ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
மட்டக்களப்பு - படுவான்கரை, கொக்கட்டிச்சோலை படுகொலை சம்பவத்தின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் நாளை(28) அனுஷ்டிக்கப்படவுள்ளது. கடந்த 1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம், கொக்கட்டிச்சேலை மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி அருகில் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிப்பளை கிளையின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்விற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தலைமை தாங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் படுகொலைக்…
-
- 2 replies
- 441 views
-
-
வடக்கு, கிழக்கையும் பிரபாகரனையும் இணைத்துக்கொண்டு கூட்டாட்சி ஒன்றை அமைக்குமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு அன்று அமெரிக்கா உத்தரவிட்டது. அந்த உத்தரவை உதாசீனம் செய்துவிட்டே மஹிந்த விடுதலைப்புலிகளுக்கு எதிராக யுத்தத்தை நடத்தினார் என்றும் மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக தெரிவித்தார். அவர் தனது எம்.பி. பதவியை இராஜிநாமா செய்வது தொடர்பில் கருத்துக் கூறும்போதே இந்தத் தகவலையும் வெளியிட்டார். அவர் மேலும் கூறுகையில், "இந்த அரசியல் கலாசாரம் தொடர்பில் எனக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாகவே நான் எனது எம்.பி. பதவியை இராஜிநாமா செய்வதற்கு முடிவெடுத்துள்ளேன். இராஜிநாமாவைத் தொடர்ந்து அரசியல் அழுத்தக் குழுவொன்றை அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளேன். அந்தக் குழு அரசுக்கு…
-
- 0 replies
- 390 views
-
-
கருங்கல்லை வைத்து குண்டெறிதல் பயிற்சி பெறும் மாணவி இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள கலவான தமிழ் வித்தியாலயத்தில் நிலவும் வளப் பற்றாக்குறை காரணமாக இந்தப் பாடசாலையின் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக விளையாட்டு உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் மாணவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குண்டெறிதல் பயிற்சியை பெறுவதற்கு இரும்பு குண்டு இல்லாத காரணத்தினால் கருங்கல்லைக் கொண்டு மாணவி ஒருவர் பயிற்சி பெற்று வருகின்றார். http://www.onlineuthayan.com/news/23238
-
- 0 replies
- 543 views
-
-
மட்டக்களப்பில் மழை வெள்ளத்தால் பத்தாயிரம் பேர் பாதிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக 2,834 குடும்பங்களைச் சேர்ந்த 10,010 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய தகவல்கள் தெரவிக்கின்றன. கிரான் - தொப்பிகல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் பூலாக்காடு, முறுத்தானை, கோராவளி, வடமுனை, ஊத்துச்சேனை திகிலிவட்டை, பெரில்லாவெளி, குடும்பிமலை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 2,155 குடும்பங்களைச் சேர்ந்த 7,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக தரை வழி துண்டிக்கப்பட்ட மட்டக்களப்பு கிரான் பிரதேசத்திலுள்ள பூலாக்காடு, முறுத்தானை, கோராவளி, வடமுனை, ஊத்துச்சே…
-
- 0 replies
- 305 views
-
-
சிவப்பு விளக்கை கடந்து சென்ற பொலிஸார் -எம்.றொசாந்த் திருநெல்வேலி சந்தை பகுதியில் உள்ள வீதி சமிக்ஞையில் சிவப்பு விளக்கு எரியும் போது, அதனை மீறி, போக்குவரத்து பொலிஸார் வீதியை கடந்து சென்ற சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் வாகன நெரிசல்கள் அதிகரித்துள்ள நிலையில், வீதி ஒழுங்கை சரியாக பேணி, போக்குவரத்தை இலகுபடுத்தி, விபத்தை தவிர்க்கும் நோக்குடன், வீதி அதிகார சபையினால் யாழ். பிரதான சந்திகளில், வீதி சமிக்ஞை விளக்குகள் பொருத்தும் திட்டம், கடந்த வருடம் நடைமுறைப்படுத்தப்பட்டு, பிரதான சந்திகளில் வீதி சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டன. சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டாலும் அதனை பின்பற்றி, …
-
- 0 replies
- 319 views
-
-
'ஒன்றுபடாவிட்டால் துரோகிகளாக பார்க்கப்படுவோம்' எஸ்.நிதர்ஸன் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் கருத்து முரண்பாடுகள் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் நாட்டின் நலனுக்கான ஒன்றிணைந்து செயற்படுவது போன்று, வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ்த் தலைமைகளும் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமெனவும் அவ்வாறு செயற்படத் தவறுவோமாக இருந்தால் துரோகிகளாக அல்லது துரோகம் செய்தவர்களாகவே பார்க்கப்படுவோம் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 8ஆவது சர்வதேச வர்த்தக் கண்காட்சியின் ஆரம்ப நாள் நிகழ்வுகள், யாழ். பொது நூலக கேட்போர் க…
-
- 0 replies
- 413 views
-
-
'வட, கிழக்கு இணைப்பு தொடர்பில் தற்போது சிந்திக்க முடியாது' எஸ். நிதர்ஸன் வடக்கு மற்றும் கிழக்கு இணைப்புத் தொடர்பில் இப்போது சிந்திக்க முடியாது என தெரிவித்துள்ள வர்த்தக கைத்தொழில் துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பல்வேறு கொள்கைகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் அரசியல் ரீதியாக ஒன்றிணைய முடியாது. மாறாக பொருளாதார ரீதியில் மக்களுடைய அபிவிருத்திக்காக ஒன்றிணைய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு, யாழ். பொது நூலகத்தில் நேற்று (27) நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது அரசியல் தலைமைகள் மக்களுடைய அபிவிருத்திக்கா…
-
- 0 replies
- 328 views
-
-
மத்திய வங்கி மீதான தாக்குதல் 21 வருடங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வில்லை இலங்கை மத்திய வங்கி தாக்கப்பட்டு எதிர்வரும் 31ம் திகதியுடன் 21 வருடங்கள் பூர்த்தியடைவதாகவும், எனினும் இதன்போது பாதி க்கப்பட்டவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அன்று முதல் இன்று வரையுள்ள அரசாங்கங்கள் தோல்வி யடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈடு மட்டுமே வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக, மத்திய வங்கி தாக்குதலால் மரணித்த மற்றும் ஊனமுற்றவர்களுக்கான சங்கத்தின் தலைவர் எல்.டி.எல்.ஏ.குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார். மேலும், இச் சம்பவத்தால் அங்கவீனமுற்றவர்களுக்கு 55 வயதிலேயே …
-
- 0 replies
- 257 views
-
-
புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத 300 புலி உறுப்பினர்கள் வடக்கில் வாழ்ந்து வருவதாக குற்றச்சாட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத 300 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் வடக்கில் வாழ்ந்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இராணுவ அதிகாரிகளுக்கு இது பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த முன்னாள் போராளிகள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாதவர்கள் எனவும் இவ்வாறு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத முன்னாள் போராளிகள் ஐரோப்பிய புலி வலையமைப்புடன் தொடர்பு பேணி வருவதாகவும்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த முன்னாள் போராளிகள் வடக்கில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களுடனும் தொடர்புபட்டிருப்பதாகவ…
-
- 0 replies
- 266 views
-
-
அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்துக்கு தவறான புரிதலே காரணம் சீனா தெரிவிப்பு (நமது நிருபர்) அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்தில் சீனாவின் தொழில் முயற்சிகளுக்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்குமாறு ஒருபோதும் இலங்கை அரசாங்கத்திடம் கோரவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது. மேலும். அம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட போராட்டம் தவறான புரிதல் காரணமாக ஏற்பட்டதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹவா சுன்யிங் தெரிவித்துள்ளார். பீஜிங் நகரில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இலங்கை மக்கள் சரியான முறையில் அறிவுறுத்தப்படாமையின் காரணமாக குறித்த நில…
-
- 0 replies
- 265 views
-
-
முதல் அமர்வில் உரையாற்றவுள்ள கனடா, ஆஸி.,சுவீடன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் (ரொபட் அன்டனி) ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடு கள் மனித உரிமை பேரவையி ன் 34 ஆவது கூட்டத் தொடரில் பிரிட்டன், அவுஸ்திரேலியா, சுவீடன், பிரான்ஸ், டென்மார்க், நெதர் லாந்து, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ள நிலையில் அவர் கள் இலங்கை விவகாரம் தொடர்பிலும் பிரஸ் தாபிப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது. ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதில் 27 ஆம்தி…
-
- 0 replies
- 181 views
-
-
அரசாங்க எதிர்ப்பு பேரணியின் எதிரொலி : பாரிய போக்குவரத்து நெரிசல்! நுகேகோட வீதியில் பாரிய வாகன நெரிசல் தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்துள்ள நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான பேரணியின் காரணமாகவே, குறித்த பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துகின்றமை, அரச நிறுவனங்களை விற்பனை செய்கின்றமை, ஊழல் மோசடி என்பவற்றை பிரதானப்படுத்தி நடத்தப்படவுள்ள எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு உரையாற்றள்ளமை குறிப்பிடத்தக்கது. http://ww…
-
- 7 replies
- 714 views
-
-
மீண்டும் சர்வதேச நீதிபதிகளை பரிந்துரைக்கவுள்ள ஹுசைன் ? (ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை யின் 34ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியிடவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் மீண்டும் கலப்பு நீதிமன்ற பொறிமுறையை பரிந்துரை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பொதுநலவாய மற்றும் சர்வதேச நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்குரைஞர்களைக் கொண்டு விசாரணைப் பொறி முறை முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற பரிந்துரை அல் ஹுசைனின் அறிக்கையில் இடம்பெறும் என்று எதிர்வுகூறப்படுகின்றது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மா…
-
- 0 replies
- 264 views
-
-
இராணுவத்தினர் எச்சரிக்கைக்கு மத்தியில், ஜனாதிபதி முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் கோப்பாப்புலவு மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கேப்பாப்புலவு பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக இன்று காலை ஒன்றுதிரண்ட மக்கள் இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். முல்லைத்தீவு, கேப்பாப்புலவுக்கு ஜனாதிபதி வருகை தரும் போது கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என இராணுவத்தினர் எச்சரித்துள்ள நிலையிலும் அவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று காலை முதல் முன்னெடுத்து வருகின்றர். இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் வாழ்ந்து வரும் எங்களின் சொந்தக் காணிகள் விடுக்கப்படவில்…
-
- 2 replies
- 468 views
-
-
திருகோணமலை - திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் மாபெரும் 210 சித்தர்கள் யாகம் இன்று (27) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றது. குறித்த பூஜை வழிபாடுகள் பிரம்ம ரிஷி மலை காகமுனி அன்னை சித்தர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. அத்துடன், இந்த யாக பூஜைகள் இலங்கை மற்றும் இந்தியா என பல வனங்களின் இருந்து கொண்டு வரப்பட்ட அபூர்வமான 10,008 காய கல்ப மூலிகைகளை கொண்டு நடாத்தப்பட்டுள்ளது. உலக நன்மைக்காகவும், இலங்கை நாட்டின் சுபீட்சத்துக்காகவும், வருங்காலத்தில் ஏற்படும் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும் இப்பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இவ்வழிபாட்டில் இந்தியத் திரை உலக நட்சத்திரம் சிவா, மற்றும் பொத…
-
- 0 replies
- 395 views
-
-
சிறிலங்காவில் நீண்ட கால யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் பல ஊடகவியலாளர்களின் படுகொலை மற்றும் காணாமலாக்கப்பட்டதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக, சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை தற்போது ஏமாற்றத்தை உண்டுபண்ணுகிறது என மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் உறவினர்கள் கூறினார்கள். ஜனவரி 2015ல் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து மைத்திரிபால சிறிசேன, அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது தனது தேர்தல் பரப்புரைகளில் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பும் கலாசாரமானது முடிவிற்குக் கொண்டுவரப்படும் என வாக்குறுதி வழங்கியிருந்தார். ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பல எண்ணிக்கையான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்…
-
- 0 replies
- 443 views
-
-
இலங்கையில் செயற்படும் அரசியல் கட்சித் தலைவர் ஒருவருக்கு இந்திய புலனாய்வு அமைப்பான றோ பெருந்தொகை பணம் வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த கட்சியின் தலைவருக்கு சொந்தமானதென கருதப்படும் வீட்டினை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணத்தை இந்தியாவின் றோ புலனாய்வு வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு இந்திய றோ புலனாய்வு அமைப்பினால் பிரான்ஸின் ஊடாக இந்த பணம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பணத்தின் ஒரு பகுதியை பயன்படுத்தி கட்சிக்கு தொடர்புடைய ஒப்பந்தக்காரரான குணசேகர என்ற நபர் ஊடாக கட்சியின் அலுவலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எனினும் மேலதிக பணத்தின் மூலம் குறித்த அரசியல் கட்சித் தலைவர் அயர்ல…
-
- 0 replies
- 299 views
-
-
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கால்நடைகளை மீட்டுத்தருமாறு அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் அவர்களது பூர்வீக வாழ்விடங்கள் தொடர்ந்தும் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனை விடுவித்து தங்களது வாழ்விடங்களுக்குச் சென்று வாழ்வதற்கான அனுமதியை பெற்றுத்தருமாறு தொடர்ந்து பல்வேறு போராட்டத்தினை இம் மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக கடந்த ஆண்டில் ஒரு பகுதி கால்நடைகளைப் பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட போதும் அதன் அனுமதி உடனடியாக நிறுத்தப்பட்டது. ஆனால், தற்போது படையினரின் கட்டுப்பாட்…
-
- 0 replies
- 150 views
-
-
தமிழ் பேசும் சகோதர சமூகங்களுக்கிடையே எத்தனை தான் கருத்து வேறுபாடுகள் மற்றும் வேற்றுமையுணர்வுகள் இருந்தாலும் பொதுவான விடயங்களில் சமூகத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகுமென்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். யாழ் சர்வதேச வர்த்தக எக்ஸ்போ கண்காட்சியை யாழ்ப்பாணம் பொது நூல் நிலைய கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த கூறியுள்ளார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேலும் கூறுகையில், இந்த நாட்டிலே இரண்டு துருவங்களாக அரசியல் செய்து மாறிமாறி ஆட்சிக்கு வந்த பிரதான கட்சிகள் இரண்டும் ஒன்றிணைந்து மக்களின் நலனுக்காக அரசமைத்து ஆட்சியை வ…
-
- 0 replies
- 219 views
-
-
பத்திரிகை பத்திரிகை கண்ணோட்டம் (காணொளி) 27 -01 -2017
-
- 0 replies
- 398 views
-
-
கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் சூறாவளியுடன் கூடிய மழையினால் வகுப்பறைகள் சேதம் கிளிநொச்சி தற்போது பெய்து வரும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பாடசாலை ஒன்றில் வகுப்பறைகள் சேதமடைந்துள்ளன. நேற்று வியாழக்கிழமை இரவு வேளை பெய்த காற்றுடன் கூடிய அடை மழை காரணமாக கிளிநொச்சி புளியம்பொக்கணை கலவெட்டிதிடல் நாகேந்திரா வித்தியாலய பாடசாலை தற்காலிக வகுப்பறை கட்டடமே சேதம் அடைந்துள்ளதுடன் இதனால் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது தரம் ஒன்று தொடக்கம் பதினொன்றுவரை வகுப்புக்களை கொண்டு இயங்கி வருகின்ற இப்பாடசாலையில் நான்கு வகுப்புக்கள் மட்டுமே நிரந்தரக்கட்டிடத்தில் இயங்கிவருகின்றன. குறித்த கிராமப்புற ப…
-
- 0 replies
- 261 views
-
-
முகமாலையில் 5 ஏக்கர் காணி விடுவிப்பு -சுப்பிரமணியம் பாஸ்கரன் முகமாலை பகுதியில் இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த, 9 குடும்பங்களுக்குச் சொந்தமான 5 ஏக்கர் காணி, இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மற்றும் 55 ஆம் படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நிர்மல தர்மரட்ண ஆகியோரின் சார்பில், முகமாலை பகுதிக்குரிய கட்டளை தளபதி, கிளிநொச்சி மேலதிக மாவட்டச் செயலாளர் எஸ்.சத்தியசீலனிடம் இதற்கான பத்திரங்களை கையளித்தார். குறித்த பகுதி, 2002 ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகள் மற்றும் அரசாங்கத்தின் யுத்தநிறுத்த உடன்படிக்கையின் பின்னர், யாழ். குடாநாட்டுக்கான நுழைவுப் பகுதியாக …
-
- 0 replies
- 410 views
-
-
கர்ப்பிணி கொலை: மாற்றுத்திறனாளியான சிறுவனின் வீட்டுக்கு பாதுகாப்பு -எம்.றொசாந்த் ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியில் 7 மாத கர்ப்பிணி பெண், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கண்கண்ட சாட்சியாகவுள்ள மாற்றுத்திறனாளியான 12 வயது சிறுவனின் வீட்டுக்கு, பாதுகாப்பு வழங்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன், இன்று உத்தரவிட்டார். இக்கொலைச்சம்பவம் தொடர்பில் கண்கண்ட சாட்சியாகவுள்ள மாற்றுத்திறனாளியான 12 வயது சிறுவனுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகள், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவானின் கவனத்துக்கு கொண்ட…
-
- 0 replies
- 344 views
-
-
யார் கொலை செய்தது ? : முன்னாள் ஜனாதிபதி முன்னிலையில் லக்ஷ்மன் கிரியெல்ல (ப.பன்னீர்செல்வம், எம்.எம்.மின்ஹாஜ்) ஜோசப்பரராஜசிங்கம், நடராஜாரவிராஜ், மகேஸ்வரன் ஆகியோரை படுகொலை செய்தது யார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ முன்னிலையில் சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல கேள்வி எழுப்பினார். நாட்டில் தற்போது தவறு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் விளக்கமறியல் இருப்பதனையிட்டு சந்தோஷப்பட வேண்டும். முன்பு விளக்கமறியலில் வைக்கவில்லை. காணாமல் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சட்ட பிரச்சினையொன்றை எழுப்பி நிதிபுலனாய்வு பிரிவு தொடர்பில் கேள்வி எழுப்பும் போதே அமைச்சர் மேற்க…
-
- 0 replies
- 414 views
-
-
'பொருத்து வீடுகள் பொருத்தமில்லை' -எஸ்.நிதர்சன் 'மீள்குடியேற்ற அமைச்சை அரசு என்னிடம் தருவதற்கு முன்வந்த போதும், தமிழரசுக்கட்சியே அதனை தடுத்தது' என, கைத்தொழில் வர்த்தக துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இன்று தெரிவித்தார். 'இடம்பெயர்ந்த மக்களுக்காக நான் பல விடயங்களை கடினப்பட்டு செய்திருந்தேன். இன்னும் பல விடயங்களை செய்ய வேண்டும் என, முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். மீள்குடியேற்ற அமைச்சு எனக்கு கிடைத்திருந்தால், அவ்வாறு செயற்பட்டிருக்க முடியும். இருந்த போதும், தமிழரசுக் கட்சியே அரசிடம் தெரிவித்து, அவ்வமைச்சு எனக்கு கிடைப்பதைத் தடுத்தது' எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை பொருத்து வீடுகள் தொட…
-
- 1 reply
- 529 views
-