ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143431 topics in this forum
-
தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் சாசனம் அவசியம் நீண்டகாலம் நீடித்துக்கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக தீர்வைக் காண்பதற்கு நாம் பொறுப்புடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்மைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டேபன் டையோனிடத்தில் தெரிவித்துள்ளார். எமது அடிப்படை அபிலாஷைகளை அடையக்கூடிய வகையில் அரசியல் சாசனம் உருவாக்கப்படுமாகவிருந்தால் எமது மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனவும் அவரிடத்தில் சுட்டிக்காட்டிய எதிர்கட்சித்தலைவர் கனடா இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ச்சியான உந்துதலை வழங்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். …
-
- 1 reply
- 240 views
-
-
எதிர்காலம் குறித்த சிந்தனை இல்லாமல் சீரழிகிறது இளைய தலைமுறை-முதல்வர் விக்கி கவலை எதிர்காலம் குறித் எவ்வித சிந்தனையும் இல்லாமல் எமது இளைய சமுதாயம் பல்வேறு கலாசார சீரழிவுகளுடன் வாழ்ந்து வருவதாக , வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை தெரிவித்துள்ளார். கைதடி மேற்கில் அமைந்துள்ள சரஸ்வரதி சனசமூக நிலையத்தின் புதிய கட்டிட திறப்புவிழா, இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே, வடக்கு முதல்வர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- போரானது எம்மை பெருத்த அழிவுகளுக்குள் இட்டுச் சென்றாலும், உலக அரங்கில் ‘நாம் தமிழர்’ என்ற அடையாளத்தைய…
-
- 2 replies
- 475 views
-
-
'சர்வதேச விசாரணை வேண்டுமென்று சம்பந்தன் கூறமாட்டார்' -எம்.றொசாந்த் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதையே நானும் விரும்புகின்றேன். கட்சிகள் பலவும் அவற்றை விரும்பினாலும், அரசியல் காரணங்களுக்காக அதனை வெளியில் கூறமாட்டார்களென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில், நேற்று வியாழக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், சர்வதேச விசாரணைதான் வேண்டும் என்…
-
- 0 replies
- 266 views
-
-
கூட்டமைப்பினர் மீதான தாக்குதல் ; யாழ் மேல் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையிலான கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மீதான ஊர்காவற்றுறை தாக்குதல் வழக்கு திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இருந்து யாழ் மேல் நீதிமன்றத்திற்கு சடட்டமா அதிபரினால் மாற்றப்பட்டுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி ஊர்காவற்றுறையில் மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம் உள்ளிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த அரசியல் கட்சி உறுப்பினர்களைக் கொண்ட …
-
- 0 replies
- 145 views
-
-
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஏன் பிற்போடப்படுகின்றது? : விளக்கமளிக்கிறார் ஆணையாளர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்படுத்தப்படுவதற்கு அரசியல்வாதிகளோ தேர்தல்கள் ஆணைக்குழுவோ பொறுப்பில்லை. தேர்தல்கள் தொகுதிவாரியாக நடத்தப்படவேண்டும் என பாராளுமன்றத்தில் அங்கிகரிக்கப்பட்டிருக்கும் சட்டமூலமே இதற்கு காரணமாகும். அத்துடன் தேர்தல் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு அதுதொடர்பான சிக்கல்கள் நிறைவடைந்த பின்னர் தேர்தல் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருக்கவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் அமைப்புக்கான சர்வதேச மன்றம் என்பன இணைந்து இளைஞர்களின் தேர்தல் அறிவு மற்றும் பங்கேற்பை வலுவ…
-
- 0 replies
- 166 views
-
-
ரஷ்ய கடற்படையின், தேடுதல் மற்றும் மீட்புக் கப்பலான ‘இகோர் பெலோசோவ்’, நான்கு நாள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 96 மாலுமிகளுடன் வந்த ரஷ்ய கடற்படைக் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். இதையடுத்து கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் அலெக்சே நெகோட்சேவ், கப்பல் அணியின் தளபதி கப்டன் மாக்சிம் அலாலிகின் ஆகியோர், சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். வரும் 30ஆம் நாள் வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ள ரஷ்ய கடற்படைக் கப்பலில் உள்ள மாலுமிகள், சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பயிற்சிகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள…
-
- 1 reply
- 429 views
-
-
கரையொதுங்கியுள்ள இராட்சத திமிங்கிலம்... காலி அஹங்கம கடற்பிரதேசத்தில் சுமார் 80 அடி நீளமான இராட்சத திமிங்கிலம் ஒன்று இன்று காலை கரையொதுங்கியுள்ளது. இதனை பார்வையிட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பெருமளவான மக்கள் வருகை தருவதாக எமது செய்தியாளர் கூறினார். விசாரணைகளின் பின்னர் அது துண்டுகளாக வெட்டப்பட்டு புதைக்கப்படும் என்று அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர். http://tamil.adaderana.lk/news.php?nid=2205&mode=head
-
- 2 replies
- 427 views
-
-
சிங்கள குடியேற்றத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டம் சார்ந்த மக்கள் தங்களுடைய பாதிப்பு தொடர்பான அறிக்கையினை எமக்கு சமர்பித்தால் அதனை பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனத்திற்கு கொண்டுவருவதன் ஊடாக நடவடிக்கை எடுக்ககோருவதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்கும் நாம் தயாராக இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக முதலமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். குறித்த விடயம் தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில், சிங்கள மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் தமிழர்களுடைய நிலங்கள் அபகரிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பாக நான் நன்றாக அறிந்திருக்கின்றேன். மேலும்…
-
- 3 replies
- 335 views
-
-
மகா சங்கத்துக்கோ, பௌத்த சமயத்திற்கோ பாதிப்பு ஏற்படும் எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கெட்டம்பே மகாநாம கல்லூரி விளையாட்டரங்கில் நேற்று பிற்பகல் நடைபெற்ற தேசிய பிரிவெனா தின அரச நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நடைமுறையில் உள்ள அரசியல்யாப்பில் பௌத்த சமயம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதை அகற்றி புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதாக முன்னெடுக்கப்பட்டு வரும் பிரசாரங்கள் முற்றிலும் போலியானவை. பௌத்த மக்கள் உள்ளடங்களாக அனைத்து சமயங்களும் அனைத்து இனங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியல் யாப்பை நாட்டுக்கு முன் வைக்கப்படும். புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்பட…
-
- 3 replies
- 334 views
-
-
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா மொடர்ன் பாம் வீட்டுத்திட்ட பகுதியில் இளம் யுவதி ஒருவர் பாலியல்துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் குடும்பஸ்தர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் யுவதி பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட யுவதியின் தாய் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணிப்பெண்ணாக இருந்து வரும் நிலையில், யுவதி உறவினர் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக உறவினர் வீட்டில் இருந்து வந்துள்ள நிலையில் யுவதியின் சித்தப்பாவினால் கடந்த இ…
-
- 0 replies
- 526 views
-
-
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சர்வதேச ரீதியாக பல பின்னடைவுகளை கண்டு வருவதாக தெரிய வருகிறது. கடந்த காலங்களில் மேற்கொண்ட மோசடிகள் தொடர்பில் உலக நாட்டுத் தலைவர்கள் அதிருப்பதி அடைந்துள்ளமையே இதற்கான பிரதான காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தென்கொரியாவுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, அந்நாட்டு உயர்மட்ட அரச தலைவர்களை சந்திக்க கோரிக்கை விடுத்திருத்தார். எனினும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் தென் கொரியாவுக்கு விஜயம் மேற்கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். இதற்கான நிதியுதவியை வழங்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் கோரியுள்ளார். எனினும் அந்தக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 265 views
-
-
மல்லாகம் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவச் சிப்பாய் ஒருவரைக் கொலை செய்தார் எனக் குற்றம்சுமத்தப்பட்ட வழக்கில் எதிரி இரத்தினம் ஆனந்தராஜாவை யாழ். மேல் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி மல்லாகம் இராணுவ முகாமில் பணியாற்றிய குமாரதாசகே சமீர பிரசாத் குமார என்ற இராணு வீரரைக் கொலை செய்ததுடன், தன்னியக்கத் துப்பாக்கி ஒன்றையும் ரவைகளையும் உடைமையில் வைத்திருந்தமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி, சட்டமா அதிபரினால், யாழ்.மேல் நீதிமன்றத்தில் இரத்தினம் ஆனந்தராஜா என்பவருக்கு எதிராக குற்றப்பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணை…
-
- 0 replies
- 400 views
-
-
ஒன்றுக்காக போராடி இரண்டைப் பெற்றுள்ளோம்-முதல்வர் விக்கி மகிழ்ச்சி வடக்கில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்திற்காக போராடி இரண்டினை தற்போது நாம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும். வவுனியா நகரிலும் மாங்குளத்திலும் பொருளாதார மத்திய நிலையங்கள் அமைக்கப்படுவதற்கு நாம் இணக்கம் தெரிவிக்கின்றோம் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கில் பொருளாதார மத்திய நிலை யத்தை வவுனியாவிலும் மாங்குளத்திலும் அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன்இது குறித்து கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிசன் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு கடிதமொன்றினையும் நேற்று அனுப்பிவைத்துள்ளார்…
-
- 8 replies
- 629 views
-
-
இலங்கையின் தமிழ் அரசனான எல்லாளனின் சமாதியானது அனுராதபுர மாவட்டத்தில் காணப்படுவதாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை என வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான எஸ்.பத்மநாதன் தெரிவித்தார். ‘எல்லாள மன்னனின் சமாதி இருப்பதற்கான எவ்வித ஆதாரங்களும் இங்கு காணப்படவில்லை. அனுராதபுரத்திற்கு அருகில் எரிந்த நிலையில் காணப்படும் செங்கற்களால் அமைக்கப்பட்ட இடிந்து போன கட்டடம் தான் எல்லாள மன்னனின் சமாதி எனக் கூறப்பட்டாலும் கூட இதில் பொறிக்கப்பட்டுள்ள தமிழ்ப் பிராமி வார்த்தைகளை எவராலும் வாசிக்க முடியவில்லை’ என பேராசிரியர் பத்மநாதன் குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரத்தில் காணப்படும் அழிவடைந்த கட்டடமானது இந்துக்களின் அல்லது பௌத்தர்களின் ஆலயமாக இருக்கலாம் எனவும் பெரும்பாலும் இது ஒரு பௌத்…
-
- 0 replies
- 805 views
-
-
கடந்தகால யுத்த சூழ்நிலையின்போது, உயிரிழந்த மற்றும் காணாமல் போன தங்களின் உறவுகளின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். தங்களுக்கு நிரந்தர வாழ்வாதார உதவிகள் செய்து தரப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து காணாமல் போனோரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், மூதூர் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரஜைகள் குழுவின் தலைவர் சிவசிறி இ.பாஸ்கரன் குருக்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், மூதூர் தெற்கு பகுதியைச் சேர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்ட இறுதியில் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் மூதூர் பிரதேச செயலாளர் வீ.யூசுப்பிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்…
-
- 0 replies
- 227 views
-
-
பொருளாதார மத்திய நிலையத்தினை அமைப்பதற்கு ஓமந்தையில் பேய்கள் வாழ்கின்றன என்றால் அதனை மாங்குளத்தில் அமைத்தால் என்ன? என வட மாகாண முதலைமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் கேட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடமாகாண முதலமைச்சருக்கும், வவுனியா மாவட்ட விவசாய அமைப்புக்கள் சார்ந்த பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது. இதன்போது வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்கப்பட வேண்டும். என்பதே தீர்மானம். அதனை சிலர் நிராகரிக்கின்றார்கள். ஆதலால் ஓமந்தையில் அமைக்கப்படாவிட்டால் மாங்குளத்தில் அது அமைக்கப்படும். என முதலமைச்சர் கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் மேற்படி செய்தி தொடர்பாக முதலமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு பதில…
-
- 0 replies
- 301 views
-
-
கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும், அமெரிக்கப் போர்க்கப்பலில் சிறிலங்கா கடற்படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக்குவரத்துத் தள போர்க்கப்பலான, யுஎஸ்எஸ். நியூ ஓர்லியன்ஸ் நேற்றுமுன்தினம் மாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் ந்லையில், சிறிலங்கா கடற்படையினருடன், அனர்த்த கால மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பாக, சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க கடற்படையினர் பயிற்சி அளித்து வருகின்றனர். அத்துடன், அமெரிக்க- சிறிலங்கா கடற்படையினருக்கிடையில், கூடைப்பந்து, எல்லே உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. இருநாட்டுக் கடற்படையினருக்கும் இடையிலான…
-
- 2 replies
- 298 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்-சிங்கள மாணவர்களிடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பில் தென்பகுதி ஊடகங்களும் தென்பகுதி அரசியல்வாதிகள் சிலரும் இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தனர். சிங்கள மாணவர் ஒருவர் பொல்லுடன் சண்டப்பிரசண்டமாக நிற்பதை ஊடகங்கள் வெளியிட்டபோது, அந்த மாணவனை தமிழ் மாணவனாக சிங்கள ஊடகங்கள் காட்டி நின்றமை மிகப் பெரும் அபத்தச் செயலாகும். தங்கள் இனம்சார்ந்த மாணவனின் கோலத்தை கண்டித்து ஒரு மாணவனுக்குரிய பண்பை வெளிப்படுத்த வேண்டிய ஊடகங்கள் தங்கள் இனத்து மாணவனை தமிழ் மாணவன் என்று சொல்லும் அளவில் இனப்பற்றுக் கூட தரம் கெட்டுப் போய்விட்டது என்பதை சொல்லித்தானாக வேண்டும். எது எப்படியாயினும் இந்த நாட்டில் இன்னமும் தர்மம் உயிர்வாழ்கிறது என்பதை …
-
- 1 reply
- 292 views
-
-
சர்வதேச ஆய்வரங்கம்... -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வணிக பீடத்தின் ஏற்பாட்டிலான 3ஆவது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வரங்கம், யாழ்ப்பாணம் கிறீன்கிறாஸ் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை (28) காலை 7.30 மணி முதல் ஆரம்பமாகியது. - See more at: http://www.tamilmirror.lk/178134/சர-வத-ச-ஆய-வரங-கம-#sthash.J85vXg8x.dpuf
-
- 1 reply
- 394 views
-
-
தேரர்கள் அரசியலில் ஈடுபடுவது பொருத்தமானதல்ல தேரர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது பொருத்தமான விடயமல்ல என கண்டி அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வணக்கத்துக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார். நேற்று (27) இடம்பெற்ற தேசிய பிரிவெனா தினத்தை முன்னிட்டு கண்டி கெட்டம்பே மைதானத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார். இதேவேளை தேரர்கள் அரசியலில் தலையிடுவதை தவிர்த்து, அதிலிருந்து விலகி நிற்பது சிறந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/9508
-
- 2 replies
- 248 views
-
-
கம்யூனிஸ்ட் கட்சி நாட்டுக்கு தேவையில்லை என தேசிய உரிமைகள் சங்கத்தின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் கம்யூனிஸ்ட் கட்சி இந்த நாட்டுக்கு அவசியமான கட்சியல்ல. இந்த நாட்டுக்கு பொருத்தமற்ற கட்சி என்பதனால் தான் கம்யூனிஸ்ட் கட்சி சிதைவடைந்துள்ளது. அரசியல் அமைப்பில் திருத்தம் செய்ய வேண்டுமாயின் 13ஆம் திருத்தச் சட்டத்திலேயே திருத்தம் செய்யப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=162401&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 264 views
-
-
இராணுவத்தின் அதீத பயிற்சியால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கருக் கலைவு மன்னார் சன்னார் கிராம பகுதியில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் அதீத ஆயுதப்பயிற்சியால் அக் கிராமத்திலுள்ள பல கர்ப்பிணி தாய்மார்களுக்கு, திடீர் கருக்கலைவு ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த 2 மாதங்களுக்குள் சன்னார் கிராமத்தைச் சேர்ந்த 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு இவ்வாறு கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர் நீதிப் பொறிமுறை தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான, வலய செயலணி இன்று (வியாழக்கிழமை) காலை மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த செயலணியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த, சன்னார்…
-
- 0 replies
- 334 views
-
-
இவ்வருடத்திற்குள் காணாமற் போனோருக்கான சான்றிதழ்! யுத்தத்திற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் பல்வேறு செயற்பாடுகளினால் காணாமல் போனவர்களை காணாமல் போனோர் என்று உறுதிசெய்து அதற்கான சான்றிதழை வழங்கும் நடவடிக்கை இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வடக்கு, கிழக்கு மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டிருக்கும் நிலையில் கூட்டமைப்பினருடன் கலந்துரையாடி அவர்களது யோசனைகளும் பெற்றுக்கொள்ளப்படும் என்று உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். பொலனறுவையில் நாளை மறுதினம் முன்னெடுக்கவுள்ள நடமாடும் சேவை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழ…
-
- 0 replies
- 267 views
-
-
அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள ஐந்து வருட அபிவிருத்தி திட்ட வரைவுகளின் பின்னர் பொருளாதாரம் பிரகாசமடையும் (பா.ருத்ரகுமார்) தற்போது இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியானது சூரிய ஒளி மந்த நிலையில் ஒளிர்வது போலிருந்தாலும் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள ஐந்து வருட அபிவிருத்தி திட்ட வரைவுகளின் பின்னர் அந்த சூரிய வெளிச்சத்தை பிரகாசமாக்கிக்கொள்ள முடியும் என மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். புதிதாக நியமனம் பெற்றுள்ள மத்திய வங்கி ஆளுனரை கௌரவிக்கும் முகமாகவும் இலங்கையின் பங்குச்சந்தை பரிவர்த்தனையின் புதிய பரினாமங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் உலக வர்த்தக மையத்தில் இன்று (28) இடம்பெற்றது. …
-
- 0 replies
- 156 views
-
-
77 இந்திய மீனவர்களும் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இலங்கை கடற்படையால் ஒப்படைப்பு விடுதலைசெய்யப்பட்ட 77 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கங்கேசன்துறைக்கு வடக்கேயுள்ள சர்வதேசக் கடல் எல்லையில் வைத்து இந்திய கடலோரக் காவல் படையினரிடம் கையளித்துள்ளதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார். இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஸ்.எல்.என்.எஸ். ரங்கராஜ பி. 481 மற்றும் கடலோர காவல்படை கிராஃப்ட் "சிஜி 47" ஆகிய இலங்கை கடற்படையின் கப்பல்களும் "ராணி அபக்கா" மற்றும் "அமையா" ஆகிய இந்திய கடலோர காவல்படை கப்பல்களும் இதன் போது பணியி…
-
- 0 replies
- 447 views
-