ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143425 topics in this forum
-
பயங்கரவாதப் பட்டியலிலிருந்து புலிகள் நீக்கப்படுவதனை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை பயங்கரவாத பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் நீக்கப்படுவதனை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஐரோப்பிய ஒன்றிய பயங்கரவாத பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை நீக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அந்த முயற்சியை முறியடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. என்ன காரணத்திற்காக புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாத பட்டியலில் நீடிக்கப்பட வேண்டும் என்பதற்கான சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய பயங்கரவாத பட்டியலிலிருந்து தமிழீழ விடுத…
-
- 1 reply
- 233 views
-
-
சிறீலங்காவின் கடன் சுமையைக் குறைப்பதற்காக சில நாடுகள் உத்தியோகபூர்வமாக உதவ முன்வந்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகளே, சிறீலங்காவின் கடன் சுமையைக் குறைப்பதற்கு உதவியளிக்க முன்வந்துள்ளன. அந்தந்த நாடுகளின் தூதுவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இது தொடர்பான உறுதிமொழியை அவர்கள் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த நான்கு நாடுகளும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் உலக சந்தையை வலுப்படுத்துவதை இலக்காகக் கொண்டு உருவாக்கிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பானது மிகவும் பலம் வாய்ந்த ஒன்றாகக் காணப்படுவதால், அந்த அமைப்பினூடாக கொடுக்கல் வாங்கல்களின் போது வட்டி விகிதங…
-
- 1 reply
- 289 views
-
-
ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமை கழகத்தின் 33வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் பிரித்தானிய தமிழர் பேரவை சமர்ப்பித்த ஆவணங்கள் சிறிலங்காவின் முன்னைய அரசு மற்றும் இன்றைய “நல்லாட்சி” அரசின் நிலப் பறிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது. நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழக (UNHRC) கூட்டத் தொடரில் இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ மயமாக்கல் மற்றும் நில அபகரிப்பு தொடர்பாக நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), பசுமை தாயகம் மற்றும் அமெரிக்காவினை தளமாகக் கொண்டியங்கும் USTPAC இணைந்து இந் நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தனர். தமிழர் பிரதேசங்களில் நிர…
-
- 0 replies
- 303 views
-
-
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை (24/09/2016) அன்று பல்கலைக் கழக மாணவர்களுக்கிடையே மென்பந்து கிரிகட் சுற்றுப்போட்டி ஒன்று பல்கலைக்கழக மாணவ விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த விளையாட்டுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் ஒலித்த போது அங்கிருந்த சிங்கள மாணவர்கள் ஆத்திரமுற்று நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களுடன் முரண்பட்டுள்ளனர். "தேசிய கீதத்தினை தமிழில் ஒலிக்க விடவேண்டாம் என்றும் அவ்வாறு ஒலிக்க செய்ய வேண்டுமானால் சிங்களத்திலே முதலில் தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்யவேண்டும்" என்றும் முரண்பட்டுள்ளனர். இவ் முரண்பாட்டில் விவசாய பீட மற்றும் வணிக முகாமைத்துவ பீட சிங்கள மாணவர்களே ஈடுபட்டுள்ளனர்.இதனால் அவ் இடத்தில் பரபரப்பு ஏற்ப…
-
- 0 replies
- 364 views
-
-
ஆலயத்தில் வழிபட பத்து நாட்கள் மட்டுமே அனுமதி இராணுவத்தினரின் கட்டுப்பட்டில் உள்ள பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி பூஜை வழிபாடுகளை நடாத்துவதற்கு இராணுவம் அனுமதியளித்துள்ளது. எதிர்வரும் நவராத்திரி விழாவை முன்னிட்டு பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து 10 ஆம் திகதி வரை காலை 9 மணி தொடக்கம் 3 மணிவரை பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட முடியும் என ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர். ஆலயத்தின் அனைத்து வழிபாடுகளையும் மேற்கொள்ளவதற்காக இராணுவத்தினரிடம் அனுமதி கேட்டிருந்தது. தற்போது அதற்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் குறித்த …
-
- 0 replies
- 245 views
-
-
பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க முதலீட்டாளரை தேடும் அரசு கடந்தகால யுத்த நடவடிக்கையால் சிதைந்துபோன பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள புனரமைத்து ஆரம்பிப்பதற்கும், ககட்டகக பென்சில்கரி அகழும் சுரங்கப் பணிக்கும் முதலீட்டாளர்களை அரசு தேடுகின்றது. பரந்தன் இரசாயன கூட்டுதாபனம் என்ற பெயரில் முன்பு வடமாகாணத்தில் இயங்கிவந்த இரசாயனத் தொழிற்சாலையின் சேதமடைந்த கட்டடங்கள் இந்த வருட முடிவுக்கு முதல் முழுமையாகக் கட்டிமுடிக்கப் பட வேண்டும். தொழிற்சாலை உற்பத்தியை மீண்டும் ஆரம்பிக்க 525 மில்லியன் ரூபா தொகை அவசியப்படும் எனவும் அரசு தெரிவிக்கின்றது. தொழிற்சாலை நிர்மாணப்பணி பூர்த்தியாகியதும் இலங்கைக்கு தேவையா…
-
- 1 reply
- 448 views
-
-
வங்குரோத்துநிலையில் விக்கினேஸ்வரன் -ரில்வின்சில்வா சாடல் வட மாகாண முதலமைச்சர் சிவீ.விக்னேஸ்வரன் வங்குரோத்து அடைந்துள்ளார் என மக்கள் விடுத்லை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அந்த கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், விக்னேஸ்வரன் வங்குரோத்து அடைந்துள்ளார். எனவே, விக்னேஸ்வரனின் கருத்துக்களை நாம் நிராகரிக்க வேண்டும். விக்னேஸ்வரனின் கருத்து தெற்கு இனவாதிகளுக்க சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. ராஜபக்சவை சுற்றியிருக்கும் இனவாத சக்திகள் தொங்குவதற்கு ஒரு வைக்கோல் கூட …
-
- 1 reply
- 358 views
-
-
தென் மாகாண சபையில் சி.விக்கு எதிர்ப்பு யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமையன்று எழுக தமிழ் பேரணிக்கு பின்னர் நடத்திய கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் உரையானது இனவாத உரையென்றும் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறி, தென் மாகாண சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தென் மாகாண சபையின் மாதாந்த அமர்வு கே.ஏ. சோமவன்ச தலைமையில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை கூடியது. அதன் பின்னர் உறுப்பினர் சமிலி விதானாச்சியினால் கண்ட யோசனையொன்று முன்வைக்கப்பட்டது. இந்த யோசனைக்கு, அச்சபையில் அங்கம் வகிக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, …
-
- 0 replies
- 205 views
-
-
வடமாகாணத்தில் அரசியல்வாதிகளின் செல்வாக்குடன் வீதிகனை புனரமைப்பதற்கானஒப்பந்தங்கள் எந்தவிதமான கேள்விகளும் கோரப்படாமல் வழங்கப்பட்டுக்கொண்டிருப்பதாக கூறியிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றஉறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பருத்தித்துறை - மருதங்கேணி வீதி புனரமைப்பின்போது தனதுவீட்டு வாசலில் பல ஒப்பந்தகாரர்கள் வந்து நின்றதாகவும் கூறியுள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தின்கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர்மேற்கண்டவாறு கூறியுள்ளார். விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில், பருத்தித்துறை - மருதங்கேணி வீதி புனரமைப்பு செய்யப்பட்ட போது, என்னுடைய வீ ட்டின்முன்பாக பல ஒப…
-
- 2 replies
- 492 views
-
-
கோப்பி அருந்தி விட்டு அரசாங்கத்திற்கு எதிராக தீட்டிய திட்டமே 'எழுக தமிழ்' பேரணி வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனும் பொது எதிரணியின் முக்கியஸ்தர்களுள் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவும் மைத்துனர்களாகும். எனவே இவர்கள் இருவரும் இரவில் கொழும்பில் வைத்து கோப்பி அருந்தி விட்டு அரசாங்கத்திற்கு எதிராக தீட்டிய திட்டமே 'எழுக தமிழ்' பேரணியாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய சதித்திட்டம் தீட்டப்படுகின்றது. இதன்பிரகாரம் தெற்கில் விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பிலவும் வடக்கி…
-
- 5 replies
- 680 views
-
-
பிரித்தானிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் ஞாபகார்த்தமாக ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் விளையாட்டு விழா ஒன்றினை நடாத்த திட்டமிட்டு, கடந்த வருடம் முதன்முறையாக வெற்றிகரமாக நடாத்தியமை அனைவரும் அறிந்ததே. இதனைதொடர்ந்து இரண்டாவது தடவையாக கடந்த 25ஆம் திகதி Morden park, London road, SM4 5HE எனும் இடத்தில் விளையாட்டு விழாவினை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதில் துடுப்பாட்டம், உதைப்பந்தாட்டம், கிளித்தட்டு மற்றும் சில கலாசார விளையாட்டுகளும் இடம்பெற்றுள்ளன. சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டு இந்த விளையாட்டு போட்டியை சிறப்பித்துள்ளனர். …
-
- 0 replies
- 430 views
-
-
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கப் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்றைய தினம் சந்திக்க உள்ளனர். இடமாற்றம் பெற்றுச் செல்லும் வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை அனுமதி பெற்றுக்கொள்வதில் நிலவும் சிரமம் தொடர்பில் இன்றைய சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. நாட்டின் கல்வி தொடர்பிலான காரணிகளின் அடிப்படையில் விஞ்ஞான ரீதியான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டுமென வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்ய உள்ளனர். குறுகிய அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் பிள்ளைகளின் கல்வி தொடர்பில் சில தீர்மானம் எடுப்பதாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர், ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டி உள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் ந…
-
- 0 replies
- 218 views
-
-
கிழக்கு பல்கலை விரிவுரையாளர் தெரிவு பத்துவருட வழக்கு தீர்த்து வைப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பதவிக்கான ஆட்தெரிவில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மட்டக்களப்பு சிவில் மேன் முறையீட்டு மேல் நீதிமன்றம் 5 லட்ச ரூபா இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. பிரதம நீதியரசரினால் விசேடமாக நியமிக்கப்பட்ட மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சந்தி ரமணி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஆகிய இரண்டு நீதிபதிகளைக் கொண்ட குழாம் ஒன்றின் முன்னிலையில் இந்த மேன் முறையீட்டு வழக்கு விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. …
-
- 1 reply
- 248 views
-
-
கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள சுன்னாக பொலிசார் தன்னை அச்சுறுத்துவதாக, சாட்சியம் நீதிமன்றில் முறையீடு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நபர் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பான சாட்சியம் ஒருவரை குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ் சந்தேகநபர் ஒருவர் அச்சுறுத்துவதாக மல்லாகம் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில்நகர்த்தல் பத்திரம் ஊடாக சட்டத்தரணி , சாட்சியம் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு சென்றார் …
-
- 1 reply
- 354 views
-
-
தனியாக கழன்று ஓடிய ரயில் பெட்டிகள் வவுனியா – மாத்தறை இடையே இயங்கும் பயணிகள் ரயிலின் என்ஜின் தலவத்தை, ராகம வல்பொல மற்றும் களனி ஆகிய இடங்களில் கழன்று சென்றதால், பயணிகள் ஒரு மணி நேரம் அவதிக்குள்ளாகியுள்ளனர். http://www.virakesari.lk/article/11816
-
- 5 replies
- 678 views
-
-
தனது இனத்தின் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் 12 நாட்கள் நீராகாரம் எதுவுமின்றி உண்ணாநோன்பிருந்து சாவைத்தழுவிக்கொண்ட தியாகி லெப்.கேணல் திலீபனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் ஜனநாயகப்போராளிக் கட்சி உறுப்பினர்களும் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அனுமதிகேட்டு அஞ்சலி செலுத்தியமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொலைபேசிமூலம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தொடர்புகொண்டபோது அஞ்சலி நிகழ்வு நடாத்தலாம் எனவும் விடுதலைப்புலிகளின் தேசியக் கொடி மற்றும் இலச்சினைகள் எதுவும் பயன்படுத்தக்கூடாது எனவும் ரணில் விக்கிரமசிங்கவால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, இ…
-
- 4 replies
- 648 views
-
-
கடந்த 2009ம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையின் பிரபல பத்திரிகை ஆசிரியர் லசாந்த விக்ரமதுங்கவின் உடல் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து நாளை ( செவ்வாய்க்கிழமை) தோண்டியெடுக்கப்படுகிறது. அவரது மரணம் குறித்து ஒரு புதிய விசாரணை தொடங்கியுள்ள நிலையில் , இந்த நடவடிக்கை வருகிறது. அவரது உடலின் மீது புதிய பிரேத பரிசோதனை ஒன்று நடத்தப்படப் போவதாக இந்த மாதம் முன்னதாக அறிவிப்பு வந்ததிலிருந்து கொழும்பில் உள்ள அவரது கல்லறைக்கு ஆயுதந்தாங்கிய போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக ராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவர் சி்ல மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். அவரது கொலை தொடர்பாக அவர் உடல் மீது முன்னர் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனைகள் சந்த…
-
- 4 replies
- 530 views
-
-
செக்.குடியரசு ஜனாதிபதி இலங்கை வருகிறார் செக் குடியரசின் ஜனாதிபதி மிலோஸ் செமன் ,வெளியுறவு அமைச்சர் லுபோமீர் சரோலெக் ஆகியோர் அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இருவேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார்கள் என அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான உறவு ஆரம்பமாகி 60 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டும் இலங்கையின் வர்த்தக பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்குடனுமே இவர்கள் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். குறித்த விஜயத்தை தொடர்ந்து செக். குடியரசின் ஜனாதிபதி கொலம்பியா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கும் பொருளாதார ஒத்துழைப்பை ம…
-
- 1 reply
- 315 views
-
-
‘எழுக தமிழ்’ பேரணியில் பங்குபற்றாமை எதிர்ப்பு அல்ல “‘எழுக தமிழ்’ பேரணியில் பங்குபற்றாமை எதிர்ப்பு அல்ல. தமிழரசுக் கட்சியைத் தாக்குவதை ஏற்கவும் முடியாது” என, தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் வடமாகாண சபை அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) தெரிவித்தார். சனிக்கிழமை (24) இடம்பெற்ற “எழுக தமிழ்” பேரணியில் கலந்துகொள்ளாமை குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியதையே தமிழ் மக்கள் பேரவையும் வலியுறுத்தியுள்ளது. போராட்டங்களை மேற்கொள்வது அவர்களின் உரிமை, பங்கு பற்றுவதும் பங்குபற்றாமல் இருப்பதும் எமது உரிமை. நான் போராட்டத்துக்கு எதிரானவனல்ல, ஆனால் போராட்டத்தில் பங்குபற்றவில்லை. …
-
- 6 replies
- 667 views
-
-
4 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கையளிப்பு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இந்திய கடற்படையினரிடம் கையளித்துள்ளனர். காங்கேசன்துறைக்கு வடக்கேயுள்ள சர்வதேச கடல் எல்லையில் வைத்து இன்று காலை குறித்த 4 மீனவர்களும் கையளிக்கப்பட்டனர். இந் நடவடிக்கைக்கு இந்திய கடலோர காவல்துறைக்கு சொந்தமான ராஜ்தரங் கப்பலும் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான சீ.ஜீ.49 என்ற கப்பலும் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/11819
-
- 0 replies
- 314 views
-
-
எட்கா உடன்படிக்கை : அழுத்தம் பிரயோகிக்க மாட்டோம் : ஒன்றாக இருப்பதா ? இல்லையா ? என தீர்மானியுங்கள்: இந்தியா இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எட்கா உடன்படிக்கையானது இரண்டு நாடுகளும் இணக்கப்பாட்டுடன் முன்னெடுக்கும் ஒன்றாகும். இலங்கைக்கு இது வேண்டாம் எனின் நாங்கள் எந்த வகையிலும் இதில் அழுத்தம் பிரயோகிக்க மாட்டோம். எதனையும் திணிக்க மாட்டோம். இரு தரப்பு பரஸ்பர புரிந்துணர்வுடனேயே உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்று இந்திய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஒன்றாக இருப்பதா ? இல்லையா ? என்பதை இரண்டு தரப்புக்களுமே தீர்மானிக்க வேண்டும். ஒரு வழிப்பாதையில் எந்த செயற்பாடும் முன்னெடுக்கப்படாது. இரு தரப்பு இணக்கப்பா…
-
- 0 replies
- 333 views
-
-
வடக்கு முதல்வரின் கோரிக்கையை அடுத்து கைதிகளின் உண்ணாவிரதம் நிறைவு அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் முதலமைச்சரின் கோரிக்கையால் போராட்ட த்தினை முடிவிற்கு கொண்டுவந்தனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை பரிசீளிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரம சிங்கவிற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கு மாகாண முதல்வரின் கோரிக்கைக்கு அமைவாக அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தம…
-
- 0 replies
- 232 views
-
-
இராணுவத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண புதிய கட்சி ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் இராணுவத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்வரும் தேர்தல்களில் தேசிய இராணுவ கட்சி ஒன்றை உருவாக்கி போட்டியிடவுள்ளோம் என மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்தார். தாய் நாட்டுக்காக இராணுவத்தினர் அமைப்பு இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவைசெய்யும் இராணுவத்தினரின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுத்ததில்லை. ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இராணுவத…
-
- 0 replies
- 322 views
-
-
இலங்கை: வறட்சி காரணமாக 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடும் பாதிப்பு இலங்கையில் வறட்சியின் காரணமாக கிழக்கு , வட மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் உள்பட நாட்டின் பல பாகங்களிலும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வறண்ட நிலையில் காணப்படும் நீர்நிலை மேற்கூறிய குடும்பங்கள் தங்களது குடி நீர் உள்பட நாளாந்த பாவனைக்குரிய நீரைப் பெற்றுக் கொள்வதில் இன்னல்களையும், சிரமங்களையும் எதிர்கொள்வதாக கூறப்படுகின்றது. வறட்சினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் குளங்களும் , கிணறுகளும் நீர் இன்றி காணப்படுகின்றன. குடிநீருக்காக அல்லலுறும் மக்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித…
-
- 0 replies
- 404 views
-
-
'வடக்கு, கிழக்கு இணைப்பை எதிர்க்க முடியாது' -சரவணபவஆனந்தன் திருச்செந்தூரன் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு எதிராக எவரும் போர்க்கொடி தூக்க முடியது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளர் நாயகமுமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், “வடக்கு, கிழக்கு இணைப்பை எந்த முஸ்லிமும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்திருந்தார். வடக்கு - கிழக்க…
-
- 0 replies
- 390 views
-