ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143450 topics in this forum
-
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு உயரிய சபையில் அஞ்சலி அழகன் கனகராஜ் 'முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எமது உறவுகளுக்கு இந்த உயரிய சபையில், அனைவரின் சார்பாகவும் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்' என்று நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 'இறுதி யுத்தத்தின் போது, முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எங்களுடைய உடன்பிறவா உறவுகளை நினைவுகூர்ந்து, நாம் அஞ்சலி செலுத்திவருகின்றோம். …
-
- 0 replies
- 375 views
-
-
சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டும்: சி.வி -சுப்பிரமணியம் பாஸ்கரன் 'சர்வதேச குற்ற விசாரணை நடத்துவதன் மூலமே உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும்' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலையில் முள்ளிவாய்க்கால் முற்றம் எனப்படும் இடத்தில் இன்று புதன்கிழமை (18) காலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முதலமைச்சர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து கூறுகையில், 'போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும். சாட்சியங்கள் அற்ற படுகொலைகளாக முள்ளிவாய்க்கால் படுகொலைகள…
-
- 0 replies
- 429 views
-
-
வடமாகாண சபையின் நினைவேந்தல்... -சுப்பிரமணியம் பாஸ்கரன் வடமாகாண சபையின் நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்;க்கால் கிழக்குப் பாடசாலையில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்னும் நினைவாலயத்தில் இன்று புதன்கிழமை (18) காலை 9 மணிக்கு நடைபெற்றது. - See more at: http://www.tamilmirror.lk/172521/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%A8-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B2-#sthash.OytqnXsg.dpuf
-
- 0 replies
- 364 views
-
-
யாழ்ப்பாண சிறைச்சலையினால் 150 குடும்பங்கள் பாதிப்பு 18 மே 2016 யாழில் புதிதாக யாழ்.கொட்டடி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட சிறைச்சாலை கட்டடத்தினால் அதன் அயலில் உள்ள 150 குடும்பங்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளன. யாழ்.குடாநாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக சிறைச்சாலைக்கு அருகில் வசிக்கும் கொட்டடி J/80 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட மீனாட்சி குளம் பகுதியை சேர்ந்த மக்களே அவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளனர். சிறைச்சாலை புதிதாக நிர்மாணிக்கும் போது அப்பகுதி மண் போட்டு மேட்டு நிலமாக மாற்றிய பின்னரே சிறைச்சாலை நிர்மாணிக்கப்பட்டது. அதனால் சிறைச்சாலை பகுதியை தாண்டி வெள்ளம் ஓட முடியாத நிலை காணப்படுவதனால் அப்பகுதியில் வெள்ளம் தேங…
-
- 0 replies
- 448 views
-
-
'எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடல் அன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறேன்' என வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக, நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் ரவிகரன், இன்று காலை இதனைக் கூறினார். http://www.tamilmirror.lk/172498/%E0%AE%A8%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9E-%E0%AE%9A%E0%AE%B2-#sth…
-
- 0 replies
- 354 views
-
-
இலங்கை செல்லும் பிரித்தானியர்களுக்கு பயண எச்சரிக்கை! [Wednesday 2016-05-18 07:00] இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தங்களை கருத்திற் கொண்டு பிரித்தானியா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்ளும் பிரித்தானிய பிரஜைகள் காலநிலை குறித்து அவதானம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. மழை வெள்ளம் ஏற்பட்டுள்ள ஒரு சில தினங்களுக்கு இலங்கையில் விடுக்கப்படும் அறிவுறுதுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென இலங்கையில் உள்ள பிரித்தானிய பிரஜைகளிடம் கோரப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தங்களை கருத்திற் கொண்டு பிரித்தானியா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு பயணங்களை…
-
- 0 replies
- 541 views
-
-
307,369 பேர் பாதிப்பு 6 பேர் உயிருடன் புதைந்தனர் 1919க்கு அழையுங்கள் பாடசாலைகள் 208 க்கு பூட்டு நாட்டையே உலுக்கிய தாழமுக்கம், இங்கிருந்து, இந்தியாவின் தமிழ்நாட்டை நோக்கி நகர்வதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியிருந்த நிலையில், நாட்டில் நிலவியிருந்த சீரற்ற வானிலையால், அரநாயக்கவில் உள்ள சாமசர மலை, மூன்று கிராமங்களுக்குள் சரிந்து, பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரநாயக்க, எலஹபிட்டியவில் உள்ள சாமசர என்ற மலையின் ஒரு பகுதி, மலைக்குக் கீழுள்ள சிறிபுர, எலஹபிட்டிய மற்றும் பல்லேபாகய ஆகிய மூன்று கிராமங்களில் ஆங்காங்கே, சரிந்து படுத்துக்கொண்டுள்ளது. அந்த மூன்று கிராமங்களுக்குள்ளும், 100க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மண்ப…
-
- 0 replies
- 632 views
-
-
மூன்று ஆண்டுகளில் 6216 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள்; சாகல ரத்னாயக்க [ Wednesday,18 May 2016, 03:49:47 ] நாட்டில் கடந்த மூன்று வருடங்களில் ஆயிரத்து 618 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஆறாயிரத்து 216 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் சட்டம் ஒழுங்கும் அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்றின்போது, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் அறிக்கையிடப்பட்ட கொலைகள், கற்பளிப்புகள், திடீர் விபத்துகளின் எண்ணிக்கை எவ்வளவு என எழுப்பப்படட வினாவிற்கு பதிலளிக்கையில் அவர் இந்த தகவலை வெளியிட்டார். 2013ஆம் ஆண்டில் 586 பேரும், 2014இல் 548 பேரும், 2015இல் 476 பேரும் கொலைசெய்யப்பட்டுள்ளதாக அ…
-
- 0 replies
- 275 views
-
-
இடதுகாலை இழந்த நிலையில் தொழிலின்றி தவிக்கும் முன்னாள் போராளி [ Wednesday,18 May 2016, 03:35:35 ] போராட்ட காலத்தில் வீரா்கள் என அழைக்கப்பட்டவர்கள் இன்று அங்கவீனர்கள் என்ற பெயருடன் சமூகத்தில் கவனிப்பார் இன்றி வாழ்ந்து கொண்டிருப்பதாக உறவினர்கள் கவலை தெரிவி்க்கின்றனர். இறுதி யுத்தத்தின் பின்னர் முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை ஒரு நாளுக்கான வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கே போராட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக ஆறுமுகம் செல்வம் என்ற முன்னாள் போராளி ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த செல்வம் இடதுகாலை இழந்த நிலையில் வாழந்து வருகின்றார். தமிழ் ஈழம் என்ற கொள்கைக்காக தனது இ…
-
- 0 replies
- 298 views
-
-
அரசாங்கம் இன்னும் ஆர்வமாகவும் வேகமாகவும் செயற்பட வேண்டும் – இரா.சம்பந்தன் inShar இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தனியார் காணிகளின் விடுவிப்பு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குதல் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் இன்னும் ஆர்வமாகவும் வேகமாகவும் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் உடனான சந்திப்பின்போதே இரா.சம்பந்தன் இதனைக் கூறியுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ், எதிர்க்கட்சித் தலைவரை இன்று சந்தித்தார். பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக…
-
- 5 replies
- 468 views
-
-
தண்ணீரில் தத்தளிக்கும் தலைநகரம் (இன்றைய நிலை) கொழும்பில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீதிகள், குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். கொழும்பில் மாத்திரம் இதுவரை 21ஆயிரத்து 111 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து ஆயிரத்து 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 99 ஆயிரத்து 314 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்தவர்கள் 36 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 22 இலட்சத்து 6 ஆயிரத்து 378 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று …
-
- 3 replies
- 513 views
-
-
பதவி விலக்கக்கோருவது தொடர்பில் நான் கவலையடைவில்லை; வடக்கு ஆளுநர் (க.கமலநாதன்) வடக்கு ஆளுநர் பதவியிலிருந்து என்னை விலக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் நான் கவலையடையவில்லை. அதனால் தளர்ந்துபோகவுமில்லை என்று வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் பதவியிலிருந்து ரெஜினோல்ட் குரேயை மீளப்பெறவேண்டும் என்று கோரி தமிழீழ விடுதலை இயக்கம் கட்சியின் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான சிறிகாந்தா ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளமை குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் ஆளுநர் ரெஜினோல்ட் குரே மேலும் தெரிவிக்கையில், என்னை விலக்குமாறு கோருவதா…
-
- 0 replies
- 327 views
-
-
மீண்டும் ஆயுதக்குழுக்கள் உருவாக்க திட்டமா? -சொர்ணகுமார் சொரூபன் தமிழர் பிரதேசங்களில் எங்குமில்லாதவாறு யாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள வாள்வெட்டுக் கலாசாரம் தொடர்பில் தமிழ்ப் பிரதிநிதிகள் எந்தக் கருத்தையும் கூறாமல் இருக்கின்றனர். மீண்டுமொரு ஆயுதக்குழுக்களின் செயற்பாட்டை யாழில் கொண்டு வருவதற்காகவா இவ்வாறான சமூக விரோதச் செயல்களுக்கு அவர்கள் துணைபோகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'யாழில் நடைபெறும் வாள்வெட்டுக்…
-
- 0 replies
- 365 views
-
-
இலங்கையின் புதிய அரசியலமைப்பு ரீதியாக தன்னாட்சியைப் பெற்றுக்கொள்வதற்கான நாடகம் மோடி, சம்பந்தன், மைத்திரி ஆகிய மும்மூர்த்திகள் மூலம் இந்தியாவில் அரங்கேற்றப்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், எம்.பி.யுமான விமல் வீர வன்ச தெரிவித்துள்ளார். 27,000 ஆயிரம் படையினரின் உயிரைப் பலிகொடுத்து உருவாக்கப்பட்ட நாட்டினை காட்டிக்கொடுக்க அரசு முயற்சிக்கின்றது எனவும் குற்றம்சாட்டியுள்ளார். பிட்டகோட்டேயிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில், அண்மையில் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்…
-
- 3 replies
- 1k views
-
-
11.9 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் 11 கிலோ 900 கிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்களை செவ்வாய்க்கிழமை (17) கைது செய்துள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். 35, 38 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். மாதகல் பகுதியில் உள்ள வீட்டில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/172465/-%E0%AE%95-%E0%AE%…
-
- 0 replies
- 277 views
-
-
காணிப் பிரச்சனை: விளக்கமளிக்க ராணுவத்துக்கு இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் யாழ் குடா நாட்டில் ராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட முன்று தனியார் காணிகளை விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை ஆராய்வதற்கு இலங்கை உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த புகார் சம்பந்தமாக வரும் 26-ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் விளக்கமளிக்குமாறு தலைமை நிதிபதி ஸ்ரீ பவன் உட்பட மூவர் அடங்கிய நிதிபதிகளின் குழு, இலங்கை ராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது கருத்துக்களை தெரிவித்த மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட தனியார் காணிகளை இலங்கை ராணுவத்தினர் 2012-ஆம் ஆண்டு பலவந்தமாக கையகப…
-
- 0 replies
- 309 views
-
-
மஹிந்தவின் பாதுகாப்பிற்கு 50 ஓய்வு பெற்ற இராணுவ கமாண்டோக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்கு ஓய்வு பெற்ற ஐம்பது இராணுவ கமாண்டோக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஓய்வு பெற்றுக்கொண்ட பல இராணுவ கமாண்டோக்கள் இந்தப் பணியை மேற்கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளதாக பெவிதி ஹன்ட அமைப்பின் முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். நரஹேன்பிட்டி அபாயாராமயவில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் நேர்முகத்தேர்வுகளும் தற்போது நடத்தப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே இந்தப் பாதுகாப்பு பணிகளுக்காக நான்கு பேரை கடமையில் அமர்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 452 views
-
-
21 இந்திய மீனவர்களுக்கும் மன்னார் நீதிமன்றில் விடுதலை.! இலங்கை மன்னார் கடற்பரப்புக்குள் இந்திய நாட்டுப்படகுகளில் அத்துமீறி நுழைந்து இங்கு மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றில் ஆஐர்படுத்தப்பட்டிருந்த சிறுவர் பராமரிப்பு நிலையத்திலும் விளக்க மறியலிலும் வைக்கப்பட்டிருந்த சிறுவன் உட்பட 21 இந்திய மீனவர்களுக்கும் மன்னார் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. கடந்த 26.04.2016 இரவு மூன்று இந்திய நாட்டுப் படகுகளில் (வத்தைகளில்) ஒரு சிறுவன் உட்பட 21 இந்திய மீனவர்கள் இலங்கை மன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டபொழுது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மன்னார் மாவட்ட கடற்தொழி…
-
- 0 replies
- 219 views
-
-
70 வருடங்களுக்கு பின் கிளிநொச்சியில் அதிக மழை வீழ்ச்சி கிளிநொச்சியில் 70 வருடங்களுக்கு பின் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இங்கு 373.2 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் மன்னார் மற்றும் பேசாலை மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 40 மீன்பிடி படகுகள் முழுமையாக சேதமாகியுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/6512
-
- 0 replies
- 404 views
-
-
மே 18 அன்று பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு மே 18 புதன்கிழமையன்று, வடக்கு மாகாணத்தில், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முழுமையான ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படும் என்று, வர்த்தக சங்கங்கள் அறிவித்துள்ளன. இதுதொடர்பில் முல்லைத்தீவு - கிளிநொச்சி மாவட்டங்களின் வர்த்தக சங்கங்கள் கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'வன்முறைகள், படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உயிர்நீத்த எமது உறவுகளை விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைவுகூர்ந்து அஞ்சலிப்பதை, எமது தேசியக் கடமையாகக் கொண்டும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எமது உறவுகளின் ஆத்ம இழப்புகளுக்கு சர்வதேச நீதி வேண்டி…
-
- 1 reply
- 290 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உண்மையான பெறுமதியை காட்டாமல் குறைந்த பெறுமதியை காட்டி அதிசொகுசு வாகனம் ஒன்றை இறக்குமதி செய்துள்ளதாககுற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுங்க அதிகாரிகளை கோடிட்டு இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. எனினும் இந்த உறுப்பினர் யார் என்ற தகவலை செய்தித்தாள் குறிப்பிடவில்லை. பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டு Land Rover Diesel STA/Wagon Sports ABIO Dynam SDV6 என்ற வாகனமே அண்மையில் இறக்குமதி செய்யப்பட்டது. இது மொத்தத்தில் புதிய வாகனம் என்ற போதும் பயன்படுத்தப்பட்ட வாகனம் என்ற அடிப்படையில் அதன் இறக்குமதிக்கு 1750 ரூபா மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக…
-
- 0 replies
- 504 views
-
-
ரயில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியிருப்பதால் வடக்கிற்கான புகையிதரச் சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக ரயில்வேக் கட்டுப்பாட்டுத்துறை அறிவித்துள்ளது. தலாவ மற்றும் தம்புத்தேகமவிற்கும் இடைப்பட்ட ரயில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கொழும்பில் இருந்து செல்லும் புகையிரதங்கள் தம்புத்தேகம வரையிலும் வடக்கில் இருந்து புறப்படும் ரயில்கள் தலாவ வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நேற்றிரவு வெளிக்கிட்ட நான்கு தபால் ரயில்களும் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://thuliyam.com/?p=26831
-
- 0 replies
- 272 views
-
-
வடமாகாண சபையின் நினைவேந்தல் நிகழ்வு வட மாகாணசபை ஏற்பாடு செய்துள்ள நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்க்காலில் நாளை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் முதலமைச்சர் அலுவலகத்தால் செய்திக் குறிப்பொன்று இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. '2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இலங்கை தமிழரின் வரலாற்றில் மறக்க முடியாத நாள். சர்வதேச யுத்த விதிகளைப் புறந்தள்ளி கொத்துக் கொத்தாக எமது உறவுகளைக் கொன்றொழித்த இறுதி நாள். தமிழரின் வரலாற்றில் இரத்தக்கறை படிந்த நாள். இந்நாளை எமது தமிழ் மக்கள் இரத்தசரித்திரம் எழுதிய துக்கதினமாக வரலாறு உள்ளவரை அனுஷ்டிக்க வேண்டும். கடந்த 2015ஆம் ஆண்டில் வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் யுத்தத்தில் படுகொலை …
-
- 0 replies
- 291 views
-
-
கிளிநொச்சி. மாவட்டத்தில் தொடரும் கனமழையினால் சுமார் 2159 குடும்பங்களை சேர்ந்த 7249 பேர் பாதிப்பு கிளிநொச்சியின் அதிக மழைவீழ்ச்சி! 373.2 மில்லி மீற்றராகப் பதிவு!! குளோபல் தமிழ் செய்தியாளர்கள்:- கிளிநொச்சி. மாவட்டத்தில் தொடரும் கனமழையினால் சுமார் 2159 குடும்பங்களை சேர்ந்த 7249 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் சுமார் 274 குடும்பங்களை சேர்ந்த 934 பேர் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கி இருப்பதாகவும் 75 குடும்பங்களை சேர்ந்த 242 பேர்இடம் பெயர்ந்த நிலையில் அவர்கள் ஐந்து தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர் என கிளிநொச்சி.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன கடந்த இரண்டு தினங்களாக …
-
- 0 replies
- 208 views
-
-
திருடிய வீட்டில் பொலிஸாருடன் சென்று பொருளை ஒப்படைத்த திருடன் செல்வநாயகம் கபிலன் நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரமொன்றை, திருடிய வீட்;டிலேயே கொடுத்த சம்பவமொன்று நீரவேலி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. நீர்வேலியிலுள்ள வீடொன்றில் இருந்த நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரத்தை திருடிய நபரொருவர் அதனை முச்சக்கரவண்டியில் கொண்டு சென்றுன்னார். இடையில் ரோந்து சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுன்னாகம் பொலிஸார், முச்சக்கரவண்டியை வழிமறித்து விசாரித்துள்ளனர். இதன்போது, குறித்த மோட்டார் சைக்களிளை தான் ஒரு வீட்டிலிருந்து திருடிக்கொண்டு வருவதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 356 views
-