Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணியில் அனைவரும் அணிதிரள வேண்டும் என்று தமிழ்ச்சட்டத்தரணிகள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையினால் தமிழர் தேசம், பிரிக்கப்படாத வடகிழக்கு தமிழர் தாயகம், இறைமை, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான இணைந்த வடக்குக் கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு அவசியம் என்பதை வலியுறுத்தி ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்தப் பேரணியில் பங்குபெற்றுவது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். மேலும் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள நிலையில், தமிழ் மக்களின் அபிலாசைகளை உலகுக்கு வெளிப்படுத்தும் வகையில் இந்த எழுக தமிழ் பேரணி முக்கியத்துவம் பெறுகிறத…

  2. செங்கலடி பிரதேச சபையில் இடம்பெற்ற செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட காணி பிரச்சினைக்கு தீர்வு காணும் நடமாடும் சேவை தொடர்பான பல்வேறு உண்மைகள் வெளிவந்துள்ளன. குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடமாடும் சேவை நேற்று நடைப்பெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட கிழக்கு மாகாண காணி அமைச்சர், விவசாய அமைச்சர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.சிப்பிலி பாறூக் ஆகியோர் கலந்து கொண்டிருந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் குறித்த காணி தொடர்பான நடமாடும் சேவைக்கு அழையா விருந்தினராக கலந்து கொண்டிருந்ததாக தெரியவருகின்றது. அழையா விருந்தினராக வருகை தந்த கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான இந்த…

  3. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ வன்னி பெருநிலப்பரப்பில் போர் நடத்தி தமிழ் மக்களை முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து நடத்திய அட்டூழியம் முதல் போருக்குப் பின்பாக தென்பகுதி மக்களை வடபுலத்திற்கு சுற்றுலா என்ற பெயரில் அனுப்பி வைத்து; வடக்கில் அவர்களை குடியமரச்செய்து; வடபுலம் எங்கும் புத்தர் சிலைகளை அமைப்பித்து; வெசாக் பண்டிகையை தமிழர் தாயகத்தில் பெருமெடு ப்பில் கொண்டாடி தென்பகுதி ஆதிக்கத்தை வடக்கு கிழக்கு முழுமையிலும் விஸ்தரித்ததன் பின்னணியில் சிங்களப் புத்திஜீவிகள் அமைப்பாக செயற்பட்டனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. சுருங்கக்கூறின் வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் என்பதை வேரறுப்பதற்காக மகிந்த ராஜபக்ச­விற்கு வியூகம் அமைத்து கொடுத்தவர்கள் சிங்களப் புத்திஜ…

  4. யாழ் இருபாலை சந்திக்கு அருகில் பேருந்து மீது கல் வீச்சு யாழ் இருபாலை சந்திக்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டு உள்ளது. கல்முனையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தின் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டு உள்ளது. இத் தாக்குதலில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்திற்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள் http://globaltamilnews.net/archives/14139

  5. தைப்பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் சூரியபகவான் மகரராசியில் அடியெடுத்து வைக்கும் தை மாதம் முதலாம் திகதி அன்று கொண்டாடும் உன்னத விழாவாகும்.இந்நிகழ்வானது இவ்வருடம் ஜனவரிமாதம் 14ஆம் திகதி அமைவதாக ஜோதிடம் கணிக்கின்றது. இத் திருநாளை தாம் இவ்வுலகில் நலமுடன் வாழ உதவி செய்த இயற்கைக்கு நன்றி செலுத்தும் நாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப் பெறுகின்றது. இவ்விழா சங்க காலத்தில் வேளாண்மைக்கு வேண்டிய மழை நீரையும், சூரிய ஒளியையும், காற்றையும் தேவைக்கேற்ப வழங்கி தம்மையும், நாட்டையும் செழிப்புடன் வாழ உதவிய இயற்…

  6.  ‘வாய்ப்பை தவறவிட்டுவிட்டது வடமாகாண சபை’ க.அகரன் “வட மாகாணசபையில், நான் குறைபாட்டைக் காண்கின்றேன். அதிகமாக அதிகாரம் வேண்டுமென நீங்கள் கேட்கின்றீர்கள். அது நியாயமானதுதான். ஆனால், வழங்கிய அதிகாரங்களை கூட, சரியான நேரத்தில் வட மாகாணசபை பயன்படுத்தியதாக இல்லை” என, போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். வவுனியா மத்திய பஸ் நிலையத்தை நேற்று (16) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இராணுவத்திடம் இருந்த பல காணிகள், ஜனாதிபதி மைத…

  7. டொனால்ட் ட்ராம்பின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு இலங்கைக்கு அழைப்பு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வமான முறையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் இந்த நிகழ்வில் பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் எதிர்த்து போட்டியிட்ட ஹலரி கிளின்ரன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்ரன் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். அமெரிக்காவின் 45ம் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ராம்ப் எதிர்வரும் 20ம் திகதி பதவி ஏற்றுக்கொள்ள உள்ளார். http://globaltamilnews.net/a…

  8. பிரதமர் ரணில், சீன ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சீன ஜனாதிபதி ஸீ ஸின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக இரு தலைவர்களும் சுவிட்சர்லாந்தின் டாவோஸிற்கு பயணம் செய்துள்ள நிலையில் மாநாட்டின் இடைநடுவில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயம் மற்றும் கொழும்பு நிதி நகரம் போன்றன குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் சீன நிறுவனங்கள் பல முதலீடு செய்துள்ளதாக சீன ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். http://globaltamilnews.net/archives/14130

  9. எல்லை நிர்ணய அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது எல்லை நிர்ணய அறிக்கை உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இழுபறியில் காணப்பட்ட எல்லை நிர்ண அறிக்கை இன்றைய தினம் அமைச்சர் முஸ்தபாவிடம், எல்லை நிர்ணய குழுவின் தலைவர் அசோக பீரிஸ் ஒப்படைத்துள்ளார். இந்த அறிக்கையில் குழுவில் அங்கம் வகித்த ஐந்து உறுப்பினர்களும் கையொப்பமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எழுத்துப் பிழைகள் சரிபார்க்கப்பட்டதன் பின்னர் இந்த அறிக்கை வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/archives/14133

  10. அரசியல்வாதிகளிடம் காணப்படும் பிரச்சினைகளால் வடக்கு வரும் பணம் திரும்பி செல்கிறது – வடமாகாண ஆளுநர் அரசியல்வாதிகளிடம் காணப்படும் பிரச்சினைகளால் வடக்கு வரும் பணம் திரும்பி செல்கிறது வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே தெரிவித்தார் 17-01-2017 செவ்வாய்க்கிழமை சிவில்பாதுகாப்பு திணைக்களத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிக்கான இணைந்த கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வட்டக்கச்சியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் பிரச்சனைகளால் வட மாகாணத்திற்கு வரும் பணம் செலவழிக்கப்படாமல் திரும்பி…

  11. எதிர்காலத்தில் எமக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும் சிலைகள் எழுப்பப்படும் : சிவமோகன் எம். பி. எனது அரசியல் பயணத்தில் வன்னி தேசமெங்கும் தற்போது சிலைகள் அமைப்பதுபோன்று உரிய காலம் கனியும்போது தமிழ் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும் சிலைகள் அமைக்கும் பணியை தொடக்கி மாவீரர்களின் தியாகத்தை போற்றும் புனித செயலையும் செய்வேன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்தார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சிலைகளில் ஒன்றான திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கும் வைபவம் நேற்று மாலை இடம்பெற்றது.இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் …

  12. முன்னாள் போராளிகள் மகஜர் கையளிப்பு.! கிளிநொச்சியில் உள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை என தெரிவித்து வடமாகாண ஆளுனரிடம் முன்னாள் போராளிகள் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பொங்கல் விழா, கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் அமைந்துள்ள வட்டக்கச்சி வயல் பண்ணையில் இன்று இடம்பெற்றது. இதன்போதே முன்னாள் போராளிகள் ஆளுனரிடம் மகஜர் கையளித்தனர். அத்துடன், வேலைவாய்ப்பு கோரி ஆளுனருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர் இதன்போது கருத்துத் தெரிவித்த வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே குறித்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக …

  13. பட்டப்போட்டி... -எம்.றொசாந்த் தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு, வல்வெட்டித்துறையில் மாபெரும் இராட்சத பட்டங்கள் ஏற்றும்போட்டி சனிக்கிழமை இடம்பெற்றது. - See more at: http://www.tamilmirror.lk/189718/பட-டப-ப-ட-ட-#sthash.3dgRAmvf.dpuf

  14. பாடசாலைக்கு சென்ற வெளிநாட்டு சுற்றுலாப்பயணியின் செயற்பாட்டால் சந்தோசத்தில் திளைத்த மாணவர்கள், ஆசிரியர்கள் நாட்டை சுற்றிப் பார்க்க ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்துள்ள சுற்றுப்பயணி ஒருவர் தனது செயற்பாட்டால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமொன்று சிகிரியா பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. டேவிட் என்பவர் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து சுற்றுலாப்பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். இவர் ஒருவார காலம் இலங்கையில் தங்கியிருந்து சிகிரியா, கண்டி, நுவரெலியா, மிரிஸ்ஸ மற்றும் சிவனொளிபாதமலை போன்ற சுற்றுலாத்தலங்களை பார்வையிடுவதற்காக திட்டமிட்டு சாரதியுடன் ஒரு வாகனத்தையும் வாடகைக்கு அமர்த்தியுள்ளா…

  15. வவுனியா பஸ் தரிப்பிடத்தில் மோதல்.! வவுனியா, புதிய பஸ் தரிப்பிடத்தை மையமாகக் கொண்டு தனியார் மற்றும் அரசாங்க பஸ் ஊழியர்களுக்கிடையில் இன்று ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று காலை அரச பஸ் நிலையத்திற்குச் சென்ற பொலிஸார் அரச பஸ்களை நேற்று புதிதாக திறக்கப்பட்ட பஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தனர். இதற்கு பஸ் நிலையத்தில் நின்ற பஸ் சாரதிகள், நடத்துனர்கள் மறுப்புத் தெரிவித்ததுடன் தமது மேலதிகாரியிடமிருந்து உத்தரவு கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர். இருபகுதியினருக்கும் இடையே நீண்ட நேரம் பேச்சுக்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம்…

  16. எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்த தினம் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று (17) விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கும் இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜா தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. கோப்பாய் பகுதியை சேர்ந்த எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான சுந்தரலிங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர் இதன்போது தெரிவு செய்யப்பட்ட நூறு வறுமைக்கு உட்பட்டவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டதுட…

  17. இலங்கையில் காலூன்ற விருப்பம் கொண்டுள்ள கொக்ககோலா தெற்காசியாவின் மென்பான உற்பத்திக் கேந்திரமாக இலங்கையை பணன்படுத்த, அமெரிக்க நிறுவனமான கொக்ககோலா நிறுவ னம், விருப்பம் வெளியிட்டுள்ளது. கொக்ககோலா நி்றுவனத்தின், ஆசிய பசுபிக் பிரிவுக்கான உதவித் தலைவர், ஜோன் முர்பி, நிதிய அமைச்சர் ரவி கருணாநாய க்கவை கொழும்பில் சந்தித்து இதுதொடர்பாகப் பேச்சு நடத்தியுள்ளார். தெற்காசியாவில் அதிக சந்தைவாய்ப்பைக் கொண்டுள்ள கொக்க கோலா நிறுவனம், இலங்கையில் உற்பத்தி மையத்தை ஆரம்பி ப்பதற்கும், இங்கிருந்து இந்தியாவுக்கு தமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் பல்வேறு மெ…

  18. நுகே­கொ­டையில் 27ஆம் திகதி அர­சாங்­கத்துக்கு எதி­ரான பேரணி நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு எதி­ரான வேலைத்­திட்­டங்­களை விரி­வு­ப­டுத்­து­வ­தற்கு கூட்டு எதிர்க்­கட்சி திட்­ட­மிட்­டுள்­ளது. அவ்­வே­லைத்­திட்­டத்தின் முத­லா­வது பேரணி எதிர்­வரும் 27 ஆம் திகதி நுகே­கொ­டையில் இடம்­பெ­ற­வுள்­ளது என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தெரி­வித்தார். அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் பலர் அப்­பே­ர­ணியில் இணைந்­து­கொள்­ள­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ரா…

  19. லசந்­தவின் கொலைக்கு கோத்­தாவே பொறுப்பு 'சண்டே லீடர்' பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்கி­ர­ம­துங்­கவின் படுகொலைக்கு முன்னாள் பாது­காப்புச்செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவே பொறுப்புக் கூற வேண்டும் என அவுஸ்­தி­ரே­லி­யாவில் உள்ள லசந்த விக்­ர­ம­துங்­கவின் மகள் விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு வாக்கு மூலம் அளித்­துள்ளார். கொலை இடம்­பெற சில தினங்­க­ளுக்கு முன்னர் தனது தந்தை தன்­னிடம் தெரி­வித்த விட­யங்­களை வெளிப்­ப­டுத்­தியே அவுஸ்­தி­ரே­லி­யாவில் வைத்து அவர் இவ்­வாறு தமது விசா­ர­ணை­யா­ளர்­க­ளிடம் வாக்கு மூலம் வழங்­கி­ய­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு விசா­ரணை அதி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த டி சில்வா கல்­கிசை நீதிவான் நீதி…

  20. அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரல்கள் ‘சமாதானத்துக்கு எதிரானவை’ சண்முகம் தவசீலன் “அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரல்கள் சமாதானத்துக்கு எதிராகவே உள்ளது” என, மனித உரிமை செயற்பாட்டாளரும் இனவெறி மற்றும் பாரபட்சத்துக்கு எதிரான சர்வதேசத்தின் தலைவருமான நிமல்கா பெர்னாண்டோ குற்றம் சுமத்தியுள்ளார். முல்லைத்தீவு - மாங்குளத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமை நல்லிணக்கம் சகவாழ்வு சமாதானம் ஆகியவற்றை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் சமாதானத்துக்கு எதிராகவே காணப்படுகின்றது. மக்…

  21. நான் தனித்து இயங்குவேன்: அத்துரலிய எம்.பி கட்சி அரசியலில் இருந்து விலகி தாம் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக அதுரலிய ரதன தேரர் அறிவித்துள்ளார். தாம் எவ்வித கட்சியிலும் இணைந்து செயற்பட மாட்டேன் எனவும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் அதுரலிய ரதன தேரர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/

  22.  வட்டவான் கடற்கரை வீதி விவகாரம் நீதிமன்றம் செல்கிறது பேரின்பராஜ் சபேசன் மட்டக்களப்பு, வாகரை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டவான் கடற்கரை வீதி, இரவோடு இரவாக அகற்றப்பட்ட விடயத்தை, நீதிமன்றின் கவனத்துக்கு எடுத்துச் செல்லுமாறு மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ்மா அதிபருக்கு பணித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்தார். வட்டவான் கிராம சேவகர் பிரிவுக்கப்பட்ட கடற்கரை வீதி, சனிக்கிழமை இரவோடு இரவாக இருந்த இடமில்லாமல் அகற்றப்பட்டதுடன் அவ்வீதி வழியான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டது. இதனை அறிந்த மீனவர்கள் மற்றும் பொத…

  23.  சிறைச்சாலையை உடைக்க திட்டம்: சி.ஐ.டி வெலிக்கடை சிறைச்சாலையில் மரண தண்டனை கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலையை உடைப்பதற்கு திட்டம் தீட்டியமை தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி), நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர். இந்த கைதிகளில், மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அடங்குவதாக, சி.ஐ.டியினர் குறிப்பிட்டுள்ளனர் - See more at: http://www.tamilmirror.lk/189825/ச-ற-ச-ச-ல-ய-உட-க-க-த-ட-டம-ச-ஐ-ட-#sthash.dtoruSU7.dpuf

  24. தமிழ் மக்கள் பேரவையில் மூன்று அரசியல் கட்சிகள் இணைவு:- தமிழ் மக்கள் பேரவை எனும் சிவில் அமைப்பின் அணியில் தற்போது மூன்று அரசியல் கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்காலத்தில் இன்னும் பல அமைப்புக்களும், கட்சிகளும் இணைவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான மட்டக்களப்பு பிரதிநிதி ரீ.வசந்தராஜா தெரிவித்துள்ளார். “தமிழ் மக்கள் பேரவைக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் பலம் காரணமாக எம்மோடு அணி சேர்ந்து கொள்வதற்கு பலர் விரும்புகின்றனர். ஏற்கனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற சுரேஷ் பிரேமச்சந்திரனை தலைமையாகக் கொண்ட ஈழமக்கள் புரட்சிகர முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) அதேபோன்று சித்தார்த்தனை தலைமையாகக் கொண்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.