ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
ஜெயா பாணியென இலங்கை அவையில் கிண்டல் 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதம் நாடாளுமன்றத்தில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுகொண்டிருக்கின்றது. ஆளும், எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தங்களுடைய வாதப்பிரதிவாதங்களை முன்வைத்து உரையாற்றிக்கொண்டிருக்கின்றனர். இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டரில் நாடாளுமன்றத்துக்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தில் உள்ள தன்னுடைய அலுவலகத்திலிருந்து விவாதத்தை அவதானித்துகொண்டிருகின்றார். இந்நிலையில், இந்த விவாதத்தின் கலந்துகொண்டு இன்றுக்காலை உரையாற்றிய, எதிர்க்கட்சிகளின் பிரதமகொறடாவும் ஜே.வி.பியின் தலைவருமான அனுரகுமார திஸாநாய…
-
- 0 replies
- 218 views
-
-
32 இலங்கையர்கள் ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ளனர் இலங்கையின் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் சிரியாவிற்கு சென்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் இணைந்து கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென்று நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறுகின்ற வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே நீதியமைச்சர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன், இன்று முதல் இனவாத அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நாட்டில் இடமில்லை என்றும் நீதியமைச்சர் கூறியுள்ளார். சில இணையத்தளங்கள் ஊடாக உண்மையற்ற மற்றும் அடிப்படைவாத செய்திகளை வௌியிடுவதாகவும், இதனால மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதாகவும் அவர் கூறினார். அத்துடன் நா…
-
- 0 replies
- 177 views
-
-
கைதான இளைஞர்கள் மீது புலி முத்திரை குத்துவது நியாயமா? ஆவா குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளோரில் 11 பேரை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் அருணி ஆட்டிகல உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் இருவரை பிணையில் விடுவித்திருக்கின்றார். கடந்த இரு வாரங்களாக யாழ்ப்பாணத்தில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் இந்த 13 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே அவர்களின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்ப…
-
- 0 replies
- 195 views
-
-
சமாதானத்தை நோக்கி நல்லாட்சி அரசு-சம்பந்தன் நல்லாட்சி அரசாங்கம் சட்டம் ஒழுங்கு, சுதந்திரம் அனைத்தையும் நிலைநிறுத்தி நாட்டை சமாதானத்தை நோக்கி கொண்டு செல்ல முயற்சித்து வருகின்றது என இன்று காலை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது இரா.சம்பந்தன் குறிப்பிட்டார். அத்துடன் நல்லிணக்கம்,ஜனநாயகம்,சுதந்திரத்தை வலுப்படுத்தல் மற்றும் தேசிய சமாதானத்தை நோக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னோக்கி செல்லும் எனவும் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தற்பொழுது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கம் நாட்டை ஓர் தெளிவான பார…
-
- 5 replies
- 516 views
-
-
திட்டங்கள் நிறுத்தப்படுவது எதிர்காலத்தில் இடம்பெறக்கூடாது -சீனத்தூதுவர் வலியுறுத்து கொழும்பு துறைமுக நகரத்திட்டம் இடைநிறுத்தப்பட்டது போன்ற சம்பவங்கள் இனிமேல் மீண்டும்இட ம்பெறாதிருப்பதை ,ஜனாதிபதியும் பிரதமரும் உறுதிப்படுத்த வேண்டும் என்று சீனத் தூதுவர் யி ஷியாங்லி யாங் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்த போது இந்த விடயத்தை தாம் தெளிவாக வலியுறுத்தியுள்ளதாக சீனத் தூதுவர் கூறியுள்ளார். நேற்றுமுன்தினம் கொழும்பில் நடந்த முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான சீன- இலங்கை வர்த்தக கூட்ட த்தில், உரையாற்றிய போதே, சீனத் தூதுவர் இந்தத் தகவலை வெ…
-
- 0 replies
- 160 views
-
-
மலேசியாவில் தங்கியிருக்க 26 ஆயிரம் இலங்கை அகதிகளுக்கு அனுமதி 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மலேசியாவில் தங்கியிருப்பதற்கு 26,615 இலங்கை அகதிகளுக்கு, அகதி களுக்கான ஐ.நா முகவர் அமைப்பு ( யுஎன்எச்சிஆர் )அங்கீகாரம் அளித்திருப்பதாக, மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது. மலேசிய பிரதமர் செயலக அமைச்சர் டருக் சேரி சஹிடான் காசிம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “2010ஆம் ஆண்டு தொடக்கம், இந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரையான காலத்தில், மலேசியாவில், தங்கியிருப்பதற்கான 888,294 அகதிகளின் விண்ணப்பங்களுக்கு அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. இவர்களில்,824,419பேர்மியான்மாரைச் சேர்ந்த…
-
- 0 replies
- 226 views
-
-
வலிகாமம் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள “கமுணு“ விகாரை (ஆர்.வி.கே.) யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பகுதியில் குமாரகோவில் காணப்பட்ட இடத்தில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளமை குறித்து அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குறித்த பகுதியில் பௌத்த மக்களோ அல்லது படையினரோ வசிக்காத நிலையில் விகாரை அமைக்க வேண்டியதன் அவசியம் என்னவென்றும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த காங்கேசன்துறை மத்திய கிராமம் கடந்த 2015 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது 'குமாரகோவில்' அமைந்திருந்த நிலத்தில் அரச மரம் ஒன்றின் கீழ் சிறிய புத்தர் சில…
-
- 0 replies
- 272 views
-
-
யாழ். மாணவர்கள் மரணம் ; 5 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை யாழ். நீதிவான் நீதிமன்றம் இன்று (18) பிறப்பித்தது. யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் கடந்த ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி இரு பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் குறித்த 5 பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கத…
-
- 0 replies
- 194 views
-
-
அக்கிராசனத்தில் மர்மநபர் அழகன் கனகராஜ் நாடாளுமன்றத்தில் சபைக்குள் இருக்கின்ற சபாநாயகரின் உத்தியோகபூர்வ ஆசனமாக அக்கிராசனத்தில் முதன்முறையாக யாரோ ஒருவர் அமர்ந்துள்ளார் என்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறையிடப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள பொறியியலாளர் ஒருவரே, அக்கிரானத்தில் அமர்ந்துள்ளார். இந்தச் சம்பவம், புதன்கிழமை இரவுவேளையிலேயே இடம்பெற்றுள்ளது. சபையமர்வு புதன்கிழமை இரவு 7 மணியளவில் நிறைவடைந்ததன் அதன் பின்னர், அவைக்குள் துப்பரவு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருந்த போதே, மேற்படி பொறியியலாளர் அக்கிராசனத்தில் அமர்ந்துள்ளதாக அறியமுடிகின்றது. …
-
- 0 replies
- 242 views
-
-
புத்தளம், காலி, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந் தவர்கள் வாழ்ந்து வருவதாக உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் நிமல் லான்ஸா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே பிரதியமைச்சர் நிமல் லான்ஸா மேற்கண்டவாறு தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, புத்தளம் மாவட்டத்தில் சிரம்பிட்டிய பிரதேசத்தில் ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஆட்கள் வசிக்கின்ற கிராம சேவகர் பிரிவுகள் யாவை? தற்போது அந்தப் பிரதேசங்…
-
- 0 replies
- 368 views
-
-
வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் குமார கோவில் அமைக்கப்பட்டிருந்த காணியில் தற்போது புத்த கோவில் கட்டப்பட்டமை அப்பகுதி மக்களிடம் சந்தேகத்தையும் கவலையையும் உருவாக்கியுள்ளது. பௌத்தர்கள் வாழாத ஓர் இடத்தில் ஏன் புத்தகோவில் அமைக்கப்பட்டுள்ளது எனவும் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த காங்கேசன்துறை மத்திய கிராமம் கடந்த 2015 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிக்கப்பட்டது. அப்போது, குமாரகோவில் இருந்த காணியில் நின்ற வெள்ளரசு மரத்தின்கீழ் சிறிய புத்தர் சிலை அமைக்கப்பட்டிருந்தது. படையினர் பின்னகர்ந்து செல்லும்போது அப்புத்தகோவிலும் கைவிடப்பட்டது. ‘குமாரகோவில்’ சிதைந்த நிலையில் பராமரிப்பின்றி…
-
- 2 replies
- 449 views
-
-
அரச நிதியைமோசடியாக பயன்படுத்திய குற்றச்சாட்டில், ஐக்கிய அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது, பொலிஸ் நிதிக்குற்றப்பிரிவினரால் செய்யப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/186307/அம-ர-க-க-வ-க-க-ன-இலங-க-ய-ன-ம-ன-ன-ள-த-த-வர-க-த-
-
- 0 replies
- 156 views
-
-
இனவாதம் பேசுவோருக்கு எதிராக தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க போலிஸ் மாதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு: இன்று இரவு எட்டு மணியிலிருந்து பத்து மணிவரை நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நாட்டில் இனவாதத்தை தூண்டிவிடும் நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரது கருத்துகளை செவிமடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டில் இனிமேல் இனவாதம் பேசும் அனைவருக்கும் எதிராக, தயவு தாட்சண்யம், இனமத பேதங்கள் பார்க்காமல், நடவடிக்கை எடுக்க பொலிஸ் மாதிபருக்கு உத்தரவிட்டார். இரண்டு மணித்தியாலங்களாக நடைபெற்ற இந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பி…
-
- 3 replies
- 439 views
-
-
எங்கள் இரத்தத்தின் பாதியே முஸ்லிம், தமிழ் மக்கள் : எந்தவொரு இனவாதியாலும் அவர்களை வெளியேற்ற முடியாது : பிக்குவின் அதிரடி பேச்சு எங்களின் இரத்தத்தின் பாதியே நீங்கள். எங்கள் சதையின் பாதியே நீங்கள். பொதுபல சேனா அல்ல எந்த சேனாவாலும் முஸ்லிம் மக்களையும் தமிழ் மக்களையும் நாட்டை விட்டு வெளியேற்ற முடியாது. உங்களை வெளியேற்ற முயற்சிப்பது எங்களை வெளியேற்றுவதற்கு சமனாகும். நாம் அனைவரும் சமாதானத்தால் நாட்டை வெற்றிகொள்ள வேண்டும் என பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அண்மைக்காலமாக இனவாத செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த மேற்படி தேரரின் …
-
- 2 replies
- 323 views
-
-
எமது சகோதரிகளுக்கு ஆதரவு வழங்க ஒன்றிணைவோம்! பெண்கள் உரிமைக்காகவும், பெண்கள் மீதான பாராபட்சங்களுக்கும் குரல் எழுப்பும் பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளாகளாகிய எமது சகோதரிகளுக்கு ஆதரவு வழங்க ஒன்றிணைவோம்! இலங்கையில் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் இடம்பெற்றுக் கொண்டு வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் பல்வேறு ஆர்வலர்கள் பல்வேறு மட்டங்களில் சட்ட சீர்திருங்கள் தொடர்பாக பேசிக் கொண்டு வருகின்றனர். இதில் குறிப்பாக பெண்களின் நலன் கருதி பெண்களுக்கு பாரபட்சமாக இருக்கின்ற சட்டங்களிலும் சீர்திருத்தம் வேண்டும் என்ற பேச்சுக்களும் சம காலத்தில் முக்கியத்துவம் வகித்து வருகின்றது. இலங்கையில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பெண்கள் உரிமைகளுக்காக தலைமைத்துவம் எடுத்து செய…
-
- 0 replies
- 347 views
-
-
தொடரும் சர்ச்சை : மங்களராமய விகாராதிபதியின் மற்றுமொரு காணொளி வெளியானது : மட்டு. அரச அதிபரிடம் ஆக்ரோஷம் யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி அவர்களின் காயத்திற்கு மருந்திட்ட என்னை புலி பயங்கராவதி என கூறி எனக்கெதிராக தேரரொருவரே வழக்குத்தாக்கல் செய்தார். அதேபோல தற்போது என்னுடைய மக்களின் பிரச்சினைகளுக்காக போராடும் என்னை இனவாதி என பட்டிப்பளை பிரதேச செயலாளரும், மட்டக்களப்பு கிராம உத்தியோகத்தரும் மக்களிடம் பொய்கதைகளை சித்தரித்து வருகின்றனர். இதன் காரணமாக வெளிநாட்டில் உள்ளவர்கள் புலி கொடியை ஏந்தியவாறு என்னை கொலை செய்வேன் என இலட்சக் கணக்கான குறுந்தகவல்களை அனுப்புகின்றனர். எனது மக்களுக்காக நான் இறப்பதற்கும் தயாராக உள்ளேன். இவ்வாறான செயற்ப…
-
- 1 reply
- 483 views
-
-
ஜனாதிபதியின் இணையத்தளத்தினை முடக்கிய மாணவனை ஜனாதிபதி சந்தித்தார் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தினுள் ஊடுறுவி அதனை முடக்கிய மாணவனை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனே சந்தித்துள்ளார். அம்மாணவனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனே ஜனாதிபதி அலுவலகத்திற்கு வரவழைத்து இன்று பிற்பகல் சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பின் பின் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் திறமையுடைய இளைஞர்களை ஊக்குவிப்பது எங்கள் கடமையென பதிவிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/13603
-
- 0 replies
- 282 views
-
-
கிழக்கில் இனப்பிரச்சினையை ஏற்படுத்த சதி-கிழக்கு முதல்வர் குற்றச்சாட்டு கிழக்கு மாகாணத்தில் பாரிய இனப்பிரச்சனையை ஏற்படுத்துவதற்கு சதித்திட்டம் தீட்டப்படு வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் குற்றம்சுமத்தியுள்ளார். இவ்வாறு திட்டமிடும் சதிகாரர்களுக்கு கிழக்கில் உள்ள சில அரசியல்வாதிகளும் ஒத்து ழைப்பு வழங்குவது தற்போது வெளிப்பட்டு வருவதுடன், அவர்களின் உண்மையான முகங்க ளை மக்கள் அடையாளங்காண்பதற்கு இதுவே சரியான தருணம் என முதலமைச்சர் குறி ப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இனமுரண்பாடுகள் குறித்து ஊடகவிய லாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் இந்த விடயத்த…
-
- 0 replies
- 259 views
-
-
வன்னியில் கொள்ளையில் ஈடுபட்ட நால்வர் கைது வவுனியா உட்பட வட மாகாணத்தின் பல்வேறு இடங்களில் ஆயுத முனையில் மக்களை அச்சுறுத்தி கொள்ளைகளில் ஈடுபட்ட நால்வர் அடங்கிய கும்பலை பொலிசார் கைது செய்து ள்ளனர். வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுடன் பொலிசார் இணைந்து மேற்கொண்ட விசார ணையின்போது குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். வவுனியாவின் நெடுங்கேணி, வீரபுரம், யாழ்ப்பாணம் – இளவாலை, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இருந்தே கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த சந்தேகநபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களுடன் தொடர்புடைய மேலும் பலரை தேடி வருவதாக பொலி சார் தெரிவிக்கின்றனர். கைதுசெய்யப்பட…
-
- 0 replies
- 283 views
-
-
மாதகல் கடற்கரையில் கஞ்சாவுடன் இளம் பெண் கைது யாழ் மாதகல் கடற்கரை பகுதிக்கு அருகாமையில், ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவ்வூர் மக்களால் பொலிஸாருக்கு கொடுக்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து அப்பகுதிக்கு மாறு வேடத்தில் சென்ற பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். இதன்போது அந்தப் பெண்ணிடமிருந்து 09 கிலோவும் 305 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர் மாதகல் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது. சந்தே கநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், இது தொடர்பாக மேலதிக விசார ணைகளை பொஸிச…
-
- 0 replies
- 266 views
-
-
சிங்கள மக்களின் பாதுகாப்பே முக்கியம்-பசில் சிங்கள மக்களை அச்சத்தில் உறையச்செய்துவிட்டு தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது எனவே சிங்களவரின் பாதுகாப்பே முக்கியம் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் இழைத்த தவறுகளை தற்போது உணர்ந்துவிட்டதாக தெரிவிக்கும் பசில் ராஜபக்ச, தவறுகளைத் திருத்திக்கொண்டு மீண்டும் ஆட்சிபீடம் ஏறுவதற்கான சந்தர்ப்பத்தை மக்கள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு சேர்க்கும் வகையில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தலைமையில் உருவாக்கப்பட…
-
- 3 replies
- 525 views
-
-
நவீன சிகிச்சைக் கூடத்தில் புற்றுநோயாளர்களுக்கு சத்திரசிகிச்சை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோயியல் பிரிவுக்காக அமைக்கப்பட்ட நவீன சத்திர சிகிச்சைக் கூடத்தில் புற்றுநோயாளர்களுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவ் வைத்தியசாலைப் பணிப்பாளர் எம்.எஸ்.இப்றாலெப்பை தெரிவித்தார். சுகாதார அமைச்சின் 3 கோடி ரூபா நிதி உதவியுடன் கிழக்கு மாகாணத்தின் முதலாவது நவீன சத்திர சிகிச்சைக் கூடமாக இவ்வைத்தியசாலையில் குறித்த சிகிச்சைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொழும்பு, கண்டி மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளிலேயேதான் இத்தகைய நவீன வசதி கொண…
-
- 0 replies
- 234 views
-
-
வடக்கில் தற்கொலைகளை தடுக்க 'கை கொடுக்கும் நண்பர்கள்' உதயம் வடக்கில் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் இளைஞர் யுவதிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் தற்கொலைகளை தடுக்கும் முயற்சியுடனும் 'கை கொடுக்கும் நண்பர்கள்' எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தம் காரணமாக தற்கொலை முடிவு எடுப்பவர்களை காப்பாற்றும் நோக்கத்துடன் ஆரம்பி க்கப்பட்டிருக்கும் இவ் அமைப்பானது மன அழுத்தத்தில் உள்ளவர்கள் தனிமையில் பிழையான முடிவுகளை எடுக்காமலிருப்பதற்காக 024-324 4444 என்கிற தொலைபேசி இலக்கத்தையும் அறிமுகம் செய்துள்ளது. அரசியல்,மதசார்பு அற்ற அமைப்பாக இயங்கும் இவ்வமைப்பான…
-
- 0 replies
- 309 views
-
-
யாழ்ப்பாண பயணிகளை அநுராதபுரத்தில் தவிக்கவிட்டு சென்ற யாழ்தேவி ரயில் சாரதியால் பரபரப்பு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த யாழ்தேவியின் சாரதி, ரயிலை அநுராதபுர ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு இறங்கிச் சென்றுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரயில்வே சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வடக்கு ரயில் சேவைகள் அநுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தற்போதே செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகவே ரயில் சாரதி ரயிலை அநுராதபுர ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பயணிகளிடம் யாழ்ப்பாணம் வரை செல்வதற்கான கட்டணம் அ…
-
- 0 replies
- 316 views
-
-
தேரரின் நிந்தனைக்குள்ளான கிராம சேவகர் மனோவிடம் நேரில் சென்று முறையீடு மட்டக்களப்பு, மங்களாராமைய விஹாராதிபதியினால் மட்டக்களப்பு கெவலியாமடு பகுதியில் கடுமையாக அச்சுறுத்தலுக்கும் துவேஷ நிந்தனைக்கும் உள்ளாகிய கச்சைக்கொடி கிராம சேவகர் சிதம்பரநாதன் ஜீவிதன், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசனிடம் அமைச்சின் அலுவலகத்தில் நேரில் சந்தித்து முறையீடு செய்துள்ளார். இந்த சந்திப்பின் போது, அப்பிராந்திய குடியேற்ற அதிகாரி அரியரத்தினம் சிவகுமார், அயல் வலய கிராமசேவகர் ஜதீஸ்குமார் சயந்தன், ஜ.ம.மு. தேசிய அமைப்பாளர் எஸ். ராஜேந்திரன், அமைச்சு அதிகாரியும் ஜ.ம.மு. நிர்வாக செயலாளருமான பிரி…
-
- 0 replies
- 260 views
-