ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
ஒலிபெருக்கிகளைக் கட்டுப்படுத்துமாறு நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்து. தேசிய பரீட்சைகளாகிய புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த.உயர்தரப் பரீட்சை ஆகியன ஆகஸ்ட் மாதத்திலும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதத்திலும் நடைபெற உள்ளமையால், தம்மைத் தயார்ப்படுத்தும் மாணவர்களுக்கு அமைதியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் யாழ் குடாநாட்டில் உள்ள கோவில் திருவிழாக் கால ஒலிபெருக்கிகளைக் கட்டுப்படுத்துமாறு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதிபதி இளஞ்செழியன் அறிவித்துள்ளார். பரீட்சைகளுக்குத் தாயராகும் மாணவர்களின் க…
-
- 1 reply
- 291 views
-
-
பொதுச்சந்தையில் 3 கடைகள் எரிந்து நாசம் : 25 இலட்சத்திற்கு மேல் நஷ்டம் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி பொதுச் சந்தையில் இன்று நண்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் எரிந்து நாசமாகியுள்ளன. இச்சம்வத்தினால் சுமார் 25 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கடை உரிமையாளர் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். காத்தான்குடி பொதுச் சந்தையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பிரபல்யமான வர்த்தக நிலையமான அஸ்ரப் என்பவரின் பலசரக்கு கடைகளே இவ்வாறு எரிந்துள்ளன. தீ விபத்திற்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பொது மக்களின் உதவியுடன் ஏனைய கடைகளுக்கு தீ பரவாமல் கட்ட…
-
- 0 replies
- 390 views
-
-
காணாமல் போன மாணவர்கள் யாழ்பாணத்தில் கண்டுபிடிப்பு மாத்தளை நாவுல பகுதியில் காணமல் போனதாக கூறப்படும் இரண்டு மாணவர்கள் யாழ்பாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தரம் 8 மற்றும் 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் டி.எம் சசிந்த பண்டார மற்றும் எ.ஜி.எஸ்.எஸ். அம்பகஸ்பிட்டிய என்ற குறித்த மாணவர்களே காணமல் போயுள்ளனர். கடந்த 14 ஆம் திகதி குறித்த இருவரும் காணமல் போயுள்ள நிலையில் 15 ஆம் திகதி குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் நாவுல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனடிப்படையில் குறித்த மாணவர்கள் யாழ்பாணத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை மாணவர்கள் தொடர்பான தகவலை பொலிஸார் பெ…
-
- 0 replies
- 321 views
-
-
இலங்கையின் பாதுகாப்பு இந்தியாவின் நலன்களுடன் நேரடியாகத் தொடர்புபட்ட விடயம் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே. சின்ஹா, தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். "ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்ட பின்னர் இலங்கை - இந்திய உறவுகள் கடந்த காலங்களிலேயே கவனம் செலுத்தும் நிலையிலிருந்து விடுபட்டு முன்னோக்கி நகர்ந்துள்ளன. இந்த உறவுகள் வலுவானவையாக மாறியுள்ளதுடன், உயர்மட்ட ஈடுபாடுகளில் புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளன. 2015 ஜனவரிக்குப் பின் இரு நாடுகளைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளும் தலைவர்களும் பரஸ்பரம் பல விஜயங்களை மேற்கொண்டுள்ளனர். பலர் கருதுவதற்கு மாற…
-
- 2 replies
- 290 views
-
-
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களின் ஜனநாயகத்தை உறுதி செய்யும் நல்லாட்சி அரசாங்கம் என பிரகடனம் செய்யப்பட்ட போதிலும், உள்ளக அரசியல் ரீதியாக பல கோணங்களில் முறுகல் நிலைகள் தீவிரமடைந்துள்ளன. இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை தம்வசப்படுத்தும் நோக்கில் மும்முனைகளில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் …
-
- 0 replies
- 289 views
-
-
குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும்-பொன்சேகா! யாராக இருந்தாலும் அவர் குற்றம் செய்திருந்தால் தண்டிக்கப்படவேண்டும். யுத்தம் வெற்றிகொள்ளப்பட்ட காரணத்திற்காக யுத்த குற்றவாளிகள் சட்டத்தை மீற அனுமதிக்க முடியாது.’ என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பாதுகாப்பு என்றால் என்னவென்றே தெரியாத பொது எதிரணியினர், அரசியல் இலாபத்திற்காக தேசிய பாதுகாப்பு குறித்து பொய்யாக கூச்சலிடுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். சாலாவ இராணுவமுகாமின் ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்புச் சம்பவத்துடன் வெளிநாட்டுத் தொடர்பு இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்விதமான உண்மையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட…
-
- 1 reply
- 325 views
-
-
பொலிஸ்மா அதிபர் யாழிற்கு விஜயம்! பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர இன்று (வெள்ளிக்கிழமை) காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழில் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள சர்வதேச யோகா தின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ள நிலையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவதானம் செலுத்துவதற்காகவே பூஜித ஜெயசுந்தர விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.. அத்துடன் யாழில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான விசேட நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 1 reply
- 311 views
-
-
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என பிரான்ஸ் அறிவித்துள்ளது. இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் செக்குஹ் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘நல்லிணக்கம், நல்லாட்சி மற்றும் மனித உரிமை ஆகிய விடயங்களில் இலங்கை அரசு முன்னெடுக்கும் செயற்பாடுகளில் நாம் தெளிவாக இருக்கின்றோம். அதனாலேயே இலங்கையுடனான உறவுகளை பிரான்ஸ் மேலும் வலுப்படுத்திக் கொண்டது. இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகள் வெறும் தாள்களில் மட்டும் வரையறுக்கப்படாமல், நடைமுறை ரீதியிலும் அமுல்படுத்தப்பட வேண்டும். அத்துடன் இலங்கையின் அநுராதபுரம் போன்ற புராதன நகர அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 50 மில்லியன் யூர…
-
- 0 replies
- 302 views
-
-
கிளிநொச்சியில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை நிறுவனத்தின் அலுவலகத்தில் அங்கு இரவு வேலைகளில் ஈடுபடும் பணியாளர் ஒருவர் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு கிளிநொச்சியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, திருகோணமலையைச் சொந்த இடமாகக் கொண்ட சிறுமியொருவர் போரினால் தனது தாய் தந்தையரை இழந்த நிலையில் தனது பேத்தியாருடன் கிளிநொச்சியில் வசித்து வந்துள்ளார். அச்சிறுமியை உதயன் பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞன் ஒருவர் அவரது பேத்தியாருக்குத் தெரியாமல் பத்திரிகை நிறுவனத்திற்கு அழைத்து வந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். இ…
-
- 1 reply
- 529 views
-
-
வாகரை காயான்கேணியில் பௌத்த விகாரை அமைப்பதற்கான அனுமதியை அரசாங்க அதிபர் எவ்வாறு கோர முடியும் அது பௌத்த விகாரை அமைந்த இடமில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு புத்தசாசன அமைச்சுக்கு வாகரை காயான்கேணியில் பௌத்த விகாரை அமைப்பதற்கான அனுமதி கோரி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வாகரை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட காயான்கேணி பகுதியில் முன்னர் இராணுவம் குடியிருந்தபோது இராணுவம் தனது வழிபாட்டிற்காக சிறு புத்தர்சிலையை வைத்து வழிபாடு செய்து வந்தது. நல்லாட்சி என்று சொல்லப்படும…
-
- 2 replies
- 365 views
-
-
2016ம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையில் பொருளாதார வளர்ச்சி 5.5 வீதமாக அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டு முதல் காலாண்டில், 19,786,09 மில்லியன்ரூபாவாக இருந்த மொத்த தேசிய உற்பத்தி, 2016ம் ஆண்டு முதல் காலாண்டு காலத்தினுள் 20,880,24 மில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. இக்காலப்பகுதியினுள் முழு தொழில் மற்றும் பொருளாதார சேவைகள் நடவடிக்கைகள் முறையே 8.3 மற்றும் 4.9 ஆக விருத்தி வேகத்தை காட்டுவதுடன், கிராமிய தொழில் பொருளாதார நடவடிக்கைகளில் 1.9வீத சிறிய வளர்ச்சி வேகமும் பதிவாகியுள்ளது. எனினும் கிராமியத் தொழில் பொருளாதார நடவடிக்கைகளில் மரக்கறி, தேங்காய்,பழவகைகள் மொத்த மற்றும் சில்லற…
-
- 0 replies
- 403 views
-
-
30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் ஒருவருக்கு கனடாவில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கப்பல் பிரிவிற்கு பொறுப்பாக செயற்பட்ட ரவிசங்கர் கனகராஜா எனப்படும் சங்கிலி என்பவருக்கே கனேடிய அரசாங்கம் அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளது. பாரியளவிலான ஆயுதங்கள் நிரப்பப்பட்ட மூன்று கப்பல்களை புலிகளுக்காக இலங்கைக்கு கொண்டு வந்ததாக ரவிசங்கர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் வவுனியா நீதிமன்றம் ரவி சங்கருக்கு 30 ஆண்டுகால சிறை தண்டனை விதித்திருந்தது. இன்டர்போல் பொலிஸார் சர்வதேச பிடிவிராந்து உத்தரவு ஒன்றையும் ரவிசங்கருக்கு எதிராக விதித்திருந்தனர். எனினும், இந்த …
-
- 0 replies
- 376 views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்துடன் இணைவதில் மற்றும் அதன் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சர் பதவியொன்றை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பெருந்தோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று தேசிய தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். ஜனாதிபதிக்கு ஒரு தார்மீக கடமையிருக்கின்றது. நாங்கள், கடந்த ஜனாதிபதி தேர்தலில் இருந்து, மைத்திரிபால சிறிசேனவுடன் இருக்கின்றோம். பெருந்தோட்டத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்றவகையில், தொண்டமான் மட்டுமே கடந்த ஜனாதிபதி தேர்தலின் போத…
-
- 0 replies
- 177 views
-
-
பருத்தித்துறை வடமராட்சி கட்டைக்காட்டு கடற் பரப்பில் உள்ளூர் மீனவர்களின் வளங்களை சேதப் படுத்தியபடி கடலட்டை பிடிப்பதற்காக 65 படகு களில் வந்த 185 தென்பகுதி மீனவர்களை உள் ளூர் மீனவர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். இதன்போது இரு பகுதியினருக்கும் இடையே ஏற்பட்ட சரமாரியான மோதலில் இரு உள்ளூர் மீனவர்கள் படுகாயம் அடைந்ததுடன் 15க்கு மேற்பட்ட படகுகள் சேதமாக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் பதற்றநிலை காணப்பட்டது. பருத்தித்துறை வடமராட்சி கட்டைக்காட்டு கடற்பரப்பு பகுதியில் நேற்றைய தினம் மாலை முல்லைத் தீவு மாவட்டத்தில் இயங்கி வரும் கடலட்டை ஏற்றுமதி செய்யும் தனியார் தொழிற்சாலையை சேர்ந்த 185 தென்பகுதி மீனவர் கள் 65 படகுகளில் வந்துள்ளனர். இவர்கள் கடலட்டை மற்றும் சங்கு பிடிப்பதற்கா…
-
- 0 replies
- 468 views
-
-
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்:- போரின் பின்னர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்ட விரோத மதுபானமான கசிப்பு உற்பத்தி அதிகரித்துக் காணப்பட்டது. அண்மைய காலத்தில் கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் கசிப்பு உற்பத்தியும் பாவனையும் அதிகரித்துள்ளது. இதனால் பல இளைஞர்கள் சட்ட விரோத மதுபானமான கசிப்பிற்கு அடிமையாகியுள்ளனர். அத்துடன் சமூகத்தை மிகவும் மோசமாக பாதிக்கும் நிலையை கசிப்பு உற்பத்தி தோற்றுவித்துள்ளது. குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளான மர்தபுரம், புளியம்பொக்கனை, கண்டாவளை, குஞ்சுப் பரந்தன், அக்கராயன், மணியங்குளம், வன்னேரிக்குளம் போன்ற பகுதிகளில் தொடர்ந்தும் கசிப்பு உற்பத்தி இடம்பெறுகின்றது. அத்துடன் கஞ்சா போன்ற சட்டவ…
-
- 0 replies
- 256 views
-
-
கிளிநொச்சி, முட்கொம்பன் பகுதியில் பெறுமதி வாய்ந்த மரங்கள் வெட்டப்பட்டு கொண்டு செல்லப்படுவதாகவும் இந்த சட்டவிரோத காடழிப்பை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தினமும் தங்கள் பிரதேசத்தின் மரங்கள் வெட்டப்பட்டு தமது பகுதி வேகமான காடழிப்பு இடம்பெறுவதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த சட்ட விரோத காடழிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறிப்பிடும் பிரதேச மக்கள் இக் காடழிப்பு அதிகாரிகளின் அனுசரனையுடனேயே இடம்பெறுவதாகவும் கூறுகின்றனர். கையூட்டுக்களுக்காக காடுகளை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே காடழிப்புக்கு வழிகாட்டுவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர். பகல் வேளையிலேயே மிகவும் சுதந்திரமாக இந்தக…
-
- 0 replies
- 262 views
-
-
தோல் நோய்கள் தொடர்பில் வீடுவீடாக அறிவுரை -நடராசா கிருஸ்ணகுமார் யாழ்ப்பாணத்தில் பெய்த கடும் மழைக்குப் பின்னர், தோல் வியாதிகள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் சுகாதார வைத்தியதிகாரி பணிமனையினரால் வீடு வீடாகச் சென்று ஆண், பெண், சிறுவர்கள் உட்பட வீடுகளில் தங்கியுள்ளவர்களை உடற்பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். வியாழக்கிழமை (16) காலை நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் பல கிராம அலுவலர் பிரிவுகளில் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்கள் இவ் உடற்பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். மழை காலத்தின் பின்னர் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாகவும் நோய்கள் இனங்கண்டால் மருத்துவமனையினை உடன்நாடல் போன்ற …
-
- 0 replies
- 233 views
-
-
தொண்டமானும், டக்ளஸூம் நல்லாட்சியில் இணைவது உறுதி நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், ஐக்கிய தேசிய முன்னணியின் தேசிய அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இவ்விரு கட்சிகளும், நாடாளுமன்றத்தில் எதிரணியின் பக்கமாக இருந்தாலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனேயே இருக்கின்றன என்று தெரிவித்த விசேட பணிப்பொறுப்புகளுக்கான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, அவ்விருவரும் அமைச்சரவையில் அங்கம் வகிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். ஸ்ரீ …
-
- 0 replies
- 327 views
-
-
புற்றுநோய் வைத்தியசாலைக்கு மக்களிடம் பணம் சேகரித்த அரசாங்கம் : அமைச்சர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வது நியாயமா.? மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு "ஸ்கேன்" இயந்திரம் கொள்வனவு செய்வதற்கு மக்களிடம் பணம் சேகரித்த அரசாங்கம் அமைச்சர்களுக்கு 118 கோடி ரூபா செலவில் சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வது நியாயமா என கேள்வி எழுப்பும் ஜே.வி.பி, அமைச்சர்களின் இணைப்புச் செயலாளர்கள் பயன்படுத்தும் வாகனங்களின் தொகையை பார்க்கும் போது அமைச்சர்களுக்கு தேவையான வாகனங்கள் கையிருப்பில் உள்ளமை தெளிவாகிறது என்றும் ஜே.வி.பி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜே.வி.பி எம்.பி.சுனில் ஹன்துன்னெத்தி மேலும் தெரிவித்திருப்பதாவது, அமைச்சர்களுக்கு தேவையான வளங்களை வழங்குவதில் எந்தப் …
-
- 0 replies
- 141 views
-
-
200 கோடி ரூபா பெறுமதியான கொக்கைன் விவகாரம்; பிரதான சந்தேக நபரான பிரேஸில் பிரஜை இலங்கையில்? பிரேஸிலில் இருந்து சீனி இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளிடையே 200 கோடி ரூபா பெறுமதியான 80 கிலோ கொக்கைன் போதைப்பொருளினை நாட்டுக்குள் கடத்திய சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆரம்பித்துள்ளது. அதன்படி இந்த கொக்கைன் போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் உள்ளதாக கருதப்படும் பிரதான சந்தேக நபரான பிரேசில் பிரஜை தற்சமயம் இலங்கைக்குள் இருப்பதாக சந்தேகிக்கும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அவர் தப்பி செல்லக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதால் அதனை தடுக்க தீவ…
-
- 0 replies
- 176 views
-
-
அலவி மௌலானாவின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது (படங்கள் இணைப்பு) முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவின் ஜனாஸா இன்று (16) நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது ஜனாஸா இன்று மாலை 3.30 மணியளவில் தெஹிவளை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அலவி மௌலானா 2002 ஆண்டு தொடக்கம் 2015 ஆண்டுவரை மேல்மாகாண ஆளுநராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை அலவி மௌலானாவின் ஜனாஸாவிற்கு பல அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். http://www.virakesari.lk/article/7656
-
- 2 replies
- 491 views
-
-
ஹூசைன் - சுமந்திரன் சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைனை சந்தித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/174852/ஹ-ச-ன-ச-மந-த-ரன-சந-த-ப-ப-#sthash.gORHKfj0.dpuf
-
- 3 replies
- 468 views
-
-
ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல்தீர்வு-இந்தியா மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் முன்னேற்றமடைந்துள்ளதாக இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார். “இருநாடுகளுக்கும் இடையில் உயர்மட்ட சந்திப்புகள் மூலம், இருதரப்பு உறவுகள் வலுவடைந்து, புதிய கட்டத்தை எட்டியிருக்கிறது. 1999ஆம் ஆண்டு சுதந்திர வர்த்தக உடன்பாடு இரண்டு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட பின்னர், இலங்கையின் ஏற்றுமதி 13 மடங்கால் அதிகரித்துள்ளது. இந்த உடன்பாட்டினால் யார் அதிகம் பயனடைந்தது என்பதை இது வெளிப்படுத்துகிறது. இலங்கையும் …
-
- 4 replies
- 400 views
-
-
"நாம் ஏன் கழுத்தைக் கொடுக்க வேண்டும்?" தயான் ஜயதிலக்க:- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- வடக்கில் மட்டமா யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தார்கள் என முன்னாள் ராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். புரவெசி வலய அமைப்பின் அழைப்பாளர் சமன் ரத்னபிரிய எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ளார். 'தென் ஆபிரிக்காவில் போன்று உண்மை நல்லிணக்க ஆணைக்குழு ஊடாக தீர்வு காண முடியுமாயின் அது சிறந்ததே அதனையே நாம் விரும்புகின்றோம் எனினும், அவ்வாறு செய்ய முடியுமா? விசாரணை நடவடிக்கைகளின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிட்ட வேண்டும். அதேபோன்று இந்த விசாரணைப் பொறிமுறைமை ஏற்றுக் கொள்ளாவிட்டால் விசாரணையில் பயனில்ல…
-
- 1 reply
- 295 views
-
-
அரசாங்கம் உறுதியளித்த மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாடுகள் மந்த கதியிலேயே முன்னெடுக்கப்படுவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில், அமெரிக்க காங்கிரஸின் ஏற்பாட்டில், வொஷிங்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்விலேயே, சுமந்திரன் இதனைத் தெரிவித்தார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் சொற்ப அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், உண்மையான மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு, அரசாங்கம் வழக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையென சுமந்திரன் இதன்போது தெரிவித்தார். குறிப்பாக காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின…
-
- 8 replies
- 563 views
- 1 follower
-