ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143411 topics in this forum
-
யாழ்ப்பாணம் அச்சுவேலி பிரதேசத்தில் நிலம் தாழிறங்குவதற்கான காரணங்களைக் கண்டறிவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த நிலப் பகுதியை எதிர்காலத்தில் பயன்படுத்துவது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்காகவே அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தேசிய கட்டிட ஆய்வு அமைப்பின் மூலம் இதற்கான ஆய்வினை மேற்கொள்வது தொடர்பாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் …
-
- 2 replies
- 361 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் வருடாந்தம் கர்ப்பிணிப்பெண்களில் எட்டு பேரில் நான்கு பேர் பாலியல் தொடர்பான நோய்களுக்கு தொற்றுக்குள்ளாகியுள்ளது தொடர்பில் இனங்காணப்பட்டுள்ளதாக இலங்கை குடும்பநல சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.எச்.இம்தியாஸ் தெரிவித்துள்ளார் மட்டக்களப்பு, கல்லடியில் உள்ள விமோசன்னா இல்லத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு விமோசன்னா இல்லம் இலவச வைத்தியமுகாம் மற்றும் பார்வையற்றவர்களுக்கான கண்ணாடி வழங்கும் நிகழ்வினை இன்று (01) ஏற்பாடுசெய்திருந்தது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார், தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது.அதன்காரணமாக சிவப…
-
- 2 replies
- 538 views
-
-
திசை மாறி வந்த தமிழக மீனவர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடல் கொந்தளிப்பு காரணமாக திசை மாறி வந்த தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கால நிலை சீரானதை அடுத்து தமிழகத்திற்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். வடக்கில் புதன்கிழமை இரவு முதல் கால நிலை சீரின்மை காணப்பட்டதனால் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. கடல் கொந்தளிப்பு காரணமாக தமிழக மீனவர்கள் திசை மாறி வடக்கு கடற்பிரதேசத்திற்கு வந்த நிலையில் வடமராட்சி மீனவர்களால் வியாழக்கிழமை காப்பற்றப்பட்டு கரை சேர்க்க பட்டனர். தமிழகம் நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை கிராமத்தை சேர்ந்த முத்தப்பன் நடராஜன் (வயது 43) நடராஜன் …
-
- 0 replies
- 316 views
-
-
1984ஆம் ஆண்டு மார்கழி மாதம் சேமமடு முதலாம் படிவத்தில் இராணுவத்தினரால் விசாரணைக்கென அழைத்துச்செல்லப்பட்ட 22 பேர் காணாமல் போயினர். அந்த வகையில் அவர்களை நினைவு கூறும் 32ஆம் ஆண்டு நினைவு ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு இன்று (02) சேமமடு முதலாம் படிவ ஆதி விநாயகர் ஆலயத்தில் உறவுகளினால் அனுஷ்ட்டிக்கப்பட்டது. இவ்விசேட ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/community/01/126804?ref=home
-
- 1 reply
- 544 views
-
-
தமிழ்தேசிய கூட்டமைப்பு மீள்குடியேற்ற அமைச்சு வழங்கும் பொருத்து வீட்டுதிட்டத்தை எதிர்க்கிறது. ஆனால் மீள்குடியேற்ற அமைச்சர் பொருத்து வீட்டுத்திட்டத்தை முடித்தே தீருவேன் என ஒற்றை காலில் நிற்கிறார். அதற்கான காரணம் என்ன என ஆராய்ந்தபோது மிகமோசமான விடயங்கள் எமக்கு தெரியவந்துள்ளது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எ ம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். விடயம் தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், இறுதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
-
- 0 replies
- 271 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இரகசிய சந்திப்பில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் ஜனாதிபதியின் மீறிஹான வீட்டில் இந்த இரகசிய சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றுள்ளது. சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிமான நேரம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எனினும் இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எவ்விதமாக தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. சீனாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த மஹிந்த, நேற்று நாடு திருப்பியிருந்தார். இதனையடுத்து இந்திய தூதுவரின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கொழும்பு அரசியல் தரப்பில் பேசப்படுகிறது. கடந்த…
-
- 0 replies
- 347 views
-
-
கடந்த ஆட்சியின் போது ராஜபக்ஷர்களால் மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வீரகொட்டிய யோசனை முறை என்ற பெயரில் போலியான திட்டத்தை உருவாக்கி மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஊடாக ராஜபக்சர்கள் தங்களின் பெற்றோரின் கல்லறையை 9 கோடி ரூபா அரசாங்க பணத்தை பயன்படுத்தி கட்டியமை தொடர்பில் ,நிதி மோசடி விசாரணை பிரிவு மேற்கொண்ட விசாரணைகளின் அறிக்கை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக அந்த அறிக்கை இவ்வாறு சட்டமா அதிபரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 9 கோடி அரசாங்க பணத்தை அப்போதைய பாதுகாப்பு…
-
- 0 replies
- 352 views
-
-
யாழ் பல்கலை மோதல் வழக்கை வாபஸ் பெறும் மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை மீளப் பெறவுள்ளதாக தமிழ் சிங்கள மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்கள் இரு தரப்பினரையும் முறைப்பாடுகளை வாபஸ் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வின் போது சிங்கள மாணவர்கள் கண்டிய நடனத்தை ஏற்பாடு செய்தமையினால் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. …
-
- 2 replies
- 557 views
-
-
தீவக தாக்குதல் வழக்கு விசாரணைகள் பூர்த்தி-தீர்ப்பு விரைவில் யாழ்.தீவகம் நாரந்தனை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளில் 95 வீத மானவை பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் அடுத்துவரும் நாட்களில் தீர்ப்பு வழங்கப்படும் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்தார். அத்தோடு இவ் வழக்கு விசார ணைகளின் போது ஆஜராகிய 3ஆம், நான்காம் எதிரிகளை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் இன்று உத்தரவு பிறப்பித்தார். யாழ் தீவகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீது நாரந்தனையில் வைத்து ஈ.பி.டி.பி யினர் 2001/11/28 அன்று மேற்கொண்ட தாக்குதல் தொடர்பான தொடர் வழக்கு விச…
-
- 0 replies
- 245 views
-
-
வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் யாரென 6ம் திகதி தெரியவரும் வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ள மாகாண சபை அமர்வின் போது தெரியவருமென அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும் நேற்றைதினம் தற்போதை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராஜா மற்றும் அதே கட்சியினை சேர்ந்த தவநாதன் ஆகியோருடன் சந்திப்பை நடத்தியுள்ளதாகவும் இதன் அடிப்படையில் வட மாகாண சபையின் எதிர்க்கட்சியின் தலைவர் யார் என்பது தெரியவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் ஈழ மக்கள் ஐனநாய கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவினால் எதிர்க்கட்சி…
-
- 0 replies
- 273 views
-
-
ரயிலை மறித்தவர்கள் மீது கண்ணீர்புகை பிரயோகம் ; கல்கந்த பகுதியில் பதற்றநிலை நீர்கொழும்பு மற்றும் கொழும்புக்கிடையிலான ரயில் கடவையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் முச்சக்கர வண்டி சாரதிகள் மீது கண்ணீர்புகை மற்றும் நீர்தாரை பிரயோகங்களை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் முச்சக்கரவண்டி சாரதிகளை அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தொடர்ந்தும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் குறித்த கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு – நீர்கொழும்புக்கிடையிலான ரயில் பாதையை மறித்து கல்கந்த பிரதேசத்தில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்ப…
-
- 0 replies
- 274 views
-
-
தென்பகுதி மீனவர்களினால் தொழிலை இழக்கும் நிலை முல்லைத்தீவு மீனவர்கள் கவலை! (k .குமணன்) முல்லைத்தீவு கடலில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் அவர்களது உடைமைகளை, மீன்பிடிக் காலம் முடிவடைந்ததும் பாதுகாப்பாக வைப்பதற்கான வசதிகள் காணப்படுவதாக தெரிவிக்கும் நாயாறு மற்றும் முகத்துவார பிரதேச மீனவர்கள், எனினும் பூர்வீகக் குடிகளான தமக்கு அந்த வசதிகள் இல்லையெனக் கவலை வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு கரையோர கிராமங்களான நாயாறு மற்றும் முகத்துவாரம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடும் தங்களது படகுகளை பாதுகாப்பாக வைப்பதற்கான வசதியை ஏற்படுத்தித் தருமாறும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீரற்ற காலநிலையைக் கருத்…
-
- 0 replies
- 300 views
-
-
முல்லைத்தீவு ஒதியமலை படுகொலை : 32ஆம் ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிப்பு! (ம .குமணன்) முல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 32ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று படுகொலை நடைபெற்ற இடத்தில் இராணுவத்தால் இடித்து அழிக்கப்பட்ட நினைவுத்தூபி ,அமைத்திருந்த இடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் தீபம் ஏற்றியும் ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆராதனையில் ஈடுபட்டும் தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர். இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் கமலேஸ்…
-
- 0 replies
- 447 views
-
-
'யார் அந்த சார்?: பாடசாலை ஆசிரியராக இருக்கலாம்' பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்ட அந்த 'சார்'இ பாடசாலை ஆசிரியராகவும் கூட இருக்கலாம் என்று, சபை முதல்வரும் நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்க்கல்வி அமைச்சருமான லக்ஷ;மன் கிரியெல்ல, இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் ஜே.வி.பி தலைவருமான அநுரகுமார திசாநாயக்க எம்.பி,நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் கிரியெல்ல மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முன்னதாக எழுந்த அநுரகுமார திஸாநாயக்க, 'நான் வியாழக்கிழமையும் நாடாளுமன்றத்தில் மிகத் தெளிவான கேள்வியொன்றை எழுப்பியிருந்தேன். அதாவது, டிசான் குணசேகர என்பவரைக் கைது செய்ய வேண்டாம் என்ற…
-
- 0 replies
- 296 views
-
-
யாழில் சீரற்ற காலநிலையால் 150 பேர் பாதிப்பு-வாழைச் செய்கையாளர்கள் பெரும் பாதிப்பு யாழ். மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 57 குடும்பங்களை சேர்ந்த 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக சாவகச்சேரியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் 24 வீடுகள் இப்புயலினால் ஒரு நாளில் சேதமடைந்துள்ளதாக குறிப்பிட்டார். இவ்வாறு சேதமடைந்த வீடுகளில் சண்டிலிப்பாய் பிரதேச …
-
- 0 replies
- 648 views
-
-
யாழ் மாவட்டத்தில் 74.9 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி யாழ் மாவட்டத்தில் நேற்று 74.9 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வளிமண்டலத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வங்காளவிரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக யாழ் மாவட்டம் முழுவதும் நேற்று வியாழக்கி ழமை காற்றுடன் கூடிய கனமழை பெய்திருந்தது. இதில் அச்சுவேலிப்பகுதியில் 67.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், பருத்தித்துறைப்பகுதியில் 60.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், வல்லிபுரப்பகுதியில் 20.4 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் யாழ்நகரத்தில் 73.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. கிளிநொச்சியில் 46.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், ஒட்ட…
-
- 0 replies
- 270 views
-
-
முல்லைத்தீவு கேப்பாப்புலவின் ஒருபகுதியில் மக்கள் குடியேற இராணுவம் அனுமதி.! (k .குமணன்) முல்லைத்தீவு கேப்பாப்புலவின் ஒருபகுதியில் மக்கள் குடியேற இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கேப்பாப்புலவு மக்கள் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் கேப்பாப்புலவின் பாடசாலைக்கு எதிர்ப் பக்கமாக உள்ள பகுதிகளில் குடியேறுவதற்கான இணக்கத்தினை இராணுவத்தினர் மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர். கேப்பாப்புலவு மக்களைச் சொந்த இடத்தில் குடியமர்த்தாத இராணுவம் 2012 ஆம் ஆண்டில் நலன்புரி முகாம்களில் இருந்து அழைத்து வரப்பட்ட மக்கள் கேப்பாப்புலவின் சூரிபுரம் பகுதியில் மாதிர…
-
- 0 replies
- 800 views
-
-
தனியார் பஸ் பணிபகிஷ்கரிப்பு காரணமாக பயணிகள் பாதிப்பு.! நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தனியார் பஸ் பணிபகிஷ்கரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் மற்றும் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள இந்த பணிபகிஷ்கரிப்பு காரணமாக மலையகத்தில் ஹட்டன், பொகவந்தலாவ, நோர்வுட், மஸ்கெலியா, தலாவாக்கெலை, நுவரெலியா, டயகம போன்ற பகுதிகளில் பயணிகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 25000 ரூபா தண்ட பணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மலையத்திலும் தனியார் பஸ் சங்கம் தொழில் சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது 6500 அரச…
-
- 1 reply
- 294 views
-
-
யாழ். வைத்தியசாலைக்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் -செல்வநாயகம் கபிலன் இலங்கை கடற்படையினரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கை கடற்படையினரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டது. இதனை வடமாகாண கடற்படை தளபதி றியல் அட்மிரல் பியல் டி சில்வா வியாழக்கிழமை (01) திறந்து வைக்கப்பட்டது. சுத்தமான குடிநீரை அனைவரும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் முதற்கட்டம் யாழ்.பல்கலைக்கழகத்தில் ஐனாதிபதியால் அண்ம…
-
- 0 replies
- 264 views
-
-
‘பிச்சை எடுத்தாவது நடத்துவேன்’ அழகன் கனகராஜ் “தன்னுடைய அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதல்ல. இந்த விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சரின் கவனத்துக் கொண்டுவந்துள்ளேன். இறுதி வாக்கெடுப்புக்கு முன்னர், திருத்தங்களை மேற்கொள்வதாக உறுதியளித்தனர். அவ்வாறு கிடைக்காவிடின், பிச்சை எடுத்தாவது இந்த அமைச்சை நடத்துவேன்” என்று, தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற, தேசிய கலந்துரையாடல்கள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சுகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற…
-
- 1 reply
- 385 views
-
-
யாழ்.பல்கலை மாணவர்கள் கொலை : 5 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு.! யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ள 5 பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது மோட்டார் வாகனம் பாதையை விட்டு விலகியமை காரணமாகவே மாணவர்கள் உயிரிழந்தார்கள் என பொலிஸார் தெரிவித்திருந்தனர். இதன் பின்னர், மரணமடைந்த மாணவர்களின் பிரேத பரிசோதனைகளில் சுட்டுக் கொலைசெய்யப்பட…
-
- 1 reply
- 232 views
-
-
'ரவிராஜை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றினோம்' -செல்வநாயகம் கபிலன் பேரம்பலம் உட்பட மூவரை தூக்கி கொண்டு ஓடி வந்தார்கள். அவர்கள் படுகாயமடைந்திருந்தனர். அப்போது நாம் ரவிராஜை வலுக்கட்டாயமாக வாகனத்துக்குள் ஏற்றி, காயமடைந்த மூவரையும் ஏற்றிக் கொண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்றோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜின் மெய் பாதுகாவலரான பொலிஸ் சார்ஜென்ட், வியாழக்கிழமை (01) சாட்சியளித்தார். நாரந்தனை இரட்டை படுகொலை வழக்கு தொடர்பில், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்று வரும் விசாரணையில் 9ஆவது நாளான வியாழக்கிழமை, கண் கட்…
-
- 0 replies
- 368 views
-
-
‘புலிக்கொடியுடன் பரிகசித்தனர்’ அழகன் கனகராஜ் “மாவீரர் தினத்தன்று, ஆயிரக்கணக்கான இளைஞர்கள், புலிக்கொடிகளுடன் மோட்டார் சைக்கிள்களில், இராணுவ முகாம்களுக்கு முன்பாக வந்து, இராணுவத்தை நோக்கி பரிகசித்தனர்” என்று, ஒன்றிணைந்த எதிரணி, நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியது. தேசிய கலந்துரையாடல்கள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவ்வணியின் உறுப்பினரான விமலவீர திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். எனினும், இந்தக் கருத்தை கடுமையாக எதிர்த்த, தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் ம…
-
- 0 replies
- 307 views
-
-
ரவிராஜ் படுகொலை வழக்கு விசாரணை : பிரதான சாட்சியாளர் பிரித்திவிராஜ் மனம்பேரியின் பிணை கோரிக்கை தொடர்பில் இன்று தீர்மானம் (எம்.எப்.எம்.பஸீர். க.கமலநாதன்) தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் அரச சாட்சியளரான முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் பிரித்திவிராஜ் மனம்பேரியின் பிணை கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக நிராகரித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் வழக்கு விசாரணை ஏழாவது நாளான நேற்றும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே அரச தரப்பு சாட்சியாளரான பிரித்திவிராஜ் மனம்பேரியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தர்க் ஷ…
-
- 0 replies
- 204 views
-
-
கி.மு. 543 ஆம் ஆண்டில் விஜயன் இலங்கைக்கு விசா வாங்கிக்கொண்டு ஸ்ரீலங்கன் விமானத்திலா வந்தார்? பாராளுமன்றத்தில் அமைச்சர் மனோ கணேசன் கேள்வி (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) கி.மு.543ஆம் ஆண்டு விஜய இளவரசன், தனது நண்பர்களுடன் இலங்கை தீவின் மேற்கு கரையில் வந்து குடியேறியதாக மகாவம்சம் கூறுகிறது. அவர்கள் வெளியில் இருந்து இந்த நாட்டுக்கு படகில் வந்து குடியேறியவர்கள். அவர்கள் என்ன விசா வாங்கிக்கொண்டா வந்தார்கள்? படகில் வராமல், அவர்கள் என்ன, ஸ்ரீலங்கன் விமானத் திலா வந்தார்கள் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற் றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில்…
-
- 0 replies
- 440 views
-