கு கால அவகா சத்தை வழங்கவேண்டும் என் பதனை ஏற்றுக்கொள்கின்றோம் என்று பிரிட்டன் நேற்று ஜெனிவாவில் தெரிவித்தது. ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரின் நேற்றைய உயர்மட்ட அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரிட்டனின் வெ ளிவிவகார பொதுநலவாய பாராளுமன்ற செயலர் ஆலோக் சர்மா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில் இலங்கை வெ ளிவிவகார அமைச்சர் மங…
-
- 4 replies
- 578 views
-
-
வாள்வெட்டில் கைதாகி பிணையில் சென்றவர்களே தாவடியிலும் அட்டகாசம் -மீளவும் கைதாகி விளக்கமறியலில் மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட செந்தூரன், தனு போன்றவர்கள் மீண்டும் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்றில் யாழ் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: யாழ்ப்பாணத்தில் பரவலாக இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில் தொடர்புபட்டிருந்த றொக்ஸ் ரீம்| அங்கத்தவர்கள் யாழ் பொலிஸாரின் கடும் பிரயத்தனத்தின் மத்தியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட 8 பேர் யாழ் நீதவான் நீதிமன்றத்தால் கடந்த 8 மாதங்களாகத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க ப்பட்டிருந்தனர். இந்நிலையில் கு…
-
- 1 reply
- 437 views
-
-
பாதாள உலகக் குழு செய்யவில்லையாயின் அப்போதைய அரசாங்கமா செய்தது ; அமைச்சரவைப் பேச்சாளர் கேள்வி முன்னைய ஆட்சிக்காலத்தில் களுத்துறை சம்பவம் போன்று நடைபெறவில்லையா? அப்படியாயின் முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களை பாதாள உலகக் குழு செய்யவில்லையாயின் அப்போதைய அரசாங்கமா செய்ததென அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன கேள்வியெழுப்பினார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவரால் களுத்துறை சிறைச்சாலையில் இருந்து வந்த பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலே…
-
- 0 replies
- 299 views
-
-
காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை: போராட்டம் தொடர்கிறது -எஸ்.நிதர்ஸன் முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பைச் சேர்ந்த 84 குடும்பங்களுக்குச் சொந்தமான 54 ஏக்கர் காணிகளில், 42 ஏக்கர் காணிகள், இன்று விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும், 42 ஏக்கர் காணியும் தற்போது முழுமையாக விடுவிக்கப்பட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 31 ஆம் திகதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்பகுதி மக்களின் காணியில் அமைந்துள்ள பாரிய விமான படைத்தளத்தை விட்டு விமான படையினர் வெளியேற வேண்டும் என கோரி படைத்தளம் முன்பாக மக்கள் குடியமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
-
- 0 replies
- 420 views
-
-
போராடினால்தான் எதுவும் கிடைக்கும் என்றாயிற்று எதுவும் தானாக நடக்கும் என்ற பேச்சுக்கே இந்த நாட்டில் இடமில்லாமல் போயிற்று. அந்தளவுக்கு எல்லாவற்றுக்கும் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தங்கள் சொந்த மண்ணில் குடியிருப்பதற்கு அனுமதியுங்கள் என்று மன்றாடியும் சரிவராத நிலையில், கேப்பாப்பிலவு மக்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர். அவர்களின் தொடர் போராட்டம் அவர்களின் நிலத்தை மீட்பதற்கு வழிவகுப்பது மட்டுமன்றி, தமிழர் தாயகத்தில் எங்கெல்லாம் படையினர் தமிழ் மக்களின் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனரோ அங்கெல்லாம் நில மீட்புப் போராட்டம் நடப்பதற்கும் வழிவகுத்துள்ளது. நில மீட்புக்காக மட்டுமல்ல காணாமல்போன வர்களின்…
-
- 0 replies
- 265 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சித்திரவதை குற்றத்தை இலங்கை அரசு ஏற்பு இலங்கையில் அரச படையினர் பாலியல் வன்முறை உள்ளிட்ட சித்திரவதைகளை திட்டமிட்டு ஒரு ஆயுதமாகப் பாவித்து வருகின்றனர் என்று கடந்த தசாப்த காலமாக பரவலாக முன்வைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டுக்களை இதுவரை மறுத்து வந்த இலங்கை அரசாங்கம் நேற்றையதினம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் முதன்முறையாக அவற்றை ஏற்றுக்கொண்டிருக்கிறது. இலங்கையில் சித்திரவதைகள் அரச படையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல் வேறு உள்நாட்டு, வெளிநாட்டு மனித உரிமை அமைப்புக்களும், ஆர்வலர்களும் தெரிவித்து வந்த நிலையில், ஜெனிவா ஐ.நா மனித பேரவையின் 34ஆவது கூட்டத்தில் நேற்று உரையாற்றிய வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர, அ…
-
- 0 replies
- 877 views
-
-
கேப்பாப்புலவு காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு “கேப்பாப்புலவு, புதுக்குடியிருப்பு பகுதிலுள்ள காணிகள், இரண்டொரு நாட்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என, இராணுவம் மற்றும் விமானப்படையினருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டளையிட்டுள்ளார்” என்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், நேற்று (27) நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய அவர், “கேப்பாப்புலவு காணிப்பிரச்சினை தொடர்பில், ஜனாதிபதியைச் சந்தித்துக் பேச்சுவார்த்தை நடத்தினோம். அங்கு 54 காணிகளுக்கு உரிமங்கள் காணப்படுகின்றன. அதில் 42ஐ பரி…
-
- 2 replies
- 645 views
-
-
சிறிலங்காவை சுற்றிய கடலில் சீனாவுடன் போட்டி போடும் ஜப்பான் கடந்த 65 ஆண்டுகளாக நீடிக்கும் ஜப்பான் – சிறிலங்கா ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு, இவ்விரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகக் காணப்படுகிறது. குறிப்பாக இந்திய மாக்கடலின் கடல்சார் பாதுகாப்பு உறவானது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவ்விரு நாடுகளும் இணைந்து கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஏனைய கடல்சார் விவகாரங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை ஜனவரி மாதம் ஆரம்பித்தன. சிறிலங்காவின் கடல் சார் பாதுகாப்பு மற்றும் குற்றங்களை எதிர்ப்பதற்கான திறனை வளர்த்துக் கொள்ளல் போன்ற விடயங்களுக்காக ஜூன் 2016 அன்று ஜப்பானால் சிறிலங்காவிற்கு 16.3 மில்லியன் டொலர் பெறுமதியான உதவித் திட்டம் வழங்கப்பட…
-
- 0 replies
- 409 views
-
-
சில பொலிஸ் அதிகாரிகளின் கவனயீனக்குறைவினால், முழு பொலிஸ் சேவைக்கும் அவப்பெயர் உண்டாகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிராண்பாஸ் பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பொரளையிலிருந்து தனது முச்சக்கரவண்டியை செலுத்தியுள்ளார். இதன் போது குறித்த சாரதி வீதி விதிமுறைகளை மீறியதால் நீதிமன்றத்தில் பெப்ரவரி 30 ஆம் திகதி ஆஜராகுமாறு போக்குவரத்து பொலிஸார் உத்தரவு பத்திரம் ஒன்றை வழங்கியுள்ளனர். பொலிஸார் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்ற சாதரண விடயத்தை மறந்து கவனயீனமாக செயற்பட்டதால் குறித்த முச்சக்கரவண்டி சாரதி குறித்த உத்தரவு பத்திரத்தை சமுக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். குறித்த புகைப்படம் தற்போது சமுகவலைத்த…
-
- 0 replies
- 286 views
-
-
படையினரை பயன்படுத்தி ஆட்சியை பிடிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பினர் முயற்சிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராக செயற்படுவதாக போலியான தகவல்களை மகிந்த அணியினர் பரப்பு வருவதாகவும் இதன் ஊடாக இராணுவத்தை அரசாங்கத்துக்கு எதிராக திருப்பும் சதித் திட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து அரசாங்கம் அவதானமாக செயற்பட்டு வருவதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/archives/19537
-
- 0 replies
- 236 views
-
-
உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறைமை தொடர்பான உத்தேச திட்டம் எதிர்வரும ;இரண்டு மாதங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிவழங்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில்; உருவாக்கப்படவுள்ள பல்வேறு பொறிமுறைகளில், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவும் ஒன்றாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் பொறிமுறைமை தொடர்பில் பல்வேறு தரப்பினரின் நிலைப்பாடுகளை அறிந்;து, இந்த பொறிமுறை உருவாக…
-
- 0 replies
- 263 views
-
-
இலங்கை விவகாரம் குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. விவாதத்தை ஆரம்பித்த தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் ஜேம்ஸ் பெரி, பொறுப்புக்கூறல், மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மீளமைப்பு விடயங்களில் அரசாங்கம் உரியவகையில் செயற்படவில்லை எனவும் சிறிய அளவான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதும், அவை போதுமானதாக இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு பதில் வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் இயன் பாஸ்லே, சமாதானத்தை கட்டியெழுப்புவது இலகுவான விடயம் இல்லை என்று குறிப்பிட்டுள…
-
- 0 replies
- 259 views
-
-
ஐ.நா பொதுச் செயலாளர் இலங்கைக்கு வர உள்ளார் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுசெயலாளர் அந்தோனியோ குட்டேரெஸ் இலங்கைக்கு வர உள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்றிருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா பொதுச் செயலாளரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட பொதுசெயலாளர் குட்டாரெஸ், விரைவில் இலங்கை வருவதாக உறுதியளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் அமைப்பின் புதிய பொதுச் செயலாளர் இதுவரையில் இலங்கை வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/19547
-
- 0 replies
- 322 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, 2015ஆம் ஆண்டு நிறைவே ற்றப்பட்ட ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் தருமாறு பகிரங்க கோரிக்கையை விடுக்க வில்லை. 2015 ஒக்ரோபரில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் கால அவகாசம் கோரும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முன்னர் கூறியிருந்தார். இந்த நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று உரையாற்றும் போது, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர 18 தொடக்கம் 24 மாத கால அவகாசத்தை கோருவார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், வெளிவிவகார அமைச்சர் தனது உரையில், மேலதிக காலஅவகாசம் வழங…
-
- 0 replies
- 344 views
-
-
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் இடம்பெற்ற ஏழு மாத கர்ப்பிணி பெண் மீதான படுகொலை வழக்கு விசாரணையில் உண்மையான குற்றவாளி இவரே என ஒருவரை குறித்து அவர் தொடர்பான தகவல்கள் மின்னஞ்சல் மூலம் ஊடகவியலாளர்கள் சிலருக்கு இனந்தெரியாத ஒருவரால் அனுப்பப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் ஊர்காவற்றுறை கரம்பொன் எனும் இடத்தில் வீட்டில் தனித்திருந்த ஏழு மாத கர்ப்பிணி பெண்ணொருவர் இனந்தெரியாத சிலரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் இருவரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்…
-
- 0 replies
- 495 views
-
-
மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் உறுதியாகவுள்ளதாக, அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரின் 34வது அமர்வில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பில் கடந்த 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இணைப் பங்காளர்களாக நாம் இணைந்து கொண்டு சுமார் ஒரு வருடங்களுக்கு மேற்பட்டுள்ள அல்லது 15 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இன்று நான் உரையாற்றுகிறேன். சிலர் எமது அந்த செயற்பாட்டை நாட்டுக்கு செய்த காட்டிக் கொடுத்தல் மற்றும் துரோகமாக விமர்சித்து வருகின்றனர்.…
-
- 0 replies
- 353 views
-
-
நீதிமன்றத்தை அவமதித்தது தொடர்பாக பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை மேல் முறையிட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதியன்று, ஊடகவியலாளர் பிரகித் எக்னளிகொட காணாமல் போனது தொடர்பான வழக்கு ஹோமாகம நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போது நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் முலம், கலகோட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சாட்டி கோமாகம மாஜிஸ்ட்ரேட் நீதிபதி ரங்க திசநாயக்க புகாரொன்றை சமர்பித்திருந்தார். இதன்படி சட்lடமா அதிபரினால் ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்தி ரிக்கை வாசிக்கப்பட…
-
- 0 replies
- 320 views
-
-
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் வசமுள்ள ஏழரை ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு ள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட இராணுவ கட்டளை அதிகாரி தெரிவித்துள்ளார். எனினும் குறித்த ஏழரை ஏக்கர் காணிக்குள் தங்களை விடும் பட்சத்திலேயே போராட்டத்தைக் கைவிடுவோம் என புதுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம. பிரதீபன் ஆகியோர் புதுக்குடியிருப்பில் கடந்த 26 ஆவது நாளாக நிலமீட்புக்காகத் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை இன்று சந்தித்தனர். இதன்போது, முல்லைத்தீவு இராணுவ கட்டளை அதிகாரியினால் மாவட்ட அரசாங்க அதிகாரிக்கு…
-
- 0 replies
- 379 views
-
-
நலமுடன் உள்ளதாக வடக்கு முதல்வர் அறிவிப்பு வடக்கு மாகாண முதலமைச்சர் உடல் நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலை யில் தற்போது நலமாக இருப்பதாக க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போது தான் நலமாக இருப்பதாகவும், சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு திரும்பியுள்ளதா கவும் வடக்கு முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது சில பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டியுள்ளது என்றும், தனது வேலைகளை இப்போது தாமே செய்துவருவதாகவும் கூறியுள்ளார். முதல்வரின் உடல்நலம் குறித்து நேற்று சிங்கள ஊடகம் ஒன்று தவறான செய்தியை பிரசுரித்திரு…
-
- 1 reply
- 299 views
-