Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பூசாவில் இருப்பதாக 2000ஆம் ஆண்டுகடிதம் அனுப்பிய அண்ணாவை மீட்டுதாருங்கள் தங்கை ஆணைக்குழுவிடம் கோரிகை: 28 ஏப்ரல் 2016 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி:- 1995-11-28 பூநகரியிலிருந்து கிளாலி உடாக படகில் யாழ்ப்பாணம் சென்ற அண்ணா கந்தசாமி கலைச்செல்வன் 2000 ஆம் ஆண்டு தான் பூசாவில் இருப்பதாக எமக்கு தனது கைப்பட கடிதம் எழுதி அனுப்பியிருந்தார் ஆனால் இன்று எங்கு தேடியும் இல்லை எனவே என்ன நடந்தது? தற்போது எங்கிருக்கின்றார்? அவரை மீட்டுத்தாருங்கள் என பூநகரி குமுழமுனையை சேர்ந்த தங்கை ரகுசன் கலைநிதி ஆணைக்குழவிடம் கோரியுள்ளார். கிளாலி ஊடாக படகில் யாழ்ப்பாணம் சென்ற அண்ணாவை கிளாலி கடற்பரப்பில் வைத்து கடற்படை…

  2. ராம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தானும் கைது செய்யப்படலாம் எனும் அச்சத்தில் நகுலனும் இருந்தார்: தாயார் கணபதிப்பிள்ளை கண்மணியம்மா: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:- விடுதலைப்புலிகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட தளபதியான ராம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தானும் கைது செய்யப்படலாம் எனும் அச்சத்தில் நகுலனும் இருந்ததாக அவரது தாயார் கணபதிப்பிள்ளை கண்மணியம்மா தெரிவித்து உள்ளார். விடுதலைப்புலிகளின் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் சிறப்பு தளபதியாக இருந்த நகுலன் என அழைக்கப்படும், கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி செவ்வாய்க்கிழமை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். அவரது கைது தொடர்பில் ந…

  3. "நான் முகாமிற்குள் அதிரடியாக நுழைந்தேனா? , இளம் பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்து கெஞ்சும்போது என்னசெய்வது? கம்மன்பில பச்சைத் துவேசி - சம்பந்தன் அதிரடி விசேட செவ்வி - காணொளியுடன்

  4. சமஷ்டியை கோருபவர்கள் முட்டாள்கள்! பிரபாகரனா முகாமுக்குச் சென்றார்? சம்பந்தர்தானே! 28 ஏப்ரல் 2016 வடக்கில் தமிழ் மக்களின் அழுத்தங்கள் உள்ளன அதனை சம்பந்தர் சமாளிக்க வேண்டும் - அமைச்சர் ராஜித:- வடக்கு,கிழக்கு பிரச்­சி­னைக்கு ஒற்­றை­யாட்சியின் கீழ் தான் தீர்வு. இல்லை. சமஷ்டி முறையில் தான் தீர்வு என அடம்பிடிப்போர் முட்­டாள்கள் என்று தெரிவித்துள்ள அமைச்சர் ராஜித சேனாரத்தின வடக்கு அர­சியல்வாதிகள் தமிழ் மக்­களை ஏமாற்ற சமஷ்டி முறையில் தீர்வு என சொல்­கி­றார்கள். இது அவர்­க­ளது அர­சியல் இருப்­புக்­கான துரும்­பாகும் என்றும் குறிப்பிட்டார். அதே­போன்று தெற்கில் சிங்­கள மக்­களை ஏமாற்றும் அர­சியல் இர…

  5. வடமராட்சியில் கடத்தப்பட்டவர்கள் என கூறப்பட்டவர்களை தாம் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிப்பு: 28 ஏப்ரல் 2016 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - யாழ்ப்பாணம்: வடமராட்சி கிழக்கில் நேற்றைய தினம் கடத்தப்பட்டவர்கள் என கூறப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக பொலிசார் தெரிவித்து உள்ளனர். வடமராட்சி கட்டைக்காடு முள்ளியான் பகுதியை சேர்ந்த ஜோர்ஜ் ராஜநாயகம் (வயது 42) ஜெப்ரின் (வயது 45) மற்றும் வீ.மைக்கல் (வயது 45) ஆகிய மூவரும் கடத்தப்பட்டதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பில் பளை பொலிஸ் தரப்பினர் கூறுகையில், திருகோணமலை பொலிஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து வடமராட்சி கிழக்கில் மூவர் குற்ற செயல் ஒன்றுடன் சம்ப…

  6. மூத்த மகனை கருணா குழுவும், மற்ற இருவரை புலிகளும் பிடித்துச்சென்றனர்: 28 ஏப்ரல் 2016 “மூன்று பிள்ளைகளையும் இழந்து மனநலம் பாதிக்கப்பட்டவள் போல் இருக்கின்றேன்” கண்ணீருடன் தாய் சாட்சியம்: தனது மூத்த மகனை கருணா குழுவும் ஏனைய இரண்டு மகன்களையும் புலிகளும் பிடித்துச் சென்றனர். இன்று மூன்று பிள்ளைகளையும் இழந்து மனநலம் பாதிக்கப்பட்டவள் போல் இருக்கின்றேன் என பூநகரி பள்ளிக்குடாவைச் சேர்ந்த சோமசுந்தரம் ஜெயமேரி எனும் தாய் கண்ணீருடன் சாட்சியமளித்துள்ளார். காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதிநாள் அமர்வு இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் பளை மற்றும் பூநகரி பிரதேச செயலக…

  7. விக்கி, மஹிந்தவின் இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும் (ஆர்.யசி) மக்களால் தோற்கடிக்கப்பட்ட மஹிந்தவின் இனவாதத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் வகையில் விக்னேஸ்வரனின் இனவாதப்போக்கு அமைந்துள்ளது. வடக்கில் விக்கினேஸ்வரனின் இனவாதத்தையும் தெற்கில் மஹிந்தவின் இனவாதத்தையும் தோற்கடிக்க வேண்டும். இந்த இருவரது செயற்பாடுகளும் எந்த வகையிலும் நல்லிணக்கத்துக்கு சாதகமாக அமையாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. வடக்கில் தமிழ் மக்களின் உரிமைகளை உடனடியாக வென்றுகொடுத்தும், இனப்பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டும் வடக்கில் வளரும் இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர். மக்கள் விடுதலை முன்னணியினால் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட செய்…

  8. நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றும் உரிமை எனக்கும் உள்ளது. ஏன் என்றால் நான் இந்நாட்டு குடிமகன். எனினும் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று என்னால் கூற முடியாது. அவ்வாறு நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று நினைத்தால் அதற்கான உரிமை எனக்கும் உள்ளது. நான் இலங்கையன் எனும் போது ஏன் முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் ஆவேசமாக தெரிவித்துள்ளார். நாட்டை பிரிக்கவோ துண்டாக்கவோ நாம் கோரவில்லை. ஒரே நாட்டுக்குள்ளே அதிகாரத்தை கோருகின்றோம். இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தனி மாகாணம் வேண்டும் என கேட்பது ஒரே நாட்டுக்குள் தான். இதனால் யாரும் அச்சம் கொள்ள வேண்டிய தேவையில்லை. வடக்கு மற்றும் கிழக்கில் தமி…

    • 3 replies
    • 626 views
  9. மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப் புகைப்பிரயோகம் பல்கலைக்கழக மருத்துவப்பீட மாணவர்கள் கொழும்பு - கோட்டை பகுதியில் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். http://www.virakesari.lk/article/5721

  10. சிவகரன் பிணையில் விடுதலை இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன், சாவகசேரி நீதிமன்றத்தால் சற்று முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/170932/%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%A3-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2-#sthash.wnVmUAas.dpuf

  11. சூழ்ச்­சிகள் மூலம் அர­சாங்­கத்தை கவிழ்ப்­ப­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டேன். கடந்த பொதுத்­தேர்­தலில் ஐக்­கிய தேசி­யக்­கட்­ சிக்கு 106 உறுப்­பி­னர்­க­ளையும், சுதந்­தி­ரக்­கட்­சிக்கு 95 உறுப்­பி­னர்­க­ளையும் பொது­ மக்கள் தெரிவுசெய்­தி­ருந்­தனர். இதி­லி­ருந்து தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட வேண்டும் என்­பதே மக்­களின் எதிர்பார்ப்­பாக இருந்­தது. அரசை கவிழ்க்க முயல்­ப­வர்கள் பாரா­ளு­மன்­றத்தில் 113 பெரும்­பான்­மையை காண்­பிக்­க­வேண்டும். அதற்­கான சாத்­தியங்கள் ஒரு­போதும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். வடக்கு மாகாண சபையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­ன­மா­னது அவர்­களின் நிலைப்பாடாகும். நாட்டின் இறைமை ஆட்­புல ஒரு­மைப்­பாட்…

    • 1 reply
    • 386 views
  12. இலங்கை விமானப்படை ஹெலி விபத்து இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று, ஹிங்குராக்கொட விமானப்படை பயிற்சி முகாமில் வைத்து சற்றுமுன்னர் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விமானப்படைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என்று கடற்படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் சந்திம அல்விஸ் தெரிவித்தார். குறித்த ஹெலிகொப்டரை தரையிறக்க முற்பட்ட போதே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகவும் இதனால் எவரும் காயமடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். - See more at: http://www.tamilmirror.lk/170884/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%AE-%E0%AE%A9%E0%AE%AA-%E0%AE%A…

  13. இரா­ணுவ முகாமில் உயி­ருடன் இருக்கும் எனது மகளை மீட்­டுத்­தா­ருங்கள் ஆணைக்­குழு முன் தந்தை மன்­றாட்டம் எனது மகள் முல்­லைத்­தீவு – முத்­தை­யன்­கட்டு காட்­டுப் ­ப­கு­தியில் உள்ள இரா­ணுவ முகாம் ஒன்றில் இன்றும் உயி­ருடன் இருக்­கின்றாள். எனது மகளை மீட்­டுத்­தா­ருங்கள் என்று காணாமல் போயுள்ள பிறேம்நாத் அபி­ராமி (வயது29) என்ற யுவதியின் தந்தை காணாமல்போனோர் குறித்து விசா­ரிக்கும் ஆணைக்­கு­ழு­விடம் மன்­றாட்­ட­மா­கக் ­கோரி சாட்­சி­ய­மளித்தார். கிளி­நொச்சி கரைச்சி பிர­தே­சத்தில் நேற்று நடை­பெற்ற காணாமல் போனோர் குறித்து விசா­ரிக்கும் ஆணைக்­கு­ழுவின் அமர்வில் கலந்­து­கொண்டு சாட்­சி­ய­ம­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் தொடர…

  14. கண்­டு­பி­டிக்­கப்­பட்ட ஆயு­தங்கள் தொடர்பில் விசா­ரிக்­கவே முன்னாள் புலி உறுப்­பி­னர்கள் கைது.! தேடப்­பட்­டு­வரும் முன்னாள் ரஷ்யத் தூதுவர் உத­யங்க வீர­துங்க தாய்­லாந்தில் மஹிந்த ராஜபக் ஷவை சந்­தித்­தது எவ்­வாறு என்­பது தொடர்பில் அமைச்­ச­ர­வையில் ஆரா­யப்­பட்­ட­தாக அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் சுகா­தார அமைச்­ச­ரு­மான டாக்டர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். புனர்­வாழ்வு வழங்­கப்­பட்ட புலிகள் கைது செய்­யப்­ப­டு­வது அண்­மையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட ஆயு­தங்கள் தொடர்­பாக விசா­ர­ணை­களை நடத்­து­வ­தற்­கே­யாகும் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார். உத­யங்க வீர­துங்­கவின் ,ராஜ­தந்­திர கட­வுச்­சீட்டை இரத்து செய்ய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்றும் …

  15. இந்திய மீனவர்கள் 21பேருக்கு விளக்கமறியல் -எஸ்.றொசேரியன் லெம்பேட் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து புதன்கிழமை(27) அதிகாலை கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார். மேலும், குறித்த மீனவர்களில் வயது குறைந்த சிறுவர் தொழிலாளர் ஒருவரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை மன்னாரில் உள்ள சிறுவர் இல்லத்தில் அனுமதிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். இந்திய மீனவர்கள் 21 பேர், 3 படகுகளில் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து, மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். …

  16. சிவகரன் கைதானமைக்கு த.தே.கூ கண்டனம் மன்னார் மாவட்டத்திலிருந்து, வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட, இலங்கைத் தமிழரசுக் கட்சி சேர்ந்த சுப்பிரமணியம் சிவகரனின் கைது உட்பட, இவ்வாறு முறைகேடான விதத்தில் இடம்பெறும் கைதுகள் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, சம்பந்தப்பட்ட தரப்பினர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று அனுப்பிய அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, மன்னார் மாவட்டத…

  17.  புலி வேட்டையால் முன்னாள் புலிகள் அச்சம் தமிழீழ விடுதலைப் புலிகள்; அமைப்பின் முன்னாள் முக்கிய உறுப்பினர்கள் தொடர்ச்சியாகக் கைதுசெய்யப்பட்டு வருவதனால், புனர்வாழ்வு பெற்று சமூகமயப்படுத்தப்பட்டுள்ள புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மத்தியில் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதியான எதிர்மன்னசிங்கம் அரிச்சந்திரன் என்றழைக்கப்படும் ராம் என்பவர், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (ரி.ஐ.டீ) கடந்த 24ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டார். அவர் கைதுசெய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேல…

  18. வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்கான காணியாக தாண்டிக்குளத்தில் அல்லது ஈரப்பெரியகுளத்தில் அடையாளப்படுத்தப்பட்ட காணியை தாங்கள் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார மாவட்ட அபிவிரத்திகுழுவின் இணைத்தலைவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். வவுனியா பொருளாதார மத்திய நிலையத்துக்கான காணி அடையாளப்படுத்துவதில் இழுபறி நிலை ஏற்பட்டு வரும் நிலையிலேயே வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் இக் கடிதததினை வவுனியா மாவட்ட அபிவிருத்திகுழுவின் இணைத்தலைவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஓமந்தை, மாணிக்கவளவு காணி நகரில் இருந்து 1 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளதுடன் 13 ஏக்கர் விஸ்தீரணம் உள்ள காணிய…

    • 0 replies
    • 319 views
  19. தலைமன்னார், ஊர்மனை பகுதியில் உள்ள ஜே.ஆர்.எஸ்.விலேஜ் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியிலிருந்து 26 கிலோகிராம் நிறையுடைய ஹான்ஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில், கடற்படையினரால் இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilmirror.lk/170825/-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%B9-%E0%AE%A9-%E0%AE%B8-%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%B2-#sthash.vNvm8cRD.dpuf

    • 0 replies
    • 438 views
  20. கரவெட்டிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட துன்னாலைப் பகுதியில் இடம்பெறும் கசிப்பு காய்ச்சுதல், சட்டவிரோத மாடறுப்பு ஆகிய விடயங்களை கட்டுப்படுத்த முடியாமல் அரச அதிகாரிகள் உள்ளதாக கரவெட்டி பிரதேச செயலாளர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற சிவில் சமூகக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார். துன்னாலைப் பகுதியில் குற்றச்சாட்டு தொடர்பில் ஒருவரைக் கைது செய்து, நீதிமன்ற தண்டனைக்குட்படுத்தினால், தண்டனை முடிந்த பின்னர் அந்நபர் செய்த விடயத்தையே மீண்டும் செய்கின்றார். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றது. மேலும் அவர்கள் வன்முறைப் போக்காளர்களாக இருக்கின்றார்கள். இதனால் அரச அதிகாரிகள் கூட நடவடிக்கைகள் எடுக்கப் பயப்பிடுகின்ற…

    • 0 replies
    • 218 views
  21. “இராணுவம், கடற்படையினர் போன்று அடாவடித்தனமாக காணிகளை நாங்கள் பிடிக்க முடியாது. சட்டத்தின் பிரகாரம் தான் காணிகளைப் பெறவேண்டும். பொலிஸாருக்கு காணிகள் வழங்குவதற்கு பொதுமக்களும் அமைப்புக்களும் முன்வரவேண்டும்” என யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். யாழ். மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (27) நடைபெற்ற சிவில் சமூகக் கூட்டத்திலே சிரேஷ்ட பொலிஸார் இந்த விடயத்தை கூறினர். இது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை கருத்துத் தெரிவிக்கையில், “1996 ஆம் ஆண்டு இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தைக் கைபற்றிய பின்னர் யாழ்ப்பாணத்தில் பொலிஸ் நிலையங்கள் உருவாகின. தனியார், காணிகள் வீடுகளிலேயே பொலிஸ் நிலையங்கள் இன்று வரையில் இயங்குகின்றன. …

    • 0 replies
    • 354 views
  22. வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், வெள்ளை வானில் வந்தவர்களால் புதன்கிழமை (27) மாலை கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். எனினும், இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் இதுவரையில் முறைப்பாடு பதிவு செய்யப்படவில்லை. ஜோர்ஜ் இராஜநாயகம் மற்றும் வி.மைக்கல் என்ற இருவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இவர்களை வானில் வந்தவர்கள் வழிமறித்துக் கடத்திச் சென்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். இவர்கள் இருவருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லையென உறவினர்கள் மேலும் கூறினர். http://www.tamilmirror.lk/170850/%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%A9…

    • 0 replies
    • 309 views
  23. கிளிநொச்சியில் உள்ள இராணுவ முகாமுக்குள் பலவந்தமாக நுழைந்த சம்பந்தன் உயிருடன் வெளியேறியதே அதிசயம் தான். நான் மாத்திரம் முகாமுக்குள் இருந்திருந்தால் அவர் உயிருடன் வெளியேறி இருக்கமாட்டார் என நவ சிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திர தெரிவித்தார். ஆர்.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் என்றாலும் நாட்டின் சட்டங்களை மீறி செயற்பட முடியாது. மிகவும் பழமையான அரசியல்வாதி என்பதால் முறையாக நடந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து காட்டுமிராண்டித் தனமாக செயற்பட முடியாது எனவும் தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி அலுவலகத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். சம்பந்தன் முழு இலங்கையையும் பிரதிநிதித்துவம் படுத்தும் எத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.