Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஓமந்தை சோதனைச் சாவடி அமைந்திருந்த 22 ஏக்கர் காணி இராணுவத்தால் விடுவிப்பு வவுனியா, ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த காணி இராணுத்தால் இன்று மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமாரவிடம் கையளிக்கப்பட்டது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் இக்காணின் உரிமையாளர்கள் தொடச்சியாக தமது காணிகளை மீள் ஒப்படைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில் 22 ஏக்கர் காணியை இராணுவம் கையளித்தது. மிகுதி 2 ஏக்கர் காணி இராணுவ வசமுள்ளது. கடந்த யுத்த காலத்தில் ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்குமான நுழைவாயிலாகவும் மக்களையும் பொருட்களையும் சோதனையிடும் பிரதான சோதனைச்சாவடியாகவும் இருந்த இப்பகுதி 60 பேருக்கு சொந்தமான 24 ஏக்கர் காணி…

  2. விளக்க மறியலில் இருந்து கொண்டு நூல் எழுதும் விமல் வீரவன்ச மோசடி குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நூல் ஒன்றை எழுதி வருவதாக வெலிக்கடை சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. நள்ளிரவு 12.00 மணி வரையில் கண் விழித்து இந்த நூலை விமல் வீரவன்ச எழுதி வருகின்றார் எனவும் தெரிவித்துள்ளன. அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் பாரியளவில் அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பாரியளவில் வாகனங்களை துஸ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டு அண்மையில் இது தொடர்பிலான விசாரணைகளின் போது விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டிருந்தார். வ…

  3. இந்திய பாதுகாப்பு கரிசனைகளை உதாசீனம் செய்ய முடியாது – சரத் பொன்சேகா இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளை உதாசீனம் செய்ய முடியாது என முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்திய பாதுகாப்பு மற்றும் புவியியல்சார் அரசியல் போன்ற காரணிகளுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயற்பட முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் பிராந்திய வலயத்தின் பலம்பொருந்திய நாடு இந்தியாவே என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பாதுகாப்பு விவகாரம் என்றால் இந்தியாவே பிராந்திய வலயத்தின் முதன்மை நாடு எனவும் அதில் மாற்றமில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இந்திய பாதுகாப்பு விவகாரங்களை உதாசீனம் செய்துவிட முடியாது எனவும் இந்த விட…

  4.  'ஓரினச்சேர்க்கை ஒத்துவராது: அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு மனித உரிமைகள் தொடர்பிலான செயற்றிட்டத்தில் உள்ளக்கப்பட்டுள்ள ஓரினச்சேர்க்கை, குற்றமற்றது என்ற உறுப்புரை உள்ளிட்ட சர்சைக்குரிய உறுப்புரைகள் பலவற்றுக்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாக தகவல்; தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குச் சென்றிருந்த அமைச்சர்களில் பலர் இந்த யோசனைக்கு, தங்களுடைய கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளதாக அறியமுடிகிறது. வெளிவிவகார அமைச்சினாலேயே இந்த யோசனைகள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டி…

  5. வாட்டி வதைக்கும் வறட்சி : குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பில் முறைப்பாடுகளை 117 இலக்கத்துக்கு தெரிவியுங்கள்.! நாட்டில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பான முறைப்பாடுகளை 117 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார். தற்போது நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக 9 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 598 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களில் அதிகமானவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் …

  6. நல்லி­ணக்­கத்தை குழப்­பு­வ­தற்கு அடிப்­ப­டை­வா­திகள் பாரிய சதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறு­கிறார் (எம்.ஆர்.எம்.வஸீம்) இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களை அர­சாங்கம் மேற்­கொண்டு வருகின்­றது. எனி னும் அதனை குழப்­பு­வ­தற்கு அர­சியல் விரோ­தி­களும் அடிப்­ப­டை­வா­தி­களும் சூழ்ச்சி செய்து வரு­கின்­றனர். இவ்­வா­றா­ன­வர்­களின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் மக்கள் புரிந்­து­கொண்டு செயல்­ப­ட­வேண்டும் என ஜனா­தி­பதி மைத்­திரிபால சிறி­சேன தெரி­வித்தார். முஸ்லிம் சமய பண்­பாட்டு திணைக்­க­க­ளத்தின் புதிய கட்­ட­டத்­தொ­கு­தியின் திறப்பு விழா நேற்று கொழும்பில் நடை­பெற்­றது. இந்த நிகழ்வில் …

  7. நிறை­வேற்ற முடி­யாத நிபந்­த­னை­களை அர­சாங்கம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ளாது ஜி.எஸ்.பி. பிளஸ் நிபந்­த­னை­களில் சாத்­தி­ய­மற்ற விட­யங்கள் உள்­ளன என்­கி­றது அர­சாங்கம் (க.கம­ல­நாதன்) ஜி.எஸ்.பீ. பிளஸ் வரிச்­ச­லு­கை­யினை பெற்­றுக்­கொள்ள எமக்கு விதிக்­கப்­பட்­டுள்ள நிபந்­த­னை­களில் எம்மால் முடி­யாத விட­யங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த மாட்டோம் என ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துக்கு அறி­விப்போம் என்று நிதி இரா­ஜாங்க அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா அபே­வர்­தன தெரி­வித்தார். ஆகவே, எமது நாட்டின் மீது விதிக்­கப்­படும் நிபந்­த­னை­களில் எவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­துவோம் என்­பதை அர­சாங்­கமே தீர்­மா­னிக்கும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார். நிதி இரா­…

  8. த.மு.கூ., மு.கா., ஈ.பி.டி.பி., அ.இ.ம.கா. ஆகிய கட்சிகள் இன்று கூடுகின்றன 50க்கு50 கோரிக்கை உள்­ளிட்ட வரைவை இறுதி செய்யத் திட்டம் (ஆர்.ராம்) ஐம்­ப­துக்கு ஐம்­பது கோரிக்கை உள்­ளிட்ட வரைவை இறுதி செய்­வ­தற்­காக நான்கு சிறு­பான்மை கட்­சிகள் இன்று புதன்கி­ழமை கூட வுள்­ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­மை­ய­க­மான தாரு­ச­லாமில் இன்று மாலை 4.30மணி­ய­ளவில் நடை­பெ­ற­வுள்ள கூட்­டத்தில் தமிழ் முற்­போக்கு கூட்­டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்சி, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய நான்கு கட்­சி­களின் தலை­வர்கள் உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்கள் கலந்து கொள்­ள­வுள்­ளனர். இச்­சந்­திப்­பின்­போது குறித்த நான்கு கட்­சி­களும் …

  9. ஜூன் மாதத்­துக்கு முன்னர் எந்த தேர்­த­லையும் நடத்த முடி­யாது எதிர்­வரும் ஜூன் மாதத்­திற்கு முன்னர் எந்­த­வொரு தேர்­த­லையும் நடத்த முடி­யாது. எந்­த­வொரு தேர்­தலும் குறிப்­பிட்ட தினத்­திற்குள் நடத்­தப்­ப­டா­விட்டால் அது ஜன­நா­யக விரோதச் செய­லா­கி­விடும் என்று தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார். இரா­ஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள தேர்­தல்கள் செய­ல­கத்தில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். தொடர்ந்து அவர் குறிப்­பி­டு­கையில், எந்­த­வொரு தேர்­தலும், குறிப்­பிட்ட தினத்­திற்குள் நடத்­தப்­ப­டா­விட்டால் அ…

  10. ஜெனிவா செல்ல தயா­ராகும் உயர்­மட்ட தூதுக் ­கு­ழு­வினர் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் பெப்­ர­வ­ரி­ மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 24 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் அக்­கூட்டத் தொடரில் இலங்­கையின் சார்பில் உயர்­மட்ட தூதுக்­கு­ழு­வினர் கலந்­து­கொள்­வ­தற்கு தயா­ரா­கி­வ­ரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. குறிப்­பாக வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ ஆகியோர் இந்தக் கூட்டத் தொடரில் இலங்­கையின் சார்பில் தலை­மை­ வ­கித்து கலந்­து­கொள்­வார்கள் என எதிர்­பார்க்­க­ப்ப­டு­கி­றது. அத்­துடன் வெளி­வி­வ­கார அமைச்சின் உயர் அதி­கா­ரி­களும…

  11. சி.ஐ.டி. எனத் தெரிவித்து நகை கொள்ளை : வவுனியாவில் சம்பவம் வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் சி.ஐ.டி. யினர் என தம்மை தெரியப்படுத்திச் சென்ற இருவர் வீட்டை சோதனை செய்வதாக தெரிவித்து 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகளை திருடிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, செட்டிகுளம், முகத்தான்குளம், பாம்- 2 பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு நேற்று இரவு 7.30 மணியளவில் சென்ற இருவர், தாம் சி.ஐ.டி. யினர் எனவும் உங்களது வீட்டில் கசிப்பு மற்றும் டைனமைற் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது எனவே வீட்டை சோதனை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர். வீட்டு உரிமையாளர் சோதனையிட அனுமதித்த போது, …

  12. கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணியில் அனைவரும் அணிதிரள வேண்டும் என்று தமிழ்ச்சட்டத்தரணிகள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையினால் தமிழர் தேசம், பிரிக்கப்படாத வடகிழக்கு தமிழர் தாயகம், இறைமை, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான இணைந்த வடக்குக் கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு அவசியம் என்பதை வலியுறுத்தி ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்தப் பேரணியில் பங்குபெற்றுவது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். மேலும் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள நிலையில், தமிழ் மக்களின் அபிலாசைகளை உலகுக்கு வெளிப்படுத்தும் வகையில் இந்த எழுக தமிழ் பேரணி முக்கியத்துவம் பெறுகிறத…

  13. செங்கலடி பிரதேச சபையில் இடம்பெற்ற செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட காணி பிரச்சினைக்கு தீர்வு காணும் நடமாடும் சேவை தொடர்பான பல்வேறு உண்மைகள் வெளிவந்துள்ளன. குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடமாடும் சேவை நேற்று நடைப்பெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட கிழக்கு மாகாண காணி அமைச்சர், விவசாய அமைச்சர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.சிப்பிலி பாறூக் ஆகியோர் கலந்து கொண்டிருந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் குறித்த காணி தொடர்பான நடமாடும் சேவைக்கு அழையா விருந்தினராக கலந்து கொண்டிருந்ததாக தெரியவருகின்றது. அழையா விருந்தினராக வருகை தந்த கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான இந்த…

  14. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ வன்னி பெருநிலப்பரப்பில் போர் நடத்தி தமிழ் மக்களை முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து நடத்திய அட்டூழியம் முதல் போருக்குப் பின்பாக தென்பகுதி மக்களை வடபுலத்திற்கு சுற்றுலா என்ற பெயரில் அனுப்பி வைத்து; வடக்கில் அவர்களை குடியமரச்செய்து; வடபுலம் எங்கும் புத்தர் சிலைகளை அமைப்பித்து; வெசாக் பண்டிகையை தமிழர் தாயகத்தில் பெருமெடு ப்பில் கொண்டாடி தென்பகுதி ஆதிக்கத்தை வடக்கு கிழக்கு முழுமையிலும் விஸ்தரித்ததன் பின்னணியில் சிங்களப் புத்திஜீவிகள் அமைப்பாக செயற்பட்டனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. சுருங்கக்கூறின் வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் என்பதை வேரறுப்பதற்காக மகிந்த ராஜபக்ச­விற்கு வியூகம் அமைத்து கொடுத்தவர்கள் சிங்களப் புத்திஜ…

  15. யாழ் இருபாலை சந்திக்கு அருகில் பேருந்து மீது கல் வீச்சு யாழ் இருபாலை சந்திக்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டு உள்ளது. கல்முனையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தின் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டு உள்ளது. இத் தாக்குதலில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்திற்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள் http://globaltamilnews.net/archives/14139

  16. தைப்பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் சூரியபகவான் மகரராசியில் அடியெடுத்து வைக்கும் தை மாதம் முதலாம் திகதி அன்று கொண்டாடும் உன்னத விழாவாகும்.இந்நிகழ்வானது இவ்வருடம் ஜனவரிமாதம் 14ஆம் திகதி அமைவதாக ஜோதிடம் கணிக்கின்றது. இத் திருநாளை தாம் இவ்வுலகில் நலமுடன் வாழ உதவி செய்த இயற்கைக்கு நன்றி செலுத்தும் நாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப் பெறுகின்றது. இவ்விழா சங்க காலத்தில் வேளாண்மைக்கு வேண்டிய மழை நீரையும், சூரிய ஒளியையும், காற்றையும் தேவைக்கேற்ப வழங்கி தம்மையும், நாட்டையும் செழிப்புடன் வாழ உதவிய இயற்…

  17.  ‘வாய்ப்பை தவறவிட்டுவிட்டது வடமாகாண சபை’ க.அகரன் “வட மாகாணசபையில், நான் குறைபாட்டைக் காண்கின்றேன். அதிகமாக அதிகாரம் வேண்டுமென நீங்கள் கேட்கின்றீர்கள். அது நியாயமானதுதான். ஆனால், வழங்கிய அதிகாரங்களை கூட, சரியான நேரத்தில் வட மாகாணசபை பயன்படுத்தியதாக இல்லை” என, போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். வவுனியா மத்திய பஸ் நிலையத்தை நேற்று (16) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இராணுவத்திடம் இருந்த பல காணிகள், ஜனாதிபதி மைத…

  18. டொனால்ட் ட்ராம்பின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு இலங்கைக்கு அழைப்பு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வமான முறையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் இந்த நிகழ்வில் பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் எதிர்த்து போட்டியிட்ட ஹலரி கிளின்ரன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்ரன் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். அமெரிக்காவின் 45ம் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ராம்ப் எதிர்வரும் 20ம் திகதி பதவி ஏற்றுக்கொள்ள உள்ளார். http://globaltamilnews.net/a…

  19. பிரதமர் ரணில், சீன ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சீன ஜனாதிபதி ஸீ ஸின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக இரு தலைவர்களும் சுவிட்சர்லாந்தின் டாவோஸிற்கு பயணம் செய்துள்ள நிலையில் மாநாட்டின் இடைநடுவில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயம் மற்றும் கொழும்பு நிதி நகரம் போன்றன குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் சீன நிறுவனங்கள் பல முதலீடு செய்துள்ளதாக சீன ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். http://globaltamilnews.net/archives/14130

  20. எல்லை நிர்ணய அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது எல்லை நிர்ணய அறிக்கை உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இழுபறியில் காணப்பட்ட எல்லை நிர்ண அறிக்கை இன்றைய தினம் அமைச்சர் முஸ்தபாவிடம், எல்லை நிர்ணய குழுவின் தலைவர் அசோக பீரிஸ் ஒப்படைத்துள்ளார். இந்த அறிக்கையில் குழுவில் அங்கம் வகித்த ஐந்து உறுப்பினர்களும் கையொப்பமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எழுத்துப் பிழைகள் சரிபார்க்கப்பட்டதன் பின்னர் இந்த அறிக்கை வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/archives/14133

  21. அரசியல்வாதிகளிடம் காணப்படும் பிரச்சினைகளால் வடக்கு வரும் பணம் திரும்பி செல்கிறது – வடமாகாண ஆளுநர் அரசியல்வாதிகளிடம் காணப்படும் பிரச்சினைகளால் வடக்கு வரும் பணம் திரும்பி செல்கிறது வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே தெரிவித்தார் 17-01-2017 செவ்வாய்க்கிழமை சிவில்பாதுகாப்பு திணைக்களத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிக்கான இணைந்த கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வட்டக்கச்சியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் பிரச்சனைகளால் வட மாகாணத்திற்கு வரும் பணம் செலவழிக்கப்படாமல் திரும்பி…

  22. எதிர்காலத்தில் எமக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும் சிலைகள் எழுப்பப்படும் : சிவமோகன் எம். பி. எனது அரசியல் பயணத்தில் வன்னி தேசமெங்கும் தற்போது சிலைகள் அமைப்பதுபோன்று உரிய காலம் கனியும்போது தமிழ் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும் சிலைகள் அமைக்கும் பணியை தொடக்கி மாவீரர்களின் தியாகத்தை போற்றும் புனித செயலையும் செய்வேன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்தார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சிலைகளில் ஒன்றான திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கும் வைபவம் நேற்று மாலை இடம்பெற்றது.இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் …

  23. முன்னாள் போராளிகள் மகஜர் கையளிப்பு.! கிளிநொச்சியில் உள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை என தெரிவித்து வடமாகாண ஆளுனரிடம் முன்னாள் போராளிகள் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பொங்கல் விழா, கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் அமைந்துள்ள வட்டக்கச்சி வயல் பண்ணையில் இன்று இடம்பெற்றது. இதன்போதே முன்னாள் போராளிகள் ஆளுனரிடம் மகஜர் கையளித்தனர். அத்துடன், வேலைவாய்ப்பு கோரி ஆளுனருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர் இதன்போது கருத்துத் தெரிவித்த வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே குறித்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக …

  24. பட்டப்போட்டி... -எம்.றொசாந்த் தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு, வல்வெட்டித்துறையில் மாபெரும் இராட்சத பட்டங்கள் ஏற்றும்போட்டி சனிக்கிழமை இடம்பெற்றது. - See more at: http://www.tamilmirror.lk/189718/பட-டப-ப-ட-ட-#sthash.3dgRAmvf.dpuf

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.