ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
இடைநடுவில் நீதிமன்ற உத்தரவை கையளித்ததால் கிழித்தெறிந்தோம் பிரச்சினைக்கு பொலிஸாரே காரணம் என்கிறார் ஞானசாரதேரர் (க.கமலநாதன்) மட்டக்களப்பு மங்களராமய விகாரையில் போதி பூஜை நடத்துவதற்காக நாம் அங்கு சென்றபோது தமிழ், முஸ்லிம் குழுக்களின் வேண்டுகோளின் பேரில் பொலிஸார் எம்மை இடை நடுவில் தடுத்ததுடன் நீதிமன்ற தடையுத்தரவையும் கையளித்தனர். இடைநடுவில் இந்த உத்தரவினை கையளித்தமையினால் தான் அதனை நாம் கிழித்தெறிந்தோம் என்று பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்தார். வடக்கு, கிழக்கிலிருந்து சிங்கள,தமிழ் மக்கள் தெற்கிற்கு வருகின்றபோது நாம் அவர்களை இடைநடுவில் தடுத…
-
- 0 replies
- 253 views
-
-
மீண்டும் மதவாதச் சிந்தனையின் மூலமாக நாட்டில் இனங்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு, அரசாங்கத்தை மட்டுமல்லாது, தமிழ் முஸ்லிம் மக்களை ஆட்டங்காணச் செய்தற்கான முயற்சிகள் வெகுலாவகமாக மேற்கொள்ளப்பட்டுவருவதனை அவதானிக்க முடிகின்றது. மட்டக்களப்பு நகருக்குள் இருக்கும் பல வீதி வழியாக தமிழ் மக்களை துவேச வார்த்தைகளால் திட்டி ஓடித்திரிந்த மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் அடாவடித்தனம் இன்றைய தினம் மட்டக்களப்பு நகரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சர்ச்சைகளை ஏற்படுத்துவதில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சற்றும் இழைத்தவர் அல்ல நான் என்பதை சுமணரத்ன தேரர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இன்றைய தினம் பொதுபலசேனா உள்ளிட்ட பௌத…
-
- 9 replies
- 1.7k views
-
-
எமது #சமுகத்திற்குரிய #நியாயமான #நீதியான#விடையங்களை கேட்பது இனவாதமா? #காரசாரமான #பேச்சு.#பாராளுமன்றத்தில் கடுமையான வாதப்பிரதிவாததில் ஈடுபட்ட போது .
-
- 0 replies
- 199 views
-
-
பாக்கு நீரிணையில் இந்திய- சிறிலங்கா மீனவர்கள் கூட்டாக மீன்பிடிப்பது தொடர்பாக இந்தியப் பேராசிரியர் வி.சூரியநாராயண், முன்வைத்த யோசனையை மன்னார் மீனவர்கள் நிராகரித்துள்ளனர். சிறிலங்கா கடற்படை நடத்திய காலி கலந்துரையாடல் எனப்படும், கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, தெற்கு, மற்றும் தென்கிழக்காசிய கற்கைகள் நிலையத்தைச் சேர்ந்த முன்னணி பேராசிரியரான வி.சூரியநாராயண், கொழும்பு வந்திருந்தார். சிறிலங்கா கடற்படையின் ஏற்பாட்டில், தலைமன்னார் கடற்படைத் தளத்தில், மன்னார் பிரதேச மீனவர்களை அவர் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார். பள்ளிமுனை, தலைமன்னார், பேசாலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும், 37 பேர் இந்தக் கலந்த…
-
- 0 replies
- 378 views
-
-
கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய ‘இலங்கையில் தமிழர் – ஒரு முழுமையான வரலாறு (கி.மு 300 – கி.பி 2000)’ என்னும் ஆய்வுநூல் நூலுக்கு இலங்கையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது என நேற்று (3) வேலணையூர் சுரேஷின் கவிதைநூல் வெளியீட்டு விழாவில் கலந்து உரையாற்றியாற்றிய வடமாகாணக் கல்விப் பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை விவகார அமைச்சர் குருகுலராஜா தெரிவித்தார். வெளிநாட்டிலிருந்து வடமாகாண கல்வி அமைச்சுக்குட்பட்ட பாடசாலைகளுக்கென அனுப்பப்பட்ட கலாநிதி முருகர் குணசிங்கத்தின் ‘இலங்கையில் தமிழர் – ஒரு முழுமையான வரலாறு’ என்ற நூல்களை சுங்கவரித் திணைக்களத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளனர். அவற்றைத் தரும்படி வடமாகாண கல்வி அமைச்சினால் கோரப்பட்டபோது பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தாலே தரமுடியும…
-
- 0 replies
- 393 views
-
-
இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத நகர்வுகளுக்கு வாய்ப்புகள் இருக்கும் என பாகிஸ்தான் மற்றும் இந்திய பாதுகாப்பு தரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஊடுருவலும் பயங்கரவாத நகர்வுகளும் இந்து சமுத்திர பரப்பில் இருப்பதாகவும் பாகிஸ்தான் மற்றும் இந்திய பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தந்திருக்கும் பாகிஸ்தானிய கடற்படை தளபதி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத நகர்வுகளை கட்டுப்படுத்த இந்தியா - பாகிஸ்தானுடன் இணைந்து செயற்படுவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் ஆசிய நாடுகளுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் பாரிய அச்சுறு…
-
- 0 replies
- 228 views
-
-
இலங்கையிடம் அமெரிக்கா எதனை எதிர்பார்க்கிறது? “உயிர்களைக் காப்பாற்றுவதில், இலங்கை ஆயுதப்படைகள் நிபுணத்துவத்தையும், அக்கறையையும் காண்பித்தனர். இந்த அவசர சூழ்நிலைகளில் அவர்கள் வழங்கிய உதவிகள் ஆழமாகப் பாராட்டப்பட வேண்டியது.” இவ்வாறு இலங்கைக் கடற்படை மற்றும் விமானப்படைக்கு பாராட்டுத் தெரிவித்திருந்தார், அட்மிரல் ஹரி பி ஹரிஸ். இவர் 70 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட, அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் தளபதி. கடந்தவாரம், கொழும்பில் கோல்பேஸ் விடுதியில் நடந்த காலி கலந்துரையாடல் எனப்படும், கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய போது தான் அட்மிரல் ஹரி பி. ஹரிஸ் இவ்வாறு கூறியிருந்தார். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளைக் க…
-
- 0 replies
- 432 views
-
-
பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசியின் மூலம் கைது ஒன்றை தடுக்க கூறியதாக கூறப்படுபவர் தொடர்பில் நாளை முக்கிய சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் சாகல ரட்நாயக்க ஆகியோரை, சந்திப்பு ஒன்றுக்காக பிரதமர் அழைத்துள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த சம்பவத்தில் பொலிஸ் மா அதிபர் மீது எவ்வித குற்றங்களும் இல்லை. அவர், மறுபுறத்தில் இருந்து தொலைபேசிக்கு அழைப்பு வந்தபோது தாம் கூறும் வரையில் நிலமே என்பவரை கைதுசெய்யவேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளதாகவே கூறினார். எனவே இங்க…
-
- 0 replies
- 159 views
-
-
ஆசிய ஆயர் பேரவையின் இறுதி நாள் திருப்பலியானது புனித லூசியாஸ் கொழும்பு உயர்மறை மாவட்ட பேராலயத்திலே நடைபெற்றது. இந்த நிகழ்வானது இன்று (04) காலை இடம்பெற்றது. அனைத்து ஆசிய ஆயர்களும் இந்த ஆலயத்திற்கு வந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தனர். இந்நிகழ்வில் பக்தர்கள் உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயர்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/religion/01/126993?ref=home
-
- 0 replies
- 256 views
-
-
கடந்தகால யுத்தத்தில் எமது தமிழினம் இழப்பதற்கு எதுவுமில்லை, எமது பாரம்பரிய கலை கலாச்சாரங்களும் அதில் உள்ளடங்கும். ஆகவே எமது பாரம்பரிய கலாச்சாரங்கள் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். காரைதீவு விபுலானந்தா சதுக்கத்தில் அமைந்துள்ள அரசையடிப்பிள்ளையார் ஆலயத்தின் ஸ்தாபன விழாவில் இன்று(04) கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த நிகழ்வானது ஆலய தலைவர் கே. தம்பிராஜா தலைமையில் நடைபெற்றது. அங்கு கலையரசன் மேலும் உரையாற்றுகையில், அம்பாறை மாவட்டத்திற்கு முகவெற்றிலையாக காரைதீவு மண் திகழ்கிறது. வீரம் கல்வி பொருந்திய மண். விபுலானந்த அடிகளாரது பெயரில் உள்ள விபுலானந்த சது…
-
- 0 replies
- 372 views
-
-
இந்த நல்லாட்சி அரசு தமிழ் மக்களின் விடயத்தில் அக்கறை கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதாக இருந்தால், அதற்கு முன்னர் இனவாதிகள் சிலரை நாடுகடத்த வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார். களுவாஞ்சிகுடி கிராமக்கோட்டு வீதியின் புனரமைப்பு வேலையின் ஆரம்ப நிகழ்வு முன்னாள் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் வாமதேவன் தலையில் இன்று (04) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், மட்டக்களப்பு விகாராதிபதி, சம்பிக்கரணவக்க, விமல்வீரவங்ச, பொதுபலசேனா போன்ற இனவாதிகளை இந்த நாட்டிலே இருந்து நாடுகடத்த வேண்டும். …
-
- 0 replies
- 261 views
-
-
வடகிழக்கு இணைப்பு பிழை என்று கடந்த ஆட்சிக்காலத்தின்போது திர்ப்பளித்த நீதிபதியே தான் வழங்கிய தீர்ப்பு பிழை என்று பகிரங்கமாக கூறியிருந்தார் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார். லண்டன் சைவ முன்னேற்ற சங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட அறநெறிப் பாடசாலை கட்டட திறப்பு விழாவும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் அனுசரணையில் சைவநெறி அறப்பணி மன்றம் நடாத்தும் சிவதொண்டர் மாநாடும் நிந்தவூர் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதை தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், 18 வருட காலமாக வடகிழக்கு மாகாணம் இணைந்திருந்தது. ஆனால் கடந்த அரசாங்கத்தின் ஆட்ச…
-
- 0 replies
- 549 views
-
-
தமிழருக்கு அரசியல் தலைமை இல்லை- வடக்கு அமைச்சர் ஐங்கரநேசன் ஒரு காலத்தில் நாங்கள் பலம் வாய்ந்தவர்களாக இருந்தோம்.விடுதலைப் போராட்டத்தில் எல்லா நாடு களும் வியக்கும் வண்ணம் அனைத்துப் படைகளையும் கொண்ட தலைமைத்துவமாக இருந்தோம்.ஆனால் இப்பொழுது அரசியல் செய்ய பெயருக்கு தலைவர்கள் இருக்கிறார்கள் எனினும் சரியான தலைமைத்துவம் இல்லை. வருகின்ற ஆண்டிற்கான அரசியல் அமைப்பு திட்டம் சாதகமாக வந்தால் நாம் நினைத்ததை செய்வதற்கு ஓரளவு இலகுவாக இருக்கும் என சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் "கருவி " சமூக வள நிலையத்தால் நேற்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநே…
-
- 2 replies
- 358 views
-
-
அரசகரும மொழியாக தமிழையும் இணைக்க மஹிந்த கடும் எதிர்ப்பு அரச கரும மொழியில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மற்றும் சிங்கள மொழி ஆகிய இரண்டையும் அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ மொழி யாக மாற்றுவது தொடர்பில் அரசியல் நிர்ணய சபை யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது. குறித்த யோசனைக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறி க்கை ஒன்றை இன்றைய தினம் வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், வட கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தமையினால் கட ந்த 1957 ஆம் ஆண்டும் தந்தை செல்வாவினால் தமிழ் மொழியை அரச கரும மொழியாக்கு வது தொட…
-
- 1 reply
- 373 views
-
-
யாழில் வாள் வெட்டுக்குழு எனும் சந்தேகத்தில் மாணவன் உட்பட ஐவர் கைது – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- யாழில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் உட்பட ஐந்து பேர் வாள் வெட்டுகுழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர். கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான விஷேட பொலிஸ் குழுவினரால் குறித்த ஐந்து நபர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர். உரும்பிராய் பகுதியை சேர்ந்த இருவர் உட்பட , கோப்பாய் மத்தி , திருநெல்வேலி , மற்றும் சுன்னாகம் பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டு உள்ளனர். குறித்த குழுவில் கைது செய்யப்பட்டவர்கள் 16, தொடக்கம் 20 வயதுக…
-
- 3 replies
- 1.9k views
-
-
தெரு நாடகம் நடத்திய தேரர்களை தண்டிக்க வேண்டும் : மனோ (பா.ருத்ரகுமார்) மட்டக்களப்புக்கு சென்று தெருநாடகம் நடத்திய பெரும்பான்மையின மதத்தை சேர்ந்த தேரர்கள் உடன் தண்டிக்கப்பட வேண்டும் என தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கருமங்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மேலும் பொலிஸ் மா அதிபர் யாரை 'சேர்' என அழைத்தார் என தேடிப்பார்த்து அரசியலாக்க முனையும் கூட்டு எதிரணியினரும் மக்கள் விடுதலை முன்னனியும் தேரர்களின் அடாவடித்தனம் தொடர்பில் மொளனமாக இருப்பது பெரும் வேதனைக்குறியது எனவும் குறிப்பிட்டார். மட்டக்களப்பில் தேரர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் அமைச்சரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஆவர் தொடர்ந்து தெ…
-
- 0 replies
- 299 views
-
-
'நாட்டில் மத சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது' நல்ல ஒழுக்கப் பண்பாடுடைய மனிதர்களை உருவாக்குவதற்கு ஆன்மீகத் தத்துவங்கள் பெரிதும் உதவுவதாகவும் விரும்பிய சமயத்தைப் பின்பற்றும் சுதந்திரம், தற்போது நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தெம்பல, ரத்தொளுகம மெதடிஸ்த தேவாலயத்தின் இருநூறாவது ஆண்டுநிறைவு விழாவில் இன்று (04) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். பாதைகளை அமைத்தல், கட்டடங்களை அமைத்தல் போன்ற பௌதீக அபிவிருத்திகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் மனிதனது ஆன்மீகப் பண்பாடுகள் வீழ்ச்சியடை…
-
- 1 reply
- 337 views
-
-
ஆயுதங்களும் வாகனங்களும் கைப்பற்று... மினுவாங்கொட உன்னாருவப் பிரதேசத்தில் இயங்கி வந்த பாதாள உலகத் தலைவர் சுசந்த பிரடி சில்வா எனப்படும் பிரடியின் படுகொலையுடன் தொடர்புடைய 6 பேர் கைதுசெய்யப்பட்டுளளதுடன், மேலும் ஒருவர் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மூன்று வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, நீர்கொழும்பு பிராந்திய சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.ஆர்.ஏ. ஜி. மனோகர, இன்று (04) தெரிவித்தார். (படப்பிடிப்பு: எம்.இஸட்.ஷாஜஹான்) - See more at: http://www.tamilmirror.lk/187447/ஆய-தங-கள-ம-வ-கனங-கள-ம-க-ப-பற-ற-#sthash.7t6qB5Mf.dpuf
-
- 0 replies
- 552 views
-
-
ஹம்பாந்தோட்டையில் அதிக மழை வீழ்ச்சி கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக மழைவீழ்ச்சி, ஹம்பாந்தோட்டையில் பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. 65.07 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி, மத்திய மாகாணத்தின் பல இடங்களில் பதிவாகியுள்ளதுடன் அதிக வெப்பமான காலநிலை இரத்தினபுரியில் நிலவியதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/187439/ஹம-ப-ந-த-ட-ட-ய-ல-அத-க-மழ-வ-ழ-ச-ச-#sthash.faDAnbRQ.dpuf
-
- 0 replies
- 326 views
-
-
இனக்கலவரத்தை உருவாக்குவதே பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் உள்நோக்கம் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ஞானசார தேரர் இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்துவதில் மிகவும் கீழ்த்தரமாக செயல்படுகின்றார். தொடர்ச்சியாக அவர் மேற்கொண்டுவரும் இனவாத பேச்சுக்களும் வெறுப்பூட்டும் நடவடிக்கைகளும் முஸ்லிம்களை வெகுவாகப் பாதித்துள்ளது. அழுத்கம கலவரத்தின் சூத்திரதாரியான ஞானசார தேரர் மீது, அந்தப் பிரதேச மக்கள் பல வழக்குகளை பதிவு செய்துள்ள போதும், அவர் விசாரிக்கப்படவுமில்லை,…
-
- 1 reply
- 498 views
-
-
மட்டக்களப்பு நோக்கி வந்த போது நேற்று ரிதிதென்ன பகுதியில் தடுக்கப்பட்ட பொது பலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர், நீதிமன்ற தடை உத்தரவை மீறி நேற்றிரவு மட்டக்களப்பு புனானைக்கு வந்தார். நேற்றிரவு அவர் புனானை விகாரையில் தங்கியிருந்தார். அங்கு கருத்து வெளியிட்ட அவர்- இன்று நான் கைது செய்யப்பட்டாலும் எமது புனிதமான பௌத்த மதத்தின் பெருமையையும் புனிதத்தையும் காக்க நீங்கள் தயாராக இருங்கள். எனக்கு தற்பொழுது தொலைபேசியின் ஊடாக பல அழைப்புகள் வந்தன. மகாநாயக்கர்கள் கூட. தற்போதும் பாதுகாப்புத் தரப்பினர் உங்கள் முன் இப்பயணத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுக்கின்றனர். பெண்மைத்தனமான தமிழர்களுக்காகவும், முஸ்லிம்களுக்காகவும் எமது வீரம் கொண்ட படைவீரர்களை பெண்களாக்க…
-
- 0 replies
- 448 views
-
-
கிளிநொச்சியில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அதிகாரசபைத் தெரிவு.! - எஸ்என்நிபோஜன் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சிக்கான அதிகாரசபைத் தெரிவு இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர் அங்கையன் இராமநாதன் தலைமையில் கிளிநொச்சியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. குறித்த அதிகாரசபைத் தெரிவில் அதிகாரசபைச் செயலாளர், 20 அதிகாரசபை உறுப்பினர்கள் மற்றும் 5 அதிகாரசபைக்கான ஆலோசகர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் தமது பிரச்சனைகளை நேரடியாகவும் கடிதம் மூலமும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கையன் இராமநாதனிடம் தெரிவித்தனர். இந்த தெரிவு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதியின் உரையில் உள்ள யதார்த்தம் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படுமா? என்ற கேள்வி கடந்த பல தசாப்த காலமாக தமிழ் மக்கள் மத்தியில் நிறைந்து போயுள்ளது. பதவிக்கு வந்த அரசாங்கங்களும் அரசியல் தலைவர்களும் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்த போதிலும், அவை எதுவும் நிறைவேற்றப்படாமையே வரலாறாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதனால் தமிழ் மக்கள் மிகுந்த விரக்திக்கும் வேதனைக்கும் முகம் கொடுத்தமைக்கப்பால், நிறைந்த நம்பிக்கையீனங்களுக்கும் ஆளானார்கள். இன்றுவரை அந்த விதமான நிலைமைகளே தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தம…
-
- 0 replies
- 282 views
-
-
புதிய அரசியலமைப்பானது சிறுபான்மையினரின் பல பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக அமையும் புதிய அரசியலமைப்பானது இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மையின மக்களின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக அமையும். மேலும், தற் போது நாட்டில் காணப்படுகின்ற ஜனநாயகக் குறைபாடுகளை நீக்கும் வகையிலேயே புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும். சில அரசியல்வாதிகள் புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொய்ப்பிரசாரங்களை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றார்கள். இவற்றில் எவ்வித உண்மைத்தன்மையுமில்லை. மேலும், மக்களின் குறைகளைத் தீர்த்து அவர்களின் அபிலாஷைகளை புதிய அரசியலமைப்பானது நிறைவேற்றும் என்றே நம்புகின்றேன் என இலங்க…
-
- 0 replies
- 461 views
-
-
சாய்ந்தமருதுப் பிரதேசத்திற்குத் தனியானபிரதேசசபை வழங்கப்படுவதில் தமிழர்கள் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை ஆனால் கல்முனைத்தொகுதியில் இருக்கின்ற தமிழ்க்கிராமங்களை மூன்றுசபைகளாக் கூறுபோடமேற்கொள்ளும் சதிவேலையினை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது என கல்முனை மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் கென்றிமகேந்திரன் தெரிவித்துள்ளார் கல்முனைத் தொகுதியில் பிரதேசசபைகள் பிரிக்கப்பட இருக்கும் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திர்ப்பு சனிக்கிழமை 3 ஆம் திகதி இரவு அவரது இல்லத்தில் நடைபெற்றபோது மேற்கண்டவாறு தெரிவித்தார் இதில் கல்முனை மாநகரசபையின் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் எதிர்க்கட்சித்தலைவர் ஏகாம்பரம் கல்முனை மாநகரசபை உறுப்பினர்அ.விஜயரெத்தினம் பிரபல ஒப்பந்தக்காரர் எஸ்.சந்திரசேகரம் …
-
- 0 replies
- 404 views
-