Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எச்சரிக்கை..! வருகிறது 'ரோனு' யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு வடக்கேயுள்ள கடல்பகுதியில் 600 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் சூறாவளியாக மாற்றமடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுறாவளியாக மாறி இலங்கையினூடாக பயணிக்கவுள்ள இந்த சூறாவளிக்கு 'ரோனு" என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் மேற்கு , தெற்கு மற்றம் வடக்கிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. இதேவேளை, மழை பெய்யும் பிரதேசங்களிலும் கடற்பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக கடலில் பிரயாணம் செய்வோர், மீன்பிடிக்காக கடலுக்கு செல்வோர் மற்…

  2. தமிழக முதல்வருக்கு வடக்கு முதல்வர் வாழ்த்து ( மயூரன் ) தமிழக முதலமைச்சராக செல்வி ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக தெரிவாகியுள்ளமைக்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில், வருங்காலத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கு பலவிதமான நன்மைகளை செய்வார் என எதிர்பார்கிறேன். தமிழ் நாட்டு மக்கள் மீண்டும் அவரையே முதலமைச்சராக தேர்ந்தெடுத்துள்ளமை மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த செல்வாக்கை எடுத்துக் காட்டுகின்றது. அதனால் தொடர்ந்து அவர் தமிழக மக்களுக்கும் ஈழத்து தமிழ் மக்களுக்கும் பல நன்மைகள் செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்ற…

  3. களனி கங்கையின் நீர் மட்டம் உயர்ந்தமையால் மல்வானை, கல்கமுவ முற்றாக நீரில் மூழ்கியன களனி கங்கையின் நீர் மட்டம் 7.6 அடியாக உயர்வடைந்துள்ளதையடுத்து மல்வானை மற்றும் கல்கமுவ பகுதிகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. http://www.virakesari.lk/article/6625

  4. சீரற்ற வானிலையால் தொடரும் மீளாத் துயரம் அரநாயக்கவிலிருந்து ஜே.ஏ.ஜோர்ஜ் நாட்டில் தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது. இயற்கை அனர்த்தங்களில் சிக்குண்டு காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 25ஆகவும், மேலும் 21பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, அதிக மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, மண்சரிவு காரணமாக, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்துக்கும் அதிகமானோர் நிர்க்கதியாகியுள்ளதாகவும் இவர்களுக்காக 400க்கும் மேற்பட்ட தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிலையம் க…

  5. அனைத்துப் பாடசாலைகளுக்கும் பூட்டு நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும் என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/172610/%E0%AE%85%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F-#sthash.a7OWjgfc.dpuf

  6. சூறாவளி : நாட்டில் இன்றும் கனமழைக்கான சாத்தியம் நாட்டில் இன்றும் கனமழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார். காங்கேசன் துறைக்கு வடக்கே 500 கிலோ மீற்றர் தொலைவில் பலத்த காற்று வீசிவருகின்றது. இன்னும் 24 மணி நேரத்தில் அது சுறாவளியாக மாறி இலங்கையினூடாக பயணிக்கவுள்ளது. இதனால் மேற்கு , தெற்கு மற்றம் வடக்கிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது. மேலும் மத்திய மற்றும் வடபகுதிகள் பெரிதும் பாதிக்ககப்படுமென அவர் தெரிவித்தார். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் பாரிய அலைகள் தோன்றக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதால் கரையோரப…

  7. 'மஹிந்தவுக்குப் பணம் கொடுத்தது தவறு' 'யாராக இருப்பினும், தமது தனிப்பட்ட தேவைக்காக அரசாங்கத்திடம் பணம் பெற்றுக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவின் உகண்டாப் பயணத்துக்கு பணம் கொடுத்தது, தவறான விடயம் தான்' என்று அரசாங்கம் நேற்றுத் தெரிவித்தது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியதாவது, 'நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுள், தனது சொந்த வெளிநாட்டு பயணத்துக்காக அரசாங்கத்திடம் பணம் கேட்டவர் மஹிந்த ராஜபக்ஷ ஒருவரே ஆவார். அதுவும், தான் முன்னாள் ஜனாதிபதி என்பதால், விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்துக்கொண்டிருக்காமல் ஹோட்டலில் தங்கவைக்க வேண்டும் என்றும், தனது பயணத்துக்கான ஏனைய செ…

  8. ‘எப்படியாவது போர்க்குற்ற விசாரணையைத் தட்டிக் கழிக்கவே அரசாங்கம் பார்க்கின்றது. சிங்கள மக்கள் பார்க்கின்றனர். ஏன் எம்முட் சிலரும் எண்ணுகின்றனர். பிழைகள் செய்தவரைத் தண்டிக்காது தப்பவைக்கவே அரசாங்கம் தன்னைத் தயார்படுத்தி வருகின்றது. இதற்கு மாறாக யாவரும் நீதிக்காகப் போராட முன்வரவேண்டும். நியாயமான சிங்களத் தலைமைகளும் இதில் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சர்வதேசம் இதில் மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும்.’ என முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு 18.05.2016 அன்று முள்ளிவாய்க்காலில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆற்றிய உரை வருமாறு, அன்பான நெஞ்சங்களே! ஆண், பெண், குழந்தை, வயோதிபர், வலுவிழந்தோர் என்ற பாகுபாடின்றி அவர்களி…

    • 1 reply
    • 425 views
  9. virakesari.lk அரநாயக்க சென்றார் ஜனாதிபதி அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் தொடர்பில் நேரில் கண்டறிவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்பகுதிக்குச் சென்றுள்ளார். http://www.tamilmirror.lk/172539/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A8-%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9A-%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%B0-%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4-#sthash.6LAwm9Uy.dpuf

    • 1 reply
    • 369 views
  10. சிறீலங்காவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், களனிகங்கையின் நீர்மட்டம் 7 மீற்றர்வரை உயர்ந்து பெருக்கெடுத்துப் பாய்வதால் கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் களனி கங்கையின் கரையோரமாக உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதேவேளை, களனி கங்கையில் பெருக்கெடுத்த வெள்ளத்தினால், கொழும்பு நகரின் பகுதிகளான, வெல்லம்பிட்டிய, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் வீடுகள், வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்துடன் முதலைகளும் வீடுகளுக்குள் புகுந்ததனால் மக்கள் அச்சத்திலுள்ளனர். வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். http://thuliyam.com/?p=2707…

    • 0 replies
    • 695 views
  11. வடக்கில் மழையால் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிப்பு: குடும்பங்கள் பல இடம்பெயர்வு கடந்த மூன்று நாட்களாகப் பெய்த மழை காரணமாக வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் 5371 குடும்பங்களைச் சேர்ந்த 11,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் 1192 பேர் 12 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் 1884 குடும்பங்களைச் சேர்ந்த 6625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 856 பேர் 11 இட…

  12. மண் சரிவால் பாதிக்கப்பட்ட அரநாயக்க மக்களை சந்தித்தார் ஜனாதிபதி மண் சரிவினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அரநாயக்க, எலக்கபிலிய பகுதி மக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பார்வையிட்டார். மண் சரிவு ஏற்பட்டுள்ள சாமசரகந்த பகுதிக்குச் சென்ற ஜனாதிபதி, நிலைமையைப் பார்வையிட்டதுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கினார். அதன்பின்னர், மண் சரிவினால் பாதிக்கப்பட்ட சிறிபுர, பல்லெபாகே ஆகிய பிரதேசங்களுக்குச் சென்ற ஜனாதிபதி, அங்கு ஏற்பட்டுள்ள அழிவுகளைப் பார்வையிட்டார். இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள அரநாயக்க, திப்பிட்டிய ராஜகிரிய வித்தியாலயம் மற்றும் ஹத்கம்பல வித்தியாலயங்களுக்குச் சென்ற ஜனாதிபதி, மக்கள் எதிர்நோக…

  13. போர் வெற்றி மகிழ்ச்சியளித்தாலும் மரணங்கள் வேதனையளிக்கின்றன : தேசிய படைவீரர்கள் தினத்தில் ஜனாதிபதி (ப.பன்னீர்செல்வம்) போர் வெற்றி ஒருபுறம் மகிழ்ச்சியை கொடுத்தாலும் மறுபுறம் மரணங்கள் கவலையளிப்பதாகவே உள்ளது. கல், மண், சீமெந்தைக் கொண்டு தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியாது. தமிழ் சிங்கள மக்களின் இதயங்களை இணைப்பதன் மூலமே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். எந்தச் சவால்கள் வந்தாலும் இனங்களுக்கிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத நிலைமையை அரசாங்கம் ஏற்படுத்தும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். தேசிய படைவீரர்கள் தினம் மற்றும் யுத்தத்தில் உயிரிழந்த படைவீர…

  14. இன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஏழாம் ஆண்டு நினைவு நாள். மறுபுறத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மௌனித்தும் ஏழாண்டுகள் கடக்கின்றன. 2009 ஆம் ஆண்டின் இதுபோன்றதொரு நாளில்தான் விடுதலைப் புலிகள் இயக்கம், தம் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்தது. பெரும் போர். பல நாடுகள் நேரடியாகக் களமிறங்கி நடத்திக்காட்டிய போர். பிணக்குவியலுக்கு மேல் நின்று சமராடிய போர். எல்லாப் பக்கங்களிலிருந்தும் மரணமும், ஆற்றவே முடியாத காயங்களும் வந்து கொண்டிருக்கையில்தான் புலிகள் இயக்கம், “ஆயுதங்களை மௌனிக்கிறோம்” என்றார்கள். முள்ளிவாய்க்கால் போன்றதொரு போர்க்களத்தில் இப்படியொரு அறிவார்ந்த சொற்றொடரை யாராலும் பயன்படுத்த முடியுமா? சாவதையும், சரணடைதலையும் தவிர வேறெந்த வாசலுமற்ற ரவைகளின வெளியில இப்படி யோசிக்கத…

    • 1 reply
    • 674 views
  15. போர் – சிறுவர்களுக்கு அடுத்ததாக அதிக பாதிப்பை பெண்களுக்குத்தான் ஏற்படுத்துகின்றது. 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து, மௌனித்த ஈழப்போரிலும் அதனை சரியாகப் பிரதியிட்டுப் பார்க்கலாம். ஈழப்போரில் அதிகம் பாதிக்கப்பட்ட தரப்பினருள் சிறுவர்களுக்கு அடுத்த நிலையில் பெண்கள் இருக்கின்றனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களிலும் போரில் ஈடுபட்ட தரப்பினராகிய முன்னாள் பெண் போராளிகள் கடந்து வந்த பயணம் வலி மிகுந்தது. முன்னாள் பெண் போராளிகளிலும், திருமணமாகி கணவன் போரில் கொல்லப்பட்டோ – சரணடைவுக்குப் பின் கொல்லப்பட்டோ விதவையான பெண்கள் எதிர்கொள்ளும் துயரம்…………! வேகமாக கட்டடமயப்பட்டுவிட்ட கிளிநொச்சி நகரின் டிப்போ சந்தியிலிருந்து, உருத்திரபுரம் செல்லும் வீதியில், இடையில் இருக்கிறது செல்வாநகர் க…

    • 0 replies
    • 679 views
  16. மஹிந்தவின் வெற்றிவிழா இரத்து.! நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, குருநாகலையில் நடைபெறவிருந்த மஹிந்தவின் “யுத்த வெற்றி விழா” இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு இம்முறை யுத்த வெற்றிதின விழாவுக்கு அரசாங்கம் அழைப்பு விடுக்கவில்லை. இந் நிலையில் மஹிந்த அணியினர் நாளை குருநாகலில் தமது இராணுவ வெற்றி தின கொண்டாட்டங்களை நடத்தயிருந்தனர். மேலும், மஹிந்த ராஜபக் ஷ கலந்துகொள்ளும் குருநாகல் நிகழ்வில் இராணுவத்தின் அதிகாரிகளோ, சிப்பாய்களோ கலந்துகொள்ள முடியாது என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articl…

    • 2 replies
    • 476 views
  17. மழையால் யாழில் 5 ஆயிரம் பேர் பாதிப்பு (ரி.விரூஷன்) யாழ்ப்பாணத்தில் கடந்த இரு நாட்களாக நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 5ஆயிரத்து எண்ணுற்றி நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவிப்பணிப்பாளர் ச.ரவி தெரிவித்துள்ளார். அத்துடன் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையினால் 17 வீடுகள் முற்றாகவும் 172 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளார். வங்காளவிரிகூடாவில் ஏற்பட்ட தாழமுக்கத்தால் நாட்டின் சகல இடங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணதிலும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. இந்ந…

  18. வெள்ளத்தில் மூழ்கியுள்ள கொழும்பு May 18, 2016 சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு நகரம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ள அரநாயக்க பிரதேசத்தினதும் தற்போதைய நிலையை காட்டும் புகைப்படங்களே இவை. http://tamil.adaderana.lk/news.php?nid=2152&mode=head

  19. கொழும்பில் மப்பும்மந்தாரமுமான காலநிலை : களனியாறு சடுதியாக பெருக்கெடுப்பு பதற்றத்தில் வெளியேறிய மக்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் தலைநகர் கொழும்பில் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு வெளியேறிய வண்ணமுள்ளனர். குறிப்பாக கொழும்பு பகுதியில் மழை வீழ்ச்சி குறைந்து மப்பும்மந்தாரமுமான காலநிலை நிலவிய போதிலும் களனிகங்கையின் நீர் மட்டம் சடுதியாக பெருக்கெடுத்தமையால் களனி, தொட்டலங்க மற்றும் ஒருகொடவத்தை பகுதியில் களனிகங்கையை அண்மித்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டு பதறியடித்து வெளியேறி வருகின்றனர். இதனால் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பொருட்களையும் தமது குழந்தைகளையும் துக்கியவாறு குறித்த பகுதியிலுள…

  20. பத்திரிகை நிறுவனத்திற்குள் நுழைந்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த இருவர் மடக்கிப்பிடிப்பு (மயூரன்) யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை நிறுவனம் ஒன்றினுள் அத்துமீறி உள் நுழைந்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த இருவரை குறித்த பத்திரிகை நிறுவனத்தின் ஊழியர்கள் மடக்கிப் பிடித்து யாழ்.பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். யாழில் உள்ள பத்திரிகை நிறுவனத்தினுள் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டன. அதன் போது அத்துமீறி நிறுவனத்தினுள் நுழைந்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த இருவர் நிகழ்வுகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். அதனை அவதானித்த குறித்த பத்திரிகை நிறுவனத்தின் ஊழியர்கள் அவர்கள் இ…

  21. இதுவரை 15 சடலங்கள் மீட்பு மாவனல்ல, அரநாயக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களது 12 சடலங்களும் புலத்கொஹுபிட்டிய மண்சரிவில் சிக்குண்டவர்களில் மூவரது சடலங்களும், இன்று புதன்கிழமை (18) காலை மீட்கப்பட்டுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/172514/%E0%AE%87%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%AA-#sthash.zOqmm47I.dpuf அரநாயக்க அகோரம்... 18-05-2016 10:29 AM Comments - 0 Views - 33 அரநாயக்க, எலஹபிட்டியவில் உள்ள சாமசர என்ற மலையின் ஒரு பகுதி, மலைக்குக் கீழுள்ள சிறிபுர, எலஹபிட்டிய மற்றும் ப…

  22. வித்தியாவின் தாயை மிரட்டியவர்களிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு (மயூரன் ) புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயை மிரட்டியவர்களிடம் ஊர்காவற்றுறை பொலிஸார் இன்று வாக்குமூலமொன்றை பதிவுசெய்துள்ளனர். மாணவியின் தாயார் கடந்த 4 ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது தன்னை சந்தேகநபர்களின் உறவினர்கள் நீதிமன்றத்திற்கு வெளியில் வைத்து மிரட்டியதாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார். இந்நிலையில் நீதிமன்ற நீதிவான் வித்தியாவின் தாயாரை சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவுசெய்யுமாறு அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து தாயார் பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்த முறைப்பாட்டையட…

  23. ஓமான் விமானம் கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறக்கம்.! ஓமான் விமான சேவைக்குச் சொந்தமான பயணிகள் விமானமொன்று, இன்று முற்பகல் 11.12 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, அவசரநிலைமையை முகம்கொடுக்கும் வகையில், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மற்றும் அவசர வைத்திய சேவைப் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். விமானத்தின் அவசர தரையிறக்கத்திற்கான காரணம் இது வரை வெளியிடப்படவில்லை. http://www.virakesari.lk/article/6569

  24. யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல் -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடுசெய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் புதன்கிழமை (18) காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஒன்றியப் பிரதிநிதிகள், அனைத்துப் பீட மாணவர்கள், கல்விசார ஊழியர்கள் அனைவரும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். - See more at: http://www.tamilmirror.lk/172524/%E0%AE%AF-%E0%AE%B4-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%A9-%E0%AE%B5-%…

    • 1 reply
    • 364 views
  25. புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு டி.என்.ஏ அறிக்கை சமர்ப்பிக்கப்படலாம் புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கை நாளை புதன் கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சமர்பிக்கப்படலாம். என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஆண்டு மே மாதம் 13ம் திகதி படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு இன்று புதன் கிழமை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அதன் போது கடந்த ஒரு வருட காலமாக நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாத மரபணு பரிசோதனை அறிக்கை சமர்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. புங்குடுதீவு மாணவி கொலை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இரண்டு தவணையில் நடைபெற்று வருகின்றது. முன்னதாக கைது செய்ய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.