ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143398 topics in this forum
-
மீண்டும் சர்வதேச நீதிபதிகளை பரிந்துரைக்கவுள்ள ஹுசைன் ? (ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை யின் 34ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியிடவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் மீண்டும் கலப்பு நீதிமன்ற பொறிமுறையை பரிந்துரை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பொதுநலவாய மற்றும் சர்வதேச நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்குரைஞர்களைக் கொண்டு விசாரணைப் பொறி முறை முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற பரிந்துரை அல் ஹுசைனின் அறிக்கையில் இடம்பெறும் என்று எதிர்வுகூறப்படுகின்றது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மா…
-
- 0 replies
- 265 views
-
-
இராணுவத்தினர் எச்சரிக்கைக்கு மத்தியில், ஜனாதிபதி முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் கோப்பாப்புலவு மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கேப்பாப்புலவு பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக இன்று காலை ஒன்றுதிரண்ட மக்கள் இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். முல்லைத்தீவு, கேப்பாப்புலவுக்கு ஜனாதிபதி வருகை தரும் போது கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என இராணுவத்தினர் எச்சரித்துள்ள நிலையிலும் அவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று காலை முதல் முன்னெடுத்து வருகின்றர். இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் வாழ்ந்து வரும் எங்களின் சொந்தக் காணிகள் விடுக்கப்படவில்…
-
- 2 replies
- 469 views
-
-
திருகோணமலை - திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் மாபெரும் 210 சித்தர்கள் யாகம் இன்று (27) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றது. குறித்த பூஜை வழிபாடுகள் பிரம்ம ரிஷி மலை காகமுனி அன்னை சித்தர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. அத்துடன், இந்த யாக பூஜைகள் இலங்கை மற்றும் இந்தியா என பல வனங்களின் இருந்து கொண்டு வரப்பட்ட அபூர்வமான 10,008 காய கல்ப மூலிகைகளை கொண்டு நடாத்தப்பட்டுள்ளது. உலக நன்மைக்காகவும், இலங்கை நாட்டின் சுபீட்சத்துக்காகவும், வருங்காலத்தில் ஏற்படும் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும் இப்பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இவ்வழிபாட்டில் இந்தியத் திரை உலக நட்சத்திரம் சிவா, மற்றும் பொத…
-
- 0 replies
- 396 views
-
-
சிறிலங்காவில் நீண்ட கால யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் பல ஊடகவியலாளர்களின் படுகொலை மற்றும் காணாமலாக்கப்பட்டதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக, சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை தற்போது ஏமாற்றத்தை உண்டுபண்ணுகிறது என மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் உறவினர்கள் கூறினார்கள். ஜனவரி 2015ல் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து மைத்திரிபால சிறிசேன, அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது தனது தேர்தல் பரப்புரைகளில் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பும் கலாசாரமானது முடிவிற்குக் கொண்டுவரப்படும் என வாக்குறுதி வழங்கியிருந்தார். ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பல எண்ணிக்கையான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்…
-
- 0 replies
- 443 views
-
-
இலங்கையில் செயற்படும் அரசியல் கட்சித் தலைவர் ஒருவருக்கு இந்திய புலனாய்வு அமைப்பான றோ பெருந்தொகை பணம் வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த கட்சியின் தலைவருக்கு சொந்தமானதென கருதப்படும் வீட்டினை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணத்தை இந்தியாவின் றோ புலனாய்வு வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு இந்திய றோ புலனாய்வு அமைப்பினால் பிரான்ஸின் ஊடாக இந்த பணம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பணத்தின் ஒரு பகுதியை பயன்படுத்தி கட்சிக்கு தொடர்புடைய ஒப்பந்தக்காரரான குணசேகர என்ற நபர் ஊடாக கட்சியின் அலுவலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எனினும் மேலதிக பணத்தின் மூலம் குறித்த அரசியல் கட்சித் தலைவர் அயர்ல…
-
- 0 replies
- 301 views
-
-
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கால்நடைகளை மீட்டுத்தருமாறு அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் அவர்களது பூர்வீக வாழ்விடங்கள் தொடர்ந்தும் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனை விடுவித்து தங்களது வாழ்விடங்களுக்குச் சென்று வாழ்வதற்கான அனுமதியை பெற்றுத்தருமாறு தொடர்ந்து பல்வேறு போராட்டத்தினை இம் மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக கடந்த ஆண்டில் ஒரு பகுதி கால்நடைகளைப் பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட போதும் அதன் அனுமதி உடனடியாக நிறுத்தப்பட்டது. ஆனால், தற்போது படையினரின் கட்டுப்பாட்…
-
- 0 replies
- 151 views
-
-
தமிழ் பேசும் சகோதர சமூகங்களுக்கிடையே எத்தனை தான் கருத்து வேறுபாடுகள் மற்றும் வேற்றுமையுணர்வுகள் இருந்தாலும் பொதுவான விடயங்களில் சமூகத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகுமென்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். யாழ் சர்வதேச வர்த்தக எக்ஸ்போ கண்காட்சியை யாழ்ப்பாணம் பொது நூல் நிலைய கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த கூறியுள்ளார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேலும் கூறுகையில், இந்த நாட்டிலே இரண்டு துருவங்களாக அரசியல் செய்து மாறிமாறி ஆட்சிக்கு வந்த பிரதான கட்சிகள் இரண்டும் ஒன்றிணைந்து மக்களின் நலனுக்காக அரசமைத்து ஆட்சியை வ…
-
- 0 replies
- 220 views
-
-
பத்திரிகை பத்திரிகை கண்ணோட்டம் (காணொளி) 27 -01 -2017
-
- 0 replies
- 398 views
-
-
கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் சூறாவளியுடன் கூடிய மழையினால் வகுப்பறைகள் சேதம் கிளிநொச்சி தற்போது பெய்து வரும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பாடசாலை ஒன்றில் வகுப்பறைகள் சேதமடைந்துள்ளன. நேற்று வியாழக்கிழமை இரவு வேளை பெய்த காற்றுடன் கூடிய அடை மழை காரணமாக கிளிநொச்சி புளியம்பொக்கணை கலவெட்டிதிடல் நாகேந்திரா வித்தியாலய பாடசாலை தற்காலிக வகுப்பறை கட்டடமே சேதம் அடைந்துள்ளதுடன் இதனால் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது தரம் ஒன்று தொடக்கம் பதினொன்றுவரை வகுப்புக்களை கொண்டு இயங்கி வருகின்ற இப்பாடசாலையில் நான்கு வகுப்புக்கள் மட்டுமே நிரந்தரக்கட்டிடத்தில் இயங்கிவருகின்றன. குறித்த கிராமப்புற ப…
-
- 0 replies
- 262 views
-
-
முகமாலையில் 5 ஏக்கர் காணி விடுவிப்பு -சுப்பிரமணியம் பாஸ்கரன் முகமாலை பகுதியில் இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த, 9 குடும்பங்களுக்குச் சொந்தமான 5 ஏக்கர் காணி, இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மற்றும் 55 ஆம் படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நிர்மல தர்மரட்ண ஆகியோரின் சார்பில், முகமாலை பகுதிக்குரிய கட்டளை தளபதி, கிளிநொச்சி மேலதிக மாவட்டச் செயலாளர் எஸ்.சத்தியசீலனிடம் இதற்கான பத்திரங்களை கையளித்தார். குறித்த பகுதி, 2002 ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகள் மற்றும் அரசாங்கத்தின் யுத்தநிறுத்த உடன்படிக்கையின் பின்னர், யாழ். குடாநாட்டுக்கான நுழைவுப் பகுதியாக …
-
- 0 replies
- 411 views
-
-
கர்ப்பிணி கொலை: மாற்றுத்திறனாளியான சிறுவனின் வீட்டுக்கு பாதுகாப்பு -எம்.றொசாந்த் ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியில் 7 மாத கர்ப்பிணி பெண், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கண்கண்ட சாட்சியாகவுள்ள மாற்றுத்திறனாளியான 12 வயது சிறுவனின் வீட்டுக்கு, பாதுகாப்பு வழங்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன், இன்று உத்தரவிட்டார். இக்கொலைச்சம்பவம் தொடர்பில் கண்கண்ட சாட்சியாகவுள்ள மாற்றுத்திறனாளியான 12 வயது சிறுவனுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகள், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவானின் கவனத்துக்கு கொண்ட…
-
- 0 replies
- 345 views
-
-
யார் கொலை செய்தது ? : முன்னாள் ஜனாதிபதி முன்னிலையில் லக்ஷ்மன் கிரியெல்ல (ப.பன்னீர்செல்வம், எம்.எம்.மின்ஹாஜ்) ஜோசப்பரராஜசிங்கம், நடராஜாரவிராஜ், மகேஸ்வரன் ஆகியோரை படுகொலை செய்தது யார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ முன்னிலையில் சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல கேள்வி எழுப்பினார். நாட்டில் தற்போது தவறு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் விளக்கமறியல் இருப்பதனையிட்டு சந்தோஷப்பட வேண்டும். முன்பு விளக்கமறியலில் வைக்கவில்லை. காணாமல் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சட்ட பிரச்சினையொன்றை எழுப்பி நிதிபுலனாய்வு பிரிவு தொடர்பில் கேள்வி எழுப்பும் போதே அமைச்சர் மேற்க…
-
- 0 replies
- 415 views
-
-
'பொருத்து வீடுகள் பொருத்தமில்லை' -எஸ்.நிதர்சன் 'மீள்குடியேற்ற அமைச்சை அரசு என்னிடம் தருவதற்கு முன்வந்த போதும், தமிழரசுக்கட்சியே அதனை தடுத்தது' என, கைத்தொழில் வர்த்தக துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இன்று தெரிவித்தார். 'இடம்பெயர்ந்த மக்களுக்காக நான் பல விடயங்களை கடினப்பட்டு செய்திருந்தேன். இன்னும் பல விடயங்களை செய்ய வேண்டும் என, முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். மீள்குடியேற்ற அமைச்சு எனக்கு கிடைத்திருந்தால், அவ்வாறு செயற்பட்டிருக்க முடியும். இருந்த போதும், தமிழரசுக் கட்சியே அரசிடம் தெரிவித்து, அவ்வமைச்சு எனக்கு கிடைப்பதைத் தடுத்தது' எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை பொருத்து வீடுகள் தொட…
-
- 1 reply
- 529 views
-
-
பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதுகாக்க Android App -ஜே.ஏ.ஜோர்ஜ் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக குற்றங்களை குறைக்கும் வகையில், அவர்களது பாதுகாப்புக்காக அலைபேசி செயலி ஒன்றை அறிமுகப்படுத்த பொலிஸ், பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. முதலில் அன்ரோய்ட் (Android) திறன்பேசிகளில் அறிமுகமாகும் இந்த செயலி ( App) ஊடாக, தாம் இருக்கும் பிரதேசத்தில் 10 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பொலிஸ் நிலையம், வைத்தியசாலை உள்ளிட்டவற்றை உடனடியாக தொடர்பு கொள்ள முடியும். தற்போது, ஆங்க…
-
- 0 replies
- 224 views
-
-
மாலபே மருத்துவ கல்லூரிக்கு எதிராக யாழில் மருத்துவ பீட மாணவர்கள் நடைபவனி மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக கடந்த ஒரு வாரமாக யாழ் பல்கலைக்கழக மருந்துவ பீட மாணவர்கள் வகு ப்பு பகிஸ்கரிப்பு மற்றும் ,விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தநிலையில் குறித்த போராட்டத்தின் இறுதி நாளான இன்று ஏனைய கல்விச் சமூகத்துடன் இணைந்து நடை பவனி ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று காலை 9 மணியளவில் யாழ் மருத்துவ பீட முன்றலில் ஆரம்பித்த குறித்த நடை பவனி பலாலி வீதியின் ஊடாகச் சென்று வேம்படி சந்தியை அண்மித்து நல்லூர் பின் வீதியில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. நடைபவனியின் இறுதியில் வடக்கு மாகாண …
-
- 0 replies
- 413 views
-
-
யாழில் கோலாகலமாக ஆரம்பமாகியது சர்வதேச வர்த்தக கண்காட்சி யாழ்.மாநகர சபை, இலங்கை மாநாட்டு பணியகம் மற்றும் பன்னாட்டு வர்த்தக சபை ஆகியவற்றின் ஆதரவுடன் யாழ்ப்பாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனமும் இணைந்த விதமாக லங்கா எக்சிபிசன் அன்ட் கொன் பிறின்ஸ் சேவிஸ் பிறைவேட் லிமிடட் ஏற்பாடு செய்துள்ள வடக்கிற்கான நுழைவாயில் என்ற சர்வதேச வர்தக கண்காட்சி இன்றையதினம் யாழ்.மாநகரசபை மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியது. இன்றைய தினம் இதன் ஆரம்ப நிகழ்வுகள் காலை 10 மணியளவில் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியது. இந் நிக ழ்வில் பிரதம விருந்தினராக வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன், கௌரவ விருந்தினராக இந்திய துணைத்தூதுவர் ஆ. ந…
-
- 0 replies
- 271 views
-
-
வெளிநாடு செல்ல முன்னாள் போராளிகளுக்கு அனுமதி பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற நிலையில் விடுதலையான முன்னாள் போராளிகள், அவர்களின் தேவையின் நிமித்தம் வெளிநாடு செல்ல விரும்புவார்களாயின், அதற்கான ஏற்பாடுகளை புனர்வாழ்வு ஆணையாளர் நாயக அலுவலகம் மேற்கொள்ளத் தயாராக உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மூவர், அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு, இன்று இடத்பெற்றது. இதில் கலந்துகொண்ட, புனர்வாழ்வுத் திணைக்களத்தின் வன்னிப் பிரிவுப் பணிப்பாளர் கேணல் எம்.ஏ.ஆர்.ஹெமிடோன், உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர், இதுவரைய…
-
- 0 replies
- 342 views
-
-
உண்ணாவிரதம் கைவிடப்பட்டது -சண்முகம் தவசீலன், எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன், அ.அகரன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியா, பிரதான தபாலகத்துக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டு வந்த, உண்ணாவிரதப் போராட்டம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் வாக்குறுதியையடுத்து, கைவிடப்பட்டுள்ளது. அந்த பிரச்சினைக் குறித்து, எதிர்வரும் 9ஆம் திகதி, கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுப்பதாக அவர் வாக்குறுதியளித்துள்ளார். அன்றைய தினம், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அலரி மாளிக்கைக்கு வருமாறும் அவர் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளா…
-
- 9 replies
- 933 views
-
-
காணாமல்போனோர் பற்றி கையை விரித்தார் பிரதமர் காணாமல்போனோர் பற்றிய எந்தத் தகவல்களையும் இலங்கையில் தேடிக்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் இருப்பவர்களைத் தவிர ஏனையவர்கள் பற்றிய எந்தத் தகவலும் இலங்கையில் கிடையாது எனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். “இவர்கள் இலங்கையில் இல்லாத அதேநேரம், சட்ட ரீதியான வழியில் நாட்டை விட்டுச் சென்றிருக்கவில்லை” என்ற கொள்கை ரீதியான தீர்மானமொன்றை, காணாமல்போனோர் தொடர்பில் எடுக்க வேண்டியிருப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். காணாமல்போனோரின் உறவினர்கள், வவுனியாவில் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் ஜே.வி.பியின் தலைவருமான அநுர குமார தி…
-
- 1 reply
- 230 views
-
-
மகசின், அனுராதபுர சிறைகளில் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் கொழும்பு மகசின் மற்றும் அனுராதபுர சிறைச்சாலைகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமது வழக்குகளை விரைவுபடுத்த வேண்டும் என்று கோரியே இவர்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் அல்லது வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்று முன்னர் உண்ணாவிரதப் போராட்டங்கள் அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டது. எனினும், தமது வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதாக அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். http://www.puthi…
-
- 0 replies
- 617 views
-
-
உண்ணாவிரதிகளை சுவாமிநாதனுக்கு பதில் ருவான் விஜேவர்தன சந்திக்க கூட்டமைப்பின் அழுத்தமே காரணம் வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திக்க பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவை அனுப்பும் முடிவு கடைசி நேரத்திலேயே எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கி ன்றன. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 14 பேர் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் உடல்நிலை மோசமடைந்து வந்த நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜேவிபி உறுப்பினர்கள் நேற்றுமுன்தினம் கேள்விகளை எழுப்பினர். …
-
- 1 reply
- 289 views
-
-
அரசியலமைப்பு தொடர்பில் பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர் – சோபித்த தேரர் அரசியலமைப்பு திருத்த முரண்பாடுகள் தொடர்பாக, சிலர் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு, மக்களை ஏமாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார். ஹெல உறுமய கட்சி உறுப்பினர்கள், கண்டி மல்வத்தை பீடத்துக்கு புதன்கிழமை விஜயம் செய்து, மல்வத்துப் பீட மகாநாயக்கரைச் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டனர். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, தேரர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது, ஒன்றிணைந்த எதிரணியினர், அண்மைக்காலமாக, புதிய அரசியல் திருத்தம் தொடர்பான பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டு …
-
- 0 replies
- 172 views
-
-
வடக்கிலுள்ள வைத்தியசாலைகளின் குறைகளை கண்டறிய வருகிறார் ராஜித வடக்கிலுள்ள வைத்தியசாலைகளின் குறைபாடுகளையும் சுகாதாரத்துறை பிரச்சனைகளையும் தீர்ப்பதற்காக அடுத்த மாதம் 18,19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் சுகாதார் அமைச்சர் வை ராஜித சேனாரத்ன வடக்கிற்கு விஜயம் செய்கிறார். இதன்போது இங்குள்ள குறைபாடுகளை தீர்க்க எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன மருத்துவர்கள் மற்றும் தாதிமாரின் குறைபாட்டைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். மருத்துவ (திருத்த) சட்டமூலம் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய எஸ்.சிறிதரன் எம்.பி வடக்கில் வைத்தியசாலைகளில் உள்ள குறைபாடுகள் பற்றி குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 224 views
-
-
காணாமல் போனோரின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கவேண்டும் போர்க்குற்றம் குறித்தும் விசாரணை அவசியம் என்கிறார் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் (எம்.நியூட்டன்) காணாமல் போனோரின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்கவேண்டியது அவசியமானதாகும். இதேபோன்று யுத்தக் குற் றம் தொடர்பாகவும் உரிய விசாரணை நடத் தப்படவேண்டும் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் செயலகத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் யாழ். பிராந்திய கொன்சியூலர் அலுவலக திறப்புவிழா நேற்று நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட அ…
-
- 0 replies
- 194 views
-
-
பயங்கரவாத முகத்தோடு எங்கள் மக்களைப் பார்ப்பதை நிறுத்த வேண்டும் -முதல்வர் விக்கி கோரிக்கை 50 வருடங்களுக்கு மேலாக ஒரு சட்டத்தரணியாகவும் அதில் பாதிக் காலம் நீதிபதியாகவும் பணியாற்றிய எனக்கு நாட்டின் பாதுகாப்பு பற்றிய அக்கறை இருக்கின்றது .எனவே பயங்கரவாத முகத்தோடு எங்கள் மக்களைப் பார்ப்பதை நிறுத்த வேண்டும் என வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் செயலகத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் அலுவலகம் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில் இன்று உண்மையிலேயே எங்களுக்கு ஒரு நல்ல நாள். அமைச்சர் மங்க…
-
- 0 replies
- 189 views
-