ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143410 topics in this forum
-
முக்கிய தீர்மானத்திற்காக ஜனவரி ௫, ௬ ஆம் திகதிகளில் அரசியலமைப்பு சபையின் வழிநடத்தும் குழு கூடுகிறது ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ் அரசியலமைப்பு சபையின் முக்கிய தீர்மானம் எடுப்பதற்காக ஜனவரி 5ஆம் 6ஆம் திகதி வழிநடத்தும் குழு கூடவுள்ளதாகத் தெரிவித்த அக்குழுவின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, 9ஆம் திகதி உபகுழுக்களின் அறிக்கைகள் தொடர்பில் விவாதம் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிட்டார். அரசியலமைப்பு சபை நேற்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு அதன் தலைவரும் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது பாராளுமன்றத்திற்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் ஆராயும் பொருட…
-
- 0 replies
- 217 views
-
-
ஒற்றையாட்சியை ஏற்கவே மாட்டோம் ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ் ஒற்றை ஆட்சியை ஒருபோதும் ஏற்கவே மாட் டோம். ஒருமித்த இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே எமது ஒட்டுமொத்த நிலைப்பாடு என பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நேரடியாக எடுத்துக் கூறி யுள்ளது. அதேநேரம் தேசியப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்று வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாகவுள்ளதாக திட்டவட்டமாக தெரி வித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கு, கிழக் கின் அபிவிருத்திக்காக 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எதிர்வரும் காலத்தில் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார…
-
- 0 replies
- 338 views
-
-
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் பாராளுமன்றத்தில் 6 உபகுழுக்களினூடாக சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மக்களின் கருத்துக்களை பெறுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த அறிக்கை மும்மொழிகளிலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அந்த அறிக்கையினை www.constitutionalassembly.lk என்ற இணையத்தளத்தினூடாக பெற்றுக் கொள்ளமுடியும். http://www.virakesari.lk/article/14318
-
- 0 replies
- 193 views
-
-
வவுனியாவில் காணாமல் போன உறவுகளினால் இன்று(10) மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்தினை புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களையும், அவர்கள் எழுதி வைத்திருக்கும் சுலோக அட்டைகளையும் புகைப்படம் எடுத்துள்ளனர். மேலும் நல்லாட்சி அரசிலும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் தொடர்வதாக காணாமல் போனவர்களின் உறவுகள் குற்றம் சாட்டியுள்ளனர் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/community/01/127759?ref=youmaylike1
-
- 1 reply
- 542 views
-
-
வடக்கில் குறுநில மன்னராக இருந்து டக்ளஸ் செய்த கொலைகள் விரைவில் வெளிவரும்-சரவணபவன் எம்.பி தெரிவிப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரான டக்ளஸ் தேவானந்தா குறுநில மன்னராக இருந்தாரென்றும், அப்போது அவரால் அரங்கேற்றப்பட்ட படுகொலைகள் தொடர்பான விபரங்கள் விரைவில் வெளிச்சத்திற்கு வருமென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். அதன் முன்னோட்டமாகவே அவரின் கட்சி உறுப்பினர்கள் மூவருக்கு அண்மையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிதியமைச்சு மீதான குழுந…
-
- 0 replies
- 278 views
-
-
மத்தியவங்கி ஆளுநரின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளாத ஜனாதிபதி? மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தனது பதவியை இராஜினாமா செய்ய விரும்புவதாக ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலைமையை பொறுத்தவரையில் தான் இராஜினாமா செய்யவது நல்லது என இந்திரஜித் குமாரசுவாமி அவர்கள் ஜனாதிபதியிடம் கூறியதைத் தொடர்ந்து, அவ்வாறு இராஜினாமா செய்ய செய்வதற்கு எந்தவித காரணங்களும் இல்லை எனவும், நான் உங்களை நியமித்தது சரியான முறையிலேயே எனவும் ஜனாதிபதி கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியிற்கு தெரிவித்துள்ளார். நிதிச் சபை உறுப்பினர்களும் மத்திய…
-
- 0 replies
- 246 views
-
-
மக்கள் விடுதலை முன்னணி பாரிய ஆர்ப்பாட்டத்துக்கு முஸ்தீபு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சகல உழைக்கும் வர்க்கத்தினரையும் எழுச்சியூட்டும் வகையில் நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி தயாராகி வருவதாக முன்னணியின் தொழிற்சங்க செயற்பாட்டாளரான கே. ரி. லால்காந்த தெரிவித்துள்ளார். தொழிலாளர்களின் சில உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதுடன் நிவாரணங்களும் நீக்கப்பட்டுள்ளன. இவ்வாறானவற்றை மீண்டும் பெற்றுக்கொடுக்கும் முகமாகவே நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த…
-
- 0 replies
- 278 views
-
-
அடாவடித்தனம் தொடர்ந்தால் துப்பாக்கிச்சூடு.! அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இரண்டு கப்பல்களைச் சிறைப்படுத்தியுள்ளமையினால் கடற்படையினர் தலையிட வேண்டி ஏற்பட்டது. எனினும் ஊழியர்களின் அடாவடித்தனம் தொடந்தால் துப்பாக்சிசூடு நடத்தவும் தயங்க மாட்டோம் என தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன. தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டால் கடற்படையைக் கொண்டு துறைமுகத்தை கொண்டு செல்வோம் என்றும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை வரவு – செலவு திட்டத்தின் நிதி அமைச்சு குழு நிலை விவாதத்தின் போது சர்ச்சைக்குட்படுத்தப்பட்ட அதிகாரியின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்ட…
-
- 0 replies
- 164 views
-
-
2017 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 110 மேலதிக வாக்குகளால் வெற்றி 2017 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இறுதிக்கட்ட வாக்கெடுப்பு 110 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 165 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் பதியப்பட்டுள்ளது. இதேவேளை வாக்கெடுப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் சமுகமளிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. குறித்த வாக்கெடுப்புக்கு நாமல் ராஜபக்ஷ, மக்கள் விடுதலை முன்னணியினர் மற்றும் கூட்டு எதிர்கட்சியின் உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/14303
-
- 0 replies
- 257 views
-
-
வடக்கில் விகாரை அமைப்பு மக்களுக்கல்ல அரசியல்வாதிகளுக்கே பிரச்சினை-என்கிறார் ஆளுநர் குரே தமிழ் மக்களால் கொழும்பில் கோவில் கட்ட முடியும் என்றால், முல்லைத்தீவு கொக்கிளாயில் விகாரை அமைப்பதில் என்ன பிர ச்சினை உள்ளது என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைத்தீவில் நேற்றையதினம் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எனினும் வேறு ஒருவரின் காணியில் மக்கள் இல்லாத இடத்தில் அவ்வாறு நிர்மாணிக்கப்பட்டால் அது குற்றம் என தெரிவித்த அவர், வேறு ஒருவருடைய காணியில் அனுமதியின்றி விகாரை அமைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளாார். எனினும் கர…
-
- 2 replies
- 415 views
-
-
வயகரா எப்படி?: விமலிடம் கேள்வி வரவு-செலவுத்திட்டம் மீதான இறுதிநாள் விவாதம் நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கின்ற நிலையில், பகல்போசனத்துக்கு பின்னர் சபை சூடுபிடித்துள்ளது. முன்னதாக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச உரையாற்றினார். அரசாங்கத்தின், கடந்த கால செயற்பாடுகளை கடுமையாக விமர்சனத்துக்கு உட்படுத்திய அவர், வீதி அபிவிருத்தி எனும் பெயரில் கொள்ளையடிக்கின்றனர். கொள்ளையடியுங்கள் பரவாயில்லை. ஏனெனில், வீதியாவது மிஞ்சும். எனினும், பிரதமரின் கீழ் வரவிருக்கின்ற அமைச்சுகளில் அதிகாரிகள், ஊழல் மோசடிகள் இடம்பெற்றால், அரசாங்கத்தின் பணமே நட்…
-
- 0 replies
- 492 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுக பகுதியில் பதற்றம்- கடற்படை தாக்கி பலர் காயம்? பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்ற அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச துறைமுக ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஊடகவியலாளர்கள் இருவர் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். தங்களது நியமனங்களை நிரந்தரமாக்குமாறும், துறைமுக வளாகத்தில் சீனாவின் முதலீடுகளைத் தடுக்குமாறும் கோரி கடந்த 7ஆம் திகதி முதல் அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் பணிபுரியும் 483 ஊழியர்கள் நுழைவாயில் முன்பாக பணிபகிஷ்க ரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அவர்களை அங்கிருந்து கலைப்பதற்காக குறித்த பகுதிக்குச் சென்ற கடற்படையினரில் சிலர் துறைமுக ஊழியர்களுடன் வாய்த்தர்க்கத்தில்…
-
- 0 replies
- 355 views
-
-
சர்வதேச மனித உரிமைகள் தினம் – வடமாகாண முதலமைச்சர் உரை சர்வதேச மனித உரிமைகள் தினம் 2016 மார்கழி 10ம் திகதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணை மண்டபம் பிரதம அதிதியுரை குருர் ப்ரம்மா………………………………… ஒவ்வொரு வருடமும் மார்கழி 10ம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு உலகளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருவது நாம் அனைவரும் அறிந்ததே. அந்தவகையில் வடமாகாணத்தில் இவ்வருடம் கௌரவ அனந்தி சசிதரன் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற இவ் விழாவில் சிறப்பு அதிதிகளாக வருகை தந்திருக்கும் அருட்தந்தை மங்களராஜா அடிகளார் அவர்களே, அருட்தந்தை செபமாலை அடிகளார் அவர்களே, சட்ட வல்லுனர்களான திரு. குருபரன், திரு. சுகாஸ் அவர்களே, மற்ற…
-
- 0 replies
- 358 views
-
-
யாழில் விஷேட காவல்துறை அதிரடிப்படையினர் ரோந்து யாழில் விஷேட காவல்துறை அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்.நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு பகல் வேளைகளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒக்டோபர் மாதம் 20ம் திகதி யாழ்ப்பாண காவல்துறையினரின் துப்பாக்கி பிரயோகத்தில் பல்கலைகழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து இரு நாட்களில் சுன்னாக சந்தை பகுதியில் சிவில் உடையில் நின்ற காவல்துறை புலனாய்வு பிரிவை சேர்ந்த இருவர் மீது வாள் வீச்சு மேற்கொள்ளப்பட்டதில் இருவரும் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர். காவல்துறை மீதான வாள் வெட்டினை தாமே மேற்கொண்டோம் என ஆவா குழு எனும் குழு…
-
- 0 replies
- 395 views
-
-
மனித உரிமைகள் தினத்தில் மனித சங்கிலி போராட்டம் வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல், எஸ். பாக்கியநாதன் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் மனித சங்கிலி போராட்டம் மற்றும் கவன ஈர்ப்பு பேரணி என்பன நடத்தப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற இணையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், காணாமல் போனவர்கள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். 'ஏனையவர்களின் உரிமைகளுக்கான இன்றே எழுவோ…
-
- 0 replies
- 169 views
-
-
வவுனியாவில் காணாமல்போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் காணாமல்போனோரின் உறவினர் ஒன்றிணைந்து வவுனியா கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டவர்கள் பேரணியாக பசார் வீதி, மில் றோட் வழியாகச் சென்று வவுனியா சுவர்க்கா விருந்தினர் விடுதியை சென்றடைந்தனர். பன்னாட்டு மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தமது காணாமற்போன உறவுகளுக்கு நீதி வேண்டியும், பக்கச்சார்பில்லாத விசாரணைகள் மேற்கொள்ள வேண்டியும், காணமல்போனோர் விடயத்தில்; நம்பிக்கையினைக் கட்டியெழுப்பக்கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தியும் கூட்டம் ஒன்றினையும் நடத்திய…
-
- 0 replies
- 267 views
-
-
'த.தே.கூ பிச்சை எடுக்கவில்லை' ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தவுக்கு, இணக்க அரசியல் என்றால் என்ன என்று தெரியவில்லை. நாங்கள், இணக்க அரசியல் செய்யவில்லை. சரியாகக் கூறுவதாயின் நாங்கள் பிச்சை எடுக்கவில்லையென சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான ஈ.சரவணபவன், அரசாங்கத்திடம் சலுகைகளை பெறவில்லை என்றும் கூறினார். நாடாளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுக்கொண்டிருக்கும், வரவு-செலவுத்திட்டம் மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மக்களுக்கு தேவையானவற்றுக்கு, சரியானவற்றுக்கு நாம் ஆதரவளிப…
-
- 0 replies
- 256 views
-
-
யாழில் ஒரு கிராமசேவகர் பிரிவில் 8 மதுபான நிலையங்களாம்-கூறுகிறது ஜே.வி.பி இலங்கையில் மதுபாவனை தற்போது உரிமைகளில் ஒன்றாக மாறிவருகின்ற நிலையில் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அரசா ங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்றும் மதுபான நுகர்வில் முதலிடம் பெற்றுள்ள யாழ். மாவட்டத்தில் காணப்படுகின்ற 435 கிராம சேவகர் பிரிவுகளிலும் தலா 8 வீதம் மது பான விற்பனை நிலையங்கள் காணப்படுவதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறு ப்பினர் பிமல் ரத்நாயக்க தகவல் வெளியிட்டுள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் நிதியமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் ஆரம்பமாகியபோது நிதியமைச்சரி…
-
- 0 replies
- 234 views
-
-
யாழில் அதிகரிக்கும் விகாரை, பள்ளிவாசல்,தேவாலயம் -குறைவடையும் இந்துக் கோவில்கள் யாழ். மாவட்டத்தில் விகாரைகளும்,பள்ளிவாசல்களும் அதிகரித்து வருவதாக யாழ். மாவட்டச் செயலக புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தென்மராட்சிப் பிரதேச செயலாளர் பிரிவில் 3 விகாரைகள் கடந்த ஆண்டு புதிதாக முளைத்துள்ளன. குறித்த அறிக்கையில் இந்து ஆலயங்களின் எண்ணிக்கை 185 இனால் குறைவடைந்துள்ளதாவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு 4 விகாரைகள் காணப்பட்டன. தீவகம் தெற்கில் 2 விகாரைகளும், யாழ்ப்பாணம், வலிகாமம் தென் மேற்கில் தலா ஒன்றுமாக 4 விகாரைகள் இருந்தன. மேலும், 2015 ஆம் ஆண்டு இந்த எண்…
-
- 0 replies
- 209 views
-
-
பெண்கள் மற்றும் சிறுவர் உரிமையை பாதுகாப்போம் ; ஹட்டனில் கவனயீர்ப்பு பேரணி உலக புலம்பெயர்வு மற்றும் மனித உரிமைகள் நினைவு தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு பேரணி ஹட்டன் நகரில் இன்று நடைபெற்றது. நீதி, சமாதானம் மனித அபிவிருத்தி உரிமைகள் பற்றிய ஆணைக்குழு, கரிட்டாஸ் கண்டி செட்டிக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த அமைதி ஊர்வலம் இடம்பெற்றது. ஹட்டன் பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று மணிக்கூண்டு சந்தியூடாக ஹட்டன் பிரதான வீதியில் அஜந்தா விடுதிவரை சென்று விழிப்புணர்வு கூட்டம் இடம்பெற்றது. பேரணியில் செட்டிக் நிறுவன இயக்குனர் அருட்தந்தை டெஸ்பன் பெரேரா, நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் அருட்தந்தை லெஸ்லிபெரேரா மற்றும் …
-
- 0 replies
- 324 views
-
-
மட்டக்களப்பு மாநகர சபையின் அசமந்த போக்கு ; குப்பைகளை வீதியில் வைத்து மக்கள் எதிர்ப்பு மட்டக்களப்பு மாநகர சபையினரின் அசமந்த போக்கால் மக்கள் குப்பைகளை வீதியில் வைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இன்று காலை மாமாங்கம் கிராமத்தில் வழமைபோல 15 நாட்களுக்கு 1 தடவை கழிவு குப்பைகளை எடுப்பதற்கு வந்த ஊழியர்கள் அவற்றை தரம் பிரிக்காமல் போட்டதால் குப்பைகளை வீதியில் போட்டு விட்டு சென்றுள்ளனர். கடந்த மாதம் மாநகர சபையால் இவற்றை தரம் பிரிப்பதற்கு உகந்த பைகள் வழங்குவதாக தெரிவித்தும் இதுவரைக்கும் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். எது எவ்வாறாக இருந்தாலும் இந்த குப்பைகள் இன்னும் 15 நாட்களில் சுகாதாரத்துக்க…
-
- 0 replies
- 294 views
-
-
வடக்கு மாகாணக் கடற்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினரின் உதவியுடன் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் தென்பகுதி மீனவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லையென வடக்கு மாகாண மீனவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அட்டகாசங்களை விட கடலுடன் எவ்வித தொடர்பும் இல்லாத இராணுவத்தின் அட்டூழியங்கள் அதிகரித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட வடபகுதி மீனவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். வடமாகாண கடற்தொழிலாளர் இணையம், வடமாகாண மீன்பிடி அமைச்சு மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் வடமாகாண மீன்பிடி அபிவிருத்திக்கான இணைமுகாமைத்துவ செயற்பாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள ரில்கோ விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ…
-
- 1 reply
- 433 views
-
-
புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில் புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக, மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவைப் பெறுவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலின்போது சிறீலங்கா அரசாங்கம் அரசியலமைப்பு மாற்றம் குறித்து தனது கருத்தை முன்வைக்கவேண்டுமென முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும், அரசாங்கத்தின் மனதில் உள்ளது என்னவென்று தெரியாது தான் எவ்வாறு கருத்து வெளியிடமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.…
-
- 0 replies
- 516 views
-
-
கிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு கவனயீர்ப்பு போராட்டம் : கிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு கவனயீர்ப்பு நிகழ்வு இன்று காலை பத்து மணியளவில் கிளிநொச்சி கந்தசாமி கோவிலடியில் நடைபெற்றது கிளிநொச்சி மாவட்ட காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களின் சங்கம் மற்றும் தமிழ் சிவில் சமூக அமையம் இணைந்து இவ் கவனயீர்ப்பு நிகழ்வினை ஒழுங்குபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது இன் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகள் ,தமிழ் சிவில் சமூக பிரதிநிதிகள் , எனப் பலரும் கலந்துகொண்டனர் http://globaltamilnews.net/archives/98…
-
- 0 replies
- 204 views
-
-
7000 கார்களுடன் வந்த ஜப்பானிய கப்பல் அம்பாந்தோட்டையில் பணயமாக தடுத்து வைப்பு-நெருக்கடியில் அரசு அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களால், பாரிய ஜப்பானிய கொள்க லன் கப்பல் ஒன்று பணயமாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சீன நிறுவனம் பொறுப்பேற்றால், தமது வேலைகள் பறிபோகும் என்று, அம்பாந்தோட்டை துறைமுக பணியாளர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 5ஆம் நாள் இரவு, அம்பாந்தோட்டைத் துறைமுகத்து…
-
- 1 reply
- 243 views
-