ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143408 topics in this forum
-
வழக்கு தாக்கல் செய்யப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பில் பரிசீலிக்க குழு நியமனம் வழக்கு தாக்கல் செய்யப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இன்றைய விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். அரச ஊழியர்களுக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என சுட்டிக்கா…
-
- 0 replies
- 359 views
-
-
ஏறாவூர் கடலில் மூழ்கிய இரு மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு மட்டக்களப்பு, ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரையில் நேற்று மாலை, பொழுது போக்கிற்காகச் சென்று நீராடிக் கொண்டிருந்த வேளையில் கடல் அலையில் சிக்கி காணாமல்போன மாணவர்கள் இருவரில் ஒருவரின் சடலம் இன்று பிற்பகல் மீனவர்களின் வலையில் சிக்கியபோது மீட்கப்பட்டது. ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியில் உயர்தரத்தில் முதலாம் ஆண்டு கலைப் பிரிவில் கற்கும் ஏறாவூரைச் சேர்ந்த அல்மஹர்தீன் பர்ஹான் (வயது 17) எனும் மாணவனின் சடலமே கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் மீனவரின் வலையில் சிக்கி மீட்கப்பட்டது. ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியில் உயர்தரத்தில் முதலாம் ஆண்டு கலைப் பிரிவில் கற்கும் பங்குட…
-
- 0 replies
- 384 views
-
-
ஆட்சியாளர்களிடம் தேசிய கொள்கை இல்லை : நாமல் வீரகேசரி இணையத்தளத்திற்கு விசேட செவ்வி (காணொளி இணைப்பு) அதிகாரங்களை பகிர்வதை எதிர்க்கவில்லை பொலிஸ் அதிகாரமில்லாத 13 இக்கு தயார் முதலமைச்சருக்கு அதிகாரமளிக்க முடியாது வடக்கு, கிழக்கை இணைக்க முடியாது மஹிந்த ராஜபக் ஷ இனவாதி அல்ல த.தே.கூ.வின் அரசியல் சித்தாந்தம் என்ன? குற்றமற்ற அரசியல் கைதிகள் உள்ளனர் நாட்டில் ஆட்சியில் இருக்கும் தேசிய அரசாங்கத்திடம் தேசிய கொள்கை இல்லை. அவர்களுக்கு தேசிய அரசியலும் தெரியாது. உலக அரசியலும் தெரியாது. என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் …
-
- 0 replies
- 319 views
-
-
முல்லைத்தீவில் மாவீரர் துயிலும் இல்லத்தை தூய்மையாக்கும் பணி ஆரம்பம் ! முல்லைத்தீவு மாவட்டத்தின் அண்மையில் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட மல்லாவி வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம் செய்யும் பணிகள் அப்பகுதி மக்களினாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவருகின்றது. இந்தச் சிரமதான பணிகள் இன்று காலை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,வட மாகாணசபை பிரதி அவைத்தலைவர் திரு கமலேஸ்வரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகளவிலான மக்களும் இந்த சிரமதான பணியில் ஆர்வத்துடனும் உணர்வுபூர்வமாகவும் கலந்து கொண்டுள்ளனர்.…
-
- 0 replies
- 621 views
-
-
குளோபல் சர்வதேச வியாபாரத்தின் மூலம் ஏமாற்றப்பட்டதாக குடும்பஸ்தர் முறைப்பாடு குளோபல் சர்வதேச வியாபாரத்தின் மூலம் தான் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்து குடும்பஸ்தர் ஒருவர் இலங்கை மனித உரிமை அமைப்பில் முறைப்பாடு செய்துள்ளார். இலங்கையில் பரவலாக நடைபெற்றுவரும் குளோபல் வியாபாரத்தில் அனேகர் இணைந்து வருகின்றனர். இருந்த இடத்திலிருந்து வருமானம் சம்பாதிக்கும் நோக்குடன் தமது பணங்களை குறித்த வியாபாரத்தில் அனேகர் ஈடுபடுத்தி வருகின்றனர். இருப்பினும் யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குளோபல் வியாபாரம் மூலம் தாம் ஏமாற்றப்பட்டு ள்ளதாக இலங்கை மனித உரிமை அமைப்பின் யாழ் பிராந்திய அலுவலக…
-
- 0 replies
- 276 views
-
-
மகிந்தவின் சீனபயணம் குறித்து தெரியாதாம்-அந்நாட்டு வெளியுறவு அமைச்சு கைவிரிப்பு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனாவுக்கு மேற்கொண்டுள்ள பயணம் குறித்து தமக்கு எதுவும் தெரியாதென அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், ஒரு வாரகாலப் பயணமாக மகிந்த ராஜபக்ச சீனா சென்றுள்ளார். 23ஆம் திகதி மகிந்த ராஜபக்ச சீனாவுக்குப் புறப்படமுன்னர், அவரது செயலகம் வெளியிட்ட அறிக்கையில், சீன அரசின் அழைப்பின் பேரிலேயே பீஜிங் செல்வதாகவும், வரும் 28ஆம் நாள்சீன அரச தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. எனினும் பீஜிங்…
-
- 0 replies
- 225 views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் அரசியல் ரீதியாக இணைந்து செயல்படும் (க.கிஷாந்தன்) தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் அரசியல் ரீதியாக இணைந்து செயல்படுவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த இரு அமைப்புகளும் அரசியல் ரீதியாகவும் ஒன்றுப்பட்டு செயல்பட முடியும் என எதிர்பார்க்கின்றேன் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 4000 தனி வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கமைய இன்று காலை நுவரெலியா – டயகம தோட்டம் டயகம மேற்கு தோட்டத்தில் 150 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் …
-
- 0 replies
- 307 views
-
-
தொழிற்சங்க நடவடிக்கையில் யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் எஸ்.திருச்செந்தூரன் யாழ். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள், எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.தங்கராஜா தெரிவித்தார். ஏற்கெனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் போதுமான முன்னேற்றங்கள் இல்லாதமையால் இத்தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும், அனைத்து ஊழியர்களும், திங்கட்கிழமை (28) காலை 8.30 மணியளவில் இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்றுகூடுமாறும் அவர் மேலும் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/186939/த-ழ-ற-சங-க-நடவட-க-க-ய-ல-ய-ழ-பல-கல-க-கழக-ஊழ-யர-கள-#sthash.fmUjbUxS.dpuf
-
- 0 replies
- 176 views
-
-
யாழ் .மாவட்டத்தில் கடந்த 10மாதங்களில் 35 இலட்சம் லீற்றருக்கும் அதிகமான மதுபானங்கள் விற்பனை! யாழ்.மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் 35 இலட்சம் லீற்றருக்கு கூடுதலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இல ங்கை மது வரித்திணைக்களத்தின் வடமாகாண உதவி பொறுப்பதிகாரி நி. சோதிநாதன் தெரிவித்துள்ளார். இதன்படி யாழ்.மாவட்டத்தில் இவ்வருடம் தை மாதம் முதல் கடந்த ஒக்டோபர் மாதம் இறுதி வரை 35,51,492.359 லீற்றர் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் சாராயம் மொத்தமாக 15,23,986.453 லீற்றர்களும்,பியர் வகை மதுபானங்கள் மொத்தமாக 16,76,117.6 லீற்றர்களும்,ஸ்பிறிட் வகை மதுபானங்கள் மொத்தமாக 15,23,986.453 லீற்றர்களும், வ…
-
- 0 replies
- 222 views
-
-
ரவிராஜ்ஜின் சாட்சியம் யாழ். மேல் நீதிமன்றில் பதிவு செல்வநாயகம் கபிலன் 2001ஆம் ஆண்டு ஊர்காவற்துறை தேர்தல் பிரச்சாரத்தின் போது, இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அப்போதைய காலப்பகுதியில் ஊர்காவற்துறை நீதிமன்றில், பூர்வாங்க விசாரணையின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் வழங்கிய சாட்சி மேல் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (25) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. நேற்று (25) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது? குறித்த சம்பவம் தொடர்பில் சாட்சி வழங்கிய நடராஜா ரவிராஜ் கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்ததாகச் சுட்டிக்காட்டி மரணசான்றிதழை நீதிபதியிடம் அரச தரப்பு சட்டத்தரணி சமர்பித்திருந்த…
-
- 0 replies
- 208 views
-
-
'எங்களிடம் துப்பாக்கி இருந்தும் அதனை நாம் பாவிக்கவில்லை' செல்வநாயகம் கபிலன் “ஊர்காவற்றுறையில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியபோது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மெய்ப் பாதுகாவலர்களாக இருந்த எம்மிடமும் துப்பாக்கிகள் இருந்தன. அதனை நாம் பயன்படுத்தியிருந்தால் நிலைமை விபரீதமாகியிருக்கும். ஆனால், அதனை பாவிக்க வேண்டாம் என மாவை சேனாதிராஜா எம்மைத் தடுத்துவிட்டார்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது ஊர்காவற்றுறையில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு இருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 15ஆவது சாட்சியான மாவை சேனாதிராஜாவின் அப்போதைய மெய்ப் பாதுகாவலராக இருந்த தர்மரட்…
-
- 0 replies
- 316 views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் துரித நடவடிக்கை தேவை இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எனது இலக்காகும். புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை அடையவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்குவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உட்பட அனைவரின் நிலைப்பாடுகளையும் பெற்றுக்கொள்வோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார். தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நான் மறக்கவில்லை. இந்த நாட்டில் அனைத்து இனங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவே…
-
- 0 replies
- 213 views
-
-
இன, மதவாத செயற்பாடுகளை தூண்டுபவர்கள் மீது சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துங்கள் சகோதர இன மக்களை இழிவுபடுத்தவோ அவமானப்படுத்தவோ இடமளிக்கமுடியாது என்கிறார் சந்திரிகா குமாரதுங்க (ரொபட் அன்டனி) நாட்டில் இனங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக இனவாத மற்றும் மதவாத அடிப்படையில் ஆத்திரமூட்டும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் தாமதிக்காமல் சட்டத்தை கடுமையாக செயற்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 289 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் சாதுரியமாக செயற்பட்டு வருகின்றது ஆச்சரியமளிப்பதாக கூறுகின்றார் அமைச்சர் ராஜித சேனாரத்ன (ரொபட் அன்டனி) நீண்டகால இனப்பிரச்சினைக்கு தீர்வுத்திட்டமொன்றை சகலரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முன்னெடுப்பதற்கான அவகாசத்தை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மிகவும் சாதுரியமாக செயற்பட்டு வருகின்றது. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் இந்த செயற்பாடு எங்களை ஆச்சரியப்பட வைக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தமிழ் தேசியக்கூட்டமைப்பு தொடர்ந்து இவ்வாறு ராஜதந்திர ரீதியிலும் சாதுரியமா…
-
- 0 replies
- 294 views
-
-
தமது காணிகளுக்காக தற்போதும் போராடும் நிலையிலேயே தமிழ் மக்கள்-சாந்தி எம்.பி தமது காணிகளை பெற்றுக்கொள்வதற்காக தமிழ் மக்கள் உண்ணாவிரதம் இருப்பதும் வீதிவீதியாக சென்று ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து நியாயம் கேட்பதும் வடக்கில் இன்றும் தொடர்வதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டத்தின் வனஜீவராசிகள் அமைச்சு மற்றும் காணி அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கேப்பாபுலவு மக்களின் காணிகளுக்குள் மக்கள் செல்ல முடியாதவாறு இராணுவம் முகாம்கள் அமைத்து நிலைகொண்டுள்ள தாகவும், இ…
-
- 0 replies
- 208 views
-
-
பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலும் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் தெரிவித்தேன் ரவி ராஜ் கொலை வழக்கின் பிரதான சாட்சி குறுக்கு விசாரணையின் போது தெரிவிப்பு (எம்.எப்.எம்.பஸீர், க.கமலநாதன்) கருணா குழுவினருடன் தனக்கிருந்த நெருங்கிய தொடர்புகள் காரணமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் பல்வேறு தகவல்களை தான் அறிந்ததாகவும் அது தொடர்பிலும் அதனுடன் கருணா குழுவினரின் தொடர்பு குறித்தும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தான் 2008 ஆம் ஆண்டு வழங்கிய வாக்கு மூலத்தில் குறிப்பிட்டதாகவும் முன்னாள் எம்.பி. ரவிராஜ் படுகொலை வழக்கின் பிரதான அரச சாட்சியான முன்னாள் பொலி…
-
- 0 replies
- 319 views
-
-
இலங்கையில் கருகலைப்பு என்ற பெயரில் அதிகரிக்கும் கொலைகள்.! நாட்டில் தினமும் 700 தொடக்கம் 800 கரு கலைப்பு சம்பவங்கள் இடம்பெறுவதாக தென்மாகாண சுகாதார திணைக்கள தோற்றுநோய் பிரிவுக்கான வைத்தியர் நளனி விஜேசேகர தெரிவித்துள்ளார். அதேவேளை, ஒரு நாளில் 1100 தொடக்கம் 1200 சிசுக்கள் பிறக்கின்றன என தெரிவித்த அவர், கருகலைப்பு என்பது ஒரு கொலை இடம்பெறுவதற்கு சமனானது. கருக்கலைப்பு என்ற பெயரில் நடக்கும் கொலைகள் ஒர் இழிவான செயல் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/13861
-
- 7 replies
- 540 views
-
-
சீனாவின் கென்டன் கோபுர உச்சியில் புகைப்படமெடுத்த மஹிந்த : இணையத்தை கலக்கும் காணொளி சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீனாவின் உலகின் மிகப்பெரிய கோபுரங்களில் ஒன்றான கென்டன் போபுரத்தின் உச்சிக்கு சென்று சுற்றி பார்வையிட்டதோடு புகைப்படங்களையும் எடுத்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சீனாவின் அழைப்பை ஏற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான விஷேட குழு நேற்று முன்தினம் 23 ஆம் திகதி சீனா சென்றது. சீனா சென்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான விஷேட குழு டிசெம்பர் மாதம் 1 ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருக்கும். இந்நிலைய…
-
- 1 reply
- 452 views
-
-
சிங்கள மாணவனை தாக்கி கையில் 'தமிழ்" என எழுதிய நபர்கள் : தலவாக்கலையில் சம்பவம் தலவாக்கலையில் உள்ள பிரபல சிங்கள பாடசாலை ஒன்றின் மாணவனை இந்தெரியாத நபர்கள் தாக்கி அம் மாணவனின் கையில் 'தமிழ்' என ஆங்கில எழுத்துக்களால் பிளேட் ஒன்றினால் கீறியுள்ளனர். தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த தரம் பத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவனே இவ்வாறு தாக்குதலுக்குள்ளான நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவன் பாடசாலை முடிவடைந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, தலவாக்கலை ரயில் நிலையத்துக்கு அருகில் காணப்படும் சுரங்கப் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் பெற்றோர் தலவாக்கலை பொலிஸ் ந…
-
- 3 replies
- 716 views
- 1 follower
-
-
வடக்கு மாகாண மக்களுக்கான பொருத்து வீட்டுத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட எந்தத் தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தாலும் நான் அத்திட்டத்தை அமுல்படுத்தியே தீருவேன் என மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன பொருத்து வீட்டுத் திட்டத்தை நிறுத்தியுள்ளார் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது. வடக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஏன் இந்த வீட்டுத் திட்டத்தை எதிர்க்கின்றனர் என்பது கடவுளுக்குத்தான் தெரியும். வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருத்து வீட்டுத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட பல்வேறு தரப்பினரால் இதற்கு எதிர்ப்பு…
-
- 25 replies
- 1.7k views
-
-
இணைப்பு2 – அவன்ட் கார்ட் கப்பல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள அவன்ட் கார்ட் கப்பலை 35 மில்லியன் ரூபா பிணையில் விடுவிக்க காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி குறித்த கப்பலை 35 மில்லியன் ரூபா பிணையில் உரிய நிறுவனத்திடம் கையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவன்ட் கார்ட் கப்பல் தொடர்பில் இன்று தீர்மானிக்கப்பட உள்ளது Nov 25, 2016 @ 07:03 அவன்ட் கார்ட் கப்பல் தொடர்பில் இன்று தீர்மானிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கப்பலை ஏலத்தில் விடுவதா அல்லது விடுப்பதா என்பது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளது. இ…
-
- 0 replies
- 314 views
-
-
யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி சொர்ணகுமார் சொரூபன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, யாழ் பல்கலைக்கழகத்தில், இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. - See more at: http://www.tamilmirror.lk/186905/ய-ழ-பல-கல-க-கழகத-த-ல-ம-வ-ரர-கள-க-க-அஞ-சல-#sthash.hCBnEAsA.dpuf
-
- 3 replies
- 688 views
-
-
கச்சத்தீவில் இலங்கை அரசு புதிய கோயில் கட்டியதால் சர்ச்சை கச்சத்தீவில் இலங்கை அரசு புதிய தேவாலயத்தைக் கட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கச்சத்தீவில் உள்ள பழைய அந்தோணியார் கோயிலுக்கு அருகிலேயே, இலங்கை அரசு புதிய கோயிலைக் கட்டி எழுப்பி உள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ்கள், தமிழகத்தைச் சேர்ந்த குருக்கள் மற்றும் பக்தர்கள் யாருக்கும் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தேவாலயத்தின் புதிய கட்டடம் வரும் டிசம்பர் மாதம் 7-ம் தேதி திறக்கப்படவுள்ளது. இலங்கை அரசின் இத்தகைய நடவடிக்கை தமிழக கிறிஸ்துவ பக்தர்களிடையே சர்ச்சையை எழுப்பி உள்ளது. http://www.vikatan.com/news/world/…
-
- 0 replies
- 479 views
-
-
கரடியனாறு பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் 2 கைக்குண்டுகளும் ஒரு சைனைட் குப்பியும் மீட்பு கரடியனாறு பகுதியில் உள்ள வெலிகஹாகண்டிய வாவிக்கு பின்புறமாக உள்ள காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் 2 கைக்குண்டுகளும் ஒரு சைனைட் குப்பியும் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறை விசேட அதிரப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கைக்குண்டுகளும் ஒரு சைனைட் குப்பியும் மேலதிக விசாரணைகளுக்காக கரடியனாறு காவல் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதேவேளை மதவாச்சி பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி வெடிப்பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந…
-
- 0 replies
- 289 views
-
-
முல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேசத்தில் மீண்டும் காணி சுவீகரிப்பில் கடற்படையினர் (கே.குமணன்) முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் கடற்படைத் தளம் அமைந்துள்ள நிலப்பகுதியினை புதிய சரத்தின் கீழ் அபகரிக்கும் பொது அறிவித்தல் நேற்றுமாலை பிரதேச செயலாளரினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியில் உள்ள பொதுமக்களிற்கு சொந்தமான 617 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கடற்படை முகாம் பகுதியினை முழுமையாக அபகரிக்க இதுவரை காலமும் காணி சுவீகரிப்பின் 38 ஏ யின் கீழ் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு பல முறை இடம்பெற்ற முயற்சிகள் அனைத்தும் மக்களின் போராட்டங்கள் காரணமாக தடுக்கப்பட்டிருந்த போதிலும் குறித்த பிரதேசத…
-
- 0 replies
- 603 views
-