ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143480 topics in this forum
-
சொட்டு நீரும் எங்கள் சொத்தே! யாழில் நடைபவனி தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் யாழ். மாவட்ட பிராந்திய அலுலகத்தின் ஏற்பாட்டில் சுத்தமான குடிநீருக்கான மக்களின் நலன் என்னும் கருப்பொருளில் உலக நீர் தின நிகழ்வின் மாபெரும் நடைபவனி இன்று யாழ். பண்ணையில் அமைந்துள்ள தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் யாழ். மாவட்ட அலுலகத்தில் இருந்து யாழ். மாவட்ட செயலகம் வரை சென்றடைந்து. நிலத்தடி நீரை பாதுகாப்போம், சுத்தமாக இருக்கும் நீருக்கு புத்துயிர் அளிப்போம், இன்று மழை நீர் சேகரிப்பு நாளை குடிநீர் பாதுகாப்பு, சொட்டு நீரும் எங்கள் சொத்தே, பொதுமக்கள் விழிப்படையுங்கள், என்ற கோட்பாட்டுக்கு அமைவாக பதாதைகள் ஏந்தியவாறு மக்கள் நடைபவனியில்…
-
- 0 replies
- 255 views
-
-
போதைப்பொருட்களுக்கு அடிமையாகி குடும்ப வன்முறையில் ஈடுபட்டு வந்த தென்மராட்சி பகுதியினை சேர்ந்த இரு இளைஞர்களை 12 மாதங்கள், கண்டி பல்லேகலவில் அமைந்துள்ள அரச புனர்வாழ்வு மையத்தில் தங்க வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், வியாழக்கிழமை (17) தீர்ப்பளித்ததாக சாவகச்சேரி பொலிஸார், வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தனர். 400 கிராம் மற்றும் 650 கிராம் கஞ்சாவினை தன் உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த இருவரையும் சாவகச்சேரி பொலிஸார், புதன்கிழமை (16) கைது செய்திருந்தனர். சந்தேகநபர்கள் இருவரையும் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்திய போது இரு இளைஞர்களின் பெற்றோரும் மன்றில் முன்னிலையாகி இருவரின் பழக்கவழக்கங்கள் தொடர்பில் நீதிவானுக்கு கண்ணீருடன் எடுத்…
-
- 2 replies
- 371 views
-
-
யாழில் மாட்டுவண்டிச் சவாரிப்போட்டி யாழ்.மாவட்ட சவாரிச் சங்கத்தின் அனுசரணையுடன் சாவகச்சேரி – சரசாலை வடக்கு சனசமூக நிலையமும், சரசாலை கமக்கார அமைப்பும் இணைந்து நடத்திய மாட்டுவண்டிச் சவாரிப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை சரசாலை வடக்கு குருவிக்காட்டுத் தரவையில் இடம்பெற்றது. இந்த சவாரியில், வடபகுதியிலுள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் காளைகளும் பங்கெடுத்திருந்திருந்தன. போரின் காரணமாக தடைப்பட்டுப் போயிருந்த மாட்டுவண்டிச் சவாரிப் போட்டிகள் 28 வருடங்களின் பின்னர் குறித்த பிரதேசத்தில் நேற்றைய தினம் கோலாகலமாக இடம்பெற்றது. A,B,C,D என நான்கு பிரிவுகளாக இடம்பெற்ற போட்டியில், A பிரிவில் மாதகலைச் சேர்ந்த முருகானந…
-
- 0 replies
- 356 views
-
-
தனது மகளை கொலை செய்ய மஹிந்த சதி : சந்திரிகா அதிர்ச்சி தகவல் தனது மகளான யசோதாவை கொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சதித் திட்டம் தீட்டியிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். களனி ஹூனுப்பிட்டியில் நேற்று நடைபெற்ற சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், கடந்த 9 ஆண்டுகளாக தான் அரசியலிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாகவும், கட்சியிலிருந்த அனைவருக்கும் தன்னுடன் பேசுவதற்கு மஹிந்த தடை விதித்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி இன்னும் ஒருவருடம் தொடர்ந்திருந்தால் நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சியில் வீழ்ந்திரு…
-
- 0 replies
- 465 views
-
-
ஈழத் தமிழ் அகதியை கொலைக்களத்துக்கு அனுப்புவதா? மத்திய -மாநில அரசுகளுக்கு வைகோ கண்டனம் இந்தியாவில் இலங்கை கொலைகார அரசின் ஆதிக்கம்தான் இன்னும் செயல்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது. திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள தயன்ராஜ் என்ற ஈழத் தமிழ் இளைஞர் மீது இலங்கையில் சில குற்ற வழக்குகள் இருப்பதாகவும், அவரை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று மைத்ரிபால சிறி சேனாவின் சிங்கள அரசு, இந்திய அரசைக் கேட்டுக்கொண்டதன் பேரில் அவரை பலவந்தமாக இலங்கைக்கு அனுப்ப நரேந்திர மோடி அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு ஜெயலலிதா அரசும் உடந்தையாகச் செயல்படுகிறது. ஈழத் தமிழ் இளைஞர் தயன்ராஜ் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறி, அவரை சித்ரவதை செய்து உயிரைப் பறிக்க சிங்க…
-
- 0 replies
- 442 views
-
-
மங்கையர்க்கரசிக்கு அஞ்சலி March 21, 2016 யாழ் மாவட்ட தமிழரசுக் கட்சியின் அலுவகத்தின் ஏற்பாட்டில் அமரர் மங்கையற்கரசி அமிர்தலிங்கத்தின் அஞ்சலி கூட்டம் நேற்று யாழ் மாட்டீன் வீதியில் உள்ள தமிழரசுக்கட்சி அலுவகத்தில் நடைபெற்றது. தமிழரசுக்கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவைசேனாதிராஜா தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. கடந்த 09.03.2016 அன்று லண்டனில் வைத்து அமரர் மங்கையற்கரசி அமிர்தலிங்கம் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=2091&mode=head
-
- 0 replies
- 384 views
-
-
நான் கண்டதும் கேட்டதுமான யாழ்ப்பாணம் -2 30வருட காலப் போராட்டத்தின் விளைவாகத் தோன்றிய புலப் பெயர்வினால் உருவான புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஈழவிடுதலைப் போராட்டத்தின் எழுச்சியிலும், வீழ்ச்சியிலும் தோல்வியின் பின்னான மீட்சியிலும், கணிசமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறு நான் சொல்வதற்குக் காரணமிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் தற்பொழுது சும்மா இருப்பவர்கள் என்கிற ஒரு புதிய வர்க்கப் பிரிவு உருவாகி இருக்கிறது. நாற்சந்திகளில் வீதிகளின் முடுக்குகளில், ஆலய வீதிகளில் வெட்டியாக நிற்கும் இளைய தலைமுறைக்கு உணவு போடும் வேலையைப் புலம்பெயர் சமூகம் செய்து வருகிறது. யாழ்ப்பாணத்தின் கல்லூரிகளுக்கு, காலையும் மாலையும் மாணவிகளை ஏற்றிச் செல்லும் பேரூந்துகள…
-
- 0 replies
- 728 views
-
-
சம்பந்தன் எதிர்க்கட்சித்தலைவராக இருப்பது பலம்! அரசியல் தீர்வை முன்வைப்போம்! [ திங்கட்கிழமை, 21 மார்ச் 2016, 05:29.59 AM GMT ] தமிழ் மக்களின் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இருக்கின்றமையே தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை காண முடியும் என்ற நம்பிக்கையை எமக்கு ஏற்படுத்தியுள்ளது என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார். உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்குமா என வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் விஜேதாச ராஜபக்ச இந்த விடயம் தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் இனவாதத…
-
- 0 replies
- 435 views
-
-
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் தொழில்நுட்ப பாடம் ஆரம்பம் -எஸ்.குகன் 'உயர்தர மாணவர்களுக்கான தொழில்நுட்ப பாடம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆரம்பிக்கப்படவுள்ளது' என கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் இன்று திங்கட்கிழமை (21) தெரிவித்தார். 'கடந்த 18ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவாசத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கையடுத்தே, தொழில்நுட்ப பாடநெறியை ஆரம்பிப்பதற்கான அனுமதியை அமைச்சர் வழங்கியிருந்தார். இதனையடுத்து, 2018 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரத்தில் தோற்றவுள்ள மாணவர்களில், தொழில்நுட்ப பாடத்தை பயில விரும்பும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன'…
-
- 0 replies
- 337 views
-
-
உள்ளக விசாரணைப் பொறிமுறையின் இறுதி வடிவமானது மே மாத இறுதியில் தயாராகும்! இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணைப் பொறிமுறையின் இறுதி வடிவமானது மே மாத இறுதியில் தயாராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜுன் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நடைபெறவுள்ள 32ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கையின் நிலைமை தொடர்பில் வாய்மூல அறிக்கையை வெளியிடவுள்ளார். இந்நிலையில் அதற்கு முன்னதாக இலங்கை அரசாங்கம் உள்ளக பொறிமுறை விசாரணை குறித்த இறுதி வடிவத்தை தயாரிப்பதற்கு ப…
-
- 0 replies
- 208 views
-
-
மைத்திரி, மகிந்தவை மீண்டும் இணைக்க முயற்சி! ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் விஷேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மீண்டும் ஒன்றிணைப்பது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. எது எவ்வாறு இருப்பினும் ஒரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி விரைவில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஜனாதிபதியை மீண்டும் இணைப்பது குறித்து கலந்துரையாடுவது பற்றி அதிக அவதானம் செல…
-
- 0 replies
- 210 views
-
-
நாமலுக்கு ரூ 450 மில். கமிஷன் வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணை [ திங்கட்கிழமை, 21 மார்ச் 2016, 12:37.21 AM GMT ] கொழும்பு மாநகரில் அமைக்கப்படவிருந்த 'கிரிஷ் சதுக்கம்' திட்டம் தொடர்பான கொடுக்கல் வாங்கலில் நாமல் ராஜபக்சவுக்கு கமிஷனாக 450 மில்லியன் ரூபா வழங்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளை நிதி மோசடிப் பிரிவு ஆரம்பித்திருப்பதாக ஊழலுக்கு எதிரான முன்னணி தெரிவித்துள்ளது. குறித்த திட்டத்துக்காக கிரிஷ் நிறுவனம் சிங்கப்பூர் எச்.எஸ்.பீ.சி வங்கியில் நாமல் ராஜபக்ஷவின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வைப்பிலிட்டிருப்பது உறுதியாகியிருப்பதாக ஊழலுக்கு எதிரான முன்னணியின் ஆலோசகர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார். இது தொடர்பில…
-
- 0 replies
- 232 views
-
-
புத்தாண்டுக்கு முன்னர் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைபு பூர்த்தியடையும் [ Monday,21 March 2016, 02:57:34 ] தமிழ் மக்கள் பேரவை தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் தீர்வுத்திட்ட வரைபை முழுமையாக்குமெனவும், அதன் பின்னர் அரசாங்கத்திற்கு கையளிக்கும் எனவும் பேரவையின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்கள் பேரைவை தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்ட யோசனையை முன்வை…
-
- 0 replies
- 261 views
-
-
நாம் இந்த நாட்டின் சில பகுதிகளை ஆட்சி செய்தவர்கள். அதனடிப்படையில், தமிழீழம் கேட்பதற்கான உரிமை எமக்குண்டு. அதனடிப்படையிலேயே ஒரு காலத்தில் நாம் தனித் தமிழீழத்தைக் கேட்டோம். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அம்பாறை-பாலமுனை பொது மைதானத்தில் நேற்றுப் பகல் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19ஆவது தேசிய மாநாட்டில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் முஸ்லிம் மக்கள் ஆகியோர் முன்னிலையே கூட்டமைப்பின் தலை…
-
- 3 replies
- 654 views
-
-
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை கொலைகாரன் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா. நாரஹெண்பிட்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்- ‘அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தி, கொள்ளையிட்ட பஷில் ராஜபக்ஷ பற்றியும், வெள்ளைவான் மூலம் பல மக்களை கடத்தி கொன்றுகுவித்த கொலையாளியான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பற்றியுமே நான் விமர்சித்து வந்தேன். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மதிப்பிற்குறிய ஒருவர். அவரை இந்த நிலைக்கு தள்ளியது பஷிலும் கோட்டாவும் தான். மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் பேச்சைக் கேட்டு அதற்கேற்ப நடந்திருந்தால் மஹிந்த இன்ற…
-
- 2 replies
- 509 views
-
-
இறைச்சி விற்பனைக்காக 29 கொக்குகளை கொன்ற இரு சந்தேக நபர்களை காவற்துறையினர் இன்று (20) கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் வைத்து சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இதற்கு முன்பும் இது போன்று கொக்குகளை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்து வந்துள்ளதகாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 19 மற்றும் 20 வயதுடையவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilwin.com/show-RUmuyDRUSXmr4E.html
-
- 0 replies
- 336 views
-
-
65 ஆயிரம் வீடுகள்: 'சர்ச்சைகள் பற்றி அரசு ஆராய்கிறது'- ஹிஸ்புல்லா இலங்கையில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் தொடர்பில் அண்மைக் காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த வீட்டுத் திட்டத்திற்கான கட்டுமான ஒப்பந்தம் இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட நடைமுறை குறித்து முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து, அது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொள்கைத் திட்டமிடல் அமைச்சிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாயில் அமைந்துள்ள மாதிரி வீடு ஒன்று வீடமைப்பு கட்டுமான ஒப்பந்தத்துக்கான டெண்டர் பத்திரம் கோரப்படுவதற்கு முன்…
-
- 0 replies
- 450 views
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோமசுந்தரம் சேனாதிராஜா அவர்களின் தாயார் திருமதி தையல் சோமசுந்தரம் அவர்கள் மறைவிற்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் இரங்கல் - இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோமசுந்தரம் சேனாதிராஜா அவர்களின் தாயார் திருமதி தையலநாயகி சோமசுந்தரம் அவர்கள் மறைவிற்கு உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. இவர்தனது 97வது வயதில் 18.03.2016 அதிகாலை 3.00மணி அளவில் காலமான செய்தி அறிந்து துயர்கொள்கின்றோம். 15.07.1916ல் மாவிட்டபுரத்தினைச் சேர்ந்த காசிப்பிள்ளை எள்ளுப்பிள்ளை தம்பதிகளின் நான்காவது மகளாகப் பிறந்து அதே மண்ணைச் சேர்ந்த சோமசுந்தரம் அவர்களைக் கரம் பிடித்து ஏழு பிள்ளைகளின் தாயாக உலகு விருப…
-
- 0 replies
- 340 views
-
-
பேரணியில் கலந்துகொண்ட சு.க உறுப்பினர்கள் நீக்கப்படுவர்! கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிஸ்தர்களுக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த கட்சியின் ஆலோசகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா தொகுதி அதிகார சபைக் கூட்டத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கொழும்புக்கு சுமார் 12 ஆயிரம் பேர் வரவழைக்கப்பட்டிருந்தனர். எனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு எதிரில் தான் கூட்டத்திற்கு வந்த வா…
-
- 1 reply
- 249 views
-
-
பாரிய நிதி மோசடியுடன் தொடர்புடைய நபரைத் தேடி இன்டர்போல் வலைவீச்சு பாரிய நிதி மோசடியுடன் தொடர்புடைய அம்பாந்தோட்டையைச் சேர்ந்த நபர் ஒருவரை, இன்டர்போல் பொலிஸார் வலைவீசி தேடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சாலிகா பவுண்டேசன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவரே இவ்வாறு தேடப்பட்டு வருகின்றார். அண்மையில் பங்களாதேஸ் மத்திய வங்கியிலிருந்து 101 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் ஹெக் செய்யப்பட்டு மோசடி செய்யப்பட்ட சம்பவத்துடன் சாலிகா பவுண்டேசன் நிறுவன தலைவருக்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகிறது.பங்களாதேஸ் மத்திய வங்கியிலிருந்து 81 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் பிலிப்பைன்ஸிற்கு மாற்றப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 279 views
-
-
அரசாங்கம் பழிவாங்கல்களை மாத்திரம் நன்றாக செய்கின்றது;மகிந்த சாடல் புதிய தற்போதைய அரசாங்கம் நிர்வாகத்தை சரியாக முன்னெடுக்காது,பழிவாங்கல்களை மாத்திரம் முன்னெடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். அப்புத்தளையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் தற்போது அபிவிருத்தியை காணமுடியவில்லை, மின்சாரம் துண்டிக்கப்படுகிறது, பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுகிறது, புதிய அரசாங்கம் வாக்குறுதிகளை தாறுமாறாக மீறி வருகிறது.இந்த அரசு நாட்டை துரிதமாக அபிவிருத்தி செய்வதாக கூற…
-
- 0 replies
- 234 views
-
-
நிறைவேற்று அதிகார முறையே சிறுபான்மை கட்சிகளின் விருப்பம் புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், அதனையே சிறுபான்மை கட்சிகள் விரும்புவதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும், தன்னுடைய அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலும் விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஆட்சி மாற்றம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜ…
-
- 0 replies
- 218 views
-
-
போரில் ஏற்பட்ட வெற்றிகளுக்கு மட்டுமன்றி பின்னடைவுகளுக்கும் நான் பொறுப்பேற்கத் தயாராக இருக்கிறேன் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் கடந்த வியாழக்கிழைமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது- 2006 ஒக்ரோபர் மாதம், முகமாலையில் உள்ள புலிகளின் நிலைகளை அழிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கையில், 150ற்கும் மேற்பட்ட அதிகாரிகளையும் படையினரையும் இழந்தோம். முகமாலைச் சமரில் இராணுவம் பல கவச போர் ஊர்திகளை இழந்தது. 80 கவசப் போர் ஊர்திகளுடன் தொடங்கப்பட்ட போர், மூன்று ஆண்டுகளின் பின்னர், 2009 மே மாதம் முடிவுக்கு வந்த போது, 30 கவச ஊர்திகள் மட்டுமே எஞ்சியிருந்தன. போரில் ஏற்பட்ட வெற்றிகளுக்கு மட்டுமன்றி பின்னடைவ…
-
- 0 replies
- 228 views
-
-
சமூக, சாதிய, வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிராக விடுதலைப் புலிகள் முன்னெடுத்த போராட்டத்திற்கு தலைவணங்குவதாக மக்கள் விடுதலை முன்னணியின் வடக்கு மாகாண அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அரசியல் தலைவி தமிழினியின் புத்தக வெளியிட்டில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். தமிழினி மிகுந்த ஆளுமை மிக்கவர் என்றும் பின்தள்ளப்பட்ட சமூகத்திலிருந்து தலைமைக்கு வந்தவர். சமூக, சாதிய, வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்த போராட்டமே தமிழினி போன்றவர்களை வெளிக்காட்டியது. பேச்சுவார்த்தை கால கட்டத்தி…
-
- 0 replies
- 391 views
-
-
இலங்கை - இந்திய பொருளாதார, தொழில்நுட்ப கூட்டு உடன்டிக்கை தொடர்பான வரைவை, இலங்கை அரசு இந்திய அரசிடம் கையளித்துள்ளதாகவும், அதனை இந்திய அரசு ஆராய்ந்து வருவதாகவும் இலங்கைக்கான இந்திய தூதுவர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார். கண்டி தலாதா மாளிகைக்கு விஜயம் செய்திருந்த அவர், ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசியபோதே இவ்வாறு கூறினார். இந்தியா இலங்கைக்கு இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு உடன்படிக்கை, இலங்கை பிரதமர் ரணில் விக்ரசிங்கவின் இந்திய விஜயத்தின்போது பரிந்துரை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, இந்த ஒப்பந்தம் தொடர்பான முதற்கட்ட வரைவு இலங்கை அரசினால் இந்திய அரசுக்கு வழங்கப்பட்டது. இந்த வரைவை இந்திய அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்ற…
-
- 0 replies
- 260 views
-