Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மீனவர்கள் பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தையில் பெறப்பட்ட முடிவு.! இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி முறைமை கையால்வது தடுக்கப்பட எனவும் இழுவை படகு மீன்பிடி முறைமையை தமிழக மீனவர்கள் தடைசெய்ய வேண்டும் எனவும் இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு வலியுறுத்தியுள்ளது. மீனவர்களை விடுவிப்பதில் இருநாட்டு அரசாங்கமும் தயாராக இருப்பதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் இந்திய படகுகளை விடுவிக்க இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை எனவும் குறிப்பிட்டார். சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடியில் ஈட…

  2. கிளிநொச்சி சுண்டிக்குளத்தில் நூறு கிலோ கேரள கஞ்சா மீட்பு (வீடியோ இணைப்பு) கிளிநொச்சி சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் இன்று சுமாா் நூறு கிலோ வரையான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஆறு மணியளவில் சுண்டிக்குளம் கடல் மார்க்கமாக கஞ்சா கொண்டுவரப்படுவதாக தா்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபா் மகேஸ் வெலிகண்ணவின் வழிகாட்டலில் தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம். சத்துருங்க தலைமையிலான விசேட பொலீஸ் குழு நடவடிக்கையில் ஈடுப்பட்டு 72 கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனா். இன்று அதிகாலை சுண்டிக்குளம் கடற்கரை பகுதிக்கு பொலிஸ் குழுவினரை அவதானித்த கடத்தல்காரர்கள் படகி…

  3. மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தவொரு தீர்வையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை-இரா.சம்பந்தன்

    • 3 replies
    • 282 views
  4. மீனவர்கள் போன்று வேடமிட்டு தங்கம் கடத்திய இருவர் கடற்படையினரால் கைது மீனவர்கள் போன்று வேடமிட்டு, இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கங்களைக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட இருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த இருவரும் சுமார் 5 கிலோ கிராமிற்கு மேற்பட்ட தங்க கட்டிகளை தலைமன்னாருக்கு மேற்கு பகுதியிலுள்ள கடற்பரப்பில் வைத்து மீன்பிடி படகொன்றின் மூலம் கடத்தும் போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் மன்னாரைச் சேர்ந்தவரென்றும் மற்றையவர் சிலாவத்துறையைச் சேர்ந்தவரென்றும் தெரிவிக்கப்படுகின்றது. கடற்படையினருக்கு கிடைத்த விசேட தகவலினடிப்படையில் குறித்த இருவரும் கைதுசெய்யப்ப…

  5. தமிழகத்திலுள்ள அகதிகளில் 20 பேர் நாடு திரும்புகின்றனர்.! உள்நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழல் காரணமாக இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தவர்களின் 20 பேர் எதிர்வரும் 15 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்த சமய அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் 10 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் அழைத்து வரப்படுகின்றனர். இவ்வாறு நாடு திரும்பவுள்ள அகதிகள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் மீளவும் குடியேற்றப்படவுள்ளனர். மேலும் தாயகம் திரும்பும் அகதிகள…

  6.  பரோனஸ் அனிலே வந்தார்; நாளை யாழுக்கு செல்வார் ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோனஸ் அனிலே, மூன்று நாட்களுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை (06), இலங்கை வந்தடைந்தார். இனமோதல்களில் பாலியல் வன்முறைகள் தொடர்பான பிரித்தானிய பிரதமரின் விசேட பிரதிநிதியாகவும் கடமையாற்றும் இவர், தனது பதவிக் காலத்தில், இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். எதிர்வரும் புதன்கிழமை வரை நாட்டில் தங்கியிருந்து பலதரப்பட்ட அரச மட்ட சந்திப்புகளில் ஈடுபடவுள்ள அவர், நாளை செவ்வாய்க்கிழமை, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு, வடமாகாண ஆளுநரையும் மு…

  7. 'தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீட்டுத்தரவும்' தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, அதனை மீட்டுத்தருமாறு, இலங்கைக்கு உத்தியோகபூர்வ குறுகியகால விஜயத்தை மேற்கொண்ட ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத் தூதுக்குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘30 வருடகாலங்களாக இடம்பெற்ற அழிவுப்போரிலிருந்து படிப்படியாக முன்னேறிவரும் நாட்டை பல்வேறு திட்டங்கள் மூலமாக முன்னேற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நல்லெண்ணத்தைத் தமிழர் விடுதலைக் கூட்டணி மிகவும் பாராட்டுகிறது. ‘இந்நாட்டிலுள்ள …

  8. முன்னாள் போராளி குறித்து சம்பந்தனிடம் முறைப்பாடு கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த தனது கணவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அவரது மனைவி, கிளிநொச்சிக்கு, நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) விஜயம் செய்த எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் முறைப்பாடு செய்துள்ளார். முன்னாள் போராளியான 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான நடராசா சபேஸ்வரன் என்பவர், கடந்த 23ஆம்திகதி விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக, எதிர்க்கட்சித் தலைவரிடம் அவரது மனைவி குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது கணவர், முன்னாள் போராளியாவார். இறுதி யுத்தத்தின் போது என் கணவர், இராணுவத்தினரிடம் சரணடைந்து, பின்னர் 2010ஆம் ஆண…

  9. தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்துவது எனது நோக்கமல்ல ; விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்தெறிக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குலைக்க தாம் முயற்சி செயற்வதாக எழும் தனது கருத்துக்களில் வலு இருக்கின்றதா என்பதைக் கூட்டமைப்பினர் பரிசீலித்துப் பார்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். காலைக்கதிர் நாளிதழின் பிரசுரமும் ஆரம்ப விழாவும் நேற்று இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கூட்டமைப்பின் ஒற்றுமை தம்மால் சீர்குலைந்து போகக்கூடும் …

    • 1 reply
    • 270 views
  10. “ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவது அவசியம்” : மைத்திரி புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளை இவ் வருடம் நிறைவு செய்யமுடியாது. அடுத்த வருடமே அது நடைபெறும். மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்று விடயம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்ட அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும். நான் ஒருதடவையே ஜனாதிபதியாக இருப்பேன் கூறியதில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார். ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். http://www.virakesari.lk/article/13219

  11. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, ஒரே கட்சியாக மாற்ற நினைப்பது தவறு என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, ஒரே கட்சியாக மாற்ற நினைப்பது தவறு என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார். மீனவர் பிரச்சனை தொடர்பாக இந்திய - இலங்கை அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பங்கேற்க புதுடெல்லி வந்திருந்த அவர், இன்று ஞாயிற்றுக்கிழமை, பிபிசி தமிழோசையின் ஃபேஸ்புக் நேரலையில் பங்கேற்றார். தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒருங்கிணைந்து ஒரு கட்சியாக உருவாக்குவதில் என்ன பிரச்…

  12. பெருமளவு பொலிஸார் போதைப்பொருள் விற்பனை பங்காளிகள்-சந்திரிகா குற்றச்சாட்டு பொலிஸ் அதிகாரிகளில் பெரும்பாலானோரும் சில அரசியல்வாதிகளும் இலங்கையில் நட க்கும் போதைப் பொருள் விற்பனையாளர்களின் பங்காளிகளாக இருப்பதாக முன்னாள் ஜனா திபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தை செயற்படுத்தும் முன்னர், அதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கம்பஹாவில்நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும்போதே முன்னாள் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். கிராமத்தில் உள்ள விகாரைகளின் பி…

  13. யாழில் மூன்று இளைஞர்கள் கைது -மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் யாழ்.கொக்குவில், திருநெல்வேலி மற்றும் சில்லாலைப் பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் நேற்றுச் சனிக்கிழமை(05) கைது செய்யப்பட்டுள்ள தாக கைதுசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் பதிவு செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் கபில்நாத், திருநெல்வேலி பகு தியை சேர்ந்த கெங்காதரன் பிருந்தாபன், சில்லாலைப்பகுதியை சேர்ந்த அலெக்ஸ் அரவி ந்தன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. சீருடை மற்றும் சிவில் உடையில் வந்தவர்களே கைது செய்து …

  14. அண்ணன் சம்பந்தனின் கோரிக்கைகளை ஏற்று அரசியலுக்குள் பிரவேசித்த நான்; பதவிகள், அதிகாரங்களை அடைய வேண்டும் என என்றுமே அவாக் கொண்டதில்லை எனத் தெரிவித்துள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், முதலமைச்சர் பதவி எனக்குக் கிடைத்தமை ஒரு சிலரின் மனதை பாதித்திருந்தால் அதற்கும் சம்பந்தனே பொறுப்பு எனத் தெரிவித்துள்ளார். காலைக்கதிர் வெளியீட்டு நிகழ்வு நேற்றைய தினம் யாழ்.நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி இடம்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், சம்பந்தன் என்னை அரசியலுக்கு அழைத்து வந்தவேளை, வடக்கு முதலமைச்சர் பதவி ஏதோ வகையில் என் மடியில் வந்து விழுந்தது. அது ஒ…

    • 1 reply
    • 462 views
  15. சுலக்சனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார் சம்பந்தன் [ Sunday,6 November 2016, 04:54:28 ] பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜயகுமார் சுலக்சனின் இல்லத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் விஜயம் செய்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் சென்று குடும்பத்தினருடன் கலந்துரையாடியுள்ளார். இதன்போது சுலக்சனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த இரா. சம்பந்தன் மாணவர்களின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் நீதியான முறையில் இடம்பெறும் எனவும், நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந…

  16.  'ஆவா' சந்தேகநபர்கள் 6பேர் கைது ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் 6பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.tamilmirror.lk/185472/-ஆவ-சந-த-கநபர-கள-ப-ர-க-த-

  17. வடக்கு மாகாண சுகாதார அபிவிருத்திக்கென 600 மில்லியன் யூரோக்களை வழங்குவதற்கு ஒஸ்ரியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் ஆகியன முன்வந்துள்ளன என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் குறித்த நிதியானது நேரடியாக வடக்கு மாகாண சபையிடமோ அல்லது மத்திய அரசிடமோ வழங்காது நேரடியாக குறித்த நாடுகளே அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளன என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். குறித்த நிதி மூலம் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பருத்தித்துறை வைத்தியசாலைப் புனரமைப்புச் செய்வதற்கும், வடக்கு மாகாணத்தில் விசேட தேவையுடையயோர் 42ஆயிரம் வரையில் உள்ளனர் எனவும், அவர்களுக்காக விசேட வைத்தியசாலையொன்றை முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளத…

  18. மறவன் புலவில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட தற்கொலை அங்கி தமிழரசு கட்சியின் பேச்சாளர் சுமந்திரனுக்கு இலக்கு வைக்கப்பட்டு இருந்தது என்று வடமாகாண சபை உறுப்பினர் சயந்தன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிக் கிளைத் திறப்பு விழா நிகழ்வில் நன்றியுரை ஆற்ற அழைக்கப்பட்ட சயந்தன் நன்றி கூறுவதைத் தவிர்த்து தனது மற்றும் சுமந்திரனின் அரசியல் எதிரிகளை வசைபாடுவதில் நீண்ட நேரம் செலவளித்தார். உரையின் இறுதியில் அந்தத் தற்கொலை அங்கியை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு எடுத்துச்சென்ற முக்கிய சூத்திரதாரி இன்னும் கைது செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்ட சயந்தன், அந்தச் சூத்திரதாரி தனது அலுவலகத்துக்கு முன்னால் வீடு வாடகைக்கு எடுத்து வெளிநாட்டுப் பெண்ணை அமர்த்தி சுமந்திர…

  19. இறக்காமத்தில் புத்தர்சிலை வைக்கப்பட்ட விவகாரத்துடன் முக்கிய அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இறக்காமம் மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதுடன் மாத்திரமன்றி அதற்கு அருகிலுள்ள காணியையும் தேரர்கள் கோரியிருப்பதாகவும் தான் அறிந்துள்ளதாகவும் இதற்குப் பின்னால் நல்லாட்சியின் முக்கிய அமைச்சரொருவர் இருப்பதாக கூறப்படுவதாகவும் அவ்வாறாயின் அந்த அமைச்சர் தேசிய அரசாங்கத்தை கவிழ்க்க முயலும் சக்திகளுக்கு துணை போகின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் சிறுபான்மை சமூகத்தினரின் பூர்விக இடங்கள் திட்டமிடப்பட்ட வகையில் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும் யுத்தததால்…

  20. அரசியல் தீர்வைக் குழப்ப வன்முறை குழுக்கள்! வடக்கு, கிழக்கு இணையாவிட்டால் தமிழ் பேசும் மக்களின் நிலங்கள் பறிபோகும் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆர்.பி., எஸ்.கணேசன் நாட்டில் அர­சியல் தீர்­வுக்­கான நட­ வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்ப­டு­கின்ற வேளையில் அதைத் தடுத்து நிறுத்­து­வ­தற்கு பல சக்­திகள் இலங்­கையின் பல பாகங்­க­ளிலும் செயற்­பட்டு வரு­கின்­றன. தற்­போ­தைய அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சியை தொடர்­வ­தாக இருந்தால் அமைதி, சமா­தானம் என்­பன நீடிக்­க ­வேண்டும். அமைதி, சமா­தானம் இல் லாத குழப்­ப­க­ர­மான சூழலில் அர­சி யல் தீர்­வுக்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது கடினம். ஆகவே சமா­தா­னத்தைக் குலைத்து அமை­…

  21.  சங்கிலியன் பூங்காவில் மலர்க்கண்காட்சி மரநடுகை மாதத்ததை முன்னிட்டு, வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மலர்க்கண்காட்சி சனிக்கிழமை (05) ஆரம்பமாகியது. பொதுமக்களுக்கு தரமான மரக்கன்றுகளைப் பெற்றக்கொடுத்தல், உள்ளூர் தாவர உற்பத்தியாளர்களுக்கான சந்தை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தல் ஆகிய நோக்கத்தில் இம்;மலர்க்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த தாவர உற்பத்திப் பண்ணையாளர்கள் 14 காட்சிக் கூடங்களை அமைத்துள்ளனர். ஆரம்ப விழாவில் பிரதம விருந்தினராக வடக்கு கல்வி அமை…

  22. சீனத்தூதுவரின் கருத்தால் அதிருப்தி வெளிவிவகார அமைச்சிற்கு அழைக்கப்படுகிறார். சீனத்தூதுவரின் கருத்து தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காக, சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங்கிற்கு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பாணை விடுக்கவுள்ளார். கடந்தவாரம் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய சீனத் தூதுவர், யி ஷியாங்லியாங், முன்னைய ஆட்சிக்காலத்தில் அதிக வட்டிக்கு சீனா கடன் வழங்கியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்திருந்தார். 2 வீத வட்டிக்கே கடன் வழங்கப்பட்டதாகவும்,நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதுதொடர்பான தவறான தகவல்களை தெரி வித்து வருவதாகவும் அவர் குறிப்…

  23. பின்தங்கிய, எல்லையோர பிரதேசங்களில் நில அபகரிப்புக்கள் – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இலங்கையை அந்நியர்கள் கைப்பற்றியபோது கரையோரங்களைத்தான் முதலில் கைப்பற்றினர். அதன் ஊடாக அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொண்டு மையத்தில் இருக்கும் ஆட்சி அதிகாரங்களைப் கைப்பற்றினார்கள். அத்துடன் எல்லை ஓரங்களிலேயே தமது அடையாளங்களையும் நிலை நிறுத்தினர். இவ்வாறான நிலை ஒன்றையே இன்று ஈழமும் எதிர்கொள்கிறது. தமிழர் தாயகத்தின் எல்லை ஓரங்களை கைப்பற்றும் முயற்சியில் பெரும்பான்மையினர் ஈடுபடுகின்றனர். அத்துடன் அங்கு தமது அடையாளங்களை நிலைநிறுத்தும் முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர். இழக்கப்…

  24. இலங்கை ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை பெறுவதற்கு ஜேர்மனி உதவி இலங்கை ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை பெறுவதற்கு ஜேர்மனி தங்களது பங்களிப்பை தர எதிர்பார்த்துள்ளதாக ஜேர்மனின் துணை அதிபர் சிக்மர் கேப்ரியல் தெரிவித்துள்ளார். 15 ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தபோது அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இலங்கை சரியான பாதையில் தங்களது முன்னேற்றங்களை மேற்கொண்டு வருகின்றது, அதற்கு ஜேர்மன் தங்களது வாழ்த்துக்களை கூறிக்கொள்வதாக சிக்மர் கேப்ரியல் தெரிவித்துள்ளார். இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் கல்வித்துறை முன்னேற்றங்கள் மற்றும் நவீன அபிவிருந்தி தொடர்பாகவும் ஜேர்மனின் துணை அதிபரிடம் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.