ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143395 topics in this forum
-
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சி உறுப்பினர்கள் இருவரையும் நாடுகடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு யாழ் மேல் நீதிமன்றம் பரிந்துரை ஊர்காவற்றுறை தேர்தல் பரப்புரை இரட்டைக் கொலை வழக்கில் தமைறைவாகியுள்ள நிலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த நபர்கள் இருவரையும் இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்த ஏற்பாடுகள் செய்யுமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதிக்குப் பரிந்துரை செய்துள்ளார். தூக்குத் தண்டனை தீர்ப்புக்களில், தீர்ப்பளிக்கின்ற நீதிபதி ஜனாதிபதிக்குத் தமது தனிப்பட்ட அபிப்பிராயத்தை அனுப்பிவைக்க வேண்டும், என்ற நடைமுறையின்படி, இந்த வழக்கில் இவர்கள் இருவருக்கும் நீதிமன்ற…
-
- 6 replies
- 472 views
-
-
யாழில் 3000 மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்க உதவி வழங்குகிறது இந்தியா யாழ். மாவட்டத்தில் 3000 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை அமைப்பதற்கான உடன்பாட்டில், இந்தியாவும் இலங்கையும் கையெழு த்திட்டுள்ளன. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி முன்னிலையில், பதில் இந்தியத் தூதுவர் அரிந்தம் பக்சி, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர் சிவஞானசோதி ஆகியோர் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்ட னர். இந்த திட்டத்துக்காக 300 மில்லியன் ரூபாவை இந்தியா வழங்கவுள்ளது. சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் வேண்டுகோளுக்கு அமை யவே, இந்த உதவியை…
-
- 1 reply
- 356 views
-
-
இலங்கை சர்வதேசத்திற்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கக்கூடாது – சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்த குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான நிலைமாறுகால நீதிப் பொறிமுறையில், சர்வதேச விசாரணையாளர்களை உள்ளடக்குவது குறித்து இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்கக்கூடாதென சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தில…
-
- 0 replies
- 286 views
-
-
சர்வதேச பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் அரசாங்கத்தின் தார்மீக கடமை என்கிறார் சம்பந்தன் (ஆர்.ராம்) "நீதிக்காக எதிர்பார்த்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து விசாரணைப் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பை உறுதிசெய்யவேண்டியது அரசாங்கத்தின் தார்மீக கடமையாகும்" என்று எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தினார். ஜனாதிபதித் தேர்தலின் போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமென்ற வாக்குறுதி அளிக்கப்பட்டே மக்கள் ஆணை பெறப்பட்டது. அரசியலமைப்பு சபையிலும் அம்முறைமை மாற்றத்துக்கு இணக…
-
- 1 reply
- 458 views
-
-
தமிழரின் எதிர்பார்ப்பாக முன்வைக்கப்படவுள்ள அரசியலமைப்பானது நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமானதும் நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான தீர்வினைக் காண வழிகாட்ட வேண்டுமெனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தனது பொங்கல் வாழ்த்தில் தெரிவித்துள்ளார். இலங்கைத் திருநாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி புலம்பெயர்ந்து வாழும் எம்மக்களுக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வெய்துகின்றேன். உழவர் திருநாள், தமிழர் பெருநாள் என்றெல்லாம் பெருமைப்படும் தைத்திருநாளான இன்று தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் இத் தைப்பொங்கல் விழா மகிழ்வுடன் கொண்டாடப்படுகின்றது. …
-
- 5 replies
- 533 views
-
-
சனல்4 படத்தை இலங்கையில் திரையிட்டால் தமிழர்கள் அந்நியப்படுத்தப்படலாமாம்-கூறுகிறார் மங்கள சனல் 4 வின் ஆவணப்படத்தினைத் தற்போது இலங்கையில் திரையிட்டால் தமிழர்கள் அந்நியப்படுத்தப்படலாம் என வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பிரிட்டனிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, லண்டன் சத்தம் ஹவுசில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலில் சர்வதேச இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோர் மத்தியில் உரையாற்றிய அவர் ஆட்சிமாற்றத்தின் பின்னர் நிலைமைகள் எதிர்பார்க்கப்படுவது போல், நூற்றுக்…
-
- 1 reply
- 258 views
-
-
தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்து மீண்டும் தாயகம் திரும்பியுள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலொன்று முல்லைத்தீவில் நேற்று(13) நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இதன்போது வீட்டுத் திட்டங்கள் வழங்குவது மற்றும் வாழ்வாதர உதவிகளை வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இந்தியாவில் பிறந்தவர் பிள்ளைகளின் பிறப்பு சான்றிதழ்களை இலங்கைப் பிறப்புப் பதிவிற்கு மாற்றுவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் போது, “கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் வரையான காலப் பகுதிக்குள் சுமார் …
-
- 0 replies
- 275 views
-
-
எழுக தமிழ் போராட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ வேறு கட்சிகளுக்கோ எதிரான போராட்டம் அல்ல அது தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்களுக்கும் சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டும் மக்கள் போராட்டம் என தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் பேரவை எதிர்வரும் 21ஆம் திகதி மட்டக்களப்பில் நடாத்தவுள்ள எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று(05) மாலை மட்டக்களப்பு கூட்டுறவு நிலையகட்டிடத்தில் நடைபெற்றுள்ளது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் ரி.வசந்தராஜா,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்…
-
- 2 replies
- 446 views
-
-
தைத்திருநாள் சமத்துவம் மற்றும் நன்றியுணர்வு என்பவற்றின் பெறுமதியை எடுத்துக் கூறும் – பிரதமர் தைத்திருநாள் சமத்துவம் மற்றும் நன்றியுணர்வு என்பவற்றின் பெறுமதியை எடுத்துக் கூறும் வகையில் அமைந்துள்ளது என என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தைப் பொங்கலை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன, மத, கலாசார பேதங்களைத் தாண்டிய அமைதியான, சுதந்திரம்மிக்க நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது நம் அனைவரினதும் பொறுப்பு என்பதை நினைவுபடுத்துவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தைத்திருநாள், கலாசார, சமய பல்வகைமையை மதித்து, மனித சமூகத்தின் மத்தியிலும், சுற்றுச் சூழலுட…
-
- 0 replies
- 206 views
-
-
கொழும்பிலிருந்து விசேட வைத்திய குழு கண்டி விரைகிறது கண்டி போதனா வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் 69 ஆவது சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களில் 3 பேர் திடீரென உயிரிழந்தமை தொடர்பில் ஆராய விசேட வைத்திய குழுவொன்று இன்று கொழும்பிலிருந்து கண்டிக்கு செல்ல உள்ளதாக சுகாதார சேவையின் பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார். சிறுநீரக நோய்களுக்கான சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்கள் மூன்று பேர் கடந்த ஞாயிற்றுக் கிழமை(8) திடீரென உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மேற்கொண்ட மருத்துவ சோதனையில் குறித்த நபர்கள் இன்ஃபுலுவென்சா ஏ எச்1என்1 என்ற நோயினாலேயே உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பா…
-
- 0 replies
- 265 views
-
-
ஐ.தே.க வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருகின்றது – கபே ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருவதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருகின்றது என தெரிவித்துள்ள கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தேர்தலை எதிர்நோக்க அச்சம் காரணமாகவோ அல்லது வேறு காரணிகளினாலோ இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை ஒத்தி வைத்து வருவதாகக் குறி;பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் ஏனைய பிரச்சினைகள் நாட்டில் நிலவிய காலத்திலும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தந்திரோபய அடிப்படையில் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டு வருவதாகக் …
-
- 0 replies
- 215 views
-
-
பிக்குகள் மீது தாக்குதல் நடத்தியது கொழும்பிலிருந்து வந்த குண்டர்கள் குழுவே-றுகுனு பிக்குகள் முன்னணி குற்றச்சாட்டு கொழும்பிலிருந்து அழைத்து வந்த குண்டர்கள் குழுவினரால் பௌத்த பிக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது அதனை தடு க்காமல் வேடிக்கை பார்த்த பொலிஸ்மா அதிபர் உட்பட நல்லாட்சி அரசாங்கம் மீது தென்னிலங்கையில் செயற்படும் பிரபல பிக்கு கள் சங்கம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. பிக்குகள் மீது தாக்குதலை நடத்தியவர்கள் மற்றும் அதனைத் தடுக்க முயற்சிக்காத அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் மிக விரை வில் அதன் பிரதிபலனை அனுபவிப்பார்கள் என்றும் றுகுனு பிக்குகள் முன்னணி சாபமிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச…
-
- 0 replies
- 152 views
-
-
நிதியமைச்சருடன் முரண்படும் நீதியமைச்சர் மூன்று லட்சம் அமெரிக்க டொலர் முதலீடு செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு வதிவிட வீசா வழங்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கடந்த 12ம் திகதி அறிவித்திருந்த நிலையில், அவரது அறிவிப்பில் உண்மையில்லை என நீதி அமைச்சர் விஜ யதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்று இது குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டு ள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், மூன்று லட்சம் அமெரிக்க டொலர் முதலீடு செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு வதிவிட வீசா வழங்குவது குறித்த அமைச்சரவை பத்திரமொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை. அவ்வாறான ஓர் யோசனை அமைச்சரவையில் சமர்ப…
-
- 0 replies
- 189 views
-
-
புதிய அரசியலமைப்பு தொடர்பில் 7306 பேரே கருத்து தெரிவிப்பு புதிய அரசியலமைப்பு மற்றும் இராணுவத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான நீதிமன்றத்தை அமைத்தல் என்பன தொடர்பில் இலங்கையிலுள்ள கோடிக்கணக்கான மக்களில் 7306 பேர் மாத்திரமே கருத்துத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கம் மக்கள் கருத்துக் கணிப்புக்கென நியமித்த குழு வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் மேல் மாகாணத்திலும், வட மேல் மாகாணத்திலும் 250 பேருக்கும் குறைவானோரே கருத்துத் தெரிவித்துள்ளனர். இக்குழுவின் செயலாளரினால் நடாத்தப்படுகின்ற அரச சார்பற்ற அமைப்பு மேற்கொண்ட கருத்த…
-
- 0 replies
- 313 views
-
-
அனைவர் வாழ்விலும் சந்தோஷம், அமைதி இனிக்கட்டும் : முன்னாள் ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி சர்க்கரை பொங்கலைப் போல அனைவரின் வாழ்விலும் சந்தோஷமும் அமைதியும் இனிக்கட்டும். எம் மக்கள் அனைவரும் சந்தேசமாக தைப்பொங்கலை கொண்டாடி மகிழுங்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுப்பிவைத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் அனுப்பிவைத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, புதுப்பானை, புத்தரிசி, வாழை, கரும்பு, மாவி விலைத் தோரணம், இளம் இஞ்சி, இளநீர், மங்கல மஞ்சள் என இனிக்கும் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள். சர்க்கரைப் பொங்கல், புது ஆடை, கோயில் தரிசனம் என எம் மக்கள் அனைவ…
-
- 0 replies
- 205 views
-
-
தமிழ் மக்களின் செய் நன்றி மறவா பண்பே எடுத்துக்காட்டப்படுகின்றது : தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி உழவுத் தொழிலும் உலகமும் உயிர்வாழ மழையைத் தரும் சூரியன் உள்ளிட்ட இயற்கைச் சூழல் மீதும் கமத்திற்கு கை கொடுத்து, பசிக்குப் பால் கொடுக்கும் கால்நடைகள் மீதும் தமது மனமார்ந்த பக்தியையும், கௌரவத்தையும் வெளிப்படுத்தும் வகையில், தமிழ் மக்கள் தைத்திருநாளை கொண்டாடுவதன் மூலம் அம்மக்களின் செய் நன்றி மறவா பண்பே எடுத்துக்காட்டப்படுகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், …
-
- 0 replies
- 274 views
-
-
யாழ் குடாநாட்டில் தமிழ் மக்களின் பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று(12) அதிகாலை 5 மணி முதல் பல்வேறு பகுதிகளிலும் தைப்பொங்கல் வியாபாரம் களைகட்ட ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ். நகர் மற்றும் அதனை அண்டியுள்ள வியாபார நிலையங்கள், குடாநாட்டின் முக்கிய பொதுச் சந்தையான திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள், சுன்னாகம், மருதனார் மடம், சங்கானை பொதுச் சந்தைகள் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்து மிகவும் ஆர்வத்துடன் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுள்ளனர். பொங்கலுக்குத் தேவையான பானைகள், அகப்பைகள், அரிசி, கரும்பு, பழ வகைகள், புத்தாடைகள், …
-
- 4 replies
- 940 views
-
-
வவுனியா - பனிக்க நீராவி கிராமத்தில் வசித்த முன்னாள் போராளியான தேவசகாயம் மரியதாஸ் அண்மையில் திடீரென மரணித்த நிலையில், கஷ்டத்துடன் வாழ்ந்த அவரது குடும்பத்திற்கு இன்று(13) உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த உதவியை வழங்கியுள்ளது. அத்துடன், மிகுந்த கஷ்டத்துடன் வாழ்ந்து வரும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு துவிச்சக்கரவண்டியும், அவரது குடும்பத்திற்கு புத்தாடைகள், பொங்கல் பொருட்கள், 15 நாட்களுக்கான உலர் உணவு பொதிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த உதவி திட்டம் சாந்த நாயகி நற்பணி மன்றத்தின் நிதி உதவியில் தமிழ் விருட்சம் அமைப்பு வழங்கியதாக தெரிவிக்கப்பட…
-
- 1 reply
- 259 views
-
-
தமிழகத்திலிருந்து தாயகம் திரும்பியவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் முல்லைத்தீவில் கலந்துரையாடல் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்து மீண்டும் தாயகம் திரும்பியுள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று இன்று முல்லைத்தீவில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது இந்தியாவில் பிறந்தவர்களுடைய பிறப்பு சான்றிதழ், வீட்டுத்திட்டங்கள் வழங்குவது மற்றும் வாழ்வாதர உதவிகளைச் செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டது. தற்போது தமிழகத்தில் சுமார் ஒரு இலட்சம் அகதிகள் வாழ்வதாக ஈழ அகதிகள் மறுவாழ்வுக் கழகம் தெ…
-
- 0 replies
- 397 views
-
-
தாயகம் திரும்பியவர்களின் நிறைவேறா எதிர்பார்ப்புகள்: நடவடிக்கை எடுக்குமா அரசாங்கம்? inS கோர யுத்தத்தின் போது இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்ற பலர், பல்வேறு எதிர்பார்ப்புக்களின் மத்தியில் தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ளனர். எனினும், அவர்களின் எதிர்பார்ப்புக்கள் பல வருடங்கள் கடந்த நிலையில், இன்று வரை நிறைவேறாமை கவலைக்குரிய விடயமாகும். வவுனியா – தாலிக்குளம் பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர், எதிர்காலத்தை வளமாக்கும் கனவுடன், இந்தியாவில் இருந்து 2012 ஆம் ஆண்டு சொந்த மண்ணிற்கு வந்துள்ளார். …
-
- 0 replies
- 186 views
-
-
மாகாண சபைகளின் வருமானம் மாகாண சபைகளின் அபிவிருத்திக்கே பயன்படுத்துவதற்கான சட்டமூல நடைமுறை வேண்டும் மாகாண சபைகளின் மூலம் ஈட்டப்படும் வருமானத்தை மாகாண சபைகளின் அபிவிருத்திக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாக கிடப்பில் போடப்பட்டுள்ள சட்டமூலத்தை நடைமுறைப் படுத்துவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே வறுமை தலைவிரித்தாடும் மாகாணமாக கிழக்கு மாகாணம் உள்ள நிலையில் அங்கு ஈட்டப்படும் வருமானமும் மத்திய அரசுக்கு செல்வதால் கிழக்கு மாகாணத்துக்கு நிதி வழங்குவதில் காட்டப்படும் பாரபட்சத்துடன் மாகாணத்தை அதள பாதாளத்துக்கு இட்டுச்செல்லும் நிலைமையே ஏற்படும் எனவும் அவர் தெரி…
-
- 0 replies
- 181 views
-
-
முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுங்கள் : நாட்டுமக்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை வரட்சியினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வரட்சியினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் அரச உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக முப்படையினரின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (13) முற்பகல் இலங்கை சீனக்குடா விமானப்படைக் கல்லூரியில் நடைபெற்ற விமானப்படை பயிலுனர்களை அதிகாரம் பெற்றவர்களாக நியமித்தல் மற்றும் விமானப்படை வீர்ர்கள் …
-
- 0 replies
- 393 views
-
-
கிளிநொச்சியில் டெங்கு வேகமாக பரவுவதாக எச்சரிக்கை : 28 பேர் பாதிப்பு கிளிநொச்சியில் டெங்கு காச்சல் வேகமாக பரவிவருவதாகவும், கடந்த 01.01.2017 ஆம் திகதியில் இருந்து 13.01.2017 ஆம் திகதி வரைக்கும் சுமார் 28 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிக்கிறது என்று மாவட்ட சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். டெங்கு கட்டுப்பாட்டை குறைப்பதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் சிரமதான பணிகளை மாவட்ட சுகாதார பிரிவினர், இராணுவத்தினருடன் சிவில் பாதுகாப்பு திணைக்களம், பிரதேச சபை என்பன சிரமதான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் சிவில் பாதுகாப்பு திணைக்கள நாடகக் குழுவினரால் டெங்கு விழிப்புணர்வு நாடகங்களும் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது …
-
- 0 replies
- 252 views
-
-
சந்திரசிறி அடாத்தாக பெற்றநிதி மீளவும் வடமாகாண சபைக்கு வட மாகாண திணைக்களங்களில் இருந்து 2013ம் ஆண்டில் முன்னாள் ஆளுநர் சந்திரசிறியினால் சட்ட முரணாகப் பெற்று க்கொ ள்ளப்பட்ட 110 மில்லியன் ரூபாவும் தற்போதைய ஆளுநரால் வட மாகாண சபையிடம் மீளக் கையளிக்கப்பட்டது. 2013ம் ஆண்டிற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் காலத்தின்போது மாகாணத் திணைக்களங்களில் இருந்த நிதியினை முன்னா ள் ஆளுநர் சட்ட முரணாக ஆளுநர் நிதியத்திற்குத் திருப்பியிருந்தார். அவ்வாறான நிதி 2013ம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபை க்கான தேர்தல் காலத்தில் மகிந்த அணிக்கான தேர்தல் பிரசாரங்களிற்கும் அதனோடு இணைந்த செலவிற்கும் பயன்படு த்தப்பட்டதான குற்றச்சாட்டுகள் எழுந்தன. …
-
- 0 replies
- 340 views
-
-
யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை வழக்கில் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் கடும் எச்சரிக்கை! யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கோரப்பட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய குற்றப்புல னாய்வுப் பிரிவினருக்கு யாழ். நீதவான் சதீஸ்கரன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஒக்டோபர் 21 ஆம் திகதி யாழ் கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் நள்ளிரவு 11.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணி த்த மாணவர்கள் இருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடையாதாக சந்தேகிக்கப்படும் யாழ் பொலிஸார் ஐவரும் குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வ…
-
- 0 replies
- 265 views
-