ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143434 topics in this forum
-
பாகிஸ்தானின் தேசிய விமானசேவை நிறுவனமொன்று சிறீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவையிடமிருந்து ஏ-330 ரக விமானங்கள் மூன்றை குத்தகைக்குப் பெறும் உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது. இதற்கான நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இடம்பெற்றதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த ஒப்பந்தத்திற்கமைய முதலாவது விமானம் அடுத்த கிழமை பாகிஸ்தான் விமான சேவை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் பாகிஸ்தான் – பிரித்தானியா பயணசேவைக்கு ஈடுபடுத்தப்படவுள்ளது. ஏனைய விமானங்கள் இரண்டும் அடுத்த மாதமளவில் கையளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவையின் கடனை ஈடுசெய்யும் …
-
- 0 replies
- 275 views
-
-
ஐநாவின் மனித உரிமைப்பேரவைக்கு சிறீலங்காவின் பிரதிநிதியொருவர் நியமிக்கப்படவுள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் நடாத்தப்படவுள்ள மனித உரிமைகள் தொடர்பான விசாரணைகளுக்காகவே இலங்கையில் மனித உரிமைப் பிரதிநிதியொருவர் நியமிக்கப்படவுள்ளார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கான விண்ணப்பம் கோரும் நடவடிக்கைகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 11 மாத காலத்திற்கு இந்தப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தேவையேற்படின் அவரது பதவிக்காலம் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமைக் காரியாலயம் திறக்கப்படுவதற்கு சிறீலங்கா அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தமையும் குறிப்…
-
- 0 replies
- 288 views
-
-
எத்தகைய பேதமுமின்றி ‘சட்டம் எல்லோருக்கும் பொதுவானது’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு தமது ஆட்சிக் காலப்பகுதியில் தாம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டின் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் எப்பொழுதும் நடவடிக்கை எடுக்கும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். அவ்வாறான விடயங்களுக்கு முன்னுரிமையளிக்கும் வகையிலேயே புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். சுயாதீனமானதும், பாரபட்சமற்றதும், நடுநிலையானதுமான சட்ட முறைமையை நாட்டில் கட்டியெழுப்புவது முதன்மையானதாகும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். நேற்று (29) பிற்பகல் மூதூரில் இடம்பெற்ற மூதூர் …
-
- 0 replies
- 354 views
-
-
இலங்கைக்கே முன்னுதாரணமாக திகழும் கொடுக்குளாய் மக்கள்! மாறிமாறி வரும் அரசாங்கங்கள் அபிவிருத்திக்கு முதலிடம் கொடுப்பதாக கூறிவருகின்றன. ஆனால், கிராமப்புறங்கள் இன்றும் கவனிக்கப்படாமலேயே காணப்படுகின்றன. அந்தவகையில், யாழ். மாவட்டத்தின் வடமராட்சிக் கிழக்கிலுள்ள கொடுக்குளாய் கிராமமும் ஒன்று. கடலும் கடல் சார்ந்த இடமுமாகக் காணப்படும் இந்தக் கிராமம் இயற்கை அழகு நிறைந்தது. மணற்பரப்பைக் கொண்ட அழகிய கடற்கரை சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கும் விதமாகக் காணப்படுகின்றது. மீன் பிடியை பிரதானமாகக் கொண்ட இப்பிரதேச ம…
-
- 5 replies
- 967 views
-
-
இந்த நாட்டில் தமிழ் மக்கள், தமிழ் போராளிகள் கொல்லப்பட்டால் விசாரணைகள் தேவையில்லை என்பது எழுதப்படாத சட்டமாகவுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற வெலிக்கடை படுகொலையின் 33ஆவது நினைவு தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்; மனிதப்படுகொலை என்று சொல்லும் வகையில் இந்த நாட்டில் கொலைகள் நடைபெற்றுள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போகச் செய்யப்பட்டார்கள். சரணடைந்தவர்கள், கடத்தப்பட்டவர்கள் எனத் இப்படி பலருக்கு என்ன நடந்தது என தெரியாதுள்ளது. ஆகவே தமிழ் மக்கள், தமிழ் போராளிகள் கொல்லப்பட்டால் விசாரணைகள் தேவையில்லை என்பது இந…
-
- 0 replies
- 231 views
-
-
கனேடிய வெளிவிவகார அமைச்சர் - வடக்கு ஆளுநர் சந்திப்பு -சொர்ணகுமார் சொரூபன் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோன் வெள்ளிக்கிழமை (29) வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினால்ட் கூரேயை சந்தித்தார். விமானம் மூலமான பயணத்தை மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் பலாலி விமான நிலையம் வந்தடைந்ததார். இந்நிலையில், தனது முதலாவது நிகழ்வாக, வடக்கு மாகாண ஆளுநரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். வடக்கின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் மீள்குடியேற்ற மக்களின் தேவைகள்இ தற்போதைய வடக்கின் நிலைமைகள் தொடர்பான விடயங்கள் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. …
-
- 0 replies
- 164 views
-
-
தடைகளை கடப்பது கடினமல்ல : மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புகின்றனர். அதன் வெளிப்பாடு பாதயாத்திரை ஊடாக உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையை வெளிப்படுத்த விடாது ஊடகங்கள் மிகவும் மோசமான முறை யில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். பாதயாத்திரையை குழப்புவதற்கு முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் கொழும்பைநோக்கிசெல்வதையாராலும் தடுத்துவிடமுடியாது. பொதுமக்கள் எம்முடன் உள்ளமை உலகிற்கு வெளிப்பட்டுள்ளது. ஆகவே தடைகளை கடப்பது கடினமான…
-
- 0 replies
- 438 views
-
-
இலங்கையில் சிறுமி பாலியல் வல்லுறவு: 12 பேர் கைது ஒரு சிறுமியை இரண்டு நாட்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக எழுந்துள்ள சந்தகேத்தின் பேரில் இலங்கையில் காவல் துறையினர் ஒரு பெண் உட்பட 12 நபர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண், 12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த ஓர் அறையை வாடகைக்கு எடுத்ததாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். 12 நபர்களும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மூத்த காவல் துறை துணை தலைமை ஆய்வாளர் சந்தன விக்ரமரத்ன பி பி சி சிங்கள சேவையிடம் பேசுகையில், குழந்தையை பாலியல் வல்லுறவு செய்வதும், அந்தக் குற்றத்தை செய்வதற்கு உதவி செய்வதும் ஒரே விதமான குற்றமாகும். இரண்டிற்கும் ஒரே விதமான தண்டனை தான் என்றார். இந்…
-
- 0 replies
- 529 views
-
-
அரசியல்வாதிகள் பொதுமக்களின் வாக்குகளால் நியமிக்கப்படுவது மாத்திரம் இன்றி பொதுமக்களிடம் இருந்து அறவிடப்படும் வரிப்பணத்தில் இருந்தே அவர்களின் எந்தவொரு நடவடிக்கைகளுக்குமான பணம் செலவிடப்படுகிறது. இதனால் இவர்களின் நடவடிக்கைகளில் பொதுமக்களுக்கு பொறுப்புகூறும் தன்மை (Accountability) இன்றியமையாததாகிறது. தங்களது தொகுதிக்கு பெரும் படை பட்டாளத்துடன் சென்று மக்களுக்கு அனல் பறக்கும் பேச்சுக்கள் ஊடாக படம் காட்டிய காலங்கள் மலையேறிவிட்டன. தகவலறியும் சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில் அரசியல்வாதிகளின் பொறுப்பு கூறும் கடப்பாடுகளை வெளிப்படுத்தும் பல பொறிமுறைகள் வெளிவந்தமுள்ளன. இதன் ஒரு முக்கிய பொறிமுறைதான் வெரிட்டே நிறுவனம் manthri.lk ஊடாக கொண்டுவந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களு…
-
- 0 replies
- 344 views
-
-
கிளிநொச்சி வாழ் மலையக மக்கள் கோரிக்கை - குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கிளிநொச்சி அபிவிருத்தி முதல் அரசியல் பிரதிநிதித்துவம் வரை கிளிநொச்சியில் வாழ்கின்ற மலையக மக்கள் பாரபட்சமின்றி ஏனைய சமூகங்கள் போன்று சமமாக வாழ்கின்ற சூழலை உருவாக்குங்கள் என கிளிநொச்சி வாழ் மலையக மக்கள் இன்று வெள்ளிக்கிழமை நல்லிணக்க பொறிமுறை செயலணிக்குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா். 29-07-2016 கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அமா்வின் போதே இக்கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. அதில் அவா்கள் மேலும் கோரியுள்ளதாவது நல்லிணக்கம் என்ற புதிய எண்ணக்கரு இன்று இலங்கைச்சமூகங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டும் பேசுபொருளாகவும் இருக்கிறது இந்த நீரோட்டத்தில் கிளிநொச்சியில…
-
- 0 replies
- 259 views
-
-
குமாரபுரம் படுகொலையில் குற்றவாளிகள் யார்? திருகோணமலை – குமாரபுரம் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு இராணுவ வீரர்களும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுள திலகரட்ண தலைமையிலான ஏழு பேர் கொண்ட ஜூரிகள் சபை முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையின் முடிவிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி இந்தப் படுகொலைச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த சம்பவத்தில் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என 26 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தனர். இதில் பாடசாலை மாணவ…
-
- 3 replies
- 488 views
-
-
சுன்னாகம் தண்ணீர் மக்களுக்கு நீதிகிடைக்குமா? குற்றவாளிகள் யார்? சுன்னாகம் தண்ணீரில் கழிவு எண்ணெய் பரப்பிய காரணம் தெளிவுபடுத்தப்படாத நிலையில் வடமாகாணசபை மக்களை ஏமாற்றும் அறிக்கையை வெளியிட்டு மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் தெல்லிப்பழை பொதுச்சுகாதார பரிசோதகர் இராஜமேனகனால் பொதுமக்கள் நலன் சார்ந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் 2016 மே 3 ஆம் திகதி பிறப்பித்த கட்டளை இங்கு பிரசுரமாகின்றது. நீதிவான் நீதிமன்றம், மல்லாகம் மாண்புமிகு நீதிவான் அ. யூட்சன் அவர்கள் முன்னிலையில் வழக்கு இலக்கம் AR/1471/14 03.05.2016 கட்டளை மல்லாகம் மற்றும் தெல்லிப்பளை பொதுச் சுகா…
-
- 0 replies
- 231 views
-
-
தமிழ் பேசும் மக்கள் அச்சம்கொள்ள வேண்டியதில்லை : ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (ரொபட் அன்டனி) இனவாதத்தை முன்னிறுத்தி பாதயாத்திரை முன்னெடுக்கப்படுகின்றது என்பதற்காக அரசியல் தீர்வு காணும் செயற்பாட்டில் தடைகளோ முட்டுக்கட்டைகளோ ஏற்பட்டுவிடும் என்று தமிழ் பேசும் மக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதனூடாக தீர்வுத்திட்டத்தை முன்வைக்கவே தேசிய அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான டிலான் பெரெரா தெரிவித்தார். கூட்டு எதிரணியின் பாதயாத்திரைக்கு எவ்விதமான இலக்கும் இல்லை. எவ்விதமான இலக்குகளும் இல்லாமல் ஏன் இவ்வாறான போராட்டத்தை செய்கின்றனர் என்று புரியவில்லை…
-
- 0 replies
- 352 views
-
-
சட்டச் சிக்கல்களுடன் அரசுக்கு எதிராக மஹிந்த தலைமையில் பாதயாத்திரை LIVE BLOG 2016-07-29 09:25:09 எத்தனை தடைகள் வந்தாலும் பாதயாத்திரையை கொழும்பை நோக்கிகொண்டு செல்வேன். சவால்களை துணிவுடன் எதிர் கொள்ளமுடியாதுபின்வாங்கும் பழக்கம் என்னிடம் இல்லை. ஆனால் அரசாங்கத்தின் அச்சம் என்னைவியக்கவைத்துவிட்டுள்ளதுஎனமுன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ கொழும்பைநோக்கியபாதயாத்திரையைஆரம்பித்து சூளுரைத்தார். http://www.virakesari.lk/
-
- 2 replies
- 550 views
-
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது அரச வாகனத்தை திருப்பி கையளிக்கவில்லை என்றக் குற்றச்சாட்டில் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியசேன, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் கையளிக்காமல் வைத்திருந்து ஜீப் வண்டி பொலிஸாரல் நேற்று கைப்பற்றப்பட்டதுடன் சாரதி கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/178194/ம-ன-ன-ள-ந-ட-ள-மன-ற-உற-ப-ப-னர-க-த-#sthash.H9ROBTbL.dpuf
-
- 2 replies
- 334 views
-
-
ஒழுங்காக ஆட்சி செய்திருந்தால் கால்கள் தேயும் வரை நடந்துசெல்லவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது ; ஜனாதிபதி முன்னாள் தலைவர்கள் சரியான முறையில் அரசாட்சி செய்திருந்தால் இரு கால்களும் தேயும் வரை நடந்துசெல்லவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாவனல்லை பிரதேச சபையின் கேட்போர்கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், அதிகார மோகம் படைத்த ஒருசிலர் தான் செல்லும் வழி அறியாமல் பாதையில் நடந்து சென்றபோதும் அரசாங்கம் சுயநினைவுடனும் பொறுமைய…
-
- 0 replies
- 199 views
-
-
அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்த சீனத் தூதர் அஸ்கிரிய மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய ஞானரத்ன தேரரை இலங்கைக்கான சீனத் தூதர் எச்.ஈ. ஈஜான்லியாங் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பு கண்டியில் இடம்பெற்றுள்ளது. அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கராக தெரிவுசெய்யப்பட்டமைக்கு தூதர் வாழ்த்துத் தெரிவித்ததுடன் சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். இதன் போது இரு நாடுகளுக்கிடையிலான பௌத்த உறவுகள் தொடர்பில் பேச்சுவார்ததை நடத்திய சீனத் தூதர், தலதா மாளிகைக்கான கழிவறைத் தொகுதியை நிர்மாணிக்க சீனா உதவியளிப்பதாகவும் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/9563
-
- 0 replies
- 282 views
-
-
மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்த கதையாக இலங்கை வாழ் மக்களின் நிலைமை இன்று நாளாந்தம் சென்று கொண்டிருக்கின்றது. அதாவது தமக்கான விடிவுகாலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எமது மக்கள் இன்றைய அரசினை தெரிவு செய்தனர். ஆனால் தற்போதைய நடைமுறையில் தமது கனவு இலவு காத்த கிளி போல சென்று கொண்டிருப்பதனை நடைமுறையில் அவதானிக்க முடிகின்றது.. அதாவது, இந்த அரசினை ஆட்சி பீடம் ஏற்றிய பெருமையானது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கே உரித்தாகும். அவ்வாறு இருந்தும் இன்று நான்கு பக்கங்களிலும் தாக்கப்படுகின்ற ஒரு சமூகமாக தமிழ் பேசும் மக்கள் காணப்படுகின்றனர். இனவாதப் போக்கினை மாத்திரம் வைத்து அரசியல் செய்கின்ற சக்திகளை இன்று அரசு கண்டும் காணாமலும் இருப்ப…
-
- 0 replies
- 364 views
-
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கணவரான பிரபல திரைப்பட நடிகர் விஜயகுமாரதுங்க ஆரம்பித்த இலங்கை மக்கள் கட்சி, கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ள அந்த கட்சி ஜன சட்டன பாத யாத்திரையிலும் இணைந்து கொண்டுள்ளது. மகிந்த அரசாங்கத்தில் சில குறைப்பாடுகள் இருந்தாலும் நாட்டுக்கான சிறந்த மாற்றாக இருக்கும் என்பதற்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இலங்கை மக்கள் கட்சியின் தற்போதைய தலைவரான வடமேல் மாகாண சபை உறுப்பினர் அசங்க நவரத்ன தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com/politics/01/112478
-
- 0 replies
- 410 views
-
-
விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் குற்றச்சாட்டு இலங்கை சிறையில் சரியான உணவுகள் வழங்காமல் தம்மை கொடுமைப்படுத்தியதாக இந்திய மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 77 இந்திய மீனவர்கள் நேற்று (28) காரைக்கால் துறைமுகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த குற்றச்சாட்டை மீனவர்கள் முன்வைத்துள்ளனர். http://www.virakesari.lk/article/9555
-
- 0 replies
- 351 views
-
-
பாத யாத்திரை சென்ற இளைஞர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள் இன்று பாத யாத்திரை செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கு, பாத யாத்திரை செல்வதற்கு அனுமதியளிக்காது இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்து, அடக்கியவர்கள் இன்று பாத யாத்திரை செல்கின்றார்கள். ஏகாதிபத்திய ஆட்சி நடத்தியவர்கள் இன்று ஜனநாயகம் பற்றி பேசுகின்றார்கள். ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் பாத யாத்திரை செல்வதற்கு மட்டுமன்றி பேசுவதற்கு சுதந்திரம் இருக்கவில்லை. அந்தக் காலத்தில் பாத யாத்திரை சென்றவர்கள் சுடப்பட்டனர். எமக்கு கோட்டேயில்…
-
- 0 replies
- 252 views
-
-
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி சிறுத்தோப்பு கட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 18 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளக்கஞ்சாப்பொதிகளை பேசாலை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை மாலை மீட்டுள்ளனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் சசிக்குமார்(89049) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸ் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாகவும்,பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எம்.கின்சிலி ஹேரத் அவர்களின் வழி நடத்தலில் கீழ் மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் விவுத்தி சந்திர சேகர தலைமையில் சென்ற பொலிஸ் அதிகாரிகளான வனசிங்க (11133), சசிக்குமார்(89049), சபீத்(89043) ஆகியோர் அடங்கிய பொல…
-
- 0 replies
- 267 views
-
-
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையின் ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு கனடா பூரண ஒத்துழைப்பினை வழங்குமென கனடா வெளியுறவு அமைச்சர் ஸ்டெபன் டியன் (Stephane Dion) தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று முற்பகல் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ (Justin Trudeau) யின் வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதியிடம் தெரிவித்த கனடா வெளியுறவு அமைச்சர், மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் அவரைச் சந்தித்த பல்வேறு சந்தர்ப்பங்களில் …
-
- 1 reply
- 551 views
-
-
இலங்கையில் நிலவிய பதட்ட நிலைமை காரணமாக இடம்பெயர்ந்து சென்று நமது நாட்டவர்கள், பெரும்பாலும் தமிழர்கள் கனடாவில் சென்று குடியேறிய காரணத்தை வைத்துக்கொண்டு அந்த நாட்டின் மீதான வெறுப்புணர்ச்சி இந்த நாட்டில் திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. இது வரலாறு. இன்று பதின்மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்நாட்டுக்கு வந்திருக்கும் கனடிய வெளிவிவகார அமைச்சர், இலங்கையில் நிலவும் கனடா பற்றிய தவறான கண்ணோட்டத்தை மாற்றி அமைத்துள்ளார். இலங்கையின் சகவாழ்வு சமத்துவ பயணத்தில், தாம் ஒரு வெளிநாட்டு பங்காளி என்பதை கனடா இன்று எடுத்து காட்டியுள்ளது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கனடா நாடு வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ட…
-
- 0 replies
- 256 views
-
-
மாணவனின் உயர்விலே பெற்றோரைவிட அதிக அக்கறை காட்டுபவர்கள் ஆசிரியர்கள். மாணவர்கள் தமது பெற்றோரைவிட அதிகளவு நேரத்தை ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். குருவுக்குப் பின்னர் தான் தெய்வத்தை வணங்க வேண்டும் என வரையறை செய்துள்ளனர். குரு சிஷ்ய வழமை இருந்தபோது குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையிலான உறவு மிக இறுக்கமாக இருந்தது. கால ஓட்டத்தின் மாற்றத்தால் ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையிலான தொடர்புகள் விரிவடைந்து விட்டன. பாடசாலைக்கு அப்பால் பொது இடங்களிலும் ஆசிரியருக்கு மரியாதையை கொடுத்த காலம் முன்னர் இருந்தது என்று சொல்ல வேண்டிய காலத்தில் வாழ்கிறோம். இன்றைய சில மாணவர்கள் பாடசாலையில் ஆசிரியருக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதில்லை. ஒருசில ஆ…
-
- 0 replies
- 380 views
-