Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மே தினக் கொண்டாட்டங்கள் நாடு பூராகவும் நடந்துள்ளன. அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்கள் , தொழிலாளர் அமைப்புக்கள் தத்தம் சார்புடைய உழைப்பாளர்களுடன் மே தினத்தை அனுஷ்டித்தனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது மே தினத்தை இணுவில்-மருதனார்மடம் உள்ளிட்ட பிரதேசத்தில் நடத்தி முடித்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் மே தின நிகழ்வைக் கொண்டாடியது. அப்போது ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருக்கவில்லை. இன்று ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருக்கின்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் மே தின நிகழ்வை கொண்டாடுகின்ற நோக்கம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்திருக்கவில்லை. …

    • 0 replies
    • 335 views
  2. மஹிந்தவின் பாதுகாப்பு திடீரென மீளப்பெறப்பட்டது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு திடீரென மீளப்பெறப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 102 இராணுவத்தினரையும் இன்றிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. குறித்த பாதுகாப்பு கடமையிலீடுபட்டிருந்த 102 இராணுவத்தினரையும் இன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னர் இராணுவத் தலைமையகத்திற்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளாக முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, அதற்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக் கடமையில் பொலிஸாரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள…

  3. வாள்வெட்டுக்கும்பலைச் சேர்ந்த ஐவர் கைது -செல்வநாயகம் கபிலன் உடுவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (01) இரவு வாள்வெட்டினை மேற்கொள்வதற்குத் தயாராக இருந்த 5 இளைஞர்களை கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். கைதான நபர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் தடிகள் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளதாகப் பொலிஸார் கூறினர். இரவு நேர ரோந்துக்கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் சட்டவிரோதக் கூட்டம் கூடி நின்ற இளைஞர்களைக் கைதுசெய்து விசாரணை செய்ததில் இவர்கள் சுன்னாகம் பகுதியில் இயங்கி வந்த ஆவா குழுவினைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்ததாகப் பொலிஸார் கூறினர். அத்துடன், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைய…

  4. அரசாங்கம் என்னை விரைவில் கைது செய்யும் 02 மே 2016 அரசாங்கம் விரைவில் தம்மை கைது செய்யும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புதல்வாரன நாமல் ராஜபக்ஸ, சகோதரர்களான பசில் ராஜபக்ஸ, கோதபாய ராஜபக்ஸ ஆகியோரையும் அரசாங்கம் கைது செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தம்முடன் விமல் வீரவன்சவும் கைது செய்யப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியில் பிளவினை ஏற்படுத்த தாம் அனுமதிக்கப் போவதில்லை என அ வா குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்துடன் ராஜபக்ஸக்கள் எவ்விதமான தொடர்புகளையும் பேணவில்லை எ…

  5. புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமொன்று அறிமுகம் செய்யப்படும் - பிரதமர் 02 மே 2016 புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமொன்று அறிமுகம் செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரித்தானிய முறைமையின் அடிப்படையில் இந்த புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நடைமுறையில் காணப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இந்த புதிய சட்டம் பதிலீடு செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் கைது செய்யப்பட்டவர்கள் புதிய பயங்கரவாத அமைப்பு ஒன்றை உருவாக்கும் முனைப்புக்களில் ஈடுபட்டனர் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறென…

  6. சாவகச்சேரி தற்கொலை அங்கி சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இந்தியாவிற்கு தப்பியோட்டம்: சாவகச்சேரியில் அண்மையில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சபிரதான சந்தேக நபர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தற்கொலை அங்கி தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் போது இந்த விடயம் அம்பலமானதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாத இறுதி வாரத்தில் குறித்த பிரதான சந்தேக நபர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பிரதான சந்தேக நபர் தப்பிச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் அடிபப்படையிலேயே அண்மையில் சிவகரன் என்பவர் கைது…

  7. கவனப்பற்று காணப்படும் யாழ். மணிக்கூட்டு கோபுரம் செல்வநாயகம் கபிலன் யாழ்பாணத்திலுள்ள மணிக்கூட்டு கோபுரம், கடந்த பல வருடங்களாக கவனிப்பார் அற்று இருக்கும் நிலையில், மாலை 4 மணி, 7 மணியாக அடையாளப்படுத்தப்படுவதுடன் அனைத்து நேரங்களுக்குமான ஒலிகள் மாறுபட்டே எழுப்பப்படுகின்றது. யாழ்ப்பாணத்தின் அடையாள சின்னங்களில் இம் மணிக்கூட்டு கோபுரமும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த அடையாளச் சின்னங்களை பாதுகாக்க வேண்டி அதிகாரிகள் அசமந்தப் போக்குடன் செயற்படுவது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். செயலிழந்து கிடக்கும் மணிக்கூட்டு கோபுரத்தை மீண்டும் புதுப்பித்து அது சரியான முறையில் இயங்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வே…

  8. கட்டுக்கடங்காமல் ரவுடிகளிகளின் அடாவடித்தனம் தொடர்ந்து செல்வதாக பொது மக்களினால் விசனம் வெளி யிடப்படுகிறது. பருத்தித்துறையில் இருந்து ஆழியவளை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தை நாகர்கோவில் சந்தியில் மறித்த ரவுடிக்கும் பல் நடத்துநரை இழுத்து விழுத்தி தாக்கியதுடன் தட்டிக் கேட்ட இளைஞனையும் கொட்டன்களால் தாக்கியது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிய ளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது. பருத்தித்துறையிலிருந்து ஆழியவளை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மாலை 6 மணியளவில் நாகர்கோவில் சந்தியை நெருங்கிய போது சந்தியில் 20-25 வரையிலான இளைஞர் குழு ஒன்று படுத்திருந்தது. பேருந்துச் சாரதி பேருந்தை நிறுத்திய போது கொட்டன்களுடன் பேருந்தின் இர…

    • 4 replies
    • 736 views
  9. அனைவருக்கும் ஒரு படிப்பினை..! ரயிலில் மோதுண்டு உயிரிழந்த இளம் பெண்கள் : சிசிடி காணொளி வெளியானது வெள்ளவத்­தைக்கும் தெஹி­வ­ளைக்கும் இடைப்­பட்ட பகு­தியில் ரயிலில் மோதுண்டு இரு இளம் பெண்கள் பலியான சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது. இரு இளம் பெண்களும் காதில் இயபோன் மாட்டி இருந்தமையால் ரயில் வருவதையும் அருகில் இருந்தவர்கள் கூச்சமிட்டதையும் கேட்காதமையினால் இந்த கோர விபத்தில் சிக்கினர். பிறந்தநாள் விருந்துபசாரம் ஒன்றிற்கு சென்ற வேளையிலேயே குறித்த பரி­தா­ப சம்­பவம் நடந்துள்ளது. நேற்று முன்தினம் இரு யுவ­திகளும் வெள்ளவத்­தைக்கும் தெஹி­வ­ளைக்கு…

    • 4 replies
    • 1.9k views
  10. காலி மேதின கூட்டத்தில் இதை அவதானித்தீர்களா? “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ” என விபரித்த பியசேன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலியில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்தில் ஆரம்பத்திலே சம்பவம் ஒன்று பதிவானது. இந்நிகழ்வில் வரவேற்புரையை நிகழ்த்திய முன்னாள் அமைச்சர் பியசேன கமகே, தவறுதலாக “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ” என்று தெரிவித்தார். தனது தவறினை உணர்ந்த பியசேன கமகே சட்டென 'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன' என தெரிவித்தமையானது பொதுக்கூட்டத்தில் அனைவரையும் சிரிப்புக்குள்ளாக்கியது. http://www.virakesari.lk/article/5834

    • 1 reply
    • 385 views
  11. மைத்திரி, ரணில் மிச்சமிருந்த ஜனநாயகத்தையும் உரிமைகளையும் அழித்துவிட்டனர் : மே தினக் கூட்டத்தில் அனுரகுமார (ஆர்.யசி) மஹிந்தவின் நாசகார ஆட்சியை மைத்திரி ரணில் கூட்டணி கைப்பற்றி மிச்சமிருந்த கொஞ்ச ஜனநாயகத்தையும் மக்களின் உரிமைகளையும் அழித்துவிட்டனர். இவர்கள் சீரழித்துள்ள மோசமான அரசியலை மாற்றியமைத்து புதிய கலாசாரத்தை நாட்டில் உருவாக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். ஆட்சியை கைப்பற்றி மக்களின் உரிமைகளையும் , எதிர்கால சந்ததிக்கான நாட்டையும் மீட்டெடுக்க வேண்டுமாயின் இன மத மொழி பாகுபாடு இன்றி வடக்கு தெற்கு பேதமின்றி அனைவரும் மக்கள் விடுதலை முண்ணியுடன் கைகோர்த்து ஆட்சியை வீழ்தத வேண்டும். அதற்கு தலைமை …

  12. கார்ட்போர்ட் துட்டகை முனுக்களுக்கு இடமில்லை : மே தினக் கூட்டத்தில் பிரதமர் (எம்.எம்.மின்ஹாஜ்) எங்களுக்காக அர்ப்பணித்த மக்களுக்களின் நலனுக்காக நான் என்னையே அர்ப்பணிக்க தயாராக உள்ளேன். முழு பாராளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி எங்களுடைய வேலைகளை துரிதமாக முன்னெடுத்த பின்னர் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்போம். ஐக்கிய தேசியக் கட்சியை அழிப்பதற்கு கார்ட்போர்ட் துட்டகை முனுக்களுக்கு இடமில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். உலக மகா திருடர் உதயங்க வீரதுங்கவுடன் கை போட்டு ஒன்றாக விருந்து உண்ணும் கார்ட் போர்ட் துட்டகை முனு, எதிரணியினர் விசேட நிதி குற்றப் புலனாய்விடம் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மக்களின் பணங்களை கொள்ளையடித்தவர…

  13. ரணில் எனக்கு எதிராக ஏன் வழக்குத் தாக்கல் செய்யப் போகிறார்? : மேதினக் கூட்டத்தில் மஹிந்த (எஸ்.ரவிசான், ருத்ரகுமார்) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில விடயங்களை முன்னிலைப்படுத்தி என் மீது வழக்கு தொடுக்கப்போவதாக தெரிவித்திருக்கின்றார் எதற்காக இதனை செய்கின்றார் என தெரிந்து கொள்ள வேண்டும். எமது நாட்டில் காணப்பட்ட கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியமைக்காகவா என்மீது வழக்கு தொடர போகின்றார்களா என்று தெரியவில்லை என முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மக்கள் போராட்டத்திற்கு உயிர் தருவோம் மக்கள் விரோத ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் அரசுக்கு எதிராக ஒன்றிணைவோ…

  14. மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் தற்பொழுது தமிழ் பேசும் பணியாளர்களுக்குப் பதிலாக பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பணியாளர்கள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக பிரயாணச்சிட்டினை பெற்றுக்கொள்ளும் பிரயாணிகள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர். பொதுவாக தமிழ் பேசும் மக்கள் அதிகமாக பிரயாணத்தை மேற்கொள்ளும் இவ் புகையிரத நிலையத்தின் ஊடாக சிங்கள மொழியை மாத்திரம் பேசும் பணியாளர்களை நல்லாட்சி அரசாங்கத்திலே சேவையில் சேவையில் ஈடுபடுத்தியுள்ளமை கண்டிக்கத்தக்க விடயமாகும்.இதனை எமது மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளும் பாராமுகமாக இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிக விரைவில் இதற்கான சிறந்த…

  15.  தமிழ் அரசுக் கட்சியின் மேதின... இலங்கை தமிழரசுக்கட்சியின் மேதின பேரணியில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா. சம்பந்தன், வீடு வடிவில் வடிவமைக்கபட்ட ஊர்தியில் உலா வந்தார். - See more at: http://www.tamilmirror.lk/171142/%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%A9-#sthash.0WMmEMMl.dpuf

    • 1 reply
    • 298 views
  16. 'தாஜூதீன் , லசந்த விவகாரம் தொடர்பில் கொலையாளிகளை கண்டுபிடி' : ஜனநாயகக் கட்சியின் மேதினக் கூட்டம் நிறைவு சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் மேதினக் கூட்டம் பெலவத்த புத்ததாச மைதானத்தில் நடைபெற்றது. இன்று பிற்பகல் ராஜகிரிய ஆயுள்வேத சந்தியிலிருந்து ஆரம்பமான ஜனநாயகக் கட்சியின் மே தின ஊர்வலம் பாராளுமன்ற சந்தியூடாக பெலவத்த புத்ததாச மைதானத்தை சென்றடைந்தது. ஊர்வலத்தில் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் அவரது பாரியார் அனோமா பொன்சேகா மாகாண சபை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர். 'தாஜூதீன் மற்றும் லசந்த விக்ரமதுங்க விவகாரம் தொடர்பில் கொலையாளிகளை கண்டுபிடி, மனித உரிமைகளை நிலைநாட்டு, உள்ளிட்ட பல்வேறு கோஷ…

  17. வடக்கிலிருந்து 'சமஷ்டி' என்ற குரல் ஏன் வந்தது? : மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி விளக்கம் (காலியிலிருந்து ப.பன்னீர்செல்வம்) வடக்கிலிருந்து சமஷ்டி என்ற குரல் ஏன் வந்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து சிந்தித்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டுமென்று இன்று காலியில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். அடுத்த பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியை ஏற்படுத்த முரண்பாடுகளை மறந்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபடுவோம் எ…

  18. கிளிநொச்சியில்... வடமாகாண கூட்டுறவாளர்களின் மேதினப்பேரணியும் பொதுக்கூட்டமும் கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) பிற்பகல் 02 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. வடமாகாண கூட்டுறவு அமைப்புக்களும் தொழிற்சங்கங்களும் இணைந்து இம்முறை கிளிநொச்சியில் ஏற்பாடு செய்த மேதினப் பேரணி கிளிநொச்சி கரடிப்போக்குசந்தியில் இருந்து ஆரம்பமாகி தொழிலாளர் உரிமைகளைச் சித்தரிக்கும் ஊர்தி பவனிகளுடன் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச்சபை மண்டபத்தை சென்றடைந்து அங்;கு பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. (படப்பிடிப்பு: சுப்பிரமணியம் பாஸ்கரன்) - See more at: http://www.tamilmirror.lk/171143/%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%A8-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%B2-…

  19. ஐ.தே.கட்சியின் மேதினம்... ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பொரளை கம்ப்பெல் மைதானத்தில் நடைபெற்றது. இதற்கான பேரணிகள், மருதானையிலிருந்து சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். (படங்கள்: பிரதீப் பத்திரண) - See more at: http://www.tamilmirror.lk/171147/%E0%AE%90-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%A9%E0%AE%AE-#sthash.fwLLgL9C.dpuf

  20. மஹிந்த கிருலப்பனைக்கு வந்தடைந்தார் கிருலப்பனையில் இடம்பெறும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மேதினக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சற்றுமுன்னர் வந்தடைந்தார். - See more at: http://www.tamilmirror.lk/171140/%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%B2%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%9F-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0-#sthash.kckYNi8E.dpuf

  21. பொது எதிரணி என அழைக்கப்படும் மஹிந்த அணியின் மேதினக் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கிருலப்பனை லலித் அத்துலத் முதலி மைதானத்தில் நடைபெற்றது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தினப் பேரணியானது இன்றைய தினம் கொழும்பு நாரஹேன்பிட்டி பார்க்வீதியில் அமைந்துள்ள சாலிக்கா மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டு, பென்மன்ட் வீதியினூடாக கிருலப்பனை சந்தி ஐ லவல் வீதியினூடாக லலித் அத்துலத்முதலி மைதானத்தை வந்தடைந்தது. ''மக்கள் போராட்டத்திற்கு உயிர் கொடுக்கவும், மக்கள் விரோத ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக ஒன்றிணைவோம் " என்ற தொனிப்பொருளில் இந்த கூட்டம் நடைபெற்றது. கூட்டு எதிரணியின் இந்த மேதின பேரணியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரத…

    • 0 replies
    • 310 views
  22. சம்பந்தனுக்கு நாட்டைப் பிரிப்பதால் எந்தவித நன்மையும் இல்லை. அப்படி நாட்டைப் பிரித்தாலும் அவர் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆகவே அவர் எமது பிரதேசத்துக்குள் வந்துவிடுவார் எனக் கூறுகின்றார் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. இது தொடர்பில் ரணல் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்ததாவது, பரவிப்பாஞ்சான் சம்பவத்துக்குப் பின்னர் நான் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை நேரில் அழைத்திருந்தேன். அவர் வருகை தந்திருந்தார்.அவரிடம் கேட்டேன் ‘சம்பந்தன் நீங்கள் இராணுவத்தில் இணையப் போகிறீர்களா? அவ்வாறு நீங்கள் இணைந்தால் உங்களுக்கு பி்ரிகேடியர் அல்லது கேணல் இன் சீவ் பதவியை என்னால் தரமுடியும் எனக் கூறினேன். ‘தான் கிளி­நொச்­சியில் நடை­பெற்ற கூட்டம் ஒன்­றுக்குச் சென்­ற­ப…

    • 0 replies
    • 390 views
  23. நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியின் இன்றைய மேதினக் கூட்டம் கெப்பல் மைதானத்தில் பிற்பகல் நடைபெற்றது. இக்கூட்டமானது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இந்த மேதினத்தில் தேன் எடுத்தல், வேட்டையாடுதல், மீன்பிடித்தல் போன்ற பாரம்பரிய தொழில்களைச் செய்துவரும் பழங்குடிமக்கள் முதன்முறையாகக் கலந்துகொண்டுள்ளனர். இப்பேரணியில் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தைக் கேலி செய்யும் வகையில், அவர்களது குடும்பத்தை சிறையில் அடைப்பதைப்போன்று கேலி செய்யும் வகையில் சிலர் அலங்காரம் செய்து வந்திருந்தனர். சிறீலங்காவிலிருந்து அனைத்து மக்களும் இந்த மைதானத்தில் ஒன்றுகூடியதுடன் இவர்களுக்கு பலத்த காவல்…

    • 0 replies
    • 466 views
  24. சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டம் ஸ்தம்பிதம் -ஜோ.எ. ஜோர்ஜ் காலி மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்றுக்கொண்டிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டம், அடை மழை காரணமாக தற்போது ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/171138/%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%A9%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%B8-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%AE-#sthash.85pQTdRa.dpuf

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.