ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143398 topics in this forum
-
யாழ்.அரசடிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு : 4 பேர் சிக்கினர் யாழ்.அரசடிப் பகுதியில் கடந்த மாதம் 30 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு மற்றும் பெற்றோல் குண்டு வீசிய சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் பொலிஸாரால் இனங்காணப்பட்டுள்ளதோடு குறித்த நபர்களிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.அரசடிப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (30) வர்த்தக நிலையமொன்றின் மீது, 3 மோட்டார் சைக்கிளில் சென்ற 10 இளைஞர்கள் பெற்றோல் குண்டு வீசியதுடன், வர்த்தக நிலையத்தில் நின்ற இளைஞர்கள் மீது வாளால் வெட்டித் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். குறித்த தாக்குதலில் கடையில் வேலை செய்யும் இளைஞர் ஒருவரும் கடைக்குப் பொருட்கள் வாங…
-
- 1 reply
- 320 views
-
-
மீன் வாடிகள் தீ வைப்பு : தென்னிலங்கை மீனவர் இருவர் கைது முல்லைத்தீவு - நாயாறுப் பகுதியில் இருந்த தென்பகுதி மீனவர்களின் மீன் வாடிகளை தீயிட்டுக் கொழுத்தியதான சந்தேகத்தின் பேரில் தென்னிலங்கை மீனவர்கள் இருவர் நேற்று முன்தினம் மாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் விபரம் தெரிய வருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறுப் பகுதியில் கடந்த இரு நாட்களாக இரு வேறு இடங்களில் அமைந்திருக்கும் தென்பகுதி மீனவர்களின் மீன் வாடிகளை வேண்டுமென்றே தீயிட்டுக் கொழுத்தியதான சந்தேகத்தின் பேரில் இரு தென்னிலங்கை மீனவர்கள் நேற்று முன்தினம் மாலையில் முல்லைத்தீவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 334 views
-
-
போர்க்குற்ற விவகாரத்தில் அமெரிக்காவிடம் ஆதரவு கோரும் இலங்கை இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஜெனீவா பிரேரணைக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை உள்ளிட்ட நாடுகள் தொடர்பில் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்கும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்ப், சர்வதேச அநீதிகளை உதாசீனம் செய்யும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார். எனினும் அமெரிக்காவின் முன்னைய நிர்வாகம் உலகளாவிய சிறுபான்மை இனங்கள் தொடர்பில் கரிசனையுடன் செயற்பட்டிருந்தது. இதன் காரணமாகவே இலங்கையில் நடைபெற்ற விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் கலப்பு பொறிமுறை விசாரண…
-
- 0 replies
- 258 views
-
-
வடக்கின் மத ஸ்தலங்களை பாதுகாக்க புதுத் திட்டம் வடக்கிலுள்ள தொல்லியல் மதிப்புக்கொண்ட ஸ்தலங்கள் மற்றும் கலாசார மரபுரிமைகளை பாதுகாக்கும் பணிகள் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். “30 வருட போர் சூழலை அடுத்து, வடக்கில் அபிவிருத்திகளை முன்னெடுக்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், தேசிய நல்லிணக்கத்தையும், வடக்கிலுள்ள கலாசார மரபுரிமைகளை கொண்ட வழிபாட்டுத் தலங்களை பாதுகாப்பதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/191090/வடக-க-ன-மத-ஸ-தலங-கள-ப-த-க-க-க-ப-த-த-த-ட-டம-#sthash.R2v9al62.dpuf
-
- 0 replies
- 287 views
-
-
காரைதீவு மயானத்தில் வெளிக்கிளம்பும் சடலங்கள்..! காரைதீவு பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கடற்கரையை அண்டி அமைந்துள்ள காரைதீவு பொது மயானத்தில் புதைக்கப்பட்ட சடலங்கள் வெளியே தெரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதேச மக்கள் பாரிய அசொளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். ஒவ்வொரு வருடமும் நிலவும் சீரற்ற காலநிலையின் போது மயானத்தில் உள்ள சடலங்கள் வெளியே தென்படும் நிலை ஏற்படுகின்றனது என மக்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்று தற்போது குறித்தப் பகுதியில் சடலங்களும், எலும்புகளும் மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக ஒரு தீர்வை பெற்றுத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். http://www.virakesari.lk/article/16282
-
- 0 replies
- 360 views
-
-
ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் கேப்பாப்பிலவு செல்வார்களா? – காணிகள் விடுவிக்கப்படுமா? படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் கடந்த ஒரு வார காலமாக இரவு பகலாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கோப்பாப்பிலவில் படையினர் வசமுள்ள காணிகளை பார்வையிடுவதற்காக கொழும்பிலிலிருந்து இன்றைய தினம் (திங்கட்கிழமை) ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. படையினர் வசமுள்ள காணிகளில், விடுவிக்கப்படக்கூடிய பகுதிகளை விடுவிப்பதற்கு, அங்குள்ள விமானப்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 1 reply
- 355 views
-
-
பிரபாகரன் ஒரு முட்டாள் என்று கூறிய ஜே.ஆர் ஜயவர்தன : புதிய தகவல்களை கசிய விட்டது அமெரிக்கா இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன வெளியிடப்பட்டதாக கூறப்படும் கருத்துக்கள் மற்றும் அக்காலத்தில் முன்னெடுத்த பல நடவடிக்கைகள் தொடர்பான இரகசிய ஆவணங்கள் அமெரிக்காவினால் கசிய விடப்பட்டுள்ளது. இது குறித்த ஆவணங்கள் அமெரிக்க இராஜதந்திரியான பீட்டர் கல்பிரைத் என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'யாழ்ப்பாணத்தை தமிழீழ விடுதலை புலிகளிடம் இருந்து மீட்பதற்கு இரண்டு தடவைகள் இலங்கை இராணுவத்தினர் மறுப்பு தெரிவித்ததை அடுத்து இந்தியாவுடன் உடன்படிக்கையை ஏற்படுத்தும் நிர்ப்பந்தம் தமக…
-
- 0 replies
- 439 views
-
-
புதுக்குடியிருப்பில் ஆர்ப்பாட்டம்: பிரதேச செயலகம் முற்றுகை ராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக நுழைவாயிலை மறித்து கடந்த 4 தினங்களாக சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தி வந்த மக்கள், இன்றைய தினம் பிரதேச செயலகத்திற்குள் அதிகாரிகளை செல்லவிடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டுள்ள மக்கள், தமது காணிகளை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளளனர். பிரதேச செயலகத்திற்குள் அதிகாரிகள் நுழைவதை தடுத்து புதுக்குடியிருப்பில் போராட்டம் தொடர்கிறது:- ராணுவத்தின் வசமுள்ள…
-
- 0 replies
- 392 views
-
-
யாழ் பல்கலைகழக கிளிநொச்சி பீட வளாகத்தில் புனரமைக்கப்பட்ட புத்த கோவிலும், மறுக்கப்படும் பிள்ளையாா் கோவிலும்:- யாழ் பல்கலைகழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகா் பீடங்களில் சிறியளவில் பிள்ளையாா் கோவில் ஒன்றை அமைத்து வழிபடும் மாணவா்களின் முயற்சிக்கு நிர்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இது ஒர் உயா் கல்வி நிலையத்தில் காணப்படவேண்டிய பன்மைத்துவத்தை கேள்விக்குள்ளாக்கியது எனவும் மாணவா்கள் குறிப்பிட்டுள்ளனா். இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகம் மீள்குடியேற்றத்தின் ஆரம்ப காலங்களில் பாரிய இராணுவ முகாமாக காணப்பட்டது. முன்னைய அரசின் காலத்தில் இராணுவத்திடம் இருந்து மீளப்பெறப்பட்ட காணி யாழ் பல்கலைகழக …
-
- 0 replies
- 357 views
-
-
தீர்வையற்ற வாகனங்களை விற்பனை செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விபரம் வெளியானது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரிச்சலுகையைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வேறு நபர்களுக்கு கைமாற்றம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவில் கடந்த 3ஆம் நாள் தகவல் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த நிலையில், சிறிலங்கா மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் இருந்து, இந்தச் சட்டத்தின் கீழ் இந்த விபரங்களைத் தாம் பெற்றிருப்பதாக, சட்டவாளர் நாகானந்த கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், ஞானமுத்து சிறிநேசன், சிசிர ஜெயக்கொடி, முத்துக்குமாரண, சமல் ராஜபக்ச, சிவமோகன், புத்திக பத்திரண, ஜனக பண்டார தென்னக்கோன், வசந்த…
-
- 2 replies
- 645 views
-
-
சுதந்திர தின நிகழ்வை ஏன் புறக்கணித்தேன்? விளக்கமளிக்கிறார் மஹிந்த ராஜபக் ஷ (ஆர்.யசி) நாட்டின் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தி பொருளாதாரத்தை வீழ்த்திவிட்டு சுதந்திர தினம் கொண்டாடிய அரசாங்கத்தின் அழை ப்பை ஏற்கமுடியாத காரணத்தினாலேயே அதனை நிராகரித்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். நாம் போராடி அழித்த ஆயுத காலாசாரம் மீண்டும் நாட்டில் உயிர்ப்பெற்றுள்ளது. வடக்கில் மீண்டும் ஆயுத வெடிச்சத்தம் கேட்க ஆரம்பித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி நேற்று குருநாகல் பகுதியில் மக்கள் சந்திப்புகளை மேற்கொண்டிருந்த நிலையில் சந்திப்பின் பின்னர் ஊடகங்க…
-
- 0 replies
- 720 views
-
-
அரசாங்கத்தின் முகத்திரையை கிழிக்கவே சர்வதேச நீதிபதிகள் விவகாரத்தை கூறினேன் (ரி.விரூஷன்) இலங்கை அரசாங்கமானது போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதில்லை என்ற எண்ணத்தில் தான் உள்ளது. இத்தகைய அரசாங்கத்தினதும் பெரும்பான்மை இன அரசியல்வாதிகளினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துக்காட்டவே நான் வடக்கு மாகாணசபைக்கு போர்க்குற்ற விசாரணையை செய்வதற்கு சட்டத்தில் இடமுள்ளதாக என ஆராய்ந்து பார்க்கும்படி கூறினேன் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கிணேஸ்வரன் தெரிவித்துள்ளார். அந்தவகையில் நான் என்ன நிணைந்தேனோ அதுவே தற்போது நடாந்த…
-
- 0 replies
- 311 views
-
-
காணாமல்போன 10 வயது சிறுவன் சடலமாக மீட்பு காங்கேசன்துறையில் சம்பவம் (எம்.எப்.எம்.பஸீர்) நண்பர்களுடன் விளையாடச் சென்று நேற்று முன் தினம் முதல் காணாமல் போயிருந்த நிலையில் தேடப்பட்டு வந்த காங்கேசன்துறை, நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றுக் காலை குறித்த சிறுவனின் சடலத்தை கங்கேசன்துறை பொய்ட்டி பகுதியில் உள்ள சீமந்து உற்பத்தி நிலையத்துக்கு சொந்தமான தண்ணீர் தாங்கியில் மிதந்துகொண்டிருந்த நிலையில் மீட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார். காங்கேசன் துறை மேற்கு, காங்கேசந்துறை - நல்லிணக்கபுரம் பகு…
-
- 0 replies
- 383 views
-
-
காரைநகரில் 3.25 மில்லியன் செலவில் அபிவிருத்தி திட்டங்கள் வடமாகாணத்தில் சுற்றுலாத்துறையினை மேன்படுத்தும் வகையில் சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டம் நேற்று யாழ் காரைநகர் கசூரினா கடற்கரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அவுஸ்திரேலிய அரசின் உதவியுடன் நெல்சிப் திட்டத்தின் கீழும் வடக்கு கிழக்கு உள்ளுராட்சி சபைகள் மேம்படுத்தும் திட்டதின் கீழ் 3.25 மில்லியன் ரூபாயில் கசூரினா கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளுக்கான நிழல் தரிப்பிடங்கள் 20, மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதியாக இருப்பிட, மற்றும் தங்குமிட வசதிகள் 16 மற்றும் கடல்வள சுற்றுச்சூழல் மேம்பாடு வேலைத்திட்டம் என்பன நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட…
-
- 0 replies
- 307 views
-
-
‘ரூ. 66 மில்லியனை ஏப்பம் விட்ட அர்ஜுன’ திலங்க கனகரத்ன இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்த 21 மாதங்களில், மத்திய வங்கியின் 66 மில்லியன் ரூபாயை, முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தியுள்ளார் என, ஊழலுக்கெதிரான குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான வசந்த சமரசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். 163 சந்தர்ப்பங்களில் இவ்வாறு பணத்தை அவர் மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டிய வசந்த, மத்திய வங்கியின் உள்ளக கணக்காய்வு அறிக்கையின் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். “2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1ஆம் திகதி வரையான மகேந்திரனின் வெளிநா…
-
- 0 replies
- 368 views
-
-
சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சி: சந்தேகம் எழுந்துள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சி இடம்பெற்றமை தொடர்பிலான கருத்துக்களின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படவில்லை எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். வட மாகாணத்தில் இராணுவத்தினர் தொடர்ந்து முகாமிட்டு இருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான கதைகள் தெரிவிக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் ஏற்படுவதாகவும் வட மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த…
-
- 3 replies
- 588 views
-
-
அதிகாரங்களை மக்கள் தெரிந்து கொண்டால் கேள்வி எழுப்புவார்கள் - கஜதீபன் வடக்கு மாகாண சபையினுடைய அதிகாரங்களை சரியான முறையில் மக்கள் விளங்கிக் கொள்ளுவார்களே ஆனால் இத்தனை அதிகாரங்களை வைத்துக் கொண்டா இவ்வளவு வேலைகளை செய்கிறீர்கள்..? என மக்களே கேள்வி கேட்க கூடும் - இவ்வாறு வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மானிப்பாய் மீன்சந்தையை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மானிப்பாய் பிரேதச சபையானது நகர சபையாக மாற்றப்பட வேண்டும். இங்கு மக்கள் தொகை அதிகமாக உள்ள நிலையில் சுன்னாகம் பிரேதச சபைய…
-
- 0 replies
- 261 views
-
-
பொறுப்புக்கூறலில் வேகமில்லை – ரணிலை எச்சரித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பொறுப்புக்கூறல் தொடர்பான விவகாரங்களில், சிறிலங்கா மெதுவாகவே செயற்படுவதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்,கவலை வெளியிட்டுள்ளார். டாவோசில் கடந்த மாத நடுப்பகுதியில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டிருந்தார். இந்த மாநாட்டின் பக்க நி்கழ்வாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்கா பிரதிநிதி ரவிநாத ஆ…
-
- 0 replies
- 336 views
-
-
எழுக தமிழ் - 25 க்கு மேற்பட்ட பிரச்சினைகளை முன் கொண்டுவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் மேச்சல்தரை, காணி, காணாமல் ஆக்கப்பட்டோர் போன்ற 25 க்கு மேற்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். இதனை இந்த எழுக தமிழ் எழுச்சி பேரணி மூலம் கொண்டுவரவுள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்தரன் தெரிவித்தார். எதிர்வரும் 10 திகதி இடம்பெறவுள்ள கிழக்கு எழுக தமிழ் நிகழ்வு தொடர்பாக மட்டக்களப்பு புகையிரத வீதியில் உள்ள கூட்டுறவு சங்க மண்டபத்தில் ஊடகவியளாளர் சந்திப்பு நேற்று (05) தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்தரன் கலந்து கொண்டு கருத்து …
-
- 0 replies
- 335 views
-
-
பதவி விலகினார் சந்திரசிறி முன்னாள் பிரதியமைச்சர் சந்திரசிறி சூரியாராச்சி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மின்னேறிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=87636
-
- 0 replies
- 268 views
-
-
‘சி.வியின் கனவே கலப்பு நீதிமன்றம்’ தர்ஷன சஞ்சீவ வடக்கு மாகாணத்தில் கலப்பு நீதிமன்றமொன்றை உருவாக்குவதற்கு, அம்மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முயன்றுவருவதாகத் தெரிவித்த திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சிகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அவரின் அந்த முயற்சிகள், வெறுமனே கனவும் எனவும் அவை நனவாகாது எனவும் குறிப்பிட்டார். களுத்துறையில் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். சில அரசியல்வாதிகள், வெளிநாட்டுச் சக்திகளினதும் நிறுவனங்களினதும் அடிமைகளாயுள்ளனர் எனக் குற்றஞ்சாட்டிய அமைச்சர், சில வசதிகளைப் பெற்…
-
- 0 replies
- 312 views
-
-
ஜனாதிபதி தலையிடுவார்? முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கூடிய கவனம் செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, மக்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து, உடனடித் தீர்வினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கவுள்ளதாக, உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விவகாரம் தொடர்பில் இன்றையதினம் பாதுகாப்புத் தரப்பினருடன் ஜனாதிபதி கலந்தாலோசிக்கக்கூடும் எனவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. - See more at: http://www.tamilmirror.lk/191…
-
- 0 replies
- 149 views
-
-
‘பிரதேச செயலகத்தை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் செய்வோம்’ ஜே.ஏ.ஜோர்ஜ் “பாதுகாப்புப் படைகளுக்காக நிலச் சுவீகரிப்பு செய்யவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்த நிலையில், அரசாங்கம் இதுவரை அது தொடர்பில் எந்தவித பதிலையும் வழங்கவில்லை” என, தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், “இது தொடர்பில் அராசாங்கம் மெளனம் சாதிப்பது ஏன்?” என்றும் கேள்வியெழுப்பினார். யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் குறித்துக் கேட்டபோதே, அவர் இதனை நேற்று கூறினார். இது தொடர்பில், யாழ். மாவட்டச் செயலாளருடன் க…
-
- 0 replies
- 241 views
-
-
கொழும்பில் மருத்துவ பீட மாணவன் மீது தாக்குதல் : பல பிரதேசங்களில் ஆர்ப்பாட்டம் கொழும்பில் அண்மையில் வைத்தியபீட மாணவர்கள் மேற்கொண்ட போராட்டத்தில் மாணவர்கள் பொலிஸாரினால் தாக்கப்பட்டதை கண்டித்து இன்றைய தினம் பல பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ராகம மருத்துவ பீட மாணவர்கள், ராகம வைத்தியசாலைக்கு முன்னாலும், பேராதனை மருத்துவ பீட மாணவர்கள் கலஹா சந்தியிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அதில் அம் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை, கொழும்பு மருத்துவ பீட மாணவர்கள் அந்த மருத்துவ பீடத்திற்கு அருகில் இருந்து பேரணியாக லிப்டன் சுற்றுவட்டம் வரை சென்றுள்ளனர். http://www.virakesari.lk/
-
- 0 replies
- 302 views
-
-
எச்சரிக்கை .! புலிகள் மீண்டும் மீளிணைவு : (எம்.எப்.எம்.பஸீர்) புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலர் மீள ஒருங்கிணைந்து செயற்பட திட்டமிட்டமை தொடர்பிலான பல்வேறு தகவல்களை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணை ஒன்றூடாக வெளிப்படுத்தியுள்ளனர். கிளினொச்சியில் பாதைகைகளில் கடமையில் ஈடுபடும் பொலிஸாரை தாக்கி அவர்களது ஆயுதங்களை கொள்ளையிட்டு அதனூடாக தாக்குதல்களை நடத்துவது தொடர்பிலான தகவல்;களையே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் வெளிப்படுத்திக்கொண்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் பல தடவை முயற்சி செய்யப்பட்டுள்ள போதும் பொலிஸாரின் ஆயுதங்களை கொள்ளையிட அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் அந்…
-
- 0 replies
- 303 views
-