Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக, வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அநுர சேனாநாயக்கவை, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச நேற்று திங்கட்கிழமை நேரில் சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் மஹிந்த ராஜபக்சவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், தனது ஆட்சிக் காலத்தில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் கொழும்பு நகரத்தில் பல சேவைகளை செய்த ஒருவர் என்பதனால், அவரை பார்ப்பதற்குச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்களான நாமல்…

  2.  'ஈழக் கனவை தோல்வியடைய செய்வோம்' நாட்டுக்குள்ளும் வெளியேயும் உள்ள ஈழம் என்ற கனவு மற்றும் விடுதலை புலிகளின் சித்தாந்தத்தை நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இல்லாதொழிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவிட்டால் வடக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கும் நிலை உருவாகலாம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். தெஹிவளை - கல்சிசை நகரமண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். 27 வருடங்களாக வடக்கு மக்கள் முகாம்களில் இருந்தனர். நான் கேட்கின்றேன் உங்களால் அவ்வாறு இருக்க முடியு…

  3. கிளிநொச்சியில் 2620 மாற்று வலுவுள்ளோரில், 1539 பேர் யுத்தத்தின் விளைவுகள்: கிளிநொச்சி மாவட்டத்தில் 2620 மாற்று வலுவுள்ளோர்கள் காணப்படுகின்ற நிலையில் அதில் 1539 பேர் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மாற்றுவுள்ளோராக ஆக்கப்பட்டவர்கள் என கிளிநொச்சி மாவட்ட புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கிறது. கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தினால் 2014 ஆம் ஆண்டு மேற் கொள்ளப்பட்ட கணிப்பின் அடிப்படையில் 2620 பேர் மாற்று வலுவுள்ளோராக அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இதில் யுத்தம் காரணமாக மாற்று வலுவுள்ளேராக ஆக்கப்பட்டவர்கள் 1539 பேரும், பிறப்பின் காரணமாக 560 பேரும், நோய் காரணமாக 250 பேரும், விபத்தினால் 119 பேரும், இயற்கை அனர்த்தங்களால் 152 பேரும், உள்ளடங்குகின்றன…

  4. காணமல் போனவர்கள் பிரச்சனை : அத்தாட்சி பத்திரம் தர அரசு ஒப்புதல் இலங்கையில், பல தசாப்தங்களாக நடந்த இனமோதல் காரணமாக ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பின் போது காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு சான்றிதழ்கள் வழங்கம் திட்டத்துக்கு இலங்கை அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆயிரக்கணக்காண மக்கள் மார்க்சிஸிஸ்ட் எழுச்சியின் போதும் மற்றும் உள்நாட்டுப் போர் காலங்களிலும் காணாமல் போயுள்ளனர். பலர் இன்னும் கணக்கில் வரவில்லை.இவர்களில் பலர் தமிழர்கள். இந்த சான்றிதழ்கள், காணமல் போனவர்களின் குடும்பத்தினர் அவர்களது சொத்தை மாற்றுவது,, முடக்கப்பட்ட வங்கி கணக்கை திறந்து பயன்படுத்துவது போன்ற யதார்த்தமான காரியங்களைச் செய்ய உதவும். இந்த வரைவு சட்டம் நாடாளுமன்ற…

  5. கொஸ்கம சம்பவத்திற்கு இராணுவத் தளபதியே பொறுப்பு சொல்ல வேண்டுமெனவும், நான் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றியிருந்தால் இராணுவத் தளபதியை உடனடியாக பணி நீக்கியிருப்பேன் எனவும், இவ்வாறான ஓர் முக்கிய இராணுவ முகாமின் பாதுகாப்பினை உறுதி செய்யாது அதன் பொறுப்பினை மேல் மட்டத்தின் மீதோ அல்லது கீழ் மட்டத்தின் மீதோ சுமத்தி தப்பிக்காது, பிழையை ஒப்புக்கொண்டு இராணுவத் தளபதி பதவி விலக வேண்டும் எனவும் தமிழினப் படுகொலையை முன்னெடுத்த போர்க் குற்றவாளி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். . மேலும், சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் பனாகொடை இராணுவ முகாமில் காணப்பட்ட ஆயுதக் களஞ்சியம் கொஸ்கொடவிற்கு மாற்றம் செய்யப்பட்டது. நான் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் இந்த ஆயுதக…

    • 2 replies
    • 519 views
  6. ஹம்பாந்தோட்டையில் உள்ள மத்தள ராஜபக்ஸ விமான நிலையத்தில் இருந்த கடைகள் ஜூன் 1ஆம் திகதியில் இருந்து முழுமையாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தை சூழ உள்ள கடைகள் ஜூன் முதலாம் திகதியில் இருந்து மூடப்பட்டுள்ளதாகவும், கடை உரிமையாளர்கள் தங்களது பொருட்களை கடைகளில் இருந்து நீக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்தள விமான நிலையத்தின் போக்குவரத்து துளித்துளியாக குறைந்து வருவதாகவும், தற்போது 2 எம்.ஆர்.ஐ.ஏ விமானங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு விமானங்களுமே தற்போது சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதாகவும்,பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புகள் இன்றி சுற்றுலாப் பயணிகள் சிரமங்களை எதிர்நோ…

  7. சிறுபான்மையினரின் பிரச்சனைகளை இனவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்: சுரேஸ் தினேஷ் குணவர்த்தன போன்று இனவாதம் பேசக் கூடியவர்கள் பெரும்பான்மையின மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புத் தான் சிறுபான்மையினருக்கும் ஏற்படுமென்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கொஸ்கம சாலாவ பகுதியில் உள்ள இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்புச் சம…

  8. போர்முடிவடையும்வரை ஈ.பி.டி.பிக்கு ஆயுதங்களை வழங்கியது அரசு- ஒப்புக்கொள்கிறார் கோத்தா போர் முடிவடையும் வரை ஈ.பி.டி.பி.க்கு அரசாங்கம் ஆயுதங்களை வழங்கியதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய தெரிவித்துள்ளார் கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் மஹிந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திடம் கையளித்த போது நாட்டில் ஒரு சோதனைச் சாவடியும் காணப்படவில்லை எனவும் நாட்டில் மிகவும் பாதுகாப்பான சூழல் காணப்பட்டதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ள…

  9. எமது நாட்டைவிட்டு, உங்கள் நாட்டுக்கே சென்றுவிடுங்கள் : மத்­திய வங்கி ஆளு­ன­ரிடம் வேண்­டுகோள்.! மத்­திய வங்கி ஆளுனர் அர்­ஜுன மகேந்­தி­ரனின் அடிப்­படை செல­வு­க­ள் எமது நாட்டின் பொரு­ளா­தார நிலை­மைக்கு ஏற்­பு­டை­ய­தல்ல. அவர் வெளி­நா­டு­களில் பெற்­றுக்­கொண்ட வரப்­பி­ர­சா­தங்­களும் இங்கு கிடைக்­கா­து. எனவே எமது நாட்­டிற்கு தொல்லையாக இருப்­பதை விடுத்து அவ­ருக்கு பிர­­ஜா­வு­ரிமை உள்ள நாட்டிற்கு சென்று குடி­ய­மர்­வதே பொருத்­த­மாக இருக்குமென பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்­தார். கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப…

    • 2 replies
    • 622 views
  10.  'த.தே.கூ.வின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுங்கள்' சண்முகம் தவசீலன் ஜெனிவாஅமர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய வேண்டியுள்ளதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறுகோரி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அக் கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இறுதியாக 17.02.2016 அன்று நடைபெற்றிருந்த…

    • 4 replies
    • 473 views
  11. கொஸ்கம – சலாவ இராணுவ ஆயுதக்கிடங்கில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட வெடிவிபத்தை அடுத்து, வியாங்கொடவில் உள்ள மத்திய ஆயுத மற்றும் வெடிபொருள் களஞ்சியத்தின் தரத்தை சிறிலங்கா இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் நேற்று பரிசோதித்தனர். சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் மிலி்ந்த பீரிஸ் நேற்று வியாங்கொட ஆயுதக் களஞ்சியப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்ததுடன், அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பரிந்துரைகளை செய்துள்ளார். வியாங்கொடவில் உள்ள முன்னைய வேரெக்ஸ் ஆடை நிறுவனச் சுற்றாடலில் அமைந்துள்ள, மத்திய ஆயுத மற்றும் வெடிபொருள் களஞ்சியததில் சுமார் 15ஆயிரம் தொன் வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. எனினும், சலாவ உப ஆயுதக் கிடங்கில் பேணப்பட்டதை விட மோசமான தர…

  12. நாட்டில் குறிப்பிட்ட இரண்டு மதுபானசாலைகள், செயற்கை எரிசக்தியை பயன்படுத்தி தற்போது விசேட மதுபானத் தயாரிப்பில் ஈடுப்பட்டு வருவதாக ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மோசடி முதலமைச்சர் ஒருவரின் உதவியுடன் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மதுபான வடிகட்டலின் போது சிறிய வீதத்திலான தேங்காய், பனை, கள்ளு மற்றும் கித்துள் ஆகியன சேர்க்கப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லீட்டர் கள்ளினால் 45 முதல் 48 சதவீதம் வரையில் எரிசக்தியை உற்பத்திச் செய்ய முடியும். உள்நாட்டில் பெரும்பாலும் மதுபான தயாரிப்பிற்கு அதிகளவு கள்ளை பயன்படுத்தமாட்டார்கள் ஆனால் இந்த இரண்டு மதுபான சாலைகளும் சிறப்பு மதுபானம் தயாரிப்பத…

  13. கோத்தபாய ராஜபக்சவை அதிகாரத்துக்கு கொண்டு வர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிமுயற்சிக்குமானால் தாம் அரசாங்கத்துடன் இணைந்திருக்கப் போவதில்லை என்று முன்னாள்ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம், நாட்டை கொள்ளையிட்டவர்களை விரட்டுவதற்காகவேஅமைக்கப்பட்டது. இந்தநிலையில் கோத்தபாயவை அதிகாரத்துக்கு கொண்டு வர முயற்சித்தால், தாம்,அரசாங்கத்துடன் தொடரப் போவதில்லை என்று சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார். அத்தனகலையில் வார இறுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தாம் முடமாகிப் போயுள்ளதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டதாககுறிப்பிட்ட சந்திரிக்கா, தற்போது தாம் முடமாகி உள்ளேனா? என்பதை பார்க்க முடியும்என்றும் தெ…

  14. தம்மை இரண்டாம் தர பொறுப்புக்கு வருமாறு கோரப்படுவதாகவும், ஆனால், படையினரைப் பாதுகாப்பதற்காக, தாம் முதல் தர பொறுப்புக்கு வரத் தயார் என்று என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். படைவீரர்களை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் நிகழ்வு ஒன்றில் நேற்று உரையாற்றும் போதே கோத்தபாய இந்தக் கருத்தை வெளியிட்டார். நாட்டின் ஒருமைப்பாட்டை முன்கொண்டு செல்லவும், படையினரை பாதுகாக்கவும் யாருடன் இணைந்து செயற்பட தாம் தயார். நல்லிணக்கம் என்ற போர்வையில் அரசாங்கம் படையினரை புறக்கணிக்கிறது என்றும் அவர் குற்றம் சுமத்தினார். http://www.seithy.com/breifNews.php?newsID=159046&category=TamilNews&language=tamil

  15. கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட்டிற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை சட்டத்தரணி பி. லியனாராச்சி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். சம்பூர் மகா வித்தியாலயத்தின் கட்டிட திறப்பு விழாவின் போது கடற்படை அதிகாரி ஒருவரை தகாத வார்த்தைப் பிரயோகங்களின் மூலம் அவமதித்த காரணத்திற்காக இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/7266

  16. <p>Your browser does not support iframes.</p> யாழில் கையெழுத்து வேட்டை குமார் குணரத்னத்தின் குடியுரிமையினை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தி யாழில் கையெழுத்து பெரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னிலை சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில், யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அத்துடன், சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய், அடக்குமுறை சட்டங்களை சுருக்கிக் கொள், சகல அரசியல் பழிவாங்கல்களையும் நிறுத்து போன்ற வாகசங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை தொங்கவிட்டு, தமது எதிர்ப்பினை அவர்கள் தெரிவித்தனர். மேலும், இது தானா ஜனநாயகம் எனும் தொனிப்பொருளில், துண்டுப் பிரசுரத்தினையும் மக்கள் மத்தியில் கையளித…

  17. பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டும் பலனில்லை -நடராசா கிருஸ்ணகுமார் யாழ்ப்பாணம் மாநகர சபை, 'குப்பை கொட்டாதீர்கள்' என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை எங்கெல்லாம் வைக்கின்றதோ, அந்த இடங்களில் எல்லாம் குப்பைகளை கொட்டும் செயற்பாடு தற்போது அதிகரித்து வருகின்றது. வீதிகளின் அருகில், பொது இடங்களுக்கு அருகில் குப்பைகளைப் போடாதீர்கள் என்ற வாசகத்தை யாழ்ப்பாணம் மாநகர சபை அறிவித்தல் பதாகைகளில் பொறித்துள்ளது. எனினும், அந்த இடத்தில் குப்பை கொட்டுவதை பலர் நாளாந்த செயலாகச் செய்கின்றனர். இதனால், அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறித்த இடத்தில் குப்பைகளை கொட்டுபவர்களை இனங்கண்டு சட்ட நட…

  18. ஆகாய மார்க்கமாக சென்று பார்த்தால்.. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றதோடு, இதனால் பாரிய அளவில் தீப்பரவல் ஏற்பட்டது. எனவே, அப் பகுதியில் இருந்த குடியிருப்பாளர்கள் வௌியேற்றப்பட்டனர். இந்தநிலையில், இந்த விபத்து காரணமாக ஒரு இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதோடு, மற்றொரு இராணுவ சிப்பாய் காயமடைந்துள்ளார். மேலும், அங்கிருந்த ஆயுதங்கள் அருகிலிருந்த வீடுகளுக்குள்ளும் விழுந்துள்ளதோடு பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும், தற்போது நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், குறித்த இராணுவ முகாமுக்கு ஒரு கிலோமீற்றருக்குள் இருக்கும் குடியிருப்பாளர…

  19. 'அண்ணா களஞ்சியசாலை வெடித்து கொண்டிருக்கின்றது. நான் காணில் பதுங்கியிருக்கின்றேன்" மரணித்த வீரரின் இறுதி வார்த்தைகள் : கொஸ்கம சம்பவத்தில் நிகழ்ந்த சோகம் அவிசாவளை கொஸ்கம சலாவ இராணுவ முகாமில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தினால் உயிரிழந்த இராணுவ வீரர் இறுதியாக தனது அண்ணா மற்றும் மனைவிக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு உரையாடியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த உயிரிழந்த இராணுவ வீரரின் அண்ணா, ' நேற்று முன்தினம் மாலை 6.29 மணியளவில் தனது தம்பியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது, அப்போது தம்பி என்னிடம் அண்ணா இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியத்தில் தீ பற்றி வெடித்துக் கொண்டிருக்கின்றது. நான் தற்போது காணில் பதுங்கியுள்ளேன். நான…

  20. ஜோதிடர் மஞ்சுலவின் கருத்தால் பரபரப்பு..! இவ் வருடத்தில் எதிர்பாராத வகையில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டு அது மக்களை மோசமான வகையில் பாதிக்கும் என பிரபல ஜோதிடர் மஞ்சுல பீரிஸ் ஏற்கனவே கூறியிருந்ததாகவும் அதுவே தற்போது கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் இடம்பெற்றுள்ளதாகவும் சர்ச்சையான கருத்துக்கள் சமூக வலைத்தளங்கில் வெளியாகியுள்ளன. அனுபவம் வாய்ந்த ஜோதிடரொருவரான மஞ்சுல பீரிஸ் கடந்த ஏப்ரல் மாதம் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு, இவ்வருடத்துக்குள் நாட்டில் ஏதாவது பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டு மக்களுக்கு பாரிய அழிவை ஏற்படுத்தும் என தீர்க்க தரிசனமாக கூறியிருந்தார். இவருடைய தீர்க்க தரிசனமே தற்போது சாலாவ இராணுவ முகாம் வெடிப்பு சம்பவத்தில் உண…

  21.  'வெடித்து சிதறியவை ஊடறுத்தன' சேதங்கள் பல எச்சரிக்கை விடுப்பு 37 பேருக்குக் சிறு காயம் உடன் அறிவிக்க இலக்கங்கள் முன்னேற்பாடுகள் குறித்து ஆராய்வு வழமைக்குத் திரும்ப 48-96 மணிநேரம் எடுக்கும் -அழகன் கனகராஜ் தீப்பற்றிக்கொண்ட கொஸ்கம சாலாவ படைமுகாமின் ஆயுதக்கிடங்கு விடியவிடிய வெடித்துச் சிதறி, விடிந்தும் வெடித்துச் சிதறியமையால், ஆயுதக்கிடங்கும் அதனை மிக அண்மித்த பகுதியும் சாம்பராகக் காட்சியளித்தன. ஞாயிற்றுக்கிழமை (5) மாலை 5.45க்கு வெடிக்க ஆரம்பித்த ஆயுதக் கிடங்கு, 17 மணித்தியாலங்கள் கடந்த நிலையில் நேற்றுத் திங்கட்கிழமை முற்பகல் 11.45க்குப் பின்னரும் சின்னஞ்சி…

  22. மீள்குடியேற்ற விவகாரம்: தாமதம் ஏற்பட்டாலும் முடிவில் மாற்றமில்லை -எஸ்.என்.நிபோஜன் 'யாழ்ப்பாணம், உயர்பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட மயிலிட்டி பிரதேசம் தொடர்பில், இராணுவத்தினர் இதுவரையில் தமது எதிர்ப்பினையோ அல்லது காணி விடுவித்தல் தொடர்பான மற்றுப்பினையோ முன்வைக்கவில்லை. வடக்கின் மீள்குடியேற்றம் தொடர்பில் நான், கடும் சிரத்தையுடன் இருக்கின்றேன். வடக்கு மக்களுக்கு மீள்குடியேற்றம் தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்த மாற்றமும் இல்லை. சிலவேளைகளில் சிறிய தாமதம் ஏற்படலாம்' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னிடம் கூறியதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், அங்கஜன் இராமநாதன் கூறினார். …

  23. அநுரவை பார்த்தார் மஹிந்த பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கவை, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று நேற்று திங்கட்கிழமை பார்வையிட்டார். மஹிந்த ராஜபக்ஷவுடன் அவருடைய மகன்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவும் சென்றிருந்தார். வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து திரும்பிய மஹிந்த ராஜபக்ஷ, அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், 'அநுர சேனாநாயக்க, கொழும்பு மாநகரத்துக்கு பெரும் சேவையாற்றியவர். ஆகையால், அவரை சந்தித்து நலன் …

  24. பிரித்தானிய பிரதிநிதிகளுடன் சந்திப்பு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள, பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்துக்கான வதிவிட செயலாளர் சைமன் மெக்டொனால்ட் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான இங்கிலாந்து திணைக்களத்தின் நிரந்தர செயலாளர் மார்க் லோவ்கோக் ஆகியோர், எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை, நேற்றுத் திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் உடனிருந்தார். இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்குடன் இவ்விருவரும் இலங்கைக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.