Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அர்ஜுன மகேந்திரன் பொறுப்புமிக்க எந்த அரச பதவியிலும் இல்லை : அரசாங்கம் அர்ஜூன மகேந்திரன் தற்போது அரசாங்கத்தின் எந்தவொரு உத்தியோகப்பூர்வ பதவியிலும் இல்லை என்பதை மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். அவர் ஒருசில அமைச்சர்களை சந்தித்துப் பேசலாம். ஆனால் அவர் எந்தவொரு பொறுப்புமிக்க பதவியிலும் இல்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், கேள்வி: மத்தியவங்கியின் முன்னாள் ஆளு…

  2. தெற்கில் துப்பாக்கி காட்டிய கோத்தா சண்டியர் முன்னாள் பாது­காப்புச் செயலர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ வடக்கில் யுத்தம் நடை­பெற்­ற­போது தெற் கில் துப்­பாக்­கி­களைக் காட்­டிக்­கொண்­டி­ருந்தார். அவர் தெற்­கி­லேயே சண்­டித்­த­னத்தைக் காட்­டினார். ஆனால், யுத்தம் வடக்கில் நடை­பெற்­றது என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார். அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழு­ப­பிய கேள்­வி­க­ளுக்கு பத­லி­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்:- கேள்வ…

  3. மஹிந்த ராஜபக்ஷ பெற்று வளர்த்த குழந்தையை நாம் கொல்ல முடியுமா? மஹிந்த ராஜபக்ஷ பெற்றெடுத்து ஐந்து வருடங்களாக வளர்த்த குழந்தையை கொலை செய்யுமாறு எங்களிடம் கூறுகின்றனர். எமது நாட்டுக்கு தனியார் கல்லூரி மருத்துவக்கல்லூரிகள் கட்டாயம் அவசியமானது. சைட்டம் கல்லூரியின் தரம் தொடர்பில் மருத்துவ சபை கேள்வி எழுப்புவதற்கு உரிமையில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் மருத்துவ பீடம் அமைக்கப்பட்டபோது கோத்தாவுக்கு அஞ்சிக்கொண்டு மௌனமாக இருந்தவர்கள் இன்று சைட்டத்தை எதிர்க்கின்றனர் என்றும் ராஜித்த சேனாரட்ன குற்றம் சாட்டினார். மேலும் மஹிந்த ராஜபக்ஷ பெற்றெடுத்து ஐந்து வருடங்கள…

  4. ஒரே இரவில் காணிகளை வழங்க முடியாது ; கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பில் அரசாங்கம் தெரிவிப்பு காணிகளை வழங்குமாறு கோரி மக்கள் போராட்டம் நடத்தினாலும் ஒரே இரவில் காணிகளை வழங்கிவிட முடியாது. அரசாங்கம் காணிகளை எப்படியாவது வழங்கும் என்று தெரிந்தே மக்கள் போராட்டம் நடத்துகின்றனர் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். கடந்த ஆட்சி காலத்தில் போராட்டங்களை நடத்துவதற்கு அஞ்சிக்கொண்டிருந்த மக்கள் இன்று நல்லாட்சி அரசாங்கத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துக…

  5. தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் : புகைப்படம் எடுக்கும் விமானப்படை முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடலுக்கு கிழக்காக அமைந்துள்ள, கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பில் விமானப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள, 84 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றி இன்றுடன் பதினேழாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் விடுவிக்கப்படும் என்ற உறுதி மொழியை நிராகரித்த மக்கள், தமது சொந்த நிலங்களில் கால் பதிக்கும் வரை போராட்டம் தொடருமென தெரிவித்து தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் போராட்டத்துக்கு வருபவர்களையும…

  6. விடுவிக்கப்படாத காணி விவகாரம் : ஜனாதிபதியுடன் கலந்துரையாட கூட்டமைப்பு தீர்மானம் முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அவசர கலந்துரையாடலை நடத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. விடுவிக்கப்பட்டதாககக் கூறப்பட்ட போதிலும் தங்களது காணி இதுவரை கிடைக்கவில்லை என்த் தெரிவித்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் இந்த நிலமீட்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவில் இரண்டு நில மீட்புப் போராட்டங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கு…

  7. வெற்று வாக்குறுதிகளை மட்டும் நம்பி போராட்டத்தை கைவிடமாட்டோம் : கேப்பாப்புலவு மக்கள் காணி விடுவிக்கப்படும் என்ற தகவலை அடுத்து ஆவலோடு காத்திருக்கின்றோம். வெற்று வாக்குறுதிகளை மட்டும் நம்பி போராட்டத்தை கைவிடமாட்டோம். எமது சொந்த நிலங்களில் கால் பதித்த பின்னரே எமது போராடடத்தை நிறுத்துவோமென இன்றும் 16 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென விமானப்படை முகாமின் முன்பாக கொட்டும் பனியிரவையும் சுட்டெரிக்கும் வெயிலையும் கொட்டும் மழையையும் பொர…

  8. யாழ் விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றியத் தூதுக் குழுவினர் வடக்கு மாகாணத்திற்கு விஐயம் செய்திருக்கின்ற ஐரோப்பிய ஒன்றியத் தூதுக் குழுவினர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனைச் சந்தித்து மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். காலை 9 மணிக்கு யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த மேற்படித் தூதுக் குழுவினர் ஏ9 வீதி கைதடியிலுள்ள மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனைத் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடினர். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மாகாணத்த…

  9. மாணவர்களுக்கிடையில் மோதல்: 6 பேர் வைத்தியசாலையில்; 10 பேர் கைது கொழும்பிலுள்ள மூன்று பிரதான பாடசாலைகள் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/191593/-ம-ணவர-கள-க-க-ட-ய-ல-ம-தல-ப-ர-வ-த-த-யச-ல-ய-ல-ப-ர-க-த-#sthash.knyRL4jd.dpuf

  10. வழங்கப்பட்ட பாதுகாப்பு அசௌகரியமாக உள்ளது – மக்களை சுதந்திரமாக சந்திக்க முடியவில்லை – சுமந்திரன்: தனக்கு வழங்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அசௌகரியமான சூழலை ஏற்படுத்தி உள்ளது எனவும், மக்களுடன் சுதந்திரமாக பேச முடியவில்லை எனவும் , இந்த பாதுகாப்பை தான் விரும்பவில்லை எனவும் , ஆனாலும் தற்போது பாதுகாப்பு அத்தியாவசியமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்து உள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , என்னை மூன்று தடவைகள் கொலை செய்ய முயற்சித்து உள்ளார்கள். என கிளிநொச்சி நீதிமன்றில் பொலிசார் எழுத்து மூலம் தகவல்கள் வழங்கியுள்ளனர். என்னை கொல்வதற்கு வெளிநாட்டில் இருந்து பணம் மற்ற…

  11. போராட்டத்திலீடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகள் யாவும் விடுவிக்கப்படும் : பாதுகாப்பு அமைச்சு விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிக்கவேண்டுமெனக்கோரி பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்படைத்தளம் முன்பாக கடந்த 14 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் குறித்த போர்டடாக்களத்துக்கு சற்றுமுன்னர் (ஒரு மணியளவில்) வருகைதந்த முல்லை மாவட்ட அரச அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் குணபாலன் ஆகியோர் மக்களிடம் உங்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என தெரிவித்தனர். இதில் மக்களிடம் கருத்து தெரிவித்த அரச அதிபர், சற்றுமுன்னர் எனக்கு …

  12. கருணா தலைமையில் புதியக்கட்சி உதயமானது வா.கிருஸ்ணா வடக்கு, கிழக்கை இணைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்னும் பெயருடன், முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் இந்தப் புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று (11) காலை, மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள போக்கஸ் விடுதியில் நடைபெற்றது. மட்டக்களப்பில் இயங்கிவரும் நாம் திராவிடர் கட்சியும், இதன்போது தமது ஆதரவைப் புதிய கட்சியின் உருவாக்கத்துக்கு வழங்கியுள்ளது. முன்னாள் மீள்கு…

  13. காணிகளிலுள்ள எமது அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையில் இராணுவம்! கேப்பாப்பிலவு மக்கள் குற்றச்சாட்டு முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் விமானப்படையினர் வசமுள்ள தமது காணிகளை மீளவும் தங்களிடம் விரைவாக கையளிக்கவேண்டும் எனக்கோரி பிலவுக்குடியிருப்பு மக்கள் இரவு பகலாக கொட்டும் பனியையும் கொளுத்தும் வெயிலையும் பாராது பதின்னான்காவது நாளாகவும் இன்று போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமது காணிகளிலுள்ள வரலாற்று அடையாளங்கள் மற்றும் பயன்தரு மரங்கள் என்பவற்றை இராணுவத்தினர் அழிப்பதாக நேற்று மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தாம் போராட்டம் ஆரம்பித்த பின்னர் இந்த இடத்தில் வருகை தருபவர்களிடம் தமது காணி…

  14. "வாய் திறந்தால் பொய் சொல்பவர் தான் சுமந்திரன்" வாய் திறந்தால் பொய் சொல்பவர் தான் சுமந்திரன். இவ்வாறு பொய் சொல்லிச் சொல்லியே சுமந்திரன் தத்தளித்துக் கொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மணற்தறை வீதியிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்திற் நேற்று மாலை ஊடகவியியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது கேப்பாபபிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரதமைச் சந்தித்திருந்தால் தீர்வு கிடைத்திருக்குமென கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளியிட்டிருக்கும் கருத்து குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரி…

  15. விடுதலைப் புலிகளை வைத்து சுயலாபம் அடைகின்ற கோமாளிகளின் சுயரூபம் அம்பலமாகியுள்ளது - அனந்தி சசிதரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பாவித்து தமது சுயநலப்பயணத்தை ஆரம்பித்துள்ளனரே தவிர தமிழினத்தின் விடிவுக்கான எந்த அத்திவாரமும் இடப்படவில்லை என்பதே எனது கருத்தாகும் என தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை வைத்து சுயலாபம் அடைகின்ற கோமாளிகளின் சுயரூபம் அம்பலமாகியுள்ளதாக குறிபப்பிட்டுள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வில் எம்மை மேடையில் ஏற்றவில்லை மாறாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பாவித்து தமது சுயநலப்பயணத்தை ஆரம்பித்துள்ளனரே த…

  16. விக்டோரியா மாநிலத்தின் ஆளுனருடன் பிரதமர் ரணில் சந்திப்பு அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டின் விக்டோரியா மாநில ஆளுனர் லிண்டா டேசாவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஆளுனர் லிண்டா டேசாவும் பங்கேற்கவுள்ளார்கள். இதேவேளை டிக்கீன் பல்கலைக்கழகம் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கௌரவ கலாநிதி பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரம். கல்வி …

  17. சுமந்திரன் படுகொலை சதி விவகாரம்: 2 ஆவது சந்தேகநபரை மீள தமது பொறுப்பின் கீழ் எடுத்து விசாரணை செய்ய ரி.ஐ.டி. நடவடிக்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்ட விவகாரம் தொடர்பில் கைதுச் எய்யப்ப்ட்டுள்ள முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களில் ஒருவரான வேலாயுதம் விஜேய் குமார் என்பவரை மீள பயங்கரவாத புலனாய்வாளர்களின் (ரி.ஐ.டி.) பொறுப்பில் எடுத்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பயங்கரவாத புலனயவுப் பிரிவின் வவுனியா அலுவலகம் ஊடாக கைது செய்யப்ப்ட்ட அவர் பொலிஸ் விசாரணையின் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்ப்ட்டுள்ள நிலையிலே…

  18. ஓமந்தையில் மரகடத்தல் முறியடிப்பு சட்டவிரோதமாக கடத்த முற்பட்ட முதிரை மரக்குற்றிகள் வவுனியா ஓமந்தை உப வன பரிபாலனத் திணைக்களத்தினால் நேற்றிரவு கைப்பற்றப்பட்டுள்ளன. வவுனியா ஓமந்தை உப வன பரிபாலனத் திணைக்களத்திற்கு நேற்று கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஒமந்தை விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் வவுனியா ஓமந்தை பெரியமடு பகுதியிலிருந்து கனகராயன் குளம் நோக்கி சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த மூன்று இலட்சம் பெறுமதியான 13 முதிரை மரக்குற்றிகளையும் ஒரு பட்டா ரக வாகனத்தினையும் கைப்பற்றியுள்ளனர். முதிரைக்குற்றிகளை கடத்த முற்பட்ட பட்டா ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டதுடன் ஒருவர் தப்பியோடியுள்ளார். கடத்தல் சம்பவத்துடன் தொட…

  19. அதிகாரப் பகிர்வில் ஆகக்கூடிய அதிகாரங்களை பெற முயல வேண்டும் -கிழக்கு முதலமைச்சர் புதிய அரசியலைப்பில், தமிழ், முஸ்லிம் சமூகங்கள் கூட்டாக இணைந்து ஆகக்கூடிய அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முயன்று வருவதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். எங்களுக்குள் ஒரு தீர்க்கமான உடன்பாடு எய்யப்பட வேண்டும் என்பதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தரும் உறுதியாக உள்ளார்கள் எனவும் இரு சமூகங்களும் மனப்பூர்வமாக இணைந்தால், அரசாங்கத்திடமிருந்து ஆகக் கூடிய அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ‘இரண்டு சமூகங்களுக்குமிடையில் அதிக வ…

  20. கிளிநொச்சியில் வீடுகளுக்கு செல்லாத மின்சார சிட்டைகள் வீதிகளில் சிதறிக்கிடகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் பல கிராமங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மின் கட்டணத்திற்கான சிட்டைகள் வழங்கப்பட்டவில்லை. ஆனால் பல கிராமங்களுக்குரிய நூற்றுக்கணக்கான மின் கட்டண சிட்டைகள் வீதிகளில் சிதறிக்கிடக்கின்றன. கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் பொறிக்கடவை சந்தி தொடக்கம் குடமுறுட்டி பாலம் வரையான பகுதிகளில் இவ்வாறு கிளிநொச்சி மின்சார சபையின் மின் கட்டண சிட்டைகள் வீதிகளில் எறியப்பட்டுள்ளது. குறித்த மின் கட்டண சிட்டைகள் கடந்த வருடம் நவம்பா் மாத்திற்குரியதும், கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம், முரசுமோட்டை,ஊரியான், …

  21. அம்பகாமம் காட்டுக்குள் புலிகளின் ஆட்லறி செல்கள் மீட்பு முல்லைத்தீவு அம்பகாமம் காட்டு பகுதியிலிருந்து இன்று காலை புலிகள் பயன்படுத்திய ஆட்லறி செல்கள் மீட்கப்பட்டுள்ளன. விமானப்படையினரால் குறித்த ஆட்லறி செல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு குண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக விமானப்படையினா் தெரிவித்துள்ளனா். ஒவ்வொரு எறிகணையும் 16 கிலோ கிராம் கொண்டது என்றும் விமானப்படையினா் தெரிவித்துள்ளனா். குறித்த அம்பகாமம் காட்டுப்பகுதிக்கு அருகில் தான் 2009 ஆம் ஆண்டுக்கு முன் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய விமானப் படைத்தளம் காணப்படுகிறது. தற்போது அது இலங்கை விமானப்படையினரின் பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. http…

  22. கனகபுரம் துயிலுமில்லம் காணியில் வேலியமைத்த தனியாா் – பிடுங்கி எறிந்தது பிரதேச செயலகம் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் காணியில் இன்று செவ்வாய் கிழமை 15-02-2017 தனியாா் ஒருவரினால் வேலி அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது குறித்த மாவீரர் துயிலுமில்லம் காணியின் ஒரு பகுதி தனக்குச் சொந்தமானது எனத் தெரிவித்து தனிநபா் ஒருவா் கூலியாட்களை கொண்டு கம்பி கட்டைகள் போட்டப்பட்டு வேலி அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தாா். கடந்த நவம்பா் மாதம் மாவீரர் நாள் நிகழ்வில் பொதுச் சுடரேற்றி நிகழ்வு நடத்தப்பட்ட இடத்திற்கு அருகில் எல்லையிட்டு வேலி அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தாா் இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கரைச்சி …

  23. இராணுவத்தை விட்டுத் தப்பியோடிய 563 படையினர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார். இராணுவத்தை விட்டு தப்பிச் சென்றவர்கள் மீண்டும் படைகளில் இணைந்து கொள்வதற்கு அல்லது சட்டரீதியாக படைகளில் இருந்து விலகிக் கொள்வதற்கு, பாதுகாப்பு அமைச்சு கடந்த ஆண்டு இறுதியில் பொதுமன்னிப்புக் காலத்தை அறிவித்திருந்தது. 2016 டிசெம்பர் 31ஆம் நாளுடன் பொதுமன்னிப்புக் காலம் முடிவடைந்த நிலையில், கடந்த 9ஆம் நாள் இராணுவமும், காவல்துறை யும் இணைந்து, தப்பியோடிய படையினரைக் கைது செய்யும் பாரிய நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன் போதே 563 தப்பியோடிய படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ வரலாற்றில் தப்பியோட…

  24. நீச்சல் குளத்துடன் இலங்கையில் அதிக நவீன சிறைச்சாலை : புகைப்படங்கள் வெளியாகின அம்பாந்தோட்டை அகுனுகொலபெலச என்ற பகுதியில் 58 ஏக்கர் நிலப்பரப்பில் 4 ஆயிரத்து 996 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற சிறைச்சாலையின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி குறித்த சிறைச்சாலையின் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இச் சிறைச்சாலையில் இரண்டாயிரம் கைதிகளை சிறை வைக்கும் வசதி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப் புதிய சிறைச்சாலையில் ஒரு வைத்தியசாலையில்,தொழிற்கல்வி பயிற்சி மையம், கைத்தொழிற்காக தனியொரு கட்டிடம், அதிகாரிகளுக்காக 140 தங்குமிடங்கள் மேலும் நான்கு ஆயிரம் மீற்றர் நீளமான ஓடுபாதை , 25 மீற்றர் நீளம…

  25. இலங்கை, தனது கடப்பாட்டை மீறியதாக காட்டம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில், இலங்கை தனது கடப்பாட்டை மீறியுள்ளதாக, சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் (ITPJ) குற்றஞ்சாட்டியுள்ளது. இதைவிட இன்னும் இரண்டு நியமனங்கள் துன்பம் தருவதாக உள்ளதாக அந்தச் செயற்றிட்டம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் அந்தச் செயற்றிட்டம், நேற்று (13) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐ.நா அறிக்கையில் சித்திரவதை செய்தவர் எனப் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவர், பாதிக்கப்பட்டவர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்புக்கான அதிகாரசபை எனப்படும் அமைப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.