Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பத்திரிகை கண்ணோட்டம் (காணொளி) 01 -02 -2017

  2. யாழ்ப்பாண வாள்வெட்டு கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் கைது யாழ்ப்பாண வாள் வெட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் அரசடி வீதியில் வாள்களைக் கொண்டு நபர்களைத்தாக்கியதுடன் வர்த்தக நிலையமொன்றை சேதப்படுத்திய வாள் வெட்டுக் கும்பலின் உறுப்பினர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் ஆகிய பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் இவர்களுடன் நான்கு வாள்கள், ஒரு கைக்கோடாரி, கூரிய ஆயுதமொன்று, ஒரு மோட்டார் சைக்கிள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். http://globaltamilnew…

  3. வெள்ளோட்டத்துடன் நிற்கும் நெடுந்தாரகை நெடுந்தீவு மக்களின் கடல் பயணத்தை இலகுபடுத்தும் நோக்கில் புதிதாக கட்டப்பட்ட ´´நெடுந்தாரகை´´ படகு வெள்ளோட்டம் விட ப்பட்டதன் பின்னர் பயணிகள் சேவையில் ஈடுபடவே இல்லை என, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டி யுள்ளார். இந்தநிலையில், உடனடியாக இது குறித்து விசாரணை நடத்தி அடுத்த அமர்வில் பதிலளிக்கப்படும், என முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். வட மாகாண சபையின் 83ம் அமர்வு நேற்றையதினம் நடைபெற்றது.இதன்போதே மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நெடுந்தீவுக்கா…

    • 1 reply
    • 417 views
  4. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிரிழப்பார் ; கருத்து வெளியிட்ட ஜோதிடர் கைது ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் ஜோதிட கணிப்புக்களை வெளியிட்ட பிரபல ஜோதிடரான விஜித் ரோஹன விஜயமுனி குற்றபுலனாய்வு திணைக்களத்தால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனவரி 26 இல் மரணிப்பார், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராவார் மற்றும் கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாவார் என்று ஆருடம் கூறிய காணொளி ஒன்றை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/16062

  5. மைத்­தி­ரி­யுடன் உள்­ள­வர்கள் மஹிந்­தவை ஒதுக்­கி­ய­தற்கு மஹிந்­தவே காரணம் சர்­வ­தேச அழுத்­தத்­தி­லி­ருந்து விடு­ப­டவே முன்­கூட்­டியே தேர்­தலை நடத்­தினார் என்­கிறார் எஸ்.பி. (ப.பன்­னீர்­செல்வம்) நாட்டில் 46பேர் மீது யுத்தக் குற்றம் சுமத்­தப்­பட்­ட­தாலும் சர்­வ­தேசம் இலங்­கையை தனி­மைப்­ப­டுத்­தி­ய­தாலும் அதி­லி­ருந்து தப்­பித்­துக்­கொள்­ளவே அவ­சர அவ­ச­ர­மாக மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­தினார் என்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தெரி­வித்­தது. மைத்­தி­ரிபால சிறி­சே­னவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரா­கவும் சமல் ராஜபக் ஷவை பிர­தமர் வேட்­பா­ள­ரா­கவும் அன்று அறி­வித்­தி­ருந்தால் மஹிந்­த­வுக்கு இன்­றைய நிலை ஏற்­பட்­டி­ருக்­காது என்று…

  6.  ‘மிருசுவில் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கவும்’ மிருசுவிலில், பொது மக்கள் பலரைக் கொன்றதாகக் குற்றம் காணப்பட்டு, மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் இராணுவ வீரருக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, தாய் நாட்டுக்கான போர்வீரர்கள் நிறுவனம், ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. தாய் நாட்டுக்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருந்த பதவிநிலை அதிகாரியான சார்ஜன்ட் ரத்னாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு, இந்த அமைப்பின் ஏற்பாட்டாளர், மேஜர் அஜித் பிரசன்ன கோரியுள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு, அவருக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி ஆவனஞ்செய்ய வேண்டுமென, அக்கடிதத்தில் அவர் கேட்டுள்ளார். …

  7. கிழக்கு முதலமைச்சரின் பதில் இல்லை வடக்கு, கிழக்கு இணைப்புத் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியபோதிலும் அவரிடமிருந்து இன்னமும் பதில் கிடைக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணசபை அமர்வில் நேற்குக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கூறுகையில், 'வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பது தொடர்பில் இரு மாகாணசபையும் இணக்கம் தெரிவித்தால் பரிசீலிக்கலாம் என்று கூறப்பட்டது. அதற்கமைய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன். எனினும் கிழக்கு மாகாண முதலமைச்சரிடமிருந்து இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை…

  8. மாலபே மருத்துவக் கல்லூரி பட்டதாரிகள் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்துகொள்ள முடியும் : நீதிமன்றம் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் பட்டதாரிகள் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்துகொள்ள முடியும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. மலபே தனியார் மருத்துவக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் இலங்கை மருத்துவ சபையில் பதிவுசெய்வதற்காக விண்ணப்பித்திருந்தார். அதற்கான விண்ணப்பம் மருத்துவர்கள் சபையால் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த மாணவி இது தொடர்பில் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். குறித்த மேன்முறையீட்டு மனு தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட போதே மேற்கண்டவாற…

  9. வட மாகாண தொண்டராசிரியர்களுக்கு மாத இறுதிக்குள் நியமனம் ஆளுநா் றெஜினோல்ட்குரே:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- பெப்ரவரி நிறைவுக்குள் வட மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே உறுதி அளித்துள்ளார். 31.01.2017 பிற்பகல் 3.00 மணியளவில் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண தொண்டர் ஆசிரியர் பிரதிநிதிகளைச் சந்தித்த வடமாகாண ஆளுநர் மேற்படி உறுதிமொழியினை வழங்கியதுடன் அமைச்சரவை அனுமதிப் பத்திரம், நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்படுவதற்கு என நேர்முகத் தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்ட தொண்டர் ஆசிரியர்களின் பெயர் விபரங்கள் என்பனவற்றையும் வடமாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளி…

  10. விக்னேஸ்வரனைப் போன்றே பிரதமரும் ஓர் கடுமையான தமிழ் இனவாதியாவார் – ஞானசார தேரர் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனைப் போன்றே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஒர் கடுமையான தமிழ் இனவாதி என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தமிழ் இனத்திற்கு சார்பான ஓர் தலைவராகவே ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருவதாக கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் விக்னேஸ்வரனுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் எவ்வித வித்தியாசமும் கிடையாது என தெரிவித்துள்ள அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் முக்கிய நிறுவனங்களுக்கான உயர் பதவிகளில் சிங்களவர் …

  11. கொட்டும் பனியிலும் இரவோடுஇரவாக 2 ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் முல்லைத்தீவு, கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் அமைந்துள்ள பகுதியில் இரண்டாவது பிரதான வாயில் முன்னால் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட மக்களின் போராட்டமானது நேற்று இரவும் கொட்டும் பனி இரவையும் தாண்டி இன்றும் இரண்டாவது நாளாக தொடர்ந்த வண்ணமுள்ளது. விமானப்படையினர் வசமுள்ள 30 ஏக்கர் காணியை நேற்று விடுவிப்பதாக அரச அதிகாரிகள் மக்களுக்கு தெரிவித்தபோதிலும் அது நேற்றைய தினம் விடுவிக்கப்படவில்லை. இதன்காரணமாக நேற்று மாலை முதல் குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள் என 50 க்கும் மேற்பட்ட கேப்பாப்புலவு குடியிருப்பு மக்கள் போராட்டத்…

  12. யாழில் வெளிவிவகார கொன்சியூர் அலுவலகம்-கூட்டு எதிர்க்கட்சி போர்க்கொடி வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் காரியாலயம் யாழ்ப்பாணத்தில் திறந்தது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி அதன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன குறித்த காரி யாலயம் எந்த அடிப்படையில் திறக்கப்பட்டது என அரசாங்கத்திடம் கேள்வியெழுப்புவதாக அவர் குறிப்பிட்டார். வெளிவிவகார அமைச்சுடன் நேரடியாக தொடர்புகொள்ளக்கூடிய சந்தர்ப்பம் இருக்கும் வேளையில், வெளிவிவகார அமைச்சர் சம்பிரதாயத்தை மீறி இவ்வாறான ஒரு விடயத்தை ஏன் செய்தார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என தினேஷ் குணவர்தன இதன்…

  13. யாழில் வீதிகளில் குப்பை கொட்டுவதில் அரச அதிகாரிகளே முன்னிலையில் யாழ்.குடாநாட்டில் வீதிகளில் குப்பைகளை கொட்டுவதில் அரச அதிகாரிகளே முன்னிற்கிறார்கள். அதிலும் குறிப்பாக சுகாதார வைத்திய அதிகாரிகளே முன்னணியில் உள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் டெங்கு பரவல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு பிர தேச செயலாளர் பிரிவிலும் உள்ள பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் தங்கள் பிரதேசங்களில் உள்ள குறை நிறைகளை தெரிவித்தனர் இதில் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் …

  14. பிரதமரின் உருவப்பொம்மை எரிப்பு ; சைட்டமுக்கு எதிரான போராட்டம் தொடரும் - மாணவர் ஒன்றியம் ( படங்கள் இணைப்பு ) (எம்.எப்.எம்.பஸீர்) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உருவ பொம்மையொன்றை எரித்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வைத்திய பீட மாணவர் ஒன்றியம், மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக தொடர்ந்தும் போராடவுள்ளதாக அறிவித்துள்ளது. இன்றைய தினம் சைட்டம் நிறுவனத்தின் மருத்துவ பட்டத்துக்கு சட்ட ரீதியிலான பெறுமதியை அளித்து மேன் முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து புரக்கோட்டை, போதி மரச் சந்தி வரையில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து எதிர்ப்பு ஊர்வலமாக சென்ற போதே அந்த மாணவர் ஒன்றியம் மேற்படி அறிவிப்பை விடு…

  15. ஏனைய மாகாண கொள்கைகள் வடக்கிற்கு ஏற்புடையதன்று-முதல்வர் விக்கி நாங்கள் கொள்கை வகுத்தலில் ஈடுபடும் போது சட்டத்தையும் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண விவசாய அமைச்சினால் இன்றையதினம் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட நீர்வள முகாமைத்துவ ஆய்வரங்கின் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவி த்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில். எமது மாகாணம் பல விதங்களிலும் மற்றைய மாகாணங்களில் இருந்து வேறுபட்டது. நதிகள் அற்ற ஆனால் நற்குளங்க ளையும் கிணறுகளையும் கொண்டதொரு பிரதேசம். எனவே தனித்துவமான ஒரு நீர…

  16. நாவற்குழி சிங்கள, தமிழ் குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டல் யாழ்.நாவற்குழியில் தமிழ், சிங்கள குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகனால் நாட்டிவைக்கப்பட்டது. நாவற்குழி பகுதியில் வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து சில குடும்பங்கள் அத்து மீறி குடியிருந்தன. அதனை தொடர்ந்து யாழ் .மாவட்டத்திலும் உள்ள வெவ்வேறு பகுதிகளிலும் அத்துமீறி கடந்த காலத்தில் குடியம ர்த்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் உள்ள மேலதிக காணிகளில் மேலும் சில காணிகள் அற்ற குடும்பங்கள் குடியேற்ற ப்பட்டு தற்போது அப்ப…

    • 7 replies
    • 843 views
  17. வட மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணைக் குழுவின் காலம் நீடிப்பு -எஸ்.நிதர்ஸன் வடமாகாண அமைச்சர்களின் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைக்காலம், 2 மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாணசபையின் அமர்வு இன்று நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடமாகாண அமைச்சர்களின் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில், விசாரணை செய்வதற்கான குழுவொன்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டது. அமை…

  18. பத்திரிகை கண்ணோட்டம் (காணொளி) 31 -01 -2017

  19. மாங்குளம் பஸ் விபத்தில் 15 க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலி, பல கால்நடைகள் காயம் மாங்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதுடன் பல கால்நாடைகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், காங்கேசன்துறையிலிருந்து மொரட்டுவை நோக்கி சேவையிலீடுபடும் தனியார் பேரூந்து ஒன்று முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில், வீதியில் நின்ற எருமை மாட்டுக் கூட்டம் ஒன்றிமீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 15 க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் பலியானதோடு 20 க்கும் மேற்பட்ட மாடுகள் காயமடைந்துள்ளன. வீதியில் நின்ற மாட்டு கூட்டத்தை அவதானிக்காத சாரதி அதிவேகமாக சென்று,…

    • 4 replies
    • 753 views
  20. இலங்கையில் சீனாவின் பிரசன்னம் பொருளியல் நோக்கிலானது – அரசாங்கம் இலங்கையில் சீனாவின் பிரசன்னமானது முழுக்க முழுக்க பொருளியல் நோக்கங்களின் அடிப்படையிலானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நலன்களுக்கு எதிராக ஒரு போதும் இலங்கை செயற்படாது எனவும் இலங்கையின் காணி பூமியோ அல்லது கடற்பரப்போ இந்தியாவிற்கு விரோதமான வகையில் செயற்படாது எனவும் இலங்கைக் கடற்படைத் கடற்படைவைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரட்ன குறிப்பிட்டுள்ளார். சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிடுவது முழுக்க முழுக்க பொருளியல் நோக்கங்களின் அடிப்படையிலானது என தெரிவித்துள்ள அவர் இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியாவிற்கும் அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்…

  21. காட்டு யானைகளால் அவதியுறும் வவுனியா வடக்கு மக்கள் வவுனியா – நெடுங்கேணி சிவாநகர், குறிசுட்டகுளம் போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். குறித்த காட்டு யானைகள் நேற்று (30.01.2017) மாலை அந்த பகுதிக்கு சென்று அங்கு வசித்துவரும் பொதுமக்களை அச்சுறுத்தி யுள்ளதுடன் தமது ஜீவனோபாயமான பப்பாசி, வாழை, தென்னை போன்ற பயன்தரும் மரங்களை சேதப்படுத்தியதாகவும் அதனால் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். கடந்த பல மாதங்களாக காட்டு யானைகள் தமது பகுதிகளுக்குச் சென்று வருவதாகவும், வீத…

  22. சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமிழ்மொழிப் பயிற்சி வடக்கு - கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றும் சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான 5 மாத தமிழ் மொழி டிப்ளோமா பயற்சி நெறி மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறித்த பயிற்சி நெறியில் 148 பேர் இணைந்து கொண்டனர். இலங்கை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் வழிகாட்டலில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் இன, மத, மொழி வேறுபாடின்றி அனைத்து பொது மக்களுக்கும் சிறந்த சேவையை வழங்க வேண்டும் எனும் நோக்கில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் போன்ற பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான 5 மாத தமிழ் மொழி டிப்ளோமா பயிற்சி…

  23. சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல்! வெறுமனே நாடகமேயாகும் கூட்டு எதிரணி பரிகாசம் (பா.ருத்­ர­குமார்) தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­தி­ர­னுக்கு உயிர் அச்­சு­றுத்தல் இருப்­ப­தாக வெளியான செய்தி வெறும் நாட­கமேயாகும் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி தெரி­வித்­துள்­ளது. எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன், ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்காக நிகழ்ச்சி நிரலை தயா­ரித்­து­வரும் மேற்­கு­ல­கி­லுள்ள தமிழ் பிரி­வி­னை­வா­தி­களே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ர­னுக்கும் வித்­தி­யா­ச­மான கதா­பாத்­தி…

  24. தமிழ் மக்கள் நீதியை பெறுவதற்கான வழி வெளிநாட்டு நீதிபதிகளை வரவழைப்பது குறித்து வடமாகாண சபை ஆராயவேண்டும் என்கிறார் சி.வி. வட மாகாண சபை­யா­னது வெளி­நாட்டு சட்ட நிபு­ணர்கள், நீதி­ப­தி­களை வர­வ­ழைத்து போர்க்­குற்­றங்கள், படு­கொ­லைகள் குறித்து விசா­ரணை செய்து அறிக்கை பெறு­வ­தற்கு சட்­டத்தில் இடம் இருக்­கின்­றதா என்­பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவ்­வாறு முடி­யு­மானால் அதனை நெறி­மு­றைப்­ப­டுத்தி உண்­மையை உல­குக்கு எடுத்­து­ரைப்போம். நடந்­த­வற்றை நடந்­த­வாறே எடுத்­து­ரைப் போம். எமது மக்கள் நீதியைப் பெற­வேண்­டு­மானால் இது ஒன்றே வழி­யாகும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். அர­சாங்­க­மா­னது நடந்­…

  25. சுமந்திரனை கொலை செய்ய சதி மன்னாரில் மற்றொருவர் கைது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்ற ச்சாட்டில், மற்றொரு சந்தேக நபர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்துக்கு பயங்கர வாத தடுப்பு பிரிவினர் நேற்று அறிவித்துள்ளனர். மன்னாரைச் சேர்ந்த விஜயன் என்ற ஐந்தாவது சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளார் என்று நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டு ள்ளது. சுமந்திரனைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில்,ஏற்கனவே கைது செய்யப்பட்ட நால்வரிடம் நடத்தப்பட்ட விசாரணைக ளை அடுத்தே ஐந்தாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கூறப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.