Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பருத்தித்துறையில் 45 கிலோகிராம் கஞ்சா மீட்பு -செல்வநாயகம் கபிலன் பருத்தித்துறை நாவலடிப் பகுதியிலுள்ள வீடொன்றில் 45 கிலோகிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை, நேற்று திங்கட்கிழமை (04) இரவு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட குற்றப்புலனாய்வுப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணம், குருநகர் - சவக்காட்டு சந்திப்பகுதியில் மேற்படி நபர் கஞ்சா பரிமாறுவதாக விசேட குற்றப் புலனாய்வு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது. சம்பவ இடத்துக்குச் சிவில் உடையில் சென்ற பொலிஸார், தப்பியோட முயன்ற சந்தேகநபரைக் கையும் மெய்யுமாகப் பிடித்திருந்தனர். அத்துடன், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பரு…

    • 9 replies
    • 595 views
  2. சீன வெளியுறவுஅமைச்சர் நாளை இலங்கை விஜயம்! சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். சீன வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த விஜயம் இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை இலங்கை வரும் சீன வெளியுறவு அமைச்சர் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவை சந்திப்பதுடன், பிரதமர் மற்றும் ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளார். இதேவேளை இவரின் விஜயம் பெரும்பாலும் போட்சிட்டியின் மீள் ஆரம்பம் தொடர்பிலானதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்தாண்டு இரண்டாவது முறையாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்…

  3. முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹென்பிட்டி பொலிஸ் நிலைய முன்னாள் குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர், ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலையுடன் ஆரம்பம் முதல் தொடர்பு பட்டுள்ளார்களா என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்பட உள்ளது. தாஜூடின் கொலை தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விசாரணைகளில் பங்கேற்ற அரச தரப்பு சட்டத்தரணி டிலான் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.படுகொலை சூழ்ச்சித் திட்டத்தின் ஆரம்பம் முதலே இந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தொடர்புபட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. சந்தேக நபர்கள் இருவரும் கொலையின் பிரதான சந்தே…

    • 3 replies
    • 685 views
  4. பூந்தோட்டம் நலன்புரி முகாமிலுள்ள குடும்பங்களுக்கு புளியங்குளத்தில் வீடுகள் அமைக்க காணி கையளிப்பு inShare வவுனியா – புளியங்குளத்தில் வனப்பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான 40 ஏக்கர் காணி, பூந்தோட்ட முகாமில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்றத்திற்காக அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் நீண்டகாலமாக வசித்துவரும் மக்களின் நிலை தொடர்பில் மீண்டும் சிந்தியுங்கள் செயற்றிட்டத்தினூடாக நியூஸ்பெஸ்ட் அண்மையில் வெளிக்கொணர்ந்திருந்தது. நியூஸ்பெஸ்ட் மீண்டும் சிந்தியுங்கள் செயற்றிட்டத்தினை முன்னெடுப்பதற்காக கடந்த…

  5. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் நேற்று மாலை அவுங்கலவில பகுதியில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த 7 பேரின் கட்சி உறுப்புரிமைகளை நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த ராஜபக்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, குமார வெல்கம, பந்துல குணவர்த்தன, டலஸ் அழகப்பெரும, ரோஹித அபேகுணவர்தன, பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட ஏழு பேரையே கட்சியில் இருந்த நீக்குவத…

  6. பழைய தலைவர் ஆரம்பித்த வேலையை புதிய தலைவர் வந்து திறக்கும் நிலையே உருவாகிவருவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு நீதிமன்றிற்கு கொண்டுவரப்பட்ட அவர் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லும்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் மக்களின் அதிகளவான வாக்குகளைப்பெற்றவர் புதிதாக நிர்மாணித்தே திறக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் அதிகளான வாக்குகளைப்பெற்றவர் முன்னாள் ஜனாதிபதி ஆரம்பித்த வேலைத்திட்டத்தினை திறந்துவைக்க வருவதாகவும் இதற்கு மட்…

  7. கூட்டு எதிர்க்கட்சியின் நிழல் அமைச்சரவை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிழல் அமைச்சரவையில் பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதுடன் புத்த சாசன,மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, கல்வி அமைச்சராக டளஸ் அழகபெரும, நிதி அமைச்சராக பந்துல குணவர்தன, வெளிவிவகார அமைச்சராக நாமல் ராஜபக்ச, பெருந்தெருக்கள் அமைச்சராக சாமல் ராஜபக்ச, உள்ளூராட்சிமற்றும் மாநகர சபை அமைச்சராக ரஞ்சித் டி சொய்சா, கப்பல் மற்றும் கடற்துறை அமைச்சராக குமார் வெல்கம, தொழிலாளர்அமைச்சராக காமினி லொக்குகே மற்றும் கிராமிய கைத்தொழில் அமைச்சராக எஸ்.எம்.சந்ரசேன நியமிக்கப்பட்டுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?…

  8. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தால் உருவாக்கப்பட்ட தேக்கு மரக்காடுகள் வனவள பாதுகாப்புத் திணைக்களத்தால் அழிக்கப்படுகின்றன. அடுத்த சந்ததியினரின் காதுகளுக்கு எமது வரலாற்றைக் கொண்டு செல்வதற்காவது இந்தக் காடுகளைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ஒட்டுசுட்டான் மக்கள் கோரிக்கை விடுத்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட முல்லைத்தீவு - மாங்குளம் வீதியில், 9ம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ளதேக்கு மரக்காடுகள் தற்போது வேகமாக அழிக்கப்படுகின்றன. இது தொடர்பில் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்ததாவது, இந்த மரங்கள் ஏன் அழிக்கப்படுகின்றன, எதற்காக அழிக்கப்படுகின்றன என்பது தெரியவில்லை. தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றன…

    • 0 replies
    • 352 views
  9. அடிப்படைவாத முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு -குமுறுகிறார் ஞானசார தேரர் தற்போது ஆதரவற்றவர்களாக காணப்படுவதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த தேரர்: நாட்டில் தற்போழுது அடிப்படைவாத முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. பல வழிகளில் அவர்கள் தமது திட்டங்களை முன்னெடுத்துத் செல்கின்றனர். இது தொடர்பில் நாம் கதைத்தால் இனவாதம் என்கின்றனர். இதற்கு பொறுப்புக்கூறவேண்டிய அரசியல் தலைவர்க…

  10. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமையை பறிப்பதற்கு கட்சியின் உயர்மட்டம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போஷகர்களில் ஒருவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நேற்றைய தினம் தென்பகுதி கரையோர பிரதேசமான அஹுங்கல்லயில் நடைபெற்ற கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட கூட்டமொன்றிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கவிடம் கேட்டபோது, நே…

  11. போதைவஸ்து கடத்தல் குற்றம் புரிவோருக்கு அதிகூடிய தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். 39 கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு தொடர்பான வழக்கு விசாரணையின்போதே இந்த எச்சரிக்கையை நீதிபதி இளஞ்செழியன் விடுத்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- மிகவும் சொற்ப அளவு என்று கருதப்படுகின்ற 2 கிராம் ஹெரோயின், மோபின், கொக்கெயின் போன்ற போதைப் பொருளை ஒருவர் தனது உடைமையில் வைத்திருந்தால் அல்லது விற்பனை செய்தால் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயள் தண்டனை விதிக்க…

  12. பாசிக்குடா மீனவர்கள் வெளியேற்றப்படுவார்களாயின் த.தே.கூட்டமைப்பு பாரிய நடவடிக்கை எடுக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்குடா பகுதிக்கு சொந்தமான பாசிக்குடா கடற்கரை காணியை அபரிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரிடம் நேற்று வினாவிய போது அவர் மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், மீனவர்கள் அதிகமாக வாழும் பிரதேசமான பாசிக்குடா கடற்கரை காணியை அரசாங்கம் அபகரிக்க போவதாக மீனவர்கள் தன்னிடம் கூறியதனால், இந்த விடயம் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவர் கவனத்திற்கு கொண்டுவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com/statements/01/110252

    • 0 replies
    • 278 views
  13. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மோதல் ; மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் பத்து மாணவர்களும் ஒரு ஊழியருமே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேராதனைப் பல்கலைக்கழக பகுதியில் பதற்றநிலை நிலவுவதாகவும் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/8645

  14. 100 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது கற்பிட்டி - கண்டக்குடா பகுதியில் சுமார் நூறு கிலோகிராம் கேரளா கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர்கள் இருவரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு இன்று (07) அதிகாலை சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் தென்னிந்தியாவிலிருந்து கேரள கஞ்சாவினை கடத்தி கொழும்பு மற்றும் கட்பிட்டி போன்ற பகுதிகளுக்கு விநியோகம் செய்துவருகின்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்களை இன்று கற்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். …

  15. DIMO - மொரட்டுவை பல்கலைக்கழகம் இணைந்து Formula Student 2016 பந்தையக் காரை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளன இலங்கையிலுள்ள ஒரு முன்னணி வாகன விற்பனை நிறுவனமான Diesel & Motor Engineering PLC (DIMO), மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இயந்திர பொறியியல் பீடத்தின் மாணவர்களுடன் இணைந்து மாணவர்களுக்காக உலகில் இடம்பெறுகின்ற மிகப் பாரிய மோட்டார் விளையாட்டுப் போட்டியான “Formula Student 2016” நிகழ்வில் அப்பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் பங்குபற்றுவதற்காக வடிவமைத்துள்ள D-Mora P1 என்ற பந்தயக்காரை அறிமுகப்படுத்தியுள்ளது. Formula பந்தயத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்ற கனவைச் சுமக்கின்ற எந்தவொரு பந்தய வீரருக்கும் அல்லது வார இறுதியில் பந்தயத்திடலில் பந்தயத்தில் ஈடுபட விர…

  16. இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வீமன்காமம் பகுதியில் தற்போது மக்கள் மீள் குடியேற்றத்திற்கு கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந் நிலையில் அங்கு தமது காணிகளை துப்பரவு செய்யச் சென்ற மக்கள் தமது குல தெய்வமான பிள்ளையார் ஆலயத்தை காணாது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்கள். குறிப்பாக குறிப்பிட்ட பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் தற்போதும் அமைந்துள்ளது. ஆனாலும் கூட இந்தப் பகுதி வீமன்காமம் பகுதியின் வடக்குப் புறத்தில் புகையிரதப் பாதைக்கு அருகாமையில் உயர் பாதுகாப்பு வலய எல்லையில் அமைந்துள்ளன. வீமன்காமம் வடக்கு தெற்கு பகுதியில் தமது காணிகளை துப்பரவு செய்யும் மக்கள் தமது காணிகளுக்கு நேர் எதிரே காணப்பட்ட குமாரத்தி பள்ளத்தில் அமைந்து இருந்த…

    • 10 replies
    • 1.1k views
  17. அண்மையில் இடம்பெற்ற சாவாவ இராணுவ முகாம் வெடிப்பு சம்பவத்தினால் சுமார் 1800 வீடுகள் சேதமடைந்திருப்பதாக மதிப்பீட்டு அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதில் முற்றாக வீடுகள் அழிவடைந்த 401 குடும்பங்களுக்கு 50,000ரூபாய்அடிப்படையில் மாதாந்த வாடகை வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 150குடும்பங்களுக்கு குறித்த நிவாரண பணம் வழங்கப்படவுள்ளது. மேலும், 850 வீட்டு உரிமையாளர்களுக்கு 50,000ரூபாய் மாதாந்த வாடகை வழங்கதீர்மானித்துள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக வழங்குவதற்கு அமைச்சரவையின்அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.tamilwin.com/statements/01/110181

  18. தென்சீனக் கடல் விவகாரம், அமைதியான முறையில், ஆக்கபூர்வமான, அர்த்தமுள்ள பேச்சுக்களின் மூலம் தீர்க்கப்படுவதே ஒரு வழிமுறை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சீன செய்தி நிறுவனமான சின்ஹுவாவுக்கு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மேலதிக ஊடகச் செயலர் சமன் அதாவுடஹெட்டி, அளித்துள்ள செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். தென்சீனக் கடல் விவகாரத்தில் சில நாடுகளுக்கு இடையில் பிரச்சினைகளும், கருத்து வேறுபாடுகளும் இருப்பதை அறிவோம். இந்தப் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான பேச்சுக்களின் மூலம், தீர்வு காண முடியும் என்று நம்புகிறோம். பிராந்தியத்தில் அமைதியையும், உறுதிப்பாட்டையும் பேணுவதற்கு சீனா உறுதி பூண்டுள்ளது என்பதை எல்லா நாடுகளும் நம்புகின்றன.” என்றும் அவர…

  19. 2018ஆம் ஆண்டுக்குள், இராணுவமய சூழலில் இருந்து சிறிலங்கா முற்றாக விடுபட்டு விடும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர், ‘2018ஆம் ஆண்டுக்குள் இராணுவமய நீக்க செயல்முறைகள் நிறைவடைந்து விடும் என்று நம்புகிறோம். இது வடக்கு கிழக்கில் மாத்திரமன்றி, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் கூட பொருத்தமானது. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இராணுவ முகாம்களை அமைத்து, நாட்டை இராணுவமய சூழலுக்குள் கொண்டு வந்திருந்தது. புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் அந்த நிலையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக, வடக்க…

  20. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நடந்து முடிந்துள்ள 32வது கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் அல் ஹுசைன் வெளியிட்ட வாய்மொழி மூல அறிக்கையில் யாழ் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றிற்கு முக்கிய இடமளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 10ம் திகதி கிளிநொச்சி மாவட்டம் விசுவமடு மீள் குடியேற்றப் பிரதேசத்தில் இரண்டு தமிழ்ப் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 4 இராணுவத்தினருக்கு எதிராக யாழ் மேல் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கு விசாரணையில் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தண்டனைத் தீர்ப்பு வழங்கியிருந்தார். குறித்த வழக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் கவனத்…

    • 0 replies
    • 282 views
  21. ஐ.எஸ். தீவிரவாதிகளினால் இலங்கைக்கு ஆபத்து கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. அண்மையில் பங்களாதேஸில் தாக்குதல்கள் இடம்பெற்ற போதிலும், இலங்கைக்கு ஆபத்து ஏற்படக்கூடிய அபாயம் கிடையாது என தெரிவித்துள்ளது. உலகின் சில பகுதிகளில் இடம்பெற்று வரும் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து வருவதாகவும், இதுவரையில் ஐ.எஸ். தீவிரவாதிகளினால் இலங்கைக்கு ஆபத்து கிடையாது எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=161012&category=TamilNews&lan…

  22. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆலோசனைக்கு அமைய அரசாங்கத்தினால் அமைக்க உத்தேசித்துள்ள காணாமல்போனோர் பணியகத்தால் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இது குறித்து தெளிவுபடுத்திய ஜி.எல்.பிரீஸ்- “காணாமல்போனோருக்கான பணியகத்திற்கு நேரடியாக பெறுந்தொகையான நிதியை வெளிநாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் வகையிலேயே உத்தேச சட்டமூலம் அமைந்துள்ளது. இவை நன்கொடையல்ல. ஏதோவொரு பலனை எதிர்பார்த்தே இந்த நிதிகள் வழங்கப்படுகின்றன. அதமாத்திரமன்றி அந்த அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பொலிஸாருக்கு தாம் சோதனை செய…

  23.  இந்திய மீனவர்கள் 16 பேர் கைது -செல்வநாயகம் கபிலன் சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பினுள் மூன்று விசைப்படகுகளுடன் நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்களை காங்கேசன்துறை மற்றும் தலைமன்னார் கடற்படையினர் வியாழக்கிழமை (07) கைது செய்துள்ளதாக கடற்படை ஊடகபேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார். கைதான அனைவரும் தமிழ்நாடு மாநிலம் இராமேஸ்வரம் பகுதியினை சேர்ந்த மீனவர்கள் என அவர் உறுதிப்படுத்தினார். 'தலைமன்னாருக்கு மேற்கே 2 படகுகளுடன் நுழைந்து மீன்பிடித்த 11 மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அத்துடன்,…

  24. பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர் வெட்டிப் படுகொலை : மூதூரில் பயங்கரம், மூவர் கைது திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் ஆஸாத் நகர் மீரா தைக்கா பள்ளிவாசலில் காலை தொழுகையில் ஈடுபட்டிருந்தவர் மூவரால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக மூதுார் பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 6.08 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நேற்று நோன்புப் பெருநாள்நடைபெற்ற நிலையில், இன்று காலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவரே வாளால் வெட்டி படுகொலைசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் சம்பந்தபட்ட மூவரை மூதுார் பொலிசார் கைதுசெய்து விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர். வாள்வெட்டுச் …

  25. கொத்தணிக் குண்டு தொடர்பாக எனது கருத்து சரியானதே-பரணகம. கொத்தணிக் குண்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுத் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து, சட்டரீதியான நிலைப்பாடே என்று காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். படையினர் போரில் கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தாலும் கூட, அது சட்டவிரோதமானது அல்ல என்றும், 2010ஆம் ஆண்டே, கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்யும் அனைத்துலக பிரகடனம் நடைமுறைக்கு வந்தது என்றும், மக்ஸ்வெல் பரணகம தெரிவித்திருந்தார். இவரது இந்தக் கருத்து அதிமேதாவித்தனத்தை வெளிப்படுத்தும் முயற்சி என்று கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.