Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காரைநகரில் 3.25 மில்லியன் செலவில் அபிவிருத்தி திட்டங்கள் வடமாகாணத்தில் சுற்றுலாத்துறையினை மேன்படுத்தும் வகையில் சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டம் நேற்று யாழ் காரைநகர் கசூரினா கடற்கரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அவுஸ்திரேலிய அரசின் உதவியுடன் நெல்சிப் திட்டத்தின் கீழும் வடக்கு கிழக்கு உள்ளுராட்சி சபைகள் மேம்படுத்தும் திட்டதின் கீழ் 3.25 மில்லியன் ரூபாயில் கசூரினா கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளுக்கான நிழல் தரிப்பிடங்கள் 20, மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதியாக இருப்பிட, மற்றும் தங்குமிட வசதிகள் 16 மற்றும் கடல்வள சுற்றுச்சூழல் மேம்பாடு வேலைத்திட்டம் என்பன நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட…

  2.  ‘ரூ. 66 மில்லியனை ஏப்பம் விட்ட அர்ஜுன’ திலங்க கனகரத்ன இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்த 21 மாதங்களில், மத்திய வங்கியின் 66 மில்லியன் ரூபாயை, முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தியுள்ளார் என, ஊழலுக்கெதிரான குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான வசந்த சமரசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். 163 சந்தர்ப்பங்களில் இவ்வாறு பணத்தை அவர் மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டிய வசந்த, மத்திய வங்கியின் உள்ளக கணக்காய்வு அறிக்கையின் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். “2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1ஆம் திகதி வரையான மகேந்திரனின் வெளிநா…

  3. சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சி: சந்தேகம் எழுந்துள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சி இடம்பெற்றமை தொடர்பிலான கருத்துக்களின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படவில்லை எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். வட மாகாணத்தில் இராணுவத்தினர் தொடர்ந்து முகாமிட்டு இருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான கதைகள் தெரிவிக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் ஏற்படுவதாகவும் வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த…

  4. அதிகாரங்களை மக்கள் தெரிந்து கொண்டால் கேள்வி எழுப்புவார்கள் - கஜதீபன் வடக்கு மாகாண சபையினுடைய அதிகாரங்களை சரியான முறையில் மக்கள் விளங்கிக் கொள்ளுவார்களே ஆனால் இத்தனை அதிகாரங்களை வைத்துக் கொண்டா இவ்வளவு வேலைகளை செய்கிறீர்கள்..? என மக்களே கேள்வி கேட்க கூடும் - இவ்வாறு வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மானிப்பாய் மீன்சந்தையை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மானிப்பாய் பிரேதச சபையானது நகர சபையாக மாற்றப்பட வேண்டும். இங்கு மக்கள் தொகை அதிகமாக உள்ள நிலையில் சுன்னாகம் பிரேதச சபைய…

  5. பொறுப்புக்கூறலில் வேகமில்லை – ரணிலை எச்சரித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பொறுப்புக்கூறல் தொடர்பான விவகாரங்களில், சிறிலங்கா மெதுவாகவே செயற்படுவதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்,கவலை வெளியிட்டுள்ளார். டாவோசில் கடந்த மாத நடுப்பகுதியில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டிருந்தார். இந்த மாநாட்டின் பக்க நி்கழ்வாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்கா பிரதிநிதி ரவிநாத ஆ…

    • 0 replies
    • 335 views
  6. எழுக தமிழ் - 25 க்கு மேற்பட்ட பிரச்சினைகளை முன் கொண்டுவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் மேச்சல்தரை, காணி, காணாமல் ஆக்கப்பட்டோர் போன்ற 25 க்கு மேற்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். இதனை இந்த எழுக தமிழ் எழுச்சி பேரணி மூலம் கொண்டுவரவுள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்தரன் தெரிவித்தார். எதிர்வரும் 10 திகதி இடம்பெறவுள்ள கிழக்கு எழுக தமிழ் நிகழ்வு தொடர்பாக மட்டக்களப்பு புகையிரத வீதியில் உள்ள கூட்டுறவு சங்க மண்டபத்தில் ஊடகவியளாளர் சந்திப்பு நேற்று (05) தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்தரன் கலந்து கொண்டு கருத்து …

    • 0 replies
    • 334 views
  7. பதவி விலகினார் சந்திரசிறி முன்னாள் பிரதியமைச்சர் சந்திரசிறி சூரியாராச்சி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மின்னேறிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=87636

    • 0 replies
    • 267 views
  8.  ‘சி.வியின் கனவே கலப்பு நீதிமன்றம்’ தர்ஷன சஞ்சீவ வடக்கு மாகாணத்தில் கலப்பு நீதிமன்றமொன்றை உருவாக்குவதற்கு, அம்மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முயன்றுவருவதாகத் தெரிவித்த திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சிகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அவரின் அந்த முயற்சிகள், வெறுமனே கனவும் எனவும் அவை நனவாகாது எனவும் குறிப்பிட்டார். களுத்துறையில் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். சில அரசியல்வாதிகள், வெளிநாட்டுச் சக்திகளினதும் நிறுவனங்களினதும் அடிமைகளாயுள்ளனர் எனக் குற்றஞ்சாட்டிய அமைச்சர், சில வசதிகளைப் பெற்…

  9. ஜனாதிபதி தலையிடுவார்? முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கூடிய கவனம் செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, மக்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து, உடனடித் தீர்வினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கவுள்ளதாக, உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விவகாரம் தொடர்பில் இன்றையதினம் பாதுகாப்புத் தரப்பினருடன் ஜனாதிபதி கலந்தாலோசிக்கக்கூடும் எனவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. - See more at: http://www.tamilmirror.lk/191…

  10.  ‘பிரதேச செயலகத்தை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் செய்வோம்’ ஜே.ஏ.ஜோர்ஜ் “பாதுகாப்புப் படைகளுக்காக நிலச் சுவீகரிப்பு செய்யவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்த நிலையில், அரசாங்கம் இதுவரை அது தொடர்பில் எந்தவித பதிலையும் வழங்கவில்லை” என, தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், “இது தொடர்பில் அராசாங்கம் மெளனம் சாதிப்பது ஏன்?” என்றும் கேள்வியெழுப்பினார். யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் குறித்துக் கேட்டபோதே, அவர் இதனை நேற்று கூறினார். இது தொடர்பில், யாழ். மாவட்டச் செயலாளருடன் க…

  11. கொழும்பில் மருத்துவ பீட மாணவன் மீது தாக்குதல் : பல பிரதேசங்களில் ஆர்ப்பாட்டம் கொழும்பில் அண்மையில் வைத்தியபீட மாணவர்கள் மேற்கொண்ட போராட்டத்தில் மாணவர்கள் பொலிஸாரினால் தாக்கப்பட்டதை கண்டித்து இன்றைய தினம் பல பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ராகம மருத்துவ பீட மாணவர்கள், ராகம வைத்தியசாலைக்கு முன்னாலும், பேராதனை மருத்துவ பீட மாணவர்கள் கலஹா சந்தியிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அதில் அம் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை, கொழும்பு மருத்துவ பீட மாணவர்கள் அந்த மருத்துவ பீடத்திற்கு அருகில் இருந்து பேரணியாக லிப்டன் சுற்றுவட்டம் வரை சென்றுள்ளனர். http://www.virakesari.lk/

  12. எச்சரிக்கை .! புலிகள் மீண்டும் மீளிணைவு : (எம்.எப்.எம்.பஸீர்) புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலர் மீள ஒருங்கிணைந்து செயற்பட திட்டமிட்டமை தொடர்பிலான பல்வேறு தகவல்களை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணை ஒன்றூடாக வெளிப்படுத்தியுள்ளனர். கிளினொச்சியில் பாதைகைகளில் கடமையில் ஈடுபடும் பொலிஸாரை தாக்கி அவர்களது ஆயுதங்களை கொள்ளையிட்டு அதனூடாக தாக்குதல்களை நடத்துவது தொடர்பிலான தகவல்;களையே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் வெளிப்படுத்திக்கொண்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் பல தடவை முயற்சி செய்யப்பட்டுள்ள போதும் பொலிஸாரின் ஆயுதங்களை கொள்ளையிட அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் அந்…

  13. ஆறாவது நாளாகவும் தொடரும் கேப்பாபிலவு மக்களின் காணிவிடுவிப்புக்கான போராட்டம் முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிவிடுவிப்புக்கான போராட்டம் ஆறாவது நாளாக இன்றையதினமும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 84 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்றையதினம் கேப்பாபுலவிற்கு விஜயம் மேற்கொண்ட முதலமைச்சர் விக்கி மக்களின் போராட்டம் நியாயமா னது எனவும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்றும் பிலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். …

  14. கிழக்கிலும் விரைவில் போராட்டம் நடைபெறும் வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்ட தொடர் உண்ணாவிரத போராட்டத்தை கிழக்கிலும் வெகுவிரைவில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் அறிவித்துள்ளார். மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் மாஞ்சோலை கலாசார மண்டப திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பிரதமரின் கருத்து வேடிக்கைக்குரியது, தமிழர்களின் மத்தியில் பிரதமரின் கூற்றை ஒரு கேலிக் கூற்றாகவே பார்க்கின்றார்கள். வட, கிழக்கில் தங்களின் உறவுகளைத் தேடி நடாத்தும் போராட்டங்களை தென்னிலங்கையில் …

  15. மட்டக்களப்பில் காணி மற்றும் வீடு இல்லாதவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். குறித்த விடயத்தை முதலமைச்சர் இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு கட்டமாக கடந்த முதலாம் திகதி ஜனாதிபதியின் ஏறாவூர் விஜயத்தில் 1,762 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் சிங்களம், முஸ்லிம் மற்றும் தமிழ் என மூவின மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும், வீடுகள் இன்றி பல ஆண்டு காலமாக சிரமங்களை எதிர்நோக்கி வந்த 962 பேருக்கான புதிய வீடுகள் வழங்கி வைக்கப்பட்டதாகவும் ஹா…

  16. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை தோல்வியடைய செய்தது குறித்து குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குள் கோத்தபாய ராஜபக்ச முன்னணி வகிப்பதாக கூறப்படுகின்றது. பொதுபல சேனாவுடன் இணைந்து முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்ட மஹிந்த ராஜபக்சவுக்கு முஸ்லிம் மக்களின் ஆதரவு இல்லாமல் செய்ததாக கோத்தபாய மீது குற்றம் சுமத்தப்பட்டது. எனினும் கோத்தபாய ராஜபக்சவிடம் அவ்வாறான முஸ்லிம் எதிர்ப்பு ஒன்றை காண்பதற்கு இல்லை என தெரியவந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று இன்று தகவல் வெளியிட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்ச, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் முஸ்லிம் கோடீஸ்வரர்களுக்காக மேற்கொண்ட செயல்கள் தற்போது வெளியாகியுள்ளது.…

  17. காலிமுகத்திடலில்... இலங்கையில் 69ஆவது வருட சுதந்திரதின நிகழ்வு, ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தலைமையில் கொழும்பு, காலிமுகத்திடலில் இன்று (04) காலை இடம்பெற்றது. 'தேசிய ஒற்றுமை' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதம நீதியரசர் கனகசபாபதி ஸ்ரீபவன், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர். (…

  18. நிலையான அபிவிருத்திச் சட்டமூலத்தை வடக்கு மாகாணசபை நிராகரித்தது ஏன்?அமைச்சர் ஐங்கரநேசன் விளக்கம் நிலையான அபிவிருத்திச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு காரணம் வடக்கு மாகாண சபையின் வேலைகளை மத்திய அரசாங்கம் தங்கள் வசப்படுத்தவே என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவிதுள்ளார். இன்றையதினம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற யாழ் மாவட்ட பார ஊர்திகள் சங்கத்தின் சாதனையாளர் கௌரவிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் எமது அமைச்சுக்கு வரும் முறைப்பாடுகளில் அதிகமானவை கூட்டுறவு சம்பந்தமான முறைப்பாடு…

  19. புனர்வாழ்வு விடுதலை புலி உறுப்பினர்களுக்கு சுயதொழில் வாய்ப்பு : பத்தேகம சமித்த தேரர் புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்ட விடுதலை புலி உறுப்பினர்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மீண்டும் பிரிவினைவாத குழுக்களுடன் இணைந்துகொள்வார்கள் என தென்மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/16250

  20. வாள்வெட்டுடன் தொடர்புடைய மேலும் 11 பேர் கைது -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும், 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். கல்வியங்காடு, கோப்பாய், அளவெட்டி, சுன்னாகம், உரும்பிராய் பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர், வாள் மற்றும் கத்திகளை செய்து கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்க…

  21. இந்த நாட்டை அந்நியரிடமிருந்து மீட்டெடுப்பதற்காக தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் என்ற பேதமின்றி தேசப்பற்றுள்ள நமது முன்னோர்கள் இணைந்து போராடிப்பெற்றுக் கொண்ட சுதந்திரம் இது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவில், அரசாங்க அதிபர் தலைமையில் இன்று நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, அங்கு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த கால யுத்தத்தின் பின்னர் 12,000 புலிகள் சமாதானத்தை நோக்கி வந்து சமூக வாழ்க்கையில் இணைந்து கொண்டனர். அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு, இப்போது சுமூகமாக வாழ்கின்ற போதும் வாழ்வாதாரங்கள் இல்லாதவர்களாக, வளங்கள் இல்லாதவர்களாக அத்தியாவசியமான விடயங்களை நிறைவே…

    • 2 replies
    • 351 views
  22. மாலம்பே தனியார் மருத்துவ கல்லுரி ஓர் சொத்தாகும் – ஞானசார தேரர் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி ஓர் சொத்தாகும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இவ்வாறு தனியார் மருத்துவ கல்லூரிகள் அமைப்பதில் எவ்வித தவறும் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் தனியார் மருத்துவ கல்லூரிகளை அமைப்பதன் மூலம் இலங்கை மாணவர்கள் வெளிநாடுகளில் கல்விக்காக செலவிடும் பணம் சேமிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயில முடிவதில்லை எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/archives/16385

  23. சுமந்திரன் கொலை முயற்சி குறித்த விசாரணைகளுக்கு உதவத் தயார் – நோர்வே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொலை முயற்சி குறித்த விசாரணைகளுக்கு உதவத் தயார் என நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கைகான நோர்வே தூதரகம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. தமிழ் புலம்பெயர் சக்திகள் சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்துள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளது. நோர்வேவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் புலம்பெயர் தமிழ் தரப்பே சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்தது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க அண்மையில் கூறியிருந்தார். உத்தியோகபூர்வ அடிப்படையில் கோரிக்கை விடுக்கப்பட்டால் சுமந்திரன் கொல…

  24. மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு நகரில் தமிழ் சங்கள முஸ்லிம் ஊடகவியலாளர்கள் இன்று காலை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் தேசியக்கூட்டமைப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன், என்.சிறீநேசன் உட்பட கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கு கொண்டனர். ஊடகப்பணியில் ஈடுபட்டு படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமசிங்க, நசேன், நிர்மலராஜன, சிவராம் உட்பட பலரின் உருவப்படங்களையும் இவர்கள் ஏந்தியிருந்தனர். 2006ஆம் ஆண்டு திருமலையில் ஜனவரி 24 ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் படுகொலைக்கு இதுவரையில் தீர்…

  25. சம்பந்தன் சமூகமளிக்காமைக்கு இதுதான் காரணம் -ஏ.பி.மதன் கொழும்பு, காலிமுகத்திடலில் இன்று இடம்பெற்ற, 69ஆவது வருட சுதந்திரதின நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் கலந்துகொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மட்டுமே கலந்து கொண்டார். 'திருகோணமலையில் உள்ள ஆலயமொன்றில் இடம்பெறும் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துக்கொள்ளச் சென்றுள்ளமையால், எதிர்க்கட்சித் தலைவரால் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ள முடியவில்லை' என கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் எம்.பி, தமிழ்மிரருக்கு தெரிவித்தார். இது தொடர்பில், விழா ஏற்பாட்டு குழுவுக்கு, எதிர்க்கட்ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.