ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
நீதிமன்ற உத்தரவை கிழித்தவர்களை கைதுசெய்வதே உரிய நடைமுறை நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ (க.கமலநாதன்) மட்டக்களப்புக்கு செல்லவிருந்த பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர்கள் மீது ஒரு குழு தாக்குதல் நடத்துவதற்கும் முயற்சியில் இறங்கப்போவதாக எமக்கு தகவல் கிடைத்தது. அதனால், அவர்கள் மட்டு. நகருக்குள் நுழையும் போது உயிரிழப்புக்கள் ஏற்படாமல் தடுப்பதற்காகவே இடைநடுவில் அவர்களை மறித்து தடை உத்தரவினை கையளிக்குமாறு பொலிஸாரை பணித்தோம் என நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ தெரிவித்தார். அதேநேரம் நீதிமன்றத் தடைஉத்தரவை கிழித்தெறிவது மன்றினை அவதூறு செய்வதாகவே கருத்தப…
-
- 0 replies
- 188 views
-
-
மட்டக்களப்பு கல்லடி பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து சாரதி அனுமதிப்பத்திரம் பெறுபவர்களுக்கான தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் முன்பாக கூடியவர்களினால் இன்று காலை அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. தற்போது அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்படவுள்ள சாரதி அனுமதிப்பத்திரம் இன்று வாகனங்களை செலுத்துவோருக்கான 25ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவீடு தொடர்பான அறிவிப்பினை தொடர்ந்து அதிகளவானோர் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக போட்டி போடும் நிலை காணப்படுகின்றது. இதனடிப்படையில் மட்டக்களப்பு தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்திற்கு முன்பாக இன்று காலை ஐந்நூறுக்கு மேற்பட்டோர் ஒன்றுகூடியதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. மட்டக்களப்…
-
- 0 replies
- 280 views
-
-
கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இழுபறி நிலையில் இருந்த நாரந்தனை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் 15 நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது. நாளையதினம் வழக்கு தொடுனர் மற்றும் எதி ரிகள் தரப்பு சட்டத்தரணிகளின் தொகுப்புரை இடம்பெற்று நாளை மறுதினம் தீர்ப்பு வழங்கப்படும் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மன்றில் தெரிவித்தார். யாழ் தீவகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஈ.பி.டி.பி யினர் 2001/11/28அன்று மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக தொடர் வழக்கு விசாரணையில் இன்றைய தினம் எதிரிகளின் சாட்சிகளும் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் அனைத்தும் நிறைவுக்கு வந்தன. அந்த வகையில் இன்று இவ்வழக்கில் 3ம் மற்றும் 4 ம் எத…
-
- 0 replies
- 205 views
-
-
முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதேசத்தில் தனியார் காணியில் அமைக்கப்பட்டுவரும் விகாரைக்கான நிர்மாணப் பணிகள் இரவு பகலாக முன்னெடுக்கப்படுவதாகப் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர். கொக்கிளாய் பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியை அடாத்தாகக் கையகப்படுத்தி, பெளத்த பிக்குகளின் ஆதரவுடன் சிறிசம்போதி மகா விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் 2010ஆம் ஆண்டு கொக்கிளாய் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். இதன்போது திருஞானசம்பந்தர் என்ற தனியாருக்குச் சொந்தமான காணி இலங்கை இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டது. …
-
- 0 replies
- 403 views
-
-
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 75 மில்லியன் ரூபா மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு : கிளிநொச்சிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை 04-12-2016 விஜயம் மேற்கொண்ட மத்திய சுகாார சேவைகள் பணிப்பாளா் நாயகம் வைத்தியா் பாலித மகிபால மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 75 மில்லியன் ரூபா பெறுமதியிலான் மருத்துவ உபகரணங்களை வழங்கி வைத்துள்ளாா். இந்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்றது. அத்தோடு தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்று வருகின்ற புனரமைப்பு பணிகளையும் பாா்வையிட்டதோடு,அடுத்த ஆண்டும், மேலதிக புனரமைப்பிற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்படுமாயின் நிதிஒதுக்கீட்டிற்கான பரிந்துரை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் வாக்குறுதியளித்தார்…
-
- 0 replies
- 326 views
-
-
தயா மாஸ்டருக்கு எதிராக வழக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளது. தயா மாஸ்டருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக புலனாய்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அப்பாவி பொதுமக்களை பணயக் கைதிகளாக தடுத்து வைத்திருந்தார் என தயா மாஸ்டர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் சட்ட மா அதிபர் வவுனியா நீதிமன்றில் தயா மாஸ்டருக்கு எதிராக வழக்க…
-
- 0 replies
- 404 views
-
-
கிழக்கு மாகாணத்தில் அம்பாறையும் திருகோணமலையும் பறிபோன நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் தான் தமிழர்கள் கைகளில் உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 72வீதம் தமிழர்கள் வாழ்ந்தாலும் இம்மாவட்டத்தின் ஆட்சி அதிகாரம், அனைத்தும் மட்டக்களப்பு மங்கள ராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், பிரதியமைச்சர்களான ஹிஸ்புல்லா, அமீர்அலி போன்றவர்களின் கைகளிலேயே உள்ளன. அவர்களின் கைபொம்மையாக அம்மாவட்டத்தின் நிர்வாக தலைமை அதிகாரியாக இருக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எல்.எம்.சாள்ஸ் செயல்பட்டு வருகிறார் என்பதற்கு அண்மைக்காலத்தில் அங்கு நடைபெற்று வரும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் அவர்கள் கையாலா…
-
- 0 replies
- 354 views
-
-
வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் தங்கும் வகையில் திருகோணமலைத் துறைமுகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவுள்ளதாக சிறீலங்காக் கடற்படை அறிவித்துள்ளது. கடந்த 28ஆம் திகதி நடைபெற்ற காலிக் கலந்துரையாடல் எனப்படும், கடல் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றும்போதே கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பின்னர் இதுவரை 95 வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் சிறீலங்காத் துறைமுகத்துக்கு வந்து சென்றுள்ன. இவற்றில் ஆறு கப்பல்கள் மாத்திரமே கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தந்ததாகவும், ஏனையவை அனைத்தும் கொழும்புத் துறைமுகத்திலேயே தரித்து நின்றன. ஆறு கப்பல்கள் மாத்திரமே …
-
- 0 replies
- 281 views
-
-
விபசார விடுதி தொடர்பான குற்றச்சாட்டில் மட்டு.முன்னாள் மேயர் உட்பட நால்வருக்கு பிணை (சசி) மட்டக்களப்பு நகரிலுள்ள கட்டிடமொன்றில் முன்னெடுக்கப்பட்டுவந்த விபசார விடுதி தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட நான்கு சந்தேக நபர்களுக்கும் நிபந்தனைகளின் பேரில் இன்று நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட நான்கு சந்தேக நபர்களையும் பொலிஸார் ஆஜர்படுத்திய போது நீதிபதி எம். கணேசராஜா பிணையில் செல்ல அனுமதி வழங்குமாறு உத்தரவு பிறப்பித்தார். …
-
- 2 replies
- 767 views
-
-
புலிகளின் அரசியற்பிரிவான கூட்டமைப்பை தடை செய்யவேண்டும்-கொதிக்கும் கம்மன்பில தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவாக தற்போதும் செயற்பட்டுவருகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம் தடை செய்ய வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது. விடுதலைப் புலிகள் அன்று தங்களை காப்பாற்றியதற்கான பரிகாரத்தின் ஒருபகுதியாகவே கூட்டமைப்பினர் மாவீரர்களை நினைவுகூர்வதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பங்காளிக் கட்சியான பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சாட்டினார். பிவித்துரு ஹெல உறுமய ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் …
-
- 0 replies
- 353 views
-
-
டொலரின் மதிப்பு அதிகரித்து வருவதால், இலங்கையில் பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ரூபா மதிப்பை பாதுகாப்பதற்காக டொலர் விற்பனை செய்யப்படுவதன் காரணமாக வெளிநாட்டு இருப்புக்கள் குறைவடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் இறுதியில் டொலரின் பெறுமதி 131 ரூபாவாக காணப்பட்டதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதுவரையில் இலங்கையில் 8.2 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு இருப்புக்கள் இருந்ததாகவும், தற்போது அது வரையில் 6 பில்லியன் அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டினுள் பாரிய நிதி நெருக்கடி ஒ…
-
- 0 replies
- 426 views
-
-
ஆப்கானிஸ்தான் சிவில் சமூக தலைவா்கள் குழு கிளிநொச்சி பயணம் . ஆப்கானிஸ்தான் நாட்டைச் சோ்ந்த சிவில் சமூக தலைவா்கள் குழுவென்று இன்று திங்கள் கிளிநொச்சிக்கு வந்துள்ளனர். 35 போ் கொண்ட இந்த குழுவினா் கடந்த 28 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்து அநுராதபுரம்,கண்டி, கிளிநொச்சி என நாட்டின் பல மாவட்டங்களுக்கும் பயணம் செய்து வருகின்றனா். யுத்தத்திற்கு பின்னரான இலங்கையில் நிலைமைகள், சமாதான, நல்லிணக்க செயற்பாடுகள், அபிவிருத்தி நடவடிக்கைகள், மக்களின் கலாச்சார நிலைமைகள், பெண்களின் சமூக வகிபாகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை ஆராயும் வகையில் அவா்களது பயணம் அமைந்துள்ளது கிளிநொச்சிக்கு வந்த அவா்கள் பிற்பகல் மாவட்டச் செயலயத்திற்கு வருகை தந்து மாவட்…
-
- 0 replies
- 290 views
-
-
நாடாளுமன்ற உரையை தமிழ்ப் பத்திரிகைகள் தவறாக பிரசுரித்துள்ளன IBC
-
- 0 replies
- 257 views
-
-
யாழில் விசேட அதிரடிப் படையினர் ரோந்து - குணசேகரன் சுரேன் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இரவு நேரங்களில் விசேட அதிரடிப் படையினரின் ரோந்து நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சுமார் 10 எண்ணிக்கையைக் கொண்ட இந்த விசேட அதிரடிப் படையினர், நகரப் பகுதிகளின் வீதிகளில் ரோந்து செய்து வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் மாவீரர்தினம் அனுஸ்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வீதி ரோந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாலை 5 மணியளவில் மேற்கொள்ளப்படும் இந்த ரோந்து, இரவு 9 மணியையும் தாண்டி செய்யப்பட்டு வருகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/187480/ய-ழ-ல-வ-…
-
- 1 reply
- 345 views
-
-
வடகிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பை பெற வேண்டியதுஅவசியமே. ஆனால் அவர்களுடைய ஒப்புதலை பெற்று உடனடியாக இரு மாகாணங்களையும்இணைக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயங்களாகும் எனநாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கூட்டமைபின் பேச்சாளருமானஎம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். வடகிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் எனஅண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருந்தார். இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேள்வி எழுப்பிய போதே அவர்மேற்கண்டவாறு கூறியுள்ளார். விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில், முஸ்லிம் தரப்புக்களுடன் நாம் தற்போது பேசி …
-
- 5 replies
- 692 views
-
-
சர்ச்சைக்குரிய அம்பிட்டிய சுமனரத்ன தேரரால் மட்டக்களப்பில் பதற்றம் ; கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைப்பு (படங்கள் இணைப்பு) பொதுபலசேனா அமைப்பினர் முன்னெடுக்க திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்டமொன்றினை தடுக்கும் முகமாக பொலிஸார் ரிஜிதென்ன பகுதியில் அமைத்துள்ள தடுப்பு காவலை அகற்றுமாறு சர்ச்சைக்குரிய பிக்கு அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பொலிஸாரிடம் முரண்பட்டு வருகின்றமையால் குறித்த பகுதியில் பதற்றநிலை உருவாகியுள்ளது. ஏற்பட்டுள்ள பதற்றநிலைமையை கட்டுபடுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பொலிஸ் உயர் அதிகாரிகளுடன், கலகம் அடக்கும் பொலிஸாரும் குறித்த பிரதேசத்துக்கு வருகைத்தந்துள்ளனர். மட்டக்களப்புக்கு சென்றுள்ள ஞானசார தேரர் உட்பட்ட பொதுபலசேனா அமைப்பின…
-
- 11 replies
- 841 views
-
-
நீதித்துறையினை அவமதித்திருக்கும் தேரர்கள் மீது உரிய நடவடிக்கை அவசியம் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமங்கல ரத்ன தேரர் மற்றும் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நீதிமன்ற உத்தரவையும் மீறி செயற்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. நீதிமன்ற உத்தரவை மீறி அம்பிட்டிய சுமங்கல தேரர் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையும் மட்டக்களப்புக்கு செல்ல முயன்ற கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பொதுபலசேனா குழுவினரை வெலிக்கந்தையில் பொலிஸார் மறித்ததையடுத்து தேரர் நீதிமன்ற தடை உத…
-
- 2 replies
- 472 views
-
-
13 இலிருந்து வெகுதூரம் சென்று புதிய அரசியலமைப்பை உருவாக்குகிறோம் நியாயமான அரசியல் தீர்வு கிடைத்தால் உதாசீனப்படுத்தமாட்டோம் என்கிறார் சம்பந்தன் (க.கமலநாதன்,ந.ஜெகதீஸ்) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தமிழ் மக்களுக்கு முழுமையான அரசியல் தீர்வாக அமையாது. எனவே அதிலிருந்து வெகுதூரம் சென்று நாங்கள் புதிய அரசியலமைப்பை உருவாக்குகின்றோம். அதற்கமைய நியாயமானதும் நீதியானதுமான தீர்வு கிடைத்தால் அதனை உதாசீனப்படுத்த மாட்டோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அதேநேரம் நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சி…
-
- 1 reply
- 267 views
-
-
யாழ்.பேருந்து நிலையத்தில் கஞ்சா வைத்திருந்த குடும்பஸ்தர் கைது கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குடும்பஸ்தர் ஒருவர் யாழ். பஸ் நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணம் கந்தர் மடத்தைச் சேர்ந்தவர் எனவும் 46 வயதுடையவர் எனவும் பொலிஸாரின் விசார ணையில் தெரியவந்துள்ளது. நபர் ஒருவர் கஞ்சாவை வைத்திருப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படை யில் யாழ் பொலிஸ்நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் யாழ் பஸ் நிலையத்துக்கு சென்று சோதனை நடத்தியவேளை 1.10 கிராம் நிறையுடைய கஞ்சாவை நுகர்வுக்காக கையிருப்பில் வைத்தி ருந்ததன் பேரில் குறித்த நபர் நேற்றிரவு 8.20 மணியளவில் கை…
-
- 0 replies
- 360 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகவியாலாளர் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் பேசுவதில்லை : கயந்த கருணாதிலக (சசி) வடக்கு, கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத்தில் தெரிவிப்பதில்லை என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். கொழும்பில் உள்ள மகாவலி கேந்திர மத்திய நிலையத்தில் ஊழியர் தொழிற்சங்கத்தின் 6 ஆவது பேராளர் மாநாட்டு அண்மையில் இடம்பெற்றது. இதில்க கலந்து கொண்டு கருத்துத் தெரிவிககையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இங்கு மேலும் தெரிவி்க்கையில், பலமுறை நான் ஊடகவியாளர்கள் பிரச்சினை தொடர்பாக…
-
- 1 reply
- 316 views
-
-
5 வருடத்தின் பின்னர் தமிழருக்கு ஒன்றும் செய்யவில்லையென குறை கூறாதீர்- என்கிறார் அமைச்சர் சுவாமிநாதன் 13ஆவது திருத்தச் சட்டத்தை முறையாக அமுல்படுத்தினால் தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வை கொடுக்கலாம் எனவும் ஐந்து வருடங்களின் பின்னர் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லையென தம்மை குறைகூற வேண்டாம் என்றும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகை யிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, இன்று வடக்கிலும் கிழக்கிலும் 160,000 வீடுகள் தேவையாக உள்ளதென குறிப்பிட்ட சுவாமி நாதன், இதனை கட்டிக்கொடுப்பதற்கு சிலர் இடை…
-
- 1 reply
- 376 views
-
-
கருணா அம்மானின் பிணை மனு நிராகரிப்பு கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. விநாயகமூர்த்தி முரளிதரன் பிணை மனுவினை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்திருந்த நிலையில், குறித்த பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது துப்பாக்கி துளைக்காத வாகனொமொன்றை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகிய போது இவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/14164
-
- 0 replies
- 406 views
-
-
http://www.tamilmirror.lk/187468/ச-ட-ச-யங-கள-ன-எண-ண-க-க-ய-க-ற-ப-பத-
-
- 0 replies
- 292 views
-
-
குமார் குணரட்னம் இன்றைய தினம் விடுதலை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரட்னம் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட உள்ளார். சிறைத்தண்டனையை பூர்த்தி செய்து அவர் இன்றைய தினம் விடுதலை செய்யப்படுவார் என சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வீசா சட்டங்ளை மீறி நாட்டில் தங்கியிருந்த குற்றத்திற்காக அவுஸ்திரேலிய பிரஜையான குமார் குணரட்னத்திற்கு ஓராண்டு கால சிறைத்தண்டனையும், 50,000 ரூபாஅபராதத்தையும் கேகாலை நீதிமன்றம் விதித்திருந்தது. எதிர்வரும் 9ம் திகதியே குமார் குணரட்னத்தின் தண்டனைக்காலம் பூர்த்தியாக உள்ள நிலையில், கைதிகளுக்கு வழங்கப்படும் பொதுச் சலுகை அடிப்படையில் இன்றே …
-
- 13 replies
- 883 views
-
-
பௌத்த அமைப்புக்களின் செயற்பாடு தவறானது மட்டு.சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கருத்து (ஆர்.யசி) எந்தவொரு நபருக்கும் வடக்கு மற்றும் கிழக்கில் சமய வழிபாடுகளிலோ அல்லது சுற்றுலா நடவடிக்கைகளிலோ ஈடுபட சகல உரிமையும் உள்ளது. ஆனால் மத நிந்தனைகளில் ஈடுபடுவதாக கூறி அங்குள்ள மக்களை பழிவாங்கவோ அல்லது குழப்பங்களை ஏற்படுத்தவோ முனைவது தவறான செயற்பாடாகும். இத்தகைய பெளத்த அமைப்புகளின் செயற்பாடு தவறானது என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இலங்கையில் அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய தேசிய கொடிக்கே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 174 views
-