Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை அதிபருக்கு தேவை அரசியல் துணிச்சல்! இலங்கையில் காவலர்களால் தமிழ் மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களான பவுன்ராஜ் சுலக்ஷன், நடராஜா கஜன் இருவரும் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அவர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள் காவலர்கள். குண்டு பாய்ந்ததில் பவுன்ராஜ் பலியானார். துப்பாக்கிச் சூட்டின் காரணமாக ஏற்பட்ட விபத்தில் நடராஜா கஜனும் உயிரிழந்தார். முதலில், “மாணவர்கள் சாவுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; வண்டியில் வேகமாகச் சென்றவர்கள் விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்கள்” என்றது காவல் துறை. மக்களின் எதிர்ப்பும் பிரேதப் …

  2. உயிரிழந்த மாணவர்களுக்கு வடக்கு மாகாணசபையில் அஞ்சலி யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கும் வடமாகாண சபையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமாகாண சபையின் 64ஆவது அமர்வு இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் – கைதடியிலுள்ள வடமாகாண கட்டடத்தில் கூடியது. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளிநாடு சென்றிருப்பதால் சபைக்கு அவைத் தலைவரான சி.வி.கே. சிவஞானம் தலைமை தாங்கினார். இதன்போது சபையில் கூடியிருந்த உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியை செலுத்தினர். htt…

  3. யுத்தமும் சுனாமியும் வாழ்க்கைச் சவால்களாக ஆகிவிட்டன.! : கனடிய உயர்ஸ்தானிகர் கடந்த 30 வருட காலமாக இலங்கையில் இடம்பெற்ற பயங்கரமான யுத்தமும் சுனாமித் தாக்கமும் இலங்கைச் சமூகத்தாருக்கு வாழ்க்கைச் சவால்களாக ஆகிவிட்டிருக்கின்றன என இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைற்றிங் தெரிவித்தார். நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் ஒரேயொரு அரச புனர்வாழ்வு மையமான மாவடிவேம்பிலுள்ள உளநல புனர்வாழ்வு நிலையத்திற்கு விஜயம் செய்த அவர், அங்கு புனர்வாழ்வு பெற்றுவரும் பல்வேறு வகைப் பாதிப்புக்குள்ளானவர்களைப் பார்வையிட்டார். புனர்வாழ்வு பெற்றுவருவோர் மற்றும் பாடசாலை இடைவிலகலுக்குட்பட்ட பெண்களுக்கான வாழ்வாதார மற்றும் வாழ்க்கைத…

  4. 'அப்பாவி மக்களை கொலை செய்யாதே' : மலையகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு சம்பவத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், சம்பவத்தை கண்டித்தும் மலையகத்தில் லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் பொதுமக்களும், சிவில் அமைப்பினரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேற்படி சம்பவத்தைக் கண்டித்தும், அஞ்சல…

  5. ஹெரோயினுடன் இந்திய மீனவர்கள் கைது சிலாவத்துறை, அரிப்பு கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இரண்டு கிலா கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த மூவரையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/12797

  6. யாழில் 300 மழைநீர் தொட்டிகளை அமைக்கிறது இந்தியா! யாழ். குடாநாட்டில் மழைநீரைச் சேகரிக்கும் 3000 நீர்த்தாங்கித் தொட்டிகளை அமைப்பதற்கு, இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்படவுள்ளது. இதற்கு அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலையான குடிநீர் ஆதாரத்தை வழங்கும் திட்ட முன்மொழிவு ஒன்றை, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகம், இந்தியத் தூதரகத்திடம் கையளித்திருந்தது. இந்த திட்ட முன்மொழிவின் அடிப்படையில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் 300 மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைப்பதற்கு 300 மில்லியன் ரூபாவை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இதுதொடர்பாக …

  7. வடக்கில் மகிந்த அணைத்த இனவாத தீ தற்போது கொழுந்து விட்டெரிகிறதாம்-விமல் வீரவன்ச சொல்கிறார் வடக்கில் தற்போது பொலிஸார் வீதியில் இறங்கிச் செல்ல முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். தற்பொழுது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கப்பம் வழங்கி சபையில் பெரும்பான்மையை தக்கவைத்துக் கொண்டு கடந்த அரசாங்கத்தால் அணைக்கப்பட்ட தீயை மீண்டும் எரியச்செய்து வருவதாகவும் விமல் வீரவன்ச குறிப்பிடடுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வற் வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் …

  8. நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபருக்கு பிடிவிறாந்து: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது 2001 ஆம் ஆண்டு தாக்குதல் நடாத்தியமை தொடர்பான வழக்கில் பகிரங்க பிடிவிறாந்து பிறப்பிக்கப் பட்டு உள்ள நெப்போலியன் எனும் நபர் ஊடகவியலாளரான மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் சந்தேக நபராவார். கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி இரவு 8 மணியளவில் நிமலராஜன் வீட்டில் செய்தி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை சுட்டு படுகொலை செய்யப்பட்டார். குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நெப்போலியன் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் குறித்த நபர…

  9. ‘சம்பவத்தை மூடி மறைத்திருந்தால் கடும் நடவடிக்கை’ அழகன் கனகராஜ் யாழ்ப்பாணம், கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான உண்மைத்தன்மையை உயரதிகாரிகள் மூடி மறைத்திருந்தால் அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம், நேற்றுப் புதன்கிழமை அறிவித்துள்ளது. நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற, வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டின் விளைவாக, யாழ். …

  10. பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து வட மாகாணத்தில் கடமையாற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் சகலரினதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சரத் குமாரவினால், இந்த விசேட பொலிஸ் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் உள்ள சகல பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், தொகுதிக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோரின் விடுமுறைகள் மற்றும் ஒருநாள் ஓய்…

  11. யாழ். மாணவர்கள் படுகொலை: நடந்தே நழுவினார் அமைச்சர் -அழகன் கனகராஜ் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த, யாழ். பல்கலைக்கழக மாண வர்கள் இருவர் மீது, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் சம்பந்தமான விவகாரம், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் சூடுபிடித்ததுடன், தான் தயாராக வரவில்லை என்று ஆரம்பத்தில் தெரிவித்த அமைச்சர் சாகல ரத்நாயக்க, பதில் கேள்வியைக் கேட்டபோது, தனது ஆசனத்திலிருந்து எழுந்து நடந்து, நழுவிச்சென்றுவிட்டார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில், நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் 11.45க்கு ஆரம்பமானது. இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு அமைச்சர்களான கயந்த…

  12. விஜயவீர மனைவியின் கோரிக்கை நிராகரிப்பு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) ஸ்தாபகத் தலைவரான ரோஹண விஜயவீரவின் மனைவியான சித்ராங்கனி விஜயவீர விடுத்திருந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ரோஹண விஜயவீர, இறுதியாக வசித்த, நாவலப்பிட்டி உலப்பனையில் உள்ள வீடு மற்றும் காணியை, தனக்கும் தன்னுடைய பிள்ளைகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறே, அவருடைய மனைவி கோரியுள்ளார். இந்தக் கோரிக்கையை, கங்கஇஹல கோரலே பிரதேச சபையின் செயலாளர் மங்கள விக்கிரம ஆராய்ச்சி நிராகரித்துள்ளார். அந்த வீடும் காணியும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன எனவும் ஆகையால், அந்தக் கோரிக்கையை நிராகரிப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். விஜயவீர மறைந்ததன் பின்னர், தானும் தன…

  13. மாணவர் கொலை விசாரணை அறிக்கையை வெளியிடவேண்டாம்-பொலிஸாருக்கு கடும் உத்தரவு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கொலை தொடர்பாக நடத்தப்படும் விசாரணை பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் என்று, காவல்துறை கண்டிப்பான உத்தரவை அதிகாரிகளுக்குப் பிறப்பித்துள்ளது. கொக்குவிலில் கடந்த வியாழக்கிழமை இரவு இரண்டு மாணவர்கள் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் மற்றும் அதனையடுத்து இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. பல குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்த விசாரணைகள் தொடர்பான எந்த தகவல்களையும் ஊடகங்களுக்குப…

  14. ஆவா குழுவை வேரறுக்க விசேட அதிரடிப்படை களமிறக்கம் சுன்னாகத்தில் பொலிஸ் புலனாய்வாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுக்கு ஆவா குழு, துண்டுப் பிரசுரம் மூலம் உரிமை கோரியுள்ளதையடுத்து, வடக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா நகரப் பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவுகளும், காவல்துறைக் குழுக்களும் நிறுத்த ப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் சம்பவத்தை அடுத்து, வடக்கின் பிரதான நகரங்களில் சிறப்பு அதிரடிப்படை அணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆவா குழுவைக் கண்டறிவதில் மாத்திரமன்…

  15. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கடராஜா கஜன், பவுன்ராஜ் சுலக்ஷன் ஆகியோர் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் தமிழ் அமைப்புகள் இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அக்டோபர் 20ஆம் தேதி இரவில் இந்த மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்த வேண்டும், இலங்கையில் காவல்துறையை மாகாண அரசின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை துணைத் தூதரகம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் புதன்கிழமை காலையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இளந்தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., தமிழர் வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் இந்த ஆர்ப்பாட்டத்த…

  16. தமிழ் மக்­களின் நிலைப்­பாடும் புலி­களின் நிலைப்­பாடும் ஒன்­றல்ல துறை­மு­கங்கள் மற்றும் கப்ப­ற்றுறை அமைச்சில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இட­ம்பெற்ற தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான சந்­திப்பில் அமைச்சர் அர்­ஜுன ரணதுங்க தெரிவித்த கருத்துக்கள் நான்கு முறை யாழ்ப்­பா­ணத்­திற்குச் சென்று அங்கு வாழும் தமிழ் மக்­களை நேரில் சந்­தித்து உரை­யா­டி­யுள்ளேன். எனவே தமிழ் மக்கள் நாட்டில் பிள­வுகள் ஏற்­ப­டு­வதை விரும்­பு­கின்­ற­வர்கள் அல்­ல­வெ­னவும் அறிந்து­கொண்­டுள்ளோம். எனவே தமிழ் மக்­களின் நிலைப்­பாடும் புலி­களின் நிலை­ப்பாடும் ஒன்­றென பார்ப்­பதில் அர்த்­த­மில்லை. கேள்வி: நாட்டில் தற்­கால அர­சியல் குறித்து உங்­க­ளது நிலைப்­பாடு எவ்­வா­றா­னது? …

  17. "வடக்கிலிருந்து தென்னிலங்கைக்கு பிணங்களை கொண்டு வந்த காலத்தை மீண்டும் உருவாக்க வேண்டாம்” (லியோ நிரோஷ தர்ஷன்) வடக்கு மற்றும் கிழக்கில் மாகாணத்தில் நிர்வாகம் முழுமையாக சீர்குழைந்துள்ளது. விடுதலை புலிகள் மீண்டும் உயிர்பெற்று வருகின்றனர். எனவே அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்தி மக்கள் ஆணையை பெற்றுக் கொள்ள வேண்டும். பொது மக்களுக்கு உண்மைகளை மூடி மறைத்து விட்டு பாதுகாப்பு படைகளை முகாமிற்குள் அரசாங்கம் முடக்கி விட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்து பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என தற்போது பாதுகாப்பு அமைச்சினால் கூற முடியுமா என கூட்டு எதிர் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. எனவே அரசாங்கம் பதவி விலகியோ தேர்தலை நடத்தியோ நாட்டை பாத…

    • 1 reply
    • 517 views
  18. யாழ்.மேல்நீதிமன்றில் கூட்டமைப்பினர் மீதான தாக்குதல் தொடர்பில் தொடர் விசாரணை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர் விசாரணைகளாக நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் திகதி பாராளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஊர்காவற்துறை புளியங்குளம் எனும் இடத்தில் துப்பாக்கியால் சுட்டும், வாளினால் வெட்டியும் , இரும்பு கம்பிகள் பொல்லுகளாலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. அத் தாக்குதலில் யாழ்.பல்கலைகழக ஊழியர் ஏரம்பு பேரம்…

  19. 1990ல் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கான அறிவித்தல் 1983 தொடக்கம் 2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்தக் காணிகளை கைவிட்டவர்கள் அல்லது உயிர் அச்சுறுத்தலின் காரணமாக மிகக் குறைந்த விலையில் காணிகளை விற்றவர்கள் தங்களது காணிகளை மீளப் பெறுவதற்கான விசேட சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இச் சட்ட மூலமானது இரண்டு வருடத்திற்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்பதால் இவ்வாறான பாதிப்புக்குள்ளானவர்கள் தங்களது காணிகளை மீளப் பெறுவதற்காக உரிய முறையில் விண்ணப்பித்து சட்ட நடவடிக்கைகளை மிக விரைவாக எடுக்க வேண்டும். எனவே மேற்கூறப்பட்ட விபரங்களின் படி பாதிக்கப்பட்டவர்கள்…

    • 2 replies
    • 402 views
  20. முசலி பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட முத்தரிப்புத்துறை கிராம மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்லும் நிலையில் தொடர்ச்சியாக கடற்படையினரின் கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், கடலில் இருந்து கரை திரும்பும் வரை அச்சத்தின் மத்தியிலேயே இருப்பதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் வழமை போல் இன்று(26) காலை கடற்தொழிலுக்குச் சென்றுள்ளனர். இதன் போது கடல் பாதுகாப்பில் ஈடுபட்ட முத்தரிப்புத்துறை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை சோதனையிட்டதோடு, படகுகளின் ஆவணங்களையும் சோதனையிட்டுள்ளனர். இதன் போது முத்தரிப்புத்துறை மீனவர்களின் 7 படகுகளையும் குறித்த படகில் மீன் பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்களையும் …

  21. 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது மனித அவலங்கள் தொடர்பில் வெளிநாட்டு மனித உரிமை ஆவர்வல்கள் நாடகம் ஒன்றை அரங்கேற்றம் செய்யவுள்ளனர். ஐரோப்பாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இலங்கை செல்கின்றனர். வடபகுதியில் எவ்வாறான பாதிப்புக்கள் ஏற்பட்டன என்பது தொடர்பில் தெரியாமல் தெற்கு கடற்கரையில் பொழுதை கழிக்கின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இடையில் நடைபெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் அங்கு இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள், மனித பேரவலங்களை வெளியிட ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்து ஊடகங்களின…

  22. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற சூழலை தணிய விடாமல் தமக்கு ஏற்றவகையில் மாற்றியமைத்துக் கொள்ள சில சதியாளர்கள் திட்டமிட்டு உள்ளனர். அதன் காரணமாக நாட்டில் கலவர நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தென்னிலங்கை புத்திஜுவிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழர்களுக்கு எதிராக சிங்கள மக்கள் தூண்டப்படுகின்றார்கள் என்பதற்கு ஆதார பூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளது. யாழில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து அடுத்தடுத்தாக நிகழ்ந்துவரும் சம்பவங்களின் பின்னணியில் மிக முக்கிய சதியாலோசனையாளர்கள் இருந்து செயற்பட்டு வருவது தெளிவாகிவிட்டது. தற்போது சமூக வலைத்தளங்களில் ஊடாக (தென்னிலங்கையில்) மிக வேகமாக பரப்பப்பட்டு வருவது இரு கருத்துகள் மாத்திரமே, …

  23. கிளிநொச்சியில் பொலிஸாரை தாக்கிய சந்தேகநபர் கைது கிளிநொச்சி பிரதேசத்தில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபரை கைது செய்துள்ள பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குறித்த சந்தேகநபரை தர்மபுரம் பொலிஸார் இன்று பகல் கைது செய்து செய்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்புக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் வட மாகாணம் முழுவதும் நேற்றைய தினம் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. இந்நிலையில் வேறு பிரதேசங்களில் இருந்து கிளிநொச்சி பிரதேசத்திற்கு வருகை தந்த வாகனங்கள் மற்றும் பஸ்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதையடுத்து அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனையடுத்து கிள…

    • 3 replies
    • 487 views
  24.  விமலின் வீட்டிலிருந்து சடலம் மீட்பு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய விமல் விரவங்சவின் வீட்டிலிருந்து இளைஞனின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.24 வயதுடைய இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/184806/வ-மல-ன-வ-ட-ட-ல-ர-ந-த-சடலம-ம-ட-ப-

  25. முல்லைத்தீவில் அதிக சிறுவர் தொழிலாளர்கள் சுப்பிரமணியம் பாஸ்கரன் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிறுவர்கள் தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாடசாலை செல்லாத, பாடசாலைகளில் இருந்;து இடைவிலகிய மற்றும் ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகின்றன. இவ்வாறு காணப்படும் சிறுவர்கள், தொழிலாளர்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏ-9, வீதி மாங்குளம் பகுதியிலுள்ள உணவகங்கள் சிலவற்றில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்;தப்பட்டுள்ளனர். இதனைவிட கட்டடவேலைகள், சட்டவிரோத மணல் அகழ்வுகள், மரங்கள் வெட்டுதல் போன்;ற செயற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.