ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143434 topics in this forum
-
கைதிகளுக்கு யோகாசனப் பயிற்சி வழங்கிய நாமல் : சகோதரர்கள், கூட்டு எதிர்க்கட்சியினர் சிறையில் சென்று பார்வையிட்டனர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ வெலிக்கடை, புதிய மெகசின் சிறைச்சாலையில் ஈ பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் நேற்றுக் காலை அவர் சிறைச்சாலை கைதிகளுக்கு யோகா பயிற்சி வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன, சந்தேக நபரான நாமல் ராஜபக்க்ஷவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிரப்பித்ததையடுத்தே நேற்று முன்தினம் மாலை முதல் அவர் புதிய மெகசின் சிரையின் ஈ பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதா…
-
- 0 replies
- 369 views
-
-
முன்னாள் போராளி சசிகுமார் [ராகுலன்] இன்று காலமானார். உறவுகளுக்கு உதவுவோம் மூலமாக நீங்கள் உதவிய ராகுலன் ஆவார். இவரது ஆன்ம சாந்திக்காக இறைவனை பிராத்தியுங்கள் . புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ச்சியாக பலியாகி வருவது பொதுமக்கள் மத்தியிலும் முன்னாள் போராளிகள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது குறிப்பிடத்தக்கது. http://battinaatham.com/description.php?art=4713
-
- 0 replies
- 468 views
-
-
முல்லைத்தீவின் மீன்பிடி உரிமைக்கு சிங்கள மீனவ சமூகமே உரித்துடையவர்கள் என முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத் தளபதி தெரிவித்துள்ள கருத்தை வடமாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிராகரித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட மீன்பிடித் தொழிலுக்கான உரிமையை சிங்கள மீனவர்களிடம் ஒப்படைக்க அரசாங்கம், கடற்படை என்பன சதி செய்கின்றன எனவும் அவர் குற்றம் சுமத்தினார். கைதடியில் அமைந்துள்ள மாகாணசபைக் கட்டடத்தில் இன்று நடைபெற்ற 56ஆவது கூட்டத் தொடரில் முல்லைத்தீவு மீனவர்களின் உரிமைகளை வலியுறுத்தி பிரேரணை ஒன்றினைச் சமர்ப்பித்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் கடல் தொழில் தொடர்பில் கடந்த ஜூன் முதலாம் தி…
-
- 0 replies
- 267 views
-
-
இலங்கை பிரஜைகளுக்கு அகதி அந்தஸ்தை வழங்கும் நடவடிக்கையில் மேலும் பல கடுமையான கொள்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தற்போது இலங்கையின் களநிலவரத்தில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். சுவிஸ் இன்போ.சிஎச் என்ற இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. சுவிஸின் குடிவரவு செயலகத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இலங்கையின் மனித உரிமை நிலவரங்களில் பாரிய குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன சுதந்திரமாக கருத்துக்களை வெளிப்படுத்தல் என்பது இதற்கு ஒரு உதாரணமாகும். எனவே ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ம…
-
- 1 reply
- 396 views
-
-
மாகாண அரசே ! நீ அஞ்சுவதும் , அடிபணிவதும் , யாருக்காக ? எதற்காக ? இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டால் தமிழக முதலமைச்சர் உடனே இந்திய பிரதமருக்கு மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி கடிதம் எழுகிறார். ஆனால் வடமாகாண சபை வடமாகாண மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் இதுவரை என்ன காத்திரமான நடவடிக்கை எடுத்து உள்ளது என வடமாகாண மீனவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்திய மற்றும் உள்ளூர் இழுவை படகுகளை கட்டுபடுத்த கோரி வடமாகாண சபை முன்பாக வடமாகாண மீனவர்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றினை செவ்வாய்க்கிழமை முன்ன்டுத்து இருந்தனர். அந்த போராட்டத்தின் போதே மீனவர்கள் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பி இருந்…
-
- 0 replies
- 428 views
-
-
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் விமானப் பயணங்களுக்கான நிலுவைப் பணத்தை மர்ம நபர் ஒருவர் செலுத்தியுள்ளார். பசில் அமைச்சராக இருந்த காலத்தில் மேற்கொண்ட உள்ளக பயணங்களுக்கான கட்டண நிலுவையை சிறிபால அமரசிங்க என்ற மர்ம நபர் செலுத்தியுள்ளார் என பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சுமார் 3.4 மில்லியன் ரூபா நிலுவைப் பணம் இவ்வாறு இலங்கை விமானப்படைக்கு செலுத்தப்பட்டுள்ளது. அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பசில், உலங்கு வானூர்தி மூலம் மேற்கொண்ட பயணங்களுக்கான கட்டண நிலுவை இவ்வாறு வேறு நபரினால் செலுத்தப்பட்டுள்ளது. கட்டண நிலுவை செலுத்தப்படாமை குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி…
-
- 1 reply
- 311 views
-
-
இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நீடித்த போரை முடித்து வைத்தவர் மஹிந்த ராஜபக்அச அல்ல, முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவே போரை முடிவுக்குக் கொண்டுவந்ததைக்கு பிரதான காரணம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சந்திரிக்கா பண்டாரநாயக்க, டி.பி.விஜயதுங்க, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் யுத்தத்தின் பெரும்பாலான பகுதியை நிறைவுசெய்திருந்தனர். முல்லைத்தீவு காட்டில் குறைந்தளவு விடுதலைப் புலி உறுப்பினர்களே இருந்தனர். அவர்களையும் அழித்து சரத் பொன்சேகாவே யுத்தத்தை வெற்றியடையச் செய்தவர் என்றும் அமைச்சர் மங்கள தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=161370&category=TamilN…
-
- 0 replies
- 475 views
-
-
பாதுகாப்பற்ற ரயில் கடவை காப்பாளர்கள் வவுனியா ரயில் நிலைய வளாகத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது ஊதியத்தை அதிகரிக்குமாறு கூறியும், நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரியும் நாடு பூராகவுமுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவை காப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி வவுனியாவில் அந்த சேவையில் உள்ளவர்களும் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். நாளொன்றுக்கு வழங்கப்படும் 250 ரூபா சம்பளம் போதுமானதல்ல என்று கூறி ரயில் கடவை காப்பாளர்கள் ஆரம்பித்துள்ள போராட்டம் காரணமாக பெரும்பாலான பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் பொலிஸாரும் ரயில்வே திணைக்கள ஊழியர்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 501 views
-
-
இன்று கட்சியை தடை செய்தால் நாளை ஆயுதம் ஏந்துவோம்' என மக்கள் விடுதலை முன்னணியின் தென்மாகாணசபை உறுப்பினர் நலின் ஹேவாகே எச்சரித்துள்ளார். தென் மாகாணசபை கூட்டம் இன்று இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=161364&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 219 views
-
-
தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைத்து, விவசாய கல்லூரிக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாமென வலியுறுத்தி, வவுனியா விவசாய கல்லூரி மாணவர்கள் இன்று விவசாய கல்லூரிக்கு முன்பாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘எம் தலைமைகளே எமது கல்லூரியை பாதுகாத்துத் தாருங்கள்’, ‘கற்பதற்கான தகுந்த சூழல் வேண்டும்’, ‘வயல்களின் முடக்கம் வறுமையின் தொடக்கம்’, ‘பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்திற்கு பொருத்தமற்றது’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை அவர்கள் தாங்கியிருந்தனர். தமது கோரிக்கை தொடர்பில் உரிய தலைமைகள் சரியான தீர்மானத்தை எடுக்கவேண்டுமென வலியுறுத்திய விவசாய கல்லூரி மாணவர்கள், வட மாகாணத்தில் உள்ள ஒரேயொரு விவசாய கல்லூரியையும் இல்லாமல் செய்துவிட…
-
- 9 replies
- 334 views
-
-
எட்கா ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது : பிரதமர் இந்தியாவுடனான எட்கா ஒப்பந்த மிகவும் முக்கியமானது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/8871
-
- 0 replies
- 234 views
-
-
அடுத்து யார் கைது செய்யப்படபோகின்றார் என்பதனை கூட்டு எதிரணியே முன்வந்து கூறுகிறது : ஐ.தே.க. (எம்.ஆர்.எம்.வஸீம்) மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதாக மக்கள் தெரிவித்துவந்தனர். அத்தடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இருப்பவர்களும் ஊடகங்களுக்க முன் வந்து முடிந்தால் கைதுசெய்யுங்கள் என்று அரசாங்கத்துக்கு சவால்விட்டு செல்கின்றனர். என்றாலும் அரசாங்கம் சட்டத்தின் அடிப்படையிலேயே எதையும் மேற்கொள்ளும். அதன் அடிப்படையிலேயே தனியார் நிறுவனத்துடன் கொடுக்கல் வாங்களின்போது இடம்பெற்ற நிதிமோசடி தொடர்பில் நாமல் ராஜபக்ஷ் கைதுசெய்யப்பட்டுள்ளார் என என ஐக்கிய தேசியக் கட…
-
- 0 replies
- 293 views
-
-
கிழக்கு பல்கலையில் இன்று (12) நண்பகல் சிங்கள மாணவர்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. கடந்த தினங்களில் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளமையை கண்டித்தும் கைது செய்யப்பட்ட மாவணவனை உடன் விடுதலை செய்யக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தும் பல்கலையில் அதிக பெரும்பான்மையைக் கொண்ட தமிழ் மாணவர்கள் கலந்துகொள்ளாத நிலையில் பல்கலையின் மாணவர்களுக்கு பொறுப்பான மாணவர்களைத் தவிர தமிழ் மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பதுடன்சிங்கள மாணவர்களினால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கிழக்கு பல்கலைகழகத்தில் கடந்த காலங்…
-
- 0 replies
- 240 views
-
-
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான அங்கீகாரம் நாட்டின் அரசியல் சட்டத்தில் இருப்பதாகவும், புதிய அரசியல் அமைப்பிலும் இது பற்றிய விடயங்கள் உள்ளதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மனிதர்களான அனைவருக்கும் உணர்ச்சிகள் உள்ளன. அவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மரியாதை கொடுக்கவேண்டும். ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினர் பொய்ப் பிரச்சாரங்களை பரப்பி வருகின்றனர் என கூறினார். இது நாட்டிற்கே தீ வைக்கும் முயற்சி எனவும் குற்றம் சமத்தினார். ஓரினச்சேர்க்கைக்கு அரசியல் அமைப்பி…
-
- 0 replies
- 297 views
-
-
தனிப்பட்ட பயணமா இலங்கை வந்துள்ள கனடாவின் லிபரல் கட்சியின் ஸ்காபரோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கெரி ஆனந்தசங்கரி நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்கட்சித் தலவைர் இரா.சம்பந்தனை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பை அடுத்து கருத்து வெளியிட்ட அவர், யுத்தக் குற்றங்களை விசாரிப்பதற்கான உள்ளக நீதிமன்ற விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கப்பட வேண்டியது அவசியம் என்றும் இதுவே கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=161334&category=TamilNews&lang…
-
- 0 replies
- 298 views
-
-
விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் அரசாங்கத்தின் எந்தவொரு பதவியையும் வகிக்கப் போவதில்லை: அர்ஜூன் மகேந்திரன் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் அரசாங்கத்தின் எந்தவொரு பதவியையும் வகிக்கப்போவதில்லை என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி விற்பனை தொடர்பில் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடா்பிலான விசாரணைகள் பூர்த்தியாகி குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரையில் எந்தவொரு அரசாங்கத்தின் பதவியையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கோப்க…
-
- 1 reply
- 206 views
-
-
யாழ் பண்ணைப் பகுதியில் விபத்து : பெண்ணொருவர் உயிரிழப்பு யாழ் பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, நேற்று திங்கட்கிழமை மதியம் யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த வான் ஒன்று பண்ணைப் பாலப் பகுதியில் உள்ள சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாரதி நித்திரையானதன் காரணத்தால், அருகில் உள்ள மின்சார கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ச…
-
- 1 reply
- 292 views
-
-
‘அரசியல்வாதி’ என்ற சொல்லை மக்கள் வெறுக்கும் நிலை : ஜனாதிபதி விருப்பு வாக்கு முறைமை நாட்டில் அரசியல் முறைமையை சீர்குலைத்தது மட்டுமன்றி அரசியல்வாதி என்ற சொல்லை மக்கள் வெறுத்து நிராகரிக்கும் நிலைக்கு தள்ளிவிட்டது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அதிகாரத்தைப் பலப்படுத்தி பணத்தை சம்பாதிப்பதற்கு முதலிடம் கொடுக்கும் கொள்கை இன்று அரசியல்வாதிகளிடம் தலைதூக்கியுள்ளதாவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பிலியந்தலை நகர மண்டபத்தில் இடம்பெற்ற சோமவீர சந்திர சிறியின் 45 ஆவது வருடாந்த நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். http://www.virakesari.lk/article/8861
-
- 0 replies
- 800 views
-
-
நிஷா பிஸ்வால் வந்துவிட்டார் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால், நாட்டை வந்தடைந்துள்ளார். பங்களாதேஷ் டாக்கா நகரத்திலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான MJ – 502 விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று பிற்பகல் நாட்டை வந்தடைந்தார். அரசாங்கத் தலைவர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள் ஆகியோரைச் சந்திக்கவுள்ள பிஷ்வால், இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ஜனநாயக ஆட்சி, நல்லிணக்கம் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/176847/ந-ஷ-ப-ஸ-வ-ல-வந-த-வ-ட-ட-ர-#sthash.JdtfxFBS.dpuf
-
- 0 replies
- 866 views
-
-
திருகோணமலை, கிளிவெட்டி – குமாரபுரம் பகுதியில் 1996ஆம் ஆண்டில் 26 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, 10ஆவது நாளாக நேற்று (11), அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில், ஜூரிகள் முன்னிலையில் இடம்பெற்றது. வீரசாமி காளிமுத்து (வயது 60) என்பவர் அங்கு சாட்சியமளித்துள்ளார். 16 வயதான பெண் பிள்ளை, கடைக்குள் இருந்தார். அவரைக்கண்ட இராணுவத்தினர், கடைக்கு அருகிலிருந்த பாழடைந்த பால்சேகரிப்பு நிலையக் கட்டடத்துக்குள் கொண்டு சென்று, வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். அது, எமக்கு உடன் தெரியாது, மறுநாள் காலை வந்து பார்த்தபோது, குறித்த இளம்பிள்ளையின் உடல், பனையோலையால் மூடப்பட்டிருந்தது' என கூறினார். அவர் தொடர்ந்தும் சாட்சியளிக்கையில், நான், எமது கிராமத்த…
-
- 0 replies
- 290 views
-
-
நாமல் என்ன செய்கிறார்: அம்மா கண்ணீர் வெலிக்கடை சிறைச்சாலையில், சிறைவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலையில் என்ன என்ன செய்கிறார் என்று, அவரை பார்த்துவிட்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும தெரிவித்தார். அங்குள்ள சிறை கைதிகளுக்கு அவர், யோகாசனம் கற்றுக்கொடுக்கின்றார் என்றும் டலஸ் எம்.பி தெரிவித்தார். அதேபோல, அவர் சிறைச்சாலையில் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றார் என்றும் கூறினார். இதேவேளை, நாமல் ராஜபக்ஷவை தன்னுடைய தாய், ஷிரந்தி ராஜபக்ஷ, சகோதாரர்கள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்;வையிட்டுள்ளனர். நாமலை பார்த்த தாய், கண்ணீர்விட்டு அழுதுவிட்டார் என்று, அவருடன் ச…
-
- 1 reply
- 1.8k views
-
-
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்செயல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மாணவன் செந்தூரனின் பிணை மனுவை நீதிபதி ம.இளஞ்செழியன் நிராகரித்தார். அத்துடன் அவரை சிறையில் இருந்தவாறு ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுமாறும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார். குறித்த மாணவன் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருப்பதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு யாழ். மேல் நீதிமன்றுக்கு விடுக்கப்பட்ட விண்ணப்பம் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போதே நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவைப் பிறப்பித்தார். http://malarum.com/article/tam/2016/07/11/14997/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0…
-
- 1 reply
- 385 views
-
-
இந்திய மீனவர்கள் 16 பேர் மீண்டும் கைது பருத்தித்துறை வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 மீனவர் களை இலங்கை கடற்படையினர் நேற்று (11) கைதுசெய்துள்ளனர். குறித்த கைதுசெய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் நாகை மாவட்டத்தினைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்படுகின்றது. இவர்களிடமிருந்து இரண்டு மீன்பிடி படகுகள் மீட்கப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று அவர்களுடைய பதிவுகளை மேற்கொண்ட பின்னர் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள…
-
- 0 replies
- 817 views
-
-
கோட்டாபயவின் இராணுவ பாதுகாப்பு குறைப்பு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இராணுவ பாதுகாப்பின் ஒரு பகுதி இன்று செவ்வாய்க்கிழமை விலக்கிகொள்ளப்பட்டுள்ளது. விலக்கி கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்குப் பதிலாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இதேவேளை, தனக்கு வழங்கப்பட்ட இராணுவ பாதுகாப்பை திருப்பப்பெற வேண்டாம் என்று கோட்டாபய, முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தார். எவ்வாறாயினும், நபரொருவரின் பாதுகாப்புக்கு யாரை பயன்படுத்துவது என்பது குறித்து பாதுகாப்பு சபைதான் தீர்மானிக்கும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது. - See more at: http://www.tamilmirror.lk/176829/க-ட-ட-பயவ-…
-
- 0 replies
- 830 views
-
-
யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமான கலாசார மண்டபம் அமைக்கும் வேலைத்திட்டம் 2 மாதங்களில் ஆரம் பிக்கப்படவுள்ளதாக யாழ் இந்திய துணைத்தூதுவர் அ.நடராஜன் தெரிவித்துள்ளார். அகஜல இலங்கை கம்பன்கழகம் நடாததும் ஸ்ரீராம நாம கானாமிர்தம் இசை வேள்வி இசைப்பேரரங்கின் இறுதி நிகழ்வு நேற்றைய தினம் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், யாழ் மாவட்டத்தில் கலை கலாச்சராத்தை வளர்ப்பதற்கு பாடுபடும் ஏராளமானவர்களை பார்த்தால் ஆர்ச்சரியமாக உள்ளது. யாழ்ப்பாணம் என்பது வடமாகாணத்தின் தலைநகர் மட்டுமல்ல எமது தாய் மொழியான தமிழ் மொழியின் தலைநகரம் என்று தான் கூற முடியும். கலை, ஆண்மீகம், கலாச…
-
- 0 replies
- 208 views
-