ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
தனியார் கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை பாலியல் வதை, போதைப் பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் விற்பனை குற்றம் சாட்டப்படுகின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் உடனடியாக இழுத்து மூடப்படும். அந்த நிறுவனங்களின் பொறுப்பாளர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இத்தகைய வழக்கு விசாரணைகள் முடியும் வரையில் சம்பந்தப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். செவ்வாயன்று யாழ் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதைவஸ்து வழக்கு தொடர்பிலான ப…
-
- 1 reply
- 320 views
-
-
புலனாய்வுப் பிரிவினரால் முன்னாள் போராளிகள் இருவர் கைது முல்லை மாவட்டம் ஒட்டுசுட்டான் சிவநகரைச் சேர்ந்த கேதீஸ்வரன்சா - வித்திரி தம்பதியினரே பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது நேற்றிரவு 9.00 மணிக்கு மூன்று வாகனங்களில் வந்த இருபதுக்கும் மேற்பட்ட பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினராலேயே குறித்த குடும்பம் சுற்றிவளைக்கப்பட்டு இக்கைது இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டபோது குறித்த இடத்திற்கு பெண் பொலிசார் யாரும் வரவில்லை என்பதும் இவர்கள் இருவரும் முன்னாள் போராளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. …
-
- 2 replies
- 382 views
-
-
அண்மைய காலங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியிருந்த பீகொக் மாளிகையை முழுமையாக இடித்து விட தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பில் குடியேறுவதற்காக இந்த மாளிகையை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் அதன்பின்னர் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து மாளிகையை விற்க அதன் உரிமையாளரான வர்த்தகர் ஏ.எஸ்.பீ.லியனகே மறுத்திருந்தார். இந்நிலையில் பீகொக் மாளிகை இடித்து தரை மட்டமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த மாளிகையை கடந்த காலங்களில் 45 கோடிக்கு விற்பனை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் முன்னாள் ஜனாதிபதி இந்த மாளிகையை குடியேற தெரிவு செய்திருந்தார். எனினும் புதிய அரசாங்க…
-
- 0 replies
- 385 views
-
-
கண்டி மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவரின் புத்தகப் பையில் இருந்து மதுபான போத்தல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த மாணவனின் புத்தகப் பையில் இருந்த இரண்டு போத்தல்கள் கீழே விழுந்துள்ளது, பின்னர் உடனேயே பையை மூடுவதற்காக சிறுவன் முயற்சித்துள்ளான். இதை அவதானித்த சிறுவனின் ஆசிரியரான பிக்கு ஒருவர், உனது பையில் இரண்டு போத்தல்களா? ஏன் நீ இரண்டு போத்தல் நீரை பாடசாலைக்கு எடுத்துவந்தாய்? என கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர் போத்தல்களை நன்கு அவதானித்த பிக்கு, ஒரு போத்தலில் நீர் இருந்ததையும் மற்றைய போத்தலில் மதுபானம் இருந்ததையும் அவதானித்துள்ளார். குறித்த மாணவனிடம் பிக்கு விசாரணைகள் மேற்கொண்டுள்ளார், இதன் போது ப…
-
- 0 replies
- 217 views
-
-
வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கான வரி அறவிடுதலை அறிமுகப்படுத்தியது முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸவே என பிரதி ஊடகத்துறை அமைச்சர் கரு பரண விதாரன தெரிவித்தார். கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். அரசாங்கம் நாய்களுக்கு கூட வரி விதிக்கின்றது என பஸில் ராஜபக்ஸ நேற்று ஊடகங்களிடம் குற்றம் சுமத்தியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் போதே பிரதி ஊடக அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். மேலும், பஸில் ராஜபக்ஸ நாய்களின் கூண்டைப் பராமரிப்பதற்கு ஐந்து கடற்படையினரை முழுநேரப் பணியில் ஈடுபடுத்தியிருந்தார் எனவும், நாய்களுக்கான வரி அறவிடுதல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான முழுக் காரணமும் பஸில் ராஜபக்ஸவே …
-
- 0 replies
- 397 views
-
-
திருகோணமலையில் இருந்து மதவாச்சிக்கு புதிய தொடருந்து வழித்தடம் ஒன்றை உருவாக்குவதில், இந்தியா ஆர்வம் கொண்டிருப்பதாக, பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம நேற்று, சிறிலங்காவின் தொடருந்து வலையமைப்பை அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தினார். இந்தியாவின் தொடருந்து துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹாவுடன் நடத்திய பேச்சுக்களின் போது, சிறிலங்காவின் தொடருந்து பாதைகளின் சமிக்ஞை மற்றும் தொடர்பாடல் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுக்களில் இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் தொடருந்து துறை மூத்த அதி…
-
- 1 reply
- 493 views
-
-
முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவில் இடம்பெற்றதிருமண நிகழ்வொன்றின் போது எதிர்கால ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெற்ற திருமண வைபவம்ஒன்றில் கலந்து கொள்ள கோத்தபாய சென்றிருந்த வேளையில்,இங்கு 500 விருந்தினர்கள்கலந்து கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 24ம் திகதி இடம்பெற்ற குறித்த திருமண வைபவத்தின் போது திடீரென பிரமுகர்ஒருவர் தனது மனைவியுடன் இங்கு வருகைத் தந்துள்ளதாகவும், அவர் இலங்கையின்முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்றும், அவரே இலங்கையின் எதிர்கால ஜனாதிபதிஎன்றும் குறித்த விழாவின் நடுவே ஒலிவாங்கி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்அறிந்த வட்டாரங்…
-
- 0 replies
- 329 views
-
-
காதலித்து, பின்னர் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை அகதி பெண் ஒருவரை கழுத்தை அறுத்து கொலை செய்வதற்கு முயற்சித்த சம்பவம் ஒன்று தாரமங்கலம் அகதிகள் முகாமில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகேயுள்ள பவளத்தானூரில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. குறித்த முகாமில் ராஜா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு நிசாந்த் மற்றும் நிஷாந்தினி உள்ளிட்ட நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். நிஷாந்தினி வேலூரில் உள்ள காலணிகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் சந்திரசேகரன் மற்றும் நிஷாந்தினி இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து …
-
- 0 replies
- 405 views
-
-
விமானப்படை கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. குறித்த விமான நிலையத்தின் செயற்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகளை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை பொறுப்பேற்றுள்ளது. இது குறித்த கடந்த மே மாதம் 31ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. சிவில் விமானப் போக்குவரத்தை அபிவிருத்தி செய்யவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, விமான நிலையத்தின் ஓடுபாதை, 1400 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. விமானப்படையின் உதவியுடன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் இந்நடவடிக்…
-
- 0 replies
- 491 views
-
-
அரசுடன் இணைந்து செயற்பட எவர் அழைத்தாலும் நாங்கள் ஒருபோதும் அவர்களுடன் ஒத்துப்போகமாட்டோம் இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்துள்ளது ஜே.வி.பி. ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்துக்கொண்டு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வேன் என்று அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதுளையில் கூறியிருந்தார். இந்தக் கருத்துத் தொடர்பில் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கருத்து தெரிவிக்கையில், "இலக்கு இல்லாத பொருளாதாரக் கொள்கையில் இந்த அரசு பயணிக்கின்றது. பொது மக்கள் மீது வற் வரியை சுமத்தியுள்ளது. ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்கப்படும் எனவும், ஊழல் வாதிகளுடன் கூட்டு இல்லை எனவும் கூறி ஆட்சிக்குவந்த அரசு, இன்று ஊழல் வாதிகளுக்கு அமைச்சுப் பதவிகள…
-
- 0 replies
- 409 views
-
-
புலம்பெயர் சமூகத்தினைக் குறிவைக்கும் போலிகளின் நீட்சி பிரான்ஸில் அண்மையில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழாவில் சீமானின் 'நாம் தமிழர் கட்சி' கூடாரமொன்றை அமைத்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்ததாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தார். குறிப்பாக, உலகத் தமிழர்களின் நலனுக்காக 17 அமைப்புகளை உருவாக்கப் போவதாக, நாம் தமிழர் கட்சியினரால் அங்கு தெரிவிக்கப்பட்டதாகவும், தமிழகத் தேர்தல் அரசியலில் ஈடுபடும் கட்சியொன்று ஈழத் தமிழர்களிடத்தில் இவ்வாறு ஊடுருவியிருப்பதன் நோக்கம் உண்மையில் எவ்வகையானது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்ததும், தமிழீழ விடுதலைப் புல…
-
- 0 replies
- 497 views
-
-
மாணவனுக்கு அச்சுறுத்தல் விடுத்த ஆசிரியர்களுக்கு பிணை -செல்வநாயகம் கபிலன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பாடசாலை மாணவனுக்கு வைத்தியசாலையில் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் சாவகச்சேரி பொலிஸாரினால் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு ஆசிரியர்களும் தலா 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் செவ்வாய்க்கிழமை (05) அனுமதியளித்தார். அத்துடன், எதிர்வரும் 12ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்தார். 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்குமாறு கோ…
-
- 0 replies
- 375 views
-
-
கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தபட்டமை உறுதியாகியுள்ளது காணாமல் போனவர்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகமவின் கருத்துப்படி இறுதி யுத்தத்தின் போது கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை உறுதியாகியிருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார். 'கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தபட்டமைக்கு சாட்சிகள் எதுவும் இல்லை. ஆனாலும் மக்கள் வழங்கிய முறைப்பாடுகளில் இவை பற்றிக் கூறப்பட்டுள்ளன. கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டாலும் கூட சர்வதேச சட்டத்துக்கு அது முரணானது இல்லை' என்றும் பரணகம கூறியுள்ளார். அவருடைய கருத்துக்கள் மூலம் கொத்தணிக் குண்டுகள் இ…
-
- 0 replies
- 249 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கூட்டமைப்பு வேண்டுகோள் நீண்ட காலமாக விசாரணைகள் எதுவும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் மிக விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். கொழும்பு மெகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இன்று சந்தித்த அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளுக்காக பிரத்தியேக நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது, இந் நீதிமன்றத…
-
- 0 replies
- 208 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாந்தபுரம் கிராமத்தில் பாடசாலைக்குச் செல்லாத 21 சிறுவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (05) பிடிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராசாவின் ஆலோசனைக்கமைய, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்தின் செயற்படுத்தலுக்கமைய இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சிப் பொலிஸாரும் இதில் தங்கள் பங்களிப்பை வழங்கியிருந்தனர். சாந்தபுரம் மற்றும் அம்பாள்புரம் பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லாமல் இருந்துள்ளனர். இந்தத் விடயத்தை அறிந்த மாவட்டச் செயலாளர், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து, நீதிவானுடன் கலந்தாலோசித்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். …
-
- 0 replies
- 210 views
-
-
கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர் இருவர்களுக்கு விதிக்கபட்டுள்ள தற்காலிக வகுப்புத் தடையை விரைவாக நீக்க கோரி பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கிழக்கு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக குறித்த இரு மாணவ குழுக்களும் ஏட்டிக்குப் போட்டியான இரண்டு ஆர்ப்பாட்டங்களை கடந்த மே மாதம் 26ஆம் மற்றும் 27 ஆம் திகதிகளில் நடத்தியிருந்தன. கிழக்கு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களினால் மே 18ஆம் திகதி முள்ளிவாய்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வு தொடர்பான படங்களை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்திருந்த தமிழ் மாணவர் ஒருவர் மீது சிங்கள மாணவர்கள் சிலர் தாக்குதல் நடத்த…
-
- 0 replies
- 277 views
-
-
தமிழீழத் தேசியக் கொடி பட்டொளிவீச அமெரிக்காவில் தமிழர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை மற்றும் சமூக உடல்நல அமைச்சின் முன்னெடுப்பில் இப்போட்டிகள் இடம்பெற்றுள்ளன. நியு யோர்க்கில், Forest Park இல் இடம்பெற்ற இப்போட்டிகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களும் மக்களோடு மக்களாக பங்கெடுத்து வீரர்களை உற்சாகப்படுத்தினார். இதன் போது, சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்குமான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றிருந்தன. அத்துடன், தமிழீழத் தாயகத்தினை நினைவுருத்தும் வகையில் தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டு போட்டிகளும் இடம்பெற்றன. இதேவேளை, நாடுகடந்த தமி…
-
- 0 replies
- 599 views
-
-
இலங்கை படைகளுக்கு நவீன் ஆயுத தளபாடங்களை வழங்குவதற்கு ரஷ்யா முன்வந்துள்ளது. இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அலெக்சான்டர் கர்சாவா இதனை தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தேசிய நாள் அண்மையில் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதன் விளைவாகவே இவ்வாறு ஆயுதங்கள் வழங்கப்படவுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் முக்கியமான பல உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. அவற்றில் ரஷ்ய வடிவமைப்பிலான சில முன்னோடி ஆயுத தளபாடங்களை வழங்கும் உடன்படிக்கைகளும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 245 views
-
-
கரும்புலிகள் நினைவேந்தல் நினைவு நாள் பிரான்ஸ் தலைநகரான பாரிஸின் மக்ஸ்டொமிப் பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்ஸ், மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பொதுச்சுடரை பிரான்ஸ் தமிழர் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் நிதர்சன் ஏற்றிவைத்தார். தொடர்ந்து ஈகச்சுடரை 1999ஆம் ஆண்டு கொக்குத் தொடுவாயில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி மேஜர் கலைமகளின் சகோதரியும் 1989ம் ஆண்டு வீரச்சாவடைந்த கப்டன் ரூபனின் சகோதரியும் 1994ம் ஆண்டு பருத்தித்துறையில் வீரச்சாவடைந்த கடற்புலி வீரவேங்கை சுதாயினியின் சகோதரியும் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் தீபம் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்…
-
- 0 replies
- 248 views
-
-
மத்திய வங்கியின் புதிய ஆளுனரை நியமிக்க முன்னதாக அரசாங்கம் ஒன்றுக்கு பத்து தடவைகள் சிந்தனை செய்திருக்க வேண்டுமென முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில், மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியின் கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகள் குறித்து எவ்வித பிரச்சினைகளும் கிடையாது. எனினும் அவரது கடந்த காலம் தொடர்பிலும், நாடு எதிர்நோக்கியுள்ள ஆபத்தான நிலைமைகளை கருத்திற் கொண்டும் சரியான தீர்மானம் எடுத்திருக்க வேண்டும். மத்திய வங்கியின் ஆளுனர் பதவிக்கு அரசாங்க அதிகாரி ஒருவரை நியமித்திருக்க வேண்டும். நான் பிரதிநிதித்துவம் செய்த கடந…
-
- 0 replies
- 278 views
-
-
ஓமந்தையா? தாண்டிக்குளமா? -முதல்வருக்கெதிரான சம்பந்தனின் காய்நகர்த்தல் வட பகுதிக்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் நிர்மாணிப்பதா? தாண்டிக்குளத்தில் அமைப்பதா? என்ற பிரச்சினைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் வழங்கிய தீர்ப்பு வடக்கு மாகாண சபை எக்காலத்திலும் ஒன்றுபட்ட முடிவை எடுக்க கூடாது என்பதை உறுதி செய்துள்ளது. பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதே பொருத்துடையது என்று வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஏலவே கூறியுள்ளார். அதற்கான காரணங்களையும் அவர் தெளிவாக முன்வைத்திருந்தார். இந்நிலையில் …
-
- 1 reply
- 609 views
-
-
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று கொழும்பிலிருந்து யாழ்.சென்ற வடக்கு முதல்வர், திடீர் சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றார். அவருக்கு தொடர் சிகிச்சை அவசியமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்ததன் பிரகாரம், அவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=160920&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 257 views
-
-
முஸ்லிம்களுடன் போர் செய்வதற்கும் சிங்களவர்கள் தயாராகவே இருப்பதாக சூளுரைத்துள்ளது பொதுபல சேனா அமைப்பு.மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராக இருக்கின்ற நிலையில் அவர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புபட்டவரா என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகவும் பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினரான மாகல்கந்தே சுதந்ததேரர் தெரிவித்தார். பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை தற்கொலைத் தாக்குதல் நடத்தி கொலை செய்ய வேண்டும் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றியபோது கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அசாத் சாலியை கைது செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எ…
-
- 1 reply
- 461 views
-
-
கடந்த வருடம் இறுதி வரையில் ராஜபக்சர்கள் உட்பட அமைச்சர்கள் மற்றும் அவர்களின் பணியாளர்கள், அரசாங்க திணைக்களங்கள் மற்றும் மாவட்ட செயலகங்கள் ஆகிய 164 நிறுவனங்களில் பயன்டுத்தப்பட்டுள்ள வாகனங்களின் மொத்த பெறுமதி 7380 கோடி என தெரிய வந்துள்ளது. அவற்றில் 806 கோடி பெறுமதியான வாகனங்கள் ராஜபக்ச குடும்பத்தின் பயன்பாட்டிற்கு மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் முழு பெறுமதியான 164 நிறுவனங்களின் முழு பெறுமதியில் இருந்து 10.2% வீதம் ராஜபக்சர்களின் கீழ் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது ஜனாதிபதியின் வாகனம், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சரின் வாகனம், இராஜாங்க பாதுகாப்பு அமைச்சரின் வாகனம், துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரின் வாகனம், பொருளாதார அ…
-
- 0 replies
- 241 views
-
-
மட்டக்களப்பு வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு சொந்தமான காணியில் இரண்டு ஏக்கர் காணியை ஓட்டமாவாடி பிரதேச செயலகத்துக்கு வழங்குமாறு அனுப்பப்பட்டுள்ள கடிதம் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் மௌனம் சாதிப்பது ஏன் என மாவட்ட சிவில் அமைப்புக்கள் கேள்வி எழுப்யுபிள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் சிலர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு சொந்தான காணியில் இரண்டு ஏக்கர் காணியை ஓட்டமாவாடி பிரதேச செயலகத்துக்கு வழங்குமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளரினால் தேசிய கடதாசி கூட்டுத்தாபனதுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு தொழில் வழங்கக்கூடிய வாழைச்சேனை கடதாசி ஆலையை அபிவிருத்தி செய்யவேண்டிய அம…
-
- 0 replies
- 332 views
-